Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. அப்பாவோட ஏதோ கோவத்தில என்னை ஓடவிட்டு அவமானப்படுத்தியதாக தற்போது உணர்கிறேன். ஆனால் பத்து வயதில் அது புரியவில்லை அண்ணை. மறுக்க மறுக்க ஓடவிட்டது தான் எனக்கு வருத்தம். அப்போது நண்பர்களுடன் விளையாடுகையில் என்னால் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஓடமுடிவதில்லை.
  3. Today
  4. டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! written by admin January 17, 2026 வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘அமைதிக்கான நோபல் பரிசை’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! இது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 🧐" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> உண்மையில் நோபல் பரிசை இப்படி கைமாற்ற முடியுமா? மரியாவுக்கு ஏன் நோபல் பரிசு❓" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> காசா போன்ற போர்ச் சூழல் இல்லாத ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதற்காக இந்த அங்கீகாரம்? பல்வேறு தரப்பினரும் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். டிரம்ப் மீது தனக்கிருக்கும் விசுவாசத்தைக் காட்ட மரியா செய்த இந்தச் செயல் ஒரு “ட்விஸ்ட்” ஆக மாறியுள்ளது. 📜" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> ஆல்ஃபிரட் நோபல்: டைனமைட்டைக் கண்டுபிடித்த இவர், தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக் கண்டு வருந்தி, மனிதகுல முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்குத் தனது சொத்தின் பெரும்பகுதியை பரிசாக அறிவித்தார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம். இந்த துறைகளில் சாதனை பட்த்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 18 காரட் தங்கப் பதக்கம், தனித்துவமான நோபல் பட்டயம் மற்றும் சுமார் 11 லட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 🚫" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது குறித்து நோபல் கமிட்டி கொடுத்த “அதிர்ச்சி” விளக்கம்! மரியா தனது பதக்கத்தை டிரம்பிடம் ஜனவரி 15-ல் ஒப்படைத்தார். ஆனால், இது குறித்து நோபல் கமிட்டி ஜனவரி 16-ல் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது: “நோபல் பரிசும், அதைப் பெற்றவரும் பிரிக்க முடியாதவர்கள். மரியா தனது தங்கப் பதக்கத்தை (பொருளை) யாருக்கு வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், ‘நோபல் வெற்றியாளர்’ என்கிற பெருமை மரியாவுக்கு மட்டுமே சேரும்; அது டிரம்புக்குப் போகாது!” அதாவது, நோபல் பரிசை ரத்து செய்யவோ, பெயரை மாற்றவோ சட்டப்படி இடமில்லை என கமிட்டி கறாராகக் கூறிவிட்டது. டிரம்ப் நீண்ட காலமாக இந்த விருதிற்காகக் காத்திருக்கும் நிலையில், மரியாவின் இந்த முயற்சி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், கமிட்டியின் விளக்கம் ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. 😊" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இது போன்ற சுவாரஸ்யமான உலகச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்! #DonaldTrump #MariaCorinaMachado #NobelPeacePrize #InternationalNews #Venezuela #PoliticalTwist #NobelCommittee #TrendingNews #TamilNews #WorldPolitics இது பற்றிய உங்கள் கருத்து என்ன? டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள்! 👇" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> டிரம்பும் அவரது வம்பும் - கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! - Global Tamil News
  5. 20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது! இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே ஒரு சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சோதனை செய்து ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இருபது நிமிடங்களில் சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கி, உடனடியாக அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து வாங்குபவர்களுக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் இந்த மோசடியில் அரசு ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிறரை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த அறுபத்திரண்டு வயதுடையவர். இதேவேளை, சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், மேலும் சம்பவம் தொடர்பாக மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460303
  6. பின்பக்கம் பார்த்தால் யாரும் ஏறமாட்டார்கள்.
  7. அது மட்டும் அல்ல யாழில் நடந்த அத்தனை போட்டியின் விருதும் உங்களுக்கே😂. பிகு நல்லது செய்வதாக நினைத்து விளக்கம் இல்லாமல் நாம் அனைவரும் விசர் வேலையள் செய்வதுண்டு. உங்கள் ஆசிரியையும் அப்படித்தான் செய்தாரோ?
  8. 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி பட மூலாதாரம்,BBC Asian Network 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். பாலிவுட் திரையுலகம் தமிழ் சமூகத்தை எப்படிப் பார்க்கிறது, திரையுலகில் பிளவுக் கருத்துகள் அதிகரித்து வருகின்றனவா, பாலிவுட் திரையுலகில் அவரது அனுபவங்கள் எனப் பல விஷயங்களை அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசி ஆசிய நெட்வொர்க் எடுத்த நேர்காணலில் ஹரூண் ரஷீத்திடம் பேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்னென்ன? இங்கு விரிவாகக் காண்போம். 'நானும் மனிதன்தானே!' ஹரூண் ரஷீத்: உங்களுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு இதே பர்மிங்ஹாம் சிம்ஃபனி அரங்கத்திற்குள் நுழைந்த ஏ.ஆர்.ரஹ்மானை நினைவுள்ளதா? அப்போது இருந்ததில் இருந்து உங்களில் இப்போது நடந்துள்ள மாற்றங்கள் என்ன? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் மிகவும் பயந்து போயிருந்தேன். நான் சென்னையில் இருந்து வந்தவன். அங்கெல்லாம் ஆர்கெஸ்ட்ரா வேறுவிதமாக இருக்கும். இங்கு நடந்த விதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. ஹரூண் ரஷீத்: நீங்கள் பயந்தீர்கள் என்பதைக் கற்பனை செய்வதே கடினமாக உள்ளது. ஆஸ்கர் உள்பட எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையுமே வென்றுவிட்ட நீங்கள் ஓர் அரங்கத்திற்குள் நுழையும்போது பயந்ததாகச் சொல்வதைக் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை... ஏ.ஆர்.ரஹ்மான்: நானும் மனிதன்தானே! நம்மைத் தயார்படுத்திக் கொள்வதுதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோமோ அவ்வளவு தூரம் நிலைமையை திறம்படக் கையாள்வோம். இருப்பினும் சில நேரங்களில் நாம் இதுவரை அறிந்திடாத ஓரிடத்திற்குள் நுழையும்போது பயம் வரவே செய்யும். ஆனால் அதையும் மீறி வாழ்க்கை செல்லத்தானே வேண்டும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் 'ரோஜா படத்துடன் திரைத்துறையை விட்டு விலக நினைத்தேன்' ஹரூண் ரஷீத்: ரோஜா திரைப்படத்தின் இசை ஆல்பம் வெளியாவதற்கு முந்தைய நாள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வெளியான பிறகு நடந்த மாற்றம் என்ன? ரஹ்மான்: ரோஜாவுக்கு இசையமைக்கும் போது மிகவும் ஏமாற்றமாக உணர்ந்தேன். இதை செய்து முடித்துவிட்டு, திரைத்துறையை விட்டு விலகி, என் சொந்த ஆல்பங்களை தயாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால், நல்வாய்ப்பாக நான் நினைத்துக் கொண்டு இருந்ததற்கு மாறாக அனைத்தும் மாறின. என் ஸ்டூடியோவில் இசையைப் போட்டுப் பார்க்கும்போது, அதிகபட்ச ஸ்பீக்கர்களில் நன்றாக இருக்கும். அதுவே திரைப்படத்தில் மோனோவில் கேட்கையில் அவ்வளவுதானா என்றிருக்கும். அதனால் நான் மீண்டும் படங்களுக்கு இசையமைக்கவே போவதில்லை என முடிவு செய்வேன். இசையின் தரம் குறைந்துவிடுவதாகக் கருதினேன். நான் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், எதுவும் மாறப் போவதில்லை என்ற எதிர்மறை சிந்தனை என்னைப் பீடித்திருந்தது. பின்னர் அனைத்தும் மாறியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் டால்பி, அட்மோஸ், டிஜிட்டல் எனப் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிவேகமாக நடந்தன. அதன்பிறகு, சரி இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அடுத்தடுத்து பணியாற்றிக் கொண்டே இருந்தேன். பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து, சரி திரைத்துறையை விட்டு விலக வேண்டுமென்ற முடிவைக் கைவிட்டுவிடுவோம் என்று முடிவு செய்தேன். 'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' ரஹ்மான்: உண்மையில், ரோஜா, பாம்பே, தில் சே (உயிரே) ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த நேரத்தில் நான் இந்தி திரையுலகில் ஒரு வெளியாள் போலத்தான் உணர்ந்து கொண்டிருந்தேன். தால் திரைப்படம்தான் அதை மாற்றியது. ஹரூண் ரஷீத்: 1999இல் தால் வெளியாகும் வரை நீங்கள் பாலிவுட்டில் ஒரு வெளியாள் போலவே உணர்ந்ததாகக் கூறினீர்கள். ரோஜா 1992இல் வெளியானது என்றால் அடுத்த ஏழெட்டு ஆண்டுகளுக்கு, பாம்பே, தில் சே, ரங்கீலா, தால் எனப் பல படங்களுக்கு நாட்டிலேயே மிகவும் அற்புதமான இசையை நீங்கள் அளித்துக் கொண்டிருந்தீர்கள். அப்படியிருந்தும் உங்களை ஒரு வெளியாள் என்று விவரிக்கிறீர்கள் என்றால் நீங்கள் அவர்களில் ஒருவராக உணர்ந்ததே இல்லையா? ரஹ்மான்: அதற்குக் காரணம் நான் இந்தி மொழி பேசியதே இல்லை என்பதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக ஒரு தமிழருக்கு இந்தி கற்றுக்கொள்வது மிகவும் சிரமமான காரியம். ஏனெனில், எங்களுக்கு தமிழ்ப் பற்று அபரிமிதமாக உள்ளது. ஆனால், 'எனக்கு உன் இசை மிகவும் பிடித்துள்ளது. நீ இங்கு நீண்டநாள் நீடிக்க வேண்டுமென விரும்புகிறேன். அதற்கு நீ இந்தி மொழியைக் கற்க வேண்டும்' என்று சுபாஷ் காய் கூறினார். நானும் சரியெனக் கூறி, ஒரு படி மேலே சென்று உருது மொழியைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தேன். ஏனெனில், 60கள், 70களின் இந்தி இசைக்கு தாயாக இருப்பது உருதுதான். பின்னர் அதனுடன் ஒத்திருக்கக்கூடிய அரபி மொழியை படிக்கத் தொடங்கினேன். அதிலிருந்து பஞ்சாபி மொழி மீது ஆர்வம் கொண்டேன். உயிரே படத்தில் கதாபாத்திரத்தையே மாற்றிய ஒரு பாடல் ஹரூண் ரஷீத்: சமீபத்தில் அந்தந்த மொழிக்குரிய கலாசார பண்புகளுக்கு நீங்கள் உண்மையாக இருப்பதை மக்கள் எவ்வளவு தூரம் விரும்புகிறார்கள் என்பது குறித்த வீடியோக்களை நான் பார்த்தேன். குறிப்பாக, உயிரே திரைப்படத்தில் வரும் நெஞ்சினிலே பாடலில் மலையாள கலாசாரம் கலந்திருக்கும். அது தற்போது அதிகம் விவாதத்திற்கு உள்ளாகிறது. சமீபத்தில் வெளியான பரம் சுந்தரி திரைப்படத்தில் மலையாள சமூகம் காட்டப்பட்ட விதம் விமர்சிக்கப்படுகிறது. 1998இல் ஏ.ஆர்.