stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
Vijay: `ஆனந்துக்கு ரூ.3 கோடி கடன்; தாய், தந்தைக்கு.!' - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய்யின் அசையும் சொத்து 404 கோடி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சுயமாக வாங்கிய அசையாச் சொத்தின் கொள்முதல் விலையாக 92,76,03,409 ரூபாய் உள்ளதாகவும் 5 கார்கள் மற்றும் 1 TVS XL வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தவிர, விஜய் யார் யாருக்கு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறார் என்ற பட்டியலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி N. ஆனந்திற்கு 3 கோடி கொடுத்திருப்பதாகவும், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கு 3 கோடியும், அவரது தாய் சோபா சந்திரசேகருக்கு 8 லட்ச ரூபாயும் கடன் கொடுத்திருப்பதாக விஜய் வேட்மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் கொடுத்த கடன் விவரங்கள் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் Tvk Vijay: தந்தைக்கு 3 கோடி; தாய்க்கு 8 லட்சம் - வேட்புமனுவில் விஜய் கொடுத்த கடன் விவரங்கள் | 3 crore to his father, 8 lakh to his mother – Loan details declared by Vijay - Vikatan டிஸ்கி: இந்திய வரலாற்றிலேயே அப்பா அம்மாவுக்கு கொடுத்த பணத்தை கடன் என்று லிஸ்டிய பாசமான பிள்ளை விஜய்
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
இப்ப தனியே காஸ் விலையால் மட்டும் விசர் ஏறுவது தவிர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன்😂
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
T20 formatக்கு spin bowlers கூடுதலா இருக்கனும். முதல் மேட்ச்லயே Karthikஐ சேர்த்தது தப்பு. ரெண்டு மேட்ச் பார்க்க விடனும். சுரேஷ் ரெய்னா ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி, சஞ்சுவை ஓப்பனிங் இறக்கவே கூடாது. சஞ்சுவுக்கு ஒன் டவுன்தான் கரெக்ட். சின்னப்பையன் Ayush பவர்ப்ளேயில் சுலபமா சுத்தி அடிச்சி விளையாடி 30-40 ரன்கள் எடுக்கலாம். அதன்பிறகு வர்ற சஞ்சு எந்த ஓவரிலும் சிக்ஸ் அடிக்கக்கூடிய அளவிற்கு வலுவான பேட்ஸ்மேன். Brevis இல்லாதப்போ, Matt Shortஐ எடுத்தது தவறு, Brevis இடத்துக்கு காட்டடி மன்னன் Urvilதான் கரெக்ட். Pace bowlers... 1. Khaleel 2. Henry 3. Jamie Overton 4. Anshul Kamboj போதாதற்கு 2 ஓவர்ஸ் அளவிற்கு வீசக்கூடிய Dubeவும் மிதவேக பந்து வீச்சாளர்தான். இத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையா??!! ஆனா spin bowler Noor மட்டும்தான். CSK நிர்வாகம் திருந்தவே திருந்தாது. என்ன ஐடியாவில் ப்ளேயிங்11 தேர்ந்தெடுத்தானுங்கன்னே தெரியல. Anshul Kamboj இடத்துக்கு Rahul Chahar or Hosein or Prashant Veer இருக்கனும். பேட்டிங் லைன்-அப் மாத்தனும். முதல் மேட்ச்சே தோற்கலாம், தப்பில்ல. ஆனா அதுக்காக இப்டியா கேவலமா...!!! ( பிரதி ...முகநூலில் இருந்து) என்னைப்போல ஒரு சி.எஸ்.கே ....விசிறி போல கிடக்கு ..உண்மையை சொல்லியிருக்கார் // இன்று காலையில் இருந்தே ...மனசு வெறுமையாகிட்டுது
- Today
-
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
அமைச்சர் என்னமோ...வெள்ளையும் சொள்ளையுமாக மட்டைக்கட்டு கட்டுகிறார்....அங்கு நடப்பதோ வேறு.. CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
தேயிலை - எண்ணெய் விற்பனை அடிப்படையில், இரான் கடன் கொடுகாதாக ஆயுதம் வாங்க. இது சாத்தியம். (ஆனல், ஈரான் cluster குண்டு கொடுத்தது இதுவே எல்லாவறையும் குழப்புவது) அதனால் தான் சொல்லுவது , ai ஓ அல்லது வேறு எங்கும் அறிந்தாலும், சாதரண அடிப்படை அலசலுக்கு அறிந்தவை ஒத்து வரவேண்டும் சிறிலங்கா இரானிடம் கான் பெற்று இரானிடம் இல்லாத ஆயுத தொழில் நுட்பத்தை (தரகு கூலியும் கொடுத்து) ஏன் வாங்க வேண்டும்? ai, இணையத்தில் இருக்கும் தகல்வல்கள் மேற்கால் வேண்டும் என்று பரப்ப பட்டவையும் கூட.
