24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்ப கைகோர்ப்போம் – சுதந்திர தின வழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயார் - ஜனாதிபதி Feb 4, 2026 - 09:00 AM நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாற்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது அதற்காக "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cml7gzaqi04swo29nlnfz4jvf
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
சுதந்திர தினத்தில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் Feb 4, 2026 - 01:20 PM நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களி்ல் இன்று (4) போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய கிளிநொச்சியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த போராட்டம் A9 வீதி ஊடாக டிப்போ சந்தி வரை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மதகுருமார், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றுள்ளவர்கள் கறுப்பு நிறக் கொடியினை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்ட பேரணி டிப்போ சந்தியை அண்மித்த போது, அப்பகுதியில் பிரத்தியேகமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதன்போது அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அதிகளவான பொலிஸார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் போராட்ட ஏற்பாட்டுக் குழுவினரின் தலையீட்டால் பேரணியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cml7q97j404t3o29nppugd9gi
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
புலவர், என்ன ஐயா இது? மாட்டை பற்றி எழுத சொன்னால், மரத்தை பற்றி கூட எழுதாமல், மரம் நிற்கும் வளவில் என்ன களைகள் வளர்கிறது என எழுதுகிறீர்கள்😂. சம்பந்தர் எப்படி பட்ட நன்றிகெட்ட மனிதர் என்பதற்கு நான் ஆதாரம் கேட்கவில்லை. நான் கேட்டது என்ன என்ற நினைவுபடுத்தல் மறுபடியும். நாம் விவாதிப்பது புலிகளை அழித்தமைக்கு சம்பந்தர் மகிந்தவுக்கு நன்றி கூறினார். மேற்குநாடுகள் தன்னிடம் புலிகளை அழித்த பின் தீர்வு தருவோம் என உறுதி கூறினர், என சம்பந்தன் கூறினார். ஆதாரம் இருந்தால் போட்டு விடுங்கள்.
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தினத்தில் மரியாதை வேட்டுக்களை தீர்த்த கடற்படை Feb 4, 2026 - 12:45 PM 78வது பெருமைமிக்க தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் இன்று (04) 25 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. கடற்படைத் தளபதியின் ஆலோசனையின் பேரில், கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 'இலங்கை கடற்படைக் கப்பல் சயுர' போர்க்கப்பலில் இருந்து இந்த மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. நாட்டின் மிக உயரிய மரியாதையாகக் கருதப்படும் 25 வேட்டுக்கள் தீர்க்கும் இந்த கௌரவம், தேசத்திற்காக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cml7p19zd04t2o29nkn0hq7xp
-
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது Published By: Vishnu 04 Feb, 2026 | 05:35 AM அரேபிய கடலில் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலை நோக்கி பறந்து கொண்டிருந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்க இராணுவம் செவ்வாய்க்கிழமை (3) சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரானிய ஷாஹெட்-139 ஆளில்லா விமானம் கப்பலை நெருங்கும் போது அமெரிக்க F-35 போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த தாக்குதல், இப்பகுதியில் அமெரிக்க இராணுவம் குவிக்கப்பட்டு வரும் நிலையில் நடந்துள்ளது. இந்த வார இறுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237764
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம் 03 Feb, 2026 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக பதவி வகிக்கும் எஸ். சிறீதரன் கணக்காய்வாளர் நாயகமாக ஜனாதிபதியினால் பெயரிடப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழரசுக்கட்சியினதும் தமிழ் மக்களினதும் நிலைபாடுகளுக்கு முரண்பாடானதெனத் தெரிவித்து அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு தமிழரசுக் கட்சியின் தலைமை அறிவுறுத்தியது இவ்வாறான பின்னணில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இனி பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராக பதவி வகிக்க கூடாது என அவருக்கு கட்சியால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து எஸ். சிறிதரன் அண்மையில் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைமையினால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/237716
- Today
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
சுதந்திர தின நிகழ்வில் இணைந்தார் ஜனாதிபதி Feb 4, 2026 - 08:03 AM சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்துள்ளார். இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியுள்ளன. 78-வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்றன. 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காகத் தியாகங்களைச் செய்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட சுமார் 400 விருந்தினர்களுடன், முப்படை மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட படையினர் இந்நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். https://adaderanatamil.lk/news/cml7eyg2v04suo29nalv1s474
-
புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது?
கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு முடி மீண்டும் வளருமா? புற்றுநோய் மருத்துவர் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப்பிரியா பிபிசி தமிழுக்காக 4 பிப்ரவரி 2026, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் உலக புற்றுநோய் தினமான இன்று மக்கள் மத்தியில் அதுகுறித்து இருக்கக்கூடிய அடிப்படை சந்தேகங்களைத் தீர்க்க உதவும் வகையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பனிடம் பிபிசி தமிழ் பேசியது. புற்றுநோய் வருவது எப்படி? ஒரு சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாற்றமடைவது எப்படி? தொடர் மலச்சிக்கல் புற்றுநோயின் அறிகுறியா? கீமோதெரபி பற்றி நிலவும் தவறான கருத்துகள் உள்பட அவர் பகிர்ந்த பல்வேறு அறிவியல்பூர்வமான தகவல்களை விரிவாக பார்க்கலாம். புற்றுநோய் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? மனித உடலில் செல்கள் தொடர்ந்து பிரிகின்றன. செல்கள் இரண்டாகவும், இரண்டு செல்கள் நான்காகவும் பெருகி உறுப்புகள் உருவாகின்றன. இயல்பான நிலையில், செல் பகுப்பு ஒரு கட்டுப்பாடான செயல்முறையின் படி நடக்கிறது. ஆனால், சில நேரங்களில் இந்தக் கட்டுப்பாடான முறை செயலிழக்கும் போது, செல்கள் கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகத் தொடங்குகின்றன. இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் செல்கள் கட்டியை உருவாக்குகின்றன. இந்தக் கட்டியையே புற்றுநோய் என்று அழைக்கிறோம். கட்டுப்பாடற்ற செல் பகுப்பால் உருவாகும் கட்டிகளை, சாதாரண கட்டிகள் (Benign Tumors), புற்றுநோய் கட்டிகள் (Malignant Tumors) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். சாதாரண கட்டிகளில் இருந்து புற்றுநோய்க் கட்டிகள் வேறுபட்டவை. புற்றுநோய் கட்டிகள் உயிருக்கு ஆபத்தானவை. பிற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை. புற்றுநோய் செல்களால் ரத்த ஓட்டத்தின் வழியாக நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், எலும்புகள் போன்ற உறுப்புகளுக்குப் பரவ முடியும். இதை மெட்டாஸ்டாசிஸ் (Metastasis) என்று அழைக்கிறோம். நோய் உருவான இடத்திலேயே தங்கியிருப்பது முதல் நிலை. ஆனால், மற்ற உறுப்புகளுக்கும் பரவிவிட்டால் அது முற்றிய நிலை. சாதாரண கட்டி புற்றுநோய்க் கட்டியாக மாறுமா? படக்குறிப்பு,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஐயப்பன் சாதாரண கட்டிகள் பொதுவாக அப்படியே தொடரும். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் ரஷ்யா பதிலுக்கு என்ன செய்யக்கூடும்? சீனா மறைக்கப்பட்ட கார் கதவு கைப்பிடிக்கு தடை விதித்தது ஏன்? செங்கிஸ் கான் இந்தியாவை கைப்பற்றாதது ஏன்? - 'தடையாக இருந்த காண்டாமிருகம்' ராணுவ பயிற்சி அளித்த தமிழர்: இந்தியாவில் 7 கிராமங்கள் இணைந்து தனி நாடாக இயங்கிய வரலாறு End of அதிகம் படிக்கப்பட்டது ஆனால் ஆண்டுக்கணக்கில் இருக்கும் சாதாரண கட்டிகள் திடீரென பெரிதாகத் தொடங்கினால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவது மிகமிக அரிது என்றாலும், சில அரிதான சந்தர்ப்பங்களில், சாதாரண கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக மாறும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இது சார்கோமா (Sarcoma) வகையில் ஏற்படலாம். நூறு பேரில் ஒருவருக்கு இத்தகைய மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, மருத்துவரிடம் அவ்வப்போது கட்டியைப் பரிசோதித்து அதன் நிலையை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அது தாமதமாகக் கண்டறியப்படுவதே பல சவால்களுக்குக் காரணமாக உள்ளது. ஒரு சில உறுப்புகள் தவிர, பெரும்பாலான உறுப்புகளில் ஆண், பெண் இருபாலருக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களிடையே மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கருமுட்டைப் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆண்களைப் பொறுத்தவரை, நுரையீரல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,Getty Images பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்க என்ன காரணம்? சமீப காலமாக பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடல் (Rectum) ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பெருங்குடல், மலக்குடல் ஆகியவை செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதிகளாகும். வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாற்றங்கள், உணவுப் பழக்கங்கள், போதிய காய்கறிகளை உட்கொள்ளாமல் இருப்பது, அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்வது ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. குறிப்பாக, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடலுக்கு அதிக இயக்கத்தைக் கொடுக்காமல் இருப்பது போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். மலம் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுதல், தொடர் மலச்சிக்கல், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அடைப்பு போன்ற காரணங்களால் மலக்குடல் புற்றுநோய் வரலாம். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறுவதற்கான செலவு மிகக் குறைவு. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே இருக்கும். மலக்குடல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்: ரத்தப்போக்கு: மலத்துடன் ரத்தம் வெளியேறுதல் மிக முக்கியமான அறிகுறி. ஆசனவாயில் ரத்தம் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ரத்தசோகை: ரத்தசோகை, மூச்சுத்திணறல், கால் வீக்கம் திடீர் எடை இழப்பு: காரணமின்றி திடீரென எடை குறைதல் ஓர் எச்சரிக்கை அறிகுறி. மலம் கழித்தலில் மாற்றங்கள்: மலத்தை வெளியேற்றுவதில் சிரமம், மலச்சிக்கல் போன்றவையும் முக்கிய அறிகுறிகள் ஆகும். பட மூலாதாரம்,Getty Images வயிற்றுப் புண் புற்றுநோயாக மாறுமா? பெருங்குடல் புண்கள் மற்றும் இரைப்பை புண்களை வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும். பெருங்குடலில் காணப்படும் புண்களில் 99% புற்றுநோயுடன் தொடர்புடையதாகவே உள்ளன. இவை மிகுந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டியவை. இரைப்பையில் காணப்படும் புண்களில் பெரும்பாலானவை சாதாரண புண்களே. அவற்றை மருந்துகளால் குணப்படுத்திவிட முடியும். ஆனால் அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. அப்படி கவனிக்காமல் விட்டால், பல ஆண்டுகள் கழித்து அவை புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியமுள்ளது. சாப்பிடுவதில் சிரமம் இருந்தாலோ, வலி இருந்தாலோ, எண்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கீமோதெரபியால் கொட்டும் முடி மீண்டும் வளருமா? புற்றுநோய்க்கான சிகிச்சைகளில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை என மூன்று முக்கிய வகைகள் இருக்கின்றன. இவற்றில், மருந்துகள் மூலம் புற்றுநோய் செல்களை அழிப்பது கீமோதெரபி முறை. கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கதிரியக்க சிகிச்சை முறை. கீமோதெரபி செய்கையில் கொட்டும் முடி மீண்டும் வளருமா என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு இருக்கும். அதற்குப் பதிலளித்த மருத்துவர் ஐயப்பன், "அதைச் செய்யும்போது முடி கொட்டினாலும், சிகிச்சை முடிந்த சில மாதங்களில் மீண்டும் நிச்சயம் நன்றாக வளர்ந்துவிடும்" என்றார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் என்ற அவர், "தொடக்க நிலையிலேயே கண்டறிதல், முறையான சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை புற்றுநோயை எதிர்கொள்வதற்கான முக்கியக் கருவிகள். தடுப்பூசிகள், தொடர் மருத்துவப் பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக" அவர் தெரிவித்தார். நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் அணுகுமுறைகள் புற்றுநோய் சிகிச்சையில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய மருத்துவர் ஐயப்பன், புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படுவது முழுமையாகக் குணப்படுத்துவதைச் சாத்தியமாக்கும் என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0ke03edx7do
-
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள்
நல்லிணக்கத்துக்கு தமிழ் தலைவர்கள் உதவ வேண்டும்; கரும்புள்ளியை ஏற்படுத்தி விடக் கூடாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த வேண்டுகோள் Published By: Vishnu 04 Feb, 2026 | 04:24 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (3) வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக தெரிவித்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்மு ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய சுதந்திர தினம் என்பது நாட்டிலுள்ள சகல மக்களுக்குமானதுமான தினமாகும். இதில் எவ்வித இன, மத, மொழி பேதமும் இல்லை. எனினும் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றனர். சுதந்திர தினத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்காக ஒன்றிணையுமாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் காணப்படும் போட்டி அல்லது அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டி , தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு மக்கள் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். சுதந்திர தினம் அல்லது ஏனைய தேசிய நிகழ்வுகளின் போது நாட்டு மக்கள் ஒன்றிணையும் போது, இவ்வாறான கருத்துக்களை வெளியிடப்படுவதை தொடர்ச்சியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவை சில அரசியல்வாதிகளிடத்தில் காணப்படும் பிரச்சினையே அன்றி, அது நாட்டு பிரச்சினையல்ல. எனவே அவரால் அவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்குமானால் அது கவலைக்குரியதாகும். இந்நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே தவிர, அதில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படக் கூடாது என்றார். https://www.virakesari.lk/article/237756#google_vignette
-
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை)
78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம் (நேரலை) Feb 4, 2026 - 07:44 AM 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. "இலங்கையை கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறும் இந்நிகழ்வை நேரலையில் பார்வையிட, சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு இன்று காலை 7.45 மணி முதல் டிவி தெரண (TV Derana) மற்றும் அத தெரண (Ada Derana) ஊடாக ஒளிபரப்பப்படும். இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பிரதம நீதியரசர் திரு. பிரீதி பத்மன் சூரசேன சுதந்திர சதுக்கத்திற்கு வருகை தந்தார். இதேவேளை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவும் விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். அத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் வருகைத் தந்தார். https://adaderanatamil.lk/news/cml7e95a704sto29nfweznwp5
