Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்போதைய நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு பேசுவது பாதகம்-கீதபொன்கலன்

Featured Replies

அரசியல் யதார்த்தம் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியதே தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் காலத்தின் தேவையாகும்.ஏனெனில் அரசியல் என்பது பிச்சையல்ல. ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை ஊடாக சர்வதேச சமூகம் தமிழர் அரசியல் பிரச்சினையை கையிலெடுத்துள்ள சந்தர்ப்பத்தில்

கூட்டமைப்பினர் அரசுடன் பேச்சு நடத்துவது பாதகமான விளைவுகளையே பெற்றுக் கொடுக்கும். எனவே நிபுணர் குழு அறிக்கையின் சர்ச்சை சற்று ஓய்கின்ற வரையாவது பேச்சு வார்த்தைகளை ஒத்திவைக்க வேண்டியது அவசியமாகும் என்று பேராசியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் குறிப்பிட் டார்.

இரண்டாவது சபை அல்லது செனட்சபை அமைக்கும் யோசனையானது மோசமான விடயமல்ல பாராளுமன்றத்தின் அதிகாரம் குறைவடைந்து மாற்று தெரிவாக இரண்டாவது பிரச்சினைக்கு செனட்சபையை தீர்வாக கொள்ள முடியாது. தமிழர்களுக்கு அதிகாரப் பரவலாக்கலினான சமஷ்டி முறைமையே தீர்வாக அமையவேண்டும்.

எனவே அந்தக் கோரிக்கைகளை பாதுகாத்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊடகவியலாளர் சிவராம் மற்றும் நடேசன் ஆகியோரின் நினைவுப் பேருரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை உள்ளது. மூன்றாம் உலகநாடுகள் குறிப்பாக காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்த நாடுகள் பல்லின சமூகங்களை கொண்டவையாகும். 1955, 1948 மற்றும் 1960 போன்ற ஆண்டுகளில் சுதந்திரமடைந்த நாடுகள் பல்லினங்களை இணைத்துக் கொண்டு தேசிய ஐக்கியத்திற்குள் செயற்படுகின்றன.

இதற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக கொள்ளலாம். வெற்றிகரமான மாற்றங்களுடன் பல்லின சமூக அதிகாரங்களைக் கொண்டு அரசியல் உறுதியடைந்துள்ளது.

இந்திய அரசியல் கொள்கைகளுக்கு எதிராக பேசமுடியாது. இக்காரணியே இலங்கை தமிழர் பிரச்சினை தமிழ் நாட்டில் மேலோங்கவும் காரணமாக அமைந்தது.

2009 ஆம் ஆண்டில் இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் அடைந்ததாக கொண்டாடப்படுகின்றது. இந்த இரண் டாவது சுதந்திரத்திலும் இலங்கை புதிய சவால்களை எதிர் கொண்டுள்ளது. புலிகள் இல்லாத பின்னணியில் அதிகாரப்பகிர்வு மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக இனரீதியாக பிளவு ஏற்படுத்தும் வகையில் சில நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பலவீனமடைந்துள்ளது.

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டாமை, இனங்களுக்கிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாமை மற்றும் தேசிய கொள்கைகளில் ஒழித்து வைக்கப்பட்ட தேசிய வாதம் என்பன பிரதான காரணிகளாகக் கொள்ளலாம். சர்வகட்சிக் குழு ஊடான 13 ஆவது திருத்தம் அரசியல் பகிர் வும் கூட தீர்வுத் திட்டத்திற்கு உட்படுத்தப்படாமை நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்தியது.

ஆனால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை தமிழ் சமூகம் முறையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவே கருதுகின்றேன். குற்றுயிரும் கொலையுயிருமாக பாதிக்கப்பட்டவர்கள் தமது பிரச்சினைகளுக்கு மேற்படி ஆணைக்குழுவை கள மாக பயன்படுத்தி வெளிப்படுத்தினர்.

இந்த ஆணைக்குழுவின் வழங்கப்பட்ட சாட்சியங்கள் பல ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை நேரடியாக இலங்கைக்கு பாரதூரமான விடயமாக அமையாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து சர்வதேச நாடுகளும் அதனை கையிலெடுத்துள்ளன. தற்போது இலங்கை தமிழர் பிரச்சினையை சர்வதேச சமூகமே நெறிப்படுத்துகின்றது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் பேச்சு நடாத்துவது பாதகமானதாகவே அமையும் என்பது எனது கருத்தாகும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.