Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயுத கொள்வனவு மோசடி: பெயர்பட்டியல் லீக்

Featured Replies

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அரசாங்க உயர்மட்டங்களும் படை அதிகாரிகளும் குழுவாக இணைந்து கொள்வனவு மோசடிகளிலும் ஈடுபட்டனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் கூடுதலாக மஹிந்த குடும்பமே கோலோச்சியது. ஆனால் இந்த ஆயுத மோசடிக்கு துணையாக இருந்து, முண்டு கொடுத்தவர்கள் உயர் இராணுவ அதிகாரிகளே. ஆகவே தான் உயர் அதிகாரிகளுக்கு மஹிந்த சகல துறைகளிலும் அதியுயர் பணிகளை வழங்கி வருகின்றார்.

.

.ஆயுத மோசடி தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தேர்தல் நேரங்களில் பின் உதைப்பினை ஏற்படுத்தும் என கருதியதால் மஹிந்த சம்பிரதாயத்திற்காக ஓர் விசாரணைக்குழுவையும் அமைத்திருந்தார்.

.

இந்த வகையில் மஹிந்த அமைத்த, திருமதி ஷிராணி திலகவர்தன தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சிறிலங்கா இராணுவம், கடற்படை,விமானப்படைஆகியனவற்றுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள்,விமானங்கள் போன்றனவற்றைக் கொள்வனவு செய்வதில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக 2007 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.

.

இந்த அறிக்கையினை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்த நிலையில் இது குறித்த மேலதிக விபரங்களையோ மோசடிகளில் ஈடுபட்டோர் பெயர்களையோ வெளியிட முடியாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு காரணம் மஹிந்த குடும்பம் தம்மை காப்பாற்றும் நோக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டபப்ட்டோருக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

.

ஆனால், இந்த மோசடிகளில் ஈடுபட்டோர் தொடர்பான விபரங்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன. அதன்படி மோசடிப் பேர்வழிகளின பட்டியல் இதோ:

.

கடற்படையில் இடம்பெற்ற மோசடிகளுக்குப் பொறுப்பானோர்

.

1. தற்போதைய ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ரியல் அத்மிரல் சரத் வீரசேகர.

.

2. கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மோகான் விஜயவிக்கிரம.

.

3. பொஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவர் அட்மிரல் தயா சந்தகிரி

.

விமானப் படையில் இடம்பெற்ற மோசடிகளுக்குப் பொறுப்பானோர்

.

1. குறிப்பிட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் படிää சிறிலங்கா விமானப் படைக்கு விமானங்களைக் கொள்வனவு செய்ததில் தற்போது பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பதவி வகிக்கும் எயார் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி நிதி மோசடி செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

இராணுவத்தில் இடம்பெற்ற மோசடிகளுக்குப் பொறுப்பானோர்

.

1. இராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்தமையில் ஊழல்ää புரிந்தோர் பட்டியலில் முதன்மை இடம் பெறுபவர் ஜெனரல் லயனல் பலகல்ல. இவர் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் களஞ்சியப் பிரிவின் தலைவராக சிறிலங்காவின் இன்றைய ஜனாதிபதியால் நியமிக்கப்படடடிருந்தார். இருப்பினும் சுகவீனம் காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

.

2. மேஜர் ஜெனரல் என். டபிள்யூ. சொய்சா. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் களஞ்சியப் பிரிவின் தலைவராகத் தற்போது கடமை புரிபவர்

.

3. சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றும் மேஜர் ஜெனரல் வீ. ஆர். த. சில்வா.

.

4. மாணிக்கக் கல் அதிகார சபையின் தலைவராகச் செயற்படும் ஜெனரல் ரொஹான் தழுவத்தை ஆகியோரே இந்த ஊழல் மோசடிப் பேர்வழிகளாகும்.

ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.