Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்லைவெளியில் நேற்று நடந்த கோர விபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வல்லைவெளியில் நேற்று நடந்த கோர விபத்து

Saturday, April 16, 2011, 4:48

வல்லைவெளியில் தலை தெறிக்கும் வேகத்தில் பறந்து சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இருவரும் படுகாயங்களுடன் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஒருவர் நேற்றிரவு மரணமானார். மற்றவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சண்டிலிப்பாய் வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த தே.தேவமகிந்தன் (வயது23) என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார். இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.கரணவாய், நவிண்டிலைச் சேர்ந்த சோ.விஜயரட்ணம் (வயது 32) என்பவரே படுகாயமடைந்தவர் ஆவார்.

இந்த விபத்துக் குறித்து தெரிய வருவதாவது:

யாழ். முனீஸ்வரன் வீதியில் புடைவைக் கடை நடத்தி வரும் விஜயரத்தினம் நெல்லியடியில் வசித்து வருகிறார். அவரிடம் கைவிஷேடம் பெறுவதற்காக இறந்தவர் அங்கு சென்றார். பின்னர் இருவரும் யாழ்.நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வல்லைவெளியில் ஆலடிச் சந்தியைக் கடந்து வீதி வளைவில் திரும்ப முற்பட்ட சமயம் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிய நிலையில் மோட்டார் சைக்கிள் மின்சாரக் கம்பத்துடன் அசுர வேகத்தில் மோதியது. அதில் பயணித்த இருவரது தலையும் கம்பத்துடன் மோதியதில் படுகாமடைந்தனர். மின்சாரக் கம்பமும் முறிந்து சரிந்தது மோட்டார் சைக்கிள் மீது வீழ்ந்தது. ‘அதிர்ஷ்டவசமாக மின்கம் பம் அவர்கள் மீது விழ வில்லை. மோட்டார் சைக்கிள் மீது கம்பம் வீழ்ந்ததில் அது நசியுண்டு முற்றாகச் சேதமடைந்தது.

இரத்தம் பீறிட்ட நிலையில் இருவரையும் அங்கு கூடிநின்றவர்கள் ஒருவாறு மீட்டனர். அச்சமயம் யாழ். ஆஸ்பத்திரிக்கு நோயாளர்களை ஏற்றி வந்த பருத்தித்துறை சுகாதார வைத்தியசாலையின் அம்புலன்ஸ் அவ்வழியே திரும்பி வந்தது. அதில் அவர்கள் சிரமத்துடன் ஏற்றப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவசர முதலுதவிகள் வழங்கப்பட்டு, உடனடியாக இருவரையும் தனித் தனியாக இரு அம்புலன்ஸ்கள் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்குத் கொண்டுவரப்பட்டனர்.அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பல மணி நேரம் வைத்தியர்கள் போராடிய போதும், அவர்களில் ஒருவர் நேற்றிரவு 9 மணியளவில் மரணமானார். மற்றவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

http://www.tamilthai.com/?p=15035

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.