Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர் டினுலக்சன் அரைச் சதம் குவித்து கைகொடுத்தார் Published By: Vishnu 13 Mar, 2026 | 09:00 PM (நெவில் அன்தனி) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் யாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமரில் சென். பட்றிக்ஸ் கடைநிலை வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் அரைச் சதம் குவித்து அணியை சிறப்பான நிலையில் இட்டார். கடைசி நாளான மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் போது எதுவும் நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் கல்லூரி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதம் இருக்க யாழ்ப்பாணம் கல்லூரி 50 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. சசிகரன் அஷ்மின் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததுடன் கேதீஸ்வரன் ஹெரிஷன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். கடைசி நாள் ஆட்டத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தேநீர் இடைவேளைக்கு முன்னர் யாழ்ப்பாணம் கல்லூரி 200 ஓட்டங்கள் முன்னிலை அடைந்து டிக்ளயா செய்தால் போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட வாய்ப்புண்டு. போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்து சென். பட்றிக்ஸ் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. சிவநானதன் ஷெஹான் (45), நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் (42) ஆகிய இருவரும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் 6 விக்கெட்கள் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (129 - 6 விக்.) இந் நிலையில் களம் புகுந்த 9ஆம் இலக்க வீரர் ஜெயராஜரூபன் டினுலக்சன் மிகவும் பொறுமையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு கைகொடுத்தார். அத்துடன் அடுத்த 3 விக்கெட்களில் அவர் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார். டைட்டஸ் ஜோசப் 34 ஓட்டங்களையும் செல்வகுமார் ஸெனாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வாசுதேவன் விஷ்னுகோபன் 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹாமிஷ் ஹாமிஷன் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெடகளையும் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. https://www.virakesari.lk/article/240907
  3. கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின் சமர் கிரிக்கெட் பெருவிழா 13 Mar, 2026 | 03:07 PM இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வெகு விமரிசையாக ஆரம்பமானது. இந்து கல்லூரி கொழும்புவின் 75ஆவது ஆண்டு வைர விழாவை சிறப்பிக்கும் வகையில் இம்முறை போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து கல்லூரி கொழும்புவின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம விருந்தினராகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர். காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், பாடசாலை வாத்திய இசைக் குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர். இந் நிகழ்வின்போது தேசியக் கொடி, இரண்டு பாடசாலைகளின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டு போட்டிகள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இந்துக்களின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. பொட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, இரண்டு அணிகளினது வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. ரவிந்திரன் ஆதித்தியன் 31 ஓட்டங்களையும் தினேஸ்ரேமன் பிரீத்திகன் 26 ஓட்ங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியைக் கண்டுகளிக்க இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/240879
  4. மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம் Published By: Vishnu 13 Mar, 2026 | 07:16 PM புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். https://www.virakesari.lk/article/240904
  5. தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள் 13 Mar, 2026 | 05:26 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து, தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/240903
  6. அருமையான இந்த சந்தர்ப்பத்தை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது அவா .......! 👍
  7. பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர். இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் அடங்கும். பிப்ரவரி மாதத்தில், 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதை இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் பரிசீலிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் இதற்கு காரணமாக இருந்தது. இதையடுத்து, வீரர்களை வாங்கும் போது எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) எட்டு அணிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை வாங்கியதற்கு ஈசிபி-யின் இந்தக் கோரிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சன் குழுமம் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வைத்துள்ளது. 