stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
-
யாழின் 28வது அகவையை முன்னிட்டு உருவாக்கிய பாடல்
அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
-
ஈரான் போர்: “இது எங்கள் போர் அல்ல” – பிரிட்டிஷ் பிரதமர்
நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣
-
3வது முறையாகவும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட வாய்ப்பை இழந்தது இத்தாலி அணி
மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.
- Today
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂
-
பிரம்டனில் உள்ள தமிழின அழிப்பு நினைவகம் சிதைப்பு
Teen charged after Brampton’s Tamil Genocide Memorial defaced with derogatory messages: police By Joanna Lavoie Opens in new window Published: April 02, 2026 at 3:53PM EDT CKTB - News - Peel Police A 14-year-old boy has been charged after the Tamil Genocide Memorial at Brampton’s Chinguacousy Park was recently vandalized with derogatory spray-painted messages. Peel Regional Police said they were called to that area on March 20 after receiving reports that the memorial had been defaced. “Upon arrival, officers confirmed the vandalism and immediately assigned the investigation to the Hate Crime Unit,” police said in a news release. After a thorough investigation, a teenage boy from Brampton was arrested and charged on March 31 with two counts of mischief over $5,000. The accused, who cannot be identified under the provisions of the Youth Criminal Justice Act, is set to appear in court at a later date. “Peel Regional Police will not tolerate vandalism — especially hate-motivated crimes of spaces that are meaningful to our communities. People across the region have the right to feel safe in public spaces,“ Police Chief Nishan Duraiappah said in a release. “We thank our Hate Crime Unit for acting swiftly to locate and hold those responsible accountable.” The force recently launched a centralized Hate Crime Unit, which is aimed at enhancing its response to hate-motivated crimes and incidents as well as culturally sensitive incidents. Anyone with further information is asked to contact the Hate Crime Unit at 905-453-2121, ext. 6098, or Crime Stoppers anonymously. Joanna Lavoie Opens in new window Journalist, CP24.com
-
சிகிச்சை அடிப்படையிலான நீதிமுறை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, யேர்மனியின் Saarland மாநிலத்தில் உள்ள Voelklingen நகரில், 34 வயதான பொலிஸ் அதிகாரி சைமன் போர், 19 வயதான அஹ்மத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எட்டு நாட்கள் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, 01.04.2026 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தத் தீர்ப்பில், அஹ்மத் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பபைத் தந்திருக்கின்றது. விசாரணையின் போது குற்றம் சுமத்தப்பட்ட அஹ்மத் தனது செயல்களை ஒப்புக்கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பவத்தின் விவரங்களின்படி, ஒரு பெற்றோல் நிலைய கொள்ளைக்குப் பிறகு, அவரைத் துரத்தி வந்த பொலிஸ் அதிகாரிகளை அஹ்மத் கத்தியால் தாக்கியிருக்கின்றார். பின்னர், ஒரு அதிகாரியின் துப்பாக்கியை பறித்து சைமன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். ஆரம்பத்தில் சைமனின் குண்டு துளைக்காத கவசம் தாக்குதலைத் தடுத்தது. ஆனால் அவர் கீழே விழுந்தபோது, அவரை நெருங்கி வந்து, கவசம் பாதுகாக்காத பகுதிகளை நோக்கி, முகம் உட்பட மூன்று தடவைகள் அஹ்மத் சுட்டிருக்கின்றார். இதனால் சைமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அஹ்மத் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அஹ்மத் கடுமையான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, மாய நம்பிக்கைகள் (delusions) மற்றும் உண்மை உணர்வை இழக்கும் நிலை போன்ற அறிகுறிகள் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில், தனது செயலின் தவறை முழுமையாக உணர முடியாத மனநிலையிலேயே அவர் இருந்தார் என்று மருத்துவ நிபுணர்கள் சாட்சியமளித்தனர். யேர்மனியச் சட்டப்படி, ஒருவர் குற்றம் செய்தாலும், அந்த நேரத்தில் மனநிலை காரணமாக தனது செயலின் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால், அவரை நேரடியாக குற்றவாளியாக அறிவிக்க முடியாது. இந்த அடிப்படையில், மருத்துவ நிபுணர்களின் அறிக்கைகளை கருத்தில் எடுத்து, அஹ்மத் சமூகத்திற்கு இன்னும் ஆபத்தானவர் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவரை சிறைக்கு அனுப்பாமல், தடயவியல் மனநல மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிட்டிருக்கின்றது. இது தண்டனை இல்லை மாறாக, சிகிச்சை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. பொலிஸ் தரப்பு, இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. படம்-இன்ஸ்டாகிராம்
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
இந்த வான் ஓடத்தில் டிரம்ப் ஐயாவையும், நெத்தென்யாகு ஐயாவையும் ஏற்றி இருக்கலாமே.
