Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் அடுத்த மோதலுக்கான வழியை ஏற்படுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் அடுத்த மோதலுக்கான வழியை ஏற்படுத்தல்

02 ஏப்ரல் 2011

யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் ஆவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ளன. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததைக் கொண்டாடுவதற்கான அரச விழாவை ஏற்பாடு செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. எனினும், வடபகுதி தகவல்களை ஆராய்ந்து பார்த்த சுயாதீனமான விமர்சகர்கள் வெற்றி விழாவைவிட கவலைக்குரிய விடயங்களும் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடபகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. இதன் மூலமும் வேறொரு அரசியல் தோற்றத்தைக் காண முடிகிறது. படிப்படியாக மோசடியும், வன்முறையும் நிறைந்த இலங்கையின் தேர்தல் முறையின் தன்மையானது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் ஆட்சி அதிகாரங்களை ராஜபக்ஷவினரால் கைப்பற்ற முடியவில்லை. இதன்மூலம் தமிழ் மக்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது கொண்டிருக்கும் விருப்பமின்மை மற்றும் எதிர்ப்பு தெளிவாக புலப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பாரிய அரசியல் பிரசார தொனிப் பொருளாகக் காணப்பட்ட வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய வேலைத் திட்டங்களைக்கூட கவனத்தில் கொள்ளாது இந்த மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வழங்கியுள்ள தேர்தல் முடிவுகள் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

யுத்தத்தில் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கிய வடபகுதி தமிழ் மக்களுக்கு கூறப்பட்ட விடுதலை கிடைத்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது தற்போதுள்ள மிக முக்கியமான பணியாகும். இந்த நிலையில், வடக்கில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தனது அனுபவங்களை க்ரவுன்டிஸ் வியு இணையத்தளத்தில் எழுதியிருந்த இந்தி சமரஜீவவின் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதாகும்.

இது 2011ஆம் ஆண்டு. விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கழிந்துள்ளன. எனினும், யுத்த காலத்தில் இருந்ததை விடவும் வடபகுதியின் சிவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையில் இராணுவ நிர்வாகம் அதிகரித்து வருவது என்பது நிராகரிக்க முடியாத விடயமாகும்.

கடத்தல், படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்த சூழ்நிலையிலேயே 2011ஆம் ஆண்டின் புதுவருடம் பிறந்தது. எனினும், அரசாங்கத்தின் அதிகாரிகளான யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் போன்றோரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், இவ்வாறான சம்பவங்கள் அரசாங்கத்தின் எதிராளிகளால் கூறப்படும் பொய்க் கதைகள் எனக் கூறினர். வடக்கின் நிலைமையானது தெற்கின் நிலைமையுடன் ஒப்பிடும் போது வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, நாட்டிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்கு சிறிய பிரச்சினைகளை பெரிப்பித்துக் காட்டுவதாக தமிழ் பத்திரிகைகள் மீது விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த பீதி சூழலுக்கு பதிலளிக்கும் வகையில் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, யாழ் குடா நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தமது கடமைகளை முன்னெடுத்து வரும் இராணுவத்தினர் 24 மணி நேரம் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சின் மூலம் வடபகுதியில் நிலவும் இராணுவ மயமாக்கலை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமைதியையும், சட்டத்தையும் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அமைதியாக இருப்பதுடன் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக இராணுவத்தினர் அறிக்கைகளை வெளியிடுவது இதனை நன்கு புலப்படுத்துகிறது.

வடபகுதி இராணுவ மயமாக்கல் என்பது படிப்படியாக பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தனியார் காணிகள், வீடுகள் காணப்படும் அனைத்து சந்திகள் மற்றும் கிராமங்களில் இராணுவச் சோதனை சாவடிகள் காணப்படுவது தெளிவாக புலப்படும் இராணுவ மயமாக்கலுக்கான அடையாளமாகும். இதனைத் தவிர புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக கண்ணில் புலப்படாத நடைமுறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

2011ஆம் ஆண்டு ஜனவரி 07ஆம் திகதி ஜனாதிபதியின் செயலணிப் படையினரால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களுக்கு சுற்று நிருபமொன்றை அனுப்பியிருந்தனர். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய தொண்டு நிறுவனங்களினால் உதவிகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து உதவிகள் பெறும் மக்களின் பெயர் விபரங்களை இராணுவப் படையணி அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இது சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு இருப்பதை வெளிக்காட்டுகிறது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் மேற்கொண்ட செயற்பாடுகளை தற்போதைய சமாதான காலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வன்னியில் இராணுவத்தினரின் தலையீடு மிக அதிகமாக காணப்படுகிறது. சமுக மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமல்ல ஒரு சிலருக்கு மேல் கூடும் அனைத்து இடங்களும் விரிவாக கண்காணிக்கப்படுகின்றன. இளைஞர்கள் ஒரு இடத்தில் கூடி பேச வேண்டுமானால் அதனை இராணுவத்திற்கு அறியத்தர வேண்டும் என்பதை வன்னி மக்கள் அறிந்திருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அந்தக் கூட்டங்களுக்குள் பிரவேசிக்கும் இராணுவத்தினர் உன்னிப்பாக கண்காணிப்புக்களை மேற்கொள்கின்றனர். யுத்தம் இல்லாத ஜனநாயக நாட்டில் இராணுவத்தினர் இவ்வாறு சிவில் வாழ்க்கையை நிர்வகிப்பது எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதை எண்ணிப்பார்ப்பது கடினமானது.

