Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு எழுதுகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு எழுதுகிறேன் - ஜீரீஎன்னிற்காக சுனந்ததேசப்பிரிய:-

அன்புள்ள மகேந்திரன்,

இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். உங்களுக்கு கிடைத்தாலும் சிங்களத்தில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எப்படி வாசிக்க போகிறீர்கள்?. சிறையில் இருக்கும் உங்களுக்கு இறுதியாக கடிதம் வந்த நாள் எதுவும் உண்டா?. அப்படி கடிதம் எதுவும் வராமலும் இருந்திருக்கலாம். அப்படி கடிதம் எழுத எவராவது இருந்திருந்தால், 18 வருடங்கள் வழக்குகள் இன்றி, உலகில் உன்னதமான நாட்டின் சிறைச்சாலையில் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியும்?.

அதனை அறிந்தும் உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதவில்லை. அது எனக்காவும் இருக்கலாம் நானும் உங்களை போல் பல வருடங்களுக்கு முன்னர் சிறைப்படுத்தப்பட்டிருந்தேன். அப்போது சிறையில் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து கடிதம் ஏதும் வந்திருக்காதா என்று இதயம் மாத்திரமல்ல கண்களும் தேடியதை நான் இன்னும் மறக்கவில்லை. எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்ற நாளில் எனது தாயார் எனது நலம் விசாரித்து எழுதிய கடிதம் கிடைத்த போது ஏற்பட்ட மனகுளிர்ச்சி இன்னும் எனது ஞாபகத்தில் நிழலாடுகிறது.

நான் இந்த கடிதத்தை எழுதுவதற்கு முக்கியமான விடயம் ஒன்றும் இருக்கிறது. சமூகம் வலுவற்றுள்ள நிலை காரணமாக வழக்குகள் இன்றி நீண்டநாட்களாக தண்டனை அனுவித்து வரும் உங்களை போன்ற பிரஜைகளின் இந்த நிலைமைக்கு எம்மை போன்ற பிரஜைகளும் பொறுப்பு கூறவேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ் இளைஞர்களை போல் ஆயுதங்களை ஏந்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்தன் காரணமாகவே நாங்களும் சிறைக்கு சென்றோம். 40 வருடங்களுக்கு முன்னர் நாம் அவ்வாறு சிறைக்கு அனுப்பபட்டோம். எனினும் சிங்களவர்ளாகிய நாங்கள் எவரும் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் வழக்குகள் இன்றி சிறையில் இருக்கவில்லை. சிங்கள போராளிகள் இதனை விட கடுமையான போராட்டம் மூலம் ஆட்சியை கைப்பற்ற 18 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் முயற்சித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனினும் கைதுசெய்யப்பட்ட எவரும் வழக்குகள் எதுவுமின்றி 5 ஆண்டுகள் 6 ஆண்களுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவிக்கவில்லை. எனினும் தமிழரான நீங்கள் வழக்குகள் இன்றி 18 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வருகிறீர்கள்.

கடுமையான இராணுவ ஆட்சி நடத்தப்பட்டு வரும் மியன்மாரில் அதிக காலம் சிறையில் இருந்த அரசியல் கைதி உங்களை விட ஒரு வருடமே அதிகமாக சிறைவாசம் அனுபவித்தார் என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?. அவர் வின் தீன் என்ற ஒரு ஊடகவியலாளர். அவர் 19 வருடங்களின் பின்னர், விடுதலையானார். உலகம் முழுவதும் நீண்டகாலமாக வழக்குகள் இன்றி, அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களில் நீங்களும் இடம்பெறுவீர்கள் என்பது நிச்சயம். இதில் எந்த பிரயோசனமும் இல்லை என்பதையும் நான் அறிவேன்.

நீங்கள் காலை, மதியம், இரவு உணவு வரிசையில் நிற்பதற்காக 7 ஆயிரம் தடவைள் வரை சென்றிருக்கலாம். நீங்கள் தண்ணீர் குழாய் வரும் ஓசையிலா உடல் கழுவிக் கொண்டீர்கள்?. உங்களுடன் எத்தனை பேர் சிறைக் கூண்டில் உள்ளனர்?. கழிவறை சுத்தமில்லையா?. நீங்கள் விழிப்பதும், நித்திரைக்கு செல்வதும் உத்தரவிடப்படும் நேரங்களிலா?. தீர்ப்புகள் எதுவுமின்றி, இவ்வாறான வாழ்க்கை பல வருடங்களாக அனுபவிப்பது என்பது உயிருடன் புதைப்பதற்கு ஈடானது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டுமானால் எவரும் சிறையில் இருந்தே ஆகவேண்டும்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அதாவது 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் நன்னடத்தை காரணமாக 15 வருடங்களில் விடுதலை செய்யப்பட்டதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். வருடா வருடம் 4 மாதங்கள் குறைவடைவதன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு விடுதலை செய்யப்படுகின்றனர். உங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அப்படியானால் எவருடைய தேவைக்காக, யாருடைய உத்தரவின் பேரில் உங்களை சிறையில் அடைத்துள்ளனர்?. இந்த குற்றத்திற்கு பொறுப்புக் கூறவேண்டியவரை கண்டுபிடிக்க முடியாது என்பதை நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும்.