'தி ஹண்ட்ரட்' லீக்கில் உள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் இந்த குழுமத்திற்குச் சொந்தமானது. பட மூலாதாரம்,ADEL SENNA/AFP via Getty Images படக்குறிப்பு,அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அப்ரார் மார்ச் 12 அன்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார் வியாழக்கிழமை, மார்ச் 12 அன்று நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தனர். சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.30 கோடி ரூபாய்) வாங்கியது. இதற்குப் பிறகு, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார். சர்ச்சை முற்றியதை அடுத்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அப்ராரைத் தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பும் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகத் தனது பெயரைப் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக 2009 முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள்? "தி ஸ்கின் டாக்டர்" என்ற பெயரிலான எக்ஸ் பயனர் ஒருவர், இந்தியருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் அதன் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கிற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது இந்தியாவை பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது என்று எழுதியுள்ளார். ''இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானியர்களை எடுப்பதில்லை. தடை நீக்கப்பட்ட கணமே, யோசிக்காமல் அவர்களை எடுப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்ரார் அகமது இந்திய ராணுவத்தை அவமதித்ததாகவும் அதையெல்லாம் மீறி காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி அவரை 'தி ஹண்ட்ரட் லீக்கில்' வாங்கியுள்ளனர் எனவும் பயனர்கள் கூறி வருகின்றனர். ஆனந்த் கிருஷ்ணா என்ற பயனர், காவ்யா மாறன் அப்ரார் அகமதுவை வாங்கியதை விட அவமானகரமானது எதுவும் இருக்க முடியாது என்று எழுதியுள்ளார். சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னது என்ன? பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி. சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி ஸ்போர்ட்ஸிடம், "அப்ராரின் பந்துவீச்சில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன, மேலும் பல உள்ளூர் வீரர்கள் அவரை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை," என தெரிவித்தார். பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான ஊகங்கள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய வெட்டோரி, ஆனால் ஏலத்தில் எந்த வீரரையும் கண்டு கொள்ளவேண்டாம் என தமக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றார். "கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரரையும் கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்திற்கு வந்தோம். சர்வதேச அணிகளிலிருந்து பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பில் இருந்தனர், ஆனால் அப்ரார் தான் எங்களின் முன்னுரிமையாக இருந்தார்," என அவர் தெரிவித்தார். சர்ச்சை எப்போது தொடங்கியது? பிப்ரவரி 21 அன்று, இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதில்லை என்ற முடிவை பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின்(ஈசிபி) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், 'தி ஹண்ட்ரட்' போட்டியில் "அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்" தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், "பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகள்" நடைமுறையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர்,''தி ஹண்ட்ரட் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கிறது, மேலும் எட்டு அணிகளும் இதைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார். இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்காது என்ற செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியிருந்தார். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது போன்ற ஒரு விஷயம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றார். மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள தளமான எக்ஸ்-இல், "நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டில் இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது" என்று எழுதியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjen8kg9evxo
  8. சொக்குதே மனம் சுத்துதே ஜெகம் .......! 😍
  9. இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே Published By: Digital Desk 1 13 Mar, 2026 | 03:37 PM இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.Geographic Reference கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும். அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/240883
  10. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு Mar 13, 2026 - 04:41 PM இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmmosqqu30005356peck1lcwx
  11. ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 1,444 பேர் பலி Mar 13, 2026 - 04:27 PM கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர். ஈரான் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், இத்தாக்குதல்களில் மேலும் 18,551 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmos7n0f0004356pqrdpm8p1
  12. Today
  13. உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர் 13 Mar, 2026 | 01:32 PM நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர். மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும். தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம். இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும். நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள். இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம். நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/240871
