Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. தமிழகத்தில் தத்தளிக்கும் த.வெ.க... அப்போ விஜய்யின் கதி? "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று கோட்டையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரதத்திற்கு, இப்போது 'பெட்ரோல்' போடக் கூடப் பணமில்லாமல் என்ஜின் முனகிக் கொண்டிருக்கிறது. “தளபதி வருவார்... மாற்றத்தைக் தருவார்" என்று காத்திருந்த நிர்வாகிகளுக்கோ, இப்போது "கடன் காரன் வருவான்... கழுத்தைப் பிடிப்பான்" என்ற பயமே மேலோங்கி நிற்கிறது. தவெக-வின் தற்போதைய நிலைமையை 'ஆக்‌ஷன்' படம் என்று நினைத்து உள்ளே வந்தவர்களுக்கு, இப்போது அது 'சோகப் படமாக' நீண்டு கொண்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்தியதோடு சரி, அடுத்தகட்ட நகர்வுகளில் தலைமை காட்டும் மந்தகதி அடிமட்டத் தொண்டர்களை அதிர வைத்திருக்கிறது. குறிப்பாக, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள், இப்போது கையை விரித்து நிற்கிறார்கள். "கட்சிப் பணிக்காக ஏற்கெனவே கையில் இருந்ததைச் செலவு செய்துவிட்டு, இப்போது வட்டிக்குக் கடன் வாங்கி திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தலைமையோ எட்டிப் பார்க்கக்கூடத் தயாராக இல்லை" என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் குமுறலாக இருக்கிறது. நிதிய நெருக்கடி என்ற புயல், தவெக-வின் அடிமட்டக் கட்டுமானத்தையே ஆட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் என்பது வெறும் ஆக்ரோஷமான பேச்சால் மட்டும் அமைவது அல்ல; அதற்கு 'பணபலம்' என்ற எரிபொருள் மிக அவசியம். ஆனால், தவெக-வின் கஜானாவோ 'ஈ' ஆடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கட்சியின் உச்சகட்டத் தலைமை (விஜய்) எடுக்கும் முடிவுகள் நிர்வாகிகளை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளன. "கட்சியைக் கொண்டு சேர்க்க நாங்கள் ரத்தம் சிந்துகிறோம், ஆனால் விஜய் அண்ணனோ வசதி படைத்தவர்களை (Rich background) மட்டுமே அருகில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்" என்ற பேச்சு அறிவாலயத்தின் சுவர்களைத் தாண்டி வெளியே ஒலிக்கத் தொடங்கியுள்ளது. உள்ளூர் அளவில் செல்வாக்கு இருந்தும், கையில் காசில்லாத காரணத்தால் பல விசுவாசமான நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. இது ஒருபுறமிருக்க, "தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்ய விஜய் தயாராக இல்லை, மாறாக நிர்வாகிகளையே நிதியைத் திரட்டச் சொல்கிறார்" என்ற தகவலும் தீயாய்ப் பரவுகிறது. பல நிர்வாகிகள் மாநாடு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கட்சியே வேண்டாம் என்ற விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக 'சோர்ஸ்கள்' தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள் குறித்து எந்தவொரு தெளிவான திட்டமிடலோ அல்லது நிதி ஒதுக்கீடோ தலைமையிடமிருந்து வராதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்குத் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில கடனோடு கட்சி பணிகளை நிறுத்திவிட்டு.. போதும்டா சாமி என்று கிளம்பும் சூழல் உள்ளது. 'வெற்றி நிச்சயம்' என்று முழங்கிய தவெக, இப்போது 'நிதி நெருக்கடி' என்ற சுழலில் சிக்கித் தவிக்கிறது. விஜய் தன் 'பர்ஸ்' கயிற்றைத் தளர்த்துவாரா அல்லது தொண்டர்களே தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். https://www.tamilmirror.lk/cinema/தமிழகத்தில்-தத்தளிக்கும்-த-வெ-க-அப்போ-விஜய்யின்-கதி/54-374319
  3. நிச்சயமாக இதில் சீனாவின் மறை கரம் உள்ளது. நீங்கள் சொன்னது போல் இன்னும் கொஞ்சம் புளிக்க விட்டு தைவானை அணைப்பார்களோ? எங்கள் பிராந்திய வாலரசுக்கு இப்ப வைத்த கலக்கி இருக்கும்.
  4. ஹோர்முஸ் நீரிணை: ஜப்பானிய கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி? adminMarch 22, 2026 மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக ஜப்பானிய எண்ணெய் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்க ஈரான் முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நீரிணையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும், ஜப்பானை ஈரான் ஒரு “எதிரி நாடாக” கருதவில்லை என்பதால், அந்நாட்டு கப்பல்களுக்கு மட்டும் சில விதிவிலக்குகளை அளிக்க முன்வந்துள்ளது. புதிய வரி விதிப்புத் திட்டம்: ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் சோமையே ரஃபி (Somayeh Rafiei) உள்ளிட்டோர், இந்த நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ‘பாதுகாப்பு வரி’ மற்றும் ‘சுங்கக் கட்டணம்’ விதிக்கும் மசோதாவைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். https://globaltamilnews.net/2026/230837/
  5. ஈரான் கதை முடிஞ்சாச்சு அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு யுத்தத்தால் கனவு கண்ட யாழ் கள ஆய்வளர்கள், இப்போ மறை களட்டு திரிவதைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன், அதுக்குமேல் ரம்மை திட்டுறது? அடடா… அதுதான் இன்னும் நகைப்புக்குரிய காட்சி! கதை புரியல, நிலைமை புரியல, ஆனா திட்டுறதுக்கு மட்டும் full confidence!
