Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, 06 March 2011 16:33

கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள்.

யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தவரும், அப்போது யாழ். மாவட்டத் தளபதியுமான கேணல் கிட்டு மீது 1987 மார்ச் மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.

அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விபரங்களை தற்போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே இணையங்களிற்குத் தெரிவித்துள்ளனர்.

இத் தாக்குதல் சிறீலங்காவின் உளவுப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகவே ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் “மே 18 இயக்கம்” என்ற பெயரில் தேசியத்திற்கு எதிராக தீவிரமாக இயங்கிவரும் காந்தன் என அழைக்கப்படும் ரகுமான் ஜான் மாஸ்ரர் என்பவரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே இந்த விடயம் தற்போது வெளிவந்துள்ளது.

இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினராக இருந்து பின்னர் விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் செயற்பட்டாரயினும், அங்கும் எற்பட்ட பிரிவால் தீப்பொறி என்ற அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்குவகித்தவரும், அந்த அமைப்பின் சஞ்சிகையான “உயிர்ப்பு” என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.

அண்மையில் கனடா, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிற்கு ரகுமான் ஜான் விஜயங்களை மேற்கொண்டு தேசியம் இனி உயிர்க்கப்போவதில்லை என்றவகையிலான கருத்தரங்குகளை நடத்தி வந்தார். இதன் போதே இவர்களது கேணல் கிட்டு மீதான தாக்குதல் தொடர்பான சுய ஒப்புதல் வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.

குறிப்பாக இந்தத் தாக்குதல் பற்றிய முடிவெடுத்தலில் சம்பந்தப்பட்ட, இந்தத் தாக்குதலை நன்கு அறிந்திருந்த நபரொருவர் தற்போது கனடாவில் வசித்து வருவதையும் மேற்படி நபர் ஆரம்பத்தில் புளொட் மற்றும் தீப்பொறி குழுவின் முக்கிய செயற்பாட்டாளாராக இருந்து ஆனையிறவுத் தாக்குதலின் பின்னர் மீண்டும் தேசியம் சார்பாக இணைந்து கனடாவில் பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்ற தகவலும்

மேற்படி நபர் 2009ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பிலும் முன்நின்று செயற்பட்டவர் என்பதும் இவர்களால் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களது உள்ளக மோதலின் வெளிப்பாடாக தற்போது வெளிவந்துள்ள இவ்விவகாரத்தின் பிரகாரம் கிட்டு மீதான தாக்குதல் தீப்பொறி என்ற அமைப்பின் மத்திய குழுவின் ஒட்டுமொத்த முடிவின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மத்திய குழுவில் தன்னுடன் அப்போது இருந்தவரும் தற்போது கனடாவில் வதியும் மேற்படி “தேசியம் வளர்க்கும்” நபர் பின்னர் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் இணைந்து வேலை செய்த போதும் இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் விவகாரத்தை அவர்களிற்குத் தெரியாமலே வைத்திருந்தார் என்று ரகுமான் ஜான் மாஸ்ரர் பெருமிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை,

அண்மையில் ஐரோப்பா, கனடா ஆகிய இடங்களிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரகுமான் ஜானே தனது அரசியல் பிரபலதிற்காகவும், அரசியல் லாபங்களிற்காக இதுவரை தங்களால் மறைக்கப்பட்ட இந்த விவகாரத்தை வெளியே கசிய விட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை அவருடைய தீப்பொறி இயக்க இயக்க முக்கியஸ்தர்கள், கனடாவில் வதியும் மேற்படி தங்களுடைய தோழர் கூட விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிற போதும் இதுவரை அவர் மறைத்து வருகின்ற ஒரு செய்தியை ரகுமான் ஜான் தனது சுய புகழ்ச்சிக்காக அம்பலப்படுத்தியதாகக் கூறி மேற்படி கனடாத் தேசிய செயற்பாட்டாளருக்குப் அவர்களும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது குறித்த விவரமான செய்தியையும், விவரமான ஆய்வையும் “மறுஆய்வு” என்ற இணையத்தளம் ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கியுள்ளது.

sankathi

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவிதமான சிறப்புத் தகவல்களுமின்றி அவன் சொன்னான் அவள் சொன்னாள் என்கிற வகையில் இருக்கிறது கட்டுரை..! :D

இத்தகவல்கள் உண்மையானவை தான் என நினைக்கிறேன் .... 90களில் லண்டனில், இந்த தீப்பொறிக்கூட்டம் செயற்பட்டது, அப்போது அவர்களுடன் முன்னால் புலி உறுப்பினரும்/எனது முன்னால் நண்பரும்/யாழ்கள உறுப்பினரும்/இன்னால் கேபியின் முக்கியஸ்தகரும், அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டார். பின் அவர்கள் காலப்போக்கில் காணாமல் போக ... இவரும் ... யுத்த நிறுத்த காலங்களில் வன்னிக்கு சென்று ... தனது பழைய செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டு .. இனி தமிழ் தேசியத்துடன் இணைந்து செயற்பட போவதாக ... அவர்களையும் மூளைச்சலவை பண்ணி இங்கு வந்து ... புலனாய்வுத்துறையில் செயற்பட்டார்.

அவரின் அப்போது தெரிவித்த கருத்தின் படி ... கிட்டண்ணா மீதான தாக்குதலை செய்தது ... தீப்பொறியினரே!!!!

ஏன் செய்தார்கள் ... அக்காலத்தில் புளொட்டிலிருந்து பிரிந்து, புளொட்டுக்கு எதிராக யாழில் இவர்களை செயற்பட புலிகள் அனுமதித்திருந்தார்கள்!!! ஆனால் இவர்களுக்குள் ஓர் பயம் இருந்து கொண்டே இருந்ததாம். அதாவது புலிகள் மிக பலமாக வருமிடத்தே, தம்மை தொடர்ந்து அரவணைக்காமல்/செயற்பட விடாமல் ... தம்மை அழிக்க முற்படலாம் என்று!!

அதற்காக புலிகளுக்குள் அன்று இருந்த கிட்டு/மாத்தயா விரிசலை, தாம் பயன்படுத்தி, புலிகளுக்குள் கோஷ்டி மோதலை உருவாக்க திட்டமிட்டதாகவும், அதன் ஒரு செயற்படுத்தலில் கிட்டண்ணாவை முடிக்க திட்டமிட்டதாகவும், அதனை செயற்படுத்த ... கிட்டண்ணா தப்பி விட்டதாகவும் கூறினார்களாம்.

அதே நேரம் இத்தாக்குதலுக்கு சிலவேளை மாத்தயாவின் ஓரிரு நம்பிக்கையானவர்களின் ஆதரவையும் பெற்றிருந்திருக்கக்கூடும்!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.