Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ச் 05 இல் அதிரப்போகும் ஜெனிவா முருகதாசன் திடல்!

Featured Replies

விடுதலைப் புலிகளது இலட்சிய உறுதியும், அர்ப்பணிப்பும், தமிழீழ மக்களது தொடர் அவலங்களும், அழிவுகளும் சிங்கள ஆட்சியாளாகள் மீதான சர்வதேச அழுத்தங்களாக இறுக்கம் பெற்று வருகின்றது.

ஜெனிவாவில் பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் இலங்கை குறித்த விடயம் ஆராயப்படும் என்ற தகவலால் சிங்கள ஆட்சியாளர்கள் மருண்டு போயுள்ளார்கள். இதுவரை காலமும் இந்திய - சீன - பாக்கிஸ்தானிய என்று சற்று நீண்டு செல்லும் கொலைக்கள பங்குதாரரது பாதுகாப்புக் கவசத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பி வந்த சிங்கள அரசு, இந்தத் தடவை சற்று விழி பிதுங்கிய நிலையில்தான் உள்ளது.

அமெரிக்கா தலைமையில் மேற்குலக நாடுகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விடுத்து வந்த சர்வதேச தரத்திலான விசாரணைகளுக்கு மறுத்து வந்த மகிந்த அரசு, போலியானதொரு ஆணைக்குழு மூலம் அதற்கான பொறுப்புக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றது.

சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேயினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்துடைப்பு விசாரணை முடிவுக்கு வந்து, அது தனது அறிக்கையினை அவரிடம் கையளித்துள்ள நிலையில், நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களும், மேற்கொள்ளப்படப்போகும் அழுத்தங்களும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குலக நாடுகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்காக சிறிலங்கா அரசு அவசரம், அவசரமாக எடுத்த முயற்சிகள் பெரிதும் வெற்றியளிக்கவில்லை என்றே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த அமர்வில் இந்தியாவினாலும் சிறிலங்காவுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாமல் போகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிலங்கா அரசு சீனாவின் பக்கம் அதிகம் சாய்ந்து வருவதாலும், ஈழத் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரும், அதில் இந்தியாவின் வகிபாகமும் தமிழகத்தில் கொதி நிலையை அதிகப்படுத்தி வருவதாலும் இந்தியா சிறிலங்காவை இந்தத் தரணத்தில் காப்பாற்ற முன்வராது என்றே நம்பப்படுகின்றது. அதை விடவும், அமெரிக்காவின் செய்தியுடன் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரான முன்னாள் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் டெல்லி சென்றுள்ள விடயமும் இந்த மாற்றத்திற்கு வலுச் சேர்க்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதனால்தான், சிங்கள தேசத்தின் துரோணாச்சாரியார் பேராசிரியர் ரொஹான் குணரட்ன மேற்குலக நாடுகளுடனும், இந்தியாவுடனும் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமையக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுப்பதற்கு இந்தியாவுடனான உறவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்துள்ள அவர், தமிழக அரசாங்கத்துடனான உறவுகளை முறித்துக் கொள்வது புத்திசாதூரியமான தீர்மானமாக கருத முடியாது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கக் கூடிய ஆற்றல் தமிழக அரசாங்கத்திடம் காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் ரொஹான் குணரட்ன தமிழீழ தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிரான திட்ட வியூகங்கள் பலவற்றை சிங்கள ஆட்சியாளர்களுக்கு வகுத்து வழங்கியிருந்தார். இறுதிப் போர் காலத்திலும் அவர் சிங்கள அரசுக்குப் பல காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார். தற்போதும், மீண்டும் விடுதலைப் புலிகள் பலம் பெற்று விடக் கூடாது என்ற கோணத்தில் சிங்கள அரசுக்கு ஆலோசனை வழங்கிய அவர், அதற்குக் காரணமான தமிழீழ மக்களது பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எதையும் மகிந்த ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தவில்லை.

ரொஹான் குணரட்ன போன்ற படித்த சிங்கள இனவாதிகளது குருட்டுப் பார்வையே இலங்கைத்தீவில் தொடரும் அமைதியின்மைக்கும், தமிழ் மக்களது ஆயுதப் போராட்டத்திற்கும் காரணமாக இருந்துள்ளது. இந்த நிலை நீடிக்குமானால், விடுதலைப் புலிகள் மீண்டும் பிறப்பெடுப்பார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டாலும், அதற்குக் காரணமான ஈழத் தமிழர்களது வாழ்வுரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

யுத்தத்தின் பின்னராவது சிங்கள இனவாதம் தன்னைத் திருத்திக்கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலை, தற்போது அனைத்துலக நாடுகளின் அழுத்தங்களாக மாற்றமடைந்துள்ளது. இந்த வெளி நிர்ப்பந்தம் காரணமாகவே சிறிலங்கா அரசு தமிழர் தரப்புடன் சமரசம் செய்து கொள்ளவது போன்ற பாசாங்கு காட்டி வருகின்றது. அதன் காரணமாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதாகப் பாவனை காட்டிக்கொண்டே, பாராளுமன்றத் தெரிவுக்குழு என்ற சிங்களக் குகைக்குள் நீதி கிடைக்கும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. சிங்கத்தின் ஆட்சிக்குள் மான்களுக்கு நீதி கிடைக்காது, சிங்களத்தின் ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடையாது என்பதைத் தமிழர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருப்பதால், அந்தப் புதை குழிக்குள் இறங்குவதற்கு கூட்டமைப்பு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

சிங்கள ஆட்சியாளர்களது இனவாத சிந்தனையும், அதன் கொடூரமும் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய கட்டாயத்தை அனைத்துலக தளத்தில் உருவாக்கியுள்ளது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்த ஈழத் தமிழர்கள் தவறிவிட்டால், உலகம் மீண்டுமொருக்கால் எமக்காகப் பேசப் போவதில்லை. எனவே, எதிர்வரும் மார்ச் 05 ஆம் நாள் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது ஆர்ப்பாட்டம் சிங்கள ஆட்சியாளர்கள்மீதான அழுத்தங்களாக மாற்றமடையும். அந்த நாளை இலக்கு வைத்து புலம்பெயர் தமிழர்கள் பெரும் தொகையாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரன்று இணக்கப்பாடற்ற இன்னொரு ஆர்ப்பாட்டத்திற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தாலும், எதிர்வரும் மார்ச் 05 ஐரோப்பிய நாடுகளெங்குமிருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவுள்ளதால், அனைவரது கவனமும் அதை நோக்கியதாகவே உள்ளது. பாரிஸ் நகரிலிருந்தும் 1000 இற்கும் அதிகமான மக்கள் பயணிக்கக்கூடிய விசேட அதிவேக ரி.ஜி.வி. தொடரூந்து ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழீழத்தின் விடுதலைக்காகவும், தமிழீழ மக்களது மீட்பிற்காகவுமான மிக முக்கியமான போர்க் களமாக மார்ச் 05 உள்ளதால், தேசியத் தலைவரது பாதையில் பயணிக்கும் அனைவரும், அவரது கட்டளைப்படியே ஜெனிவா போர்க் களத்தில் பங்கேற்க வேண்டும். அதனை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் பகிரங்கமாக அறிவித்து, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பூதாகரமாக எழுந்துள்ள அவர்கள் மீதான சந்தேகங்களைத் தகர்த்து, தமிழீழ விடுதலைப் போர்க் களத்தில் தம்மையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

- கரிகாலன்

www.aaivuu.wordpress.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.