ரஹ்மானால் கலாசாரத்தை துல்லியமாகக் காட்ட முடிந்தபோது, இப்போது ஏன் முடியவில்லை என்று கேட்கப்படுகிறது. ரஹ்மான்: மக்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்களால் முன்பைவிட இப்போது சிறப்பாகத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. ஹரூண் ரஷீத்: இருப்பினும் 1998இல் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் நியாயம் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது? ரஹ்மான்: அப்போது என்ன நடந்தது என்றால், மணிரத்னம் இந்த டியூனை எடுத்துக்கொண்டு, எனக்கு கல்யாண கனவு போன்ற ஒன்று வேண்டுமென்றார். சரி, எந்த மரபுப்படி அது இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். அவர் என்னையே தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான் மலையாள முறையைத் தேர்வு செய்தேன். அவர் சரியெனக் கூறி, இரண்டாவது கதாநாயகியை ஒரு மலையாளியாகக் கதையில் மாற்றிவிட்டார். ஹரூண் ரஷீத்: அப்படியெனில், ப்ரீத்தி ஜிந்தாவின் பாத்திரம் மலையாளி கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதே 'நெஞ்சினிலே' பாடலுக்காகத்தானா? ரஹ்மான்: ஆமாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அந்த டியூன் மிகவும் சுவாரஸ்யமானது எனக் கருதினார். இன்றும்கூட அந்தப் பாடலை, மலையாளம் புரியவில்லை என்றாலும், பலர் பாடுகிறார்கள். அதுமட்டுமின்றி நான் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அதுவரைக்கும் எந்தவொரு தென்னிந்திய இசையமைப்பாளரும் எல்லைகளைக் கடந்து இந்தி திரையுலகுக்குச் சென்று, அங்கு நிலைத்தது இல்லை. அது முற்றிலுமாகப் புதிய கலாசாரம். இளையராஜா இரண்டு படங்களைச் செய்திருந்தார். அப்படியிருந்த சூழலில் எல்லையைக் கடந்து சென்றது, பின்னர் அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்பது ஒரு மிகப்பெரிய அனுபவம். இன்னமும் அது நிலைத்திருக்கிறது. அது மிகவும் அற்புதமானது, அதை கௌரவமாகக் கருதுகிறேன். காணொளிக் குறிப்பு தமிழ் சமூகத்திற்கு எதிராக பாலிவுட்டில் பாகுபாடு நிலவுகிறதா? ஹரூண் ரஷீத்: பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? ஏ.ஆர்.ரஹ்மான்: நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. 'அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது' என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, 'ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்' என்று நினைத்துக்கொள்வேன். ஹரூண் ரஷீத்: ஆனால், அதை அப்படி எடுத்துக்கொள்ள உங்களுக்கு மிகவும் நேர்மறையான மனநிலை இருக்க வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான்: ஏனெனில், வேலையைத் தேடி நான் செல்வதில்லை. வேலை என்னைத் தேடி வரவேண்டுமென விரும்புகிறேன். நான் செய்யும் வேலை, அதிலுள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம் எனக்கு எல்லாம் கிடைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதைத் தேடிச் செல்வதில்லை. நான் எதையாவது தேடிச் செல்லும்போது அது துரதிர்ஷ்டமாக அமைவதாக உணர்கிறேன். நான் எதற்குத் தகுதியானவனோ அதைக் கடவுளிடம் இருந்து பெறுகிறேன். பட மூலாதாரம்,BBC Asian Network சாவா திரைப்படம் பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டதா? ஹரூண் ரஷீத்: நீங்கள் நாளுக்கு நாள் மென்மேலும் பிளவுகளை எதிர்கொள்ளும் சூழலில் பணியாற்றுகிறீர்கள்... ரஹ்மான்: அதனால்தான், கடவுள் நம்மைப் போன்றவர்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன், அதனால் நாம் சொற்களாலும், செயல்களாலும், கலையாலும் தீமையை நன்மையின் மூலம் மாற்ற முடியும். ஹரூண் ரஷீத்: ஆனால் இதன் காரணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளதா? ஏனெனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒரு படத்திற்கு உங்கள் இசையை வழங்கும்போது, அந்தப் படத்திற்கு எந்த எதிர்மறைத் தாக்கமும் இல்லை அல்லது எந்தத் தீய நோக்கமும் இல்லை என்பதை ஓரளவுக்கு உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று ஒரு படத்தின் நோக்கம் என்ன என்பதை அறிவது மிகவும் கடினமாக உள்ளது. ரஹ்மான்: அது மிகவும் உண்மை. மேலும் சில படங்கள் தவறான நோக்கத்துடனேயே உருவாக்கப்படுகின்றன. அந்தப் படங்களைத் தவிர்க்க முயல்கிறேன். ஹரூண் ரஷீத்: ஆனால், 'சாவா' படத்தின் இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம்? ஏ.ஆர். ரஹ்மான்: ஆமாம். ஹரூண் ரஷீத்: நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். உங்களிடம் நான் மிகவும் நேர்மையாகச் சொல்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான்: அது பிளவுபடுத்தும் படம்தான். அது பிளவுபடுத்தும் தன்மையை வைத்துப் பணம் சம்பாதித்ததாக நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மையக்கருத்தாக வீரம் இருந்ததாகக் கருதுகிறேன். ஏனென்றால், இயக்குநரிடம் நான், 'இந்தப் படத்திற்கு நான் ஏன் தேவை?' என்று கேட்டபோது, 'இந்தப் படத்திற்கு நீங்கள் மட்டும்தான் தேவை' என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் மேலும் அதன் முடிவும் ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் நிச்சயமாக, மக்கள் அதைவிட புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்கள் திரைப்படங்களால் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு உள்மனசாட்சி என்ற ஒன்று உள்ளது. எது உண்மை, எது திரிக்கப்பட்டது என்பதை அதனால் அறிய முடியும். ஹரூண் ரஷீத்: வரலாற்றுத் திரைப்படங்கள் உருவாக்கப்படுவது பிரச்னையல்ல. அவை உருவாக்கப்படுவது உண்மையில் ஓர் அற்புதமான விஷயம். அது வரலாற்றைக் கொண்டாடுகிறது. அது கதாநாயகர்களைக் கொண்டாடுகிறது. அந்தப் படங்களுக்குள் இருக்கும் சில குறிப்பிட்ட காட்சிகள்தான் சிக்கலானவையாக இருக்கக்கூடும், இல்லையா? ஏ.ஆர். ரஹ்மான்: சாவா மிகவும் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்று. அது ஒவ்வொரு மராட்டியரின் ரத்தம் போன்றது. படம் முடிந்ததும், பெண்கள் அந்த அழகான கவிதைகளைச் சொல்வதைப் பார்க்கிறோம். அதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் படத்திற்கு இசையமைத்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஹரூண் ரஷீத்: இது மாதிரியான படங்களில் எனக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால், திரையில் ஒவ்வொரு முறை ஒரு எதிர்மறை விஷயம் நடக்கும்போதும், கதாபாத்திரம் 'சுப்ஹானல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்' போன்றவை வருகின்றன. இந்தப் படத்தில் மட்டும் சொல்லவில்லை; பிற படங்களிலும் இப்படியெல்லாம் காட்டப்படுகின்றன. ரஹ்மான்: ஆம், ஆனால் எனக்கு மக்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. இத்தகைய தவறான தகவல்களால் ஈர்க்கப்படுவதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை. எனக்கு மனிதத்தின் மீது அபார நம்பிக்கை உள்ளது. ஹரூண் ரஷீத்: ஆனால், இத்தகைய விஷயங்கள் நீங்கள் மேலும் கவனமாக இருக்க வேண்டியிருப்பதைக் காட்டுகிறதா? ரஹ்மான்: ஆம். அதோடு மக்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன். மக்களுக்கு இதயம் இருக்கிறது, அன்பு இருக்கிறது, இரக்கம் இருக்கிறது. தினசரி காலையில் எழுந்து 'இன்று எத்தனை பேரை நான் வெறுக்கப் போகிறேன்' என்று கருதுவோமா? இல்லை. அது உங்கள் இதயத்தில் இருக்கும் அமிலத்தைப் போன்றது. அது இதயத்தையே அழித்துவிடும். 'பிராமணப் பள்ளியில் படித்தேன்' ஹரூண் ரஷீத்: சமீபத்தில் நீங்கள் ராமாயணம் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மத ரீதியான நூல் ஒன்று திரைப்படமாக வடிவம் எடுக்கிறது. ஆனால் நீங்கள் நன்கு அறியப்பட்ட ஒரு முஸ்லிம். அப்படியிருக்க இந்தப் படத்தில் உங்கள் பங்கு இருப்பதை விரும்பாதவர்களும் இருக்கலாம். இது ஏதாவது வகையில் உங்களை பாதித்துள்ளதா? ரஹ்மான்: நான் படித்தது ஒரு பிராமணப் பள்ளியில். அங்கு ஒவ்வோர் ஆண்டும் ராமாயணம், மகாபாரதம் இருக்கும். எனவே எனக்கு முழு கதையும் நன்கு தெரியும். மேலும், அந்தக் கதை நற்பண்பு, உயர்ந்த லட்சியங்கள் போன்ற விஷயங்கள் பற்றியது. மக்கள் பல விதமாக வாதிடலாம், ஆனால் அந்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் நான் மதிக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டிய எந்தவொரு நல்ல விஷயத்தையும் விட்டுவிடக் கூடாது என்கிறார் நபிகளார். அறிவு என்பது மிகவும் மதிப்புமிக்க ஒன்று. அதை நீங்கள் எல்லாவற்றில் இருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், ஒரு யாசகனிடம் இருந்து அரசன் வரை, எதிர்மறை செயல்களில் இருந்து நேர்மறை செயல்கள் வரை அனைத்திலும் கற்றுக்கொள்ளலாம். அறிவு என்பது எல்லா இடங்களிலும் கற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்று. அதனால், 'நான் எதையும் கற்றுக்கொள்ள விரும்பவில்லை' என்றோ, 'இங்கிருந்து நான் நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை' என்றோ ஒருவரால் ஒதுக்கிவிட முடியாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vxdzkmpk2o
  9. தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் நாகதீப விகாராதிபதி ஜனாதிபதியிடம் கூறிய விடயம் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுப்புக்கள் சாத்தியம் என்பதால் காணிகளை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியுள்ளதாக நாக தீப விகாராதிபதி தெரிவித்துள்ளார். நயினாதீவுக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நாக தீப விகாராதிபதியை சந்தித்து, கலந்துரையாடியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை பிரச்சினை தையிட்டி விகாரை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த விகாரையை சுற்றியுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை அவர்களிடமே கையளிக்குமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும், காணி கையளிப்புக்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே சாத்தியமாகும் எனவே உங்கள் காலத்திலேயே காணிகளை கையளியுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன் என தெரிவித்தார். https://tamilwin.com/article/naga-deepa-vicar-meet-president-1768637751
  10. போதைப்பொருள் என்ற அரக்கனுடன் சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 17 Jan, 2026 | 03:43 PM யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும். இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ''முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியச் செயற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'அகன்று செல்” என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு, போதைப்பொருளுக்கு எதிராக நாட்டு மக்களை அணிதிரட்டும் செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கொழும்பில் இதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கை இம்பெற்றது. 2ஆவது நிகழ்வு அம்பாந்தோட்டையில் நடைபெற்றது. மூன்றாவது மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகின்றது. போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கிராமிய மட்டத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டுவருகின்றனர். போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது இளைஞர்களை மீட்க வேண்டும். இளைஞர்கள் போதைப் பொருள் பிசாசிடம் சிக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்பும்போது யாழின் மரபுரிமை, கலாசாரம், கௌரவம், அடையாளம் என்பவற்றை பாதுகாத்து அதனை செய்யுமாறு ஜனாதிபதி எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதேவேளை, கொழும்பில் “கோட்சூட்” அணிந்து, யாழில் வேட்டியுடன் அரசியல் பேசும் நபர், யாழில் வரவுள்ள சர்வதேச மைதானத்துக்கு எதிராக வழக்கு போடப்போகின்றாராம். எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றன நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களாக இவர்கள் மாறியுள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது. தமிழரசுக் கட்சியினர் உட்பட எல்லோருக்கும் நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் எவரும் வரவில்லை. நிகழ்வுக்கு போனால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி அண்ணனுக்கு கோட்சூட் நபர் கூறினாராம். இப்படிதான் சாபக்கேடான அரசியல் யாழ்ப்பாணத்தில் உள்ளது. இந்நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/236273