-
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
GMOA முடிவுக்கு எதிராக சுகாதார அமைச்சர் கடும் நடவடிக்கை Apr 2, 2026 - 10:06 PM அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு எவ்வித நியாயமான அடிப்படையுமில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அது வெறும் அரசியல் நோக்கத்தில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்குவதற்காக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இன்று (02) ஊடகங்களுக்கு கூறியுள்ளார். பயிற்சி முடித்த 453 புதிய வைத்தியர்கள் அரசாங்க சேவையில் இணைவதைத் தடுத்து, அவர்களை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் பிணைக் கைதிகளாகப் பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த வைத்தியர்கள் நியமனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் சனிக்கிழமை (4) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இந்த கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என அவர் வலியுறுத்தினார். வைத்தியர்கள் விண்ணப்பிப்பதைத் தடுக்கும் வகையில் யாராவது அச்சுறுத்தல் விடுத்தால், அது குறித்து உடனடியாக சுகாதார அமைச்சுக்குத் தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஊடாக விசாரணைகள் நடத்தப்படும். குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்காத வைத்தியர்களின் வைத்தியசாலை சேவை மற்றும் சம்பளம் அன்றோடு நிறுத்தப்படும். அவர்கள் மீண்டும் அரச சேவையில் இணைய வேண்டுமானால், அடுத்த 1,300 பேர் கொண்ட குழுவுடனேயே இணைய முடியும். அப்போது அவர்கள் சிரேஷ்டத்துவத்தை இழந்து பட்டியலின் இறுதிக்கே தள்ளப்படுவார்கள் என அமைச்சர் எச்சரித்தார். 453 புதிய வைத்தியர்களைப் பலிக்கடாக்களாக்கி, அவர்களைப் அச்சுறுத்தி, தவறான தகவல்களை வழங்கி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் இந்தச் செயல் மனிதாபிமானமற்றது. எவருக்கும் அஞ்சாமல் சுயாதீனமாக முடிவெடுத்து அரச சேவையில் இணையுங்கள் என அமைச்சர் இளம் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhp0vcw000h356pizftwmr3
-
அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்!
அமெரிக்க பிரஜைகளுக்கு ஈரான் ஜனாதிபதியின் திறந்த கடிதம்! 02 Apr, 2026 | 03:25 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் விளைவாக, வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் அறிகுறிகள் எதுவும் இதுவரை தெரியவில்லை. இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும், ஈரான் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்காவிட்டால் அந்த நாட்டை “கற்கால நிலைக்கு கொண்டு செல்வோம்” என எச்சரித்துள்ளார். இந்த அறிக்கை, அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்காக ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கிடையே மோதல்கள் இருந்தாலும், பொதுமக்கள் மீது ஈரானுக்கு எந்தவித எதிர்மறை அணுகுமுறையும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஈரானை அச்சுறுத்தலாக சித்தரிப்பது வரலாற்று உண்மைகளுடனோ தற்போதைய நிலவரங்களுடனோ பொருந்துவதில்லை. இது சக்திவாய்ந்த அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தவறான சித்தரிப்பு” என்று கூறியுள்ளார். மேலும், எதிரி இல்லாதபோது அதை உருவாக்கி அழுத்தம் செலுத்துவது, இராணுவ ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது மற்றும் ஆயுத தொழில்துறையை தக்க வைத்துக்கொள்வது போன்ற நோக்கங்களே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அண்டை நாடுகளின் மக்களுடன் ஈரான் மக்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும், ஈரான் எப்போதும் அமைதியையும் மரியாதையையும் விரும்பும் நாடாகவே இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நாட்டின் மீது அமெரிக்கா சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் இராணுவத்தை திரட்டியுள்ளது என்றும், அந்தத் தளங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையான அச்சுறுத்தலாக உள்ளன என்றும் ஜனாதிபதி பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். “இத்தகைய சூழ்நிலையில் எந்த நாடும் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தாமல் இருக்காது. ஈரான் மேற்கொள்வது அனைத்தும் தற்காப்பு நடவடிக்கைகளே” என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த போரில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கான பிரதிநிதியாக செயல்படுகிறது என்றும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலிருந்து உலக கவனத்தைத் திருப்புவதற்காக ஈரான் அச்சுறுத்தலை