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நான் சீனியில் செய்த கடல் நான் சீனியில் செய்த கடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் வெள்ளை தங்கத்தில் செய்த உடல் பெண் : உன் காதலி நானே காதல் தானே ஆனதே பெண் : { நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டு பூ இவள் நான் தினமும் தோற்பவள் அந்த ஆடை சண்டையில் } (2) பெண் : இனி குறையட்டும் திருவிளக்கு நீ இடம் சுட்டி பொருள் விளக்கு அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு பெண் : மையா மையா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மையா மையா என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா பெண் : நான் புன்னகை செய்தால் போதும் அட திசைகள் உடைந்திட கூடும் என் நற்பமே என் கீரீடமே பல அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான் பெண் : என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும் பல பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே பெண் : மென் காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும் பெண் : இனி நாளும் என் குரலில் பல கூ கூக்கள் கூவும் பெண் : கமா கமா இது போதுமா…என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..........! --- நான் முத்தம் தின்பவள் ---
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
'எமது வீட்டுக்குள் வந்து எங்களை தாக்குவது போன்றது' - அடையாளம் தெரியாத குழுவால் தாக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை 3 பிப்ரவரி 2026 ''இந்த சம்பவம் இலங்கை கடற்பரப்பிலேயே நடந்தது. காலி பிரதேசத்திற்கு நேராக மேற்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் நேர்ந்தது. இது எமக்கு புதுமையாகவுள்ளது. இந்த கப்பல் எமது நாட்டு ரேடார் கட்டமைப்பில் நிச்சயமாக பதிவாகியிருக்கும்'' ''எமது நாடு... எமது வீட்டுக்குள் வந்து, எம்மீது தாக்கியதை போன்றதொரு சம்பவம் தான் இது. எமது எல்லைக்குள் வந்து தாக்குதலை நடத்தியமையானது, எமது வீட்டுக்குள் வந்து தாக்கியதை போன்றது அல்லவா'' என இலங்கை மீனவர் சுரங்க நிசல் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் மீது நடுக்கடலில் வைத்து, வெளிநாட்டவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவமானது நடந்துள்ளது. தம்மீது இந்திய பாதுகாப்பு பிரிவினரே தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள் கூறி வருகின்ற நிலையில், இது ராஜீய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 'ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை' இது ராஜீய ரீதியில் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னை என கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். ''29ம் தேதி இரண்டு படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 30ம் தேதி மற்றுமொரு படகில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 29ம் தேதி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், கடற்படைக்கு நாங்கள் அறிவித்து, படகொன்றை விரைவில் அனுப்பி அவர்களை காலிக்கு அழைத்து வந்தோம். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைகளின் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்'' ''இந்திய பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். எனினும், எமக்கு அது தொடர்பில் உறுதியாக தெரியாது. அதனால், வெளிவிவகார அமைச்சுக்கும், கடற்படைக்கும் நாங்கள் அறிவித்தோம். தாக்குதலை நடத்துவதற்கு வருகைத் தந்த படகு இலங்கைக்கு சொந்தமானதா? அல்லது வெளிநாட்டுக்கு சொந்தமானதா என்பது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காகவே நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம்'' என்கிறார் ரத்ன கமகே. படக்குறிப்பு,இலங்கை மீனவர் சுரங்க நிசல் ''அது வெளிநாட்டுக்கு சொந்தமானது என்றால், அது அதிகாரப்பூர்வமானதா அல்லது அதிகாரப்பூர்வமற்றதா என்பது குறித்தும் ஆராயுமாறு கூறியுள்ளோம். அதன்பின்னர் போலீஸ் தரப்பிலும் விசாரணைகளை நடத்துமாறு நாங்கள் அறிவித்துள்ளோம். தாக்குதலுக்கு இலக்கான நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, அது தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம்'' என்கிறார் ரத்ன கமகே. எனினும், இந்த தாக்குதலை இந்திய தரப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கடற்றொழில் பிரதி அமைச்சர் குறிப்பிடுகின்றார். ''எனினும், இது வெளிநாடொன்றுடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், ராஜீய ரீதியில் இதற்கு தீர்வு காண வேண்டும்'' என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு,தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் என்ன சொல்கின்றார்? இலங்கை கடல் எல்லைக்குள் மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகிலிருந்த மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த நால்வர் காலி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது. வெல்லமன்கரய மீன்பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற சிலாபம் - தொடுவாவ பிரதேசத்தின் 'தினிதி துவ' பெயரை கொண்ட இரண்டு படகுகள் மற்றும் 'சந்துன் புதா' ஆகிய மூன்று படகுகளில் சென்ற மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவன் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். 