Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தாய் நாட்காட்டியின் பதிவுகள்

Featured Replies

  • தொடங்கியவர்

28 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கொக்கட்டிச்சோலை கிராமப் படுகொலை(1987)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை கிராமம், தமிழீழப் போராட்டத்திற்குச் செலுத்திய விலை அளப்பரியது.

அக்கிராமத்தின் ஒவ்வொரு குடிசையிலும் சிங்களப் படை செய்த கோரத்தின் நிழல் தெரியும்.

பதிவுகள்

முதலாவது கொக்கட்டிச்சோலைப் படுகொலை 1987 ஜனவரி

28, 29, 30 ஆகிய முன்று நாட்கள் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள் படுகொல செய்யப்பட்டனர்...

தகவற் துளி

விமானப் போக்குவரத்தில் அதிக வருமானம் ஈட்டும் நாடு அமெரிக்கா ஆகும்..

சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை..

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • Replies 94
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

29 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

பிரபல தத்துவஞானி சோக்கிரட்டீஸ்(கி.மு. 470 - கி.மு. 399)

புராதன உலகின் மிகச்சிறந்த அறிஞர்களும் ஒருவர் சோக்கிரட்டீஸ். அத்துடன் இளமைக் காலத்தில் இவர் ஒரு போர்வீரன். பின்பு இவர் ஒரு தத்துவஞானியாக மாறி இளம் சமுதாயத்தின் மனங்களில் புரட்சி விதையை விதைத்தார். இளைஞர்களைக் குழப்பிகிறாற் எனக் குற்றம் சாட்டி அரசு இவருக்கு மரண தண்டனை விதித்தது...

பதிவுகள்

நாதஸ்வரவித்துவான் பாலகிருஷ்ணன் நினைவுநாள்

(21.06.1945 - 29.01.1981)

தகவற் துளி

வடதுருவத்திற்க்கு சென்ற முதல் மனிதன் றொபேட் பெரி என்ற அமெரிக்கர் ஆவர். 1909- ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ம் திகதி இன்னும் ஒரு அமெரிக்கரோடும் நான்கு எஸ்கிமோக்களுடனும் அங்கு சென்றார்..

விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி.....

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

30 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மகாத்மா காந்தி

02.10.1869 - 30.01.1948

பிரித்தானியருக்கெதிராக அகிம்சை வழியில் இந்திய சுதந்திரப்

போரை முனெடுத்தவர். அகிம்சைத் தத்துவத்தை உலகிற்குக் கொடுத்தவர். இவர் எழுதிய சுயசரிதை நூலான சத்திய சோதனை பிரபல்யமானது. முஸ்லீம்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றார் என்று குற்றம் சுமத்திய ஒரு இந்து வெறியனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பதிவுகள்

வடலூர் இராமலிங்அ அடிகளார் நினைவு நாள்.

(05.12.1823 - 30.01.1874)

தகவற் துளி

தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டை சேர்ந்த ராம் சாகிப் எம். சீனிவாசராவ்.

செய்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுக்கின்றன...

மானத்திற்காக அனைத்தையும் பணயம் வைக்கும் வீர. தியாக

உணர்வு கொண்டவர்கள்தான் சுதந்திரத்தை எப்ப்ப்ழுதுமே போராடிப் பெறுவர்...

-மகாத்மா காந்தி-

  • தொடங்கியவர்

31 ஜனவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

வீரவேங்கை அமலதாஸ்

(மைக்கல்பிள்ளை அமலதாஸ்)

குருநகர் - யாழ்ப்பாணம்

26.08.1959 - 13.05 1984

சிங்கள இராணுவம் கைதுசெய்த வேளையில் இராணுவத்தை

வெறுங்கையால் தாக்கிவிட்டு தஓயோட முயற்சித்த போது கைதுசெய்யப்பட்டார். பின்னர் முகாமில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.

தகவற் துளி

1903-இல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒட்டகங்கள் தமது உடல் வெப்பநிலையை பருவநிலைக்கேற்றபடி 6 பாகை பரனைட் தொடக்கம் 11 பாகை பரனைட் வரை மாற்றியமைத்துக் கொள்கின்றன.

இந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள் உலக வரலாற்றில் ஒர் ஒப்பற்ற வீர காவியமாக பொறிக்கப்பட்டுவிட்டது..