உருவாக்குகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையில், அசோசியேட் பிரஸ், வெளியிட்ட தகவலின்படி, ஈரான் புதிய ஆட்சி தலைவர் சமாதான ஒப்பந்தம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் “அடிப்படையற்றது” என மறுத்துள்ளது. மேலும், இந்த போர் அமெரிக்க மக்களின் நலனுக்காக உண்மையில் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் பெசெஷ்கியான் எழுப்பியுள்ளார். “தவறான தகவல் இயந்திரங்களை தாண்டி உண்மையைப் பாருங்கள்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் அழைப்பு விடுத்துள்ளார். போரின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த மோதலை எதிர்த்து வருகின்றனர் என்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு மாத காலமாக நீடிக்கும் இந்த போர், உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலையை மேலும் பதற்றமடையச் செய்து வருகிறது. https://www.virakesari.lk/article/242567
-
உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து
உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து Apr 2, 2026 - 08:16 PM உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது பங்களிக்கவுள்ளது. தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பலப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மற்றும் வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர காலத்தில் 7% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்காகும். உலக வங்கி கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் பயணித்துள்ளது இந்த புதிய ஒப்பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும், என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த புதிய கூட்டாண்மையின் மையமாக தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காணப்படுகிறது. அடுத்த தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தனியார் முதலீடுகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி மற்றும் திரட்டப்பட்ட முதலீடுகள் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) வழங்கவுள்ளது. அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வரையிலான குறைந்த வட்டி கடன் வசதியை உலக வங்கி வழங்கவுள்ளது. அரச ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலராக உயர்த்த இந்த கூட்டாண்மை ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் 2030க்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறுதல். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2026-2030 க்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரத்யேக முதலீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். 2025 நவம்பரில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எதிர்கால அனர்த்தங்களின் போது விரைவாக மீண்டெழவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்படும். இந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் முக்கிய திட்டமாக REVIVE (Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் டொலர் முதலீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் இத்திட்டம் யாழ்ப்பாணம், பாசிக்குடா, திருகோணமலை மற்றும் அருகம்பே ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டது. இத்திட்டம் 2031 ஆம் ஆண்டளவில் 3,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் பணியாற்றி வருவதுடன், தற்போது கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 13 செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhl4ftv000d356pdjisor27
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் - விஜய் பிரச்சாரம் 02 Apr, 2026 | 03:36 PM ''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் திகதி அன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சியின் தலைவரான விஜய் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் திகதியான இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், '' தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வேறு. நான் வேறல்ல. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அத்துடன் பிரச்சாரத்தில் திரண்டு இருந்த மக்களை பார்த்து, கேஸ் புக் செய்தால் புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டிற்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?.. மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால்.. இதனை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால்.