  6. மன்னாரில் காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளான பருவகாலப் பறவைகள். adminMarch 22, 2026 மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த வெளிநாட்டு பறவை இனமான பிளமிங்கோ (Flamingo) பறவைகள் மூன்று(3) வங்காலை பறவைகள் சரணாலய பகுதி ஊடாக அதி வலு கொண்ட காற்றாலை மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளாகிய பறவைகளில் இரண்டு உயிரிழந்த நிலையிலும், ஒன்று பலத்த காயமடைந்த நிலையிலும் மன்னார் மாவட்ட வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பறவைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வெளிநாட்டு பறவைகள் மன்னார் தீவு பகுதிக்கு வருகை தரும் காலமாக உள்ளது.இந்த நிலையில் வருகை தந்த பறவைகளில் மூன்று பறவைகள் மன்னாரில் காற்றாலை மின் சாரத்தை கொண்டு செல்லும் கேபிள்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டுப் பறவைகளான பிளமிங்கோ (Flamingo) போன்றவற்றை நேரில் காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இந்தப் பறவைகளைப் பாதுகாப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குறித்த விபத்து காரணமாக 2 வெளிநாட்டு பறவைகள் உயிரிழந்துள்ளதுடன்,ஒரு பறவை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230806/
  7. படுகொலை செய்யப்பட்ட மூத்த விரிவுரையாளரின் பூதவுடல் யாழ்.பல்கலையில் அஞ்சலிக்காக adminMarch 22, 2026 யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளா் தயாளினி திலீபனின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று , அங்கிருந்து பூதவுடல் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்திற்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் போது , பல்கலைக்கழக துணைவேந்தர் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர் , மாணவர்கள் கல்வி சாரா ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த மூத்த விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் இணைந்து அவரை கடந்த 18ஆம் திகதி படுகொலை செய்து சடலத்தை தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் வீசிய நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/230812/
  8. 60 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் பயற்சி - வடக்கை சேர்ந்தவர்கள் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும் adminMarch 22, 2026 பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது அதனால், பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக பயிற்சியை நிறைவு செய்ய முடிகின்றது. அத்துடன் பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது எனவே வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்க வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் தாதியர்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு ஆவணி மாதத்தில் சுமார் 3000 தாதியர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகளை ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக, இவ்வாரம் அவர்கள் பயிற்சிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதும் உள்ள 16 தாதியர் பயிற்சி கல்லூரிகளில் இப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன. வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி கல்லூரியும் வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றன. யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக்காக 100 பயிற்சியாளர்கள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சியை 2029 ஆம் ஆண்டில் நிறைவு செய்தவுடன், உடனடி நியமனம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது பணிபுரியும் தாதியர்களில் சுமார் 50% பேர் இலங்கையின் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்கள். அவர்கள் தங்கள் முதல் நியமனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றி பின்னர் மாற்றம் பெறுகின்றனர். இதனால், பல வைத்தியசாலைகளில் அனுபவமிக்க (சிரேஷ்ட) தாதியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வடக்கில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தாதியர் பயிற்சியைத் தேர்வு செய்து தொழிலில் நுழைவது மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமான ஒரு வாய்ப்பாகும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ. 60,000 கொடுப்பனவும் சீருடை கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. தேவையானவர்களுக்கு இலவச இருப்பிட வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதனால், பல்கலைக்கழகப் படிப்புகளுடன் ஒப்பிடுகையில், இந்த மூன்று ஆண்டுகளை பொருளாதார சுமை இன்றி மாணவர்கள் எளிதாக நிறைவு செய்ய முடிகின்றது.மேலும், பயிற்சி முடிந்ததும் உடனடி தொழில் வாய்ப்பு கிடைப்பதால், நிலையான சேவை வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது. இதேவேளை, பல பல்கலைக்கழகங்கள் BSc Nursing பட்டப்படிப்பையும் வழங்குகின்றன. அவற்றை முடித்தவர்கள் ஆறு மாத உள்ளகப் பயிற்சிக்குப் பிறகு வைத்தியசாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தாதியர்கள் தங்கள் தொழிலில் ஈடுபட்ட பின்னரும் பல்வேறு கட்டங்களில் மேலதிக பயிற்சிகளைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆதார வைத்தியசாலைகள், பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிபுண மருத்துவர்கள் பணியாற்றுவதால், விஷேட சேவைக்கு ஏற்ப தாதியர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. தாதியர் பயிற்சி கல்லூரிகளில் மூன்று ஆண்டுகள் பயின்ற பின் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. பலர் பின்னர் பணியில் இருக்கும் போது BSc Nursing பட்டப்படிப்பையும் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் MSc மற்றும் PhD போன்ற உயர் பட்டப்படிப்புகளையும் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் தாதியர்கள் பேராசிரியர்களாக உயர்ந்து விளங்குகின்றனர். அதேபோன்று, இலங்கையிலும் இத்தகைய உயர்வுகளை அடையும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, தாதியர் தொழில் என்பது சேவை உணர்வுடன் கூடியதோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் கொண்ட ஒரு சிறந்த துறையாகும். