stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஹர்ஷ டி சில்வா 07 Jan, 2026 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம். சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார். https://www.virakesari.lk/article/235467
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
மனிதன் தன் விருப்பத்துக்காக/சுயநலத்திற்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை.
-
'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன?
'பூமியின் நரகம்': அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,XNY/Star Max/GC Images கட்டுரை தகவல் ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோ பிபிசி நியூஸ் முண்டோ 7 ஜனவரி 2026, 03:19 GMT புதுப்பிக்கப்பட்டது 7 ஜனவரி 2026, 03:44 GMT நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்? வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் "பூமியின் நரகம்" என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கைவிலங்கு இடப்பட்டு, இரண்டு போதைப்பொருள் தடுப்பு முகவர்களால் அழைத்து வரப்பட்ட மதுரோ, நியூயார்க் வந்தடைந்தவுடன் நகைச்சுவையாகப் பேசினார். குட் நைட் என்பதை பியூனாஸ் நோச்சஸ் என்று நீங்கள் சொல்வது சரியா? குட் நைட்! புத்தாண்டு வாழ்த்துகள்!"என்று அவர் கூறினார். அவர் உடனடியாக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் (டிஈஏ) தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் (எம்டிசி) உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டார். போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் வரை, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அங்கேயே இருப்பார்கள் (அக்குற்றச்சாட்டுகளை அவர்கள் இருவரும் மறுக்கிறார்கள்) என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,Adam Gray/Getty Images படக்குறிப்பு,வழக்கறிஞர்கள் "பூமியின் நரகம்" என்று விவரிக்கும் ஒரு தடுப்புக் காவல் மையத்தில் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ளார். எஃகு தடுப்புகள் மற்றும் கேமராக்கள் புரூக்ளின் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.டி.சி என்பது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கான்கிரீட் மற்றும் எஃகு சிறையாகும். இது துறைமுகத்திலிருந்து சில மீட்டர் தொலைவிலும், ஐந்தாவது அவென்யூ, சென்ட்ரல் பார்க் மற்றும் பிற பிரபலமான சுற்றுலா மையங்களில் இருந்து சுமார் 5 கி.மீ (3 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நகரச் சிறைச்சாலைகளில் நிலவிய அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக 1990-களின் தொடக்கத்தில் இந்த மையம் திறக்கப்பட்டது. துறைமுகத்தில் வந்து இறங்கும் அல்லது கப்பல்களில் ஏற்றி அனுப்பப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிக்கும் கிடங்குகள் இருந்த இடத்தில் தான் இந்த மையம் தற்போது அமைந்துள்ளது. மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் நீதிமன்றங்களில் விசாரணைக்காகக் காத்திருக்கும் ஆண் மற்றும் பெண் கைதிகளை அடைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றாலும், குறுகிய கால தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை அடைக்கவும் இந்த தடுப்புக்காவல் மையம் பயன்படுத்தப்படுகிறது என்று ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் (பிஓபி) வலைத்தளம் தெரிவித்துள்ளது. நியூயார்க்கில் ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸால் இயக்கப்படும் ஒரே ஒரு தடுப்புக் காவல் மையம் இதுதான். 2021-ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில் இருந்த இதுபோன்றதொரு மையத்தை ஃபெடரல் பீரோ ஆஃப் பிரிசன்ஸ் மூடிவிட்டது. பாலியல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019-இல் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடுப்புக்காவல் மையம் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் இரண்டு ஃபெடரல் நீதிமன்றங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது எஃகு தடுப்புகளாலும், நீண்ட தூரத்திலிருந்தே படம்பிடிக்கும் திறன் கொண்ட கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. மதுரோ வருகைக்குப் பிறகு, வெளிப்புறப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்து பாதுகாப்பு கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அங்கு விளையாடுவதற்கான வசதி, மருத்துவப் பிரிவுகள் மற்றும் நூலகம் போன்றவை உள்ளன என, பொது ஒளிபரப்பு சேவை (பிபிஎஸ்) செய்தி தெரிவித்துள்ளது. அங்குள்ள கைதிகள் நாளின் பெரும் பகுதியை மிகக் குறுகிய அறையிலேயே கழிக்கிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது விளக்கமோ இதுவரை வழங்கப்படவில்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் போது, சிலியா ஃபுளோரஸ் மற்றும் நிக்கோலஸ் மதுரோ ஆகியோர் அமெரிக்க முகவர்களால் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுகிறார்கள். 'மனிதாபிமானமற்ற சூழல்' ஊடக அறிக்கைகளின் படி, 1,000 பேரை அடைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த மையத்தில், 2019-ஆம் ஆண்டில் 1,600 பேர் இருந்தனர். பிஓபி இணையதளத்தின்படி, தற்போது அங்கு 1,330-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். நவம்பர் 2024-இல் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த மையமானது, பரிந்துரைக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகிறது எனத் தெரிய வருகிறது. அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர் பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான், எம்.டி.சியில் அடிக்கடி நடக்கும் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டடத்தின் உள்கட்டமைப்பும் கவலைக்குரியதாக உள்ளது. 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மின் தடையின் போது, கடுங்குளிரில் வெப்பமூட்டும் வசதி இன்றி அங்கிருந்தவர்கள் பல நாட்களாக தவித்தபோது அது குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. "எம்.டி.சியின் சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மனிதாபிமானமற்றது," என்று அப்போதைய நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் அறிவித்தார். தடுப்புக்காவல் மையத்தின் மோசமான நிலை குறித்து அவர் அரசாங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தார். "சிறையில் அடைக்கப்படுவதால் மனித உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல," என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு,மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அடைக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் மையம் பல அடுக்கு மாடிகளைக் கொண்டதோடு, சுவர்களாலும் கேமராக்களாலும் சூழப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஆண்ட்ரூ டாலக் போன்றவர்கள் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், இந்தச் சிறை "பூமியின் நரகம்" என்று குறிப்பிட்டனர். 2024-ஆம் ஆண்டில், எட்வின் கார்டெரோ என்பவர் சக கைதிகளால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவருக்காக வாதாடிய டாலக் இவ்வாறு கூறினார். 2021 முதல் 2024 வரை பல கைதிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மையத்தின் மோசமான சூழலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அங்கு கைதிகளை அனுப்பவே தயங்குகின்றனர். மாவட்ட நீதிபதி கேரி பிரவுன் ஆகஸ்ட் 2024-இல், வரி ஏய்ப்பு செய்த 75 வயது முதியவருக்கு தான் விதித்த ஒன்பது மாத சிறைத்தண்டனையை ரத்து செய்வதாகவும், பிஓபி அவரை புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்திற்கு அனுப்பினால், அதற்குப் பதிலாக அவரை வீட்டுக் காவலில் வைப்பதாகவும் கூறினார். "இங்கு நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் மேற்பார்வை குறைபாட்டையும், அமைதி சீர்குலைந்திருப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத, கண்டிக்கத்தக்க மற்றும் உயிருக்கு ஆபத்தான நிர்வாகத்தை கொண்டுள்ள ஒரு குழப்பமான சூழலையும் வெளிப்படுத்துகின்றன" என்று பிரவுன் கூறியதாக தி இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளும் இதனை செய்திகளில் இடம்பிடிக்கச் செய்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமெரிக்க நீதித்துறை 25 பேர் மீது (கைதிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உட்பட) வன்முறை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்தது தொடர்பான 12 வெவ்வேறு வழக்குகளில் விசாரணை அறிவித்தது. பி.