Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் 1300 ஏக்கர் காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மக்களின் நிலங்களை அரசு அபகரிப்பு...

சனிக்கிழமை, 26 பிப்ரவரி 2011 05:40

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமான ஆயிரத்து 300 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை அரசு அபகரித்துள்ளதாக பிரதேசவாழ் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நிலப்பரப்பை ராஜபக்ஸ குடும்பமும் அவர்களுக்கு நெருங்கியவர்களும் பங்கு போடுக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முருகண்டி, இந்துபுரம் மற்றும் சாந்திபுரம், ஆகிய பிரதேசங்களே அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதாக ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 40 வருடங்களாக வாழ்ந்து வந்த தமது சொந்த இடங்களை அரசு அபகரித்துக் கொண்டு காட்டுப் பிரதேசங்களை வழங்குவதற்கு மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். யுத்தத்தின காரணமாக தமது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளதாகவும் இந்த அரசின் காரணமாக தமது நிலத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சங்கமம்-கொம்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Feb 26, 2011 / பகுதி: செய்தி /

கிளிநொச்சியில் 1300 ஏக்கர் காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிப்பு!

கிளிநொச்சியில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை ராஜபக்ஷ குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டுச் சோ்ந்து கொள்ளையடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிரகாரம் தற்போதைக்கு அப்பிரதேசத்தில் சுமார் 1300 ஏக்கர் காணிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்கென ராஜபக்ஷ குடும்பத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. அதனையொத்த அளவிலான காணிகள் ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அங்குள்ள பொதுமக்களுக்கு உரித்தானதும், உறுதிப்பத்திரம் உடையதுமான காணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காணிகளுக்கு உரியவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தனர். அவ்வாறான நிலையில் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொண்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்குப் பதிலாக காட்டுப் பிரதேசங்களில் அவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சியின் பெறுமதியான காணிகள் மற்றும் எதிர்காலத்தில் வர்த்த நோக்கில் பெறுமதியை எட்டவுள்ள காணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவே ஆளுங்கட்சிக்கு வழிகாட்டியாக செயற்படுவதாகவும், காணிகளை இழந்த மக்களுக்கு ஒட்டுசுட்டானில் மாற்றுக் காணி வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கியதும் அவர் தான் என்பதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pathivu

வன்னியில் கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 2500 ஏக்கர் நிலத்தை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் அமுக்கியுள்ளனர். இந்த நிலங்களில்

மஹிந்த இராஜபடக்சவுக்கு நெருக்கமானவர்கள் குடும்ப உறுப்பினர்கள் 1000 ஏக்கர் நிலத்தை சட்டரீதியாக அபகரித்துள்ளனர். நீண்டகால குத்தகை, கைத்தொழில் பேட்டை, மற்றும் பல்வேறு திட்டங்களுக்கு என இராஜபக்‌ஷ குடும்பம் முதலீடு செய்யவுள்ளது. தெற்கில் அபகரிப்புக்கள் மேற்கொண்டால் அரசியல் எதிர்ப்பு கிளம்பிவிடும் என்பதற்காகவும் வடக்கில் கேட்பார் யாரும் இல்லை என்ற வகையிலுமே இந்த அபகரிப்பி மிகவும் நூதனமாக நடக்கின்றது.

கிளிநொச்சியில் மொத்தம் 2500 ஏக்கருக்கு மேல் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு சொந்தமானது. இவர்களின் உரிமைகள் சட்டரீதியாக கைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் பேர்மிற் காணிகள் கூட அவரது இரத்த உரித்துகளிற்கு மட்டுமே மாற்ற முடியும் என்கிறது இலங்கை சட்டம்.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2500-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.