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர் தாதியராக இருந்தால், அந்தக் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும் சுகாதார சேவைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. அவர்களால் பிறரை சரியான சிகிச்சை சேவைகளுக்கு வழிநடத்தவும் முடிகிறது. பயிற்சி காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் உள்ளன. பயிற்சி பெறும் காலத்தில், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று அனுபவம் பெறுவதன் மூலம், பின்னாளில் எளிதாக கடமையாற்றும் திறனை அவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர். தற்போது இலங்கையின் அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 42,000 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் 6000 பேர் பயிற்சியில் உள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தற்போது 725 தாதியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பயிற்சிக்காக 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த சில மாதங்களில் 2500 புதிய தாதியர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2022, 2023, 2024 ஆண்டுகளில் பரீட்சை எழுதியவர்கள் சேர்க்கப்படுவார்கள். தாதியர் பயிற்சிகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால், இப்பயிற்சியில் சேரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மும்மொழித் திறன் பெற்றவர்களாக உருவாகின்றனர்.சில தாதியர்கள் மேல்படிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கும் செல்கின்றனர். இலங்கையில் வழங்கப்படும் தரமான பயிற்சி காரணமாக, வெளிநாடுகளில் தொழில் பெறுவதும் எளிதாக உள்ளது. எனவே, வடக்கு மாகாணத்தில் உயர்தரப் பரீட்சை எழுதி எதிர்கால தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் மாணவர்கள், வரவிருக்கும் தாதியர் உள்ளீர்ப்பில் தயக்கமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/230821/
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லதுதானே! இஸ்ரேல் போரைத் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது.முதல்நாளே தலைவனைப் போட்டுதள்ளியதுடன் யுத்தம் முடிந்துவிடும் என்று நினைத்தால் ஈரான் அதற்குப் பிறகுதான் உக்கிரம் அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் கடும் பிண்ணடைவில் இருக்கும் ஈரான் இப்படி எதிர்வினையாற்றும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரானின் சக்திவாய்ந்த தலைவர்களைப் போட்டுத்தளிளிபின்பும் ஈரான் பேராடுகிறது. ஈரானுக்கு இது வாழ்வா சாவா என்ற நிலை.மேலும் ஷியா முஸ்லிம் மதம் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் மதம்.அதனால் அதன்தலைவர்கள் பதுங்குழியில்பதுங்கியிராது தங்கள் பாதுகாப்பில் அக்கறை காட்டாது இருக்கிறார்கள். தலைவர்கள் விழ விழ மக்கள் எழுச்சி கூடுவது வித்தியாசமான போக்கு.க யாராலும் அழிக்க முடியாது என்ற அமெரிக்காவின் விமானத்துக்கு அடிவிழுந்தது.ட்ரபுக்கு அடிச்சது மாதிரி. இந்தியா பாகிஸ்தான் போரில் சீனாவின் மறை கரங்கள் ஈடுபட்டது போல இங்கேயும் ஏன் நடந்திருகக்கூடாது?சீனாவின் படைக்கல சோதனையாக ஏன்பார்க்கக்கூடாது.
  11. Today
  12. ஆனால் செய்திகள் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகத்தான் சொல்கின்றன. இஸ்ரேலின் வேலையாகவும் இருக்கலாம். அல்லது ஈரானே ஏவிவிட்டு தான் ஏவவில்வை என்று மறுத்து சொல்வது தன்னிடம் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை இருக்கறதா இல்லையா என்று எதிரிகளைக் குழப்பும் வேலையாகவும் இருக்கலாம்.பிரித்தானியா தனது தளங்களை அமெரிக்கா பாவிப்பதற்கு அனுமதியளிக்கப் போவதாகச் சொன்னதற்கு எதிர்வினையாகவும் இருக்கலாம்.
  13. விக்கியர் தீவிர அரசியலில் இருக்கும் போதே இதை சொன்னவர் - தேவநம்பியதீசன் தமிழன் என அவர் சொன்ன அதே பேட்டியில் மரபுரிமை வகையில் தமிழர்கள் சிங்களவர் ஒரே இனம், பின்னாளில் சிங்கள மொழி பின் சிங்கள-பெளத்த அடையாளம் உருவானது என்பதை சொன்னார் என நினைக்கிறேன்.
  14. தீவிர அரசியலில் இருக்கும் போது இவ்வாறான அறிவூட்டல்களை செய்திருக்கலாம். அப்போது தனது சுயநல அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு எந்த பலனும் தராத வெற்று கோஷ அரசியலை செய்துவிட்டு அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னர் இவ்வாறான அறிவூட்டல்களை செய்வது தகுந்த பலன்களை கொடுக்காது. இருப்பினும் இவ்வாறான மக்கள் நலன் விரும்பும் அறிவூட்டல்களை கல்வியாளர்கள் செய்வது வரவேற்கத்தக்கது.
  15. 48 மணிக்குள் ஹோர்மூசை திறக்காவிடின் ஈரானின் அத்தனை மின் நிலையங்களும் நிர்மூலம் ஆக்கப்படும் என தம்பர் சொல்லி உள்ளார். கத்தார், யூ ஏ இ இப்பவே சுவிட்சை ஆப் பண்ணலாம்😂
  16. டிரம்ப் வருகுன முன்பே பைடன் நீண்டகால அமெரிக்க மேலாண்மைவாத கப்பில் எடுத்தெகென் க்ழிலுடேன் … எந்த புலிடல் வேண்டும். என்கு உறவினர் சொன்னதன் படி டகு டகி டகி டகு டங்கு டிங்கு முந்து முந்து மயிலோன் முந்து குந்தவை பிராட்டியார் குந்தவைத்த இடத்தில் தெலுங்கர் சத்யா நாடெல்லா பார்தீபன் நாயுடு வாசிங்டன் சுந்தர் பிச்சை நன்றே கற்கை புகினும்.