'தினிதி துவ 1' மற்றும் 'தினிதி துவ 2' ஆகிய இரண்டு படகுகளில் சென்றவர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தொழில் செய்து, மீண்டும் வெண்ணப்புவ நோக்கி வருகைத் தந்துகொண்டிருந்த போது, கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன், தியேகோ கார்சியா தீவுக்கு அருகில் வைத்து ஜனவரி மாதம் 30ம் தேதி சந்துன் புதா படகில் சென்ற மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் தருணத்தில் இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் சிங்கள மொழியை பேசிய இரண்டு நபர்கள் இருந்துள்ளதுடன், அவர்கள் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்துள்ள நிலையில், அவர்கள் கறுப்பு நிறத்திலான கடற்படை சீருடையை அணிந்திருந்ததாக தாக்குதலுக்கு இலக்கான இலங்கை மீனவர்கள், இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம் கூறியுள்ளனர். இந்திய பாதுகாப்பு பிரிவினர் என கூறப்படும் தரப்பினர் இலங்கை மீனவர்களின் படகுகளை சோதனை செய்துள்ளதுடன், போதைப்பொருள் இருக்கின்றதா என வினவியுள்ளனர் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். "இரான் படகு, போதைப்பொருள் குறித்து கேட்டார்கள்" இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு இந்தியாவை கோர வேண்டும் என தாக்குதலுக்கு இலக்கான மீனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றனர். தொடுவாவ, மாரவில, குடா மடுவெல்ல, மாதம்பே, சிலாபம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 18 பேரே இந்த மூன்று படகுகளில் பயணித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நெடுநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் சங்கத்திடம், மீனவர்கள் வழங்கிய அறிவிப்புக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிடுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான மீனவரான சுரங்க நிசல், பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து தெரிவித்துள்ளார். ''சிறிய ரக படகொன்றில் ஐவர் வருகைத் தந்தார்கள். படகை சோதனை செய்து, தாக்குதலை நடத்தினார்கள். சேட்டிலைட் தொலைபேசி, இரான் படகு, போதைப்பொருள் தொடர்பில் வினவினார்கள். நாங்கள் தெரியாது என கூறிய போதிலும், அவர்கள் தாக்குதலையே நடத்தினார்கள்.'' என்கிறார் சுரங்க நிசல். அதன்பின்னர், தன்னை கப்பலுக்கு அழைத்து சென்று மீண்டும் தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார். ''இந்த மூன்று பேரையும், படகையும் பணயக்கைதிகளாக எடுக்குமாறு ஒருவர் வந்து கூறினார். நீ என்ன கூறுகின்றாய் என கேட்டார். 'அவர்களை கொலை செய்தாலும், என்னை கொலை செய்தாலும் என்னால் இதை மாத்திரமே கூற முடியும்' என நான் கூறினேன். 'எனக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் ஒன்றையும் கொண்டு வரவும் இல்லை. ஒன்றும் கிடைக்கவும் இல்லை.' என கூறினேன்'' ''அதிலிருந்த சிங்களவர்கள் இருவர் என்னிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தினார்கள். சிங்களவர்களும் எம்மீது தாக்கி விசாரணைகளை நடத்தினார்கள்'' ''எம்மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்தில், 'என்னால் கூறுவதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று கூறினேன். அதன்பின்னர் 'இவர்களிடம் ஒன்றும் இல்லை' என கூறி விடுவித்தார்கள்'' தாக்குதலை நடத்திய கப்பலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியுமா என தாக்குதலுக்கு இலக்கான மீனவரிடம் வினவிய போது, ''கப்பலில் 55 என்ற இலக்கம் இருந்தது. ஆங்கில எழுத்துக்கள் இருந்தன. எனக்கு நினைவில்லை'' என குறிப்பிட்டார். ''அதில் இந்தியர்கள் இருந்தார்கள் என்பதை நூறு வீதம் உறுதியாக என்னால் கூற முடியும். இந்தியாவின் கப்பல் என என்னால் கூற முடியும். அதில் தமிழர்களும் இருந்தார்கள். தலையில் துண்டை கட்டிய பஞ்சாபியர்களும் இருந்தார்கள். ஹிந்தி மொழியிலும் கதைத்தார்கள். தமிழ் மொழியிலும் கதைத்தார்கள். சிங்களவர்கள் இருவரும் இருந்தார்கள். அந்த இரண்டு சிங்களர்களுமே என்னிடம் விசாரணை செய்தார்கள். இரண்டு சிங்களவர்களும் எம்மீது தாக்குதல் நடத்தினார்கள். கொண்டு வந்ததை கூறுமாறு சொல்லி தாக்கினார்கள். இல்லையென்றால் நிச்சயமாக கொலை செய்வோம் என அச்சுறுத்தினார்கள்'' இந்த கப்பலில் 75 முதல் 100 பேர் வரை இருந்தார்கள் என சுரங்க கூறுகின்றார். இலங்கை கடற்படை கூறுவது என்ன? கடற்றொழில் திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய, மருத்துவ நடவடிக்கைகளுக்காக இந்த மீனவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சம்பத் பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு கடற்படையினர் ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறுகின்றார். ''இலங்கையின் தெற்கு பகுதிக்கு சென்றே இவர்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவர்கள் கூறும் இடம், தாக்குதல் நடத்திய தரப்பினர் யார் என்பது குறித்து கடற்படையினர் உறுதிப்படுத்திய பின்னரே கூற முடியும்." ''ஒவ்வொரு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடலோர காவல்படை என கூறுகின்றனர். இன்னுமொரு தருணத்தில் இந்திய கடற்படை என கூறுகின்றார்கள்.'' ''நாங்கள் தொழில்நுட்ப ரீதியில் விசாரணைக்கு ஆதரவை வழங்குவோம். அந்த இடத்தில் யார் இருந்தார்கள் என்பது குறித்து உறுதிப்படுத்திய பின்னரே எங்களால் அதனை கூற முடியும்'' என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் இந்த விடயம் தொடர்பில் பிபிசி சிங்கள சேவை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்புகொண்டு வினவியுள்ளது. இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை பிரிவினால் இலங்கை மீனவர்கள் தாக்கப்படவில்லை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வினவப்படுகின்றதே தவிர, அரசாங்கத்தினால் உரிய முறையில் இதுவரை தம்மிடம் அறிவிக்கப்படவில்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjrzwlpd713o
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவுகள் தொடர்கதை ........! 😘
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை . ...... நன்றாக இருக்கின்றன .........! 😀 நன்றி ஏராளன் ...........!
