Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நடப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் நடந்தபோது உலகத்தில் இடம்பெர் தமிழர்கள் எல்லாம் கூக்குரலிட்டபோது வேடிக்கை பார்த்த ஜனநாயகம் பேசும் அரசுக்கள் எல்லாம் இன்று புலிகளின் கதை முடிந்துவிட்டது. இனி ஸ்ரீலங்கா அரசுமீது குற்றப்பத்திரிகை தயாரித்து எப்படி இவர்களைத்தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். என்ற ரீதியில் தான் இக்குற்றப்பத்திரிகைகள் அமைகின்றன என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சீனாவைவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் சாய்ந்தால் குற்றப்பத்திரிகை கிடப்பில் இருக்கும். சீனாவுடன் கைகோர்த்து அந்தரங்கமாக இருந்தால் குற்றப்பத்திரிகை மூலம் ஸ்ரீலங்காவுக்கு; (ஈராக்குக்கு பிரவேசித்ததுபோல் ) செல்வார்கள். மொத்தத்தில் மேற்குலகமும், இந்தியாவும் சிங்களரிலோ, தமிழரிலோ ஏது அக்கறை. தமிழரின் போரிடும் சக்தியை, சிங்களவர் செய்வது தவறு என்று முற்றாக உணர்ந்திருந்தும் அவர்களுக்கு அள்ளி அயுங்களை வழங்கி தமிழரைக் கொன்று குவித்து தமிழரின் போரிடும் வலுவை அழித்தது. இது குற்றமான விடயம் எனினும் இக்குற்றச்செயலைப் புரியவைத்தது முழுஉலகமும்தான் என்பது எல்லோருக்கும் புரியும். இனி இந்தச் செயல்களுக்காக சிங்களவரைத் கண்டிப்போம் என்ற பாசாங்கில் இலங்கையில் சீனா கால்பதிப்பதை தடுக்கத்தான் இந்த நாடகம். ஆனால் சீனாவோ சொல்லாமல் கொள்ளாமல் இவர்கள் வழங்கிய வழங்கிக்கொண்டிருக்கின்ற உதவிகளைவிட பலமடங்கு ஸ்ரீலங்காவிற்குச் செய்து வருவதால் அவர்கள் இவர்களின் காலடிக்கு இறங்கிவரமாட்டார்கள். இரண்டு சக்திகள் இலங்கையில் இருந்ததால் ஒன்றை அழித்தொழிக்க வேண்டும் என்ற கோட்பாடு பிராந்திய நலனைக்கொண்டவர்களிடையே இருந்தது. இக்கொள்கை எல்லோருடைய மனத்திலும் ஒன்றாக இருந்தது. அதனால் அங்கீகரிக்கப்படாத சக்தி புலிகள். அதனை அரசை மேடையில்விட்டு பிண்ணனி கொடுத்து அழிக்கமுனைந்தது இந்தியா, மேற்குலகம், சீனா, அமெரிக்கா, ஐக்கியநாடுகள்.

இதிலே யார்கூட உதவி செய்வது? என்ற மனப்பாங்கில் எல்லோரும் வாரி இறைத்து தமிழரை கொடூரமான முறையில் கொன்று அழித்தனர். இதில் உண்மைக்குற்றவாளிகள் பிண்ணனிப்புலங்கள் தான் என்பது எல்லோருக்கும் விளங்கும். சீனாவிற்கும் புலிகள் அழிக்கப்படுவதுதான் இலங்கையில் நிரந்தரமான காலூன்றலுக்கு நல்ல சகுனம் எனப்பட்டது.

இதில் இந்தியாவைச் சேராது இலங்கைக்கு உதவி பண்ணி முடிக்கமுடியாது என்பதால் இந்தக்கூட்டணி கூட்டுசேராக்கூட்டணியாக இருந்தது. இந்தியாவிற்கும் ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல் ராஜீவ்காந்தி கொலைப் பழி தீர்க்க நல்ல சகுனம் என நினைத்தார்கள். இதனால் பரம எதிரிகள் அணியில் இருந்தபோதும் சேர்ந்து கொண்டார்கள். 50கோடி இந்தியத்தமிழர்களையும் எதிர்த்து உதவிசெய்தார்கள். இதன் பலனாக பெருமளவு இராணுவ, பொருளாதார இழப்புகளுடன் புலிகள் ஆயுதம் மௌனித்தது. கொள்கைகளும், புலித்தலைவர்களும் சரணடையவில்லை. ஈழம் இன்றேல் சாவு என்ற அவர்கள் கொள்கையுடன் ஆயதம்தான் மௌனித்தது. அவர்களை இந்த கூட்டுஅணியால் வெல்லமுடியவில்லை என்பதே யதார்த்தம்.

