Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விசாரணைப் பொறி முறையொன்றின் அவசியத்தினை வலியுறுத்துவதோடு அனைத்துலக விசாரணைக்கான ஆண்டெனவும் 2012ஐ பிரகடனப் படுத்தியுள்ளது. - ஊடக அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது உத்தியோகபூர்வ பாராளுமன்ற அமர்வு அமெரிக்காவின் நியூ யோர்க் - (Buffalo) 'பவலோ' நகரில் டிசம்பர்; 14 முதல் 17ஆம் நாள் வரை நடைபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் போது ஆபிரிக்க - அமெரிக்கர்கள் அடிமைத் தளையிலிருந்து தப்பித்து சுதந்திர காற்றைக் சுவாசித்திட கனடாவுக்குள் உள்நுழையயும்; முயற்சிகளில் அவர்களைக் பத்திரமாக பாதுகாத்து உதவிய நகரங்களில் பவலோ இறுதி எல்லை நகரம் என்ற சிறப்பினை பெறுகின்றது. இந்த வரலாற்று பின்ணணியில் நா.த.அரசாங்கத்தின் அமர்வில் கூடியிருந்தவர்களின் மனதில் சுதந்திர உணர்வை பவலோ நகரம் ஏற்படுத்தியிருந்தது. இணையவழி காணொளி பரிவர்தனையூடாகவும்; பாரீஸ், இலண்டன் ஆகிய நகரங்களில் இருந்து அவை உறுப்பினர்கள் பலரும் கொண்டார்கள்.

இவ் அமர்வின் போது அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குதற்குரிய தேவை பற்றிய ஒரு ஆய்வறிக்கை முன் வைக்கப்பட்டு விவாதிக்கப் பட்டது. அந்த அறிக்கையில் தாயகத்தில் தொடர்ந்து நடந்தேறி வரும் இன அழிப்பு, குடியேற்றம், நீதிக்குப் புறம்பானகொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பன பற்றி விரிவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் பாதுகாப்பினைப் பேணி, அவர்தம் தமிழ் இன அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும் என ஐ.நா. செயலாளர் நாயகத்தைக் கோரும் முன்மொழிவு ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதன் மூலம் அங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் ஒரு பொறிமுறையாக இது அமைவதுடன், அங்கு நாளாந்தம் பாலியல் வன்முறைகள், அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு வன்முறைகளுக்கு மக்கள் உள்ளாவதைத் தவிர்ப்பதற்கும் இது வழி சமைக்கும்.

அத்துடன், 2012ஆம் ஆண்டினை அனைத்துலக விசாரணைக்கான ஆண்டாகப் பிரகடனப்படுத்தக் கோரும் முன்மொழிவு ஒன்றினையும் அவை நிறைவேற்றியது.

தொடர்ந்து, மூன்றாவது முன்மொழிவாக தமிழகத்தில் தூக்குத் தண்டனைக் கைதிகளாகச் சிறையில்வாடும் பேரறிவாளன், முருகன் சாந்தன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யக் கோரும் பிரேரணையும் நிறைவேற்றப் பட்டது.

மேலும், 'நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; இலட்சியத்தை அடையும் திசைகாட்டி', 'தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள்', 'நாடுகடந்த தமிழர் வணிகப் பேரவை உருவாக்கம்' எனும் தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்; பட்டு, அவைபற்றிய விரிவான கலந்துரையாடல்களும் இடம் பெற்றன.

அரசவைக்குப் புதிதாக நியமனம் பெற்ற தென் ஆபிரிக்க, இந்திய நாடுகளைச் சார்ந்த உறுப்பினர்களை அவையினர் அனைவரும் மகிழ்வுடன் வரவேற்ற நிகழ்வும் இடம் பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது. உல களாவிய முறையில் தமிழ் மக்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; தலைமையில் அணி திரள்கின்றார்கள் என்பதனை இவ் உறுப்பினர்களின் தெரிவு காட்டி நிற்கின்றது. இந்தக் கூட்ட அமர்வுகளில் தென்ஆபிரிக்க தேசிய பேரவையின் அங்கத்தவர்களும், முன்னை நாள் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு பற்றியதோடு;, பிரித்தானிய அரசியல் கட்சிகளின் தலைவர்களது செய்திகள் வாசிக்கப்பட்டதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நல்லாதரவு வளர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.