  11. சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படும் - கடற்றொழில் சங்க பிரதிநிதி சிறைப்பிடிக்கப்பட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்களின் விசைப்படகு விடுவிக்கப்படுமென ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழில் சங்க பிரதிநிதி எமரால்ட் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்து இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர். குறிப்பாக தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் படகுடன் கடற்றொழிலாளர்களை மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்ட கடற்றொழிலாளர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டு படகுகள் நான்கு நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கடற்றொழில் விசைப்படகுகள் கடலில்10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பாதிக்கப்படுகின்றது. காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கரையோரம் மீன்பிடியில் ஈடிபடுவதுடன், இலங்கை கடற்றொழிலார்களின் உடமைகளை சேதப்படுத்தால் கடற்றொழிலார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக கடற்றொழிலார்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காரைக்கால் பகுதி கடற்றொழிலார்கள் பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது என கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட கடற்றொழிலார்கள் தங்கச்சிமட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி மீன்பிடிக்கும் காரைக்கால் மீன்பிடி விசைப்படகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காரைக்கால் கடற்றொழில் விசைப்படகையும், அதிலிருந்த 14 கடற்றொழிலாளர்களையும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு சிறை பிடித்து அழைத்து வந்த கடற்றொழிலாளர்கள் 14 பேரையும் வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததுடன், மீன்பிடி விசைப்படகை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ராமநாதபுரம் மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவகின்றனர். தனுஷ்கோடி கடற்பரப்புக்குள் காரைக்கால் பகுதி கடற்றொழிலாளர்கள் வருவதை நிறுத்திக் கொள்வதுடன் கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபடக் கூடாது என முடிவு செய்த பின் படகு ஒப்படைக்கப்படும் என கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் காரைக்கால் மீன் பிடிப்படகை கடற்றொழிலாளர்களுடன் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் சிறைபிடித்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/boat-captured-karaikal-fishermen-will-be-released-1768581787
  12. செயற்திட்டம் இல்லாமல் வெறுமனே கோரிக்கைகளை முன்வைக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல் பாரம்பரியம் (நூல் விமர்சனத்தின் வழியாக ஒரு அரசியல் பார்வை) January 14, 2026 — ஷோபாசக்தி — மகாகவி பாரதியின் ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’ என்ற கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்டு, மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பல வருடங்களுக்கு முன்பு தனது ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்த கவிதையின் அடுத்த வரி ‘எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்’. இந்த வரிக்குப் பொருத்தமாகத் அவர் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பே ‘தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்’. இலங்கையிலுள்ள ‘மார்க்ஸியக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையத்தின்’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவை இன்றைய இலங்கையில் வலுவாக நிலைகொண்டிருக்கும் பவுத்த சிங்களப் பேரினவாத அரசியலையும் சிதறிச் சீரழிந்து கிடக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலையும் விசாரணை செய்கின்றன. இந்த விசாரணைகளுக்கு ஊடாக, இன்றைய தமிழ்த் தேசியவாதத்தின் நிலை குறித்துத் தன்னுடைய கருத்துகளையும் கணிப்புகளையும் தனபாலசிங்கம் முன்வைத்திருக்கிறார். நாற்பது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பத்திரிகைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றிய ஊடக அறிவையும் களத்திலேயே இருந்து அரசியல் நிலவரங்களை நேரடியாக எதிர்கொண்டதால் ஏற்பட்ட பட்டறிவையும் ஒருங்கே திரட்டி இந்தக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். செயற்திட்டம் இல்லாத தமிழர் அரசியல்: இலங்கையில் தமிழ்த் தேசியவாத அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் புகழ்பெற்ற ‘ஐம்பதுக்கு ஐம்பது’ மற்றும் தமிழரசுக் கட்சியின் ‘சமஷ்டி’ ஆகிய இரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டையில் முன்வைத்த தமிழீழத் தீர்மானத்திற்கு வயது அரை நூற்றாண்டு. தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து பதினாறு வருடங்கள். மேற்சொன்னவற்றின் தொடர்ச்சியில், தமிழர்களுக்குத் தனிநாடு, தனிநாட்டுக்கான பொது வாக்கெடுப்பு, போர்க் குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை, சுயாட்சி, கூட்டாட்சி, முழுமையான அதிகாரமுள்ள மாகாண சபைகள் என்றெல்லாம் தருணத்திற்கும் தமது விருப்புக்கும் ஏற்றவாறு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளாலும் குழுக்களாலும் புலம்பெயர்ந்த அமைப்புகளாலும் விதம்விதமான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் ஏதாவதொன்றை அடைவதற்கான ஆக்கபூர்வமான, சாத்தியமான அரசியல் செயற்திட்டம் என எதையுமே இவர்கள் ஒருபோதும் மக்கள் முன்பு வைத்ததில்லை. 1974-இல் இருந்தே தனிநாடு என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கிய இலங்கை தமிழரசுக் கட்சியுடைய நாடாளுமன்ற உறுப்பினரான வி.தர்மலிங்கத்திற்கும் கம்யூனிஸ்ட் தலைவர் நா. சண்முகதாசனுக்கும் இடையே 1975 ஆம் ஆண்டு சுன்னாகத்தில் ஒரு பகிரங்க அரசியல் விவாதக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் ‘தனிநாட்டை அடைவதற்கான தமிழசுரக் கட்சியின் செயற்திட்டம் என்ன?’ என்று சண்முகதாசன் கேள்வி எழுப்பியபோது, தர்மலிங்கம் ‘அது கட்சியின் உயர்மட்ட இரகசியம்’ என்று பதிலளித்து நழுவிக் கொண்டார். தனிநாட்டை அடைவதற்கான அந்த ‘உயர்மட்ட இரகசியம்’ என்னவென்று இன்று வரை யாருக்குமே தெரியாது. இப்போது பலவிதமான அரசியல் கோரிக்கைகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகளும் அவற்றை அடைவதற்கான செயற்திட்டம் எதுவென மக்களுக்குத் தெளிவுபடுத்தாமலேயே தேர்தல்களில் வாக்குகளைச் சேகரித்து நாடாளுமன்றம் சென்று, ஒற்றையாட்சிக்கு விசுவாசமாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு சுகமாகக் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்த நாற்காலிச் சுகவாசமும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. தமிழ் மக்களின் சலிப்பு: தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் வெற்று முழக்கங்களாலும் செயலின்மையாலும் தமிழ் மக்கள் சலிப்படைந்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் அவர்களின் கணிசமான வாக்குகள் தமிழ்த் தேசியவாதத்திற்கு முற்றிலும் எதிர்த் திசையில் நிற்கும் ‘தேசிய மக்கள் சக்தி’ வேட்பாளர்களுக்குக் கிடைத்தன. தனித் தமிழீழத்திற்கான தங்களுடைய செயற்திட்டத்தை உறுதியோடு மக்கள் முன்பு வைத்ததுடன் அதற்காக முனைப்போடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர்கள் தமிழீழ ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மட்டுமே. தனிநாட்டை அடைவதற்கான வழி ஆயுதப் போராட்டமே என அறிவித்து 1970-களின் நடுப்பகுதியிலிருந்து அவர்கள் இயங்கத் தொடங்கினார்கள். ஏறத்தாழ முப்பது வருடங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் 2009-இல் விடுதலைப் புலிகளின் தோல்வியோடு முடிவுக்கு வந்தது. புலிகளுக்குப் பின்னான காலத்தில், சீமான் போன்ற தமிழகத்து நண்டுசிண்டுகளைத் தவிர வேறு யாருமே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. முக்கியமாக, இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பில் எந்தக் கட்சியோ, எந்தக் குழுவோ ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசுவதில்லை. இதுவொரு நல்ல விஷயமும்தான். இனி ஒரு போர் வேண்டாம். போருக்குப் பின்னரான காலத்தில், தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிக்காரர்கள் தேர்தல் அரசியலில் பதவி நாற்காலிகளைக் கைப்பற்றத் தங்களுக்கிடையே மோதியவாறும் குழி பறித்தவாறும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தருணத்திற்குத் தக்கவாறு ‘ஒரு நாடு இரு தேசங்கள்’ என்றோ ‘பதின்மூன்றாவது திருத்தச் சட்ட அமலாக்கம்’ என்றோ ஆளுக்கொரு இலட்சியத்தை முழங்குகிறார்கள். ஆனால், இவர்கள் முழங்கும் இந்த இலட்சியங்களை அடைய இவர்களிடம் எந்தச் செயற்திட்டமும் கிடையாது என்பது மட்டுமின்றி இவர்கள் முழங்கும் இலட்சியங்களை அடைவதற்கு இவர்கள் உழைப்பதும் கிடையாது. விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் செய்யப்பட்ட தியாகங்களில் கோடியில் ஒரு பங்கையாவது இன்றைய தமிழ்த் தேசியவாத அரசியல்வாதிகள் செய்யப் போவதில்லை. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் இவர்களில் பலர் தமக்குள்ளேயே கெட்ட வார்த்தைகளில் திட்டிச் சண்டை போடுகிறார்கள். எதிராளியைத் திட்டும்போது சாதிய வசவுகளை வீசுகிறார்கள். எதிராளியின் குடும்பத்துப் பெண்களைக் கொச்சையாகப் பேசித் தூசணங்களைத் துப்புகிறார்கள். இவற்றுக்காக இவர்கள் ஒருபோதும் மன்னிப்புக் கேட்டதில்லை. இவர்கள் மீது கட்சிசார் ஒழுங்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை. தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இத்தகைய அநாகரிகமானவர்களிடமும் அறிவிலிகளிடமும் சிக்கி மானபங்கப்படுகிறது. கேடுகெட்ட நிலை: இலங்கை அரசியலில் தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்திய முதலாவது அமைப்பான ‘தமிழ் மகாஜன சபை’ 1921-இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்துவந்த நூறாண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சி அரசியலில் இத்தகையை கேடுகெட்ட நிலை இதுவரை இருந்ததில்லை. இந்தக் கையறு நிலையில்தான் தனபாலசிங்கம் தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம் குறித்துத் தனது நூலில் கேள்விகளை எழுப்புகிறார். இந்தக் கேள்விகளை வலிந்து தமிழ்த் தேசியத்திற்கு எதிர்நிலையில் நின்று அவர் எழுப்பவில்லை. இடதுசாரி அரசியலின் வழியே தனபாலசிங்கம் உருவாகிவந்தவர். அவரது ஆதர்சமான சண்முகதாசன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவர். 1989-இல் சண்முகதாசன் எழுதி வெளியிட்ட ‘ஒரு கம்யூனிஸ்டின் அரசியல் நினைவுகள்’ என்ற நூலில் ‘தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பது ஶ்ரீலங்காவின் ஜனநாயகப் புரட்சியின் ஓர் அங்கமாகும்’ என்று சண்முகதாசன் எழுதினார். தேசம், தேசியவாதம் குறித்தெல்லாம் இன்றைய பின்நவீனத்துவ அறிதல் காலத்தின் எடுத்துரைப்புகள் தேசியவாதிகளின் கோட்பாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் இடதுசாரிகளின் தேசியம் குறித்த கோட்பாடுகளிலிருந்தும் முற்றிலும் வேறானவை. முற்போக்குத் தேசியவாதம் என்றெல்லாம் ஏதும் கிடையாது .