இதன் முடிவு என்ன? இந்தியாவும் மேற்குலகமும் நினைத்தது போல் ஸ்ரீலங்கா இவர்களுக்கு அடிபணியவில்லை. இப்போது சீனாவுடன் பேசாமல் கொள்ளாமல் கனிமூன் நடத்துகின்றது ஸ்ரீலங்கா. இந்தியாவும் மேற்குலகமும் உதவிகளைச் செய்யாது விட்டால் இங்கு எளவு அறியமுடியாது என்றபடியால் உதவிகளையும் நிறுத்தமுடியவில்லை. உதவியுடன் குற்றப்பத்திரகை தயாரித்தலும் சரி சமாந்திரமாக நடைபெற்றாலும், ஸ்ரீலங்காவின் வருங்கால மேற்குலகமும் இந்தியாவும் சார்பான நடைமுறைகளிலே தான் குற்றப்பத்திரகையின் தாக்கம் விளைவுகளைக்கொடுக்கும். இந்தக்குற்றப்பத்திரகை தமிழரை அழித்து ஒழித்ததற்கானதல்ல என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும். இவையெல்லாம் இவர்கள் நலன் சார்ந்தவை மட்டுமே. குற்றப்பத்தரிகையின் தாக்கம் ஸ்ரீலங்காவின் கனிமூன் பிரச்சனை. சீனாவுடனா? அல்லது இந்தியா, மேற்குலகத்துடனா? என்பது தான். இதில் தமிழர்கள் மீண்டும் பகடைக்காய்களாக நகர்த்தப்படலாம். தமிழர்கள் சிந்திக்காவிட்டால் மீண்டும் தமிழர் அழிவைச் சந்திக்கநேரிடும். மேற்குலகக்கூட்டணியை அசட்டை செய்து சீனாவைச் ஸ்ரீலங்காவில் காலூன்ற வைத்தால் 3ம் உலகப்போரின் தொடக்கம் ஸ்ரீலங்காவில் முளைகட்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை. எனவே தமிழர்களின் உரிமைபற்றியோ அல்லது நலன்கள் பற்றியோ யாரும் கணக்கெடுக்கப்போவதில்லை.

தமிழர்கள் எலல்லாவற்றையும் நிறுத்தி ஒதுங்கி ஓரமாக இரந்து எங்கள் அழிக்கப்பட இனம் தளைக்ககுடும்பவிருத்தி செய்து இழந்த மக்கட் தொகைகளை நிவர்த்தி செய்து ஒற்றுமையைக் கட்டிஎழுப்பி நல்லதொரு தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டும். சிங்களவர்கள் அழியப்போவது நிச்சயம். அவன் அழியும்போது தான் எங்கள் தொகையை உயர்த்தவும் வாய்ப்புண்டு. ஆகையால் யாருடைய இசைச்சொல்லுக்கும் வசமாகாமல் தமிழன் ஒதுங்கி வாழவேண்டியது காலத்தின் கட்டாயம். மீண்டும் நாங்கள் மற்றவர்களின் சொல்லை நம்பி எங்கள் அழிவிற்கு இடம் அளிக்கக்கூடாது.

புலிகளுக்கு எதிராக சேர்ந்த அணிகள் எல்லாம் தங்களுடைய குறிக்கோளில் தோல்வியைத்தழுவி உள்ளார்கள்.

சிங்களவனின் ஏமாற்றுவித்தை தமிழருடன் நிறைவு பெற்று இப்போது உலகத்துடன் மோதுகின்றது. இவர்கள் சும்மா விடுவார்களா என்ன? ஈராக்கில் நடந்தது என்ன? ஆப்கானிஸ்தானில் நடந்தது என்ன? தார்மீகமும், அகிம்சையும் பேசும் இந்தியா என்ன செய்தது? கடந்தகால நிகழ்வுகள் வருங்காலத்தின் ஆருடம்.

இதில் இன்னொரு விடயம் கவனத்தில் கொள்ளவேண்டும். 3ம் உலகமகாயுத்தம் நடைபெறவேண்டிய இடத்தை மேற்குலகங்கள் தெரிவு செய்துவிட்டார்கள். அதற்கான நிகழ்ச்சிநிரல் தயாரிப்பின் முதற்கட்டமே தமிழரின் உரிமைப்போர் அழிப்பு. இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தின் முதன்மை நாடுகளாக இருந்தால் மேற்குலகம் பிச்சை நிலைக்குப் படிப்படியாகத்தள்ளப்படும். இதைத்தடுப்பதென்றால் 3ம் உலகமாகாயுத்தம் இங்குதான் உருவாகவேண்டும். போரில் இவர்கள் அழிய மேற்குலகம் மேலே சென்று கொண்டிருக்கும். மீண்டும் இவர்கள் மேல்படியிலிருந்து உலகை கட்டுப்படுத்துவார்கள்.

எனவே தமிழர் ஆகிய எங்களின் உரிமைப்போராட்டம் இப்போதைக்குச் செல்லுபடியாகாது. இதற்கான காய்நகர்த்தல்களை இதனூடாக நாங்கள் காலம் கனியும் வரை உயிரழிவுகள் இல்லாமல் செய்து கொண்டிருக்க வேண்டும். தமிழர் ஒற்றுமையைக் கட்டி வளர்க்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.