Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டேலீடரின் இயக்குனருக்கு மகிந்த அச்சுறுத்தல்

Featured Replies

சண்டேலீடரின் இயக்குனருக்கு மகிந்த அச்சுறுத்தல்! - எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்!!

கொழும்பில் இருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியமையை

பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கும் அவர்கள் விரும்பியபடி பயன்படுத்தும் வகையில் சீனா பணம் வழங்குவதாக சண்டே லீடர் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனாலேயே அந்நிறுவனத்தின் இயக்குனர் லால் விக்ரமதுங்கவை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதை அறிந்து தாங்கள் அதிர்ச்சியடைந்ததாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையின் ஒரேயோரு சுயாதீனமான ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவது ஏற்றுக் கொள்ள முடியாது. சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரை தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதிக்கு உடன்பாடு இல்லை என்றால், அது குறித்து அவர் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். அதுதான் ஜனநாயகக மரபாகும்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராபச்வின் இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம். ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய ஒருவர்.

ஆனால் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறான ஒரு முன்னுதாரணத்துக்கு வழியேற்படுத்தியுள்ளார். அவருடைய இந்நடவடிக்கை ஊடக சுதந்திரம் குறித்து அவர் என்ன கருதுகின்றார் என்பதை எமக்கு வெளிப்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகளை அவர் மாற்றியமைக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ராஜபக்ச குடும்பத்தினரால் ஊடகங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாவது இது தான் முதற்தடவை அல்ல. ஊடகங்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தும்படி நாங்கள் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஊடகங்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இலங்கையிலுள்ள ஊடகங்கள் ஒன்றுபட்டுக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 19ஆம் திகதி லால் விக்ரமதுங்கவை கடுமையாக அச்சுறுத்தி இருந்ததுடன், சண்டே லீடரின் காரியாலய சுவரிலும் அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 9 மில்லியன் டொலர்களையும், அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு அரை மில்லியன் டொலர்களையும் அவர்கள் விரும்பியபடி செலவிடும் வகையில் சீனா நிதியுதவி வழங்கியுள்ளதாக சண்டே லீடரின் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் கட்டுரை ஒன்றை எழுதிய இரு நாட்களிலேயே சிறிலங்கா ஜனாதிபதி சண்டே லீடர் நிறுவனத்தின் இயக்குனருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.

சீனா வழங்கிய இந்நிதியுதவி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள சண்டே லீடர் பத்திரிகையின் சார்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை எனவும் அப்பத்திரிகையின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சண்டே லீடர் பத்திரியை நீண்டகாலமாகவே சிறிலங்கா அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றது. இப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இப்படுகொலை குறித்த விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இச்சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்குப் பின்னர் லால் விக்ரமதுங்கவே சண்டே லீடர் பத்திரிகைக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3EA33144-A2CE-41BB-BFD6-FFA512F755C2}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.