Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாகவச்சேரியில் மர்ம மனிதன் எனக் கூறி இளைஞனைப் பிடித்து காவற்றுறையில் ஒப்படைத்த இராணுவத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image1006-150x150.jpg

யாழ். சாவகச்சேரியில் மர்ம மனிதன் எனக் கூறி சிறிலங்கா இராணுவத்தினரால் இளைஞன் ஒருவர் பிடிகடகப்பட்டு சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். ஆயினும் இச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பலாலி படைத்தலைமையக ஊடகப்பிரிவினர் இன்று குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்க்கு அழைத்துச் சென்று விளக்கமளித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் இராணுவத்தினர் தெரிவித்ததாவது.

சாவகச்சேரி பருத்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500மீற்றர் தொலைவிலுள்ள 11வது படையணி முகாமிற்க்கு அருகில் பற்றைக் காடு நிறைந்த பகுதி ஒன்றில் இன்று காலை 8 மணியளவில் இளைஞன் ஒருவன் உடையில்லாமல் நின்று கொண்டிருந்ததாகவும் அவரைப் பிடிப்பதற்கு படையினர் முயற்சித்த வேளை அவர் அருகிலிருந்த இராணுவ முகாமை நோக்கி ஓடியுள்ளார். பின்னர் இளைஞன் பற்றைக் காட்டுப் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிறிலங்காப் படையினர் இன்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனைப் பிடித்து இராணுவத்தினர் விசாரித்த போது ,அவ் இளைஞன் சங்கத்தானையைச் சேர்ந்தவர் எனவும் அப் பகுதியால் செல்லும் பெண்களை மடக்குவதற்காகவே அங்கு பதுங்கியிருந்நதாகவும் ,தான் தனது பாதுகாப்பிற்காக இராணுவ முகாம் நோக்கி ஓடியதாகவும் தெரிவித்ததாகப் படையினர் கூறினர்.

இராணுவத்தினர் சாவகச்சேரி காவற்றுறையினரிடம் ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றனர். குறித்த இளைஞனை இராணுவத்தினர் மடக்கிப்பிடித்து ஒப்படைத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளதாகவும் காவற்றுறையினர் தெரிவித்தனர்.

மர்மமனிதன் விடயத்தில் இராணுவதினர் மீது மக்கள் வீண் பழி சுமத்துகின்றனர். மர்ம மனிதர் என்று ஒருவர் இல்லை என மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டனர். தொடர்ந்தும் இராணுவத்தினர் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்த சம்பவம் குறித்து இளைஞனின் உறவினரும் ஊர்க்காரரும் “குறித்த இளைஞன் சல்லி வாங்குவதற்கு அப்பகுதிக்குச் சென்றதாகவும் சாலையில் நின்று கொண்டிருந்த பேகாது அங்கு வந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் அதன் பின்னர் மர்மமனிதன் எனக் கூறி சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச் சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் இராணுவத்தினர் ஊடகவியலாளர்களுக்குக் காட்டினர். பருத்தித்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்தியிலிருந்து சாவகச்சேரி வரும் வழியில் 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படையினரின் 11வது படையணி முகாம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி பற்றைக் காட்டுப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாகப் படையினர் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் உடைகள் எதுவும் அணியாது பதுங்கியிருந்ததாக படையினர் காட்டிய இடம் பருத்தித்துறை சாலையின் கரையில் இருந்தது. பற்றைகள் மூடிய ஆனால் சாலையில் செல்பவர்கள் பார்க்கக் கூடிய வகையிலேயே இருந்தது. அவர் ஓடியதாக கூறப்படும் பகுதி இராணுவ முகாமைச் சுற்றிய பகுதி.

இராணுவத்தினர் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.ஆனால் நடந்த சம்பவம் குறித்து இளைஞனின் உறவினரும் ஊர்க்காரரும் “குறித்த இளைஞன் சல்லி வாங்குவதற்கு அப்பகுதிக்குச் சென்றதாகவும் சாலையில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியதாகவும் அதன் பின்னர் மர்ம மனிதன் எனக் கூறி சாகவச்சேரி காவற்றுறையினரிடம் ஒப்படைத்ததாகவும் இராணுவத்தினர் நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர். இதே போன்று சம்பவம் இடம்பெற்ற கனகம்புளியடியைச் சேர்ந்த மக்களும் இராணுவத்தினரின் அடாவடி எனவும் இது ஒரு கட்டுக்கதை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் குறித்த இளைஞனை மருத்துவப் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சாவகச்சேரி காவற்றுறையினர் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilthai.com/?p=26917

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.