Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளிகளை இனம்காட்டலாம் என்ற அச்சமே பொன்சேகாவின் கைதுக்கு காரணம்: த இன்டிபென்டன்ட்

Featured Replies

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த இன்டிபென்டன்ட் நாளேடு நேற்று (12) தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சிறீலங்காவில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வன்னியில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளது பல தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியில் நடைபெற்ற போரின் போது பொருமளவான மக்கள் பாதுகாப்பு வலையத்திற்குள் சிக்கியிருந்தது தொடர்பில் ஐ.நா தனது அக்கறைகளை தெரிவித்து வந்திருந்தது. இந்த மோதல்களில் 8,000 தொடக்கம் 10,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவானோர் காயமடைந்ததாகவும் ஐ.நா தெரிவித்திருந்தது. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் மிக அதிகம் எனவும், பாதுகாப்பு வலையத்திற்குள் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்கா அலுலவகத்தின் பேச்சாளரான அவர் கடந்த வருட இறுதி வரை அங்கு பணியாற்றியிருந்தார்.

வன்னியில் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் 10,000 தொடக்கம் 40,000 மக்கள் வரை கொல்லப்பட்டதாக எனக்கு அங்கிருந்து வந்த நம்பகமாக தகவல்கள் தெரிவித்திருந்தன. சிறீலங்கா அரசு உலகத்தை திசைதிருப்புவதற்காக பல பொய்களை மீண்டும் மீண்டும் கூறியிருந்தது. போரை நிறைவுசெய்வதற்கு ஏதுவாக அங்கு சிக்கியிருந்த மக்களின் தொகைகள் குறைத்து கூறப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் பின்னர் தெரிவித்திருந்ததாக அவுஸ்திரேலியாவின் ஒலிபரப்பு கூட்டுத்தானபத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளது மிகைப்படுத்தப்பட்ட தகவல் என சிறிலங்கா அரச தலைவரின் பேச்சாளர் லூசியன் ராஜகருணாநாயக்கா தெரிவித்துள்ளார். இந்த மக்களின் சரியான எண்ணிக்கைகள் யாருக்கும் சரியாகத் தெரியாது. மோதல்களிற்குள் பொதுமக்கள் சிக்கியதாக ஐ.நாவும், ஏனைய அமைப்புக்களும் தெரிவித்திருந்தன. விடுதலைப்புலிகள் மக்களை கேடையங்களாக பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நாம் வைஸ் உடன் தொடர்புகளை ஏற்படுத்த முற்பட்டிருந்தோம் ஆனால் முடியவில்லை. சிறீலங்காவில் உள்ள ஐ.நா அலுவலகமும் இது தொடர்பில் கருத்துக்களை கூற மறுத்துவிட்டது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வைஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் அதனை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சிறிலங்கா அதனை மறுத்து வருகின்றது. நாம் எந்த விசாரணைக்கும் அனுமதிக்க மாட்டோம், நாட்டில் எதுவும் தவறாக நடைபெறவில்லை, ஐ.நாவையோ அல்லது வேறு எந்த அமைப்புக்களையோ விசாரணைகளுக்கு நாம் அனுமதிக்கப்போவதில்லை என சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார். அவர் அரச தலைவரின் சகோதரர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதுடன், அதற்கு காரணமானவர்களை இனம்காட்டலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜெனரல் பொன்சேகாவை அரசு கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை இராணுவ நீதிமன்றம் மூலம் சிறையில் அடைக்க அரசு முயன்று வருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்தாவை எதிர்த்து போட்டியிட்ட பொன்சேகா தோல்விகண்டிருந்தார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும் என பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் பொன்சேகா அதனை செய்ய முடியாது, அவர் பொய் கூறுகிறார் என கோத்தபயா தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (11) நூற்றுக்கணக்கான சட்டவாளர்கள் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என அவரின் மனைவி மேற்கொண்டுள்ள முறைப்பட்டை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ள உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். பொன்சேகாவின் கைது தொடர்பில் நான்கு வாரங்களுக்குள் அரசு பதில் தர வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த காலக்கெடுவானது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலத்தில் இருந்து ஒரு மாதத்திலும் குறைவான நாட்களை கொண்டது. பொதுத்தேர்தலில் பொன்சேகா போட்டியிட திட்டமிட்டிருந்தார். பொன்செகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அரசு இதுவரை முன்வைக்கவில்லை, ஆனால் அவர் இராணுவ புரட்சியை மேற்கொள்ள முனைந்ததாக அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றது. பொன்சேகா அதனை மறுத்து வருகின்றார்.

இதனிடையே அரச தலைவர் தேர்தலில் அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பொன்சேகாவை அதரித்ததாக அரசு மெற்கொண்ட குற்றச்சாட்டுக்களை அந்த நாடுகள் நிராகரித்துள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinamurasam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.