Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதித் திட்டத்தை ஏற்றது சிரியா, ஆனால் இலங்கை மட்டும் ஏற்காது

Featured Replies

அமைதித் திட்டத்தை ஏற்றது சிரியா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2012 - 12:34 ஜிஎம்டி


120325110339_syria_refugee_304x171_r_nocredit.jpg

சிரியாவில் உள்ள அகதிகள் முகாம்

சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்யும் கோஃபி அன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளதாக ஐ நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோஃபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை கோஃபி அன்னானின் திட்டத்தில் அடக்கம்.

இந்தத் திட்டத்தின் வெற்றி அது எந்த அளவுக்கு முறையாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்று கோபி அன்னானின் பேச்சாளர் கூறியுள்ளார்.

சிரியாவில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர அரபு லீக் எடுத்த முயற்சிகள் பயன்தரவில்லை.

ஐ நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் கோஃபி அன்னானின் திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு அளித்துள்ளமையால் இந்த திட்டத்தை சிரிய அரசு ஏற்கும் நிலை ஏற்பட்டது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்க முடியாது - பீரிஸ் [ திங்கட்கிழமை, 26 மார்ச் 2012, 08:35 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

G.L.Peiris.jpgஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்கு எதிரான எந்தவொரு பொருளாதாரத் தடையையும் விதிக்க முடியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்தவொரு நாட்டின் மீதும் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையிலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முதல்முறையாக ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் சிறிலங்கா - கொழும்பு வாரஇதழ் [ திங்கட்கிழமை, 26 மார்ச் 2012, 09:19 GMT ] [ கார்வண்ணன் ]

pillay-2012.jpgசிறிலங்கா முதல்முறையாக ஐ.நா அமைப்பு ஒன்றின் நுணுக்கப் பார்வைக்குள்- அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமே இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் ஒன்றின் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

“ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் முடிந்து விட்டது.

ஆனால் கொழும்பில் பெரும்பாலும் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு சிறிலங்காவுக்கு ஒரு ஆண்டுகால அவகாசம் உள்ளது.

மக்களின் பெயரிடுதல் மற்றும் இழிவுபடுத்தல்களையும் தாண்டி ஒரு வலுவான மூலோபாயத்தை வகுக்க வேண்டிய பலமான தேவை உள்ளது.

தேசியப் பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒன்றில், தானாக ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்தாவது செய்ய வேண்டும்.

மக்களை வீதிகளில் இறக்கி பேரணிகள், போராட்டங்களை நடத்துவதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் அடுத்து என்ன செய்ய முடியும் என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

நாடு தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு கூற வேண்டும்“ என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் மேலும் கருத்து தெரிவித்துள்ளது.

முடிவு எப்படி அமையும்?

ஒரு சில வருடங்களுக்குள் ஐக்கிய நாட்டின் அமைதிப்படை ஒன்று அல்லது மேற்குலகின் கண்காணிப்பு படையொன்று இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது, பிறகும் நாம் பல வழிகளில் கலாச்சார சீரழிவுகளை சந்தித்து சில வருடங்களின் பின் எமது ஈழம் என்ற இலக்கை அடையமுடியும்.ஆனால் எனக்கிருக்கும் கேள்வி?யார் அந்த ஈழத்தை தூக்கி நிமிர்த்துவது என்பது தான் உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கபடுகிறது.ஏனெனில் நான் முதலாவதாக குறிப்பிட்ட விடயம் அவர்களின் (அஜன்டாவில்) வரைவில் உள்ளடக்கபட்டுவிட்டது.ஆதலால் தான் இந்தியாவுக்கு இத்தீர்மானம் வழைந்து கொடுத்தது எனலாம்.தென் கொரியாவில் சீனவுடன் இலங்கை பற்றி நிச்சயமாக அமெரிக்கா சின்ன சங்கதி பற்றியாவது காதில் போட்டிருக்கும்.ஆகவே சீனாவும் தன் நிலையை காப்பாற்ற இலங்கைகு அறிவுரை கூறவேண்டி ஏற்படலாம்.இல்லையேல் சீனா அல்லது ருஸ்யா வீட்டோவை ஏன் பாவிக்கவில்லை.இதை இலங்கை அரசோ பேரினவாதிகளோ உணரமாட்டார்கள்

செய்தி மூலம் பி பி சி மற்றும் புதினப்பலகை

ஒரு சில வருடங்களுக்குள் ஐக்கிய நாட்டின் அமைதிப்படை ஒன்று அல்லது மேற்குலகின் கண்காணிப்பு படையொன்று இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது, பிறகும் நாம் பல வழிகளில் கலாச்சார சீரழிவுகளை சந்தித்து சில வருடங்களின் பின் எமது ஈழம் என்ற இலக்கை அடையமுடியும்.ஆனால் எனக்கிருக்கும் கேள்வி?யார் அந்த ஈழத்தை தூக்கி நிமிர்த்துவது என்பது தான் உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கபடுகிறது.

அண்மைக்காலங்களில் ஒரு முழுமையான மக்களாட்சி தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசுகளை மேற்குல்கள் தனது ஆதரவு சார்ந்த நபர்கள் ஊடாக அமர்த்தியது. அப்கானிஸ்தான், ஈராக், இலிபியா அவ்வாறானவை. எகிப்து, துனீசியா சற்று வித்தியாசமானவை.

ஏற்கனவே ஒருவித மக்களாட்சி முறை தாயகத்திலும் நாடுகடந்த அரசு முறை புலம்பெயர் மக்கள் மத்தியிலும் உள்ளதால் ஐ.நா. மாற்றும் மேற்குலகம் எம்மை காலம் வரும்பொழுது எம்மை அங்கீகரிப்பதில் சிக்கல் இருக்காது.

Edited by akootha

அண்மைக்காலங்களில் ஒரு முழுமையான மக்களாட்சி தேர்தல் நடக்கும்வரை இடைக்கால அரசுகளை மேற்குல்கள் தனது ஆதரவு சார்ந்த நபர்கள் ஊடாக அமர்த்தியது. அப்கானிஸ்தான், ஈராக், இலிபியா அவ்வாறானவை. எகிப்து, துனீசியா சற்று வித்தியாசமானவை.

ஏற்கனவே ஒருவித மக்களாட்சி முறை தாயகத்திலும் நாடுகடந்த அரசு முறை புலம்பெயர் மக்கள் மத்தியிலும் உள்ளதால் ஐ.நா. மாற்றும் மேற்குலகம் எம்மை காலம் வரும்பொழுது எம்மை அங்கீகரிப்பதில் சிக்கல் இருக்காது.

அதற்கான தலைமையை நாடு கடந்த அரசே வழங்கும்.

அமெரிக்காவின் ஆசியுடன் பிலடெல்பியாவின் சுதந்திர சதுக்கத்தில்

நாடு கடந்த அரசாங்கம் பிரகடனம் மேட்கொண்டபோதே அமெரிக்கா

தெளிவான திட்டத்தை வரைந்து விட்டது. மிகவும் நிதானமாக காய்

நகர்த்துகிறார்கள். நாடு கடந்த அரசாங்கம் கூட ஒரு விதத்தில் அமெரிக்க திட்டத்தின் ஒரு அங்கம் தான். பொறுத்தார் பூமி ஆள்வார். நாமெல்லோரும் எல்லோரையும் அரவணைத்து பிடுங்கு படாமல் ஒற்றுமையாக நகர வேண்டிய தருணம் இது. நாய்கள் குறைக்கட்டும். ஆனால் தேர் தனது பாதை தவறாமல் நிதானமாக நகர்ந்து இலக்கை அடைவதை எவராலும் தடுக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.