மாறாக, தேசியவாதமானது மற்றவைகளை விலக்கி வைக்கும் அல்லது எதிராக நிறுத்தும் கருத்தாக்கம் என்பது பின்நவீனத்துவ அணுகுமுறை. இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு நாங்கள் தனபாலசிங்கத்தின் நூலுக்குள் நுழையலாம். தமிழர்களின் தற்காப்பு போராட்டங்கள்: சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில், சிங்களப் பேரினவாதத்தை முன்னிறுத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்கள் 1970-களின் நடுப்பகுதி வரை நாட்டுப் பிரிவினைக்கான போராட்டங்கள் அல்ல. அவை சிறுபான்மை இனங்களின் உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டங்கள் மட்டுமேயாகும். மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது, தனிச் சிங்களச் சட்டம், சிறுபான்மையினர் மீதான தொடர் இன வன்செயல்கள் மற்றும் 1947 சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த 29 (2) சரத்து 1972-இல் இலங்கையின் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அகற்றப்பட்டுச் சிங்கள மொழிக்கும் பவுத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது போன்ற பல்வேறு சிங்களப் பேரினவாதத் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தங்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. தொடர் தோல்விகள்: உண்மையில் இந்தத் தொடர் போராட்டங்கள் தொடர் தோல்விகளாகவே சிறுபான்மை இனங்களுக்கு அமைந்தன. சிங்களப் பவுத்தப் பேரினவாதத்தின் இருப்பையும் காட்டுத்தனமான வளர்ச்சியையும் சிறுபான்மை இனங்களாலோ அற்ப சொற்பமாயிருந்த சிங்கள முற்போக்கு இடதுசாரிகளாலோ தடுக்க முடியவில்லை. இன்றுவரை இதுவே நிலை. இவ்வாறு கெட்டி தட்டிப் போயிருக்கும் சிங்களப் பேரினவாத நிலையைத் தோலுரித்துக் காட்டும் கட்டுரையாகத் தொகுப்பு நூலின் முதலாவது கட்டுரையான ‘கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட 42 வருடங்கள் ‘ அமைந்துள்ளது. 1983 ஜூலையில், விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவத்தின் உடனடி எதிர்வினையே தமிழர்களுக்கு எதிரான ஜூலை வன்செயல்கள் என்ற கதையாடலைத் தனபாலசிங்கம் மறுக்கிறார். “13 இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த வன்செயல்களைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது” என்கிறார் அவர். இதற்கான சான்றாதாரங்களையும், ஜூலை வன்செயல்களை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமால் அதை ஊக்குவிப்பது போலவும் அன்றைய அரசு செயற்பட்டதையும் எடுத்துக்காட்டுகளோடு தனபாலசிங்கம் விவரிக்கிறார். ஜே.வி.பி.யும் இனப்பிரச்சினையும்: 1983-க்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாதம் மேலும் எவ்வாறெல்லாம் வளர்ந்து சென்றது என்பதைப் பேசும் தனபாலசிங்கம் கட்டுரையின் இறுதிப் பகுதியில், இன்றைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினையைப் பற்றிப் பேசத் தயங்குவதை போலி முற்போக்காளர்கள் போன்று மவுனமாகக் கடக்காமல் உடைத்துப் பேசிவிடுகிறார். அவர் எழுதுகிறார் : “ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய இனப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்குத் தயங்குகிறது. சகல சமூகங்களையும் இலங்கையர்களாக, சமத்துவமானவர்களாக நோக்கும் ஒரு அணுகுமுறையைப் பற்றி ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கத் தலைவர்களும் பேசுகிறார்களே தவிர, உண்மையான பிரச்சினைக்கு முகங்கொடுக்கவோ அல்லது அதிகாரப் பரவலாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வைக் காண்பதில் நாட்டம் காட்டவோ அவர்கள் தயாராயில்லை. அவர்களும் இனவாதத்தின் கைதிகளாகவே இருக்கிறார்கள். புதிய அரசியலமைப்புக் கொண்டுவரப்படும் வரை தற்போதைய மாகாண சபைகள் முறை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறுகின்றதே தவிர, அத்தகைய ஒரு புதிய அரசியலமைப்பபைக் கொண்டு வருவதற்கு முன்னதாக 13-வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளையாவது உருப்படியாகச் செயற்படவைக்கும் எண்ணம் அவர்களிடம் இல்லை. புதிய கலாசாரம், முறைமை மாற்றம் எல்லாமே வெற்றுச் சுலோகங்கள்தான்.” நூறாண்டுகளாக விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் சிங்கள இனவாதத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வீழ்த்த முடியாவிட்டாலும், இந்த அரசாங்கம் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று கணிசமான தமிழ் மக்களிடம் நம்பிக்கையுள்ளது. அந்த நம்பிக்கையைக் குறித்தும் தனபாலசிங்கம் கேள்வி எழுப்புகிறார். “வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களிலிருந்து இன்னமும் விடுபட முடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாதச் சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி, வனப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது” என்கிறார் தனபாலசிங்கம். இந்தக் கட்டுரையை அவர் இவ்வாறு முடிக்கிறார் : “கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இருப்பதாகத் தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு, இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்துவரும் ஒரு திருத்தத்தைக் கூட (13-ஆவது திருத்தச் சட்டம்) கைவிட வேண்டும் என்று தென்னிலங்கையில் போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.” 13 வது திருத்தம்: நூலின் ஐந்தாவது கட்டுரையில், பதின்மூன்றாவது சட்டத் திருத்தம் குறித்து ஜே.வி.பி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருப்பதைத் தனபாலசிங்கம் சுட்டிக் காட்டுகிறார் : “13-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாகிறது. தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமே தங்களது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக 13-ஆவது திருத்தத்தையும் அதிகாரப் பரவலாக்கத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் ரில்வின் சில்வா. அவரின் கருத்துத்தான் தென்னிலங்கை அரசியலாளர்களின் பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. தென்னிலங்கையின் முற்போக்குகளும் கலைஞர்களும் கூட விதிவிலக்கில்லை. நான் ஜே.வி.பி. உறுப்பினர்களுடனும் ஆதரவாளர்களுடனும் தனிப்பட விவாதித்த பல்வேறு தருணங்களிலும் அவர்கள் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினையே முதன்மைப் பிரச்சினை என்கிறார்கள். இனங்களுக்கு இடையேயான அதிகாரப் பரவலாக்கத்தை மூர்க்கமாக மறுக்கிறார்கள். பொருளாதாரப் பிரச்சினை இலங்கையில் எப்போதும்தான் இருந்தது. இனியும் இருக்கத்தான் போகிறது. குறிப்பாக, இன்றைய உலகமயமாக்கல் பொருளியல் சூழலில் இலங்கையைப் போன்ற அனைத்து மூன்றாம் உலக நாடுகளும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நாட்டின் தேசிய வருவாயையும் பொதுத் துறைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்தித்தான் நிற்க வேண்டும். அவற்றின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மக்கள்மீது வரிச் சுமையை ஏற்ற வேண்டியிருக்கிறது. மானியங்களையும் சமூக நலத் திட்டங்களையும் இலவசங்களையும் இல்லாமல் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த உலகமயமாக்கல் பொருளாதாரச் சுழலிலிருந்து இலங்கையைப் போன்ற மூன்றாம் உலக நாடுகள் மீள்வது எப்போது என்ற கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் தெரியாது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையைக் காரணமாகக் காட்டி, சிறுபான்மை இனங்களின் உரிமைப் பிரச்சினைகளைப் பேச மறுப்பதும் தட்டிக் கழிப்பதும் சிங்கள இனவாதத்தின் இன்னொரு பரிமாணமேயாகும். நீண்ட காலமாகச் சிறுபான்மை மக்கள் எழுப்பிவரும் நீதியான சமவுரிமைக் கோரிக்கைகளை பேரினவாத நிலைப்பாட்டோடு நிராகரிப்பதாகும். நூலின் இரண்டாவது கட்டுரையின் தலைப்பு ‘பதின்மூன்றாவது திருத்தத்தைத் தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?’ என்பதாகும். 1987-இல் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசியலமைப்பில் செய்யப்பட்ட திருத்தமே 13-ஆவது திருத்தச் சட்டமாகும். இது அரசியல் அதிகாரங்களை இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கும் அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் காணி – காவல்துறை அதிகாரம் இன்றி அரைகுறையாகவே இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. முழுமையான அதிகாரங்கள் இன்றியே மாகாண சபைகள் இயங்கின. 13-வது திருத்தச் சட்டத்தில் உள்ளபடி மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரங்களைத் தமிழ் தேசியவாத அரசியலாளர்களில் ஒரு பகுதியினர் கோருகிறார்கள். நூலாசிரியர் தனபாலசிங்கத்தின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கிறது. அவர் எழுதுகிறார்: “13-ஆவது திருத்தம் போதுமானது என்று யாருமே வாதிடவில்லை. தமிழர் அரசியல் சமுதாயம் அதன் வரலாற்றில் மிகவும் மோசமாகப் பலவீனமடைந்து சிதறுப்பட்டிருக்கும் நிலையில் அதுவும் இல்லாமல் போனால் நிலைமை என்ன? அந்தத் திருத்தத்தைக் காப்பாற்றாமல் மேலும் கூடுதலான அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது சமஷ்டித் தீர்வு பற்றியோ பேசுவதில் உண்மையில் அர்த்தமில்லை.” மாகாண சபை முறைமையை விடுதலைப் புலிகள் மூர்க்கமாக நிராகரித்தார்கள் என்பது உண்மை. அதற்குப் பதிலாக அவர்கள் தனிநாடு என்ற இலக்கை முன்வைத்தார்கள். அந்த இலக்கை அடைவதற்கு அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால், இன்று மாகாண சபை முறைமையை நிராகரிக்கும் ஒருசில தமிழ்த் தேசியவாதத் தரப்புகள் அதற்கு மாற்றாக முன்வைக்கும் தீர்வுகளை அடைவதற்கான செயற்திட்டமாகவும் போராட்ட வழியாகவும் எவற்றைத்தான் முன்னிறுத்துகிறார்கள்? எதுவுமே இல்லை. ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேசச் சமூகம் இலங்கையில் தலையீடு செய்து தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பது போன்ற பேச்சுகள் அப்பாவித்தனமான கற்பனாவாதம் மட்டுமே.ஐ.நா. சபையோ அல்லது சர்வதேசச் சமூகமோ ‘மனிதவுரிமைகள் கண்காணிப்பு’ என்பதைத் தாண்டி இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் உரிமைகள் குறித்த பிரச்சினைகளில் தலையீடு செய்யப் போவதில்லை. அதற்கான எந்தச் சிறு அறிகுறியும் கடந்த 16 வருடங்களில் தெரியவில்லை. இந்தியாவின் நிலை: இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முன்னின்று உருவாக்கிய இந்திய அரசு 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தது உண்மைதான். எனினும், கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக அந்த அழுத்தம் வெற்றியளிக்கவில்லை. இன்று இந்தியா 13-ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்பதைத் தனபாலசிங்கம் நூலில் விரிவாகவே விளக்குகிறார். “இலங்கையில் தனது பொருளாதார மற்றும் மூலேபாய நலன்களைப் பேணிக் காப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஒன்றாக தமிழர் பிரச்சினையைக் கருதும் நிலையில் இந்தியா இனிமேலும் இல்லை” என்கிறார் அவர். முழுமையான அதிகாரங்களை உள்ளடக்கிய மாகாண சபைகள் முறைமை வேண்டும், அதுவே இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சாத்தியமான முதற்படி என்பதை நூலின் பல இடங்களிலும் தனபாலசிங்கம் அழுத்தமாக எழுதிச் செல்கிறார். “அரசாங்கம் கொண்டு வரவிருப்பதாகக் கூறுகின்ற புதிய அரசியலமைப்பில் 13-ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமானால் முதலில் தமிழர் அவை தங்களுக்கு வேண்டுமென்று உறுதியாக நிற்க வேண்டும். தற்போதைய நிலவரம் வேண்டி நிற்பதற்கு இணங்க நிதானமாகச் சிந்தித்துச் செயற்படுவதற்கு இனிமேலும் தவறினால், இறுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத இழப்புகள், தியாகங்களுக்குப் பின்னரும் கூட எதையுமே பெற முடியாத ஒரு மக்கள் கூட்டமாக விடப்படும் ஆபத்து இருக்கிறது” என்கிறார். மாகாண சபைகளை விடுதலைப் புலிகள் மட்டும் நிராகரிக்கவில்லை. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய சக்தியான ஜே.வி.பியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மகாண சபைகளையும் கடுமையாக எதிர்த்தது. இவற்றை எதிர்த்துத்தான் ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி 1987-இல் தொடங்கி இரத்த ஆறு ஓடியது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் மாகாண சபைகளையும் ஏற்றுக்கொண்ட பல சிங்கள அரசியல்வாதிகளை ஜே.வி.பி. படுகொலை செய்தது. படுகொலை அரசியலிலிருந்து பின்பு ஜே.வி.