வடக்கில் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் சிவில் விவகார அலுவலகம் யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் இராணுவத் தலையீடுகளை சுட்டிக்காட்டும் அடையாளமாகும். வடபகுதி மக்கள் தென்பகுதிக்கு வருவதற்கு அனுமதி வழங்குவதற்காகவே ஒருகாலத்தில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இந்த அலுவலகம் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு அலுவலகமாக மாறியிருக்கிறது. உதாரணமாக புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இந்த அலுவலகத்தில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். வாரத்தில்,இரண்டு வாரத்திற்கு அல்லது ஒரு மாதத்தில் ஒரு தடவை அந்த அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இந்த நடவடிக்கையானது எந்தச் சட்டத்திட்டத்திற்கும் அமைய மேற்கொள்ளப்படும் ஒன்றல்ல.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்த இராணுவ அலுவலகத்தின் இணையத்தளத்தில் இராணுவம் மறுசீரமைப்பை ஏற்படுத்துதல், சிவில் வாழ்க்கையை ஏற்படுத்துதல், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பாரம்பரிய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி அதனை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில், அகதி பிள்ளைகளை பராமரிக்கும் பணியை இராணுவம் மேற்கொண்டு வருகிறது. இவையெல்லாம் சிவில் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்டவை.

தமிழ் காவல்துறை அதிகாரிகள் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள வீதிகளில் காவல்துறையினரைவிட இராணுவத்தினரே அதிகமாக நடமாடுகின்றனர். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. உதாரணமாக கைத்தடி பாலம், பளை சந்தி போன்ற பெயர்கள் சிங்களத்தில் மாத்திரமே காணப்படுகின்றன. மாங்குளத்தில் இராணுவ மற்றும் காவல்துறை நிலையங்களின் பெயர் பலகைகள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மாத்திரமே காணப்படுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்புகள் சிக்கலான மற்றும் அன்னியோன்யமாக இருந்தன. இன்றும் அப்படியே. இந்தத் தொடர்புகள் குறித்து தமிழ் சமுகத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு சாரார் புலிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஒருசாரார் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்காமையினால் விடுதலைப் புலிகளைப் பொறுத்துக் கொண்டிருந்தனர். ஒரு சாராருக்கு விடுதலைப் புலிகளின் அடக்குமுறை நடைமுறைகளுக்கு மத்தியில் எடுப்பதற்கு வேறு வழி இருக்கவில்லை.

யுத்தத்தின் பின்னரான இந்தக் காலப்பகுதியில் அந்தப் பிரச்சினைகளை தமிழ் சமுகத்திற்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும். வரலாற்றைப் பலவந்தத்தைத் திணித்தல், பெரும்பான்மையினரின் கருத்துக்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்கள் யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் மனநிலைக்குள் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள சிவில் சமுக அரசியல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரை பாரியளவில் தலையிடச் செய்வது தூரநோக்கற்ற செயற்பாடு மாத்திரமல்ல. அது இறுதியில் அரசாங்கம் சுயமாக தன்னை அழித்துக் கொண்ட செயலாக மாறக்கூடும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் விடுதலைப் புலிகள் இல்லாவிட்டாலும் அவர்களைப் போன்று தமிழ் தேசிய வாதம், தமிழ் அரசியல் கட்டமைப்பிற்குள் உயிர் பெறுவதற்கு இந்த நடவடிக்கைகளைத் தவிர வேறு சிறந்த செயற்பாடுகள் எதுவும் இருக்காது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வடபகுதி தமிழ் மக்களுக்கு வழங்கும் செய்தியானது தாம் சரி சமமான பிரஜைகளாக மதிக்கப்படுவதற்கும் பல்லின சமுக அரசியல் கட்டமைப்பில் முழுமையான உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும் சந்தர்ப்பம் இல்லை என்பதைப் புலப்படுத்துவதாக அமையும். அத்தோடு தாம் வேறு ஒரு தரப்பினரால் அடக்கப்பட்ட பூமியில் வாழ்வதாக அவர்கள் உணர்வார்கள்.

யுத்த வெற்றியாளரான அரசாங்கம் தமிழ் மக்களின் மொழி, கலாசாரம், உரிமைகளை அழித்து தனது விருப்பத்தையும், சிங்கள பௌத்த அடையாளங்களையும் தமிழ் மக்கள் மீதும் சுமத்த முயற்சித்து வருகிறது. அரசாங்கத்தின் இந்த தந்திரோபாயமானது தமிழ் மக்களுக்குள் ஆத்திரத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் தமது உரிமைகளை பறிக்கின்றனர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் குறுகிய கால மறுசீரமைப்பிற்கு இருக்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டு நீண்டகால மற்றுமொரு மோதலுக்கு வழியை ஏற்படுத்துவதாக உள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய:-

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.