-
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு adminMarch 30, 2026 அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன. அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர். தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற காவல்துறையினரை இடித்துக் கொலை செய்கின்றனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. இவை எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன. எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது. அண்மையிலே காவல்துறைஅதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரர், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்? உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது. இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231269/
-
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல்
அரசியலமைப்பு மூலமான தீர்வின் ஊடாக போரை நிறுத்த அயராது உழைத்தவர் நீலன் - நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் நினைவுகூரல் Published By: Vishnu 30 Mar, 2026 | 10:33 PM (நா.தனுஜா) படுகொலை செய்யப்பட்ட நீலன் திருச்செல்வம் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியதாகவும், போரை நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அயராது உழைத்ததாகவும் இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி நீலன் திருச்செல்வம் தொடர்பில் பிரசன்னா சண்முகதாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்டுள்ள (Neelan: Unsilenced) எனும் ஆவணத்திரைப்படத்தைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டு, அதுபற்றி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே எரிக் சொல்ஹெய்ம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த ஆவணப்படம் இலங்கையின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறை தொடர்பான பல நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். அதேபோன்று 'இந்த ஆவணத்திரைப்படம் தமிழ் சட்டத்தரணியும், அரசியல்வாதியுமான எனது நண்பர் நீலன் திருச்செல்வத்தைப் பற்றியதாகும். அவர் இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவிய பிளவுகளை சீரமைப்பதற்குப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து போராடியவராவார். நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும், போரை நிறுத்துவதற்கும் ஏதுவான வகையில் அரசியலமைப்பின் ஊடாகத் தீர்வு காண்பதற்கு அவர் அயராது உழைத்தார். உலகளாவிய அமைதித் தூதுவராகவும், மனித உரிமை ஆர்வலராகவும் திகழ்ந்த அவர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மிகச்சிறந்த மனிதராவார்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'துரதிஷ்டவசமாக 1999 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலின் விளைவாக, இந்தக் கொடூர மோதலினால் பலியான பலரில் அவரும் ஒருவராக மாறினார். பின்னாளில் சமாதானத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திப் பணியாற்றிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்ரன் பாலசிங்கம், இதுவரை முன்வைக்கப்பட்டவற்றில் நீலனின் அரசியலமைப்பு முன்மொழிவுகளே மிகச்சிறந்தவை எனக் குறிப்பிட்டார்' என்றும் அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினையின் மையமாகத் திகழும் அரசியலமைப்பு சார்ந்த சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆவணத்திரைப்படம் உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/242345
-
இஷாரா செவ்வந்திக்கு சிஐடி பிரிவுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்!
