Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தியை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி, ஜனவரி 29, 2010 03:21 | சிவதாசன், கொழும்பு

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தியை தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில்:

கடந்த 26-01-2010 அன்று நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் உள்ளன என்ற தெளிவான செய்தி உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தேசத்திற்கான தேர்தல் அதில் தமிழ் தேச மக்களாகிய தாம் பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையாக தமிழ் மக்கள் தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளதன் மூலம் ஸ்ரீலங்கா என்ற நாட்டின் இறைமையை நிராகரித்துள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசம் ஓர் தனித்துவமான தேசம் என்பதனையும் அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும் சிங்கள தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் உணர்த்தியுள்ளனர்.

அத்துடன் சிங்களத் தலைமைகளுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளதன் மூலம் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களை தாம் மன்னிக்க தயாராக இல்லை என்பதனையும் சிங்களத் தலைமைகள் எதனையும் தாம் நம்பத் தயாராக இல்லை என்பதனையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் கடந்த 2005 ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தேசியத் தலைமை எடுத்த முடிவை தாம் விரும்பியே நடை முறைப்படுத்தினார்கள் என்பதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையே தமது ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனையும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த 33 ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமைக்காக நடைபெற்ற தியாகங்களை புறந்தள்ளி கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, மற்றும் இறைமை என்ற கோட்பாடுகளை கைவிட்டு அரசியல் நடத்த முற்படுபவர்களையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதனையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டப் பயணத்தில் மிகவும் கடுமையான, கொடுமையான, கசப்பான அனுபவங்கள் நிறைந்த பாதைகளுடாக நாம் பயணித்து வந்துள்ளபோதும் இன்னமும் தமிழ் தேசியம் என்ற இலட்சியத்தினை அடைந்தே தீருவோம் என்பதில் உறுதியாக இருப்தனையம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எமது இலட்சியம் அடையப்படுவரை உறுதி தளராது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, மற்றும் தனித்துவமான இறைமை என்ற தேசியக் கொள்கைகளை முன்வைத்து உறுதியாக ஐனநாயக வழியில் போராடுவோம்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அந்த நாள் வரை இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக ஓரணியில் பயணிப்போம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

pathivu

தெளிவான முடிவு வேறுகருத்துக்கு இடமில்லை. எவ்வளவோ அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு தீர்ப்பை தமிழர்கள் என்ற ரீதியில் ஒற்றுமையாக வெளிப்படுத்தியுள்ளார்கள். 2004 க்கு பிறகு ஏற்பட்ட வெளிப்படையான ஒற்றுமை.

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் விழுந்தாலும் மீசையில மண்படாத கதையெண்டிறது. இலங்கை அரசியல் அமைப்பில நம்பிக்கை வைச்சி ஜனாதிபதித் தேர்தலில சரத்தை ஆதரிச்சுப்போட்டு இப்ப மூக்குடைபட்டாலும் இரத்தம் வரையில்லயெண்டிறதுபோல மறுபடி இலங்கைத் தீவில ரெண்டு தேசமெண்டதைத் தமிழர் நிரூபிச்சுப் போட்டினமெண்டு கதை விடுகினம்.

சும்மா ஒரு பக்கமும் சாராமல் நிண்டுகொண்டு நாங்கள் ஒருவரையும் ஆதரிக்கையில்ல தமிழ் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை விருப்பப்படி பயன்படுத்தட்டும் என்று விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? இன்றைய அவலநிலையில வோட்டு வேட்டையில ஈடுபட்டவை எவ்வளவு நன்மையைத் தமிழருக்குச் செய்திருப்பினம்? நமக்கு ஆதரவு கிடைக்கப் போறதில்லயெண்டு ஊர்ஜிதமானவுடனே ஆளும் தரப்பும் பெரிய அளவில எங்களைக் கவனியாமல் விட்டுட்டுது. தமிழ் மக்கள் தேர்தலைக் கணக்கிலெடுக்காமல் கிடைக்கிறதையெல்லாம் வாங்கிப்போட்டு தேர்தலைப் புறக்கணிச்சிருக்கவும் கூடும். அதுக்குப்பிறகு வேணுமெண்டால் எதையும் சொல்லியிருக்கலாம். இவை எல்லாத்தையும் பழுதாக்கிப்போட்டு இப்ப கதை விடுகினம்