உங்களைப் பற்றி கடிதம் ஒன்றை எழுதி கொழும்பில் வாழும் மாண்புமிகுகளுக்கு அனுப்ப எவரும் இல்லாதிருந்திருக்கக் கூடும். அப்படி எவரும் கடிதங்களை அனுப்பியிருந்தால், காணாமல் போன தமது பிள்ளைகளுக்காக நியாயம் கோரி, அம்பிலிப்பிட்டிய பெற்றோர்கள் 1990 ஆம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் அனுப்பிய 200 கடிதங்கள் குப்பை கூடைக்குள் போனது போன்று, உங்கள் பெற்றோர் அனுப்பிய முறையீட்டு கடிதமும் அரச மாளிகையின் குப்பைக்குள் போயிருக்கலாம். மனிதபிமானமற்ற அதிகார தரப்பிற்கு உங்களுக்கு நேர்ந்த அநீதியை தெரியப்படுத்த வழிமுறைகள் இருக்கவில்லையா?. அல்லது தமிழர்களுக்காக இரக்கப்படும் அதிகாரிகள் இலங்கையில் இல்லை என்ற காரணமா?.

சிறை வைக்கப்படுவது எப்படி அதிஷ்டமாகும்?. எனினும் மட்டக்களப்பில் உள்ள சிறைச்சாலையில் நீங்கள் சிறைவாசம் அனுபவிக்க கிடைத்தது, உங்களுக்கு வாழ்வதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக இருக்கலாம். உங்களை போன்றே சிறார் போராளிகள் என குற்றம்சுமத்தப்பட்டு பண்டாரவளை பிந்துனுவௌ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 தமிழ் இளைஞர்கள் 2000 ஆம் ஆண்டு ஒக்டோர் 24 ஆம் திகதி வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்டதை ஒருவேளை நீங்கள் அறியாதிருக்கலாம். அந்த படுபாதாக படுகொலைச் சம்பவம் குற்றவாளிகள் அற்ற மற்றுமொரு மனித படுகொலையானது. விடுதலைப்புலிகள் என தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களுடன் பிச்சை எடுத்த சிறுவர்களும் புனர்வாழ்வு முகாமில் இருந்ததாக பின்னர், தெரியவந்தது. தவறியேனும் புனர்வாழ்வு என்ற பெயரில் நீங்கள் அந்த முகாமுக்கு அனுப்பபட்டிருந்தால், உங்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும். இதனால் உங்களது பாதுகாப்புக்காகதான் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினாலும் அதற்கும் ஆத்திரப்படாதீர்கள்!.

நான் கூறிய செய்திக்கு அமைய 14 வயதான சிறுவனாக இருக்கும் போது, 1993 ஆம் ஆண்டு சிறார் போராளி எனக் கூறி, நீங்கள் கைதுசெய்யப்பட்டீர்கள். எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் நீங்கள் இன்னும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள். 18வருடங்கள், இலங்கையில் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதியாக நீங்கள் இருக்கலாம். சிங்கள மேலாதிக்க அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மை தமிழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மாத்திரம் இந்த சாதனை உங்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த தமிழ் சமூகத்திலும் வேறானவர் ஒருவர் என்பதால், இந்த சாதனை உங்களுக்கு கிடைக்க கூடும். நீங்கள் சிறார் போராளியாக இருந்ததாக கூறப்படும் அந்த காலத்தில் உங்களது தலைவராக இருந்த கருணா இன்று அரச மாளிகையின் விருந்தினர். அவருக்கு எந்த குறையோ, இழப்போ இல்லை. அவர் உங்களை போருக்கு அனுப்பிய அரச படையினரின் பாதுகாப்பை பெற்றுள்ளார். உங்களது மற்றுமொரு தலைவரும், சிறார் போராளியாக போராட்டத்தில் ஈடுபட்ட பிள்ளையான், நீங்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை இருக்கும் மட்டக்களப்பில் பலம் வாய்ந்த அரசியல் தலைவர்!. முதலமைச்சரான அவர் தற்போது வேறு பெயரில் அழைக்கப்படுகிறார். அவர்களின் உண்மையான பெயர்களை நீங்கள் அறிந்திருக்காதிருக்கலாம். ஆச்சரியம் தானே?. நீங்கள் 18 வருடங்கள் வழக்கின்றி சிறையில். உங்களது போர்ப்படை தலைவர்கள் அரச நிர்வாகத்தின் பங்காளிகள் என்ற வகையில் அரசின் சுகபோங்களை அனுபவிக்கின்றனர்.