CCDயில் இஷாரா செவ்வந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா Mar 30, 2026 - 10:20 PM கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் (CCD) தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபரின் பிறந்ததினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) எட்டப்பட்ட நிலையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிற்குள்ளேயே கேக் வெட்டிக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவிற்கு தனிப்பட்ட ஒற்றர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. புலனாய்வுப் பிரிவினர் மூலம் இத்தகவலை உறுதிப்படுத்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர், உடனடியாக பிராந்திய பொறுப்பதிகாரியைத் தொடர்புகொண்டு குறித்த செயற்பாட்டைத் தடுக்குமாறு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்கவை அங்கு அனுப்பி வைத்ததுடன், தாமும் நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது, சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் சகோதரர் கேக் ஒன்றைக் கொண்டு வந்திருப்பதும், அவரது பெரியம்மா மற்றும் மகன் ஆகியோர் அங்கு வருகை தந்திருப்பதும் தெரியவந்தது. சந்தேகநபரை சிறைக்கூண்டிலிருந்து வெளியே அழைத்து வந்து, அங்குள்ள ஓரிடத்தில் கேக் வெட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டிருந்தமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது. இதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், "கேக் வெட்டும்போது புகைப்படம் எடுக்க வேண்டாம், பின்னர் அவை இணையத்தில் வெளியாகிவிடும்" என அவர் அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபரின் உறவினர்கள் மற்றும் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 15 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. பொறுப்பதிகாரியின் இத்தகைய செயற்பாடு குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். விசாரணைகளின்படி, சந்தேகநபரின் சகோதரருடன் குறித்த பொறுப்பதிகாரி நீண்டகாலமாகத் தொலைபேசியில் உரையாடி வந்துள்ளமையும், அவரே இந்தப் பிறந்தநாள் விழாவிற்குத் திட்டமிட்டு வாய்ப்பளித்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, குறித்த பொறுப்பதிகாரியின் சேவை விரைவில் இடைநிறுத்தப்படலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmndfbkxc000a356p3gen4pog
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
Did Iran supplied arms to Sri Lanka? இந்த கேள்வியை Gemini யிடம் கேட்டுப் பார்த்து உங்களை update செய்து கொள்ளவும். நன்றி
-
வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர்
வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர் 30 Mar, 2026 | 04:18 PM வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் அவற்றினை நிச்சயம் வலுவூட்டும். இந்தத் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்து வருமானத்தைக் கூட்டிக்கொள்ள முடியும். வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அது தொடர்பான விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிதியைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்மொழிந்துள்ளமையின் ஊடாக அவற்றின் வருமானங்கள் நிச்சயம் அதிகரிக்கும்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தச் செயற்றிட்டங்களை நிறைவுறுத்துவதற்குத் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள 22 பிரதேச சபைகளால் 54 திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கு ஒவ்வொரு திட்டம் என்ற அடிப்படையில் 22 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/242326
-
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
யாழில் உழவு இயந்திரத்தால் பொலிசாரை மோதி கொலை செய்த சம்பவம் - இருவர் கைது Mar 30, 2026 - 09:36 PM யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்ததுடன், மற்றுமொரு உத்தியோகத்தருக்குப் படுகாயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சனிக்கிழமை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தைச் செலுத்தியவர், பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்லும் நோக்கில் வேகத்தை அதிகரித்து அவர்கள் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 50 வயதுடைய ஹெட்டியாராச்சி அல்பேர்ட் எனும் பொலிஸ் சார்ஜன்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றைய உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், உழவு இயந்திரத்தின் உரிமையாளரை நேற்று (29) கைது செய்தனர். அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ தினத்தன்று சாரதிக்கு உதவியாளராகச் சென்ற இளைஞன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று(30) பாலாவி பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உழவு இயந்திரத்தைச் செலுத்திய பிரதான சந்தேகநபர் தொடர்ந்தும் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnddr87r0009356p3bbw8ta0
