Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியமர்வு என்ற போர்வையில் குடாநாட்டை சிங்கள மயமாக்கும் முயற்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீள்குடியமர்வு என்ற போர்வையில் குடாநாட்டை சிங்கள மயமாக்கும் முயற்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், திருமதி பத்மின் சிதம்பரநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2.jpg

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரதநிலையத்திலும் ஏனைய இடங்களிலும் திடீரென வந்து இறங்கியுள்ளன. அவர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தாம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர விரும்பி இங்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தாம் குடியமர்வதற்கான ஏற்பாடுகளை செய்துதரும்படி அரசாங்க அதிபரிடமும் அமைச்சர்களிடமும் கோரியுள்ளனர்.

இவர்கள் புகையிரத நிலையத்திற்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே புகையிரதநிலையத்தில் அந்த மக்கள் தங்குவதற்கு வசதியான வகையில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் இந்த மக்கள் புகையிரத நிலையத்திற்கு வந்திறங்கிய நிகழ்வானது அம் மக்கள் குறிப்பிட்ட உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட வகையில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளார்கள் என்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருதுகின்றது.

இவ்வாறு வந்திறங்கியுள்ளவர்களிடம் சொந்தக் காணி உறுதி இருக்குமாயின் அவர்கள் அவர்களது உறுதிக்காணிகளில் மீளக் குடியமர்வதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் சொந்தக் காணி உறுதி இல்லாமல் 30 வருடங்களுக்கு முன்னெப்பொழுதோ யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தவர்கள் என்பதனை மட்டும் சாட்டாகக் கூறிக் கொண்டு யாழ்ப்பாணம் வந்திருப்பவர்களுக்கு இன்றய சூழ்நிலையை பயன்படுத்தி காணிகளை பகிர்ந்து வழங்க முற்சிப்பதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக எதிர்க்கின்றது.

இவ்வாறு வந்துள்ளவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நோக்கில் பொது மக்களுக்குச் சொந்தமான ஆனால் நீண்டகாலம் பயன்படுத்தப்படாமல் உள்ள தனியார் காணிகளை அரசு கையகப்படுத்தக் கூடிய ஆபத்து உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த விடயத்தில் யாழ் குடாநாட்டிலுள்ள மக்கள் விழிப்புடன் செயற்பாடவிட்டால் அல்லது ஒற்றுமையுடன் இம் முயற்சியை தடுத்து நிறுத்தாவிட்டால் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் குடாநாட்டை சிங்கள மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இது அமைந்துவிடும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக:

ஸ்ரீலங்கா அரசு (STATE) கடந்த அறுபது வருடங்களாக தமிழ்த் தேசததின் மீது இனப்படுகொலையை மேற்கொண்டு வருகிறது. இந்த இனப்படுகொலையில் இருந்து தமிழ்த் தேசத்தை விடுவித்து அதன் இருப்பை பாதுகாப்பதற்காக தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்காக இந்த இன அழிப்பு 2009 மே ல் மிகக் கொடூர கட்டத்தை அடைந்தது.

இந்த இனப்படுகொலையின் அகோரம் மீது சர்வதேச சமூகமும் தனது கவனத்தை செலுத்துகின்றது.

பல வெளிநாட்டு அரசுகள், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச ரீதியில் புகழ்வாய்ந்த நிபுணத்துவம் பெற்ற தலைவர்கள் சர்வதேச, சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் மே 2010 இல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஐனாதிபதியினால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த இனப்படுகொலையை தமிழ்த் தேசத்தின் மீது மேற்கொண்டது ஸ்ரீலங்கா அரசேயாகும். அத்தகைய இனப்படுகொலையை மேற்கொண்ட ஸ்ரீலங்கா அரசு தான் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை தானே நடாத்த முற்படுவது கேலிக்குரியதாகும்.

அவ்வாறு நடாத்தினால் கூட அந்த விசாரணைகள் நீதி நியாயம் வழங்கும் வகையில் பக்கச் சார்பற்றதாக இருக்க முடியாது என்பதே உண்மையாகும். இதனை நிரூபிப்பதற்கு கடந்த 60 வருடங்களாக அளவுக்கதிகமான சான்றுகள் உள்ளன.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினையோடு தொடர்புபட்ட விதத்தில் வௌவேறு காரணங்களுக்காக இலங்கை அரசாங்கங்களால் அமைக்கப்பட்ட ஆணைக் குழுக்களின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடித்து, எவ்வித பலனையும் தராத ஏமாற்றும் முயற்சிகளாகவே நடந்து முடிந்தன.

மேலும் சிங்கள அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவாறு சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாக சட்சியங்களை அளிக்கக் கூடிய பாதுகாப்பான சூழல் இல்லை. இன்னமும் கடத்தல்கள், கொலைகள், கொலை மிரட்டல்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது இந்த அச்ச சூழலை வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் ஆணைக்குழுவுக்கு இனப்படுகொலை சம்பந்தமாகவோ அல்லது குறைந்தபட்சம் போர்க்குற்றங்கள் இடம் பெற்றமை தொடர்பாகவோ விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணை எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் இனப்படுகொலை அல்லது குறைந்தபட்சம் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படுவதனை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை பற்றிய விசாரணைகள் ஸ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் நடைபெறுமாயின் அந்த விசாரணைகள் நேர்மையாகவோ, தமிழ் மக்களுக்கு பலன்தருவதாகவோ அமையமாட்டாது என்பதோடு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை மூடிமறைப்பதற்கே வழிவகுக்கும்.

எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிப்தில்லையென தீர்மானித்துள்ளது. அத்துடன் இந்த ஆணைக்குழுவுக்கு ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் சாட்சியமளிக்குமாயின் அது இனப்படுகொலையை மூடிமறைக்கும் செயற்பாட்டுக்கு துணை போவதாகவே அமையுமெனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெற்ற, இடம்பெற்றுவரும் இனப் படுகொலையை விசாரிப்பதற்காக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்துவதுடன் அவ்வாறான விசாரணை ஒன்று இடம்பெற்றால் அதற்கு பூரணமான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிக்கின்றது.

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

http://meenakam.com/2010/10/25/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.