Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ய பாராளுமன்றத் தேர்தல்

Featured Replies

ரஸ்ய பாராளுமன்றத் தேர்தல் புற்றினின் கட்சி பாரிய பின்னடைவு

ரஸ்ய பிரதமர் புற்றினின் போரினிற் ரஸ்யா கட்சி தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று ஞாயிறு நடைபெற்ற தேர்தலில் முதலாவது கருத்துக்கணிப்பு இந்த பின்னடைவை முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளது. முடிவுகள் நாளை திங்கள் வெளியாகும். கடந்த 2007 ம் ஆண்டு தேர்தலில் 63.3 வீத வாக்குகளை பெற்ற இக்கட்சி இப்போது வெறுமனே 48.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தம் 450 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 220 ஆசனங்களையே இவர்கள் பெறக்கூடிய நிலை உள்ளது. இதனால் கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இக்கட்சிக்கு 315 ஆசனங்களுடன் வெற்றிக் கட்சியாக வலம் வந்தது. தேர்தலில் பின்னடைவு கண்டாலும் தற்போதும் பாராளுமன்றில் பெரிய கட்சியாக புற்றினின் கட்சியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இக்கட்சி 11.6 வீதத்தில் இருந்து 19.6 வீதம் முன்னேறியுள்ளது. இன்னொரு கருத்துக்கணிப்பு புற்றினின் கட்சிக்கு 46 வீதமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 21 வீதமும் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஸ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் புற்றின் வெற்றி பெறுவாரா இல்லையா என்பதை ஆழம்பார்க்க இந்தத் தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது.

பிரதமர் பதவிக்கு போய் மறுபடியும் அதிபர் பதவிக்கு வரும் புற்றினின் செயல் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. பதவி நாற்காலி ஆசை யாரைத்தான் விட்டது.

http://www.alaikal.com/news/?p=89932

  • தொடங்கியவர்

தேர்தல் முடிவு சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது

நேற்றைய கணக்குகளின்படி அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு புற்றினின் கட்சி 10 ஆசனங்கள் பின்தங்கியிருந்தது. சற்று முன்னர் தேர்தல் கமிஷனர் புற்றின் கட்சி 238 ஆசனங்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 96 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதேவேளை ரஸ்ய கம்யூனிஸ்ட் கட்சி 92 ஆசனங்களை பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது.

ரஸ்ய தேர்தல் குறித்த கிளரி கிளின்ரன் கவலை வெளியிட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தேர்தல் முடிவு சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. கணினி மூலம் தேர்தல் முடிவு மாற்றியமைக்கப்பட்டதாக சந்தேககிக்கப்படுகிறது.

ரஸ்யாவில் தேர்தல் நடைபெற, குறேசியாவிலும் நேற்று ஞாயிறு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மத்திய – இடதுசாரி கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 153 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 83 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆட்சிக்கு வரும் குக்குரிக்கு கட்சி நாட்டின் ஊழலை ஒழித்து, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இவர்கள் குறேசியாவில் காணப்படும் வெளிப்படையான ஊழல் போக்கை வேரோடு துடைத்தெறியாவிட்டால் 2013 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் பெறுவது சிரமமாக இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாதவரை திருட்டை ஒழிக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

இதுபோல நேற்று ஞாயிறு சுலோவேனியாவிலும் தேர்தல் நடைபெற்றது. சுலோவேனிய தலைநகர் லுயுபிலியானாவின் மேயர் பதவி வகிக்கும் கோடீஸ்வரர் சரோன் ஜங்கோவிச் ஆரம்பித்த புதிய மத்திய கட்சி தேர்தலில் 29.1 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. அதுபோல மத்திய வலதுசாரி கட்சி 26.5 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. ஆளும் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 2006 ம் ஆண்டு நகர மேயரான இவர் சுலோவேனியாவை ஒரு வெற்றிபெற்ற வர்த்தக நாடாக மாற்றுவேன் என்று சூழுரைத்துள்ளார். இவரை நம்பி 29.1 வீதமானவர்கள் வாக்களித்துள்ளார்கள். இப்படியாக நேற்று ஞாயிறு ரஸ்யா உட்பட ரஸ்யாவுடன் தொடர்புடைய பல நாடுகளில் தேர்தல் நடந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலுமே ஊழலை ஒழிப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது என்ற விவகாரமே பேசப்பட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=89961

  • தொடங்கியவர்

அமெரிக்கா தமது நாட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுவதாக ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்யாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை அமெரிக்கா ஊக்குவிக்கிறதென ரஷ்ய பிரதம மந்திரி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் சமிக்ஞை ஒன்றை வெளியிட்டாரெனவும், அவரது கருத்தை அவதானித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தார்களெனவும் அவர் கூறினார்.

தேர்தலின் முடிவை மாற்றுவதற்கென, நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் செலவிடப்பட்டதென புடின் கூறினார்.

ரஷ்யாவில் இடம்பெற்ற தேர்தல் நீதியாகவும், நியாயமாகவும் இடம்பெறவில்லையென, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலறி கிளின்ரன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு ரஷ்ய அரசுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இதுவரை 900 ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கைது செய்யப்பட்டுள்ளாரக்ள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=10333

  • தொடங்கியவர்

ரஸ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் புற்றினுக்கு எதிரான அலை ரஸ்யாவில் மோசமாக வீச ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புற்றினின் ஆளும் கட்சியினர் சைபர் கிரைம் மோசடி செய்து தேர்தலை தங்களுக்கு வெற்றியாக திருப்பினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இப்போது நாடளாவிய ஆர்பாட்டங்கள் சூல் கொண்ட மேகமாக திசை திரும்பியுள்ளது.

தலைநகருக்குள் அமைந்திருக்கும் தீவுப்பகுதியில் சுமார் 30.000 பேர் ஆர்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதேபோல இதர பகுதிகளிலும் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன. ஊழல் தேர்தலை நடாத்தியதற்காக மக்கள் கடும் கோபமடைந்துள்ளார்கள். தற்போது ரஸ்ய தலைநகர் மொஸ்கோவில் சுமார் 50.000 இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தானே தனி நபராக ஆட்சியில் அமரலாம் என்ற புற்றினின் அபத்தமான ஆசைக்கு மாபெரும் பேரிடியாக இந்த ஆர்பாட்டம் இறங்கியுள்ளது. சமீப காலமாக கணினி மூலம் வாக்களிப்பை மாற்றிய கூத்துக்கள் நடந்துள்ளன. யார் கையில் ஆட்சி உள்ளதோ அவர்கள் கணினி மோசடி மூலம் தேர்தலில் தொடர்ந்து வெல்ல முடியும் என்ற அவலம் நிலவுகிறது. நாம் எதிரணிக்கு வாக்களிக்க கணினி அரச அணிக்கு வாக்குகளை மாற்றும்படி இந்த நாசம் நடைபெற்று வருகிறது. இந்த மோசடி தற்போது ரஸ்யாவிலும் அம்பலத்திற்கு வந்துள்ளது.

மேலும் தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ரஸ்யாவில் பழைய கம்யூனிச சர்வாதிகாரமே இன்றுவரை தலை விரித்தாடுகிறது.

http://www.alaikal.com/news/?p=90414

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.