ஓ.பி முன்பு வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட நபர்களைப் பாதுகாப்பதையும், சிறைப் பணியாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பைப் பேணுவதையும் நாங்கள் ஒரு கடமையாகக் கருதுகிறோம்," என்று தெரிவித்தது. எம்.டி.சி.யில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க ஒரு அவசர நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், நிலுவையில் உள்ள பராமரிப்புப் பணிகளை முடிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கார்டெரோ மற்றும் பிறரின் மரணங்களைத் தொடர்ந்து சில கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,Hollywood To You/Star Max/GC Images படக்குறிப்பு,ராப் பாடகரும் இசை அமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ், தனக்கு தண்டனை விதிக்கப்படும் வரை இந்த மையத்தில் சில மாதங்களை கழித்தார். இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த மற்ற முக்கிய நபர்கள் புரூக்ளின் பெருநகர தடுப்புக்காவல் மையத்தில் உள்ள மோசமான சூழலுக்கு மத்தியிலும், அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முக்கியமான நபர்களை அங்கு அனுப்பி வருகின்றனர். உதாரணமாக, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள முதல் லத்தீன் அமெரிக்க அரசியல் தலைவர் மதுரோ அல்ல. ஹோண்டுராஸின் முன்னாள் அதிபர் ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ் கடந்த ஜூன் மாதம் வரை இந்த மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, அவர் வேறொரு சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவருக்கு மன்னிப்பு வழங்கினார். மெக்சிகோவின் முன்னாள் பொதுப் பாதுகாப்புச் செயலர் ஜெனாரோ கார்சியா லூனா என்பவரும் இந்த தடுப்புக் காவல் மையத்தின் ஓர் அறையில் அடைபட்டுள்ளார். மிகவும் பிரபலமான மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஜோவாக்வின் "எல் சாப்போ" குஸ்மான் இங்கு அடைக்கப்பட்டிருந்தார். சினலோவா கார்டெல் தலைவர்களில் ஒருவரான மெக்சிகோவைச் சேர்ந்த இஸ்மாயில் "எல் மாயோ" சம்பாடா, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைக்காக இப்போதும் அதே கட்டடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட அல் கொய்தா உறுப்பினர்களும் இங்குதான் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பிரபல ராப் பாடகரும் இசையமைப்பாளருமான சீன் "டிடி" கோம்ப்ஸ் சில மாதங்கள் இந்த தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். பெண்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்புறுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நியூ ஜெர்ஸியில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டார். எப்ஸ்டீனின் கூட்டாளியும், முன்னாள் துணைவருமான கிஸ்லேன் மேக்ஸ்வெல், திவாலான எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ தளத்தின் நிறுவனர் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் மற்றும் நிதி மோசடிகளுக்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ஆகியோரும் புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தில் அடைபட்டிருந்த முன்னாள் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04170dd9x5o
-
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! 07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. https://www.virakesari.lk/article/235438
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Shoe lace சை மட்டும் அல்ல, கோவணத்தைக் கூட.
-
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்?
உதகை: காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலி இறப்பு - சிகிச்சை அளிக்காதது ஏன்? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 7 ஜனவரி 2026, 13:36 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது. இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இரு புலிகளுக்கு இடையில் நடந்த 'ஏரியா' சண்டை! உதகை அருகேயுள்ள போர்த்தி ஆடா என்ற கிராமத்தையொட்டியுள்ள தேயிலைத் தோட்டப் பகுதியில் கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று ஒரு புலி படுத்துக்கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். மிகவும் சோர்வுடன் காணப்பட்ட அந்த புலி, வேறெங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது. தகவல் கேள்விப்பட்டு, வனத்துறையினர் அங்கு வந்தனர். டிரோன் மூலமாக புலியின் நடமாட்டத்தைப் பார்த்தபோது, அதன் முன்னங்கால் ஒன்றில் பலத்த காயமடைந்திருப்பதால் நடக்க முடியாமலிருப்பதைக் கண்டறிந்தனர். அந்தத் தேயிலைத் தோட்டத்துக்கு மக்கள் வந்து செல்லும் நிலையில், அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வனத்துறை அதிகாரிகள் அந்த புலியைப் பிடிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கோபமடைந்த சிலர், 'அந்தப் புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதுவரை அதற்கு உணவாக இறைச்சி வழங்கவேண்டுமென்றும்' ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்தனர். புலியைப் பிடிப்பதற்கு வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர், நேரடியாகவும், டிரோன் மூலமாகவும் புலியின் நிலையை கண்காணித்து வந்தனர். அங்கிருந்து வேறெங்கும் நகராமலிருந்த புலி, கடந்த 5 ஆம் தேதியன்று உயிரிழந்தது. அதே இடத்தில் அந்த புலிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன்பின்பு புதைக்கப்பட்டது. புலிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலி மற்றொரு புலியுடன் சண்டையிட்டபோதுதான் காயமடைந்திருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.சி.ஏ.) வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இதுவொரு இயற்கையான நிகழ்வு என்பதால் அந்த புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்தோம்.'' என்றார். வனத்துறையினரின் இந்த விளக்கம், காட்டுயிர் ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. காயமடைந்துள்ள ஒரு புலிக்கு சிகிச்சை அளிக்காமலிருக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறை அறிவுறுத்துகிறது என்றால், புலிகளை கையாள்வது தொடர்பாக வேறு என்னென்ன வழிகாட்டுதல்கள் உள்ளன என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் 248 பக்கங்களுக்கு மிக விரிவாகவுள்ளது. புலிகளைக் கையாள்வது குறித்து அதிலுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் சிலர் பிபிசி தமிழிடம் விளக்கினர். வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் இந்த கேள்வி–பதில் தொகுக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்தது ஏன்? கேள்வி: உதகை அருகே காயம்பட்டிருந்த புலியை பிடித்து சிகிச்சை அளிக்காமல் இறக்கும் வரை கண்காணித்ததற்கு காரணமென்ன...இயற்கையாக நடந்த சண்டையில்தான் இந்த புலி காயமடைந்தது என்பது எப்படி உறுதிப்படுத்தப்பட்டது? ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று சண்டை நடந்துள்ளது. அந்த சண்டையில் படுகாயமடைந்த பின்பே அந்த புலி, தேயிலைத் தோட்டப்பகுதிக்கு வந்துள்ளது. இது இயற்கையான நிகழ்வு என்பதால், அதற்கு சிகிச்சை அளிக்காமல் அதனால் மக்களுக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் கண்காணிக்க வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை'' என்கின்றனர் வனத்துறையினர். இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம், ''அந்த புலிக்கும் மற்றொரு புலிக்கும் எல்லையை வரையறுப்பதில் சண்டை நடந்துள்ளது. நாங்கள் அந்த சூழல் காரணிகளை ஆய்வு செய்து மாதிரிகளைச் சேகரித்து இரு புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்துள்ளதை உறுதிசெய்துள்ளோம். அதில் புலியின் 2 முன்னங்கால்களும் மிகக்கடுமையாக பாதிப்படைந்திருந்தன. இறந்த ஆண் புலிக்கு 7 முதல் 8 வயது இருக்கும். அதை விட வயது முதிர்ந்த ஒரு புலி இதைத் தாக்கியிருக்கலாம். '' என்றார். ''அதன் உடலில் வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்பது உடற்கூராய்வில் தெரியவந்தது. இயற்கையாக நடந்த சண்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பதால்தான் சிகிச்சை தரவில்லை. என்.