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

01 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் சுபேசன்

மருசலீன் அல்வின்

மன்னார்

02.07.1971 - 01.02.1998

சிறிலங்காவின் சுதந்திரதினப் பொன்வழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ். மக்களைக் கொண்டுசெல்வோம் என்ற இறுமாப்புமிக்க சிங்கள் அரசுதரப்பின் நிலைப்பாட்டுக்கு 02.02.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும். கிளிநொச்சி நகரின் மையத்தில் சிங்களகொடி பறப்பை மாற்றி தமிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்குப் பலம் சேர்த்து கரும்புலி

லெப். கேணல் சபேசன் வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

கி.பி. 1619-இல் போர்த்துக்கேயத் தலைவன் பிலிப்பு த ஒலிவீரா சங்கிலி மன்னனுடன் போர் புரிந்தான். சங்கிலியன் தோற்கடிக்கப்பட்டான்.

மதித்தற்கரிய மாணிக்கமாகிய சுதந்திர யாழ்ப்பாணத் தமிழரசு இழக்கப்பட்டது.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை.

-தமிழீழத் தேசியத் தலைவர்

-மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

02 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

வ¡É¢Âø ¿¢Ò½÷ ¿¢ì¸ÄŠ ¦¸¡ôÀɢ츊

þò¾¡Ä¢(1473 - 1543)

þùÅ¡½¢Âø ¿¢Ò½§Ã Ó¾ý Ӿġ¸ Ýâ¨Éî ÍüÈ¢ âÁ¢ ÅÄõ ÅÕ¸¢ýÈÐ ±ன்À¨¾ ¦¸¡û¨¸ «ÇÅ¢ø

¦ÅǢ¢ø ¦º¡ýÉÅ÷.

¾¸Åü ÐÇ¢

1290-þø Ó¾ý Ó¾ø Å¡º¢ì¸ìÜÊ ãìÌì ¸ñ½¡Ê þò¾¡Ä¢Â¢ø ¸ñÎÀ¢Êì¸ôÀð¼Ð.

¯Ä¸¢ý Á¢¸ô¦Àரிய மணி ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் உள்ளது. இதன் நிறை 193 தொன், உயரம் 6 மீற்றர். இதன் வாயின் சுற்றளவு 18.7 மீற்றர்.

பத்திரிகைகளும் புத்தகங்களும் ஓரளவிற்கு உதவி செய்யக்கூடியவை. மற்றவை அனுபவ வாயிலாக அறிய வேண்டியவை. கைகாட்டி மரம் வழியைக் காட்டுமே தவிர நம்மைக் கொண்டு சேர்க்காது.

-ராமகிருஷ்ண பரம†ம்சர்-

  • தொடங்கியவர்

03 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

அறிஞர் சி.என். அண்ணாத்துரை

15.09.1909 - 03.02.1969

தமிழின் தென்றலாய் வீசியவர்கள் பலர். ஆனல் தாழ்ந்த தமிழினத்தின் அரசியல் அனலாக எழுந்தவர் அறிஞர் அண்ணா ஆவார், பட்டி தொட்டி எங்கும் தமிழின் புது ஒளிவீச வைத்தவர். பல்லாயிரம் இளைஞர்களுக்கு இலட்சிய ஏற்றம் வீறும் ஏற்றியவர். எளிமை உருவும், ஆற்றலின் பெரு வலிமையும் ஒருங்கே இணைந்த பேரறிஞராக அவர் திகழ்ந்தார். அறிஞர் அண்ணா ஈடிணையற்ற பேச்சாளன், நாடகாசிரியன், இலக்கியச்செம்மல்.

தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகவும் பணியாற்றினார்.

தகவற் துளி

'ஆசியன்'தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு.

1967-இல் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகள் இணைந்த ஓர் பிராந்தியக் கூட்டமைப்பு...

முதல் முதலில் ஒலிம்பிக் போட்டி கி.மு 776இல் கிரேக்கத்தில் நடைபெற்றது.

துன்பம் இல்லாத உலகுக்கு வழி காட்டுவது துன்பப் பாதையே..

-வில்லியம் கூப்பர்-

  • தொடங்கியவர்

04 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

தமிழறிஞர் வீரமா முனிவர்

08.11.1680 - 04.02.1747

கொன்ஸ்ட்டண்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இத்தாலியர் தமிழில் பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்மொழிக்கு அருந்தொண்டு புரிந்தார். இவரது அதிசிறப்புப் பணியாக தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தி இலகுபடுத்தியதைக் குறிப்பிடவேண்டும்.

