stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னப்பா.... எல்லாம், சப்பெண்டு போச்சுது. இந்தச் செய்தி உண்மையா? அல்லது... AI விளையாட்டா. விவாகரத்து மனுவை ரத்து செய்ய, இந்தியா வந்த சங்கீதாவை... கட்டி அணைத்து கண்கலங்கி வரவேற்ற விஜய்..! பாசப் போராட்டம்.!!! Lankapuri
-
அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்
அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் Mar 7, 2026 - 04:55 PM ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சவால் விடுத்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின், ஹார்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணிகளை அமெரிக்கக் கடற்படை ஆரம்பிக்கலாம் என டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக ஹார்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை ஊடாகத் தினமும் பெருமளவிலான எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றது. இதன் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் எழுந்துள்ளமை உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது முதல், குறைந்தது ஒன்பது கப்பல்களாவது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதன்காரணமாக, இந்த மூலோபாய நீர்வழிப்பாதையூடாகப் பயணிக்க வேண்டாம் என புரட்சிகரப் படை கப்பல்களுக்கு உத்தரவிட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இவ்வாறு எழுந்துள்ள பிரச்சினைகள், உலகளாவிய எரிசக்தி சந்தையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. அமெரிக்காவிற்கு ஈரான் சவால்: ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு! Published By: Digital Desk 1 07 Mar, 2026 | 04:42 PM இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில பொருட்கள், சீனிகம கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.இலங்கை செய்திகள் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இன்று காலை கடற்கரையில் அடையாளம் தெரியாத உலோக பாகங்கள் மற்றும் கப்பல் உதிரிப்பாகங்களை ஒத்த பொருட்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அவை அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொருட்கள், இந்தியப் பெருங்கடலில் டொர்பிடோ தாக்குதலில் மூழ்கிய IRIS Dena என்ற ஈரானிய கடற்படை கப்பலுக்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், கரையொதுங்கிய பொருட்கள் உண்மையில் அந்த கப்பலுக்குச் சொந்தமானவையா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. இலங்கை கடற்படை மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படும் கடற்பரப்பு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்படை கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கரையொதுங்கிய பொருட்களின் தன்மை மற்றும் அவை எந்த கப்பலுக்குச் சொந்தமானவை என்பது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே தெளிவான தகவல்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில், பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!
-
நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை!
நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை! Published By: Digital Desk 1 07 Mar, 2026 | 03:53 PM மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பானிய தற்காப்புப் படையின் போர்க்கப்பலில் திடீரென நோய்வாய்ப்பட்ட வீரர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையினால் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான "JMSDF ONAMI" என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய குழு உறுப்பினர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, கப்பல் தரப்பிலிருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசர உதவி கோரப்பட்டது. இந்த அறிவிப்பு கிடைத்தவுடன், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு போர்க்கப்பல் மருத்துவக் குழுவுடன் உடனடியாக குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடுக்கடலில் வைத்து நோயாளியைப் பொறுப்பேற்ற இலங்கை கடற்படையினர், அவருக்குத் தேவையான அடிப்படை முதலுதவிகளை கப்பலிலேயே வழங்கினர். குறித்த நபர் 06ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு விரைவாகக் கொண்டு வரப்பட்டார். துறைமுகத்தை வந்தடைந்ததும், அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் சர்வதேச கப்பல் பணியாளர்கள் மற்றும் உள்நாட்டு மீனவ சமூகத்திற்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை!
-
அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்
அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம் Mar 7, 2026 - 04:32 PM அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயன்முறைக்காகத் தகுதியுடைய 2,993,558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் வழங்கிய தகவல்களை உறுதிப்படுத்துவார்கள். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளன. கணக்கெடுப்பு உத்தியோகத்தர் வீட்டிற்கு வரும்போது, தேவையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் தேசிய அடையாள அட்டைகள், கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள், காணி உரிமையை உறுதிப்படுத்தும் உறுதிப்பத்திரங்கள், வாகன உரிமைப் பத்திரங்கள் (இருப்பின்), மருத்துவச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர் உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எவரேனும் தவறான தகவல்களை வழங்கினால், நலன்புரி சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீதவான் முன்னிலையில் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு 5,000 ரூபாவிற்கு மிகாத அபராதம் அல்லது ஓராண்டு கால சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளையும் விதிக்க அதிகாரம் உள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்
-
கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!
கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்! Published By: Digital Desk 1 07 Mar, 2026 | 03:14 PM சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின நினைவு சாலை ஓட்டம் - 2026, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்பிலும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் தலைமையிலும், சனிக்கிழமை (07) காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது. சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் பிரான்சில் 1948 பெப்ரவரி 18 ஆம் திகதி நிறுவப்பட்டதுடன், இது மாநிலங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்கவும், விளையாட்டின் மூலம் அமைதியைக் கட்டியெழுப்பவும், நட்பை மேம்படுத்தவும் "விளையாட்டின் மூலம் நட்பு" என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டதுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளதுடன், சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் உலகின் மிகப்பெரிய பல்துறை அமைப்பாகும், இது பெல்ஜியம், டென்மார்க், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் முன்னோடிப் பணிகளுடன் நிறுவப்பட்டது. இது உலகெங்கிலும் உள்ள 140 நாடுகளின் ஆயுதப்படைகளுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு உலகளாவிய விளையாட்டு அமைப்பாகும், மேலும் இது உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு உறுப்பு நாடும் பெப்ரவரி 18 அல்லது அதைச் சுற்றி சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நினைவு தின ஓட்டத்தை ஏற்பாடு செய்கிறது. அதன்படி, 2026 சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் நினைவு தின ஓட்டம் கொழும்பு காலி முகத்திடலின் அருகே தொடங்கி காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் 02 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து, மீண்டும் கொழும்பு காலி முகத்திடலின் அருகே முடிவடைந்தது. மேலும், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் மற்றும் ஊனமுற்ற போர்வீரர்கள் குழுவுடன் இந்த நினைவு பயணத்தில் பங்கேற்றனர். கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
டிக்கோயா பிணவறைச் சம்பவம்: மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு 07 Mar, 2026 | 01:37 PM டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்திற்குப் பாலியல் வன்புணர்வு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அங்கு பணிபுரியும் மூன்று சிற்றுழியர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி யுவதியின் பெற்றோர்கள் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை (06) மாலை யுவதியின் பெற்றோர்களினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்; "எனது பிள்ளையின் சடலத்திற்கு வைத்தியசாலையில் ஏதோ ஒரு விபரீதம் நடந்துள்ளது. இது தொடர்பாக வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா (CCTV) காட்சிகளை முழுமையாக எமக்குக் காண்பிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு முன்னால் வைத்தியர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நேரில் பார்க்கவில்லை. எமக்குக் காண்பிக்கப்பட்ட காட்சிகளில், குறித்த மூன்று ஊழியர்களும் பிரேத அறைக்குச் சென்று வரும் காட்சிகள் வெறும் 59 செக்கன்கள் மாத்திரமே உள்ளன. இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் ஒன்றும் நடந்திருக்காது என வைத்தியர் எமக்குக் கூறினார். இது தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களிடமும் வைத்தியர் தெரிவித்த கருத்துகள் வேறாக உள்ளன. யுவதியின் உடல் மீது தமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் கூறியிருக்கிறார். அவ்வாறு அவர் கூறுவதற்கான காரணம் என்ன? நள்ளிரவு நேரத்தில் அந்த மூன்று ஊழியர்களும் எதற்காகப் பிரேத அறைக்குச் செல்ல வேண்டும்? அங்கு அவர்கள் செல்ல வேண்டிய எந்தத் தேவையுமில்லை. எனவே, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொலிஸாரிடம் கோரியுள்ளோம். நாங்கள் வைத்தியசாலைத் தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு அமைதியாக இருப்பதாக மக்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காண்பிக்கப்பட்ட காணொளிக் காட்சிகளினால் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்" என அவர் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்தார். டிக்கோயா பிணவறைச் சம்பவம்: மூன்று ஊழியர்களுக்கு எதிராகப் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு
-
'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?
