Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிளவுப்பட்டு வருகிறதா ராஜபக்ஸ சகோதர நிறுவனம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிளவுப்பட்டு வருகிறதா ராஜபக்ஸ சகோதர நிறுவனம்...

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011 16:54

ராஜபக்ஸ சகோதர நிறுவனம் வெடித்து பிளவுப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜபக்ஸ நிறுவனத்தின் இரண்டு சகோதரர்கள் ஒன்றாக சேர்ந்து, மற்றுமொரு சகோதரான பசில் ராஜபக்ஷவை ஓரங்கட்டி வருவதால், அவர்களுக்குள் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஸ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற போதிலும், அவரது அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கொள்ள முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்தவர்கள் மற்றும் புதிய திட்டங்களுடன் வருபவர்களை, சந்திப்பதை, பசில் தவிர்த்து வருகிறார். நிதியமைச்சில், அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ஆரியரத்ன என்ற பெண்மணி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர், பசில் ராஜபக்ஷவின் 3 ஆயிரம் கோடி ரூபா செலவிலான அபிவிருத்தி திட்டங்களுக்கு பொறுப்பாக இருந்த, நிதியமைச்சின் உயர் அதிகாரியாவர். இந்த அதிகாரி பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து, பசில் ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டம் தொடர்பான நிதியை கையாளும் பொறுப்பு நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் வழங்கும் பணிகளை செய்வதில்லை. அதேவேளை பசில் ராஜபக்ஸவின் அமைச்சில், அவருக்கு வலதுகாரமாக மூன்று செயலாளர்கள் இருந்தனர். இவர்களில் ஒருவரான முதலீட்டு ஊக்குவிப்பு சபையில் பணியாற்றிய சாஜ் மெண்டிஸ் என்பவர், எவ்வித காரணங்களும் இன்றி, வெளிவிவகார அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரான லலித் அபேவர்தன, ஷாந்த கோட்டேகொட ஆகியோருக்கும் கத்தி மேசை வரை வந்துள்ளது. இந்த அதிகாரிகள் நிதியமைச்சிடம் சமர்பிக்கும் எந்த யோசனைகளையும் நிறைவேற்றாது அவர்களை திரும்பி அனுப்பும் நடவடிக்கைகளை பீ.பி.ஜயசுந்தர மேற்கொண்டு வருகிறார்.

அதேவேளை பசில் ராஜபக்ஸவின் அரசியல் பயணத்தை நிறுத்தும் தேவை ஏனைய ராஜபக்ஸவினருக்கு இருப்பதால், பாரியளவிலான நிதி கொடுக்கல் வாங்கல்களில் பசிலை நீக்கவிட்டு, அதனை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக அலரி மாளிகை தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் ஒரு அணியாக உள்ளனர். இதில் பலம் வாய்ந்த அணியான ஜனாதிபதியின் அணிக்கு அவரது மூத்த சகோதரர் ஷமல் ராஜபக்ஸ ஆதரவளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலி ரிச்மண்ட பாடசாலையில், நடைபெற்ற டி.ஏ.ராஜபக்ஸ விளையாட்டு அரங்கு திறப்பு விழாவில், பசில் ராஜபக்ஸ கலந்து கொள்ளவில்லை. இதில் ஸமல், மகிந்த, கோத்தபாய ஆகியோர் மாத்திரமே கலந்துக்கொண்டனர்.

இதனை தவிர அமெரிக்க மற்றும் சீனாவில் இருந்து முதலீட்டாளர்கள் கொழும்பு சென்றிருந்தனர். இவர்களுடனான சந்திப்பில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ஸ அழைக்கப்படவில்லை.

இந்த வெட்டு குத்துகள் காரணமாகவே பசில் ராஜபக்ஸ நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிக அக்கறை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த தேர்தல்களின் இணைப்புச் செயலகங்களை ஏற்படுத்தி செயற்பட்டவர்கள் எங்கே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பசிலை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார்.

தனது சகோதரர்களின் இந்த வெட்டுக்கள் காரணமாக பசில் ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் முக்கிஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இது குறித்து சந்தேகம் கொண்டு ஏனைய சகோதரர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் பொறுப்பை அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றும் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் கஜநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த ஒட்டுக்கேட்பு விடயத்தை அறிந்துள்ள பசில் ராஜபக்ஸ, தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமல், அதற்காக வேறு முக்கிய நபர் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவரது புதல்வர் ஆகியோர் பசிலை வெட்டுவதில் முன்னிலை இருந்த போதிலும், கோத்தபாயவுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுவது குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில், தமது வேலைகளை செய்து கொள்வதற்காக பசில் ராஜபக்ஸவின் பின்னால் திரிந்த ஏனைய அமைச்சர்கள், தற்போது, கோத்தபாயவின் பின்னால் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், அவர்களும் வெறுப்படைந்துள்ளதாக அலரி மாளிகை தரப்புத் தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

GTN

Edited by நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.