Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’சண் சீ’ கப்பலில் கனடாவிற்கு வந்த அகதிகளின் விபரங்கள் மாயம் - சிறிலங்காவிலுள்ள உறவுகளுக்கும் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’சண் சீ’ கப்பலில் கனடாவிற்கு வந்த அகதிகளின் விபரங்கள் மாயம் - சிறிலங்காவிலுள்ள உறவுகளுக்கும் ஆபத்து

திகதி: 14.09.2010,

எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கனடாவிற்குள் வந்துசேர்ந்த அகதிகள் தொடர்பான விபரங்கள் ரொரன்ரோவிலுள்ள தங்களது பணியகத்திலிருந்து களவாடப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது கனடாவிலுள்ள முதன்மையான தமிழ் அமைப்பு.

இதனால் சிறிலங்காவிலுள்ள இவர்களது உறவுகளது பாதுகாப்புத் தொடர்பாகத் தாங்கள் அதிக கரிசனைகொள்வதாகவும் கனேடியத் தமிழர் பேரவை என்ற இந்த அமைப்பு கூறுகிறது.

பெயர் விபரங்கள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் எம்.வி சண் சீ என்ற கப்பல் மூலம் கடந்த மாதம் பிரிட்டிஸ் கொலம்பியாவினை வந்தடைந்த 492 தமிழர் அகதிகளின் 'நூற்றுக்கணக்கான' தொலைபேசி இலக்கங்கள் என்பன சேமித்துவைக்கப்பட்டிருந்த கணனியொன்று கனேடியத் தமிழர் பேரவையின் தலைமைப் பணியகத்திலிருந்து களவாடப்பட்டிருப்பட்டிருக்கிறது.

"சிறிலங்காவிலுள்ள இவர்களது பாதுகாப்பே எங்களது உடனடிக் கரிசனையாக இருக்கிறது. இந்தச் சம்பவத்தினால் உண்மையில் நாங்கள் கவலையடைகிறோம்" என கனேடியத் தமிழர் பேரவையினது தேசியப் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை கூறுகிறார்.

சிறிலங்காவில் தொடர்ந்திருக்கும் இந்த தமிழ் அகதிகளின் உறவினர்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களைப் பாதுகாக்கும் ஒரு உத்தியாக சண் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு வந்துசேர்ந்த அகதிகளின் பெயர் விபரங்களைக்கூட கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அவை வெளியிடாமல் வைத்திருக்கிறது. கப்பல் மூலம் வருகை தந்த இந்த அகதிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான தொடர்புகளைப் பெற்றுக்கொடுப்பதில் கனேடிய தமிழர் பேரவை ஈடுபட்டிருந்தமையினால் இவர்களிடம் இந்த விபரங்கள் இருந்திருக்கின்றன.

"சிறிலங்கா அரசாங்கத்தின் கைகளுக்கு இந்தப் பெயர் விபரங்கள் சென்று சேருமெனில் சிறிலங்காவிலுள்ள இவர்களது உறவுகள் தண்டிக்கப்படலாம் அல்லது பெரும் பிரச்சினைக்கு முகம்கொடுக்கலாம்" என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கான பிரதிநிதி கற்பனா நாகேந்திரா கூறுகிறார்.

அப்பிள் வகையினைச் சேர்ந்த மடிக்கணனி, மற்றும் எல்.சீ.டீ கணனித்திரை என்பவை களவாடப்படவில்லை என்பதால் எம்.வி சண் சீ கப்பல் மூலம் கனடாவிற்குள் வந்தவர்களது விபரங்களை எடுக்கவே திருடர்கள் வந்திருக்கலாம் என திரு.பூபாலப்பிள்ளை சந்தேகிக்கிறார். குறிப்பிட்ட இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை கனேடிய காவல்துறையினர் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால் இது தொடர்பில் இன்னமும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

கடந்த சனியன்று மாலை 6.30 மணிக்குப் பின்னர் ரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இவர்களது பணியகத்தின் மரக்கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் களவாடப்பட்டிருக்கிறன.

ஞாயிறன்று காலை ஒன்பது மணியளவில் பணியகத்திற்குச் சென்ற பணியாளர் ஒருவர் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும் பணியகம் அலங்கோலமாக இருப்பதையும் கணனிகள் நிலத்தில் தலைகீழாகக் கிடப்பதையும் கண்டார்.

”கணனிகளில் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வன்தட்டினை (பிரதான நினைவகம்) எடுத்துச் செல்லுவதற்குச் சிலர் முயன்றிருக்கிறார்கள்” என பூபாலப்பிள்ளை கூறுகிறார். வரவேற்பாளர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சண்.சீ கப்பல் அகதிகளின் விபரங்களைத் தாங்கிய கணனியைத்தான் அவர்கள் எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

”இது மோசமானதொரு நிகழ்வு. பெறுமதியான பொருட்களைத் திருடும் எண்ணத்தில் அவர்கள் அங்கு வந்திருந்தால் ஏனைய பொருட்களையும் எடுத்துச் சென்றிருப்பார்கள்” என்றார் அவர்.

எம்.வி சண் சீ என்ற இந்த அகதிகள் கப்பல் பிரிட்டிஸ் கொலம்பியாவினை அண்மித்த போது கடந்த ஓகஸ்ட் 12ஆம் நாளன்று கனேடிய அதிகாரிகள் இந்தக் கப்பலைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள். அகதிகளாக வந்த அனைவரும் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் இவர்கள் அனைவரும் தடுத்துவைக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட இந்தக் கப்பலில் வருகைதந்த ஆண் அகதியொருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அவரைத் தொடர்ந்தும் தடுப்பில் வைப்பதற்கு குடிவரவு அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

எம்.வி சண் சீ என்ற இந்தக் கப்பலில் கைவிடப்பட்ட நிலையில் அடையாள ஆவணங்கள் சிலவற்றைத் தாம் கண்டெடுத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட சில அகதிகள் தங்களது உண்மையான அடையாளத்தினை மறைக்க முனையலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

இதுபோன்று அடுத்தடுத்து அகதிகள் கப்பல்கள் கனடாவினை நோக்கி வரும் ஏதுநிலை அதிகமாகவுள்ள புறநிலையில், அகதிகளின் வரவினைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் என கனேடிய அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.