Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன்னர் பாரா. உறுப்பினர் சிறிதரன் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு

[ பிரசுரித்த திகதி : 2011-03-07 01:20:41 PM GMT ]

சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகாக்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் பதுங்கியிருப்பதாகவும் கூட்டமைப்பினர் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilulakam.com/news/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் வாகனம் மீது இரு கைக்குண்டு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடு –

07 மார்ச் 2011

சற்று முன்னர் நொச்சிகாமம் பகுதியில் வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பயணம் செய்த வாகனம் மீது இரு கைக்குண்டு தாக்குதலும் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை நேரம் 6 மணியளவில்; இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது அனுராதபுரம் நொச்சிகாமம் பகுதியில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தில் இனந்தெரியாதவர்கள் கைக்குண்டுத்தாக்குதல் நடத்தியதோடு தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.

பதிலுக்கு அவரது மெய்பாதுகாவலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் சென்றவர்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பியுள்ளனர்.

எனினும் அவர்கள் அச்சம் காரணமாக தற்போது பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பதாகவும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, எஸ். சுமந்திரன் உள்ளிட்டோர் இது குறித்து; பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அரசாங்க புலனாய்வுப் பிரிவினரால் கிளைமோர் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு நேற்று 2 ஆண்டுகள் பூர்த்தியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.