டி.சி.ஏ. கூறியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையின்படி அதைக் கண்காணித்தோம். வேறு ஏதாவது விபத்து போன்ற மனித செயல்களால் காயம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிந்திருந்தால் நிச்சயம் சிகிச்சை அளித்திருப்போம்.'' என்றார். இறந்து போன புலிக்கு, சண்டைக்குப் பின் நிறைய ரத்தம் வெளியேறியதுடன் 3–4 நாட்களாக எதுவும் உண்ணவில்லை என்று உடற்கூராய்வில் தெரியவந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த புலி இரையை அடிப்பதற்கு உதவும் முன்னங்கால்கள் இரண்டும் முற்றிலும் சேதமடைந்திருந்ததாகக் கூறிய வனத்துறையினர், அதற்கு மேல் அந்த புலியால் வேட்டையாடவும் முடியாது என்ற தகவலையும் பிபிசியிடம் பகிர்ந்தனர். புலி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியல் ஒன்றில் (schedule 1 animals) இருக்கும் உயிரினம் என்பது போலவே, கடமானும் அதே பட்டியலில் உள்ள உயிரினம்தான் என்று கூறிய மாவட்ட வன அலுவலர், ஒரு புலி அடித்து கடமான் காயப்பட்டிருந்தாலும் அதற்கு சிகிச்சை தரமுடியாது என்றார். அப்படிச் செய்வது காடு மற்றும் காட்டுயிர்களின் உணவுச் சங்கிலியை அறுக்கின்ற ஒரு செயலாக இருக்குமென்கிறார் அவர். படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட வன அலுவலர் கெளதம் 'தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு மட்டுமே அதிகாரம்' கேள்வி: இதுபோன்று காயமடைந்த ஒரு புலிக்கு சிகிச்சையளித்து, வன உயிரினப் பூங்காவில் வைத்து பாதுகாத்திருக்க முடியாதா? இதற்கு பதிலளித்த கெளதம், ''அதற்கான தேவையும், அவசியமும் எழவில்லை'' என்றார். ''புலிகளைப் பிடித்து காட்டுக்குள் விடுவதற்கும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் அனுமதி பெற வேண்டுமென்பதே என்.டி.சி.ஏ. தரும் வழிகாட்டுதல். அதேபோன்று பிடித்து வன உயிரினப் பூங்காவுக்குக் கொண்டு செல்லவும் அவரின் அனுமதி பெறவேண்டும்.'' என்றார் கெளதம். 'சட்டமே சொல்கிறது' கேள்வி: இதே புலி ஓர் ஊருக்குள் நுழைந்திருந்தால் அதைப் பிடிக்காமல் கண்காணிக்க முடியாது என்பதால், அப்போது வனத்துறை என்ன செய்திருக்கும்? இதுகுறித்து என்.டி.சி.ஏ. கூறும் வழிகாட்டுதல் என்ன? ''என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் என்பது எல்லாப்பகுதிகளுக்கும் ஒரே மாதிரியானதுதான். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் முதலில் புலியை காட்டுக்குள் துரத்துவதற்கு முயற்சி எடுக்கப்படும். முடியாதபட்சத்தில் மாநிலத்தின் தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு (Chief Wildlife Warden) முறைப்படி விண்ணப்பித்து, அதை கூண்டு வைத்து அல்லது மயக்க மருந்து செலுத்திப்பிடிப்பதற்கு அனுமதி பெற்று பிடிக்கப்படும்.'' என்றார் கெளதம். கேள்வி: ஒரு புலியால் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தாலும் அந்த நேரத்திலும் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெறவேண்டியது அவசியமா? இதுகுறித்து விளக்கிய பெயர் கூற விரும்பாத மூத்த ஐ.எஃப்.எஸ். அதிகாரி, ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்கள் பட்டியலில் உள்ள புலி உள்ளிட்ட வனவிலங்குகளைப் பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வதற்கு அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு மட்டுமே உள்ளது. '' என்றார். ''ஒரு புலி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கே வந்துவிட்டாலும் தலைமை வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறாமல் அதைப் பிடிக்கவோ, சுடவோ கூடாது என்பதே என்.டி.சி.ஏ. வழிகாட்டுதல் நெறிமுறை. எந்த சூழ்நிலையாக இருந்தால் வன உயிரினக் காப்பாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டியதும் கட்டாயம். இதை வழிகாட்டுதல் விதிகளில்லை; வன உயிரினப் பாதுகாப்புச் சட்டமே சொல்கிறது. '' என்றார் அவர். படக்குறிப்பு,கூண்டு வைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஒரு புலி கேள்வி: ஒரு புலியைப் பிடிப்பதற்கு எந்தெந்த சூழ்நிலைகளில் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது? ''வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒரு புலியால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாகக் கருதினால் அதைப் பிடிக்கவும், பிடித்து இடமாற்றம் செய்யவும் அல்லது சுடவும் தலைமை வன உயிரினக்காப்பாளரால் அனுமதியளிக்க முடியும். அதேபோன்று அறிவியல்பூர்வமான காரணங்களுக்காக ஒரு புலியைப் பிடிப்பதாக இருந்தாலும் அனுமதியளிக்கும் அதிகாரம், தலைமை வனஉயிரினக் காப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரத்தை அவர் வேறு யாருக்கும் பகிர்ந்தளிக்க முடியாது. மாவட்டம் அல்லது மண்டல அளவிலான அதிகாரிகளுக்கு இந்த அதிகாரம் தரப்பட்டிருந்தால், சூழ்நிலை அல்லது நிர்பந்தத்துக்கேற்ப புலிகளைப் பிடிக்கவும் கொல்லவும் அனுமதியளிக்கும் அபாயம் இருப்பதால்தான் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இத்தகைய வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளது என கூறினார் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர். இயற்கையாக இறக்கும் காட்டுயிர்களை காப்பாற்றினால் என்னவாகும்? கேள்வி: காயமடைந்த புலியை சிகிச்சையளித்து மீண்டும் காட்டுக்குள் விட வேண்டியதில்லை என்ற முடிவை எதன் அடிப்படையில் தலைமை வன உயிரினக்காப்பாளர் எடுக்கிறார்? ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே, ஒரு குறிப்பிட்ட விலங்கைப் பாதுகாப்பது குறித்த முடிவை தலைமை வன உயிரினக் காப்பாளர் எடுக்கிறார் என்று வனத்துறையினர் விளக்குகின்றனர். ''நீலகிரி மாவட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை நன்றாகவுள்ளது. மாவட்டம் முழுவதும் 250–300 எண்ணிக்கையிலான புலிகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அப்படியிருக்கும்போது, இதுபோன்று இயற்கை நிகழ்வில் காயம் ஏற்படும் புலிகளையும் காப்பாற்றினால் இயற்கையாக நடக்கும் புலிகளின் பிறப்புக்கும், இறப்புக்குமான விகிதாச்சாரம் மாறுபட்டு, புலிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும். அதனால் இது தேவையற்றது.'' என்றார் கெளதம் கேள்வி: யானை, புலி போன்ற காட்டுயிர்கள் பெருமளவில் நோய் அல்லது காட்டுக்குள் உள்ள சூழல் பாதிப்பில் இறக்க நேரிட்டால் அப்போதும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் கையாளப்பட வேண்டுமா? இதற்கு பதிலளித்த வன கால்நடை மருத்துவர் கலைவாணன், ''சாலை விபத்து, வேட்டை, மின்சார வேலி, வெடி போன்ற மனித செயல்பாடுகளால் காட்டுயிர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் அது நிச்சயம் கவனிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் காட்டுக்குள் இயற்கையாக நிகழும் காட்டுயிர்களின் மரணங்களைத் தடுக்கக்கூடாது. '' என்றார். உதாரணமாக 300 யானைகள் வாழும் ஒரு காட்டில் ஆண்டுக்கு 10 சதவீதம் யானைகள் இயற்கையாக இறக்கும் எனும்போது, அவற்றுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றப்படும்பட்சத்தில் 10 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும் என்பதை விளக்கும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், அப்படி அதிகரித்தால் காடு அழியும் ஆபத்து இருப்பதாக கூறினர். ஜிம்பாப்வே போன்ற தென் ஆப்ரிக்கா நாடுகளில் காடுகளின் வளம் பெருமளவில் குறைந்துவிட்ட நிலையில், காட்டுயிர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை அழிக்கும் முறை இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெயர் கூற விரும்பாத ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஒருவர், ''காட்டைக் காப்பதா, காட்டுயிர்களைக் காப்பதா என்றால் காட்டைக் காப்பதுதான் வனத்துறையின் முதல் பணி. காட்டுயிர்களைக் காக்க வேண்டுமென்று, இயற்கையாக, நோய் வாய்ப்பட்ட காட்டுயிர்களுக்கு எல்லாம் காட்டுக்குள் சென்று சிகிச்சை அளிக்க வனத்துறை முயற்சி எடுத்தால் அவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி காடே காலியாகிவிடும். காடழிந்தால் அதன்பின் காட்டுயிர்களும் அழிந்துவிடும். அதனால் காட்டுயிர்கள் குறித்த புரிதல் மக்களுக்கு வேண்டும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1evz9dvze9o
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
தம்பர் தன்னுடைய shoe lace அவிழ்ந்துவிட்டது, ஓடிவந்து கட்டி விடுங்கோ பாய் என்று கேட்டால்... சிங்கம் இப்பவே ஓடிப்போய் குனிந்து கட்டிவிடும்.