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
அந்த நேரத்தில் - நாடுகளுக்கு இடையேயான ஆயுத விநியோகத்தில் - இரான் un தடைகளுக்கு இருந்த்தது. சிறிலங்கா விடயத்தில் இரான் இரகசியமாக செய்ய முடியாது. (ஹிஸ்புல்லாஹ், ஹூத்தி போன்றவைக்கு கொடுப்பது அனாமதேயம். ஏனெனில் அவை அரசு சாரா அமைப்புகள்) ருசியாவுக்கு கொடுக்கும் போது இரானுக்கு UN தடைகள் இல்லை. மேற்கு முறித்த jcpoa மூலம் தடைகள் விலக்கப்பட்டு இருந்தது ஆனால். மேற்றுகின் தடை இருந்தது, மேற்கின் தடை UN கடை அல்ல. இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். இந்த வேறுபாட்டை , அதன் விளைவை இணையத்தில் ஹெடி அறிந்த்து கொள்ளலாம். கொத்தாக தோற்றம் அப்பதால் அவை cluster குண்டு அல்ல. (cluster ) குண்டு போடப்பட்ட பின் திசை, குறிவவைக்கப்பட்ட இலக்கை மாற்ற முடியாது. இந்த ஏவுகணை 1 பெரியஅளவு, மற்றும் பிரியும் ஏவுகணைகள் சிறியவை, இறுதியான terminal phase இல் கூட திசை, இலக்கை மாற்றலாம் (maneuverable). சிலவற்றில் ஒவ்வொரு சிறிய கணையையும் manoeuvre பண்ண முடியும். எது ஆயினும், நான் சொல்லியவை hardfacts. எனவே சொன்ன கருத்தை மாற்றாது. அனால், இரான், சிறிலங்கா உறவு அந்த நேர வசதிக்காக. தேயிலை - எண்ணெய் வியாபாரத்தை வசதிப்படுதியது அமெரிக்கா பின் இருந்து. வசதி. தேவை அற்றுப்போக உறவும் இல்லை இஸ்ரேல் - சிறிலங்கா உறவே தத்துவத்தின் அடிப்படையில் - மகாவம்ச, விவிலிய கால வேறுபாட்டை தவிர்த்து ஒரே தன்மை அடிப்படையில் - நிரந்தரமானது. மற்றது அவற்றின் பாதுகாப்பு வகிபாகம் - சிங்களதத்துக்கு எப்போதும் தமிழரால் அச்சுறுத்தல், இஸ்ரேல் அரபு (முஸ்லிம்களால்) அச்சுறுத்தல் (அதன் நிகழ் கால மாற்றம் - கிந்தியா சிங்களத்துக்கு ஆதரவு, தமிழர் எதிர். அரபிகள் இஸ்ரேலுக்கு உள்ளால் மிகவம் நெருக்கம் (காரணம் இருக்கிறது), இரான் (பெர்சியன்) இஸ்ரேல் க்கு எதிர்.) அனால், ஈடுபாடு அவ்வப்போது கூடும், குறையும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ETV Bharat NewsThalapathy Vijay Lists His Luxurious Rolls Royce Ghost fo...Popular South star Thalapathy Vijay is reported to have put his luxurious car Rolls Royce Ghost for sale years after a legal battle over the car. The actor purchased the car back in 2012 and it was on
-
5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்
5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் Mar 30, 2026 - 08:07 PM 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்ற முடியும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது தொடர்பான அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். விசேட தேவையுடைய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்த விரிவான தகவல்கள் அறிவுறுத்தல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு: 0112 784 537 / 0012 786 616 / 0112 784 208 / 0112 786 200 / 0112 784 201 அவசர தொலைபேசி இலக்கம்: 1911 பெக்ஸ் (Fax): 0112 784 422 மின்னஞ்சல்: gr5schexam@gmail.com https://adaderanatamil.lk/news/cmndak07n0007356pqr4bypmw
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மனைவி பெயரில் உள்ளது மட்டும்தான் தேர்தல் கணக்கில் காட்ட வேண்டும் என நினைக்கிறேன். RR 2012 கார் என நினைக்கிறேன். வித்திருக்க கூடும். வரி கட்டுவதில் பிரச்சனையான காரை கணக்கில் காட்டாமல் விட்டால் அது பிடிபடும். சம்பளம், சொத்து மாறுபாடு. நானும் அவதானித்தேன். இன்னும் பல சொத்து சந்ததியினர் பெயரில் trust இல் இருக்க கூடும். ஆனால் இதை காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை என நினைக்கிறேன். வேட்பு மனு தாக்கலில் talk of the town இண்டைக்கு அண்ணன் சீமான் தான். ஆக்டோபர் 2025 இல் அண்ணன் 25 ஏக்கர் நிலத்தை 50 இலட்சத்துக்கு வாங்கி உள்ளார். பலர் அதை இப்போ 1 கோடிக்கு எனக்கு தாங்க அண்ணே என கேட்கிறார்கள். 6 மாதமுமில்லை 100% இலாபம். விற்பாரா சீமான்😂
-
கருத்து படங்கள்
தமிழ்லீடர் கருத்துப்படம்.