பதிவுகள்

சிறீலங்காவின் சுதந்திர தினத்தன்று திருமலையில் சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக்கொடி கட்ட முயன்றபோது சிங்கள காடையரால் சுடப்பட்ட தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள்.(04.02.1957)

தகவற் துளி

மலப்பாம்பு இரையின் தலைப்பகுதியையே முதில் விழுங்கும்.

போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறிதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்கமுடியாது....

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

05 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில்

யாழ்ப்பாணம் (கி.பி.948)

கி.பி. 948-ஆம் ஆண்டு புவனேகவாகு என்ற சோழ அரசப் பிரதிநியால் முதல் முதல் குருக்கள் வளவு என்ற இன்றுள்ள இடத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்டது. பல படையெடுப்புக்களால் அழிக்கப்பட்டு மீண்டும் மீளக்கட்டியெழுப்பப்பட்ட இக் கோவில் சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ் மக்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த பெருங்கோவிலாகவும்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாண்டுகள் நீண்ட பாதையில் வரலாறு படைத்துள்ளது.

பதிவுகள்

அறிஞர் சித்தாலெப்பை நினைவு தினம்.

(11.06.1838 - 05.02.1898)

தகவற் துளி

1941-இல் ஜப்பானிய விமானப் படையினர் அமெரிக்காவின் 'பேர்ள்' துறைமுகத்தின் மீது தாக்குதலினை நடாத்தினர்.

முகமலர்ச்சி, ஈகைக்குணம் இனிய சொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புக்களும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும்..

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

06 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மேஜர் குமுதன்

மயில்வாகனம் இன்பராஜன்

யாழ்

மேஜர் ஜெயராணி

நடராஜா சாந்தி

மன்னார்

மேஜர் ஆசா

வேலுப்பிள்ளை சிவயமுனா

யாழ்

சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.

கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான மேஜர் குமுதன், மேயர் ஜெயராணி,

மேஜர் ஆசா ஆகியோர் வீரச்சாவடைந்தனர்...............

தகவற் துளி

1914ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ம் திகதி ஆரம்பித்து 1918ம் ஆண்டு 11ம் திகதி வரையிலான 1561 நாட்கள் முதலாம் உலக மகா யுத்தம் நடந்தது. இதில் 1 கோடி படைவீரர்களும் 2 கோடி மக்களும் இறந்தனர்.

உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

07 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

kousalyan3xb.jpg

லெப்.கேணல் கெளசல்யன்

சாள்ஸ் பாபேஜ்

மட்டக்களப்பு

???? - 07.02.2005

மட்டு. - அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரான கெள்சல்யன் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட வேளை 07.02.2005 அன்று மட்டு. மாவட்ட இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியான புனானைக் பகுதியில் வைத்து கெள்சல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தால் நாடத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன். 2ம் லெப். விதிமாறன் ஆகியயோரும் வீரச்சாவடைந்தார்கள். மற்றும் இத்தாக்குதலில் படுகாயம்டைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 08.02.2005 அன்று மரணமானார்.

பதிவுகள்

கிறனடா சுதந்திர தினம்..

(1974)

தகவற் துளி

அப்புக்காத்து ஜசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914-இல்

'நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926-இல் 'அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

நம்மால் முடியுமா என்று மனத் தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

08 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மாமனிதர் சந்திரநேரு

அரியநாயகம் சந்திரநேரு

(அம்பாறை)

அம்மாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான டிரு. அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டு. மாவட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான புனானைக் பகுதியில் வைத்து கெள்சல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தால் நாடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து 08.02.2005 அன்று மருத்துவமனையில் இறந்தார். இவர் சிங்கள படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அட்டூழியங்களை நேர்மைத்திறனுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். இவரின் இனப்பற்றிகும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியைக் கெளரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கிக் கெளாரவித்தார்.

பதிவுகள்

சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டம் களனி மாநாட்டில் பிரகனப்படுத்தப்பட்ட நாள்.

இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப - வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை, இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும்........

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

09 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மேயர் மங்கை

இரத்தினசிங்கம் நேசமலர்

கிளிநொச்சி

கப்டன் தனா

பெருமாள் கலைநிதி

யாழ்

கப்டன் இந்து

கந்தையா புனிதா

அம்பாறை

சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.

கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான மேயர் மங்கை, கப்டன் தனா, கப்டன் இந்து

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்...............

தகவற் துளி

1937-இல் பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ,தமிழ் மகள்' ஆகும். இது வண்ணார்பண்ணையில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி. மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்........

