Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணமல் போன உறவுகளுக்கு பதில் சொல்லப்போவது யார்?

Featured Replies

“தலையிடியும் தடிமனும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்'என்பர். அந்த வகையிலேயே தான் உறவுகளின் தகவல்கள் அறியாது தவித்துத் திரியும் மக்களின் கதையும். யுத்தத்தின் நிறைவின் பின்னர் காணாமல் போனோர் தொகை இலங்கையில் அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களும் சற்று வெளியே வரும் பட்டசத்திலேயே அவர்களுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பது ஜதார்த்தம்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து இற்றைக்கு ஏராளமான மூவினமக்களும் காணாமல் போயிருப்பது பதிவுகளின் சாட்சி. எனினும் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன தமிழரது ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலத்தில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளின் நினைவுகள் இன்று பறைசாற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்தவகையில் காணாமல் போனோர் என்பது பல்வேறுவகையில் பிரித்து வரையறை செய்யும் அளவிற்கு இலங்கையின் பதிவுகள் இருக்கத்தான் செய்கின்றன.

இதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூறிவிட முடியாது. ஏனெனில் மனித உரிமை அமைப்புகளின் பதிவுகளில் விடுதலைப்புலிகளினாலும் கடத்தப்பட்டவர்கள் என்ற பதிவுகள் காணப்படுகின்றன. வீடுகளில் வைத்து வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், வீதியில் செல்லும் போது கடத்தப்பட்டவர்கள், விசாரணைக்கென கொண்டு செல்லப்பட்டு காணாமல் போய்விட்டதாக தெரியப்படுத்தப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள், ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்திடம் சரணடைந்தும் தற்போது காணாமல் போயுள்ளதாகத் தெரியப்படுத்தப் பட்டவர்கள், மெனிக்பாம் முகாமில் வைத்து புலிகளில் இருந்தவர்களை சரணடையுங்கள் என கூறியதற்கிணங்க தாய் தந்தையரால் ஒப்படைக்கப்பட்டும் தற்போது காணாமல் போயுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டவர்கள் என பல ரகங்களில் காணாமல் போனோர் அடங்குகின்றனர்.

எனவே காணாமல் போனோர் காணாமல் போனோராகவே இருக்கப்போகின்றார்களா? என்ற கேள்வி கனதியாகவே இருக்கும் நிலையில் உறவுகளை பிரிந்தவர்கள் இன்றும் மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களுக்கும் புலனாய்வுப்பிரிவின் அலுவலகங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் ஏறி இறங்கிக்கொண்டே இருக்கின்றனர். எனினும் இவர்களுக்கான பதிலை சொல்லவல்ல அதிகாரத்தில் எவரும் இல்லை என்பது அவரவருக்கு மட்டுமே தெரிந்த விடயமாகவுள்ளது.