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார்கள். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் .. உடனடியாக புதுடெல்லிக்கு செல்வார். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான். அதன் பிறகு, திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு இதெல்லாம் சொன்னீர்களே....! செய்தீர்களா..? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இது சாதாரண தேர்தல் அல்ல. ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். நான் பல வலிகளை தாங்கிக் கொண்டு தான் உங்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன்.'' என்றார். முன்னதாக திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார். https://www.virakesari.lk/article/242569
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
50 ஆண்டுகள் கழித்து நிலவுக்கு பயணம் ; நாசாவின் ஆர்டெமிஸ் II விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது Published By: Digital Desk 3 02 Apr, 2026 | 09:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்டெமிஸ் II விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று வியாழக்கிழமை (ஏப் 02) அதிகாலை 4:05 மணிக்கு விண்கலம் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன் , விக்டர் குளோவர் ,கிறிஸ்டினா கோச் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன் ஆகியோர் பயணித்துள்ளனர். இந்த பயணம் 10 நாட்கள் நீடிக்கும். நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதே இதன் நோக்கமாகும். மனிதர்கள் இதுவரை விண்வெளியில் பயணம் செய்யாத தூரமான 406,000 கிலோ மீற்றர் வரை இந்த விண்கலம் செல்லவுள்ளது. 1970-இல் அப்பல்லோ 13 விண்கலம் சென்ற 399,117 கிலோ மீற்றர் என்ற சாதனையை முறியடித்து, விண்வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்த மனிதர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறவுள்ளனர். 1972-க்குப் பின்னர் மீண்டும் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நோக்கில் இந்த 'ஆர்டெமிஸ்' திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டில் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. சீனா 2030-ஆம் ஆண்டளவில் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா இச்சாதனையைப் படைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. நாசாவின் மிக சக்திவாய்ந்த ஸ்பேஸ் லொன்ச் சிஸ்டம் (Space Launch System) ரொக்கெட் மூலம் 'ஓரியன்' (Orion) விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் ஓரியன் விண்கலத்தைத் தாமாகவே இயக்கி அதன் கட்டுப்பாட்டுத் திறனைச் சோதிக்கவுள்ளனர். படங்கள் ; Artemis II by NASA HQ PHOTO https://www.virakesari.lk/article/242528
-
ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு
ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு Apr 2, 2026 - 07:27 PM சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnhjerop000b356pcxy07uve
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மூன்று தலைமுறையாய் ஏழைகள்… பாவங்கள்😂
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
கம்பேக் கொடுத்த நடராஜன் ; பேட்டிங்கில் கலக்கிய முன்னாள் சிஎஸ்கே வீரர் - லக்னௌ தோல்வியை உறுதி செய்த இருவர் பட மூலாதாரம்,Delhi Capitals/Instagram கட்டுரை தகவல் நிதீஷ் பிபிசி தமிழுக்காக 2 ஏப்ரல் 2026, 02:47 GMT வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தொட்டாலே சிக்ஸ் பறக்கும் பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியம், பவுலர்கள் பந்துபோடவே யோசிக்கும் மும்பை வான்கடே மைதானம், முன்னொரு காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருந்து இன்று 'ஸ்பின்னா... அப்படின்னா?' என கேட்கும் சென்னை சேப்பாக்கம் என கிரவுண்டுகள் எல்லாம் பேட்ஸ்மேன்களின் பேட்டையாக மாறிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஐ.பி.எல்லில்...! பதிலுக்கு பவுலர்கள் காத்திருப்பது ஒரே ஒரு கிரவுண்டில் ஆடத்தான். லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான ஏகானா ஸ்டேடியத்தில். நீளமான ஸ்ட்ரெயிட் பவுண்டரி, ஸ்பின்னர்களுக்கும் ஸ்லோ பால் வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமான பிட்ச் என பெரும்பாலும் பவுலர்களுக்கு சாதகமான சூழலே நிலவியதால் மற்ற மைதானங்களை போல இங்கே சிக்ஸ் மழை பொழிந்ததில்லை. அந்தவகையில் பேட்டுக்கும் பாலுக்கும் இடையில் சமநிலையை தக்கவைத்திருந்த மிகச்சில மைதானங்களில் ஒன்று ஏகானா. ஆனால் ஐ.பி.