  17. இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்! ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் அணுசக்தி மையத்திற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நேற்று காலை ஈரானின் ‘நடான்ஸ்’ (Natanz) அணுசக்தி மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையமான டிமோனா (Dimona) மற்றும் அதன் அருகிலுள்ள அராத் (Arad) ஆகிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இப்போரில் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மிக ஆபத்தான கட்டமாக இது பார்க்கப்படுகிறது. அராத் (Arad)திலுள்ள நகர் மையத்தில் விழுந்த ஏவுகணையால் 88 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிமோனா (Dimona) அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இந்த நகரில் பல குடியிருப்புகள் தரைமட்டமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 10 வயது சிறுவன் உட்பட 39 பேர் காயமடைந்தனர். ஏவுகணைகள் நேரடியாகக் கட்டடங்களைத் தாக்கியதில் பல இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence) ஏவுகணைகளை இடைமறிக்க முயன்ற போதிலும், நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள போர்க்கப்பல்களைக் கொண்ட சில ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன. இதனால் ஏவுகணைகள் நேரடியாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்து வெடித்துள்ளன. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), டிமோனாவில் உள்ள ஷிமோன் பெரெஸ் அணு ஆராய்ச்சி மையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சு அளவில் மாற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும், அணுசக்தி மையங்களுக்கு அருகே இராணுவத் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும் என அதன் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் குரோஸி வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முறியடிக்கத் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1469541
  18. யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு! 22 Mar, 2026 | 12:23 PM “சமகால அரசியலும், போராளிகளின் வகிபாகமும்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (21) நடைபெற்றது. அந்நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருது வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. நிகழ்வில் போராட்ட கால பகுதியில் புரட்சி பாடல்களை பாடிய பாடகர்களான மறைந்த பாடகர் எஸ்.ஜி சாந்தன், சுகுமார், நிரோஜன் பார்வதி சிவபாதம் உள்ளிட்ட பாடகர்கள், பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களான , இசைவாணர் கண்ணன் , அருணா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அத்துடன் விருது விழாவில் புலிகளின் குரல் செய்தி ஆசிரியரான மறைந்த ரி.தவபாலன் மற்றும் யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசுவாமி செல்வக்குமார் , முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் ஆகிய இரு மூத்த ஊடகவியலாளர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். https://www.virakesari.lk/article/241626
  19. ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறுவது அப்பட்டமான பொய் - நாமல் ராஜபக்ஷ! Published By: Digital Desk 1 22 Mar, 2026 | 11:18 AM (இணையத்தள செய்திப் பிரிவு) ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்து அரசாங்கம் தற்போது டீசலை இறக்குமதி செய்கிறது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலைக்கு எரிபொருள் பெறுவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மக்களின் தலையில் சுமையைத் திணித்துவிட்டு எம்மீது சேறு பூசிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் தனது ஊழல்களை மறைக்க பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெற்று வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்பவர் 'மாலிமாவ'வின் கட்டளைக்கு இணங்கச் செயல்படுகிறாரா அல்லது நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்கிறாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த காலத்தில் எமது அரசாங்கம் கொண்டு வந்த காற்றாலை மற்றும் எல்.என்.ஜி மின் திட்டங்களை இவர்கள் எதிர்த்தார்கள். அன்று அத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று நாட்டு மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அமெரிக்காவின் USAID போன்ற நிறுவனங்கள் பிராந்தியத்தில் ஆட்சி மாற்றங்களுக்கு நிதி வழங்கியதாக டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். இது ஒரு சர்வதேச இரகசியம். இவ்வாறான சக்திகளின் தேவையை நிறைவேற்றவே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் பயனை அரசாங்கம் உடனடியாகப் பெற வேண்டும். குறிப்பாக துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிச் சேவைகளுக்கான சிறந்த மாற்றாக கொழும்புத் துறைமுக நகரை மாற்ற இதுவே சரியான தருணம்.Travel Guides & Travelogues அரசாங்கத்தின் இயலாமையை மறைக்க தொடர்ந்தும் ராஜபக்ஷக்கள் மீது பழி சுமத்துவதை நிறுத்திவிட்டு, விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/241620
