Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீள் குடியேற்றம் செய்யாது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழினம் அனுமதிப்பது ஆபத்து!

[ சனிக்கிழமை, 12 யூன் 2010, 06:07.44 பி.ப | இன்போ தமிழ் ]

மகிந்த அரசு மிகச் சாமர்த்தியமாக தனது நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ஆளைக் கடித்தது போல ஒன்று இரண்டாகக் கொலைகளை நடத்தி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பல்லாயிரம் எனத் தமிழ் மக்களை இலட்சக் கணக்கில் கொலை செய்தது.

இன்று இலட்சக் கணக்கில் முட்கம்பி முகாம்களிலும் அடையாளம் அறியப்படாத சித்திரவதைக் கூடங்களிலும் பாலியல் உட்படப் பல வித வதைகளையும் செய்த படியே தனது செயல்களுக்கு சர்வதேச அங்கீகாரம் தேடிக் கொள்கிறது.

உலக அளவிலான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றச் சாட்டுகளுக்கு முகம் கொடுத்தபடியே அரச அதிபர் மற்றும் பொதுத் தேர்தல்களை அடாவடித் தனங்கள் மூலம் நடத்திப் பெற்றுக் கொண்ட ஆட்சி அதிகாரங்களை ஜனநாயக மக்கள் விருப்பு என்ற பொய் முகத் தோற்றங்களைக் காட்டி மகிந்ந அரசு உலக வலம் வருகிறது.

போர் அழிவுகள் மீள் கட்டுமானம் அபிவிருத்தி மக்களின் மீள் குடியேற்றம் நிவாரணம் எனப் பெறப்படும் உலக நிதி அனைத்தும் தனக்கும் சிங்கள மக்களுக்கும் செலவு செய்து போரினால் இடருக்குள்ளான தமிழ் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதுவும் வழங்காது பட்டினி போட்டு வருத்துவதை எவரும் கண்டு கொள்வதாயில்லை.

நியாயமான ஜனநாயக வாக்கெடுப்புக்கு உரித்துடைய மக்களை சட்டரீதியான வசிப்பிடங்களில் இருந்து வாக்களிக்க வசதி செய்யாத தேர்தலை கண்டிக்கவோ உலக கவனத்துக்குக் கொண்டுவரவோ எந்த ஒரு ஜனநாயக வாதியும் தமிழரிடையே கூட இல்லாத அவல நிலை தமிழருக்கு.

அதைவிட யாருக்கு யார்? ஏன் ? எதற்கு ? வாக்களிப்பது அல்லது ஆதரவு வழங்குவது என்ற சிந்தனைத் தெளிவு அற்ற அரசியல் வாதிகளும் அவர்களின் பித்தலாட்ட அரசியல் கூத்துகளும் தமிழரின் அரசியல் அறிவீனத்தை பறைசாற்றிய பரிதாபமும் கண்டோம்.

இன்று தமிழ் முஸ்லீம் மக்களின் வாழ்விடங்கள் சிங்களவருக்கும் சிங்கள இராணுவத்துக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு தமிழரை நிலமற்றவர் ஆக்கிய நிலையில் வாக்காளர் இடாப்பிலும் உணவுப் பங்கீட்டு அட்டையும் அடையாள அட்டையும் இல்லாத நிலையில் இந்த மக்கள் எந்த வகையில் கணக்கெடுக்கப்படுவர்? அவர்களின் வருங்கால நிலை என்ன?

புதிதாக எழுப்பப் பட்ட புத்த கோயில்களும் குடியமர்த்தப் பட்ட சிங்களவரும் சிங்களக் கிராமப் பெயர்களும் நிலையான அரசியல் அந்தஸ்தைப் பெற உதவப் போகும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாயகத்தின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்ட தமிழரை ஏதோ பஞ்சம் நோய் காரணமாக தாமாக இடம் பெயர்ந்த மக்களாக அரசு ஆவணப் படுத்தி அவர்களை நிரந்தரமாக நிலம் அற்றவர்கள் ஆக்கவே இக் கணக்கெடுப்பு உதவும்.

உண்மையில் இப்பிரச்சனை வன்னிப் பெருநில மக்கள் மட்டும் சார்ந்த ஒன்று அல்ல வலிகாமம் வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய உயர் பாதுகாப்பு வலையங்களிலிருந்து விரட்டப்பட்ட பல இலட்சம் தமிழரும் அவர்களது ஆயிரக் கணக்கான ஏக்கர் தனியாரின் சொந்த பிரதேசங்களும் யாருக்குப் போகப் போகின்றன? போர் முடிந்து தேர்தல்களும் நடத்திய பின்னர் எதற்காக இந்தப் பிரதேசங்கள் இராணுவ அதிகாரிகளின் ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும்?

தமிழ் மக்களின் மீளக் குடியமர்வும் அவர்களுக்கான குடிசார் இயல்பு ஆட்சி நிலையும் இல்லாது இராணுவ ஆட்சி உள்ள நிலையில் தமிழர் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் புது டில்லியில் போய் எதைப் புடுங்கி வரப் போகிறார்கள் ? பதில் இருந்தால் மீளக் குடியமர்வும் மறுவாழ்வும் இடப் பறிப்புக்கு உள்ளான மக்களுக்கு கிடைக்கப் பெறாத வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த விடாது தமிழ்த் தலைவர்கள் தடுக்கட்டும்.

இதனை இவர்கள் உண்மையான தமிழ் பிறவிகள் என்றால் சாதித்துக்காட்டட்டும்…….?

- த.எதிர்மன்னசிங்கம். -

சனிக்கிழமை, 12 யூன் 2010 http://www.infotamil.ch/ta/view.php?2bEEQMe0dOgm40ecAA0q4a4xd4Icd3cYJ3dc2Coc3b424OS3e220Mq20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.