எல்லின் பிசினஸ் மாடல், அடிக்கப்படும் சிக்ஸர்களின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்பதால் இந்த மைதானத்திலும் சமீபத்தில் பிட்ச்கள் மாற்றியமைக்கப்பட்டன. அதுவரை 7.5-ஆக இருந்த ரன்ரேட் ஒன்பதாக மாறியது. அதனால் நேற்றும் ஹை ஸ்கோரிங் மேட்ச்சை எதிர்பார்த்தே வந்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் நடந்ததோ வேறு. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 22 ஐபிஎல் போட்டிகளில் ஒன்பதில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றிருக்கிறது என்பதே அவரின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கக்கூடும். டெல்லி அணியில் கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஆகிப் நபிக்கு இடமில்லை. லக்னௌவில் ஆஸ்தான பவுலரான ஆவேஷ் கானும் வெளியே இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த சீசனில் லக்னௌவுக்கு ஓப்பனிங் ஆடி ரன்களைக் குவித்த மார்ஷும், மார்க்ரமுமே ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ஷுடன் ஓப்பனிங் இறங்கியது கேப்டன் ரிஷப் பன்ட். முன்னாள் வீரரான அஸ்வின் உள்பட சிலர், 'பன்ட் ஓப்பனிங் ஆடுவதே அவருக்கு நல்லது' என தொடருக்கு முன்பாக கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், பன்ட்டின் ஓப்பனிங் ரெக்கார்ட் சொல்லிக்கொள்ளும்படியெல்லாம் இல்லை. இந்திய அணிக்காக சர்வதேச டி20யில் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் ஆடி அவர் எடுத்திருப்பது வெறும் 71 ரன்களே. ஐ.பி.எல்லிலும் ஐந்து போட்டிகளில் ஓப்பனிங் இறங்கி 125 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். போக, இந்திய டி20 அணியில் வெயிட்டிங் லிஸ்டிலேயே கில், சாய் சுதர்ஷன், ஜெய்ஸ்வால் என எக்கச்சக்க ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பன்ட் ஓப்பனிங் இறங்கி சாதித்தாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகமே. பின் ஏன் இந்த பரீட்சார்த்த முயற்சி என்பது பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு மட்டுமே வெளிச்சம். முதல் பந்திலிருந்தே அடிப்பது பன்ட்டின் ஆட்டமுறை இல்லை. சில பந்துகள் களத்தையும், பவுலர்களையும் அவதானித்தபின்பே ஆடுவார். ஆனால் இந்தமுறை அதற்கு வாய்ப்பே இல்லாதபடி ஒரு தற்செயல் ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். 9 பந்துகளில் ஏழு ரன்கள். அடுத்துவந்த மார்க்ரமும் சீக்கிரமே அவுட்டாகிவிட மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தார் மார்ஷ். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 48/2. பிட்ச் இருந்த நிலைமைக்கு இது ஒரு நல்ல ஸ்கோர் தான். இப்படியே போனால் 170 எனும் சவாலான இலக்கை லக்னோ நிர்ணயித்துவிடும் என்கிற நிலைமைதான் இருந்தது அப்போது. பட மூலாதாரம்,Getty Images கம்பேக் கொடுத்த யார்க்கர் கிங்! வேகப்பந்து வீச்சாளர்களின் பிரதான ஆயுதம் யார்க்கர்கள். காலுக்கு மிக அருகில் குத்தி எகிறும் பந்துகள் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அசந்தாலும் ஸ்டம்ப்களை தகர்த்துவிடும். அதேசமயம் போடுவதற்கு மிகச்சிரமமான பந்தும் யார்க்கர்களே. முக்கால்வாசி நேரம் அவை ஃபுல் டாஸ் பால்களாக பேட்ஸ்மேன்கள் தூக்கி அடிக்க ஏதுவாக மிதந்துபோய் பேட்டில் படும். பும்ரா போன்ற ஒருசிலருக்கே இந்த யார்க்கர் ஆயுதம் முறையாக பயன்பட்டிருக்கிறது. இதே யார்க்கர்களில் இன்னொருவகை வைட் யார்க்கர்கள். துல்லியமாக வைட் லைனுக்கு அருகில் இறங்கும் பந்துகள். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் இந்தவகை பந்தை டீப் கவர் மீதோ, லாங் ஆஃப் மீதோ மட்டும்தான் அடிக்கமுடியும். அதே சமயம் அது சிக்ஸராக மாறுவதற்கு அசாத்திய பலத்தை இரு கைகளின் வழியேயும் பிரயோகிக்க வேண்டியதிருக்கும். பெரும்பாலான நேரங்களில் பலம் போதாமல் கேட்ச்சாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. தோனி போன்ற கேப்டன்கள் தங்களின் டெத் ஓவர் பவுலர்களிடம் எதிர்பார்ப்பது பந்து இந்த வைட் யார்க்கர்களைத் தான். சிஎஸ்கேவின் பிராவோ ஸ்லோ வைட் யார்க்கர்கள் போடுவதில் கைதேர்ந்தவர். இந்த இரண்டு யார்க்கர் ஆயுதங்களையும் ஐ.பி.எல்லில் சரியாக பயன்படுத்திய மற்றுமொரு வீரர் உண்டு. தமிழ்நாட்டை சேர்ந்த நடராஜன். இந்தத் திறமையே அவரை டெத் ஓவர் பவுலராக, மூன்று ஃபார்மட்களிலும் ஆடக்கூடிய வீரராக இந்திய அணி வரை இழுத்துச் சென்றது. ஆனால், தொடர் காயங்கள் காரணமாக அவரால் இந்திய அணியில் தன் இடத்தை தக்கவைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஐ.பி.