குறிப்பாக வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இளம் பெண்னொருவர் தெரிவிக்கையில் தனது 25 வயதுடைய சகோதரி 2007 ஆம் ஆண்டு 2ஆம் மாதமளவில் விடுதலைப்புலிகளால் கொண்டு செல்லப்பட்டு அவர்களது அமைப்பில் இணைக்கப்பட்டிருந்தார். அவரை முள்ளிவாய்க்காலில் இறுதியாக நாம் கண்டோம். அதன் பின்னர் அவரை எங்கும் காணவில்லை. ஆனால் அவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் தற்போதும் அவரைத் தேடி அலைகின்றோம் என கண்ணீர் சிந்த தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி கந்தபுரத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் கருத்து தெரிவிக்கையில் எனது மகள் இறந்த நிலையில் அவளது பிள்ளைகளை சிறுவயதில் இருந்து நான் தான் பராமரித்து வந்தேன். அந்தநிலையில் 2009.2.12 அன்று யுத்தத்தால் இடம்பெயர்ந்து சுதந்திரபுரத்தில் இருந்த போது இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டுப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். எனது பேரன் அதே ஆண்டு 5 ஆம் மாதமளவில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி என்னைப் பார்ப்பதற்காக நலன்புரி நிலையத்திற்கு வந்திருந்தார். எனினும் அப்போதைய சூழ்நிலையால் அவரை அங்குவர வேண்டாம் என்றும் வவுனியா வைத்தியசாலைக்கு வருகின்றேன் அங்கு வருமாறு கூறியிருந்தேன். அங்கும் எனது பேரன் வந்திருந்தார். நான் மருந்து எடுத்து விட்டுவந்து பேரனை பார்த்தபோது அவர் எங்கும் இல்லை. அவ் விடத்தில் நின்றவர்களிடம் வினவியபோது இருவர் அவரை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தனர். அன்றிலிருந்து இன்று வரை நான் எனது பேரனை தேடியலைகின்றேன். செஞ்சிலுவைச் சங்கத்திலும் மனித உரிமை அமைப்புகளிலும் முறைப்பாடு செய்திருக்கிறேன். எனினும் எந்தவிதமான பதிலும் இன்றியே இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இவ்வாறான சூழலுக்குள் அகப்பட்டவர்களாகவே இருக்கும் இவர்கள் தொடர்பில் கவனம் எடுத்து தகுந்த பதில் அளிக்கப்படுமா என்ற ஆதங்கம் நிறையவே இருக்கின்றது. இவற்றிற்கும் அப்பால் தமது பிள்ளைகள் இறந்துவிட்டார்கள் என்றால் அதனையாவது கூறுங்கள் நாம் அவர்களுக்கு கிரியைகள் செய்வதற்கு என்று அலைந்து திரிந்து வெறுத்துப்போன நிலையிலும் பெற்றோர் காணப்படுகின்றனர்.

சாத்திரங்களும் குறிசொல்லுவதும் காணாமல் போனோரை வைத்து பிழைப்பாகிவிட்ட நிலையில் யார் தனது காணாமல் போன மகன் இருக்கின்றான் என்றோ மகள் இருக்கின்றாள் என்றோ சொல்வார்களோ அவர்களுக்கு வாரி இறைப்பதற்கும் தயக்கம் காட்டாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்துடன் தமது கணவனை காணாமலும் பிள்ளைகளை காணாமலும் புத்தி பேதலித்த நிலையில் எத்தனையோ எத்தனையோ பெண்களும் ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்து செல்கின்றனர் என்பது வைத்தியசாலைகளின் வாயில்களே சாட்சியாகும்.

வடக்கு கிழக்கில் வேகமாக ஆரம்பிக்கப்படும் உளவளத்துணை நிலையங்களும், மனநல காப்பகங்களும், மனநல வைத்திய பிரிவுகளும் ஏன் தோற்றம் பெறுகின்றன என்றால் போரின் தாக்கம் ஏற்படுத்திய மனவடுக்களுக்காகவே.

இந்த நிலையில் தமக்குள்ளான வாழ்வியல் போர் நடத்தும் நிலைக்கும் பலர் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையிலேயே விசுவமடு கிழக்கைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் தெரிவிக்கையில் வன்னியில் நடந்த யுத்தத்தால் இடம்பெயர்ந்து 2009.5. 18 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றபோது பதிவுசெய்யுமாறு இராணுவம் பணித்தது. அந்தவேளை எனது கணவரை தடுத்து வைத்த இராணுவம் என்னை ஓமந்தைக்கு செல்லுமாறும் கணவரை ஓமந்தையில் வைத்து என்னுடன் இணைப்பதாகவும் கூறியது.

