Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 வருடங்களுக்கு முன் போலந்தில் காணாமல் மகனை கண்டுபிடிக்கும் புதுமுயற்சியில் தந்தை!

Featured Replies

16 வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் பகீரத முயற்சியில் ஈடுபட்டுள்ளார் யாழ். மாவட்டத்தின் ஏழாலையைச் சேர்ந்த அன்ரனி ஜயரட்ணம் என்கிற ஒரு தந்தை.

ஆயினும் அவரின் மகனைக் கண்டுபிடிக்கின்றமையோ அல்லது அவர் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றமையோ இலேசுப்பட்ட காரியம் அல்ல. ஏனெனில் காணாமல் போன சம்பவம் போலந்து-ஜேர்மனிய நாடுகளின் எல்லையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நாள் 27.08.1994 ஆக இருக்க வேண்டும் என்று அத்தந்தை நம்புகின்றார். நாட்டுச் சூழ்நிலை காரணமாகவும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கே உரித்தான வெளிநாட்டு மோகம் காரணமாகவும் மேலைத்தேய நாடு ஒன்றுக்கு இளம்வயதிலேயே புறப்பட்டவர்தான் அலோசியஸ் ஜெயசிங்கம்.

போலந்துக்கு சென்ற இவர் அங்கிருந்து ஜேர்மனிக்குப் போய்ச் சேர முயற்சித்திருக்கின்றார். இவருடன் இன்னும் 11 தமிழ் இளைஞர்கள் கூட்டாக அம்முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். போலந்து- ஜேர்மனிய எல்லையில் Sasieki என்கிற இடத்தில் உள்ள ஆறு ஒன்றை கடக்க இவர்கள் 27.08.1994 அன்று நடுச்சாமம் 12.00 மணிக்கு முயன்றிருக்கின்றார்கள்.

இவர்களில் ஆறு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஏனையோரில் நான்கு பேர் மாத்திரம் வெற்றி பெற்று நீந்தி ஜேர்மன் கரையை வந்தடைந்தனர். மிகுதி இருவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது. அடித்துச் செல்லப்பட்ட ஆறு பேரினதும் சடலங்கள் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த இரும்புச் சட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றன.

அந்தச் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.அதில் அலோசியஸ் ஜெயசிங்கத்தின் சடலமோ, சகாக்களில் ஒருவரான தேவகுமார் என்பவரின் சடலமோ இருக்கவில்லை. அதே நேரம் ஜேர்மனியை சென்றடைந்த நான்கு பேரிலோ அலோசியஸ் ஜெயசிங்கமோ, தேவகுமாரோ இருக்கவில்லை.

ஆயினும் அவ்வருடம் ஓகஸ்ட் 28,29,30,31 ஆம் திகதிகளில் ஜேர்மனிக்கு அத்துமீறிப் பிரவேசித்த சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். எனினும் அலோசியஸ் ஜெயசிங்கத்தின் மகனைக் கண்டு பிடிக்க அந்நாட்களில் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவே இல்லை. எனவே அலோசியஸ் ஜெயசிங்கம் இறந்து விட்டார் என்றே குடும்பத்தினர் முடிவெடுத்து விட்டனர்.

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க சுமார் போலந்தில் 05 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார் என்று குடும்பத்தினரால் நம்பப்பட்டு இருந்த கோண்டாவிலைச் சேர்ந்த இராசரத்தினம் தயாபரன் என்கிற இளைஞன் உயிருடன் இருக்கின்றார் என்கிற செய்தியை தமிழ்.சி.என்.என் கடந்த மாதம் பிரசுரித்திருத்தது.

அச்செய்தி குடாநாட்டுப் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. அச்செய்தியைப் படித்த பின் தயாபரனைப் போலவே மகன் அலோசியஸ் ஜெயசிங்கம் போலந்தில் எங்காவது உயிருடன் இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர் தகப்பன் அன்ரனி ஜெயசிங்கமும் குடும்பத்தினரும். தகப்பன் ஜெயசிங்கம் ஒரு புது நம்பிக்கையுடன் வெளிநாட்டு அமைச்சின் ஊடாக மகனைத் தேடும் புது முயற்சியை ஆரம்பித்து இருக்கின்றார்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9833:16-&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் இடம்பெற்ற நாள் 27.08.1994 ஆக இருக்க வேண்டும் என்று அத்தந்தை நம்புகின்றார். நாட்டுச் சூழ்நிலை காரணமாகவும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கே உரித்தான வெளிநாட்டு மோகம் காரணமாகவும் மேலைத்தேய நாடு ஒன்றுக்கு இளம்வயதிலேயே புறப்பட்டவர்தான் அலோசியஸ் ஜெயசிங்கம்.

:lol::wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.