எல்லிலும் அவர் ஆடியது இரண்டே போட்டிகளில்தான். சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி தொடரிலும் ஆறு போட்டிகளில் ஆடி 8 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். எனவே இந்த முறை ப்ளேயிங் லெவனில் அவர் ஆடுவதே சந்தேகம் என்றெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால், டெல்லி அணி நிர்வாகம் அவர் மேல் நம்பிக்கை வைத்து முதல் போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்தது. 'இந்த வாய்ப்புக்கு தான் தகுதியானவர் என்பதை தன் முதல் ஓவரிலேயே நிரூபித்தார் நடராஜன். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே அவர் போட்ட லென்த் பாலில் டக் அவுட்டாகி வெளியேறினார் ஆயுஷ் படோனி. இன்னொரு முனையில் இருந்து குல்தீப்பும் தன் பங்குக்கு தாக்க, விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்துகொண்டே இருந்தன. நேற்றைய போட்டியில் லக்னௌ அணியில் சிறப்பாக பேட்டிங் செய்த ஒரே வீரர் அப்துல் சமத் மட்டுமே. கடைசியில் அவரை வீழ்த்தவும் நடராஜனே வரவேண்டியதாக இருந்தது. ஸ்லாட்டில் சீறியபடி வந்த பந்தை சிக்ஸர் அடிக்க நினைத்து விக்கெட்டை பறிகொடுத்தார் சமத். லக்னௌ அணிக்கு அவரின் பங்களிப்பு 25 பந்துகளில் 36 ரன்கள். அதே ஓவரில் ஷமியின் விக்கெட்டையும் நடராஜன் வீழ்த்த 141 ரன்களுக்கு மொத்தமாகவே ஆட்டமிழந்தது லக்னௌ அணி. நான்கு ஓவர்கள் போட்டு 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார் நடராஜன். அவருக்கு மிகத் தேவையாய் இருந்த கம்பேக் இது. ”பயமறியா இளங்கன்று” பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சமீர் ரிஸ்வி (கோப்புப்படம்) 142 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்தது டெல்லி அணி. முதல் பந்தில் விக்கெட் எடுக்கும் சம்பிரதாயத்தை காலங்காலமாக பின்பற்றி வருகிறார் ஷமி. நேற்றைய ஆட்டத்தில் அதனால் பாதிக்கப்பட்டது ராகுல். டீப் பாயின்ட்டில் தூக்கியடித்து டக் அவுட்டானார் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரம். மறுபக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கும் மொஹ்சின் கான், தன் முதல் ஓவரிலேயே நிதிஷ் ராணாவை அவுட்டாக்கி விக்கெட் மெய்டன் எடுத்தார். ஒரே போட்டியில் நிகழ்ந்த இரண்டாவது கம்பேக் இது. அதுமட்டுமல்லாமல், பிரின்ஸ் யாதவும் தன் பங்கிற்கு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்கள் எடுக்க டெல்லி அணியின் ஸ்கோர் ஐந்து ஓவர்களில் 30/4. திரைப்படங்களில் வருவதைப்போல ஒரு ஹீரோ வந்துதான் டெல்லி அணியை காப்பாற்ற வேண்டிய நிலைமை. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஆனால், விக்கெட்கள் அடுத்தடுத்து பறிபோன நிலையிலும், நூறு ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியதிருந்தபோதும் மில்லருக்கு முன்பாக நேற்று சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கியது அணி நிர்வாகம். நார்க்கியா மின்னல் வேகத்தில் வீசிய ஷார்ட் பாலை அசராமல் டீப் தேர்ட் திசையில் தூக்கி சிக்ஸ் அடித்து தன் வரவை அறிவித்தார். சமீர் ரிஸ்வி. உள்ளூர் போட்டிகளில் உத்தரப் பிரதேசத்துக்காக ஆடிவரும் அதிரடி ஆட்டக்காரர். 2023 ஏலத்தின்போது சமீர் ரிஸ்வியை குறிவைத்து மற்ற அணிகளோடு சண்டை போட்டு 8.40 கோடிக்கு அவரை வாங்கியது சென்னை அணி. சென்னை அணிக்காக அந்த சீசனில் ஐந்து போட்டிகளில் ஆடியிருந்தாலும் அவரால் 51 ரன்களே எடுக்க முடிந்தது. கடந்த சீசனில் டெல்லி அணிக்காகவும் நான்கே போட்டிகளில்தான் ஆடியிருந்தார். மில்லர், ஸ்டப்ஸ், அஷுதோஷ் சர்மா என இந்த சீசனில் டெல்லி அணியின் மிடில் ஆர்டரில் அதிரடிக்கு பஞ்சமே இல்லையென்பதால் இவர் இந்த சீசனில் களமிறங்குவதே சந்தேகம் என்பதுதான் நிலைமையாக இருந்தது. ஆனால் நேற்று டெல்லி அணிக்கு இக்கட்டான நேரத்தில் இவர் கைகொடுத்தார். ஷபாஸ் அகமதின் ஒரே ஓவரில் லெக் சைடில் மூன்று பவுண்டரிகள், மார்க்ரமின் பந்தை விலகி நின்று லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ், ஸ்கொயர் கட் ஆடி ஒரு பவுண்டரி என 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அப்போது வெற்றிக்கு தேவையாக இருந்தது 35 ரன்கள் மட்டுமே. அதன்பின்னும் வேகம் குறையாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக விரட்டி 17.1 ஓவர்களிலேயே டெல்லி அணியை வெற்றிக்கோட்டைத் தாண்டி இழுத்துப்போனார். 47 பந்துகளில் 70 ரன்கள். ஆட்டத்தின் எந்தவொரு இடத்திலும் ஸ்கோர் போர்ட் கொடுக்கும் அழுத்தத்தை அவரும் எடுத்துக்கொள்ளவில்லை. ரசிகர்களுக்கும் கடத்தவில்லை. 22 வயதுக்கு அவர் நேற்று களத்தில் வெளிக்காட்டியது அசாதாரண முதிர்ச்சி. ஆட்டநாயகனும் அவரே. முறையே பவுலிங்கில் ஒருவர், பேட்டிங்கில் ஒருவர் என இரு கம்பேக்கின் வழியே இரண்டு புள்ளிகளை சம்பாதித்திருக்கிறது டெல்லி. ஆனால் அந்த அணியின் பலம் என சொல்லப்பட்ட பேட்டிங் கிட்டத்தட்ட தோல்வியின் முனையை தொட்டுவிட்டு திரும்பியிருக்கிறது. மறுபக்கம் லக்னௌவுக்கு பேட்டிங்கும் கைவரவில்லை. பவுலிங்கிலும் பவர்ப்ளேயைத் தவிர வேறு எந்தக்கட்டத்திலும் தாக்கத்தை உண்டாக்க முடியவில்லை. இரு அணிகளும் தங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்ள நேற்றைய போட்டி உதவியிருக்கிறது. அவற்றைக் களைவதன் மூலம் மட்டுமே இந்த இரு அணிகளுக்கும் ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியப்படும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wqg94k0lzo