  14. eptdoonsrS1s6m815lg17hraL:6961mg1 fhc7a5fgh0g 4h 71 71àm0e24 · " வதந்தி "....ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். 'திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.. காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான்.. இரவில் வீடு திரும்புகிறான்.. ஒரு வேளை அவன் திருடனாக இருப்பானோ' என நினைத்தார். இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், 'அவன் அப்பாவி' அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்".. ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. 'நான் என்ன திருடனா' என்னைப் போய் கைது செய்து விட்டார்களே.. எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன் முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன் அவ்வளவு தான் ". டிரைவரோ, போலீஸால் தான் அலைக் கழிக்கப்பட்டது, அந்த அவமானத்தால் மனது பாதித்தது பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான். நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’’ என்றார். அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"? "ஆமாம் ஐயா"... "நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்.. அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’. "அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும் அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?" "முடியாதில்லையா? அப்படித் தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார். @highlight யானை
  15. சஷீந்திர ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு: ஜூலை மாதம் வரை வழக்கு ஒத்திவைப்பு! Published By: Digital Desk 1 13 Mar, 2026 | 01:36 PM ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குறித்த ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை கோப்புகள் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்காக கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, நீதவான் இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 10ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். அரகலய போராட்டக் காலப்பகுதியில், மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான செவனகல பிரதேசத்தில் அமைந்திருந்த சட்டவிரோத கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள் சேதமடைந்தன. இதற்காக, இழப்பீட்டு அலுவலக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழப்பீடாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240875
  16. தெற்கு ஆழ்கடலில் பாரிய சுற்றிவளைப்பு: போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் 10 பேர் கைது! 13 Mar, 2026 | 01:16 PM இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் இரண்டு பலநாள் மீன்பிடிப் படகுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார். மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/240869
  17. Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு! Mar 13, 2026 - 12:41 PM இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சடலங்களை ஏற்றிய விசேட விமானம் ஒன்று இன்று (13) மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஈரான் நோக்கிப் புறப்படத் தயாராக உள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmmok612u000e356pemk928t3
  18. நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர ஷாவின் கட்சி வெற்றி Published By: Digital Desk 3 13 Mar, 2026 | 09:00 AM நேபாளத்தில் கடந்த ஆண்டு வெடித்த இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில், பாரம்பரிய அரசியல் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி ராஷ்டிரிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்னறத்தின் கீழவையில் 182 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வெறும் 2 இடங்களே குறைவாக உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களில் நேபாளத்தில் ஒரு தனி கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். தேர்தலின் முக்கிய முடிவுகள் ராஷ்டிரிய சுதந்திர கட்சி : 182 இடங்கள் நேபாளி காங்கிரஸ்: 38 இடங்கள் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : 25 இடங்கள் 1 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் நேபாளத்தின் அடுத்த பிரதமராக ரெப் பாடகரும் காத்மண்டு மாநகர மேயருமான பாலேந்திர ஷா பதவியேற்கவுள்ளார். 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இளம் கட்சி, நேபாளத்தின் அரசியலமைப்பு ரீதியாக வடிவமைக்கப்பட்ட 'விகிதாசார பிரதிநிதித்துவ' முறையையும் மீறி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது உலக அரசியலையே வியக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது சொந்தக் கோட்டையான ஜாப்பா 5 தொகுதியில் பாலேந்திர ஷாவினால் படுதோல்வியைச் சந்தித்தார். அதேபோல், நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ககன் தாப்பாவும் தனது ஆசனத்தை வேட்பாளரிடம் இழந்துள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் வாரிசுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு வீதிக்கு இறங்கிய இளைஞர்களின் போராட்டமே இந்த மாற்றத்திற்குக் காரணமாகும். 77 பேரின் உயிர்த்தியாகத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த வெற்றி, நேபாளத்தின் புதிய சகாப்தத்தின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாலேந்திர ஷா தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/240849