  20. அதெண்டால் உண்மைதான். பாதிக்கப்படுவது... மத்திய கிழக்கும், ஆசியனும், ஆபிரிக்கனும்தான். 😢
  21. அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை Mar 22, 2026 - 07:45 AM ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் அரச ஊடகங்களை மேற்கோள் காட்டி பிபிசி செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் ஈரான் இலக்கு வைக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரானின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmn14g1m00014356pizfrzrbo
  22. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஹவாய் தீவில் கடும் வெள்ளப்பெருக்கு ; ஆயிரக்கனக்கானோர் வெளியேற்றம் Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 12:56 PM (இணையத்தள செய்திப் பிரிவு) அமெரிக்காவின் ஹவாய் தீவில் நிலவும் கடும் சூறாவளி மற்றும் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹவாய் தீவை தாக்கியுள்ள "கோனா லோ" எனப்படும் புயலால் கடந்த 10 நாட்களில் சில பகுதிகளில் 127 சென்றி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மணிக்கு 160 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், ஓஹு (Oahu) மற்றும் மாவி (Maui) தீவுகளில் மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓஹு தீவிலுள்ள பிரதான அணைக்கட்டு ஒன்று உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதனைச் சூழவுள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். வெள்ளநீர் சடுதியாக அதிகரித்ததால் வீடுகள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுவரை 230 க்கும் மேற்பட்டோர் அனர்த்த பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். "இந்தச் சூறாவளியைச் சாதாரணமானதாகக் கருத வேண்டாம்" என கவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் எச்சரித்கை விடுத்துள்ளார். ஏற்கனவே மண் அதிகளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால், சிறிய மழை பெய்தாலும் அது பாரிய மண்சரிவை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் விமான நிலையங்கள் கடும் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்டுள்ள மொத்த சேத மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடக்கும் என ஹொனலுலு மேயர் ரிக் பிளாங்கியார்டி தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு ஹோட்டல்களில் தங்குவதற்கு விசேட விலைக் குறைப்புகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு லஹைனா பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அனர்த்தத்தின் வடுக்கள் மறைவதற்கு முன்னரே, இந்த இயற்கைச் சீற்றம் ஹவாய் மக்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://www.virakesari.lk/article/241636
  23. பெண்கள் விளையாட்டில் தேசிய சூழலுடன் முரண்படும் தமிழ்நாடு: பிபிசி ஆய்வு கூறும் சிக்கலான உண்மைகள் பட மூலாதாரம்,Getty Images 21 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்திய பெண்கள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தில் ஓர் அமைதியான, ஆனால் முக்கியமான மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையும், மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்போரின் எண்ணிக்கையும், அதை ஒரு தொழில்வாய்ப்பாகக் கருதும் மனப்போக்கும் அதிகரித்து வருவதாக பிபிசி மற்றும் கலெக்டிவ் நியூஸ்ரூம் இணைந்து வெளியிட்ட புதிய ஆய்வு கூறுகிறது. ஆனால், இந்த முன்னேற்றக் கதையின் நடுவில் ஒரு சிக்கலான உண்மையும் பொதிந்துள்ளது. பெண்கள் விளையாட்டுத் துறைக்குள் வந்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் முழுமையான சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார்களா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் இல்லை. இந்த முரண்பாடு மிகவும் தெளிவாகத் தெரியும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த ஆய்வு 2025 டிசம்பர் 26 முதல் 2026 ஜனவரி 30 வரை, 14 மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து 1,155 பேரின் பதில்கள் இந்த ஆய்வுக்காகப் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆய்வு, 'முழு இந்தியா'வையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக மேற்கொள்ளப்படவில்லை. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாநிலங்கள் குறித்தான மனப்போக்குகள், பழக்கங்களைப் புரிந்துகொள்வதற்காகவே இது நடத்தப்பட்டது. எனவே, இதை ஒரு தேசிய அளவிலான சூழலின் முடிவு எனக் கருதாமல், சமூக மாற்றத்திற்கான திசையைப் பற்றிச் சுட்டிக்காட்டும் வழிகாட்டியாகக் கருத வேண்டும். விளையாட்டில் பெண்கள்: தமிழ்நாட்டில் என்ன நிலைமை? இந்த ஆய்வில் கிடைத்த முதன்மையான கண்டுபிடிப்பு, கிரிக்கெட்டில் 2020இல் 5 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கேற்பு, 2026இல் 10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஆய்வில் பங்கேற்ற பெண்களில் இப்போது பத்தில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாகக் கூறுகிறார்கள். இளம் பெண்களிடையே இது இன்னும் வேகமாக உயர்ந்துள்ளது. 