பி. மீண்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினாலும் 13-ஆவது திருத்தச் சட்டம் குறித்த அவர்களது எதிர்ப் பார்வைகள் இன்றுவரை மாறவில்லை. எனவே, முழுமையாக அதிகாரமளிக்கப்பட்ட மாகாண சபைகளை இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அரசாங்கம் சொல்வது போன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், இனங்களுக்கிடையே அதிகாரப் பரவலாக்கல் சாத்தியமில்லை என்பதற்கான அறிகுறியே ரில்வின் சில்வாவின் பேச்சிலிருந்து தெரிகிறது. இனவாதமும் மதவாதமும்: நூலின் மூன்றாவது கட்டுரையில் தனபாலசிங்கம் “இலங்கையில் இனவாத அரசியலும் மதத் தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று இடையறாது சூளுரைத்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத் தலைவர்கள் அதே இனவாதமும் மதவாதமும் தோற்றுவித்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் ஒருபோதும் அந்த இலட்சியத்தை அடைய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். அரசாங்கத் தலைவர்கள் மட்டுமல்லாமல் முழு இலங்கை மக்களும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 13-வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நீண்டகால இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் என்பதை இன்றைய அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். உருவாக்கப் போவதாகச் சொல்லப்படும் புதிய அரசியலமைப்பில் இதைவிடச் சிறப்பான தீர்வு ஒன்றிருந்தால் நல்லதே. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நூலின் கடைசிக் கட்டுரையில் தனபாலசிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளர் லயனல் போபகேயை மேற்கோள்காட்டி இவ்வாறு எழுதுகிறார் : “அதிகாரப் பரவலாக்கம், ஆட்சிமுறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் அல்ல. அதிகாரப் பரவலாக்கத்தைப் பிரிவினைவாத நோக்கம் கொண்டதாகச் சிங்களப் பகுதிகளில் பலர் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் அது கல்வி, சுகாதாரம், நிலம், மற்றும் நிருவாகம் போன்ற துறைகளில் மக்கள் தாங்களாகவே தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும் ஒரு ஏற்பாடாகும்.” அதிகாரப் பரவலாக்கமானது பிரிவினைவாத நோக்கம் கொண்டது எனச் சிங்களப் பகுதிகளில் மட்டுமல்ல, தமிழ்ப் பகுதிகளிலும் கருதும் சிந்தனைச் சிற்பிகள் உண்டு. மையத்திலிருக்கும் அதிகாரம் விளிம்புகளுக்குப் பகிரப்பட வேண்டும் என்றெல்லாம் நுண் அரசியல் பேசிக் கிழிக்கும் இவர்கள் சிறுபான்மை இனங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்றால் மட்டும் முகத்தைச் சுழிக்கிறார்கள். காஸாவுக்காகக் கண்ணீரும் முள்ளிவாய்க்காலுக்காக ராஜபக்சக்களுக்கு நன்றியும் தெரிவிக்கும் இரட்டை நாக்குப் பேர்வழிகள் இவர்கள். நூலில் தமிழ்த் தேசியவாதக் கட்சிகளைப் பல்வேறு இடங்களிலும் தயவு தாட்சணியமின்றித் தனபாலசிங்கம் கண்டித்திருக்கிறார். அவர்களது தவறான அரசியல் நோக்குகளையும் செயலின்மையையும் கடுமையாகச் சாடுகிறார். “தமிழ் அரசியல்வாதிகளில் பலர் மக்களிடமிருந்து தாங்கள் தனிமைப்பட்டதைப் பற்றிச் சிந்திக்காமல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குறிப்பிட்ட சில சக்திகளைத் திருப்திப்படுத்தும் அரசியல் வழிமுறைகளில் அக்கறை காட்டுகிறார்கள்” என மிகச் சரியாகவே அவர் குறிப்பிடுகிறார். புலம்பெயர் தமிழர்களின் அரசியல்: தமிழ்த் தேசியவாத அரசியல் என்னும்போது, புலம்பெயர் தமிழ்த் தேசியவாத அரசியலைக் குறித்தும் பேசாமல் இருக்க முடியாது. ஏனெனில், அந்த அரசியல் அவ்வளவுக்கு அநியாயங்களையும் நகைச்சுவைகளையும் செய்திருக்கிறது. ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ போன்ற பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது. கள நிலவரம் அறியாது தங்களது விருப்புகளை இலங்கையிலுள்ள தமிழ் மக்கள்மீது சுமத்த அது முயற்சிக்கிறது. மேற்கு நாடுகள் முன்வந்து ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற கற்பனை அரசியலைச் செய்கிறது. இந்த மேற்குசார் அரசியலில் அதிருப்தி அடைந்த ஒருபகுதிப் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகள் கிழக்கு நோக்கி நகர்ந்து ‘நாம் தமிழர்’ கட்சி தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் ஈழம் மலர்ந்துவிடும் என்றெண்ணித் திரள்நிதி அளித்துக்கொண்டிருக்கிறார்கள். நூலில் தனபாலசிங்கம் முத்தாய்ப்பாக எழுதுகிறார்: “உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னான இன்றைய காலப்பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்களுக்கு இசைவான முறையில் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளுடனும் அணுகுமுறைகளுடனும் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை விவேகமான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக் கூடிய அரசியல் தலைமைத்துவம் தமிழர்கள் மத்தியில் இன்று இல்லை என்பது பெரும் கலைக்குரியது.” நீண்டகாலப் பத்திரிகை அனுபவத்தினூடே தனபாலசிங்கம் வசப்படுத்திக்கொண்ட எளிமையும் துல்லியமும் இயைந்த மொழி இத்தொகுப்பைத் தங்குதடையின்றி வாசிக்க வைக்கின்றது. தேவையற்ற ஒரு சொல் கூட இல்லாமல் மிகக் கச்சிதமாகக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் நூலாசிரியர் தனபாலசிங்கம் பேசும்போது “நான் இந்த நூலில் சித்தாந்தம் எதுவும் பேசவில்லை. எனது ஆதங்கத்தையும் துயரையும் தெரிவிக்கவே இதை எழுதினேன்” என்றார். இலங்கைத் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எதிர்காலத்தைக் குறித்து நேர்மையான அக்கறையுள்ள எவரையும் நூலின் வழியே தனபாலசிங்கத்தின் ஆதங்கமும் துயரும் தொற்றவே செய்யும். https://arangamnews.com/?p=12592
  13. யாழ்ப்பாணத்தில் அனுர குமார: வழங்கல் இன்றி உருவான பிரபலமா அல்லது ஒரு அரசியல் மாயையா? January 16, 2026 — ராஜ் சிவநாதன் — யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொண்ட சமீபத்திய விஜயம் வட மாகாணத்தில் வழக்கத்திலிருந்து மாறுபட்ட அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட வரவேற்புகளை விட இந்த விஜயம் பொதுமக்களின் வெளிப்படையான அன்பையும் ஊடகங்களின் தீவிர கவனத்தையும் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வம் கவனிக்கத்தக்கதாக இருந்தது. இதன் மூலம் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது கொள்கை செயல்பாடுகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையில் அனுர ஏன் வட பகுதியில் பிரபலமாகிறார் மற்றும் இது அந்தப் பகுதியின் எதிர்காலத்திற்கு என்ன அர்த்தம் கொண்டது என்பதே அந்தக் கேள்வி. ஜனாதிபதி வரலாற்றிலிருந்து ஒரு விலகல்: பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதிகள் வருகை தந்தபோது கட்டுப்பாடு சந்தேகம் அல்லது அமைதியான அலட்சியம் தான் காணப்பட்டது. மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க போன்ற தலைவர்கள் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் முன் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுடனும் அரசியல் மொழிகளுடனும் வந்தனர். வட பகுதி மக்களுக்கு இவ்விழாக்கள் பங்காளித்தன்மையை விட அதிகாரத்தின் வெளிப்பாடாகவே தோன்றின. ஆனால் அனுரவின் விஜயம் கொள்கை அறிவிப்புகளால் அல்ல அவரது அணுகுமுறையால் வேறுபட்டதாக உணரப்பட்டது. அவரது எளிமையான உரை நடை, இயல்பான மக்கள் தொடர்பு மற்றும் வெற்றிக் காட்சிகள் இல்லாத வெளிப்பாடு வட பகுதி அரசியல் அனுபவத்தில் நீண்ட காலமாக காணப்படாத இயல்புத்தன்மையை வெளிப்படுத்தியது. இதுவே கடந்த காலத்திலிருந்து ஒரு தெளிவான மாற்றமாக அமைந்தது. இளைஞர்களுடன் ஏற்பட்ட தொடர்பும் தன்மையின் தாக்கமும்!: அனுரவின் யாழ்ப்பாண விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக இளைஞர்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பு காணப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் மீது விரக்தியும் அரசமைப்பின் மீது ஆழ்ந்த சந்தேகமும் கொண்டுள்ள இளைஞர்களுக்கு அனுர ஒரு வித்தியாசமான இடத்தை பிடித்துள்ளார். அவர் தேசிய அளவிலான தலைவராக இருந்தாலும் அணுகக்கூடிய மனிதராக தோன்றுகிறார். குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அவரது அமைதியான நம்பிக்கை எளிமையான தோற்றம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உரை நடை கொள்கைகளை விட தன்மையின் மூலம் மக்களை ஈர்க்கும் தென்னிந்திய அரசியல் தலைவர்களை நினைவூட்டுகிறது. சமூக ஊடகங்கள் இந்த ஈர்ப்பை மேலும் பெருக்கி அரசியல் ஈடுபாட்டை தனிப்பட்ட உணர்ச்சிப்பூர்வ அனுபவமாக மாற்றியுள்ளது. இது வழக்கமான கருத்தியல் ஆதரவு அல்ல. செயல்பாட்டிற்கு முன்பே உருவாகும் உணர்ச்சிசார் அரசியலின் வெளிப்பாடாகும். நிறைவேறாத வாக்குறுதிகளுக்கிடையிலான பிரபலத்தன்மை!: அனுரவின் அரசியல் முக்கியத்துவம் இங்கேதான் தெளிவாகிறது. முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில் கூட அவரது பிரபலத்தன்மை உயர்ந்து வருகிறது. கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்தங்கள் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஊழல் ஒழிப்பு அமைப்புகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் இன்னும் மெதுவாகவே முன்னேறுகின்றன அல்லது நிறைவடையவில்லை. இத்தகைய சூழலிலும் மக்கள் காட்டும் பொறுமை அபூர்வமானதாக உள்ளது. இது இலங்கை அரசியல் மனநிலையில் ஏற்பட்டுள்ள ஆழமான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. பல தசாப்தங்களான அரசியல் துரோகங்களுக்குப் பிறகு குறிப்பாக இளைஞர்கள் உடனடி பலன்களை விட நேர்மை நோக்கம் மற்றும் திசையை அதிகமாக மதிக்கத் தொடங்கியுள்ளனர். ஊழலும் இன அரசியலும் நிரம்பிய சூழலில் நேர்மையே ஒரு அரசியல் மூலதனமாக மாறியுள்ளது. ஆனால் செயல்பாடுகளில்லாத நேர்மை நீடிக்க முடியாத அடிப்படையாகும். வடக்கு பகுதிக்கு இதன் பொருள் என்ன?: வட மாகாணத்திற்கு இந்த தருணம் வாய்ப்பையும் ஆபத்தையும் ஒரே நேரத்தில் கொண்டுள்ளது. ஒரு பக்கம் அனுரவின் ஏற்றுக்கொள்ளல் வடக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை இன அடிப்படையிலான பேரம் பேசுதலிலிருந்து கொள்கை அடிப்படையிலான தேசிய இணைப்பாக மாற்றக்கூடிய வாய்ப்பை வழங்குகிறது. இது வட பகுதியின் பொருளாதார மற்றும் சமூக தேவைகளை சிறுபான்மை கோரிக்கைகளாக தனிமைப்படுத்தாமல் பரந்த சீர்திருத்தச் சூழலுக்குள் இணைக்கும் வாய்ப்பையும் தருகிறது. ஆனால் வரலாறு எச்சரிக்கையை முன்வைக்கிறது. வட பகுதி இதற்கு முன்பும் பல தலைவர்களை அன்புடன் வரவேற்று மாற்றமின்றி வழியனுப்பியுள்ளது. கவர்ச்சி நிலப் பிரச்சினைகளை தீர்க்காது. பிரபலத்தன்மை வேலை வாய்ப்புகளை உருவாக்காது. குறியீட்டு விஜயங்கள் அதிகாரப் பகிர்வு பொறுப்புணர்வு அல்லது நீடித்த தனியார் முதலீடுகளுக்கு மாற்றாக அமையாது. முடிவு உள்ளடக்கம் கோரும் ஒரு தருணம்: அனுர குமார திசாநாயக்கின் யாழ்ப்பாண விஜயம் ஒரு அபூர்வமான அரசியல் தருணமாகும். இளைஞர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் உருவான அவரது ஈர்ப்பு செயற்கையான அரசியலால் சோர்ந்த நாட்டில் உண்மைத்தன்மைக்கான ஆழ்ந்த தேவை இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தத் தருணம் ஒரு திருப்புமுனையாக மாறுமா அல்லது இன்னொரு மாயையாக முடிவடையுமா என்பது அதன் பிந்தைய செயல்பாடுகளிலேயே நிர்ணயிக்கப்படும். வட பகுதி மக்களிடையே நம்பிக்கை மெதுவாக மீண்டும் உருவாகிறது ஆனால் உண்மையான நம்பிக்கை செயல்பாடுகளின் மூலம் மட்டுமே உறுதியாகும். https://arangamnews.com/?p=12598