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படங்கள்.
-
குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
குவைத்தில் 'இரான்' தாக்குதல் - ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு பட மூலாதாரம்,Handout கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 மார்ச் 2026, 11:06 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே போர் நிகழ்ந்து வரும் சூழலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி குவைத்தில் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் என்பவர் தான் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர். குவைத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. ட்ரோன் தாக்குதலால் சுவர் இடிந்து விழுந்ததில் சந்தான செல்வம் சிக்கிக் கொண்டார் என அவருடன் குவைத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறுகின்றனர். அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் குவைத்தில் இந்தியர் உயிரிழந்ததையடுத்து இந்திய தூதர் பிரமிதா திரிபாதி குவைத் அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 'உயிரிழந்தவரின் உடலை இந்தியா கொண்டு வருவது' தொடர்பாக குவைத் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது. குவைத் நாட்டின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், 'இரான் நடத்திய தாக்குதலால் நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தது. இதில் இந்திய குடிமகனான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாதுகாப்பற்ற பணிச்சூழல்" சந்தான செல்வத்துடன் குவைத்தில் பணியாற்றும் பொய்யாமொழி என்பவர் பிபிசி தமிழிடம் இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதன்படி, சந்தான செல்வம் கடல்நீரை நன்னீராக்கும் பிரிவில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பணி முடிந்து கொண்டு தனது அறையில் இருந்தபோது, "ஃபில்டர் ஒன்றை மாற்ற வேண்டும் என அவசர அழைப்பு வந்தது" என்கிறார் பொய்யாமொழி. மீண்டும் ஆலைக்கு சென்று பணியை முடித்து விட்டு, அறைக்கு திரும்புவதற்காக காத்திருந்த போது ட்ரோன் தாக்குதலுக்கு அந்த ஆலை இலக்கானதாகக் கூறுகிறார் பொய்யாமொழி. சந்தான செல்வன் உயிரிழந்த இடம் தற்போது ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இதனால் வெளிநபர்கள் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்கிறார் அவர். சந்தான செல்வன் உடல் தற்போது குவைத்தின் மத்திய பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. குவைத்தில் இரான் நடத்தும் தொடர் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல்களுக்கு நடுவே, தொடர்ந்து பணி செய்ய நேர்வதாகக் கூறுகிறார் பொய்யாமொழி. "எங்கு திரும்பினாலும் குண்டு சத்தமாக இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் அறையை விட்டு வெளியே வருவதில்லை. கடந்த சில நாட்களாக தங்கும் விடுதிகள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவில்லை ஆனால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது குண்டுகள் வீசப்பட்டு வருகிறது" என்றார். பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த குடும்பத்தினர் சந்தான செல்வம் உயிரிழந்தது குறித்து திங்கள் கிழமை (மார்ச் 30) தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் அனிகுருந்தான் கிராமத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோனிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர். 