இன்றைய நிலையில் எமக்கு எதுவித ஜனாநாயக உரிமைகளுமில்லை. ஆட்சியில பங்கெடுக்கிறதிலையோ, ஆளும் தரப்பைத் தெரிவுசெய்யிறதிலையோ எமக்கு ஒரு றோலும் கிடையாது. இனி ஒருகாலமும் அது கிடைக்கப் போறதுமில்லை. அது நிரூபிக்கப் பட்டிருக்குது. சிங்களவர்கள் இதை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

மீண்டும் தமிழ்த் தேசியவுணர்வு துளிர்த்தெழுந்து எமது விடுதலை நோக்கிய பயணம் புதிய பாதையில் பயணப்படும்வரை ஹம் ஓ ஹோ சிக்காகோ என்டிற ரீதியில புடுங்குறதைப் புடுங்கியெடுக்கிற வழியைப் பார்க்கிறதை விட்டுப்போட்டு ரெண்டுக் கெட்டானாய் நின்று தமிழ்த் தேசியமுமில்லாமல் இலங்கைத் தேசியமுமில்லாமல் குறிக்கோளற்ற அரசியல் நடத்த முற்படுவதால் எதுவித லாபமுமில்லை.

உலகம் எம்மைப் பார்த்துப் பேதலித்து நிற்கிறது. இவர்களுக்கு எது தேவை? தமிழீழமா அல்லது இலங்கையின் ஜனாதிபதி ஆட்சிமுறைக்குட்பட்ட ஒற்றையாட்சியா என்று புரியாமல்.

ஓடும் புழியம்பழமுமாய் நின்று எமது தேசியத்தை வென்றெடுப்பதில் கண்ணுங்கருத்துமாகச் செயற்படக்கூடிய ஆற்றலும் சாணக்கியமுமில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் இனிவருங்காலங்களில் புறக்கணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன ஐயா செய்த நீங்கள். இலங்கையில இரண்டு தேசம் இருக்கு எண்டிறதை எடுத்துக்காட்டச் சரத்துக்கு வாக்களியுங்களெண்டே சொன்ன நீங்கள். அப்படிச் சொல்லியிருந்தால் சரத்தும் அவரை நிறுத்தின எதிர்க்கட்சிக் கூட்ணியும் உங்களை உள்ளே இருக்க விட்டிருப்பினமே. உதவி செய்யாட்டிலும் பறவாயில்லை உபத்திரவும் செய்யாதீங்கோ நீங்கள் போனாக் காணுமெண்டெல்லோ உங்களைக் கலைச்சிருப்பினம். பிறகு ஏன் கதை விடுறியள்? இந்தத் தேர்தலில தமிழ்மக்கள் வன்முறையளுக்குப் பயந்தும் தாங்களாத் தீர்மானிச்சும்தான் தேர்தலில பெருமளவில பங்குகொள்ளாமல் விட்டவையள். உங்கட கதையை முழுசாக் கேட்டிருந்தால் இப்ப நீங்;கள் இப்பிடிக் கதைவிட ஏலுமே?

உலகம் ஓ! தமிழரெல்லாம் இலங்கையின்ர தற்போதைய அரசியலமைப்பை ஏற்று ஜனநாயக வழியில ஓரே தேசமெண்ட கோட்பாட்டுக்குக் கீழ வாக்களிச்சிருக்கினமெண்டெல்லோ சொல்லும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரிக் கதைவிடக்குள்ளயும் கொஞ்சம் மூளையைப் பாவிச்சு விடவேணும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.