-
ஈரான் போர்: “இது எங்கள் போர் அல்ல” – பிரிட்டிஷ் பிரதமர்
ஈரான் போர்: “இது எங்கள் போர் அல்ல” – பிரிட்டிஷ் பிரதமர் Published By: Vishnu 02 Apr, 2026 | 05:46 AM ஈரானுக்கு எதிரான போர் தனது போர் அல்ல என்றும், அதில் தான் சிறிதும் ஈடுபடப் போவதில்லை என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகிறார். 'ட்ரூத்' சமூக ஊடகக் கணக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட ஒரு பதிவு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார். ஈரான் போருக்கு பங்களிக்காத நாடுகள் தாங்களாகவே போரிட்டு எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா இனி அந்த நாடுகளுக்கு ஆதரவளிக்காது என்றும் அமெரிக்க அதிபர் அந்தப் பதிவை வெளியிட்டிருந்தார். அதன்படி, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில், தனக்கு ஐரோப்பாவுடன் ஒரு வலுவான உறவு தேவை என்று பிரிட்டிஷ் பிரதமர் கூறுகிறார். ஈரானுக்கு எதிரான போரில் ஐரோப்பிய நாடுகள் சேராததால், அந்நாடுகளுடனான நேட்டோ இராணுவக் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறியிருந்த அறிக்கை குறித்தும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். உலகம் கண்ட ஒரே திறமையான இராணுவக் கூட்டணி நேட்டோ தான் என்றும், பிரிட்டன் அதற்கு முழுமையாக உறுதியுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். "என் மீதும் மற்றவர்கள் மீதும் வரும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், எந்தக் குரல்கள் எழுந்தாலும், பிரிட்டனின் தேசிய நலனுக்காகவே நான் முடிவெடுப்பேன். இது நமது போர் அல்ல என்று நான் கூறுகிறேன். நாம் அதில் ஈடுபடப் போவதில்லை," என்றார் அவர். https://www.virakesari.lk/article/242522
-
பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை
மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் கடும் நடவடிக்கை - கல்வி அமைச்சு எச்சரிக்கை 02 Apr, 2026 | 04:37 PM பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது. 2016 ஏப்ரல் 29ஆம் திகதியிட்ட 12/2016 இலக்கச் சுற்றறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக, மாணவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகள், விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதுள்ள சுற்றறிக்கையை செயற்படுத்தும்போது, வழக்கு எண் 461/2012 (FR) தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் 17வது பத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எந்தவொரு சூழ்நிலையிலும் எந்த மாணவரும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டிய கல்வியாளர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகிகளின் பொறுப்பை அந்தத் தீர்ப்பு தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, அனைத்து மட்டங்களிலும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பில் “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கை பின்பற்றப்படவேண்டும் என்றும் இதை மீறும் எவரும் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் பாடசாலைகளில் ஒழுக்கமானது ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் வன்முறையற்ற முறைகளின் மூலம் பேணப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றவேண்டும் என்றும் மாணவர் ஒழுக்கத்தை கையாளும்போது உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/242575
-
நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல்
நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல் Apr 2, 2026 - 05:56 PM நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார். கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார். இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது. ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnhg40vw0008356p3wx8eo45
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
