Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உலகவெளியில் தமிழர்களின் சமூக – அரசியல் இருப்பு’

Featured Replies

ஒரு வளமான நிலத்தில் – வீரியமான விதையில் இருந்துதான் ஒரு செழிப்பான மரம் தளைக்க முடியும்.

http://nerudal.com/nerudal.37940.html

அதுபோல்ஒரு வளமான – வீரியமான அரசியலில் இருந்துதான் ஒரு இனத்தின் வாழ்வியல் செழிக்க முடியும் எனும் அசைக்க முடியாத கருத்தியல் தளத்தில் நின்றவாறு இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது.

இன்று உலகப் பரப்பெங்கும் பரந்துபட்டு வாழும் இனமாக தமிழினம் இருக்கின்றது.

தமிழகம் – தமிழீழம் – மலேசியா – சிங்கப்பூர் – தென்னாபிரிக்கா – ஐரோப்பா – அமெரிக்கா என கண்டங்களெங்கும 34 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்வு அமைகின்றது.

அடிமைத் தமிழர்களாய் – அகதித்தமிழர்களாய் இறைமையற்ற வெற்று இனமாக முதலாம் உலக நாடுகள் முதல் மூன்றாம் உலக நாடுகள் வரை எமது இருப்பை தக்கவைத்து கொண்டு இருக்கின்றோம்.

தமிழகத் தமிழர்களாக – ஈழத்தமிழர்களாக உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களாகிய நாங்கள்இந்த பரந்த வெளியில் தமிழர் நலனை முன்னிறுத்திய ‘உலகத் தமிழர்’ எனும் அரசியல் தளத்திளை கட்டமைக்க வேண்டிய கடப்பாடு நம்முன் பெரும்வரலாற்றுப் பணியாக உள்ளது.

அவ்வாறு கட்டமைக்கபடும் இந்த உலகத் தமிழர் என்ற தளம் வெறும் கருத்துருவாக்கமாக மட்டும் நின்றுவிடமால் உலகத் தமிழர்களது தொகையும் – அவர்களது பலமும் தருகின்ற வலிமையின் அடிப்படையில்அரசியல் அரங்கு நிறுவவேண்டும்.

ஆங்கிலத்தில் ‘டயஸ்பொறா’ எனும இந்த வலுமிக்க சக்தி இந்த அரசியல் அரங்கிற்கு இயல்பாகவே பெரும் பலத்தை தரவல்லது.

அரபுலகின் கருத்தியலையும்- ஒட்டுமொத்த அரபு மக்களின் நலன்களையும் முன்னிறுத்தி அல்-ஜெசீரா தொலைக்காட்சி உலகலாவிய ரீதியில் இயங்குவது இதற்கான சிறந்த சமகால உதாரணமாக கொள்ளலாம்.

சமகாலத்தில் ‘தமிழ் டியஸ்பொறா’ எனும் கருத்தியல் பல்வேறுபட்ட மட்டங்களில் கூறப்பட்டுவந்தாலும்

இக்கருத்தியலை உறுதியான ஒரு தளமாக மாற்ற வேண்டியுள்ளது.

நிலையற்று காற்றில் மிதக்கும் பலூன்கள் போன்ற நிலையில் இருக்கும் இக்கருத்தியலை நிலைப்படுத்தப்பட்ட ஒரு செயல்வடிவத்தின் ஊடாக நிலைநிறுத்த வேண்டியுள்ளது.

வெறும் கருத்துருவாக்கம் மட்டும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழர்களின் நலனில் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்யமுடியாது.

இங்கேதான் சட்டபூர்மமான ஒர்; அங்கீகாரத்தை உலகத் தமிழர் தளத்துக்கு அவசியமாகின்றது. அதாவது… தமிழர்களளின் நலனை முன்னிறுத்தியதான ‘உலகத் தமிழர்’ எனும் கருத்துவாக்க தளத்தில் நின்றவாறு உலகப் பரப்பெங்கும் வாழும் தமிழர்களின் ஒட்டுமொத்த நலனில் காத்திரமான பங்கை வகிக்க ஒரு நிறுவப்பட்ட அல்லது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உலக அங்கீகாரம் இன்றைய தேவையாக அமைகின்றது.

இதனைப் பெறுவதற்கு நிலையான ஒரு தமிழர் அரசின் ஊடகவே சாத்தியமாகும். உலகெங்கும் பரந்து வாழும் யூதர்களின் நலனின் மீது ஒரு காத்திரமான அக்கறையை யூத கருத்தியல் தளம் ஆளுமைய செலுத்துகின்றெதன்றால்அது இஸ்றேல் வலிமையான ஒரு நாடு இருப்பதனாலேயே சாத்தியப்படுகின்றது.

இஸ்றேல் என்ற நாடு பெற்றுக் கொண்ட சட்டபூர்வ அங்கீகாரம் ஒட்டுமொத்த யூத அடையாளத்துக்கும் – யூத கருத்தியலுக்கும் இன்றும் கிடைக்கின்ற நிலையான அங்கீகாரமாக அமைகின்றது.

இந்த முன்னுதாரணம்நான் முன்னிறுத்தும் ‘உலகவெளியில் தமிழர் இருப்பு’ எனும் கருத்துக்கு இன்னும் ஒரு தெளிவை முன்வைக்கும் என நம்புகின்றேன்.

சுதந்திர தமிழீழ அரசே உலகத் தமிழர் நலனில் அக்கறை கொள்ளவும் ஆளுமை செலுத்தவும் ஒரு வாய்க்கால அமையும்.

தமிழகம் – சிங்கப்பூர் – மலேசியாவிலும் இன்றைய இலங்கைத்தீவில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு அந்தந்த அரசுகளினால் வழங்குப்பட்டுள்ளமை வெறும் சலுகைகளே அன்றி அவர்தம் அடையாளத்தையும்வாழ்வியலையும் துணிவோடு முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியல் உரிமைகள் அல்ல.

இன்னும் சொல்லப் போனால் இவைகள் தமிழர் நலனை முன்னிறுத்திய அரசுகள் அல்ல!

இந்நிலையில்தான் தமிழர்களின் அரசியல் வெளியை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொள்ள தமிழீழ அரசு ஒன்று அவசியமானதாகின்றது.

தமிழர் தாயகத்தில் நீண்ட போராட்டத்தின் பின் உருவாக்கப்பட்ட நடைமுறை தமிழீழ அரசு அழிக்கப்பட்டுள்ள நிலையில் ‘தமிழீழ அரசு’ எனும் கருத்துருவாக்கத்தை உலக அரங்கில் உயிர்ப்புடன் பிரதிபலித்திருக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் பெற்றுள்ளமை

உலகத் தமிழர்களது அரசியல் வெளியிலும்அவர்தம் வாழ்வியலிலும் முக்கியமான திருப்பம்.

தமிழர் நலனை முன்னிறுத்தியதான உலகத் தமிழர் எனும் கருத்துவாக்கத்துக்கு ஒர் நிலையான அங்கீகாரம் தமிழர் அரசின் ஊடாகவே சாத்தியமாகின்ற நிலையில் தமிழர் அரசெனும் சுதந்திர தமிழீழத்துக்கான உலகின் அங்கீகாரத்தை தேடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர்களின் சமூக அரசயில் பாதுகாப்பு அரணாக அமைகின்றது என்பது உறுதியான நம்பிக்கை.

- சுதன்ராஜ்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.