15-24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் ஆறு பேரில் ஒருவர் கிரிக்கெட் விளையாடுவதாக ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆறு மாதங்களில் பெண்கள் விளையாட்டை ஏதேனுமொரு வடிவில் பார்த்துள்ளதாகக் கூறுவோரின் அளவும் 51 சதவிகிதமாக இருக்கிறது. 2020இல் இருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது இது முக்கியமான மாற்றமாகும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்திய அளவிலான இந்த மாற்றத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முக்கியமான ஒரு வேறுபாடு தெரிகிறது. நாட்டின் பல பகுதிகளில் மகளிருக்கான விளையாட்டு வளர்ச்சி என்பது பெரும்பாலும் கிரிக்கெட்டின் எழுச்சியுடன் சேர்த்துப் பேசப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டின் கதை அது மட்டுமாக இல்லை. இங்கு மகளிர் விளையாட்டுகளைப் பார்ப்பவர்களின் உள்ளூர் கலாசாரம் பல்வேறு வடிவங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. குறிப்பாக, இந்தப் பார்வையில், கிரிக்கெட்டுக்கு இணையாக கபடியும் பிரபலமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்னிந்தியா முழுக்கவே மகளிர் விளையாட்டுக்கான பார்வையாளர்கள் அளவு அடிப்படையில் வலுவாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது கலாசாரத்துடனும் பிணைக்கப்பட்டு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல, ஆந்திரா, தெலங்கானா, கேரளாவில் கிரிக்கெட் பிரபலமாக இருந்தாலும், கேரளாவில் கிரிக்கெட்டுக்கு நிகரான இடத்தை மகளிர் கால்பந்து விளையாட்டும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் விளையாட்டு அடையாளம் கிரிக்கெட் இந்திய அளவில் பெரும் வளர்ச்சியடைந்து இருந்தாலும், தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் கபடி இன்னும் முக்கியமான இடத்தில் இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்து பதிலளித்தவர்களில் 18% பேர் கபடி விளையாடுவதாகத் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற, ஊடக மைய வளர்ச்சியின் அடையாளமாக கிரிக்கெட் இருக்கிறது என்றால், கபடி இன்னமும் தெருக்கள், பள்ளிகள், உள்ளூர்ப் போட்டிகளில் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இங்குதான் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பார்வை சுவாரஸ்யமாகிறது. இந்திய அளவில் மகளிர் கிரிக்கெட்டில் இரட்டிப்பு வளர்ச்சி என்பது தேசிய அளவிலான மாற்றத்தைப் பறைசாற்றினாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விளையாட்டுத் துறையின் எதிர்காலம் என்பது கிரிக்கெட் மட்டுமாகச் சுருங்கிவிடவில்லை. மாறாக, ஒருபுறம் கிரிக்கெட் மீது ஆர்வம் உயரும்போது, மறுபுறம் கபடி போன்ற உள்ளூர் வேர்களைக் கொண்ட விளையாட்டுகளையும் மகளிரின் பங்களிப்பு தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம். ஏனெனில், மகளிர் விளையாட்டுத் துறையை விரிவுபடுத்த வேண்டுமெனில், தேசிய அளவில் புகழ் பெற்றுள்ள விளையாட்டுகளை மட்டுமே ஊக்கப்படுத்துவது போதாது, உள்ளூர் சமூகங்களுடன் ஏற்கெனவே பிணைந்திருக்கும் விளையாட்டுகளையும் வலுப்படுத்த வேண்டியிருக்கும். 'விளையாட வேண்டும்' என்ற ஆசையும் தடையும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றுமொரு முக்கியமான அம்சம், விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது குறித்துச் சிந்திக்கையில் பெண்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு கவலை. தற்போது எந்த விளையாட்டிலும் பங்கேற்காத பெண்களில் 13% பேர் பாதுகாப்பு குறித்தான கவலை காரணமாக விளையாட்டுகளில் சேரவில்லை என்று கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட மாநிலங்களின் மொத்த அளவில் இது 32.7 மில்லியன் பெண்களுக்குச் சமம் என அறிக்கை மதிப்பிடுகிறது. பட மூலாதாரம்,Getty Images தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த பத்து ஆண்டுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக நம்புவோரின் விகிதம் 84 சதவிகிதமாக உள்ளது. இது ஆய்வில் மிகவும் அதிகமான அளவீடாகும். அதே நேரம், விளையாட்டில் பங்கேற்காத பெண்களில் 21% பேர் பாதுகாப்பு தங்களுக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு தரவுகளையும் சேர்த்துப் பார்க்கையில், விளையாட்டு மேடைகள், பள்ளி மைதானங்கள், திடல்கள், கிளப் வசதிகள் ஆகியவை மட்டுமே மகளிர் விளையாட்டின் அடித்தளமல்ல, பெண்கள் அங்கு பாதுகாப்பாக உணர்கிறார்களா என்பதும் அதே அளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அறிக்கை நேரடியாக காரண-விளைவு உறவை நிரூபிப்பதில்லை. ஆனால், பாலின வன்முறை அதிகரித்து