-
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப்
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார் - ட்ரம்ப் 07 Jan, 2026 | 04:29 PM “அமெரிக்காவின் வரி விதிப்புகளால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்” என்று கூறும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இந்தியப் பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்” என்றும் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தொடர்ச்சியான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்தியது. இதை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் இந்தியா மீது அதிக வரியை அறவிட என்னால் முடியும் என்று ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திங்கட்கிழமை (5) தெரிவித்துள்ளார். மேலும் அவர், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும் என்றும் கூறியுள்ளார். எனக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த நட்புறவு உள்ளது. ஆனால், இந்தியா அதிக வரி செலுத்துவதால் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது கனிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும் தேசிய பாதுகாப்பு ரீதியாகவும் வலிமையானதாகவும் மரியாதைக்குரிய நாடாகவும் விளங்குகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235450
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
இவரது கண்டனத்தை அடுத்து அமெரிக்கா நடு நடுங்கி மடூரோவை வீட்டிற்கு அனுப்பிவிடப்போகிறது.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறுதி யுத்தத்தில் இந்திய இலங்கைக்கு எந்தெந்த வகையில் உதவியது? 1. புலநாய்வுத்தகவல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தொடர்ந்து கண்காணித்து இலங்கை இராணுவத்திற்கு அறியத் தந்தது. 1. Intelligence Sharing and Maritime Tracking India’s intelligence agencies (including RAW and naval intelligence) worked with Sri Lanka’s military to track LTTE movements, especially maritime logistics routes: India shared radar data, satellite imagery and naval intelligence on LTTE ship movements with the Sri Lankan Navy, significantly aiding the interdiction of arms and supplies. Grokipedia Sri Lankan naval commanders credited intelligence support in tracking and destroying LTTE “warehouse” vessels — large supply ships that brought arms and materiel from abroad — far out at sea (up to 1,600 + nautical miles from Sri Lanka). sangam.org Impact: These intelligence inputs reportedly helped cut the LTTE off from resupply, degrading its ability to fight in the final phase of the war. sangam.org இலங்கைக் கடற்படையுடன் இணைந்து ரோந்துக்களில் ஈடுபட்டதுடன், புலிகளின் கப்பல்களைத் தடுத்து அழிப்பதில் பங்குகொண்டது Naval Cooperation and Patrols India’s naval forces and Coast Guard engaged in joint maritime operations with Sri Lanka to pressure LTTE supply and Sea Tiger (LTTE naval) activities: Indian Navy and Coast Guard ships patrolled strategic sea lanes (e.g., Palk Strait, Gulf of Mannar) to deter Sea Tiger operations and monitor suspect vessels. Rediff Coordination between Indian and Sri Lankan naval forces helped identify and interdict LTTE supplies approaching Sri Lanka’s territorial waters. Rediff These patrols — while not a “formal blockade” in the legal sense — acted as a de facto maritime pressure mechanism on LTTE logistics. Rediff ஆயுதங்களை வழங்கி, இலங்கை இராணுவத்தைப் பயிற்றுவித்து, தொழிநுட்ப உதவிகளை வழங்கியது Military Hardware, Training, and Technical Support India provided various forms of material and technical support to Sri Lanka’s armed forces which indirectly affected the operational context of the final war: India supplied surveillance radars to Sri Lanka and has a longstanding program of training Sri Lankan military personnel at Indian defense institutions. Stiftung Wissenschaft und Politik (SWP)+1 Although formal export of lethal weapons was limited due to domestic politics, technical and tactical expertise (e.g., training, radar data) helped Sri Lanka’s forces operate more effectively in tracking LTTE Naval units. Stiftung Wissenschaft und Politik (SWP) இலங்கையின் அரச, இராணுவ அதிகாரிகளுடன் இறுதி யுத்தம் நடைபெறவேண்டிய விதம் தொடர்பாகத் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் போரின் போக்கினைத் தீர்மானித்தது Joint Condition Monitoring and Strategic Counseling Beyond hardware and intelligence: Indian and Sri Lankan military/intelligence officials regularly met and exchanged information during the years leading up to and including the final war, reflecting deeper cooperation than just high-level diplomacy. South Asia Journal This included informal high-level exchanges between strategic officials on both sides (national security advisors, defense secretaries, etc.) from about 2007–2009. South Asia Journal வெளியுலகில் இருந்து வந்த போர்நிறுத்தத்திற்கான அழுத்தங்களை முறியடிப்பதில் தனது இராஜதந்திரச் செல்வாக்கினைப் பாவித்து போர் தொய்விஒன்றி நடந்து, புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை உறுதி செய்தது. Diplomatic Positioning — Shaping External Pressure India’s government took strategic positions that affected international pressure on Sri Lanka: India worked to ensure the LTTE remained widely designated as a terrorist organization, which undercut external pressure for a ceasefire that could have weakened Colombo’s military campaign. South Asia Journal At the United Nations and in international diplomatic fora, India supported Sri Lanka’s sovereignty and repeatedly opposed calls for a ceasefire during the final months, emphasizing civilian protection via safe zones rather than a complete stop to operations. South Asia Journal
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை செ.ஞானபிரகாஷ் Updated on: 06 Jan 2026, 9:50 am கேரள - கர்நாடக எல்லையை ஒட்டிய மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கிறார் மலாத்தி (பியானா மொமின் ) என்ற மலேசிய பெண். அவரது கணவர் சவுரப் சச்தேவா (குரியச்சன்). மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் ரகம் இவர். ஊருக்குள் அவரை பற்றி பெண்பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என்ற விமர்சனமும் உள்ளது. இதனால் மலாத்திக்கு துணையாக பியூஷ் (சந்தீப் ப்ரதீப்) என்ற இளைஞனை குரியச்சன் வேலைக்கு வைத்துள்ளார். அந்தக் காட்டுக்கு மோகன் போத்தன் ( வினித்) ஒரு நாயுடன் வருகிறார். மலாத்தியையும், அவரது கணவர் குரியச்சனையும் விசாரித்து விட்டு, கூடாரம் அமைத்து தங்கியுள்ளார். வினித் இறக்க, அதன் பின் நடக்கும் சம்பவங்களும், ஒவ்வொன்றாக அவிழும் முடிச்சுகளுமே ‘எகோ’ (Eko) திரைக்கதை. ஏற்கெனவே பிரபலமான ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்தை இயக்கிய தின்ஜித் அய்யதன் இப்படத்தில் உச்சம் தொட்டுள்ளார். அவரது திரை எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருமான பாகுல் ரமேஷ் கூட்டணி இம்முறையும் காட்சியமைப்புகளில் கட்டிபோட்டுள்ளனர். கிஷ்கிந்தாவில் குரங்குகளை வைத்து மிரட்டியவர்கள், ‘எகோ’வில் நாய்களை வைத்து நம்மை பயத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அரிதான நாய்களை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அவற்றை விற்கும் குரியச்சன், மலேசியாவிலிருந்து மலாத்தியை கேரளத்துக்கு அழைத்து வந்தது எப்படி என்பது வித்தியாசமான ஃப்ளாஷ்பேக். உண்மை ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரின் கோணமும் வெவ்வேறானது. அந்த ஃப்ளாஷ்பேக் குரியச்சன் பார்வையில் ஒரு கருத்தும், குரியச்சன் நண்பர் வினித் விவரிக்கும்போது வேறு மாதிரியாகவும் வெளியாகிறது. ‘ஃபேலிமி’ படத்தில் சாதுவாக தோன்றிய சந்தீப், ‘ஆலப்பூலா ஜிம்கானா’, ‘படக்கலம்’ படங்களுக்கு பிறகு நிறைவான, ஆக்ரோஷமான நடிப்பை இப்படத்திலும் உறுதி செய்கிறார். நாய்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவும் இப்படத்தின் அடிப்படை. மனிதர்கள் நாய்களையும், உறவுகளையும் பாதுகாப்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பதுதான் அடிநாதம். பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்து, அடிமையாக வைத்திருப்பதையும் காட்சியாக விவரிப்பது சிலிர்ப்பு. “நில நாய்களுக்கு எப்போதும் ஒரே முதலாளிதான்” என்பதை சுற்றிதான் வருகிறது க்ளைமாக்ஸ். மனிதன் தன் விருப்பத்துக்காக யாரையும் பாதுகாப்பு உணர்வு தந்து கட்டுபடுத்தி அடிமையாக்கி முதலாளியாக வலம் வருவதை உணர்ந்தோரும், மற்றவர்களை அடிமையாக்க தவறுவதில்லை. உணர்வுபூர்வமாகவும், காட்சி வழியாகவும் பேசும் தவற விடக்கூடாத இந்தத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. https://youtu.be/Bw6H-Ir1YJs?si=R6SNBW022EWYLiAE Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