நீங்கள் சிறார் போராளியாக இருந்தீர்கள் என நான் கூற மாட்டேன். அப்படி சொல்ல நான் யார்?. அதற்கான சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளிக்கும் வரை அனைவருமே குற்றமற்றவர்கள். மகேந்திரன், நானும் உங்களை குற்றமற்றவராகவே பார்க்கின்றேன்.

வழக்கு தாக்கல் செய்ய காரணங்கள் இல்லாததால் உங்களை சிறையில் தடுத்து வைத்துள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாகவும் மட்டக்களப்பு மக்கள் குறித்தும் இரண்டு பத்திகளை எழுதியமைக்காக திஸ்ஸநாயகம் என்ற தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக வழக்கு விசாரிக்கப்பட்டு, 20 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை உங்களுக்கு தெரியுமா?. எனினும் அவருக்கு உங்களது சாதனை முறியடிக்கும் துரதிஷ்டம் இருக்கவில்லை. மாண்புமிகு ஜனாதிபதி கடந்த சர்வதேச ஊடக தினத்தில் அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். அவரை விடுவிக்க வேண்டும் என உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் மகேந்திரன் நீங்கள் யார்?. உங்கள் போன்ற அப்பாவி தமிழர்களுக்காக என்ன போராட்டம்?. உங்களை விடுதலை செய்ய வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது?.

உங்களைப் போன்ற அப்பாவிகளை விடுவிப்பதற்காக போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அவற்றிற்கு செவி கொடுப்பது யார்?. யுத்தம் முடிவடைந்த பின்னர், பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்ற ராசையா துவாராக கடத்தப்பட்டார். அவரை விடுதலை செய்யுமாறு மாணவர் சங்கங்கள், நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டின. கடிதங்களை எழுத்தின. எனினும் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன், அவருக்கு பரீட்சை எழுதவும் அதிகாரிகள் சந்தர்ப்பம் வழங்கவில்லை. கிளிநொச்சியை சேர்ந்த அவரும் உங்களை போல் நிரபராதி என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இதனை அறிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பிள்ளையான், கருணா போன்றே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் ஒரு காலத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள தலைவர்!.

மகேந்திரன் நீங்கள் அறியாவிட்டாலும் கொலையாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பலவாய்ந்தவர்கள் மாண்புமிகு ஜனாதிபதியின் மன இரக்கம் காரணமாக விடுதலைப் பெற்று சுதந்திரமாக திரிகின்றனர். கடந்த சர்வதேச பெண்கள் தினத்தில், கொலை குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் அரசியல் தலைவர் ஒருவரை மாண்புமிகு ஜனாதிபதி விடுதலை செய்திருந்தார். அரசியல் குடும்பத்துடன் சம்மந்தப்பட்டிருந்தால், குறைந்தது, கருணாவின் அறிந்தவர் தெரிந்தவராக இருந்திருந்தால், நீங்கள் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருப்பீர்கள்.

நீங்கள் இன்னும் சிறையில்தான் இருக்கின்றீர்களா என்பதை நான் அறியவில்லை. ஒருவேளை உங்களைப் போல் எவரும் சிறையில் இல்லை என அதிகாரிகள் கூறக்கூடும். அப்படியானாலும், உங்களைப் போன்று நூற்றுக்கணக்கான, சில வேளையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எமது நாட்டின் சிறைகளில் இருக்கின்றனர். மறுபுறம் நீங்கள் விடுதலை செய்யப்பட்டால் எங்கு போவீர்கள்?. நீங்கள் எங்கு போனால் எவருக்கு என்ன?. உங்களைச் செவ்வி காணும் அல்லது உங்களது வாழ்க்கையை கதையாக எழுதும் தேவை யாருக்கு இருக்கிறது?. வீடு, கிராமம், நாடு இல்லாத மனிதர்கள்.. நீங்கள் இன்று இலங்கை வாழ் ஆயிரக்கணக்கான தமிழர்களின் அடையாளம்.

உங்களைக் குறித்து வெளியான முதலாவது செய்திகளை படித்த பின்னர், ஏற்பட்ட மன தாங்கல் மற்றும் ஆத்திரம் காரணமாகவே நான் இந்தக் கடிதத்தை எழுதினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு

உங்களைக் காணாத பிரஜை

சுனந்த தேசப்பிரிய

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57031/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.