இருப்பதாக மக்கள் உணரும் மாநிலங்களில், பெண்கள் விளையாட்டுகளில் இருந்து விலகுவதற்கான அபாயமும் அதிகமாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பள்ளியில் தொடங்கும் பயணம் பாதியில் நின்றுவிடுவது ஏன்? இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள மற்றொரு முக்கியமான விஷயம், குழந்தைப் பருவத்தில் அதிகமாக இருக்கும் விளையாட்டு மீதான ஆர்வம் வளர்ந்த பிறகும் நீடிக்கவில்லை என்பதாகும். ஆய்வில் பங்கேற்றவர்களில் 74% பேர் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது விளையாடியதாகக் கூறுகிறார்கள். பெண்களிடையே இந்த விகிதம் 70 சதவிகிதமாக உள்ளது. பெண்கள் சிறு வயதில் விளையாடிய இடங்களில் பள்ளி மிக முக்கியப் பங்கு வகிப்பதாக அறிக்கை கூறுகிறது. சிறுவயதில் விளையாடிய பெண்களில் 37% பேர் பள்ளியில்தான் அதிகமாக விளையாடியதாகக் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,Getty Images ஆண்களுக்கு அக்கம்பக்கம், தெரு, நண்பர்கள் வட்டம் போன்ற சமூக இடங்களும் விளையாட்டுத் தளங்களாக இருக்கும் நிலையில், பெண்களின் விளையாட்டு அனுபவம் அதிகம் 'கட்டமைக்கப்பட்ட', 'அனுமதி கிடைத்த' இடங்களுக்குள் மட்டுமே சுருக்கப்படுகிறது. பள்ளி அளவில் மாணவிகள் விளையாட்டில் ஈடுபடலாம். ஆனால், கல்லூரிக்குப் பிறகு? வேலையில் சேர்ந்த பிறகு? திருமணத்திற்குப் பிறகு? ஒரு நகரப் பகுதி அல்லது கிராமத்தில், ஒரு பெண் மாலை நேரத்தில் சுலபமாகச் சென்று விளையாடக்கூடிய திறந்தவெளி மற்றும் பாதுகாப்பான இடங்கள் எவ்வளவு உள்ளன? இந்த இடைவெளியே இந்தியா முழுவதும் பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு இருக்கும் ஒரு பெரிய சவால் என்று அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டிலும் இதே கேள்வி தவிர்க்க முடியாததாக உள்ளது. நேரமின்மை: மறைந்து நிற்கும் பெரிய தடுப்புச் சுவர் பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்குப் பெரிய தடையாக பாதுகாப்பின்மை சொல்லப்பட்டாலும், அதற்கு நிகராகச் சொல்லப்பட்ட மற்றுமொரு காரணம் நேரமின்மை. அறிக்கைப்படி, மொத்தமாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 41% இந்தியர்கள் தங்களுக்கு விளையாட நேரமில்லை எனக் கூறியுள்ளனர். இது சாதாரண பதில் போலத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் வேலை-வாழ்க்கை சமநிலை, நீண்ட வேலை நேரம், போக்குவரத்துப் பயணத்தால் ஏற்படும் சோர்வு, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு ஆகிய பல விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் வேலைக்கும் சென்று, வீட்டுப் பொறுப்புகளையும் அதிகமாகச் சுமக்கின்ற சூழலில், விளையாட்டு என்பது அவர்களுக்கான 'அதிகப்படியான நேரம் இருந்தால் செய்யக்கூடிய' செயலாகப் புறந்தள்ளப்படுகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சென்னை போன்ற நகரங்களில் நீண்ட பயண நேரம், தனியார் வேலைப்பளு, தேர்வுக்குப் பிந்தைய கல்வி/வேலை அழுத்தம் ஆகியவை இருந்தாலும், மாவட்டங்கள், சிற்றூர்களில்கூட பெண்களுக்கு வீட்டு வேலை, பராமரிப்பு பொறுப்பு, சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவை நேரத்தைச் சுருக்கும். விளையாட்டு மீது ஆர்வம் இருந்தாலும், அதற்கு தினசரி வாழ்வில் இடம் கொடுக்க முடியாத நிலை உருவாகிறது. இதனால், "பெண்கள் விளையாட்டில் அதிகமாகத் தெரிகிறார்கள்" என்ற வெளிப்படையான முன்னேற்றத்திற்கும், "பெண்கள் சீராக விளையாட ஏதுவான வாழ்க்கையை வாழ்கிறார்களா?" என்ற அடிப்படைக் கேள்விக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது. பார்வையாளர்கள் அதிகரித்தாலும் மாறாத மனப்பான்மை மகளிர் விளையாட்டுகளை நேரலையிலும் நேரடியாகச் சென்றும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் 59% பேர் கடந்த ஆறு மாதங்களில் மகளிர் விளையாட்டு நிகழ்வுகளைப் பார்த்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதில், மகளிர் விளையாட்டுகளுக்கான பார்வையாளர்களை அதிகபட்சமாகக் கொண்டுள்ள மாநிலங்களில் 65% பேருடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால் அதேவேளையில், பெண்களின் விளையாட்டைப் பற்றிய எதிர்மறையான சமூக மனப்பான்மைகள் பல இடங்களில் இன்னும் குறையாமல் இருப்பதாகவும் சில இடங்களில் அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,Getty Images உதாரணமாக அறிக்கைப்படி, 43% பேர் மகளிர் விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளைவிடக் குறைவான பொழுதுபோக்கு அம்சம் கொண்டது என நம்புகிறார்கள். அதோடு, 46% பேர் விளையாட்டு வீராங்கனைகள் கவர்ச்சியாகத் தோன்ற வேண்டுமெனக் கருதுகிறார்கள். 