'26 ரன்களுக்கு 4 விக்கெட்' - இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் 1 ஏப்ரல் 2026 வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தார். அடுத்து வந்த கேப்டன் அக்ஸர் படேலும் டக் ஆவுட் ஆக, டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மிக இக்கட்டான சூழலில் இருந்தது. அடுத்து களம் இறங்கிய ஸ்டுப்ஸ், சமீர் ரஸ்வியுடன் கைகோர்க்க அணிக்கு நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. இருவரும் சேர்ந்து 76 பந்துகளுக்கு 119 ரன்களை குவித்தனர். இறுதி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் சமீர் ரஸ்வி 70 ரன்களையும், ஸ்டுப்ஸ் 39 ரன்களையும் எடுத்தனர். 17.1 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. லக்னௌ ஆட்டம் எப்படி? டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. லக்னௌ அணி சார்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். எய்டன் மார்கரமிற்கு முன்பாக ரிஷப் பண்ட் களமிறங்கியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இருவரும் அதிரடியாக பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை தொடங்கினாலும் அந்த அதிரடி நிலைக்கவில்லை. ரிஷப் பண்ட 9 ரன்களில் துர்திருஷ்டவசமாக ரன் அவுட் ஆக அதன் பின்னர் களமிறங்கிய எய்டன் மார்கரம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கில் மாற்றம் செய்து பந்துவீச வந்தார். அக்சர் பந்துவீச்சில் எய்டன் மார்கரம் 11 ரன்களின் ஆட்டமிழந்தார். பவர்பிளே முடிவில் லக்னௌ அணி 48 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவதாக களமிறங்கிய் ஆயுஷ் பதோனி 0 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்டரான நிகோலஸ் பூரனும் 8 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து லுங்கி நிகிடியின் அற்புதமான ஸ்லோயர் பந்தில் போல்டானார். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form ஒருபுறம் நிலைத்து ஆடிவந்த மிட்சல், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். பவுண்டரிகள் அவ்வப்போது கிடைத்துவந்தாலும் நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன்ரேட் பெரிதளவில் உயரவில்லை. முகுல் சௌத்ரி 14 ரன்களில் ஆட்டமிழக்க ஷாபாஸ் அகமது இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார். அப்துல் சமாதும் ஷாபாஸ் அகமதும் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற நிலையில் சமாத் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களி 29 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். 16 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருந்த லக்னௌ அணி கடைசி 5 ஓவர்களி படிப்படியாக விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்களில் 141 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெல்லி அணி சார்பில் லுங்கி நிகிடி மற்றும் நடராஜன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். குல்தீப் யாதன் 2 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டையும் எடுத்தனர். லக்னௌ அணி சார்பில் அதிகபட்சமாக அப்துல் சமாத் மற்றும் மிட்சல் மார்ஷ் முறையே 36 மற்றும் 35 ரன்கள் எடுத்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c203n23xg1ko
-
பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர்; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு
பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர் ; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு 02 Apr, 2026 | 02:32 PM யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்ப்பாண பஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துநர் குறித்த பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு அதிகார சபையால் 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு எழுத்துமூலமான உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தின்போது தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பிலோ அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் சூ.விமலேஸ்வரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான முறைப்பாடுகளை 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242561
-
கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்!
கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்! Published By: Digital Desk 1 02 Apr, 2026 | 02:56 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது. எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால், ஏனைய பகுதிகளில் நீர் விநியோகக் கோளாறுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களை நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/242559