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
பெற்றோர்களே, பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சியை கட்டாயமாகப் பழங்குங்கள்.
-
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு
ஜனாதிபதி தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று: 4000 படை வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு; 2000 பேருக்கு அழைப்பு Published By: Vishnu 04 Feb, 2026 | 03:45 AM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 78ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் காலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன. கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுமார் 2000 பேருக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இம்முறை வெளிநாடுகளிலிருந்து விசேட அதிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன தெரிவித்தார். கடந்த ஆண்டு 70 மில்லியன் ரூபாவுக்குள் இந்த பிரதான நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவ்வாண்டு இதற்காக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், செலவுகளை 60 - 70 மில்லியன் ரூபாவுக்குள் மட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாக முன்னர் காலை 6 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. சர்வமத வழிபாடுகள் அத்தோடு காலை 5.30 மணி முதல் சர்வமத வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன. பௌத்த மத வழிபாடுகள் கொள்ளுபிட்டி - தர்மகீர்த்திராம விகாரையிலும், இந்து மத வழிபாடுகள் மயூராபதி பத்திரகாளி அம்மன் கோவிலிலும், கத்தோலிக்க ஆராதனைகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்திலும், கிருஸ்தவ ஆராதனைகள் கிரிமண்டல மாவத்தை மக்கள் தேவசபை தேவாலயத்திலும், இஸ்லாமிய வழிபாடுகள் கொழும்பு - ஜூம்மா மஸ்ஜித்திலும் இடம்பெறவுள்ளது. பிரதம அதிதிகள் வருகை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் காலை 7 மணி முதல் வருகைதரவுள்ளனர். தொடர்ந்து பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரது வருகையைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய கொடியை ஏற்றி நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். அத்தோடு தாய் நாட்டின் சுதந்திரத்திலும், இறையான்மையிலும் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டின் நிரந்தர இருப்பிற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இலங்கை பிரஜைகளுக்காகவும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. 4000 வீரர்களின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு தொடர்ந்து ஜனாதிபதிக்கான மரியாதை வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் அவரால் நாட்டு மக்களுக்கு விசேம உரையாற்றப்படும். காலை 8.45 மணி முதல் 9.30 மணி வரை முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை, தேசிய மாணவர் படையணி என்பவற்றால் மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும். இதில் 1962 இராணுவத்தினர், 693 கடற்படையினர், 583 விமானப்படையினர், 352 பொலிஸார், 278 சிறப்பு பொலிஸ் பணிப்பிரிவினர், 183 சிவில் பாதுகாப்பு திணைக்களம், 507 தேசிய மாணவர் படையணி, 22 ஓய்வு பெற்ற பாதுகாப்பு படையினர் மற்றும் 22 அங்கவீனமுற்ற பாதுகாப்பு படையினர் உள்ளடங்களாக 4602 படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 7 ஆயுதமேந்திய வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் கடற்படையினரால் காலி முகத்திடலில் 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளன. போக்குவரத்துக்கு கட்டுப்பாடு சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு அதிகாலை 4.45 மணி முதல் சுதந்திர சதுக்க வளாகத்தை அண்மித்த வீதிகள் முற்றாக மூடப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. நிகழ்வுகள் நிறைவடைந்து பிரதம அதிதிகள் வெளியேறும் வரை குறித்த பாதையூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்படுத் என்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/237749
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சாகும்வரை தனது சுயநலம் ஒன்றையே கொள்கையாக கொண்டு வீட்டுவசதி உட்பட அனைத்து அரச சலுகைகளையும் செத்த பின்பும் திருப்பி தர மறுத்த சுயநல அரசியல்வாதியை புலிகளுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு நிம்மதியாக நித்திரை செய்ய முடியும் என்றால் தம்மையும் தமது குடும்பங்களையும் கொண்ட கொள்கைக்காய் ஈய்ந்து உயிர் கொடுத்தவர்களை சாகும்வரை குரல் கொடுத்தே நான் சாவேன்.
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
சிறுவனுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ........! 👍 ஒரு தொழில் முறை நீச்சல் வீரர் கூட இது போன்ற சமயத்தில் மன உறுதியுடன் செயல்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் . .....!