  19. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்........! --- அந்தியில வானம் ---
  20. இரான் போரில் அமெரிக்காவின் 4வது விமானம் நொறுங்கியது - என்ன நடந்தது? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,(கோப்புப் படம்) கட்டுரை தகவல் கிளேர் கீனன் 13 மார்ச் 2026, 10:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. கேசி-135 விமானம் விழுந்து நொறுங்கியதில் எதிரிகளின் தாக்குதலோ அல்லது தவறுதலான நட்பு நாடுகளின் தாக்குதலோ காரணமல்ல என்றும் அமெரிக்கா கூறியது. முன்னதாக விமானத்தில் இருந்த 6 பேரில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா கூறியிருந்த நிலையில், தற்போது மேலும் இருவர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகளில் இந்த எரிபொருள் நிரப்பும் விமானம் ஈடுபட்டிருந்ததாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு விமானங்களில் இது ஒன்று என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது. மேலும், இரண்டாவது விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று அமெரிக்கா கூறியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,(கோப்புப் படம்) இரான் கூறியது என்ன? போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள், நடுவானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டவை. இவை அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. போர் விமானங்கள் பறக்கும் தூரத்தை அதிகரிப்பதற்காக முதல் வளைகுடா போரின்போது இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. கேசி-135 விமானத்தில் வழக்கமாக ஒரு விமானி, ஒரு துணை விமானி மற்றும் விமானத்தின் எரிபொருள் நிரப்பும் பகுதியை இயக்குவதற்குப் பொறுப்பான ஒரு பூம் ஆபரேட்டர் (boom operator) என குறைந்தது மூன்று பணியாளர்கள் இருப்பார்கள். இந்த விபத்து நட்பு நாடுகளின் வான்பரப்பில் நடந்ததாக சென்ட்காம் விவரித்துள்ளது. இருப்பினும், இராக்கின் இந்தப் பகுதியில் இரான் ஆதரவு போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு கூட்டணி குழு ஏவுகணை மூலம் இந்த விமானத்தை இலக்கு வைத்ததாக இரானின் அரசுத் தொலைக்காட்சி கோரியுள்ளது. இரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் வெடித்ததில் இருந்து, இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய போரின்போது அமெரிக்க ராணுவம் இதுவரை குறைந்தது நான்கு விமானங்களை இழந்துள்ளது. 4வது விமானம் இந்த மாத தொடக்கத்தில், குவைத் வான் பரப்பில் "தவறுதலான நட்பு நாட்டுத் தாக்குதலில்" மூன்று F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அதிலிருந்த ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். போயிங் நிறுவனம் 1950-கள் மற்றும் 1960-களின் தொடக்கத்தில் அமெரிக்க ராணுவத்திற்காக கேசி-135 ஸ்ட்ரேடோடேங்கர் விமானங்களைத் தயாரித்தது. இது அமெரிக்க ராணுவத்தின் வான்வழி எரிபொருள் நிரப்பும் பிரிவின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. மேலும், போர் விமானங்கள் தரை இறங்க வேண்டிய அவசியம் இல்லாமல் நீண்ட தூரப் பணிகளை மேற்கொள்ள இது அனுமதிக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg8yknyn4po
  21. 15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு? Published By: Vishnu 13 Mar, 2026 | 01:26 AM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இந்துக்களின் சமர் 14ஆவது அத்தியாயத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து அத் தோல்வியை நிவர்த்திசெய்யும் குறிக்கோளுடன் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் இந்து கல்லூரி கொழும்பு அணியும் தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்து கடந்த வருட நாயகன் எஸ். சுபர்னன் தலைமையில் யாழ். இந்து கல்லூரி அணியும் 15ஆவது அத்தியாயத்தில் களம் இறங்கவுள்ளன. இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு பி. சரவணமுத்து (சரா) ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் (13ஆம், 14ஆம் திகதிகள்) நடைபெறவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அங்குரார்ப்பண ஒருநாள் கிரிக்கெட் போட்டி 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிறைவேட் லிமிட்டெட் கம்பனி தொடர்ச்சியாக 4ஆவது வருடமாக அனுசரணை வழங்குவதுடன் இப் போட்டி ஜனசக்தி லைவ் இந்துக்களின் சமர் என அழைக்கப்படுகிறது. இலங்கை பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்துக்களின் சமர் தனித்துவம் மிக்க போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றும் ஒரே ஒரு மாபெரும் கிரிக்கெட் இதுவாகும். வடக்கு மற்றும் தெற்கு கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இப் போட்டி வழிவகுப்பதுடன் மாகாணங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாமாகவும் இது அமைகின்றது. இது வெறுமனே கிரிக்கெட் போட்டியுடன் நின்று விடாமல் நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது. வழமைபோல் இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களுக்கு இடையிலான சொல்லாடல் (விவாதம்) போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த வருடம் இந்து கல்லூரி கொழும்பு தனது 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதால் இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியும் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75ஆவது ஆண்டு விழாவை இந்துக்களின் சமர் வெற்றியுடன் கொண்டாடும் வகையில், இந்து கல்லூரி