Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னமும் வேட்பாளர் தெரிவில் முடிவு இல்லை கூட்டமைப்பிற்குள் குழப்பம்

Featured Replies

இன்னமும் வேட்பாளர் தெரிவில் முடிவு இல்லை கூட்டமைப்பிற்குள் குழப்பம்

கொழும்பு நிருபர்

சனிக்கிழமை , பெப்ரவரி 20, 2010

sampanthan polll

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிக்குள் கொள்கை தொடர்பாகவும், வேட்பாளர் தெரிவு தொடர்பிலும் குளப்பங்கள் தொடர்கின்றன. நேற்று இரவு நடந்த கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் யாழ்ப்பாணம் வன்னி ஆகியவற்றுக்கான வேட்பாளர்கள் தெரிவில் இழுபறி நடைபெற்றதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

தமிழரசு கட்சியின் தலைவர் சம்பந்தன், செயலர் மாவை, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தியாவின் சொற்படியே நடக்கவேண்டும் அவர்கள் ஆலோசனைபடியே அனைத்தையும் செய்யவேண்டும் என்ற நிலையில் உறுதியாக உள்ளனர். இந்தியா ஒரு வருடத்திற்குள் தீர்வு தர இருப்பதாகவும் ஆகவே அவர்கள் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்யவேண்டும் என வாதிடுகின்றனர்.

இதே வேளை தமிழரசு கட்சி தமது கட்சியினை பலப்படுத்தி தாம் விரும்புகின்றவர்களையும், தமிழர் உரிமைகளை விற்று பிழைக்க கூடியவர்களையும் அதே வேளை தமிழர் உரிமைகளுக்கு எதிரானவர்களின் சொல்லை கேட்டு ஆடுபவர்களை வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே கஜன், பத்மினி ஆகியோரை நீக்க முடிவு செய்துள்ளனர். இதே நேரம் கஜன், பத்மினி ஆகியோரை தமிழரசு கட்சி நீக்கினால் அவர்களை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கீழ் தான் கொண்டுவரப்போவதாக கஜேந்திர குமார் வாதிட்டுள்ளார். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் சம்பந்தன், மாவை ஆகியோர் அதற்கும் மறுப்பு தெரிவித்தனர். கஜன், பத்மினி ஆகியோரை நீக்குவதற்கு அடிப்படை காரணம் உதயன் பத்திரிகை நிர்வாகம் ஏனெனில் இவர்கள் பல்கலை கழக மட்டத்தில் உதயன் நிர்வாகம் தலையிடுவதற்கு எதிராக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை வன்னியில் போட்டியிடுவதற்கு ரெலோ அமைப்பினையும் கேட்காமல் சம்பந்தன் தன்னிச்சையாக தனக்கு நிதி உதவி செய்யும் வெளி நாட்டவர்கள் இருவரை போட்டியிட கொண்டுவரப்போவதாக இரு பெயர்களை முன்மொழிந்தார். அவரில் ஒருவர் அவுஸ்ரேலிய தமிழர். இதனை ரெலோ நிராகரித்தது. புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு சீட்டு கொடுத்தால் நிறையபேருக்கு கொடுக்கவேண்டி வரும் மற்றது இதுவரையும் மக்களுடன் நின்று ஓரளவு பணி செய்த அல்லது இங்கேயே நிரந்தரமாக இருக்கின்றவர்களுக்கு முன்னுரிமைகொடுக்கவேண்டும் என்பது ரெலோ வின் வாதம்.

இதே வேளை ஈ.பி.டி.பி விக்னேஸ்வரன், சாந்தி சச்சிதானந்தம் ஆகியோர் வேட்பாளர் தெரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் ரெலோ அமைப்பின் கடின எதிர்ப்பே ஆகும்.