-
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன்
4 மணி நேர வீர நீச்சல் : தாய், சகோதரன், சகோதரியை உயிருடன் மீட்ட 13 வயது சிறுவன் 04 Feb, 2026 | 12:30 PM மேற்கு அவுஸ்திரேலியாவின் குயிண்டாலப் (Quindalup) கடற்கரை பகுதியில், தனது குடும்பத்தினர் கடல் அலையால் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், சுமார் நான்கு மணிநேரம் தொடர்ந்து நீந்திச் சென்று அவர்களது உயிரைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன் ஆஸ்டின் அப்பல்பீ (Austin Appelbee) தற்போது ‘மாவீரனாக’ பாராட்டப்பட்டு வருகிறான். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறைக்காக குயிண்டாலப் பகுதிக்கு சென்றிருந்த ஆஸ்டின், அவனது தாய் ஜோவான் (Joanne) (47), சகோதரன் போ ( Beau) (12) மற்றும் தங்கை கிரேஸ் (Grace) (8) ஆகியோர் படகு மற்றும் துடுப்புப் பலகைகளில் (Paddle Boards) கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட பலத்த காற்றும் கடல் சீற்றமும் காரணமாக அவர்கள் கரையிலிருந்து வெகுதூரம் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். நிலைமை ஆபத்தானதாக மாறியதை உணர்ந்த தாய் ஜோவான், தனது மூத்த மகன் ஆஸ்டினிடம் உதவி கோரி கரையை அடைந்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் ஒரு காற்றடைத்த சிறிய படகில் (Inflatable Kayak) செல்ல முயன்ற ஆஸ்டின், அதில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து படகை கைவிட்டு கடும் அலைகளுக்கு மத்தியில் நீந்தத் தொடங்கினான். சுமார் 4 மணிநேரம் தொடர்ந்து சீற்றமான கடலில் நீந்திய அவன், தொடக்கத்தில் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசம் (Life Jacket) நீந்துவதற்கு தடையாக இருந்ததால், பாதியிலேயே அதைக் கழற்றிவிட்டு நீந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. “அலைகள் ராட்சத வடிவில் இருந்தன. என்னிடம் உயிர் காக்கும் கவசம் இல்லை. ‘தொடர்ந்து நீந்து… நிறுத்தக்கூடாது’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தேன்,” என ஆஸ்டின் பின்னர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மாலை 6.00 மணியளவில் கரையை அடைந்த ஆஸ்டின், அங்கிருந்த மக்களிடம் உடனடியாக தகவல் வழங்கினார். இதனையடுத்து கடற்படை, காவல்துறை மற்றும் அவசர மீட்புப் பிரிவுகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தன. இரவு 8.30 மணியளவில், கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில், ஒரு துடுப்புப் பலகையைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் ஜோவான் மற்றும் இரு பிள்ளைகளை மீட்பு படையினரின் ஹெலிக்காப்டர் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டது. சுமார் 10 மணிநேரம் குளிரான கடலில் தத்தளித்ததால், அவர்கள் அனைவரும் கடுமையான நடுக்கத்துடன் இருந்தனர். குறிப்பாக 12 வயது சிறுவன் போ, தனது கால்களில் உணர்வை இழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அனைவரும் உயிருக்கு ஆபத்தான காயங்களின்றி மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீட்புப் படைத் தளபதி பால் பிரெஸ்லேண்ட், “ஒரு 13 வயது சிறுவன் காட்டிய துணிச்சல், அதிமானுடச் செயலுக்கு இணையானது,” என ஆஸ்டினின் வீரத்தை பாராட்டினார். இதுபோலவே காவல்துறை அதிகாரி ஜேம்ஸ் பிராட்லி, “அந்தச் சிறுவனின் மன உறுதியும் தைரியமுமே இன்று ஒரு குடும்பத்தின் உயிரைக் காப்பாற்றியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், வயதை விட மன உறுதியும் துணிச்சலுமே உண்மையான வீரத்தை நிரூபிக்கும் என்பதற்கான ஓர் உயிர்ப்பான உதாரணமாக உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/237795
-
41வது திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைப் பெண் சபீனா யூசப்!
சபீனா யூசப் நாடு திரும்பினார் அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து, போட்டியின் மிஸ் ஃபோட்டோ ஜீனியாக முடிசூட்டப்பட்ட சபீனா யூசப், புதன்கிழமை (04) அதிகாலை நாடு திரும்பினார். உலகெங்கிலும் உள்ள 60 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன், இப் போட்டி கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரில் நடைபெற்றது. இப் போட்டியின் தேசிய இயக்குநர் சந்திமால் ஜெயசிங்க, தேசிய பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க உட்பட ஏராளமானோர் சபீனா யூசப்பை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். டி.கே.ஜி. கபில https://www.tamilmirror.lk/செய்திகள்/சபீனா-யூசப்-நாடு-திரும்பினார்/175-371977
-
📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!
📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! adminFebruary 3, 2026 கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚨 இவர்கள் மீது முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இயங்காத நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்றது. அதிக கடன் பெறுவதற்காக நிறுவனத்தின் வருவாயை மிகைப்படுத்திக் காட்டியது. வணிக வளர்ச்சிக்காகப் பெறப்பட்ட பணத்தை தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்கும், சொத்துக்கள் வாங்கவும் பயன்படுத்தியது. ⚖️ இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரித்தானிய அரசாங்கம் மற்றும் புலனாய்வுத் துறையினர் இந்த மோசடிகளைக் கண்டறியத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக: பல வணிகர்களின் இயக்குநர் தகுதி (Directorship) ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட நிதியைத் திரும்பப் பெற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. ⚖️ சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள்: ஒரு விரிவான பார்வை கொவிட் காலத்தில் பெறப்பட்ட கடன்களை (Bounce Back Loans) வணிக வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், சொந்த லாபத்திற்காகவோ அல்லது போலி கணக்குகள் மூலமாகவோ கையாடல் செய்தவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தற்போது “Zero Tolerance” கொள்கையை கடைபிடிக்கிறது. இயக்குநர் தகுதி நீக்கம் (Director Disqualification) இதுவே தற்போது மிக அதிகமாக எடுக்கப்படும் நடவடிக்கையாகும். மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் 2 முதல் 15 ஆண்டுகள் வரை எந்தவொரு நிறுவனத்திற்கும் இயக்குநராக இருக்க முடியாது. 2024-25 நிதியாண்டில் மட்டும் சுமார் 736 இயக்குநர்கள் கொவிட் கடன் மோசடிக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சராசரி தடைக்காலம் 8 ஆண்டுகள் ஆகும். இவர்கள் புதிய தொழில் தொடங்கவோ அல்லது இருக்கும் தொழிலை நிர்வகிக்கவோ முடியாது. தடையை மீறினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும். கைது மற்றும் சிறைத்தண்டனை (Arrests & Imprisonment) கடுமையான மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்குகள் (Criminal Cases) பதியப்படுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (NATIS) மற்றும் திவால் சேவை (Insolvency Service) இணைந்து இதுவரை நூற்றுக்கணக்கான சோதனைகளை நடத்தி பலரைக் கைது செய்துள்ளன. சமீபத்திய தீர்ப்புகளில், போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை (சில சமயங்களில் இடைநிறுத்தப்பட்ட தண்டனை – Suspended Sentence) மற்றும் கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொத்து முடக்கம் மற்றும் நிதி மீட்பு (Asset Seizure) அரசாங்கம் இழந்த பணத்தை மீட்க புதிய சட்ட அதிகாரங்களைப் பெற்றுள்ளது. ‘Public Authorities (Fraud, Error and Recovery) Bill’ மூலம் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும், அவர்களின் வீடுகள் அல்லது சொத்துக்களை சோதனை செய்து கைப்பற்றவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் £1.8 பில்லியன் மதிப்பிலான நிதி பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை விற்று அரசாங்கக் கடனை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நிறுவனங்களை கலைக்கத் தடை (Blocking Dissolution) கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பிப்பதற்காக பல வணிகர்கள் தமது நிறுவனங்களை மூடுவதற்கு (Dissolve) முயற்சி செய்கின்றனர். அரசாங்கம் தற்போது இத்தகைய நூற்றுக்கணக்கான நிறுவனங்களை மூடுவதற்கு தடை விதித்துள்ளது. கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை அல்லது விசாரணை முடியும் வரை நிறுவனத்தைக் கலைக்க முடியாது. முக்கிய குறிப்பு: உங்கள் நிறுவனம் முறையாக இயங்கி, அரசாங்க விதிகளைப் பின்பற்றி கடன் பெற்றிருந்தால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், வருமானத்தை மிகைப்படுத்திக் காட்டியிருந்தாலோ அல்லது பணத்தை தனிப்பட்ட தேவைக்கு மாற்றியிருந்தாலோ உடனடியாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது சிறந்தது. சமீபத்தில் ஜனவரி 2026-ல், இரண்டு கொவிட் கடன்களைப் பெற்ற ஒரு வணிகருக்கு 18 மாத சிறைத்தண்டனையும், £5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் பெற்ற பணத்தில் பெரும் பகுதியைத் திருப்பிச் செலுத்திய போதிலும் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மையாக வரி செலுத்தி வணிகம் செய்யும் சமூகத்தின் பெயருக்கு, இத்தகைய சிலரின் பேராசை பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது கவலைக்குரியது. https://globaltamilnews.net/2026/228331/
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்! adminFebruary 4, 2026 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், காவற்துறை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர். https://globaltamilnews.net/2026/228339/
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
🚨 லிபிய முன்னாள் ஜனாதிபதி மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை! adminFebruary 4, 2026 லிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மிகவும் செல்வாக்கு மிக்க மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (53), துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍 மேற்கு லிபியாவில் உள்ள ஜின்தான் (Zintan) நகரில் உள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முன்னதாக அந்த இல்லத்தின் பாதுகாப்புக் கேமராக்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், நேரடி மோதலுக்குப் பிறகு அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது அரசியல் ஆலோசகர் மற்றும் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 🔍 கடாபி ஆட்சிக் காலத்தில் லிபியாவின் மிக முக்கிய அதிகார மையமாகத் திகழ்ந்தவர். 2011 புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தவர். சமீபகாலமாக லிபிய அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்த இவர், அந்நாட்டு அரசியலில் மீண்டும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வந்தார். லிபிய அரசின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தாக்குதல் குறித்து முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என அவரது தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. லிபியாவின் தற்போதைய பதற்றமான சூழலில், இந்தச் சம்பவம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. https://globaltamilnews.net/2026/228342/
-
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி போராட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்! இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. https://athavannews.com/2026/1463133
-
கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.