சட்டமேதை ஜி.ஜி. பொன்னம்பலம் நினைவுநாள்(1997)

விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.

-பாரதியார்-

  • தொடங்கியவர்

10 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

படைஉயெடுப்பு முறியடிப்பில் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது

வன்னி மீதான மும்முனைத் தாக்குதல் படையெடுப்பி( வன்னி விக்கிரம) முறியடிக்கப்பட்டதுடன்

உலங்குவானூர்தி ஒண்றும் சுட்டுவீழ்த்தப்பட்டது. (1991).

தகவற் துளி

விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி ஏ லோனோய் ஆவார்.

உலகின் பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு சீனாவாகும். சிறிய இராணுவத்தைக் கொண்ட நாடு அண்டோரா ஆகும்.

ஆஸ்கார் விருதை அதிக முறை வென்றவர் வோல்ட் டிஸ்னி

ஆவார்..

பயிற்சி, தந்திரம். துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

11 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

சங்கிலி மன்னன்

அரண்மனை வாயில்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் ஆவான். இவந்து இராசதானி நல்லூரில் இருந்த்து. இவ் இராசதானியின் அரண்மனை வாயில் தோற்றம் இதுவாகும்.

பதிவுகள்

நடிகமணி வி.வி. வைரமுத்து பிறந்த நாள்

(11.02.1924 - 08.07.1989)

அடங்காத் தமிழன் சி.சுந்தரலிங்கம் நினைவுநாள்...

ஈரான் தேசிய தினம் (1974)

வத்திக்கான் நகர சுதந்திரநாள் (1922)

எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்ப்பவை...........

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

12 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

பிரபல எழுத்தாளர் மார்க்சிம் கோர்க்கி

(28.03.1868 - 18.06.1936)

சோவியத் புரட்சிக்கு முந்திய மக்களின் வாழ்க்கை அவலங்களை மார்க்சிம் கோர்க்கியின் எழுத்தில் காணலாம். தாய் என்ற இவரது நாவல் உலகின் பெரும்பாலான மொழிக்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கோர்க்கி என்ற ரஷ்யச் சொல்லின் பொருள் கசப்பானது ஆகும். இச்சொல்லை அவர் தனது பெயரின் பின்னால் இணைத்துக்கொண்டார். புரட்சியின் பின் பிரச்சாரத்துக்குப் பொறுப்பாக லெனினால் நியமிக்கப்பட்டார்.

தகவற் துளி

1555-எல் புகையிலை ஜரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு

கொண்டு செல்லப்பட்டது.

உலகின் முதலாவது ஒலிம்பிக் போட்டி கிறிஸ்துவுக்கு முன் 776 இல் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது.

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களை பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

-குறள் விளக்கம்-

  • தொடங்கியவர்

13 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

கப்டன் நளாயினி

பழனி கோகிலா

முல்லை

கப்டன் செங்கதிர்

ஜெயரட்ணம் ஜெயந்திரா

யாழ்.

கப்டன் குமரேஷ்/ குமணன்

ஜெகநாதன் ரவிச்சந்திரன்

மன்னார்

சிறீலங்காவின் சுதந்திரப் பொன்விழாக் கொண்டாட்டத்திற்கு கிளிநொச்சியூடாக யாழ், மக்களைக் கொண்டு செல்வோம் என்ற இருமாப்புமிக்க சிங்கள அரசுத்தரப்பின் நிலைப்பாட்டுக்கு, 2.2.98 அன்று விடுதலைப் புலிகள் கொடுத்த பலமான அடி கிளிநொச்சி நகர் மீட்பாகும்.

கிளிநொச்சியில் சிங்கக் கொடிபறப்பை மாற்றி த்மிழீழக் கொடியை பறக்கச் செய்த தாக்குதலுக்கு பலம் சேர்த்து கரும்புலிகளான கப்டன் நளாயினி,கப்டன் செங்கதிர்,கப்டன் குமரேஷ்/ குமணன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

பதிவுகள்

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவுநாள்

(1874 - 13.02.1950)

கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த 16 புலி வீரர்களின் நினைவு நாள்.

(1985)

தகவற் துளி

1954-இல் அமெரிக்க கான்சர் மையம், முதன்முதலாக சிகரட் பிடித்தால் கான்சர் வருமென்று கண்டுபிடித்துச்

சொல்லியது.