- Today
-
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் அதிபர் சிறைப்பிடிக்கப்பட்ட நிகழ்வைக் கொண்டாடினர் என்பது குறித்து அறிய முற்பட்டபோது வெனிசுலா பற்றி பல சுவாரஸ்யத் தகவல்களும், சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவருக்கு முந்தைய அதிபர் ஹியூகோ சாவேஸ் குறித்து பல விஷயங்களும் தெரியவந்தன. சாவேஸ் முதல் மதுரோ வரை... - லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலாவின் வரலாறு கவனிக்கத்தக்கது. வேளாண் பொருளாதாரம் கொண்ட ஒரு தேசம் நகரமயமாகி, வேகமாக வளர்ச்சி கண்ட விதமே அதற்குக் காரணம். 1959-ல் லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே வெனிசுலா ஒரு ஸ்திரமான அரசைக் கொண்டதாக இருந்தது. அங்கு உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல்கள் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வெனிசுலா அதன் மூலம் செழிப்படையத் தொடங்கியது. ஆனால் 21-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெனிசுலா வேறொரு அரசியல் பாதையில் செல்லத் தொடங்கியது. அப்போது அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸின் ஆட்சி கவனம் பெறலானது. 1999-ல் வெனிசுலாவின் அதிபரான ஹியூகோ சாவேஸ், ‘பொலிவிரியன் புரட்சி’ ( Bolivirian Revolution) என்ற பெயரில் சோசலிஸக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். நாட்டின் பெயரைக் கூட வெனிசுலா பொலிவிரியன் குடியரசு என்று மாற்றினார். பொலிவர் என்பவர் சாவேஸின் கொள்கை குரு. அவருக்கு மாவோ, ஸ்டாலின், லெனின் மீதும் கூட ஈடுபாடு இருந்தது. சோசலிஸக் கொள்கைகளைப் புகுத்தி வெனிசுலா அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தார். அதுவரை அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கொட்டமடித்த ஆட்சியாளர்களை ஒடுக்குவேன் என்று சூளுரைத்தே ஆட்சிக்கு வந்திருந்ததால், மக்கள் பணிகளில் ஆர்வம் காட்டினார். எண்ணெய் வளம் இருந்தும் ஏன் பொருளாதாரத் தேக்கநிலை என்று சிந்தித்து, கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தார் சாவேஸ். பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். இயற்கை வளமாக பெட்ரோலியத்தை வைத்து தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் மிதப்பது தடைபட்டது. அவரின் கட்டுப்பாடுகளால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்திருந்தது. சில பெருஞ் செல்வந்தர்களும் எரிசலில் இருந்தனர். சாவேஸுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது. ஆனாலும் எதைப் பற்றியும் சட்டை செய்யாமல், அவர் தொடர்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உள்நாட்டில் மட்டுமல்ல ஐ.நா. அவையிலும் கூட அமெரிக்காவை, அதன் அதிபரை சரமாரியாக சர்வசாதாரணமாக விமர்சித்து கர்ஜித்தார். ஆனாலும் அவருடைய ஆட்சியில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அதற்கு அவரது கொள்கைகளே காரணம் என்று பல்வேறு விவாதங்களுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில், 2013-ம் ஆண்டு சாவேஸ் உயிரிழந்தார். அதன்பின்னர் வெனிசுலாவில் ஸ்திரமான ஆட்சி அமையவில்லை. 2018-ம் ஆண்டு நிக்கோலஸ் மதுரோ அதிபரானார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிட விடாமலேயே அவர் அதிபரானார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 2024-ல் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனாலும், மதுரோ அதனை அனுமதிக்கவில்லை. முழு சர்வாதிகாரியாக மாறியிருந்த மதுரோ மீண்டும் அதிபரானார். வெனிசுலாவில் போதைக் கும்பல்கள் ஆதிக்கம் மேலோங்கியது. இப்படி சாவேஸுக்குப் பின்னர் தேர்தலே இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிக்கோலஸ் மதுரோ சிறைப்பிடிப்பைத்தான் வெனிசுலாவாசிகள் கொண்டாடியுள்ளனர். கொண்டாட்டமும் கேள்விகளும்! - ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வாழும் வெனிசுலாவாசிகள் இந்த நகர்வைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்காகத் தான் காத்திருந்தோம் என்பதுபோல் அவர்களின் கொண்டாட்டங்கள் அமைந்திருந்தன. ஆனாலும் சிலர் பயத்தில் நிசப்தத்தை தழுவி நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்குமோ என்பதே அவர்களின் அச்சத்துக்கு காரணம் எனலாம். இப்போது வெனிசுலா மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையும், சந்தேகமும் ஒருபுறம், நிம்மதியும், நம்பிக்கையும் மறுபுறம் என்று நிலவுகிறது. ஸ்பெயினில் களைகட்டிய மதுரோ கைது கொண்டாட்டம் பற்றி வெனிசுலாவிலிருந்து புலம்பெயர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இங்கே நிகழும் கொண்டாட்டங்களைக் காணும்போது எனக்குக் கவலையாக இருக்கின்றது. மதுரோவை சிறைப்பிடிக்கப்பட்டதில் நிம்மதிதான். ஆனால், அடுத்து என்ன நடக்கும். போர் மூண்டால் என்னவாகும்? எனக்கு அங்கே உள்ள எனது குடும்பத்தினரின் பாதுகாப்பே முக்கியம்” என்றார். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் வெனிசுலாவாசிகள் நடத்திய கொண்டாட்டப் பேரணியில் அமெரிக்கக் கொடிகளுடன் சிலர் இருந்தனர். இன்னும் சிலர் ட்ரம்ப்பை புகழ்ந்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் வந்தனர். ஒரு பெண் ட்ரம்ப்பை போலவே வேடமிட்டு வந்திருந்தார். இதையெல்லாம் கவனித்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலாவைச் சேர்ந்த ஓர் இளைஞர், “மதுரோ கைது என்பது எனக்கு மகிழ்ச்சியே. ஆனால், எனது தேசத்தை அமெரிக்கா ‘ஸ்டாக்’ செய்து கொண்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது” என்றார். மதுரோ கைதுக்கு கியூபா, கொலம்பியா, மெக்சிகோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எல்லாம் ஏதோ ஒப்புக்கு கருத்து சொல்லிச் சென்றுள்ளன. இதுபோன்ற மென்மையான கண்டிப்புகள் ட்ரம்ப்பை எந்த வகையிலும் அசைத்துப் பார்க்காது. சீனாவும், ரஷ்யாவும் மட்டும்தான் அமெரிக்காவும் தனது கண்டனங்களை சற்று வலுவாகப் பதிவு செய்துள்ளன. இதுபோன்ற வன்மையான கண்டனங்களும்கூட தடித்த தன்மை கொண்டது அமெரிக்காவை ஒன்றும் செய்யாது என்பது உலக வரலாறு அறிந்தது! அன்று ஈராக்கியர்கள் ஏமாந்தது போல... - இப்போது வெனிசுலா மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பார்த்து சமூக வலைதளங்களில் சர்வதேச அரசியல் நிபுணர்கள் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், “இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் வீழ்ச்சிக்குப் பின்னரும், லிபியர்கள் கடாஃபி வீழ்ச்சிக்குப் பின்னரும் கொண்டிருந்த கொண்டாட்ட மனநிலைய சற்றே திரும்பிப் பாருங்கள். இப்போது அந்த நாடுகள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதையும் யோசியுங்கள். அந்த இரண்டு நாடுகளுமே அமெரிக்க கட்டுப்பாட்டில் வெற்று நிலமாக மாறின. விடுவிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதைத்தான் பல நாடுகளில் செய்திருக்கிறது. சர்வாதிகார நாடுகளில் நிச்சயம் மாற்றம் வர வேண்டும். ஆனால், அது உள்ளிருந்து எழும் மாற்றமாக இருக்க வேண்டும். படையெடுப்பு அல்லது கூட்டுச் சதியின் விளைவாக ஒரு மாற்றம் நிகழக்கூடாது. அது மக்களுக்கான மாற்றமாக இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார். “2003-ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அப்போது ஈராக்கியர்கள் சதாம் ஹுசைன் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். சதாம் ஹுசைன் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தான் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது. அதிருப்தி ஈராக்கியர்களும் ‘வெல்கம் யுஎஸ்’ என்று பதாகைகளுடன் வரவேற்றனர். ஆனால் 2011 வரை ஈராக்கில் அமெரிக்கா பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தியது. லட்சக்கணக்கில் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில் எந்த அணு ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. சதாமும் கொல்லப்பட்டார். அன்று கொண்டாடிய ஈராக்கியர்களிடம் இன்று சென்று கேட்டால், அவர்கள் அமெரிக்கா மீது அத்தனை வெறுப்புடன் தாங்கள் பட்ட துன்பங்களை நினைவுகூர்வார்கள். ஈராக்கில் இருந்து அமெரிக்கா சென்ற பின்னர், அது ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் பிடிக்குள் சென்றது. போர் எளிது, போரை முடிப்பதும் கூட எளிது, ஒரு ஆட்சியைக் கவிழ்ப்பதும், ஒரு சர்வாதிகாரியை வீழ்த்துவதும் கூட எளிது. ஆனால், ஒரு தேசத்துக்கு ஸ்திரத்தன்மையை அளிக்கக்கூடிய அரசை உருவாகச் செய்வது கடினம்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த திரைப் பிரபலம் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது. கட்டுரை உறுதுணை: தி கான்வர்சேஷன் அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 11:36 - 0 - 22 எந்த நாடும் எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், சர்வதேச சட்டத்தையும்,ஐ.