Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by சோபிதா on 09/06/2011 in செய்தி

யூன் 14ம் திகதி லண்டன் சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவுள்ள இலங்கையில் கொலைக்களம் என்ற தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டுமா? காண்பிக்கப்படக்கூடாதா? என்ற வாதம் பிபிசி வானொலியில் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்வாதத்தில் இக் காணொளித் தொகுப்பினை தயாரித்து வெளியிடும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்தனர்.

இப்படியான கொலைகள் இனிமேல் உலகின் எந்த ஊடகங்களிலும் வெளிவராமல் இருக்க வேண்டுமாயின் இந்த தொகுப்பு காண்பிக்கப்படல் வேண்டும் என இவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இவை காண்பிக்கப்படாது போனால் இலங்கை அரசும், இதுபோன்ற சம்பவங்களைச் செய்பவர்களும், இப்படியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்றே கருத்து வெளியிடுவார்கள் என்றும் கருத்துத் தெரிவித்தார்கள்.

இந்த தொகுப்பை பலர் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவார்கள் என்று கருதியபோதும் இதிலுள்ள உள்ளடக்கம் மானிடத்தின் உயிர் நாடியை உலுப்பும் செயலாக உள்ளதாகவும் இப்படியான சம்பவங்களை வெளிப்படுத்ததாமல் இருப்பது ஆபத்தானது என்றும் கருத்து வெளியிட்டனர்.

source:Eelam press.

கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதால், கொடூரமான காட்சிகளைக் கொண்ட விவரணத்தை வெளியிட்டதாக சனல் 4 தெரிவித்தது.

இலங்கையின் கொலைக் களங்கள் என்று பொருள்படும், Sri Lanka's killing fields என்ற பெயரிலான விவரணத்தில் கொடூரமான ஒளிப்பதிவுகளை வெளியிட்டமையை சனல் 4 தொலைக்காட்சி நியாயப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மீது பாரிய போர்க் குற்றங்கள் புரியப்பட்டதாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவித்த பின்னரும், இதுவரை அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்பதால், அந்த விவரணத்தில் கோரமான காட்சிகள் இணைக்கப்பட்டமை நியாயப்படுத்தப்படுவதாக சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் பிரிவின் தலைவர் டொறத்தி பைர்ன் தெரிவித்தார்.

அந்த விவரணத்தில் உள்ள சில காட்சிகள் குறித்து பீபீசீ வானொலியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கருத்து வெளியிட்டார்.

கொல்லப்பட்ட நாற்பதாயிரம் மக்களுக்கும் இதுவரை உலகின் எந்தப் பாகத்திலும் நீதி வழங்கப்படவில்லையென அவர் கவலை வெளியிட்டார்.

இந்த விவரணத்தைப் பார்த்த பின்னர், ஏதும் செய்யாமல் இருக்கப்போகிறார்களா என்று மக்களும், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான தூதுவர்களும் முடிவு செய்யவேண்டுமென பைர்ன் தெரிவித்தார்.

இந்த விவரணம், சிறந்த ஊடகவியலாளர்களால் தயாரிக்கப்பட்ட நல்லதொரு நிகழ்ச்சியெனத் தெரிவித்த கார்டிஃப் பல்கலைக்கழக பேராசிரியர் றிச்சேர்ட் ரெய்ட், விவரணத்தின் இறுதி 20 நிமிடங்களில் உள்ள ஒளிப்பதிவுகள், வழக்கமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஒளிப்பதிவுகளை விட அதிகம் கோரமானவையென்று கருத்து வெளியிட்டார்.

சனல் 4 தொலைக்காட்சி விவரணம், கடந்த நான்காம் திகதி ஜெனிவாவில் திரையிடப்பட்டபோது, அரங்கில் இருந்த பல பிரதிநிதிகள் கண்கலங்கி அழுதார்களென்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பதின்நான்காம் திகதி, அந்த விவரணம், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.