38% பேர் ஆண்கள் அளவுக்கு வீராங்கனைகள் திறமையானவர்கள் இல்லையென்ற மனப்பான்மை தங்களுக்கு இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இது வெறும் ஆண்களின் கருத்து மட்டுமே இல்லையென்றும், பெண்கள் மத்தியிலும் இத்தகைய பார்வைக்கு ஆதரவு இருப்பதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, மகளிர் விளையாட்டுகள் பிரபலம் அடைந்துள்ளது, ஆனால் பரவலாகவும் முழுமையாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒரு மாநிலம், பெண்கள் விளையாட்டைப் பார்ப்பதில் ஆர்வமாக இருந்தாலும், பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், எப்படித் தோன்ற வேண்டும், எவ்வளவு 'பெண்மையானவர்களாக' இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தும் மனப்பான்மை அங்கு வலுவாக இருந்தால், அங்கு விளையாட்டின் வளர்ச்சி வெளித்தோற்றத்திற்குப் பாராட்டப்பட்டாலும், உள்ளிருந்து கட்டுப்படுத்தப்படும் சூழலை இது உருவாக்கும். விளையாட்டை தொழிலாக நினைக்கும் பெண்களில் தமிழ்நாடு முன்னிலை தமிழ்நாடு குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள முக்கியமான நேர்மறை கண்டுபிடிப்புகளில் ஒன்று, பெண்கள் விளையாட்டை ஒரு தொழிலாகக் கருதுவதன் விகிதம். மொத்தமாக பெண்களில் 17% பேர் விளையாட்டை ஒரு தொழில் வாய்ப்பாகக் கருதி சிந்தித்ததாகக் கூறியிருக்க, 25 வயதுக்கு உட்பட்ட பெண்களில் இந்த அளவு 26 சதவிகிதமாக இருக்கிறது. இதையே மாநில அளவில் பார்த்தால், மகளிர் விளையாட்டுகளை தொழில்வாய்ப்பாகக் கருதுவதில் தமிழ்நாடு 27 சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இது, பெண்கள் வெறுமனே பார்வையாளர்களாக அல்லது ஆதரவாளர்களாக மட்டுமே இல்லாமல், 'நானும் இதை என் வாழ்க்கைப் பாதையாகத் தேர்வு செய்யக்கூடும்' என்று நினைக்கத் தொடங்கியுள்ளார்கள் என்பதற்கான வலுவான அறிகுறியாக உள்ளது. பிற தொழில் வாய்ப்புகளைப் போலவே விளையாட்டையும் ஒரு உண்மையான வாழ்க்கைப் பாதையாகப் பெண்கள் பார்க்கத் தொடங்குவது, மகளிர் விளையாட்டின் சமூக மதிப்பு உயர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறி. ஆனால், இந்தக் கனவு நனவாக வேண்டுமெனில் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் பயிற்சி அமைப்பு, மாவட்ட அளவிலான போட்டி வாய்ப்புகள், பெண்களுக்குப் பாதுகாப்பான பயிற்சி சூழல், தொடர்ந்து வருமானம் ஈட்டக்கூடிய விளையாட்டு அமைப்புகள் ஆகியவை தேவைப்படும். பட மூலாதாரம்,Getty Images தமிழ்நாடு குறித்து அறிக்கை கூறுவது என்ன? இந்த ஆய்வு தமிழ்நாட்டைப் பற்றி ஒருசேர இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. முதலாவதாக, பெண்கள் விளையாட்டில் சமூக ஆர்வம், பார்வையாளர் வளர்ச்சி, தொழில்முறை கனவு ஆகியவை உண்மையில் அதிகரித்துள்ளன. ஆனால் அதேவேளையில், பாதுகாப்பு, நேரமின்மை, பாலின பிம்பங்கள், பள்ளிப் பருவத்திற்குப் பிந்தைய இடைவெளி போன்ற அடிப்படை சமூகத் தடைகள் இன்னும் நீங்கவில்லை. தமிழகத்தில் கபடி போன்ற உள்ளூர் விளையாட்டு அடையாளங்கள், பெண்கள் தொழில்வாய்ப்பாக விளையாட்டை நினைக்கும் முன்னோக்குப் பார்வை ஆகிய இரண்டும் ஒருசேர இருப்பது ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொடுக்கிறது. இருப்பினும் அந்த வாய்ப்பு எளிதானதல்ல. விளையாட்டில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை உயர்வது மட்டுமே போதாது, அவர்கள் பாதுகாப்பாக விளையாட முடியுமா, பள்ளிப் பருவத்திற்குப் பிறகும் தொடர முடியுமா, குடும்பமும் சமூகமும் அதை ஏற்றுக்கொள்ளுமா, விளையாட்டைத் தொழிலாகத் தேர்வு செய்தால் அதில் நிலைத்திருந்து வாழ முடியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதில்களை வடிவமைக்க வேண்டும். இல்லையெனில், மகளிர் விளையாட்டு மீதான தமிழகத்தின் ஆர்வம் பார்வையாளர் மட்டத்திலேயே தங்கி, பங்கேற்புப் புரட்சியாக மாறாமல் தணிந்துவிடும். அறிக்கையிலுள்ள தரவுகளின்படி தற்போதைய நிலையைப் பார்த்தால், தமிழ்நாட்டில் மகளிர் விளையாட்டு மாற்றமும் முரண்பாடும் இரண்டறக் கலந்த ஒரு கதையாகவே உள்ளது. பெண்கள் மைதானத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். இப்போது அந்த மைதானம் அவர்களுக்கான இடமாக மாறக்கூடிய சூழல் ஏற்படுமா என்பதே அடுத்த பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையிலான கணக்கெடுப்பு காந்தர் இந்தியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது, அவர்களே 2020ஆம் ஆண்டின் முந்தைய ஆய்வையும் நடத்தினர். இந்தத் திட்டத்தில், இந்தியாவின் பதினான்கு மாநிலங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 10,304 பேரை தனியார் இடங்களில் டேப்லெட் மூலம் நேருக்கு நேர் (CAPI) நேர்காணல் செய்யப்பட்டது. வயது, பாலினம், சமூக-பொருளாதார வகுப்பு (NCCS), கிராமப்புறம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்ட பதினான்கு மாநிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இந்த மாதிரியின் நோக்கமாகும். இரண்டு ஆய்வுகளின் ஒப்பீட்டுத் தன்மையை உறுதி செய்வதற்காக, புதிதாகச் சேர்க்கப்பட்ட சில கேள்விகளைத் தவிர, கணக்கெடுப்புக்கான வினாப்பட்டியலும், கணக்கெடுப்பின் மாதிரி முறையும் மாறாமல் அப்படியே இருந்தன. இந்த ஆய்வு குறித்தும், இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட முறை குறித்தும் மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyj38w3e5vo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.