கொழும்பு அணி பல்வேறு வியூகங்களைப் பிரயோகிக்க உள்ளதாக அறியக் கிடைக்கிறது. யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தேசிய அணியில் இடம்பெற்றவருமான தமிழ் யூனியன் அணியின் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரா ஓவல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்து கொழும்பு கல்லூரி அணிக்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ளார். இந்து கல்லூரி கொழும்பு அணி முகாமைத்துவத்தினரின் அழைப்பின் பேரிலேயே வியாஸ்காந்த் குறிப்புகளை வழங்கி அணி வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நடந்து முடிந்த 14 இந்துக்களின் சமர்களில் யாழ். இந்து கல்லூரி 4 வெற்றிகளையும் இந்து கல்லூரி கொழும்பு 3 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இந்த வருட போட்டியின் ஆரம்ப விழாவுக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ். அர்ச்சுதன், பிரதம விருந்தினராகவும் 1996 உலக சம்பியன் இலங்கை அணியின் உப தலைவர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கரலியத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர். அணிகள் விபரம் யாழ். இந்து கல்லூரி: எஸ். சுபர்னன் (தலைவர்), எஸ். ஹரிகரன் (உப தலைவர்), ரி. பிரேமிகன், ஆர். ஆதித்தியன் (விக்கெட் காப்பாளர்), என். நிருஜன், கே. நிதீஸ், எஸ். அபிவர்னன், எஸ். சிவகஜீசன், எஸ். செல்வஜன், ரி. பிரீதிகன், ஜீ. லக்சிகன், எம். டனிலாஷ், ஜெ. பவானன், எஸ். அஷ்வின், பி. அனிஷ், ஜீ. செந்தூரன். தலைமைப் பயிற்றுநர்: எஸ். அலன்ராஜ். உதவி பயிற்றுநர்கள்: டி. ஜோய் ஆகாஸ், ஆர். நியூட்டன். இந்து கல்லூரி கொழும்பு: ஆர். தேஷ்கர் (தலைவர்), எம். அபிஷேக் (உப தலைவர்), எஸ். மிதுஷேகன் (விக்கெட் காப்பாளர்), எஸ். ஹர்ஷ, கே. யஷுராஜன், ரி. சந்தோஷ், ஜீ. தூயவன், ரி. யாதவ், எஸ். சதுர்ஷன், எஸ். சர்விஷ், வி. யுவராஜ், எஸ். ஆகாஷ், ஆர். அகிலேஷ், வி. அபினேஷ், எஸ். சபேஷன், ஆர். தக்ஷேஸ். பயிற்றுநர்: எஸ். கோபிநாத், உதவி பயிற்றுநர்கள்: பி. ஷஷிதரன், சி. ஜேசன். https://www.virakesari.lk/article/240832
  22. பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் Mar 13, 2026 - 08:30 PM தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், இன்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும். பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து 'வெப்ப அதிர்ச்சி' (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும்" எனத் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmp0wgbg000b356pg8cd32a8
  23. போரை ஆதரித்த இரானியர்கள் இப்போது சந்தேகப்படும் விஷயம் என்ன? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் சோரூஷ் நெகாதார்தாரி இரான் நிபுணர், பிபிசி மானிட்டரிங் 13 மார்ச் 2026, 11:02 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "அவர்கள் ஆட்சியின் அனைத்து உயர்நிலை நபர்களையும் கொன்றுவிடுவார்கள், ஒரு சில நாட்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது இரண்டாவது வாரம் நடக்கிறது. ஒவ்வொரு இரவும் வெடிப்புச் சத்தங்களைக் கேட்டு நான் விழிக்கிறேன்," என்று தெஹ்ரானில் குடியிருப்பவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் ஆரம்பத்தில் இந்தப் போரை ஆதரித்தார். ஆனால் இப்போது அவரது ஏமாற்றம் அதிகரித்து வருகிறது. தங்கள் நாட்டின் தலைமையை எதிர்க்கும் சில இரானியர்களுக்கு, அரசியல் மாற்றத்தை துரிதப்படுத்தும் என்று அவர்கள் ஆரம்பத்தில் நம்பிய இந்தப் போர், இப்போது ஒரு வேதனையான மறுபரிசீலனைக்கு அவர்களைத் தள்ளுகிறது. மேலும் இந்த மோதலின் விலை, இறுதியில் கிடைக்கும் எந்தவொரு அரசியல் முடிவையும் விட அதிகமாக இருக்குமோ என்று அவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், மற்றவர்கள் இன்னும் வெளிநாட்டு ராணுவ அழுத்தமே இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதற்கான ஒரே யதார்த்தமான வழியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். பட மூலாதாரம்,AFP via Getty Images மக்கள் மனநிலை என்ன? பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள், இந்த நடவடிக்கையை பெரும்பாலும் இரான் நாட்டின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாகவே கட்டமைத்துள்ளனர். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட சிலர், இதன் இறுதி நோக்கம் ஆட்சி மாற்றமாக இருக்கலாம் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இந்த வெளிப்புற அழுத்தம் அந்த மாற்றத்தை கணிசமாக துரிதப்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையை இரான் மத குருமார்களின் ஆட்சி அமைப்பை விமர்சிப்பவர்கள் சிலருக்கு ஏற்படுத்தியது. இருப்பினும், நாட்டிற்குள் இருக்கும் சில இரானியர்களுடனான உரையாடல்கள், இப்போது நிலைமை மிகவும் சிக்கலானது என்று உணர்த்துகின்றன. பிப்ரவரி 28 முதல் அரசு மீண்டும் ஒரு முழுமையான இணைய முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதால், மோதல் தொடங்கியதிலிருந்து இரான் நாட்டிற்குள் இருப்பவர்களைத் தொடர்பு கொள்வது பத்திரிகையாளர்களுக்கு பெரிதும் கடினமாகியுள்ளது. தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் எதிர்க்காத, அரசை எதிர்க்கும் பல இரானியர்களிடம் பிபிசியால் பேச முடிந்தது. குறிப்பாக மற்றொரு எழுச்சி முயற்சியும் நாடு தழுவிய போராட்டங்களும், இஸ்லாமியக் குடியரசு வரலாற்றிலேயே மிகக் கொடூரமான போராட்ட ஒடுக்குமுறையாகக் கருதப்படும் நிகழ்வில் ஒடுக்கப்பட்ட பிறகு அவர்களின் எண்ணம் இவ்வாறு இருந்தது. பட மூலாதாரம்,Getty Images இரான் நாட்டில் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்துவது