Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமான நிலையத்தில் தமிழ் பயணிகளிடம் பணம் பறிக்கும் சிறிலங்கா அதிகாரிகள்

Featured Replies

வெளிநாடுகளுக்கு சென்று பின்னர் இலங்கைக்கு திரும்புகின்றவர்களிடம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடமையாற்றும் விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவ தாக தகவல்கள் தெவிக்கின்றன.

இலங்கையில் கடந்த காலங்களில் நிலவி வந்த அசாதாரண நிலைமையின் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் அங்கு சில காலம் தங்கி மீண்டும் தமது நாட்டிற்கு திரும்பும் போதே பயணிகளிடம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெயவருகின்றது.

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையின் நிமித்தம் பணியாற்றுபவர்களில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரைத் தவிர்ந்த பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் விமானநிலைய சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தர்களே மேற்படி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இலங்கைக்குத் திரும்புகின்ற தமிழ் பயணிகளிடமே குறித்த பாதுகாப்பு அதிகாகள் இவ்வாறு நடந்து கொள்வதாக தெயவருகின்றது.

அண்மை நாட்களாக இதுபோன்ற சம்பவங் கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதும் பலர் பயத்தின்காரணமாக வாய்திறப்பதில்லை எனவும் சொல்லப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க விமான நிலையத்தில் பணியாற்றும் இளம் நீலநிற சீருடை அணிந்தி ருக்கும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளிடம் "உங்களின் பெயர் விபரங்கள் குற்றப்புலனாய்வு பொலிஸானால் எமக்கு வழங்கப்பட் டிருப்பதாக முதலில் தெவிக்கின்றனராம்.

அதன் பின்னர் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பவர்களிடம் நீங்கள் இங்கு வந்தால் உங்களை உடனடியாக இலங்கையை விட்டு வெயியேற்றிவிடும் படியும் எங்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்' என்று கூறிவருகின்றனராம். அத்துடன் "உங்களை இலங்கைக்குள் அனுமதிக்க பல நடைறைகள் இருக்கின்றது எனவும் அதற்கு பெருமளவில் பணம் செலவாகும்' எனவும் விமான நிலைய உத்தியோகத்தர்கள் தெவித்து வருவதாகவும் தகவல்கள் தெவிக்கின்றது.

இந்த நிலையில் குறித்த பயணிகளும் பயத்தினால் தம்மிடம் இருந்த இலங்கை பணம் அல்லது வெளிநாட்டு நோட்டுக்களையே அவர்களுக்கு தாரைவார்த்து பின் விமான நிலையத்திலிருந்து வெளியில் செல்லவேண்டியிருப்பதாக தெவிக்கப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத் தில் தமிழ் மக்கள் தினம் இப்படி பலவித கெடுபிடிகளுக்கு உள்ளாவதாக தமது பெயர் குறிப்பிடவிரும்பாத பயணிகள் தெவித்திருப்பதாக தெரியவருகின்றது.

http://www.thinamurasam.com/

பணமிருந்த படியால்தால் கொடுக்கிறார்கள்.இல்லையா?

சிங்களவன் கெட்டிக்காரன். எப்படியாவது தமிழரிடம் இருப்பது எல்லாவற்றையும்ம் சுரண்டி எடுத்து விட நிக்கிறான். நாமளும் கொடுத்துவிட நடக்கிறோம். இரண்டும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் அவனுக்கு விடயம் சுலபமாகிறது.

தடுப்பதற்கு ஏதாவது வழிகள் உண்டா?

தப்பிப்பதற்கு எதாவது வழிகள் உண்டா?

சிங்களவன் ஒரே மனதுடன் தமிழனை(அரச ஆதரவு, அரச எதிர்ப்பு, புலி ஆதரவு, புலி எதிர்ப்பு, வடக்கு கிழக்கு மத்திய மலை நாடு என்ற பாரபட்சமின்றி)அழிக்க ஒற்றுமையுடன் கங்கணம் கட்டி நிக்கிறான், நாமும் அவனுக்கு சார்பாக பலதாக பிரிந்து நின்று போட்டு கொடுக்கிறோம்

Edited by சுனாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.