நா.சாசனத்தையும் மீறிச் செயற்பட முடியாது என அமெரிக்க ஜனாதிபதி, வெனிசியூலாவை ஆக்கிரமித்து ,அதன் ஜனாதிபதியை சிறை பிடித்துள்ளதை வன்மையாகக் கண்டித்து ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை(6) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச சட்டத்தில் நாடொன்றை அபகரிப்பதற்கும்(Irredentism), பலவந்த ஆட்சி மாற்றத்திற்கும் (Regime Change) அறவே இடமில்லை லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் உள்ள பல நாடுகள், தங்களது இறையாண்மை மற்றும் நிலப்பரப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில், இராணுவ தாக்குதல்கள் மற்றும் வேறு கட்டாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அச்சுறுத்தப்படுவதைக் குறித்து ஆழ்ந்த கவலையுடன் உற்று நோக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள், குறிப்பாக, வெனிசியூலா மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இராணுவ ஊடுருவல்கள் மற்றும் அந்த நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எவ்வளவு பெரியதோ அல்லது சக்திவாய்ந்ததோ என்றாலும், எந்த நாடும் சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தையும் வெளிப்படையாக மீறுவதற்கு எவ்வித உரிமையுமில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலகை ஒழுங்கு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு சில தொடர்ச்சியான, இன்னும் தீர்க்கப்படாத சவால்கள் இருந்தபோதிலும் கூட, மொத்தத்தில் இதில் உலகின் நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டதாகும். ஆனால் இன்று சுயநல புவியியல், அரசியல் இலக்குகளை அடைவதற்காக கொடூரமாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், அந்த ஒழுங்கை மேலும் நிலைகுலையச் செய்கின்றன. இன்றைய பூகோள அரசியலில் தற்காலிகமாக மேலோங்கியுள்ள வளங்களை சுரண்டுவதற்கான பேராசை, சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்கும் , தூதரக நடைமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும். அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சாகசப்போக்கு, ஆட்சி மாற்றத் திட்டங்கள், அபகரிப்பு ஆசைகள் மற்றும் போர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை மறைத்திருந்த அதன் முகமூடி கிழிந்துவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். இப்போது அது வெளிப்படையாகவும் வெட்கமின்றியும் பிற நாடுகளின் வளங்களின் மீது உரிமையையும், ஆதிக்கத்தையும் கோருகிறது. ஆனால் சர்வதேச சட்டத்தின் படி, இயற்கை வளங்களின் மீதான முழு இறையாண்மையும் அவை வழங்கப்பட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கே சொந்தமானதாகும். இவ்வாறான முன்னேற்றங்கள், தடையின்றி தொடர அனுமதிக்கப்படுமானால் மனிதகுலம் முழுவதற்கும் இழிவை ஏற்படுத்தும். மேலும், ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதற்கான அடிப்படை நோக்கமான மற்றொரு உலகப் போரைத் தவிர்ப்பதைப் பாதிக்கும் வகையில், உலகை ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் இந்த மிகக் கொடூரமான செயல்கள் மற்றும் சம்பவங்களை நாம் எந்தவிதமான தயக்கமுமின்றி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாடுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரேயொரு வழியாக பரஸ்பரம் கலந்து ரையாடலும், ஒத்துழைப்புமே இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மற்றும் பலவீனமான நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை கொள்கைகள் மற்றும் அநீதிகளை நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகமானது, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒருதலைப்பட்சத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துவதற்காக செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது Tamilmirror Online || ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இறுதி யுத்தத்தில் இந்தியா எவ்வாறு நடந்துகொண்டது என்பதை அன்றைய சோனியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தனது புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான். What Menon Actually Says in Choices 1. India made a strategic choice to support Colombo’s campaign. Menon describes the 2009 war as one of India’s critical “choices” in foreign policy — choosing between humanitarian concerns/demands from Tamil Nadu and the strategic imperative of maintaining influence with Sri Lanka’s government and keeping other powers (notably China) at bay. India ultimately chose to support the Sri Lankan government’s military effort rather than push for a ceasefire that could undermine Colombo’s position. puradsimedia.com+1 2. India engaged closely with Sri Lanka’s leadership. He recounts regular, discreet visits by Indian officials — including himself and then-Foreign Minister Pranab Mukherjee — to Colombo during the war for direct briefing and coordination. World Socialist Web Site 3. Menon argues that standing aside would have politically ceded Sri Lanka to other powers. Menon justifies India’s support to Colombo on geopolitical grounds — that refusing support to the Sri Lankan government would have weakened Indian influence in its immediate neighborhood and allowed China or others to fill the vacuum. He frames it as a choice dictated by realpolitik, not altruism. World Socialist Web Site 4. Menon notes that the war ended with the military defeat of the LTTE rather than a negotiated settlement. He characterizes the war’s conclusion as a military end to terrorism and argues that this was one of the rare occasions where military force produced such an outcome, even though brutality was inevitable. puradsimedia.com 🛰️ India’s Practical Help to Sri Lanka (Context from Other Sources) While Menon’s book describes the rationale, other sources document how that support was operationalized — though some of these details are reported outside the Choices book itself: ✔️ Intelligence and Naval Support India’s navy and naval intelligence helped locate and destroy supply vessels and “floating warehouses” used by the LTTE, disrupting their logistics at sea. The New Indian Express Indian reconnaissance aircraft provided real-time tracking of Tiger maritime movements to the Sri Lankan Navy. The New Indian Express+1 ✔️ Military Hardware Transfers India quietly gifted Mi-17 transport helicopters that were used in combat support roles by Sri Lankan forces, despite publicly denying offensive weapons supply. The New Indian Express Indian Coast Guard gifted an offshore patrol vessel and patrolled jointly with Sri Lankan forces to help deter Sea Tiger movements. The New Indian Express ✔️ Strategic and Diplomatic Backing India discouraged international pressure for a ceasefire during the final offensive, arguing that this would prolong the conflict and strengthen the LTTE. (Menon suggests the international community was generally restrained and India did not push a ceasefire hard.) SBS Australia According to reporting about his book, Menon recalls that Tamil Nadu politicians privately supported opposing efforts by other countries (e.g., the US and Norway) to intervene or “rescue” LTTE leadership. The New Indian Express 🛥️ On Allegations like Blocking a US Naval Rescue There are claims circulating online and in some commentary that India worked to prevent the US