கைது அல்லது சிறைவாசத்திற்கு வழிவகுக்கும் என்பதால், அவர்களின் பாதுகாப்பிற்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தெஹ்ரானில் வசிக்கும் 31 வயது பொறியாளர் சமா, தாக்குதல்கள் பற்றிய செய்தி முதலில் வந்தபோது அவர் ஒரு கணம் நம்பிக்கையை உணர்ந்ததாகத் தெரிவித்தார். "பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்," என்று அவர் கூறினார். "ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்களை மௌனமாக்குகிறார்கள், எங்களைக் கொல்கிறார்கள்." "தாக்குதல்கள் தொடங்கியபோது, இந்த ஆட்சி தப்பிக்க முடியாது என்று நான் நினைத்தேன்." அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தபோது, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியதாகவும் சமா கூறினார். "அந்தப் பெரிய செய்தி உறுதியானபோது நான் மகிழ்ச்சியில் கூச்சலிட்டேன்," என்று அவர் கூறினார். ஆனால் மோதல் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், தன்னை சுற்றியுள்ள மற்றும் பலரின் மனநிலை மாறியுள்ளதாக அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்த இரான் நாட்டினர், இப்போது தங்கள் நாடு சீர்குலைந்து குழப்பத்தில் ஆழ்ந்துவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள். கவலை என்ன? "இப்போது சிலர் பீதியடைந்துள்ளனர், எனக்குத் தெரிந்தவர்கள் தங்கள் பகுதி அடுத்த இலக்காக இருக்குமோ என்று பயப்படுகின்றனர்," என்று சமா கூறினார். "என்னால் இப்போது தூங்க முடியவில்லை. வெடிப்புச் சத்தத்தைக் கேட்டோ அல்லது அவற்றைப் பற்றிய கனவுகள் கண்டோ நான் விழிக்கிறேன்." ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, நடந்து வரும் மோதலின் விளைவாக 6,00,000 முதல் ஒரு மில்லியன் வரையிலான இரானியக் குடும்பங்கள் இப்போது இரான் நாட்டிற்குள்ளேயே தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் முகமை தெரிவிக்கிறது. அதாவது இதில் 3.2 மில்லியன் மக்கள் வரை இருக்கலாம். போர் நீடிப்பதால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும், இது மனிதாபிமானத் தேவைகள் கவலைக்குரிய வகையில் அதிகரிக்கப்போவதை குறிக்கிறது என்றும் அது கூறியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images ஒரு வடக்கு நகரத்தைச் சேர்ந்த 28 வயது ஆசிரியை மினா, தான் இன்னும் ஆளும் மதகுருமார்களின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் போரின் நீண்டகால விளைவுகளைக் கண்டு அஞ்சுவதாகவும் கூறினார். "எனக்குத் தெரியும் இந்த ஆட்சிதான் இந்தப் போரை நமக்குக் கொண்டு வந்தது," என்று அவர் கூறினார். "ஆனால் நீங்கள் பிரமாண்டமான தீப்பிழம்புகளைப் பார்த்து, வெடிப்புகளைக் கேட்கும்போது, சிறு குழந்தைகள் பயந்து அழுவதைப் பார்க்கும்போது, நீங்கள் நேசித்து வாழும் நாட்டை இது அழித்துவிடுமா என்று நீங்கள் நினைக்கத் தொடங்குகிறீர்கள்." ஆட்சி கவிழ்ப்புக்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஒரு காலத்தில் பகிரங்கமாக விவாதித்த சில நண்பர்கள், போர் நீடிப்பதாலும் பல உயர் அதிகாரிகள் இன்னும் பதவியில் இருப்பதாலும் இப்போது எச்சரிக்கையுடன் இருப்பதாக மினா கூறினார். "நமக்குக் கிடைப்பது இடிபாடுகளும் அதே முல்லாக்களும் அதே அரசாங்கமும் மட்டுமென்றால் என்ன செய்வது? அது இன்னும் ஒடுக்குமுறை நிறைந்ததாகவும் இன்னும் சவாலானதாகவும் இருந்தால் என்ன செய்வது?" மற்றவர்களுக்கு அரசாங்கம் வீழுமா என்பது மட்டுமே கவலையாக இல்லை, அது வீழ்ந்தால் எத்தகைய சூழல் ஏற்படும், குறிப்பாக கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைகளில் என்ன நடக்கும் என்பதும் கவலையாக உள்ளது. பட மூலாதாரம்,Getty Images 'ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும்' ஜனவரி மாதப் போராட்டங்களின் போது காயமடைந்த 31 வயது கடைக்காரர் அலி, ஸ்திரமின்மை அல்லது உள்நாட்டு மோதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து தான் கவலைப்படுவதாகத் தெரிவித்தார். "ஆட்சி மாற்றம் என்பது எளிமையான ஒரு மாற்றம் என்பதைப் போல் அனைவரும் பேசுகிறார்கள்," என்று அவர் கூறினார். "ஆனால் யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்? ஏதோ ஒரு வகையில் அவர்கள் ஆட்சியை வீழ்த்தினாலும், நாடு குழப்பத்தில் வீழ்வதை எது தடுக்கும்?" இந்த நிச்சயமற்ற தன்மை, அரசைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் மீது கூட பெரும் சுமையாக உள்ளது என்று அவர் கூறினார். "எனக்கு சுதந்திரம் வேண்டும்," என்று அவர் கூறினார். "ஆனால் இது முடியும் போது ஒரு நாடு மிஞ்சியிருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்." போராட்டம் மற்றும் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் விஷயத்தில், அதிகாரிகளை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக போர் அவர்களைப் பலப்படுத்தியுள்ளது என்றும் சிலர் வாதிட்டனர். 