'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 7 மார்ச் 2026, 06:59 GMT வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் காவிரி ஆற்றின் கரையோரமுள்ள ஸ்ரீரங்கம், கடந்த சில வாரங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு காரணம், ஸ்ரீரங்கம் கோவில் அடிமனை விவகாரம். 'அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' என, பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்படும் நிலை வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். "பூர்வீகமாக வாழ்ந்து வருவதால் இடம் தங்களுக்கே சொந்தம்" என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். "கோவில் நிலத்துக்கு தனி நபர்கள் உரிமை கோருவதை அனுமதிக்க முடியாது" என இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கோவில் அடிமனை விவகாரத்தின் பின்னணியை அறிவதற்கு களத்துக்குச் சென்றது பிபிசி தமிழ். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் திருச்சியில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ கோவில்களில் முதன்மையானதாக இந்தக் கோவில் உள்ளதாக இந்துசமய அறநிலையத்துறை கூறுகிறது. பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோவிலாக ஸ்ரீரங்கம் உள்ளது எனவும் பூலோக வைகுண்டம் என்று இந்தக் கோவில் அழைக்கப்படுவதாகவும் இந்துசமய அறநிலையத்துறை இணையதளம் கூறுகிறது. காவிரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவில் 236 அடி ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. அடிமனை என்று கூறுவது ஏன்? கோவிலுக்கு வெளியில் நான்கு உத்தரவீதிகள், நான்கு சித்திரவீதிகள், நான்கு அடையவளைஞ்சான் (கோவில் பிரகாரத்தைச் சுற்றியுள்ள வீதிகள்) உள்பட 329 ஏக்கர் நிலத்தில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை 'அடிமனை' என கோவில் நிர்வாகம் கூறுகிறது. 1998ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும் இதே வார்த்தையை நீதிபதி பயன்படுத்தியுள்ளார். மனையின் அடியில் உள்ள நிலம் என்பதைக் குறிக்கும் வகையில் 'அடிமனை' என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறுகிறார், சுரேஷ் வெங்கடாச்சலம். கோவிலின் பராமரிப்பு செலவுக்காக தேவதாயம் (Devadayam) என்ற பெயரில் சுற்றியுள்ள நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான விவரங்கள் 1864 ஆம் ஆண்டு இனாம் காட்சிப் பதிவேட்டில் (Inam Fair Register) பதிவாகியுள்ளது. "தமிழ்நாட்டில் 1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி 1969 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தாசில்தார் விசாரணை நடத்தி கோவில் நிலத்தில் குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்கினார்" என சுரேஷ் வெங்கடாச்சலம் குறிப்பிட்டார். படக்குறிப்பு,"ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனால், 'இந்த பட்டா செல்லாது' எனவும் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கோவில் நிலங்கள் வராது எனவும் அரங்கநாத சுவாமி தேவஸ்தானம் சார்பில் 1981 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்பு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இனாம் ஒழிப்பு தீர்ப்பாயம் (Inam Abolition Tribunal) என்பது பல்வேறு காரணங்களுக்காக வழங்கப்பட்ட இனாம் நிலங்களை ரத்து செய்து அவற்றுக்கு பட்டா வழங்குவதற்காகவும் இதுதொடர்பான பிரச்னைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்டது. சுமார் 1500 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாவுக்கு எதிராக இந்த வழக்கை கோவில் நிர்வாகம் தொடர்ந்திருந்தது. 1998ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த இனாம் ஒழிப்பு தீர்ப்பாய நீதிபதி பொன்.கலையரசன், 'அடிமனை கோவிலுக்கு சொந்தம்; மனையில் உள்ள கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனத் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2023ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, 1998ஆம் ஆண்டு பொன்.கலையரசன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. 'தங்களுக்கே முழு நிலமும் சொந்தம்' என அறிவிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்தநிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் தரப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி வசிக்கும் 41 பேர் வசிக்கும் இடத்தைக் காலி செய்து தங்களிடம் நிலத்தை ஒப்படைக்குமாறு கோவில் நிர்வாகம் அந்த மனுவில் கோரியிருந்தது. 