Navy from attempting to rescue LTTE leaders or arms suppliers, but these are not substantiated in Menon’s own text. Menon does note rationales for opposing outside military missions that could complicate India’s strategic posture, but he does not explicitly describe blocking a specific US rescue operation in Choices. SBS Australia ✨ Summary — What Menon’s Book Really Says 🔹 Menon portrays India’s role as strategic support rather than strict neutrality. puradsimedia.com 🔹 India prioritized keeping Sri Lanka aligned with India and away from China over pressuring Colombo. World Socialist Web Site 🔹 India engaged with Sri Lanka’s leadership behind the scenes during the war. World Socialist Web Site 🔹 He argues that India’s actions, even if politically hard, were aimed at preserving India’s influence and regional stability. SBS Australia மேனனின் சொந்த கருத்துக்கள் அவன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இவ்வாறு பதியப்பட்டுள்ளன. 1. Title and Opening Framing The chapter on Sri Lanka is explicitly titled: 2. India’s Role in Cutting Off LTTE Supplies Menon describes how the LTTE had been “starved of supplies by sea” by early 2009 and notes that this was achieved through effective intelligence and interdiction by the Sri Lankan armed forces with the help of others. puradsimedia.com He writes (verbatim from the chapter text available): This line makes clear that Indian naval intelligence and interdiction efforts were part of the campaign that cut the LTTE’s maritime lifelines — a major operational factor in the rebels’ defeat. puradsimedia.com 3. Structure of the Chapter Text The chapter opens with two epigraphs that reflect its theme: These quotations underwrite Menon’s framing of the end of the Sri Lankan war as ultimately a case where force – not diplomacy – resolved an entrenched 26-year conflict, even if at great human cost. puradsimedia.com 📌 What Choices Does and Does Not Include ✔️ What the Book Explicitly Says Menon’s chapter confirms India’s role in intelligence and maritime interdiction efforts against LTTE supply lines. puradsimedia.com He presents the outcome — defeat of the LTTE — as the result of sustained military pressure, not negotiated settlement. puradsimedia.com India is described as weighing strategic, domestic political, and humanitarian interests in determining what it did and did not do. icsin.org ❌ What Choices Does Not Contain (As Far as Public Excerpts Show) The publicly available chapter (and summaries) do not include direct extended quotations where Menon lists items like “naval blockade,” or “prevented US rescue operations” verbatim. These themes are reported by commentators and some newspaper coverage summarising Menon’s account — not verbatim text from the book itself. The New Indian Express The book does not print out all operational details in literal quotes beyond the introduction passage available on PDFs, so scholars normally obtain full text through the book itself. Penguin Random House India 📌 Contextual Observations from Reporting on Menon’s Account While not direct quotations, other reporting on Menon’s chapter highlights additional content reflected in his narrative: 🟦 India’s strategic rationale — Menon notes ― had India “stood aside” and pressed for a halt, it risked “defending the killers of an Indian Prime Minister” and ceding influence to other powers — an argument expressed as part of his assessment of India’s choices. The New Indian Express 🟦 Tamil Nadu political nuance — He discusses how Tamil Nadu political leaders privately supported the Indian government’s stance against external rescue efforts for LTTE leadership, despite public posturing — a nuance about domestic politics influencing foreign policy. The New Indian Express (Note: This is reflected in detailed reporting based on the book, not the PDF excerpt itself.) 🧠 Summary of Key Direct Text from Choices Here are the verified direct lines / paraphrased text from Choices based on available excerpts: 🔹 The LTTE was starved of supplies by sea due to intelligence and interdiction involving the Indian Navy. puradsimedia.com 🔹 The chapter is built around the idea that force ultimately worked where diplomacy had failed. puradsimedia.com 🔹 Menon titles the chapter to reflect that “Force Works” in the Sri Lankan context — a deliberately chosen framing. puradsimedia.com Overall Interpretation Shivshankar Menon’s Choices doesn’t deny India’s strategic involvement in the Sri Lankan war’s final phase. It explicitly frames India as part of efforts that cut off LTTE supply lines and worked with Colombo’s military strategy while weighing geopolitical and domestic pressures. What Menon doesn’t provide in the publicly available excerpts are extended direct quotations detailing every military assistance action — researchers generally access the full book (in print or e-book) for those exact lines, as publisher sites only preview parts. Penguin Random House India
-
செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 04:53 - 0 - 32 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கித்தாரியான பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இஷார செவ்வந்திக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு குற்றப்பிரிவால் கொழும்பு நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (07) அன்று ஆஜர்படுத்தப்பட்டனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைக்குப் பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேரும் நேபாளத்தில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Tamilmirror Online || செவ்வந்தியுடன் கைதான யாழ். தக்ஷிக்கு விளக்கமறியல்
-
யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்றைய கொண்டாட்டத்தின் போது எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் பட்டத்துடன் வானில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பல இளைஞர்கள் இணைந்து ஒரு பாரிய படலப் பட்டத்தை (கூட்டுப் பட்டம்) நீண்ட தொடுவைக்கயிறு (வடம்) மூலம் வானில் ஏற்ற முயற்சித்தனர். அப்போது வீசிய பலத்த காற்றினால் பட்டத்தின் விசை அதிகரித்து, வடத்தைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடுதியாக வான்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டார். கீழிருந்த ஏனைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு, வடத்தை மெல்ல மெல்லக் கட்டுப்படுத்தி அந்த இளைஞரை பாதுகாப்பாகத் தரையிறக்கினர். இதேவேளை, கடந்த முறைகளிலும் பட்டத்துடன் பறந்த இளைஞன் பற்றிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R Tamilmirror Online || யாழில் பட்டத்துடன் பறந்த இளைஞன்
-
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
ஓரின சேர்க்கையை பற்றி இருந்ததாக தகவல். அதை பார்த்து.. பிக்குகள், பாதிரியார்மார் எல்லோரும் பொங்கி எழுந்து விட்டார்களாம். தங்களை குறிப்பிடுவதாக கருதி விட்டார்களோ.... 😂 🤣
-
சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 02:11 - 0 - 78 2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார். சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறினார். தேவைப்பட்டால், அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால கூறினார். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று புதிய அரசாங்கம் விசாரித்து வருவதாகவும், விசாரணையை ஓர் ஆழமான விசாரணை என்று விவரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சில விவரங்களை பாராளுமன்றத்தில் வெளியிட முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்றார். Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்
-
கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து!