27 வயது கிராஃபிக் டிசைனர் பாத்திமா, வெளிநாட்டுத் தாக்குதல்கள் பெரும்பாலும் "எதிரி" பற்றிய அரசின் நீண்டகால கதையை உறுதிப்படுத்துகின்றன என்று கூறினார். "அவர்கள் இதை விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார். "பார்த்தீர்களா? இதெல்லாம் எதிரியின் திட்டம் என்று நாங்கள் சொன்னோமே என்று இப்போது அவர்கள் சொல்கிறார்கள். விமர்சனம் என்பது தேசத் துரோகமாகிவிட்டது, அதை அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்." போர் தொடங்கியதிலிருந்து தெருக்களில் துணை ராணுவ படைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். "மக்கள் குரல் கொடுப்பது மென்மேலும் கடினமாகி வருகிறது" பட மூலாதாரம்,Getty Images 'வேறு வழியில்லை' இருப்பினும், உள்நாட்டு மாற்றத்தை ஏற்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை இத்தகைய கவலைகள் கவனிக்கத் தவறிவிடுகின்றன என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். பல தசாப்த கால ஒடுக்குமுறைகள் வேறு வழியில்லாமல் செய்துவிட்டதாகக் கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை இவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். மத்திய நகரமான இஸ்ஃபஹானைச் சேர்ந்த 40 வயது பொறியாளர் ரேசா, வெளிப்புற அழுத்தம் அவசியம் என்பது மட்டுமல்ல, அது மட்டுமே சாத்தியமான ஒரே வழி என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். "ஏதோ நாங்கள் முயற்சி செய்யவில்லை என்பது போல் மாற்றம் உள்ளிருந்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள்," என்று அவர் கூறினார். "கடவுள் ஆணையாக சொல்லுங்கள், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பிணப் பைகளின் குவியல்களை இந்த மக்கள் மறந்துவிட்டார்களா? அது இரண்டு மாதங்களுக்கு முன்புதானே நடந்தது?" அரசாங்கத்தின் ராணுவ மற்றும் பாதுகாப்பு இயந்திரத்தை பலவீனப்படுத்துவது அதிகாரத்தின் சமநிலையை மாற்றக்கூடும் என்று ரேசா நம்புகிறார். "இந்த அமைப்பு நாளை கவிழ்ந்துவிடாவிட்டாலும், அதன் ஆற்றலைக் குறைப்பது சமன்பாட்டை மாற்றும்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,Reuters டிரம்பின் வாக்குறுதி குறித்து கேள்வி தற்போதைய அமைப்பு அதிகாரத்தில் நீடிப்பதற்கு கொடுக்கும் விலை, போரிற்கான விலையை விட இறுதியில் அதிகமாக இருக்கும் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். தெற்கு மாகாணமான குசெஸ்தானைச் சேர்ந்த மென்பொருள் உருவாக்குநர் மிலாட், இந்த அரசு தப்பிப் பிழைத்தால் அதன் கொள்கைகள் இன்னும் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும் என்று தான் அஞ்சுவதாகத் தெரிவித்தார். "இவர்கள் பதவியில் இருந்தால், அமைதி நிலவும் அல்லது இந்தப் போரில் நாம் காண்பதை விடக் குறைவான அழிவுதான் ஏற்படும் என்று இந்த மக்கள் நினைக்கிறார்களா?" என்று அவர் கேட்டார். "'அமைதி' காலத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பொருளாதாரம் இல்லை, தண்ணீர் இல்லை, பெண்களுக்கு உரிமைகள் இல்லை, எதிர்காலம் இல்லை." "எங்கள் நாட்டிற்கு இதைச் செய்தவர்கள் என்னுடன் சேர்ந்து இறப்பதாய் இருந்தால், இந்தத் தாக்குதல்களில் நான் சாகத் தயார்." ராணுவ நடவடிக்கையை இன்னும் ஆதரிப்பவர்களில் சிலர் டிரம்பின் வாக்குறுதிகள் குறித்துச் கேள்வி எழுப்புகின்றனர். போர் தொடங்கிய பிறகு இரானியர்களுக்கு வழங்கிய செய்தியில், "நாங்கள் முடித்த பிறகு, உங்கள் அரசை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுடையதாக இருக்கும். இது அநேகமாக பல தலைமுறைகளுக்கு உங்களுக்குக் கிடைக்கும் ஒரே வாய்ப்பாக இருக்கலாம்" என்று டிரம்ப் கூறினார். ஜனவரி மாதம் நடந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மற்றொரு இளைஞரான சயீத், தான் இப்போது ஆழ்ந்த சந்தேகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். "இந்த ஆட்சிக்கு எதிராகப் போரைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறினார். "ஆனால் இந்த டிரம்ப் உண்மையிலேயே இன்னும் ஆட்சி மாற்றத்தைத்தான் தேடுகிறாரா? வேலையை முடிப்பதில் அவர் தீவிரமாக இருக்கிறாரா?" "எனக்கு இப்போது ஒன்றும் தெரியவில்லை. அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24z074k23o
  24. உங்கள் பேரனை நாங்களும் வாழ்த்துகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  25. ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்; யாழ்ப்பாணம் கல்லூரி 176 - 10, சென் பட்றிக்ஸ் 40 - 0 Published By: Vishnu 12 Mar, 2026 | 08:22 PM (நெவில் அன்தனி) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான சென். பட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் மாபெரும் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் பட்றிக்ஸ் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. எஸ். நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 24 ஓட்டங்களுடனும் சிவநாதன் ஷெஹான் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். முன்னதாக யாழ்ப்பாணம் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தபோதிலும் முதல் 4 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்ததால் அவ்வணியினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது. ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (41), சுபீசன் தக்சிகன் (7) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர். ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் யாழ்ப்பாணம் கல்லூரி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. (77 - 4 விக்.) இந்நிலையில், ஹமிஷ் ஹார்மிஷன், உதயராஜா கென்றிக்சன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. ஹார்மிஷன் 5 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் கென்றிக்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். அனுஷாந்தன் ஹார்மிஷன் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களையும் ஜெபின்சன் கெமிஷன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். https://www.virakesari.lk/article/240826
  26. உலகின் மிகப்பெரும் இராணுவ சக்தி, மதியாகலிகாகின் மிகப்ப்பெறும் இராணுவ சக்தியால் முடியாததை? வேறு எவரால் முடியும்? அரபு நாடுகளால் மட்டுமே நிறுத்த முடியும். அந்தந்த நாடுகளில் உள்ள அமெரிக்கா, இன்றேல் படை மற்றும் உளவு நிலைகளை அகற்றுவதன் மூலம். கெதியாக, கு,,,, வ,, வாயிலும் , மண்டையில் அடுத்தஅடி விழ முதல் ...