  14. கேள்விக்கு உள்ளாகியிருக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பும் இறைமையும் January 15, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தனது முதலாவது பதவிக் காலத்தில் (2016 — 2020) வெளிநாடுகளில் சண்டையிடுவதற்காக ஒரு அமெரிக்கப் படைவீரனைக் கூட அனுப்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பெருமைப்பட்டதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் 2025 ஜனவரியில் பிரவேசித்த பிறகு பத்துமாத காலத்திற்குள் உலகில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதற்காக தனக்கு நோபல் சமாதானப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தானாகவே கேட்டார். அந்தப் பரிசு தனக்கு கிடைக்காது என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது. இரண்டாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர் நாடுகளை ஆக்கிரமிப்பது குறித்து பேசிவந்திருக்கிறார். எந்தவிதமான பிரச்சினையையும் தோற்றுவிக்காத அயல் நாடான கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக்குவது குறித்தும் டென்மார்க்கிற்கு சொந்தமான கிறீன்லாந்து தீவையும் பனாமா கால்வாயையும் கைப்பற்றுவது குறித்தும் அவர் பேசினார். இஸ்ரேல் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதை ஆதரித்த ட்ரம்ப் காசாவில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை உல்லாசக் கடற்கரையாக மாற்றுவதற்கான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதில் ட்ரம்புக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று புதுடில்லி திட்டவட்டமாக மறுத்த போதிலும், இதுவரையில் அவர் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் தெற்காசியாவின் இரு அணுவாயுத நாடுகளும் போரை கைவிட்டதற்கு தானே காரணம் என்று கூறியதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்தன. தன்னை ஒரு சமாதான விரும்பி என்று காண்பித்த அதேவேளை, ட்ரம்ப் நைஜீரியா, சோமாலியா, ஈராக், சிரியா, யேமன் மற்றும் ஈரான் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தினார். தற்போது புத்தாண்டு பிறந்து மூன்று நாட்களில் தென்னமெரிக்க நாடான வெனிசூலாவில் இரவோடிரவாக குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்ப், ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று தடுத்து வைத்திருக்கிறார். ‘போதைப்பொருள் பயங்கரவாத இயக்கம்’ ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு மதுரோ நியூயோர்க் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். வெனிசூலாவில் தலையீடு செய்வதற்கு தன்னை அமெரிக்காவின் அரசியலமைப்பு அனுமதிப்பதாக கூறியிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க படைகளின் பிரதம தளபதி என்ற வகையில் அமெரிக்கர்களை பாதுகாப்பது தனது கடமை என்று வாதிடுகிறார். ஆனால், அமெரிக்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை வெனிசூலா தோற்றுவித்தது என்று புத்திசுவாதீனமான எவரும் கூறமாட்டார்கள். அத்துடன் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குழுமம் ஒன்றை நடத்திவந்தார் என்பதற்கு ட்ரம்ப் நிருவாகம் நம்பகத்தன்மையான சான்று எதையும் உலகின் முன் வைக்கவுமில்லை. வெனிசூலா மீது ட்ரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்திலேயே கண்வைத்தார். ஜனாதிபதி மதுரோவுக்கும் அவரது உயர்மட்ட உதவியாளர்களுக்கும் எதிராக முதலில் 2019 ஆம் ஆண்டில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சி அரசியல்வாதியான பாராளுமன்ற சபாநாயகர் ஜுவான் குவாய்டோவையே வெனிசூலாவின் பதில் ஜனாதிபதியாக அமெரிக்காவும் அதன் மேற்குலக நேசநாடுகளும் அங்கீகரித்தன. ட்ரம்ப் கடந்த வருடம் ஜனவரியில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது வெளியுறவுக் கொள்கையில் வெனிசூலாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மதுரோவை உலகில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டிய அமெரிக்கா ‘போதைப் பொருளுக்கு எதிரான போர்’ ஒன்றைப் பிரகடனம் செய்தது. மதுரோவை கைது செய்வதற்கு உதவக்கூடிய தகவல்களை தருவோருக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் நிருவாகம் அறிவித்தது. கரிபியன் பிராந்தியத்துக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் போர்க் கப்பல்களையும் அனுப்பிய ட்ரம்ப் நிருவாகம் போதைப் பொருளைக் கடத்திச் செல்லும் படகுகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாக கூறிய போதிலும், உண்மையில் நூற்றுக்கணக்கான குடிமக்களே கொல்லப்பட்டார்கள். வெனிசூலாவுக்குள் இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு அதிகாரமளித்த ட்ரம்ப் அந்த நாட்டில் இருந்து எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்துக்கு தடை விதித்தார். தடை செய்யப்பட்ட எண்ணெயை ஏற்றிச் சென்றதாக கடந்த வெள்ளிக்கிழமை வரை ஐந்து கப்பல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது. தனக்கு வரப்போகின்ற ஆபத்தை உணர்ந்து கொண்ட மதுரோ அமெரிக்காவுடன் ‘அக்கறையுடனான பேச்சுவார்த்தைகளை’ நடத்த விரும்புவதாக அறிவித்ததற்கு மறுநாளான ஜனவரி 3 வெனிசூலாவின் தலைநகர் மீது கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்திய அமெரிக்கப் படைகள் மதுரேவையும் மனைவியையும் கைது செய்து நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றன. ஆனால், பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்று வெனிசூலாவின் இராணுவக் கட்டமைப்புக்களோ அரச இயந்திரமோ நிலை குலையவில்லை இராணுவ ஆக்கிரமிப்பை கண்டனம் செய்த அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. கடந்த வருடத்தைய நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான வெனிசூலாவின் வலதுசாரி எதிர்க்கட்சி தலைவியான மறியா கொறினா மச்சாடோ அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகளை முற்று முழுதாக ஆதரித்து வருகின்ற போதிலும், அவர் நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான மக்கள் ஆதரவையும் மதிப்பையும் கொண்டவரல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துவிட்டார். வெனிசூலா உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிக்கஸ் மறுநாளே பதில் ஜனாதிபதியாக பதவியேற்றார். அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுத்தால் டெல்சி பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று ட்ரம்ப் உடனடியாகவே எச்சரிக்கை செய்தார். பொருளாதார நெருக்கடி மற்றும் எதேச்சாதிகார ஆட்சிமுறை காரணமாக மதுரோவின் அரசாங்கம் மீது வெனிசூலா மக்களில் பெரும்பாலானவர்கள் வெறுப்புக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மை. ஆனால், இறைமையுடைய ஒரு நாட்டின் தலைவரை கடத்திச் செல்வதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையோ அல்லது அதிகாரமோ கிடையாது. தவறான ஆட்சி மற்றும் அடக்குமுறைக்காக வெளிநாட்டுத் தலைவர்களை கடத்திச் சென்று சிறைவைப்பதே ட்ரம்பின் வேலையாக இருக்குமானால், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவுடன் அதிகாரத்தில் இருக்கும் சிலர் உட்பட அத்தகைய ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் இருந்து அவர் தெரிவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். தான் விரும்பும்வரை வெனிசூலாவை அமெரிக்கா நிருவகிக்கும் என்றும் அதன் பாரிய எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் ட்ரம்ப் வெளிப்படையாகவே பிரகடனம் செய்கிறார். சிறையில் இருக்கும் மதுரோவின் விசுவாசிகளினால் நிருவகிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் அமெரிக்கா தனக்கு அவசியமானது என்று உணருகின்ற சகலதையும் தருகிறது. வெனிசூலாவின் எண்ணெய்த் தொழிற்துறையை அமெரிக்கா இலாபகரமாக மீளக்கட்டியெழுப்பும் என்றும் அந்த நாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற பணம் வழங்கப்படும் என்றும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நியூயோர்க் ரைம்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கிறார். தென்னமெரிக்காவிலும் கரிபியன் பிராந்தியத்திலும் இரு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலமாக தலையீடுகளைச் செய்த நீண்ட வரலாற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது. ஆனால், வெனிசூலா மீது ஜனவரி 3 நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களே தென்னமெரிக்க நாடொன்றின் மீதான அமெரிக்காவின் முதன் முதலான நேரடியான இராணுவ தாக்குதலாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்க கண்டத்தின் அயல்நாடுகளில் அமெரிக்கா பொருளாதார நெருக்குதல்கள் ஊடாக மாத்திரமல்ல, படையெடுப்புக்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்று இராணுவ ரீதியாகவும் தலையீடுகளைச் செய்து வந்திருக்கிறது. வெனிசூலாவில் கடந்தவாரம் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை 1989 ஆம் ஆண்டில் பனாமா நாட்டின் சர்வாதிகாரி மனுவேல் நொறீகாவைக் கைதுசெய்த நடவடிக்கையை நெருக்கமாக ஒத்ததாக இருக்கிறது. முன்னர் சி.ஐ.ஏ.யின் நண்பராக விளங்கிய நொறீகாவை கைது செய்வதற்காக பனாமாவை ஆக்கிரமிப்பதற்கு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் சுமார் 27 ஆயிரம் துருப்புக்களை அனுப்பினார். அவரைக் கைதுசெய்து அமெரிக்காவுக்கு கொண்டுசென்று இன்று மதுரோவுக்கு ட்ரம்ப் செய்ததைப் போன்று போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றங்களில் புஷ் நிருவாகம் நிறுத்தியது. பிரேசில், சிலி மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களை பதவி கவிழ்த்து இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்கா உதவிய போதிலும், தென்னமெரிக்காவிலும் கரிபியனிலும் வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா வரலாற்று ரீதியாக அதன் நெருங்கிய அயல் நாடுகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தியே வந்திருக்கிறது. ஆனால், தற்போது தென்னமெரிக்க நாடொன்றின் மீது நடத்தப்பட்ட நேரடியான இராணுவத் தாக்குதல் அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றத்தைக் குறித்து நிற்கிறது எனலாம். அமெரிக்காவுக்கு பாரதூரமான எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் தோற்றுவிக்காத வெனிசூலாவில் எதற்காக ஆட்சி மாற்றத்தை ட்ரம்ப் விரும்புகிறார்? அந்த நாடு பெரியளவில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்கின்ற ஒரு நாடுமல்ல. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு மூன்று முக்கிய காரணங்களை சர்வதேச அரசியல் அவதானிகள் அடையாளம் காண்கிறார்கள். முதலாவதாக, உலகின் மேற்கு அரைக் கோளத்தில் (Western Hemisphere) அமெரிக்காவின் முதன்மையை மீண்டும் திணிப்பதற்கு ட்ரம்ப் விரும்புகிறார். அமெரிக்காவின் ஐந்தாவது ஜனாதிபதியான ஜேம்ஸ் மொன்றோ அமெரிக்க கண்டத்தின் நாடுகளில் எதிர்காலத்தில் ஐரோப்பிய வல்லரசுகள் தலையீடுகளைச் செய்யாமலும் காலனித்துவ ஆதிக்கத்தைச் செலுத்தாமலும் இருப்பதை உறுதிசெய்வதற்காக ஐரோப்பிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்று 1823 ஆம் ஆண்டில் உறுதியளித்து பிரகடனம் ஒன்றைச் செய்தார். அதுவே மொன்றோ கோட்பாடு (Monroe Doctrine) என்று அழைக்கப்பட்டது. அந்த கோட்பாட்டின் வழியில் தற்போது அமெரிக்க நாடுகளை அமெரிக்காவின் செல்வாக்குப் பிராந்தியமாக வைத்திருப்பதில் ட்ரம்ப் நாட்டம் கொண்டிருக்கிறார். அண்மையில் அவரது நிருவாகத்தினால் வெளியிடப்பட்ட ‘தேசிய பாதுகாப்பு கோட்பாடு’ (National Security Doctrine) லத்தீன் அமெரிக்காவையும் கரிபியன் பிராந்தியத்தையும் மூலோபாய முன்னுரிமைக்குரியவையாக அடையாளம் காண்கிறது. இதற்கு அமெரிக்க ஊடகங்கள் ‘டொன்றோ கோட்பாடு’ (Donroe Doctrine) என்று வேடிக்கையாக பெயர் சூட்டியிருக்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் வெளிப்பிராந்தியத்தைச் சேர்ந்த வல்லரசுகளின் (பிரதானமாக சீனா) செல்வாக்கை அல்லது கட்டுப்பாட்டை அமெரிக்கா நிராகரித்து அதன் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவச் செல்வாக்கின் கீழ் மேற்கு அரைக்கோளத்தை வைத்திருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கோட்பாட்டு ஆவணம் வலியுறுத்துகிறது. இரண்டாவதாக, அமெரிக்காவின் முதன்மைக்கு வலுவூட்டுகின்ற அதேவேளை, மேற்கு அரைக்கோளத்தில் சீனாவினதும் ரஷ்யாவினதும் செல்வாக்கை தடுக்கவும் ட்ரம்ப் நிருவாகம் விரும்புகிறது. சீனா ஏற்கெனவே அதன் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் ஊடாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளின் மிகப்பெரிய அல்லது இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சீனா விளங்குகிறது மூன்றாவதாக, லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியில் இருக்கும் இடதுசாரிப் போக்குடைய தலைவர்களுக்கு பதிலாக தீவிர வலதுசாரிகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கும் அமெரிக்கா விரும்புகிறது. மதுரோவின் கைதுக்குப் பிறகு செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப் ‘மேற்கு அரைக் கோளத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படமாட்டாது’ என்று கூறியது கவனிக்கத்தக்கது. வெனிசூலா மீது மேற்கொண்ட தாக்குதல் மூலமாக அமெரிக்கா மற்றைய நாடுகளின் இறைமையையும் பாதூகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அரசுகள் அவற்றின் நிலப்பரப்பு உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ அல்லது அரசியல் கோரிக்கைகளுக்காகவோ படைபலத்தைப் பிரயோகிக்கக்கூடாது என்று கடந்த நூற்றாண்டில் இரு உலகப்போர்களின் பயங்கரங்களுக்கு பிறகு இணங்கிக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டை அமெரிக்கத் தாக்குதல் வலுவிழக்கச் செய்திருக்க்கிறது என்றும் மோதல்களைத் தவிர்ப்பதற்காக உலகிடம் இருக்கும் ஒரேயொரு பொறிமுறையான ஐக்கிய நாடுகளை அமெரிக்காவின் நடவடிக்கை மோசமாகப் பலவீனப்படுத்தியிருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டேர்க் கவலை தெரிவித்திருக்கிறார். சட்டத்தின் ஆட்சிக்காக சர்வதேச சமூகம் துணிச்சலுடன் குரல்கொடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கிறார். வெனிசூலாவையடுத்து ட்ரம்ப் கொலம்பியா, கிறீன்லாந்து, மெக்சிக்கோ, கியூபா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளையும் அச்சுறுத்துகிறார். மதுரோ அரசாங்கத்தைக் கண்டனம் செய்வதில் முன்னர் காட்டியதைப் போன்ற உத்வேகத்தை அந்த நாட்டின் இறைமையை மீறிய ட்ரம்பின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்வதில் ஐரோப்பிய நாடுகள் காண்பிக்கவில்லை. இலாபத்துக்காகவும் அரசியல் மேலாதிக்கத்துக்காகவும் அமெரிக்காவின் வல்லமையை தொடர்ந்தும் பயன்படுத்துவதில் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என்பதை அவரின் நியூயோர்க் ரைம்ஸ் நேர்காணல் பிகாசமாக அம்பலப்படுத்துகிறது. சர்வதேச சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படவேண்டும் என்று தான் உணரவில்லை என்று கூறிய அவரிடம் அமெரிக்க இராணுவ வல்லமையைப் பயன்படுத்துவதுவதற்கான ஆற்றலில் ஏதாவது மட்டுப்பாடுகள் இருக்குமா என்று கேட்கப்பட்டபோது தனது சொந்த மனத்தினால் மாத்திரமே அதை நிறுத்த முடியும் என்று பதிலளித்தார். சர்வதேச சட்டம் தனக்கு தேவையில்லை என்றும் இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் அமெரிக்காவின் உதவியுடன் நிறுவப்பட்ட உலக ஒழுங்கு இன்று அநாவசியமான ஒரு சுமையாக இருக்கிறது என்றும் ட்ரம்ப் கூறிய வார்த்தைகள் உலகம் வரும் நாட்களில் எதிர் நோக்கப்போகும் ஆபத்துக்கு கட்டியம் கூறுகிறது. https://arangamnews.com/?p=12595
  15. கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.! Vhg ஜனவரி 17, 2026 கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(16.01.2026) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://www.battinatham.com/2026/01/33.html
  16. பிரஜா சக்திக்கு எதிராக யாழில் ஆரம்பிக்கப்படவுள்ள கையெழுத்து போராட்டம் ! 17 Jan, 2026 | 10:56 AM பிரஜா சக்தி என்பது ஜே.வி.பி. கட்சியை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே தவிர அது மக்களுக்கான திட்டம் கிடையாது. பிரஜா சக்திக்கு எதிராக எமது மாநகர வட்டாரத்தில் இருந்து கையெழுத்து வேட்டையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளேன் என தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான அ.நிசாந்தன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (16) யாழில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரியவருகையில், வறுமை ஒழிப்பு என்ற போர்வையில் பிரஜா சக்தி என்ற ஒரு திட்டத்தினை ஜேவிபி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அந்தப் பிரஜா சக்தியில் தமது கட்சியின் நேரடி உறுப்பினர்களை அல்லது விசுவாசிகளை ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற வட்டாரங்களிலும் நியமித்துள்ளார்கள். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் வேறு தேர்தல்களை இலக்காக கொண்டும், கட்சியை வளர்ப்பதை நோக்காகக் கொண்டும் இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் எண்ணக்கருவிலேயே இந்த பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது. ஆகையால் இந்தப் பிரஜா சக்தி திட்டத்தினை நான் வன்மையாக எதிர்க்கின்றேன். பிரஜா சக்தி என்பது இந்த அரசையும் தாண்டி ஒருபடி மேலே வந்துள்ளது. அரசாங்கத்தின் பிரதேச செயலகளின் கீழுள்ள கிராம சேவகர்களே இதுவரை அந்த கிராமத்தின் தேவைகளான வீடு, காணி, உணவுத் தேவை, வறுமை, வாழ்வாதாரம் போன்ற விடயங்களை அரசாங்கத்தின் உதவி மூலம் பெற்றுக் கொடுப்பார்கள். ஆனால் அதை மழுங்கடிக்கும் வகையில் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டுள்ளது. என்.பி.பி என்பதை தாண்டி ஜேவிபியானது இன்று வடக்கு கிழக்கிலே மையம் கொண்டுள்ளது. ஜேவிபி தமது கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் அடிப்படையிலேயே இந்த பிரஜா சக்தி ஆரம்பிக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் காலத்தில் சுனாமி ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகாவும் இணைந்து ஒரு சுனாமி கட்டமைப்பை உருவாக்க பேச்சுவார்த்தைகளை நடாத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு தயாரானார்கள். இதன்போது இன்று ஆட்சி செய்கின்ற ஜேவிபியினர் அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அதாவது, அரசாங்கமானது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புடன் எந்த விதமான உடன்படிக்கையையும் மேற்கொள்ள முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்று வழக்கு மூலம் சுனாமி கட்டமைப்பை தடுத்தார்கள். இன்று நான் கேட்கிறேன், பிரதேச செயலர் தலைமையிலான கட்டமைப்பின் கீழ் கிராம சேவகர்கள் இருக்கின்ற நிலையில், அரச கட்டமைப்புக்கு நிகரான இன்னுமொரு கட்டமைப்பான பிரஜா சக்தியை உருவாக்கி அரசாங்க கட்டமைப்பை மீறியிருக்கின்றார்கள். பிரஜா சக்தியை வடக்கு-கிழக்கில் நாங்கள் அனுமதிக்க முடியாது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் இது தொடர்பாக ஒரு தெளிவான அறிவிப்பை விடுத்து பிரஜா சக்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் அது பாராட்டத்தக்க விடயம். பிரஜா சக்திக்கு எதிராக மாநகர சபைக்கு உட்பட்ட எனது வட்டாரத்திலிருந்து கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளேன். மேலும் இந்த கையெழுத்துப் போராட்டத்தை ஏனைய பிரதேச சபைகளுக்கும் கொண்டு செல்ல உள்ளேன். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். சுயநிர்ணய உரிமை அதாவது, தமிழர்களை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் கூறி வருகின்றோம். இதற்காக நாங்கள் 75 வருடங்களாக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராடி வருகின்றோம். இன்று ஆட்சியில் இருக்கும் ஜேவிபி கட்சியினர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/236251
  17. மலையகத் தமிழ் மக்கள் புறக்கணிப்பு : நிவாரணம், மீள் கட்டுமானத்தில் முரண்பாடுகள் – உடனடி தீர்வுகளை முன்வைத்த மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம் 17 Jan, 2026 | 11:21 AM டித்வா பேரிடருக்குப் பின்னர் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானச் செயற்பாடுகளில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுகின்றனர் என மக்கள் போராட்ட முன்னணி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. 2026 ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை எனவும், அரச இயந்திரத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக அவர்கள் மேலும் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு: பேரிடரில் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தகவல்கள் மற்றும் தரவுகள் முறையாக பதிவுசெய்யப்படவில்லை. தோட்டப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் நிவாரணப் பொருட்கள் சீரான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை வசதிகள், குறிப்பாக ஆண் – பெண் தேவைகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை. அரசாங்கத்தின் நிவாரண திட்டங்கள், சுற்றுநிரூபங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு அவர்களின் தாய் மொழியான தமிழில் சரியான நேரத்தில் வழங்கப்படவில்லை. மலையகத் தோட்டப் பகுதிகளில் கடுமையாக சேதமடைந்த பாதைகள் மற்றும் நிலப்பரப்புகளின் மீள் கட்டுமானம் தொடர்பில் தெளிவான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. வீடுகள் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையை மதிப்பிடுவதிலும், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கட்டட ஆய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், பாதுகாப்பற்ற வீடுகளிலேயே மீண்டும் குடியேறுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அரச நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்மையால், வாழ்வாதாரம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இழக்கும் அபாயம் மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்மொழிவுகள் : இதனுடன், மக்கள் போராட்ட முன்னணி பல முக்கிய யோசனைகளையும் முன்வைத்துள்ளது. அதன்படி, மலையகத்தின் அனைத்து குடியிருப்பு பகுதிகளும் முழுமையான விஞ்ஞான ரீதியான நில ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் அறிக்கைகள் தமிழ் மொழியிலும் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் வெளியிடப்பட வேண்டும். இயற்கைப் பேரிடரால் முழுமையாக பாதிக்கப்பட்டு மீண்டும் குடியேற இயலாத தோட்டப் பகுதிகளில் வாழ்வோருக்கு, அரசாங்கம் அறிவித்துள்ள ரூ.50 இலட்சம் பெறுமதியான வீடு அல்லது காணி பெறுவதற்கான ரூ.50 இலட்சம் நிதி உள்ளிட்ட அனைத்து நிவாரணங்களும் எந்தவொரு பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும். ஆபத்தான லயன் குடியிருப்புகள் மற்றும் தற்காலிக வீடுகளில் வாழ்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, குடும்பத்துக்கு 20 பேர்ச் காணியுடன் நிலையான குடியிருப்பு வழங்கப்பட வேண்டும். தேவையான நிலப்பரப்புகளை அரசாங்கம் சட்டபூர்வமாக கையகப்படுத்தி, உறுதி பத்திரங்களுடன் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், 1972 ஆம் ஆண்டு காணி சீர்திருத்தச் சட்டத்தின் 3B பிரிவின் அடிப்படையில், தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்படும் காணிகளில் ஏக்கரில் எட்டில் ஒரு பங்கு (20 பேர்ச்) மலையகத் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு மலையக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் படி, தோட்டப் பகுதிகளில் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்படாத நிலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, அனர்த்தங்களை கையாள விசேடமாக மலையக கிராமிய அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் ஒருங்கிணைப்பு சபை ஒன்றை நிறுவ வேண்டும் என்றும், புறக்கணிப்பு தொடர்பில் மக்கள் முறையிடக் கூடிய தனியான குறைகேள் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைகள் மீது ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி, மலையகத் தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236257