07 Jan, 2026 | 04:02 PM நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லவிருந்த விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது விமானத்தில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுறிது. கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து! | Virakesari.lk
-
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு
அப்படி என்னதான் இருந்தது? யாராவது தெரிந்தவர்கள்?
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
ஆமேன்.
-
நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்!
இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்! கிட்டத்தட்ட நான்கு வருட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சேவைக்குப் பிறகு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமெரிக்காவின் அதியுயர் இராஜதந்திரியாகப் பணியாற்றிய அவரது பதவிக் காலத்தின் நிறைவினை அது குறிக்கிறது. அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவிக்கையில், “இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்.” “முதலாவது நாளிலிருந்தே எமது பாதுகாப்புப் பங்காண்மைகளைப் பலப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் மற்றும் எமது இரு நாடுகளையும் வலிமையாக்கும் கல்வி மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல முடிவுகளை வழங்குகின்ற மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை ஆதரிக்கும் ஒரு உறவினை ஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.” எனவும் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்த தூதுவர் சங்கின் பதவிக்காலமானது, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024ஆம் ஆண்டில் அமெரிக்க பீஸ் கோர் தொண்டர்கள் இலங்கையில் மீண்டும் தமது சேவையினை ஆரம்பித்தது, மற்றும் ஃபுல்பிரைட் நிகழ்ச்சித் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களை உள்ளடக்கியிருந்தது. 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் LEED Gold சான்றிதழ் வழங்கப்பட்ட புதிய வளாகத்திற்கு தூதரகம் இடம் மாறியதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். அது இலங்கையில் நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாகும். அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக ஒரு நவீன பங்காண்மையினைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்கா கொண்டுள்ள கவனத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூதுவர் சங் அவர்களின் தலைமையின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை அமெரிக்கத் தூதரகம் முன்னெடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளுக்காக அமெரிக்கா வழங்கிய ஆதரவு மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கிய உதவித் தொகுப்புகள் மற்றும் மிகச்சமீபத்தில் 2025 டிசம்பர் மாதத்தில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான பதிலளிப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் வழங்கிய மனிதாபிமான உதவிகள் என்பன அவற்றுள் உள்ளடங்குகின்றன. 2022ஆம் ஆண்டு முதல் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சுதந்திரம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவியாக இலங்கைப் பங்காளர்களுடனான ஈடுபாட்டினையும் தூதுவர் வழிநடாத்தினார். தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலத்தில், மொன்டானா தேசிய காவல் படையணி மற்றும் இலங்கையின் பாதுகாப்பமைச்சு ஆகியவற்றிற்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் CARAT, ATLAS ANGEL, மற்றும் Pacific Angel போன்ற பிராந்திய பாதுகாப்பு மற்றும் பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு தொடர்பான பயிற்சிகள் ஆகியவற்றினூடாக அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் தூதரகம் ஆழப்படுத்தியது. இலங்கையின் மிகப்பரந்த கடல்சார் களத்தினைப் பாதுகாக்கும் திறனை பலப்படுத்தும் வகையில், ஒரு Beechcraft King Air விமானம் மற்றும் இரண்டு முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட முக்கியமான கடல்சார் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்களில் வேரூன்றிய ஒரு பங்காண்மையினை கட்டமைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை மீளவலியுறுத்தும் இம்முயற்சிகள் ஊடாக பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தூதுவர் மேம்படுத்தினார். தூதுவர் சங் பதவிக்காலத்தில் இளைஞர் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் செழித்து வளர்ந்தன. 2024 ஆம் ஆண்டில் பீஸ் கோர் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக இலங்கையில் மீண்டும் ஆரம்பித்தது. மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அமெரிக்கத் தகவல் கூடம் மற்றும் திருகோணமலையில் ஒரு ஆங்கில மொழி ஆய்வு கூடம் போன்ற புதிய வசதிகள் ஊடாக அமெரிக்க கலாச்சார மற்றும் கல்வி ரீதியான தொடர்புகள் வளர்ந்தன. தூதரகத்தின் இளைஞர் மன்றம், இளம் தெற்காசிய தலைமைத்துவ முன்முயற்சி (YSALI) மற்றும் English Access போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் இலங்கையின் அடுத்த தலைமுறை தலைவர்களைத் தொடர்ந்தும் வலுவூட்டுகின்றன. கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொடவாய கப்பற் சிதைவினைப் பாதுகாப்பதற்கு உதவி செய்து, கலாச்சார பாரம்பரியத்தினையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் ஒரு அங்கமாக தூதுவர் சங் உயர்த்தினார். அமெரிக்க-இலங்கை மூலோபாய பங்காண்மையினை பலப்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், பகிரப்பட்ட வரலாற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வழங்கும் தலைமைத்துவத்தினை இம்முயற்சிகள் பிரதிபலித்தன. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்த தூதுவர் சங்கின் பதவிக்காலத்தில் இடப்பட்ட பலமான அடித்தளத்தின் மீது இலங்கையுடனான தனது பங்காண்மையினைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துடனும் அதன் மக்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. ஒரு புதிய அமெரிக்கத் தூதுவர் வருகைதரும் வரை தூதரகத்தின் பிரதிப் பிரதானியான ஜேன் ஹொவெல் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகப் பணியாற்றுவார். இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவிருக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்! | Virakesari.lk
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்!
07 Jan, 2026 | 02:26 PM இந்திய இராணுவத் தளபதி (Chief of the Army Staff) ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு இன்று புதன்கிழமை (7) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பல மூத்த தலைவர்களைச் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு விஜயம்! | Virakesari.lk
-
இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
07 Jan, 2026 | 02:38 PM "அக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தோட்ட மற்றும் சமூக உற்கட்டமைப்பு அமைச்சு, இறப்பர் அபிவிருத்தி திணைக்களம், மற்றும் இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் 8 மில்லியன் யூரோ மானியத்தால் செயல்படவுள்ளது நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் பசுமைவாயிந்த பொருளாதார வளர்ச்சிக்கான இலங்கையின் மாற்றத்தை இந்த முயற்சி ஆதரிக்கும். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, இறப்பர் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி வகைகளில் மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பொறுப்பான விவசாய நடைமுறைகளுக்கு மாறுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் ஒத்துழைப்புத் தலைவர் டாக்டர் ஜோஹன் எச். ஹெஸ்ஸே ( Johann.H.Hess ) ஆகியோர் கையொப்பமிடப்பட்ட மானிய ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மதிப்புமிக்க ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துதோடு, இந்தத் திட்டம் சந்தை சார்ந்த மதிப்பு கூட்டல் மற்றும் ஏற்றுமதி சந்தைகளுடன் மேம்பட்ட ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இலங்கையின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுடன் நெருக்கமாக ஒத்துப்போகிறது என்பதைக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மைக்கு ஒரு சான்றாக நிற்கிறது. பசுமை பொருளாதார வளர்ச்சி, நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இது ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கை அரசாங்கம் - ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்து! | Virakesari.lk
-
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
Published By: Digital Desk 3 07 Jan, 2026 | 04:30 PM தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது. ஆனாலும் கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது. அத்துடன் இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா | Virakesari.lk