  27. ஈரானிய யுத்தத்தில் வெற்றி பெறுவதாக ட்ரம்ப் உரிமை கோரல்: தெளிவான 'வெளியேறும் திட்டம்' இல்லையென சர்வதேச நாடுகள் கவலை! அமெரிக்கா - ஈரானிய யுத்தம் ஆரம்பமாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், கள யதார்த்தம் மற்றும் யுத்தத்தின் இறுதி இலக்கு குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை மற்றும் உள்நாட்டில் சரிந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றிற்கு மத்தியில், இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தெளிவான 'வெளியேறும் திட்டம்' (Exit Strategy) வெள்ளை மாளிகையிடம் இல்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேசக் கூட்டாளிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். மாறிவரும் யுத்த இலக்குகளும் காலக்கெடுவும் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது "ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்" என முழங்கிய அதிபர் ட்ரம்ப், தற்போது ஒரு புதிய ஆட்சி மாற்றத்தை (Regime Change) ஏற்றுக்கொள்வது போன்ற மென்மையான தொனியில் பேசத் தொடங்கியுள்ளார். யுத்தத்தின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "இது யுத்தத்தின் ஆரம்பமா, நடுப்பகுதியா அல்லது முடிவா என்பதை அதிபர் ட்ரம்ப்பே தீர்மானிப்பார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தெளிவற்ற அறிக்கைகள், 12 நாட்களைக் கடந்து நீடித்து வரும் இந்த மோதல் ஒரு முடிவற்ற திசையை நோக்கிச் செல்கின்றதோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார முடக்கம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கப் படைகள் ஈரானியக் கடற்படையை முற்றுமுழுதாக அழித்துள்ளதாகக் கூறினாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியான ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சுகள் நிறுத்தப்படாத வரை, ஒரு லீற்றர் எரிபொருளைக் கூட குறித்த கடல் வழியாகச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை என ஈரானியப் புரட்சிகரக் காவல் படை சூளுரைத்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், "ட்ரம்பின் வெற்று மிரட்டல்களுக்கு ஈரானிய மக்கள் அஞ்சப்போவதில்லை; எங்களை அழிக்க நினைப்பவர்கள் தாமே அழிந்து போவார்கள்" எனப் பதிலடி கொடுத்துள்ளார். உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளின் அதிருப்தி. யுத்தத்தைத் தொடங்கியதன் மூலம் அமெரிக்கா தற்போது பாதுகாப்பு அற்ற நாடாக மாறியுள்ளதாக 50 சதவீதமான அமெரிக்க மக்கள் கருத்துக்கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். மேலும், ட்ரம்பின் முடிவுகளை 60 சதவீதமான மக்கள் நம்பத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், யேர்மனிய அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், "இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டுத் திட்டம் ஏதும் அமெரிக்காவிடம் இல்லை என்பது கவலையளிக்கின்றது" எனத் தெரிவித்துள்ளார். பாடசாலைத் தாக்குதலும் ஏவுகணை சர்ச்சையும் யுத்தத்தின் முதல் நாளில் தெற்கு ஈரானில் உள்ள பெண் பிள்ளைகள் பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165 பேர் உயிரிழந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலை ஈரான் மீது சுமத்த அதிபர் ட்ரம்ப் முயற்சித்த போதும், அமெரிக்காவின் 'டோமாஹாக்' (Tomahawk) ஏவுகணையே அங்கு வீழ்ந்து வெடித்ததாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிடம் டோமாஹாக் ஏவுகணைகள் இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தவறான தகவலை வெளியிட்டமை குறித்து அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "உண்மை என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுவது ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு அழகல்ல" என எதிர்க்கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர். TubeTamil Media

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.