  • தொடங்கியவர்

14 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

ஜனாதிபதி சார்ள்ஸ் து கோல்

பிரான்ஸ்

22.11.1890 - 12.11.1970

2ம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஜேர்மனியர்களால்

கைப்பற்றப்பட்ட பின்னர் இங்கிலாந்து சென்று, பிரான்ஸ் நாட்டவர்களை அணிதிரட்டி படையை கட்டியெழுப்பி அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் ஜேர்மனிய ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்ஸ் நாட்டை மீட்ட தலைவர் சார்ள்ஸ் து கோல் ஆவார்......

பதிவுகள்

காங்கேசந்துறையில் வைத்து சிறீலங்கா பொலிஸ் படையின் மீதான முதலாவது தாக்குதல் தலைவரின் தலைமையில் நடாத்தப்பட்ட நாள்.(1977)

உமையாள்புரத்தில் சிங்களப்படை மீது கண்ணிவெடி தாக்குதல் நடாத்தப்பட்ட நாள்.(1983)

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது.

- தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

15 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் பொன்னம்மான்அற்புதன்(யோகரத்திணம் குகன்)

23.12.1956 - 14.02.1987)

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான பென்னம்மான், ஆயிரக்கணக்கான இராணுவப் பயிற்சிப் பாசைறைகளுக்குப் பொறுப்பாக இருந்ததுடன், இராணுவ தொழில்நுட்ப்ப பணியிலும் பெரும் பங்காற்றியவராவார்.

கைதடியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு இன்னும் 7 தோழர்கலுடன் வீரச்சாவடைந்தார்.

தகவற் துளி

கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ரஷ்யாவாகும்.

'பெருலா' எனப்படும் மரத்தின் பிசினேபெருங்காயம் எனப்படுகிறது.

மனித ஆத்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது...

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்

  • தொடங்கியவர்

16 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

அணு விஞ்ஞானி நீல்ஸ் போர்07.10.1885 - 18.11.1962

போர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெளதீகச் சாஸ்ர்கிர வல்லுனராவார், இவர் நவீன அணுப் பெளதிகவியலின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். அணுவின் அமைப்புக்கள் பற்றிய வேலைத்திறனுக்காக பெளதிகவியலுக்கான நோபல் பரிசை 1922-ஆம் ஆண்டில் இவர் பெற்றுகொண்டார். அணுகுண்டைத் தயாரித்த விஞ்ஞானிகளின் ஆலோசகரக 1943- ஆம் ஆண்டில் கடமையாற்றினார்.

தகவற் துளி

50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் டைனோசர்களின் ஆதிக்கம் நிலவியது.

விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாக தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்தது. சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

17பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

பிரபல கடலோடி வேடினன் மகலென்

(கி.பி. 1480 - கி.பி.. 1521)

கடல்வழியாக உலகைச் சுற்றிவந்த முதல் மாலுமி மகலென் ஆவார். பசுபிக் சமுத்திரம் என்ற பெயரைச் சூட்டியதும் இவர்தான் பசுபிக் என்றால் அமைதி என்று பொருள். மகலெனின் நினைவாக தென் அமெரிக்காவின் பகுதியிலுள்ள

நீரிணை ஒன்றிற்கு மக்லென் நீரிணை என்று பெயர் சூட்டியுள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுடன் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.

தகவற் துளி

சிறீராமகிருஷ்ண பரமஹம்சர் அவதாரதினம்

(17.02.1836 - 16.08.1886)

தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தி நினைவுநாள்

(1986)

இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் யுரேனியம் ஆகும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

-குறள்-

  • தொடங்கியவர்

18 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

அணுகுண்டின் தந்தை ரொபேட் ஒப்பன் ஹெய்மர்

22.04.1904 - 18.02.1967

அணுக்குண்டின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் ஒப்பன் ஹெய்மர். இவர் 16.07.1945-இல் நியூமெக்சிக்கோவிலுள்ள் பாலைவனமொன்றில் முதல் முறையாக அணுக்குண்டை பரிசோதனை செய்தார். இவரது பரிசோதனை நிகழ்து ஒரு மாததிற்குள் 2-ஆம் உலகப் ப்பொர்க் காலத்தில் அமெரிக்கா,

ஜப்பான் - நாகசாகி ஹிரோசிமா நகரங்கள் மீது 09.08.1945-இல் அணுக்குண்டை வீசி பேரழிவை ஏற்படுத்தியது.