  18. முல்லைத்தீவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு பலி ! 17 Jan, 2026 | 01:11 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் சனிக்கிழமை (17) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார். வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/236269
  19. ஈரானில் போராட்டங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது 17 January 2026 ஈரானில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக இதுவரை 3,090 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். இந்தநிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://hirunews.lk/tm/441082/death-toll-from-protests-in-iran-exceeds-3000
  20. 2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம் விக்னேஸ்வரன் கோபிகா, கல்வியில் சிறப்பு கற்கை இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், 'தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033' (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் இரண்டாவது பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றன. சீர்திருத்தத்தின் பின்னணியும் நோக்கமும் 2048 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு முழுமையான அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்ற தேசிய இலக்கை நோக்கியே இச்சீர்திருத்தங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் ஆகிய மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்ட இத்திட்டம், வெறும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாது, ஒரு சமூக-பொருளாதார மறுசீரமைப்பாகும். 2026 ஜனவரி முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஐந்து பிரதான தூண்கள் புதிய மாற்றங்கள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன: 1. கலைத்திட்ட மறுசீரமைப்பு: பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 21ஆம் நூற்றாண்டின் திறன்களான டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்குதல். 2. ஆசிரியர் பயிற்சி: புதிய கற்பித்தல் முறைகளுக்காக 10,000 முதன்மைப் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல். 3. உட்கட்டமைப்பு மேம்பாடு: பாடசாலைகளுக்கிடையிலான வள ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, வகுப்பறை மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைத்தல். 4. மதிப்பீட்டு முறைகள்: பரீட்சை மைய முறையிலிருந்து விலகி, 'தொடர்ச்சியான மதிப்பீடு' (Continuous Assessment) மற்றும் GPA முறையை அறிமுகப்படுத்துதல். 5. சமூக பங்களிப்பு: பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே புதிய முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். பாடசாலை நேர மாற்றமும் சவால்களும் செயற்பாடு சார்ந்த கற்றலுக்காகப் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க எடுக்கப்பட்ட முடிவு, ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகப் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில், மாணவர் நலன் கருதி பாடசாலை நேரம் 1.30 மணி வரை எனத் தீர்மானிக்கப்பட்டது. இது மாணவர்களின் சோர்வைக் குறைக்கும் அதேவேளை, மேலதிக செயற்பாடுகளுக்கான நேரத்தையும் உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மாற்றங்கள் ஆரம்பக் கல்வியில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக 'செயற்பாட்டுப் புத்தகங்கள்' அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தரம் 6 முதல் 9 வரையிலான மாணவர்களுக்கு 'கடன்' (Credit) அடிப்படையிலான கற்றல் மற்றும் நிதிசார் கல்வியறிவு, தொழில்முனைவு போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு முக்கிய நகர்வாகும். தற்போதைய சாதாரண தரப் பரீட்சை முறையானது மாணவர்கள் ஒன்பது பாடங்களைக் கற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களுக்குக் கடும் மன அழுத்தத்தையும், பாடசாலை நேரத்திற்கு அப்பால் மேலதிக வகுப்புக்களை (Tuition) நாடிச் செல்லும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்திற் கொண்டு 2029 இல் முதன்முறையாக நடத்தப்படவுள்ள புதிய சாதாரண தரப் பரீட்சையில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. பாடங்களின் எண்ணிக்கை குறைப்பு புதிய முறைமையின் கீழ், ஒரு மாணவர் தோற்ற வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை 9 இலிருந்து 7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பாடச் சுமையைக் குறைப்பதோடு, அவர்கள் கற்கும் விடயங்களை ஆழமாகவும் செய்முறை ரீதியாகவும் உள்வாங்க வழிவகுக்கும். 2. பாடக் கட்டமைப்பு (Core & Electives) மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதி செய்யவும், அதேவேளை அவர்களின் தனிப்பட்ட ஆர்வத்தை ஊக்குவிக்கவும் பாடங்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: • கட்டாயப் பாடங்கள் (Common Core Curriculum - 5): 1. தாய்மொழி (சிங்களம் அல்லது தமிழ்) 2. ஆங்கில மொழி 3. கணிதம் 4. விஞ்ஞானம் 5. சமயமும் விழுமியக் கல்வியும் • விருப்பப் பாடங்கள் (Elective Subjects - 2): மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்குகளுக்கு ஏற்ப பின்வரும் தொகுதிகளில் இருந்து இரண்டு பாடங்களைத் தெரிவு செய்யலாம்: * சமூக அறிவியல்: வரலாறு, புவியியல். * தொழில்நுட்பம்: தகவல் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், உணவுத் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம். * கலை மற்றும் ஆரோக்கியம்: அழகியல் பாடங்கள் (சங்கீதம், நடனம், சித்திரம்), சுகாதாரம் மற்றும் உடற்கல்வி. 3. மதிப்பீட்டு முறையில் மாற்றம் (GPA அறிமுகம்) இதுவே இந்தப் புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இதுவரை நடைமுறையிலிருந்த ஏ (A), பி (B), சி (C), எஸ் (S), எஃப் (F) என்ற தரப்படுத்தல் முறை நீக்கப்பட்டு, தரப் புள்ளிச் சராசரி (GPA) முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. • தோல்வி (Fail) என்ற நிலை இல்லை: புதிய முறைமையின் கீழ் எந்தவொரு மாணவரும் 'தோல்வியடைந்தார்' எனக் கருதப்பட மாட்டார்கள். • தொடர்ச்சியான மதிப்பீடு (70:30 விகிதம்): இறுதிப் பரீட்சைக்கு மாத்திரம் 100% புள்ளிகளை வழங்காமல், 70% புள்ளிகள் இறுதிப் பரீட்சைக்கும், 30% புள்ளிகள் பாடசாலையில் நடத்தப்படும் 'தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கும்' (Assignments, Projects, Attendance) வழங்கப்படும். • மன அழுத்தக் குறைப்பு: ஒரு மாணவர் ஒரு பாடத்தில் குறைவான புள்ளிகளைப் பெற்றாலும், அது அவருடைய ஒட்டுமொத்த GPA புள்ளிகளைப் பாதிக்காது என்பதோடு, அவர் அடுத்த கட்டத்திற்கு (உயர்தரம் அல்லது தொழிற்கல்வி) செல்வதற்குத் தடையாக இருக்காது. உயர்தரம் மற்றும் திறனாய்வுத் தேர்வுகள் 2027 முதல் உயர்தரப் பிரிவில் 'இரட்டைப் பாதை' (Dual Pathway) முறை அறிமுகமாகிறது. பல்கலைக்கழகம் செல்ல விரும்புவோருக்கு 'கல்விப் பாதை'யும், விரைவாக வேலைவாய்ப்பைப் பெற விரும்புவோருக்கு 'திறன் பாதை'யும் (NVQ சான்றிதழுடன்) வழங்கப்படும். மேலும், தரம் 9 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'உளவியல் தேர்வு' (Psychometric Test), மாணவர்கள் தங்களின் இயல்பான திறமைகளைக் கண்டறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவும். தொழில்நுட்பம் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கோடிங் (Coding) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் ஆளுமையைச் செதுக்க 'ABCDE' (Attendance, Belongingness, Cleanliness, Discipline, English) என்ற புதிய கட்டமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இது கல்வியுடன் ஒழுக்கத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். வரப்பிரசாதமா அல்லது சுமையா? இப்புதிய சீர்திருத்தம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சில சவால்களையும் கொண்டுள்ளது: • வரப்பிரசாதங்கள்: பரீட்சை பயம் குறைதல், தொழில்சார் திறன்கள் மேம்படுதல், பாடச் சுமை குறைதல் மற்றும் நெகிழ்வான கற்றல் சூழல். • சுமைகள்: கிராமப்புற பாடசாலைகளில் நிலவும் உட்கட்டமைப்பு மற்றும் இணைய வசதி குறைபாடுகள், ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சி கால அவகாசம் இல்லாமை மற்றும் தொகுதி நூல்களில் (Modules) காணப்படும் தொழில்நுட்பத் தவறுகள். 2026 புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது ஒரு மாற்றத்தின் ஆரம்பமே. இது வெற்றியடைய வேண்டுமாயின், வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் மற்றும் ஆசிரியர்கள் இத்திட்டத்தின் உண்மையான பங்காளிகளாக மாற்றப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை மட்டும் கருத்திற்கொண்டு இதை நடைமுறைப்படுத்தினால், இது இலங்கையின் எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் 'வரப்பிரசாதமாக' அமையும் என்பதில் ஐயமில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2048-இலக்கை-நோக்கிய-இலங்கையின்-கல்விப்-பயணம்/91-371129
  21. முடியவில்லை இவர்களுக்கு எத்தனை கடவுள்கள் தேவைபடுகின்றது இந்தியாவில் இருந்து இறக்குமதியான அனுமான் ஐயப்பரும் இராமர் சீதை போதவில்லை. மனிதனின் காலை தொட்டு கும்பிடும் இந்திய முறைறையை விரிவாக்கி கொண்டே வருகின்றார்கள். சிறுவர்கள் தொடக்கம் திரு நியாயம் அவர்களின் கண்டுபிடிப்பில் சொல்வதானால் கிழட்டு மூதாட்டிகள் வரை 😭 எமக்கு இறைவன் கொடுத்த அரும்பெரும் பொக்கிஷம் 🙄 யாழ்பாணத்து வீதியில் சாதாரணமாக நடந்து போகின்றதாம் காணொளிகள் வேறு அனுப்புகிறார்கள. அது நடை பயிற்சி
  22. பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை! adminJanuary 16, 2026 இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) நகரில், பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை மக்கள் நடமாட்டம் உள்ள கடையொன்றில் வைத்து இரக்கமற்ற முறையில் குத்திக் கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதான நிமலராஜா மதியபரணம் என்பவரே இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தைச் செய்தவர். செஃப்டன் (Sefton) பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த தனது மனைவி நிலானி நிமலராஜாவை (44), கடந்த ஜூன் 20 அன்று மதியபரணம் கத்தியால் தாக்கிப் படுகொலை செய்தார். நிலானி தனது மகள்களுடன் அந்தக் கடைக்கு மேல் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். “அம்மாதான் எனக்கு எல்லாமே. இந்தச் சம்பவத்தால் நான் என் அம்மா, அப்பா, வீடு என அனைத்தையும் இழந்துவிட்டேன். தந்தையர் குடும்பத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும், அதை அழிப்பவர்களாக இருக்கக் கூடாது. என் தந்தை எனக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.” பாதிக்கப்பட்ட நிலானி, ஒரு கனிவான மற்றும் ஒழுக்கமான பெண்ணாக வாழ்ந்தவர் என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்தார். https://globaltamilnews.net/2026/226663/
  23. எவ்வளவு மோட்டுதனமாக அமெரிக்க வாக்காளர்கள் நடந்து இருக்கின்றார்கள் ☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.