இந்த அமர்வின் போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; அதிகாரபூர்வ செய்தித்தளமாக 'றறற.யெயவாயஅநெறள.உழஅ' அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

அரசவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; மதியுரைக் குழுவும், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள 'இன அழிப்பு விசாரணைக்கும் தடுப்புக்குமான குழுவும்' இன்னொரு புறத்தில் தனித் தனியாக ஆய்வுகளை மேற்கொண்டன. மதியுரைஞர் குழுவானது முகாமைத்துவ மட்டத்தில் ஏற்பட்டு வரும் பல்வேறு விடயங்களைப் பற்றி கவனத்தில் எடுத்துக் கொண்டது. 'இன அழிப்பு விசாரணைக்கும் தடுப்புக்குமான குழு'வானது இன அழிப்பு எனும் கருத்தினை உலக மட்டத்தில் நிலைநாட்டும் நோக்குடன், அனைத்துலக மட்டத்திலும், வெவ்வேறு

நாடுகளிலும் கருத்தரங்குகளை நடாத்துவது பற்றியும், பல்வேறு நாடுகளிலும் மக்கள் தீர்ப்பாயங்களை நிறுவுதல் பற்றியும் புதிய சிந்தனைகளின் வழியிலான கலந்துரையாடலில் ஈடுபட்டது.

2012ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய தந்திரோபாயங்கள் பற்றியும் இன அழிப்பு விசாரணைக்கும் தடுப்புக்குமான விடயம் பற்றியும் சிறப்புக்குழுக் கூட்டங்கள் இரவிலும் மிக நீண்ட நேரம் தொடர்ந்து நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத் தக்கதோர் அம்சமாகும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும், 2012ஆம் ஆண்டில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டது. இந்த அறிக்கைகள் இணையத் தளத்தில் வெளியிடப்படவுள்ளன.

இந்த அமர்வுகளின் இறுதிக் கட்டத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரையும் உணர்வுடன் உருக்கிய ஒரு நிகழ்வினைக் காணக் கூடியதாக இருந்தது. ஆமர்வின் பார்வையாளராக பங்கெடுத்துக் கொண்ட நியூ யோர்க் நகரில் வாழும் தமிழீழத் தாய் ஒருவர் தனது (தாலி)'கொடியினை' நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நன்கொடையாக வழங்கினார். அவர் தனது அந்த செயற்பாட்டினை அவையில் விளக்குகையில், கலாநிதி 'மாட்டின் லூதர் கிங் ஜூனியர்' அவர்களை மேற்கோள் காட்டினார். 'என்றொரு நாள் நாம் உண்மை என ஒன்றைக் கண்டறிகின்றோமோ, அதனை வெளியே கூறத் தவறினால் அன்றிலிருந்து எமது இறப்பு தொடங்கிவிடுகின்றது.' என்ற அவரது கூற்றை மேற்கோள் காட்டி அப் பெண்மணி தனது செயலை விளக்கினார். இத்தகையதோர் சீரிய உணர்வோடு தான் அந்த தாய்க்கும் எமது நண்பர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; நன்றி கூறி நிற்கின்றது. இவ்வகை புனிதமான உணர்வோடு எம்முடன் துணிந்து நின்று மக்;கள் வழங்கும் ஆதரவு தான், சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தமிழீழம் எனும் இலட்சியத்தை நாம் சென்றடைவதற்கு வழி வகுக்கும் எனக் கூறிக்கொள்கின்றோம்.

பிரதமர் அலுவலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

TGTE_3rd_Sitting_Press_Release_28_12_2011_Ta.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.