36 வயதான சந்தான செல்வத்திற்கு திருமணமாகி ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள பொறியியல் பொதுவர்த்தகம் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேலாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருவதாக அவரது மனைவி கௌசல்யா தெரிவித்தார். "உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்" உயிரிழந்த சந்தான செல்வனின் மனைவி கௌசல்யா பிபிசி தமிழிடம் பேசுவையில் நேற்று இரவு 8 மணி அளவில் என் கணவருடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது திடீரென "கம்பெனியிலிருந்து போன் வருவதாக கூறி தொடர்பை துண்டித்தார். பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை." என்றார். "இன்று காலை என் கணவருடன் வேலை செய்யும் நபர் ஒருவர் அழைத்து என் கணவர் உயிரிழந்த செய்தியை தெரிவித்தார். உடனடியாக நான் மீண்டும் எனது கணவரின் செல்போன் என்னை தொடர்பு கொண்டேன் தொடர்பு கொள்ள முடியவில்லை." என்கிறார் கௌசல்யா. தங்களுக்கு இரண்டு சிறிய குழந்தைகள் இருப்பதாகக் கூறும் கௌசல்யா, சந்தான செல்வனின் உடலை இந்தியா கொண்டு வர உதவி செய்வதோடு உரிய இழப்பீடு பெற்றுத்தர உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,"சந்தான செல்வனின் மனைவி கொடுத்த மனுவின் அடிப்படையில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது." என்றார். இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து சந்தான செல்வன் குடும்பத்தினரின் தொடர்பு எண் மற்றும் அரசு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கேட்டதால், இதனை பகிர்ந்துள்ளதாகக் கூறினார். குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்து வருகிறோம் என்றும் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் ஆணையர் வள்ளலார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர் சந்தான செல்வம்" என்றார். எனவே "குவைத் நாடு போரில் உயிரிழந்தோருக்கு வழங்கும் நிவராணத்துடன், சந்தான செல்வன் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். வழக்கமாக வெளிநாடுகளில் யாரேனும் உயிரிழந்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய வள்ளலார், இவர் போரால் உயிரிழந்ததால், அவருக்கான "அனைத்து நிவாரணம் மற்றும் காப்பீடு உள்ளிட்டவைகளை பெற்று" உடலை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு வாரிய உறுப்பினராக சேர்ந்திருந்தால் இழப்பீடு தொகையாக தமிழக அரசு சார்பில் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். ஆனால் சந்தான செல்வம் உறுப்பினராக பதிவு செய்யவில்லை எனக் கூறும் வள்ளலார், "விதிகளின்படி அவருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க முடியாது" என்றார். இருப்பினும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம் என்றார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1eqgdpdnq3o
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
என்னது, ஈரானால் வேறு நாடுகளுக்கு ஆயுதம் கொடுக்க முடியாதா? அப்ப ரஷியாவுக்கு Shahed வகை ட்ரோன்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஆயுதங்களை வழங்கும் செயலுக்கு பெயர் என்ன? அத்துடன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை வழங்குவது யார்? இன்று இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் கிள்ஸ்ரர் குண்டுகளும் உள்ளன என காணொளி ஆதாரங்கள் நிறைய உள்ளன்வே. ஈரான் இலங்கை யின் உற்ற நண்பன் என ஏற்றுக் கொள்வது ஈரானை ஆதரிக்கும் உங்களுக்கு அறச் சீற்றத்தை தரும் என்பதால் ஏற்க மறுக்கின்றீர்கள் என நினைக்கிறேன். ஓம் பாஸ், நெதன்யாஹுவின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
விஜய் கூறிய லிஸ்டில் அந்த ரோல்ஸ்ரோய் கார் விபரம் ஏதும் இல்லை. அத்துடன் 250 கோடி சம்பளம் பெறுவதாக அவரே கூறுகின்றார் எனும் போது அவர் காட்டிய இந்த சொத்தின் பெறுமதி மிகக் குறைவு அல்லவா? இன்னும் ஒன்றை அவதானித்தேன். வாங்கிய அனைத்தும் அவர் பெயரில் தான் உள்ளது. சங்கீதாவின் பெயரோ பெற்றோரின் பெயரோ, 18 வயதுக்கு மேல் உள்ள மகனது பெயரோ இல்லை. சங்கீதா இந்திய பிரஜை இல்லை என்பதால் அவர் பெயரில் சொத்து வாங்க முடியாமல் இருக்கலாம், ஆனால் மற்றவர்கள்..?
