Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பணிப்பெண் ரிஸானாவுக்கு மரண தண்டனை உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பணிப்பெண் ரிஸானாவுக்கு மரண தண்டனை உறுதி!

அக் 25, 2010

எஜமானரின் நான்கு மாதக் குழந்தையைப் படுகொலை செய்தார் என்கிற வழக்கில் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக் இற்கு மரண தண்டனை விதிக்கப்படுவதை சவூதி அரேபிய நாட்டு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ரிஸானா பணிப் பெண்ணாக Al-Otaibi என்கிற சவூதி அரேபியரின் வீட்டுக்கு 2005 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி சென்றார்.

இவர் உண்மையில் 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி பிறந்தவர். எனவே இவர் சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றிருந்தபோது 17 வயதுச் சிறுமி. ஆனால் இவரது கடவுச்சீட்டில் இவரது பிறப்பு 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி என்று உள்ளது.

எஜமானரின் குழந்தையின் மரணம் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றிருக்கின்றது. எனவே இம்மரணம் இடம்பெற்றபோதும் நஸீனா சிறுமி என்பது வெளிப்படையே.

சிறுமியான நஸீனாவுக்கு குழந்தை பராமரிப்பில் முன் அனுபவம் இருக்கவில்லை. குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்திருக்கின்றார். புரையேறி இருக்கின்றது. குழந்தையின் தலையில் மெதுவாக அடித்திருக்கின்றார். குழந்தை இறந்து விட்டது.

இவர் குழந்தையை கொன்று விட்டார் என்கிற முடிவுக்கு எஜமானரின் குடும்பத்தினர் வந்து விட்டனர். அன்றைய தினமே ரிஸானா கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். குழந்தையை கொன்றார் என்றார் என்று ரிஸானா பொலிஸாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார்.

மொழிப் பிரச்சினை காரணமாகவும், ரிஸானாவின் விளக்கக் குறைவு காரணமாகவும் இத்தவறு நேர்ந்து விட்டது. இவ்வழக்கில் இவர் சவூதி அரேபிய Dawadami மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவால் 2007 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

ஹொங்கொங்கை தளமாக கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ரிஸானாவின் சார்பில் மேல்நீதிமன்றத்தின் இம்மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்த்து.

இவ்வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று Dawadami மேல்நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. மேல்நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரித்து உயர்நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையிலேயே ரிஸானாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்து உள்ளது. ஆயினும் உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையின் உயர்ஸ்தானிகருக்கு முறையிட உள்ளார் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் பசில் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

அத்துடன் குழந்தையை பறிகொடுத்த சவூதி அரேபிய பெற்றோரிடம் ரிஸீனாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை காட்டி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மன்றாடுவார் என்றும் கூறினார். நஸீனாவுக்கு தற்போது உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகமும் உறுதி செய்துள்ளது.

ஆனால் சிறையில் இருக்கும் நஸீனாவுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது குறித்து எதுவுமே தெரியாது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் இலங்கையை ஒழுங்கா வச்சு ஆண்டிருந்தால் வறுமையும், போராட்டமும் வந்திராது. ரிசானாவும் வெளிநாட்டுக்குப் போயிருக்க மாட்டார்.

இப்ப ரிசானா தூக்கு மேடை ஏறுறதுக்கு சிங்களவன் தான் காரணம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை பணிப்பெண்ணுக்கு சௌதியில் மரண தண்டனை ஊர்ஜிதம்.

இலங்கைப் பணிப்பெண் ஷானா நபீஷூக்கு சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு அமைவாக சௌதி அரேபிய அரசு நிர்ணயிக்கும் ஒரு நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்படும். சௌதி அரேபியாவில் பணியாற்றிய வீட்டு எஜமானாரின் குழந்தையை படுகொலை செய்தார் என்ற குற்றசாட்டின் போரில் இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் இவரை குற்றவாளியாக நீதிமன்றம் இனம் கண்டது. இவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோதிலும் இவரது மேன்முறையீடு நிராகாரிக்கப்பட்டு இவருக்கு மரணதண்டனை நிறைவேற்மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டபோதிலும் அது பயளிக்கவில்லை. சிறிலங்கா அரசின் இராஜதந்திர முயற்சிக்கு உரிய பலன்கிடைக்கவில்லை.

http://meenakam.com/2010/10/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.