கிழக்கு மாகாணத்தில் வேட்பாளர் பட்டியலில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை என கூறப்பட்டாலும் அதுவும் நேற்றைய கூட்டத்தில் முடிவாகவில்லை என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமோ, எம்.பி பதவிகள் எடுப்பதன் மூலமோ தமிழர்களது பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இது தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும் எப்போதோ விளங்கி கொண்டதொன்று கூடவே இலங்கை இந்திய அரசியல் வாதிகளின் அண்மைய கருத்துக்கள் கூட அதனைத்தான் கோடிட்டு காட்டுகின்றன. அதாவது வடக்கு கிழக்கு தமிழர்களது தாயகம், அவை இணைக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டினை கூட இலங்கை, இந்திய அரசுகள் அசட்டை செய்கின்றன. இந்த நிலையில் தேர்தல் மூலம் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசியல் உரிமைக்கான ஜன நாயக குரலை எழுப்பும் ஒரு கருவியாக தேர்தலை பார்க்கமுடியுமே தவிர தீர்வினை எதிர்பார்க்கமுடியாது.

இந்த நிலையில் புலம்பெயர் மக்களின் கருத்தானது கூட்டமைப்பு தமிழர் தேசிய உரிமைகளில் உறுதியாக தடம் பிரளாது ஒற்றுமையுடன் தேர்தலில்களம் இறங்கவேண்டும் . விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையிலும் கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் தேவை எனில் சில மாறுதல்களுடன் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவேண்டும்.

அதனை விடுத்து ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதற்காக உரிமைகளை புறக்கணித்து, பதவிக்காக, தமது பாதுகாப்பிற்காக அன்னியரின் வழி நடத்தலில் இயங்கும் கூட்டமைப்பு என்ற இறப்பர் முத்திரை தமிழர்களுக்கு தேவைதானா எனவும் கேட்கவேண்டும்.

அரசியல் உரிமைகளில் உறுதியாக உள்ள அங்கத்தவர்களை புறம் தள்ளி தமக்கு சாதகமான, தமது இருப்பிற்கு உதவியாக, தமக்கு உதவி செய்பவர்களையும், உறவுகளையும் கொண்ட ஆட்களை உள்வாங்கி தமது எதிர்காலத்தினை பலப்படுத்தும் திட்டங்களை தமிழரசு கட்சி கைவிடவேண்டும்.

http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

Edited by தயா

சம்பந்தனும் அவரின் கூத்தமைப்பு அடிவருடிகளும் வடிகட்டின முட்டாள்கள் அல்லது தமிழினத்தை வித்து பிழைப்பு நடத்தும் சுயலவாதிகள்.

இந்தியா ஒரு வருடத்தில் தீர்வு தருமாம், ஆனால் இப்பவே அந்த பயங்கரவாதிகளுக்கு காவடி எடுக்கவேண்டுமாம். என்ன தீர்வு? எப்படியான தீர்வு? இதுவும் 30 வருட ஏமாற்றல் நாடகம் இல்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்?

உந்த உத்தரவாதமற்ற ஏமாற்று கதைகளை இனியும் தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள்.

இந்தியா ஒரு வருடத்தில் எமக்கு தேவையான தீர்வு தரும் என்றால், சொன்னதை செய்து காட்டிய பின்னர் அவர்களுக்கு வாலாட்டினால் என்ன? என் இப்பவே வாலாட்ட வேண்டும்?

ஒருவருடத்தின் பின், வழமைபோல் கீழ்த்தரமான இந்திய ஓநாய்கள் ஏமாற்றினால், சம்பந்தன் என்ன செய்வாராம்?

அவசரப்பட்டு, தனிச்சையாக செயற்பட்ட ஒரு சிறு குற்றத்திற்காக சிவாஜிலிங்கத்தை தண்டிச்ச மக்கள், இந்திய பயங்கரவாதிகளின் அடிவருடி சம்பந்தனையும், அவர் வால்களையும் ஒரே அடியாக தூக்கி வீசிவிடுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.