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
கார்க் தீவில் எண்ணெய் / வாயு (சர்வதேச) விநியோகத்துக்கு வழங்கப்படும் இடம் (terminal), உற்பத்தியாகும் இடம் அல்ல. (சர்வதேச) விநியோக வழங்கலுக்கு வருண் எண்ணை / வாயுவை இரான் நிறுத்தலாம். மற்றும் கார்க் தீவு மிகவும் சிறிது , எனவே இறங்கும் எந்த படைக்கும் கொலைக்களத்தில் இறங்குவது போல. ஆனால், கார் தீவை சொல்லிக்கொண்டு, வேறு இலக்கே இங்கே அமெரிக்காவிற்கு மேலும் அழிவு தாக்கம் , இரானுக்கு ஏறத்தாழ real-time துல்லிய உளவு கிடைப்பது. எல்லா சகதிகளிடமும் (எதோ) ஆயுத பலம் இருக்கிறது, ஆனால், மேட்ற்கு (இதுவரையில்) பொதுவாக மேலாண்மை நிலை நாட்ட மிக முக்கியமாக உதவியது துல்லிய, real-time உளவு. மற்றும், துல்லிய உளவை பாவித்து துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை இவை இரானிடம் இருக்கிறது. இரானுக்கு, கணிசமாக கிடைக்கும் துல்லிய உளவு , துல்லியமாக ஆயுத பலத்தை குறிப்பிட்ட கோளத்தில் பிரயோகிக்க கூடிய நிலை, களத்தை மேற்கிற்கு புரட்டி போட்டுள்ளது என்பதை மேற்கு சகிக்க முடியாமல் (இரத்தம்) கக்கும் நிலை.
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு Mar 30, 2026 - 04:08 PM முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு (Forensic Audit) ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை விடுத்தார். https://adaderanatamil.lk/news/cmnd21uax0002356plv3xo398
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
களவு செய்யாமல் உழைச்சு, அதை டிக்ளேரும் பண்ணும் போது கிடைக்கும் பெருமிதம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். ஸ்டாலின் - தன்னிடம் காரே இல்லை என வழமையான பல்லவியை பாடி உள்ளார். உதய்னா ஒரு படி மேலே போய் தன்னிடம் அண்டர்வேரே இல்லை என அபிடெபிட் தாக்கல் செய்தாலும் ஆச்சரியம் இல்லை. சீமான் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 50, இலட்சம் பெறுமதியான காணி வாங்கி உள்ளார் மனைவி பெயரில். காணியின் அளவை பார்த்தால் - சொல்லப்பட்ட விலை பொய் என்பது அப்பட்டமாக தெரிகிறதாம். கணவனும் மனைவியும் வேலை செய்வதில்லை. போன தடவை இருவர் காட்டியதிலும் அதிக சொத்து வந்த வழி என்ன? கேள்வி கேட்டால் அவன் தெலுங்கன்😂
-
ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
இரான் ஆயுதம் கொடுக்கமுடியாதா நிலை. un தடையை கண்காணிக்க அமெரிக்கா நிபுணத்துவதுடன் , சில அமெரிக்கா / மேட்ற்கு தலைமையிலும் un இல் பிரத்தியேக குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்கொத்தி பாம்பாக இரான் கண்காணிக்கப்பட காலம். உண்மையில், அமெரிக்காவே, இஸ்ரேல் வழியாக cluster குண்டுகளை கொடுத்தது. மற்றது , இரான் cluster குண்டுகளில் , மாற்றம் பொதுவாக குண்டு தொழில்நுட்ப்பதில் அக்கறை இல்லை, ஏனெனில் குண்டுகளை போட இரானுக்கு போர்விமான தொழில் நுட்பம் இல்லை. அனால், இப்போதுலா ஏவுகணை cluster குண்டு அல்ல. மேற்கு ஊடகங்கள் அவற்றுக்கு அனுதாபம் தேடுவகற்கு பொய்யாக அந்த ஏவுகணையை cluster குண்டு என்று பிரச்சாரம்.