எனினும் என்னை ஓரு நாளில் வலயம் 4 நலன்புரி நிலையத்திற்கு மாற்றியிருந்தமையினாலும் இரண்டு மாதம் வெளித்தொடர்பு இல்லாத காரணத்தாலும் என்னுடைய கணவருடைய தொடர்பு இல்லாது போய்விட்டது. எனினும் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு, புனர்வாழ்வு அமைச்சு என பல இடங்களிலும் அறிவித்திருந்தும் இது வரை எந்தவித பதிலும் கிடைத்தபாடில்லை. இன்று எனது வாழ்வுக்கான போராட்டத்தை இந்த சமூகத்தில் நடத்திக்கொண்டிருக்கின்றேன் என தனது எதிர்கால நிலைமைகளை கண்ணில் சுமந்தவளாக தெரிவித்தார்.

இவ்வாறு எத்தனை எத்தனைபேர் கணவரைத்தொலைத்த மனைவியரும் மனைவியை தொலைத்த கணவன்மாரும் பிள்ளைகளை தொலைத்த பெற்றோருமாக அங்கலாய்ந்து திரிகின்றனர். இவர்களுக்கு நீதி தேவை நியாயம் தேவை என எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள் எல்லாமே சுயநல அரசியலுக்கப்பால் சிந்திக்கப்பட்டதா என்பது கேள்வியாகவே உள்ளது.

ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் பலன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தோடு வீதியில் இறங்கும் இவர்களுக்கு கிடைத்திருப்பது காணாமல் போயிருந்தால் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற கட்டளையாகும்.

அதாவது 2/2011 என்ற சுற்று நிருபத்தின் மூலமாக 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புக்கள் பதிவு தற்காலிக ஏற்பாட்டின் மூலம் 2010 ஆம் ஆண்டின் 12 ஆம் மாதம் 10 ஆம் திகதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் செல்லுபடியாகும் வகையில் இலங்கையில் தேசிய மட்டத்தில் நடந்த பாரதூரமான விளைவுகளையுடைய பயங்கரவாத அல்லது நாசகார செயற்பாட்டின் அல்லது குடியமைதிக் குலைவின் விளைவொன்றினால் இறந்த அல்லது காணாமல்போன நபர்கள் மற்றும் தேசியமட்டத்தில் பாரதூரமான இயற்கை அனர்த்தம் அல்லது பேரிடர் காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புக்களைப் பதிவு செய்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற சுற்றுநிருபம் அதனை வைத்து காணாமல் போனோருக்கான மரணச்சான்றிதழை பெறுங்கள் என்ற கட்டாயப்படுத்தல்களும்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் “வட்டுக்கோட்டைக்கு பாதை எது எனக் கேட்க துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு' என்ற கதையாகியுள்ளது. எனவே இவ்வாறான பொறுப்பற்றதனமான நகர்வுகள் மன ரீதியான தாக்கத்தை காணாமல் போனோரின் உறவுகளுக்கு வலுவாகவே ஏற்படுத்தும்.

இந்த நிலையில் பல ஆண்டுகளாக காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் எவ்வாறான தகவல்கள் வெளிவரப் போகின்றது என்பது நீண்ட காலநோக்காக இருந்தாலும் எந்நாளும் ஏக்கத்துடன் வாழும் அல்லது எங்காவது எனது கணவன் வாழ்வார் மனைவி வாழ்வாள் பிள்ளை வாழும் என ஏங்கி ஏங்கி நாட்களைக் கடத்தும் உறவுகளுக்கு தகுந்த பதிலைத் தர வேண்டியதும் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் கடமை என்பதனை மறுக்க முடியாது.

எனவே வலுவான சாத்வீக போராட்டங்கள் நியாயத்தை வெளிப்படுத்துமாயின் அப் போராட்டங்கள் விரிவுபடுத்தப்படுவது இன்றைய தேவை. இதுவே உறவுகளை தேடும் உறவுகளுக்கு ஊட்டச்சத்தாகும். இதனை விடுத்து அறிக்கைப் போர் நடத்துவதால் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை கடந்த கால வரலாற்றுப் பாதைகள் பறைசாற்றி நிற்கின்றன.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்கா காரன் கட்டாயம் பதில் தருவான் ஆனால் அது பதில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.