தகவற் துளி

ஒட்டகச்சிவிங்கியினால் எவ்வித ஒலியையும் எழுப்ப முடியாது. அது ஊமை....

எகிப்து நாட்டில் பூனைகளுக்காக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

சிங்கள பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒரு போதும் மாறப்போவதில்லை.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

19 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

அம்பாறை உடும்பன்குளம் படுகொலை

1986

உடும்பன்குளத்தில் வயலில் சூடடித்துக்கொண்டிருந்த தமிழ் விவசாயிகளில் 60 பேரை சிங்கள அதிரடிப்படையினர் சுட்டு கொன்று, வைக்கோலுக்குள்ளேயே போட்டு எரித்தனர். சிங்கள் இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட இவ் அப்பாவித் தமிழ்மக்களின் நினைவுநாள்.(1986)

தகவற் துளி

உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா துறைமுகத்தின் பரோஸ் கலங்கரை விளக்கம் ஆகும். இது கி.மு. 280 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் உயரம் 400 அடி.

வெந்நீர் சுவையில்லாமல் இருப்பதற்குக் காரணம், நீரைக் கொதிக்கவைக்கும் போது நீருக்குச் சௌவையூட்டும் வாயு வெளியேறிவிடுகின்றது.

கரடுமுராடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப் பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

20 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

லெப். கேணல் கரன்

பாலசுந்தரம் கோபாலகிருஷ்ணன்

பொலநறுவை

07.05.1972 - 22.02.1998

திருமலையிலிருந்து யாழ். குடாவுக்கென 'பாப்தா' தரையிறக்கு கப்பலும், இராணுவ சரக்குக் கப்பலான 'வலம்புரி'யும் மேலும் இரண்டு போர்க்கப்பலும் எட்டு டோரா படகுகள்ல பாதுகாப்பு சழங்க துருப்புக்களையும் கொண்டு சென்றன 'பாபதா' தரையிறக்கு கப்பலும் 'வலம்புரி' சரக்குக் கப்பலும் முழ்கடிக்கப்பட்ட இப்பெரும் கடற்சமரின்போது வெற்றிக்கு வலுச்சேர்த்து வீரச்சாவடைந்த 11 கடற்கரும்புலிகளுள் கரும்புலி லெப். கேணல் கரனும் ஒருவர்.

தகவற் துளி

ரஸ்சியாவிலேயே அதிக நூலகங்கள் உள்ளன. இங்கு நான்கு லட்சம் நூலகங்கள் உள்ளன. நூல்நிலையங்களைப் பராமரிக்கும் முறை பற்றி சொல்லிக் கொடுப்பதற்கு 103 கல்லூரிகள் உள்ளன.

முதலாவது பயணிகள் புகையிரதம் 1825-இல் இங்கிலாந்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஆயுதங்கள் மட்டும் முக்கியமல்ல; தந்திரங்களும் உபாயங்களும் முக்கியம்.

-தமிழீழத் தேசியத் தலைவர்

மேதகு வே.பிரபாகரன்-

  • தொடங்கியவர்

21 பெப்ரவரி 2006 தமிழ்த்தாய் நாட்காட்டியின் இன்றைய பதிவுகள்

மருத்துவ விஞ்ஞானி சேர் அலெக்சாண்டர் பிளேமிங்

06.08.1881 - 11.03.1955

பென்சிலின் மருந்தினைக் கண்டுபிடித்த சேர் அலெக்சாண்டர் பிளேமிங் நினைவு 11.03.1955. இவரது கண்டுபிடிப்பு 2-ஆவது உலகப்போரின் போதும் அதற்குப் பின்னரும் ஏராளமான உயிர்களைக் காத்து வருகின்றது. இவர் மருத்துவதிற்கான நோபல் பரிசு பெற்றார்.

தகவற் துளி

ரோமானியப் பேரரசின் தலைவர்களான, யூலியஸ் சீசர், அக்ஸ்டின் சீசர் ஆகிய இருவருமே; இன்று வழக்கிலுள்ள

நாட்காட்டி அமைப்பிற்கு முதலில் வித்திட்டவர்கள். யூலை, ஒகஸ்ட் ஆகிய இரு மாதங்களும் இவர்களது பெயரினைக் குறித்து வந்தவையாகும்.

நான் செய்தாக வேண்டும், செய்தே தீருவேன், செய்ய என்னால் முடியும், செய்வது என் கடமை, இதோ செய்கின்றேன்.

-ரிச்சர்ட் ஹெரிட்டன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.