Jump to content

மாத இறுதிக்குள் திருநெல்வேலி சந்தைக்கு இடமாற்றம்


Recommended Posts

யாழ். திருநெல்வேலி சந்தையின் மாடிக்கட்டடம் இம்மாதம் இறுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி சந்தையின் இரண்டாம் மாடிக் கட்டடம் 85 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மரக்கறிச் சந்தையானது கீழ் மாடியிலேயே இடம்பெறுகிறது. இதனால் மரக்கறிகளில் மண், தூசு போன்ற அழுக்குகள் படிவதாக மக்களும் வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்களது சுகாதாரத்தை பாதிக்கும் இதனைக் கருத்திற் கொண்டே இரண்டாம் மாடிக்கு சந்தை மாற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வியாபார நடவடிக்கை இடம்பெறும் பகுதி வாகனங்கள் நிறுத்துவதற்குரிய இடமாக ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொக்குவில் குளப்பிட்டி சந்தைக்கென இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய கட்டம் ஒன்றும் நிர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கு 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டட நிர்மாண பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு புதிய சந்தை மக்களது பாவனைக்காக திறந்து விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நல்லூர் பிரதேச சபையினால் சந்தையில் சுமைதூக்குபவர்களுக்கு சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிதி ஒதுக்கீட்டினை பிரதேச சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.http://www.vivasaayi.com/2012/01/blog-post_1458.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • உங்கள் இருவரதும் கருத்துக்களைப் பார்த்தேன். இது வரை நான் எழுதிய எதையும் "ஜஸ்ரின் எழுதியிருக்கிறார்" என்று தான் பார்த்திருக்கிறீர்கள், என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்கவில்லை என்று புரிகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், என் கருத்துகளின் பயனின்மை - futility புரிகிறது, மேலும் எழுத வேண்டியதன் அவசியமின்மையும் புரிகிறது. இன்னும் ஒரு மாதத்தில் எனக்கு ஐம்பது தாண்டுகிறது (@பெருமாள் நோட் பண்ணிக் கொள்ளுங்கள்😎). ஐம்பது தாண்டினால், பெரும்பாலும் ஆண்கள், ஒரு "நேரக்கணிப்பு குண்டு" போல எந்த நேரமும் return ticket இல் போகலாம். நான் இப்படியே எழுதிக் கொண்டிருந்தால் இப்ப சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் கிடைக்கும் eulogy போல எனக்கும் சின்ன ஸ்கேலில் கிடைக்கும் என நம்புகிறேன். எனவே, "எனக்கேன் வம்பு" என்கிற மன நிலை கொஞ்சம் என்னிலும் ஏற்பட்டு விட்டது. இன்னொரு பக்கம் "எக்கேடாவது கெட்டுப் போங்கள்" என்ற மனநிலையும் உருவாகி விட்டது. இந்தக் காரணங்களால், தமிழர் அரசியல் திரிகளில்  இனி மௌனமாக இருக்க முடிவு செய்திருக்கிறேன். நமக்கு அடைக்கலமாக இருப்பது முடிவில்லாத விஞ்ஞானமும், அறிவியல் தொழில் நுட்பமும்😂.  
    • நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை. “மச்சான் இதை ஒருக்கால் பிடிடா”  எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை
    • காக்கா காக்கா மை கொண்டா..........!   😍
    • வணக்கம் வாத்தியார்.........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் .......! --- முதல் கனவே முதல் கனவே ---  
    • 1 பிர‌பாக‌ர‌ன் ஜாதியை ஒழித்தார்   2 த‌மிழ‌ர்க‌ளை ஒரு கோட்டுக்குள் ஒற்றுமையாய் வைத்து இருந்தார்   3 கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்ற‌வ‌ர்   4 ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு நாடு வேணும் என்று போராடி த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌வ‌ர்   5 இந்த‌ நூற்றாண்டில் த‌மிழ் இன‌ம் என்ர‌ ஒன்று இருக்கு என்று உலகத்துக்கு உணர்த்தியவர்   6 வாழ்வா சாவா என்ர‌ போராட்ட‌த்தில் 2009க‌ளில் ப‌ல‌ நாடுக‌ளை எதிர்த்து போர் செய்த‌வ‌ர்   7 காசுக்கு ஆசைப் ப‌டாம‌ சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப் ப‌டாம‌ எளிமையாய் வாழ்ந்த‌ த‌லைவ‌ர்   8 க‌ருப்பு யூலை க‌ல‌வ‌ர‌த்தின் போது த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடின‌வ‌ர்   9 த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌ மீட்ப்புக்காக‌ ப‌சித்த‌ போது அவியாத‌ மரவள்ளி கிழங்கு சாப்பிட்டவ‌ர்   10 சொல்லுக்கு முன் செய‌ல் இருக்க‌னும் என்றுசொன்ன‌வ‌ர் . அதை செயலிலும் செய்து காட்டினவர்   11 நான் பெரிது நீ பெரிது என்று வாழாம‌ நாடு பெரிது என்று வாழ‌னும் என்று உர‌க்க‌ சொன்ன‌வ‌ர் /க‌போதி ச‌ம்ப‌ந்த‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு செய்த‌ வேத‌னையை நீங்க‌ள் எழுதுங்கோ நான் வாசிக்க‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன்😉....................... இதில் எது பலன்? 👆
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.