Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ உறவுகள் ஆஸ்த்ரேலியா செல்ல உதவியதாக தே.பா.சட்டத்தில் கைதான பெரியார் திக தலைவர் உட்பட இருவர் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ உறவுகள் ஆஸ்த்ரேலியா செல்ல உதவியதாக தே.பா.சட்டத்தில் கைதான பெரியார் திக தலைவர் உட்பட இருவர் விடுதலை

ஈழத் தமிழ் உறகள் வெளிநாடு செல்ல உதவினார்கள் என்பதற்காக தேசியபாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கீழ் புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு அய்யப்பன், தி.மு.க. கவுன்சிலரும் மீனவர் சங்கத் தலைவருமான சக்திவேல் ஆகிய இருவரும் நேற்றிரவு சிறையிலிருந்து விடுதலையானார்கள்.

இதே குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இந்திய தண்டனை சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப் பட்டு, சுமார் இரண்டு வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றத்தால் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

காலையிலும் மாலையிலும் புலனாய்வு அலுவலகத் தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் ஆட்சி பழிவாங்கும் வெறியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியது. மத்திய காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் இதற்கு பின்னணியாக இருந்து செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தை முறைகேடாக பழி வாங்கும் நோக்கத்தோடு, பயன்படுத்தியிருப்பது புதுவை வாழ் தமிழின உணர்வாளர்களை கொதிப்படையச்செய்தது. கைதான அடுத்த நாளே – கைதைக் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் பங்கேற்ற மறியல் போராட்டம் 18 ஆம் தேதி புதுவை சுப்பையா சிலை அருகே மாநில கழக அமைப்பாளர் தந்தைப் பிரியன் தலைமையில் நடைபெற்றது. மறியலில் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், கலந்து கொண்டனர். ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர். 302 தோழர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து புதுவை முழுதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், பெண்கள் பங்கேற்கும் போராட்டங்கள், தொடர் கண்டனக் கூட்டங்கள் என்று பழிவாங்கும் அடக்கு முறையைக் கண்டித்து, தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்றன. உயர்நீதிமன்றத்தில் கழக சார்பில் தேசிய பாது காப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக, லோகு அய்யப்பன் சார்பாக, அவரது தந்தை லோகநாதனும், சக்திவேல் சார்பாக அவரது மனைவியும் மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

இக் கடிதத்தை பரிசீலனை செய்த உள்துறை 13-12-2010 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச்செய்து, விடுதலை செய்ய உத்தரவிட்டது.

14-12-2010 அன்று இச்செய்தி புதுவை மாநில மாலை நாளேடுகளிலும், சன்நியூஸ் தொலைக்காட்சியிலும் வெளியானது.

15-12-2010 அன்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உட்பட தோழர்கள் சிறை முன் திரண்டனர். மாலை வரை காத்திருந்த தோழர்கள் சிறை அதிகாரிகளிடம் விசாரித்தனர். விடுதலை செய்யக்கோரி உத்தரவு வரவில்லை என்று தெரிவித்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பே உள்துறையின் உத்தரவு வந்துள்ளதை உறுதிசெய்து கொண்ட தோழர்கள், சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருக்கும் செய்தியை, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தந்தி வழியாக தெரியபடுத்தினர்.

சிறை கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் தான் செய்த அதிகார துஷ்பிரியோகம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்துவிட்டதால், இரவு 9-00 மணிக்கு அவசரமாக லோகு.அய்யப்பனையும், சக்திவேலுவையும் வெளியேற்ற முயற்சிசெய்தார். ஆனாலும் தோழர்கள் இரவு நேரத்தில் வெளியேர மறுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவல்துறையை வரவழைத்தார். அதிகபடியான காவலர்கள் அங்கு திரண்டதால், பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிக்கையாளர்களும், அதிகபடியான பொதுமக்களும் அங்கு விரைந்தனர்.

pdk_py_001.jpg

pdk_py_002.jpg

pdk_py_003.jpg

pdk_py_004.jpg

இரவு 11-30 மணி அளவில் சக்திவேல் அவர்களும், லோகு அய்யப்பன் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயகாந்தனுக்கு எதிராக பொதுமக்களும், பெ.தி.க தோழர்களும் ஒலி முழக்கங்களை எழுப்பினர். நள்ளிரவில் ஆயிரக்கணக்கான தோழர்களின் ஒலிமுழக்கங்களாளும், தோழர்கள் வந்த வாகனங்களின் மின்விளக்குகளாளும் புதுவை மாநகரே அதிர்ந்தது. இரண்டு நாள் சட்டவிரோத காவலில் வைத்திருந்த சிறை கண்கானிப்பாளர் ஜெயகாந்தன் மீது, பெரியார் திராவிடர் கழகம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

http://meenakam.com/2010/12/17/16577.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.