'அடிமனைகள் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 700 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் பல்வேறு விஷயங்களை நீதிபதி சுவாமிநாதன் மேற்கோள் காட்டியுள்ளார். சொத்துகளின் முழு உரிமையாளராக கோவில் நிர்வாகம் இருப்பதாக முந்தைய வழக்குகளில் கூறப்பட்டுள்ளதாகவும் தனக்குள்ள உரிமை அடிப்படையில் கோவில் நிர்வாகம் உரிமை கோருவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கோவில் நிலத்தில் குடியிருக்கும் மக்கள் 30.9.1951ஆம் ஆண்டுக்கு முன்பு தங்களுக்கோ அல்லது தங்களின் முன்னோடிகளுக்கோ இவற்றில் உரிமை இருந்தது என்பதை நிரூபிப்பதற்கு சட்டப்பூர்வமான எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை' என நீதிபதி தெரிவித்துள்ளார். குடியிருப்புவாசிகள் சமர்ப்பித்த ஆவணங்கள் பலவும் அர்ச்சகர்கள் உள்பட பல்வேறு உரிமைகளில் நடந்த பரிவர்த்தனைகளை மட்டுமே காட்டுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், 'ஸ்ரீரங்கம் கோவில் அடிமனைகள் அனைத்தும் அரங்கநாத சுவாமிக்கு சொந்தம்' எனவும் கோவில் நிலத்தின் குடியிருக்கும் மக்கள் மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்து நிலத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் மதுரை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'கட்டடம் மக்களுக்கு சொந்தம்' எனக் கூறப்பட்ட நிலையில், காலி இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்படுவார்கள்ர்" எனக் கூறுகிறார், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்கத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். 'நிம்மதியாக தூங்க முடியவில்லை' படக்குறிப்பு,"இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி. ஸ்ரீரங்கத்தில் உத்தரவீதிகள், சித்திரவீதிகள், அடையவளஞ்சான் தெருக்களில் வசிக்கும் மக்களிடம் பிபிசி தமிழ் பேசியது. "இந்த வீடு ஒன்று தான் எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்தாக உள்ளது. எனக்குத் திருமணம் முடிந்து 50 வருடங்களுக்கு மேலாக இங்கு தான் வசித்து வருகிறோம்" என்கிறார், திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ஜான்சிராணி. கொரோனா தொற்று காலத்தில் கணவரை இழந்த இவர், தனது மகன்களுடன் வசித்து வருகிறார். "சுமார் 17 வருடங்களாகவே இது கோவில் நிலம் எனப் பேசி வருகின்றனர். நிம்மதியாக தூங்குவதற்கு ஓர் இடம் உள்ளது என நினைத்தோம். அதற்கும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்" என்கிறார் அவர். நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசும் ஜான்சிராணி, "இப்படியொரு தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்களும் பெருமாளைக் கும்பிடுகிறவர்கள் தான். 90 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றால் எங்கே போய் நிற்பது?" எனக் கேள்வி எழுப்புகிறார். கோவில் நிலம் எனக் கூறி 2007ஆம் ஆண்டு 329 ஏக்கரில் அமைந்துள்ள நிலங்களுக்கு பத்திரப்பதிவை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், கலைச்செல்வி. இவர் தெற்கு அடையவிளைச்சான் பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். "எனது முன்னோர் 1921 ஆம் ஆண்டில் இருந்தே இதே தெருவில் தான் வசித்து வருகின்றனர். இந்த சொத்தின் பத்திரத்தைக் கூட இப்போது எங்களால் அடமானம் வைக்க முடியவில்லை" என்கிறார் அவர். "வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்று கலைச்செல்வி கூறினார். படக்குறிப்பு,"வீடு கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி தருவதில்லை. ஆனால், வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை தவறாமல் செலுத்தி வருகிறோம்" என்கிறார் கலைச்செல்வி 'தேர்தலை புறக்கணிப்போம்' அடிமனை பிரச்னையால் மனதளவில் தனது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், இதே பகுதியில் வசிக்கும் ஜெகதீஸ்வரி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், " எனது கணவர், பூ சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்கிறார். தினமும் 200 ரூபாய் வரை வருமானம் வருகிறது. எங்களால் வேறு இடத்தில் வாடகை கொடுத்து வாழ முடியாது" என்கிறார். தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். வாங்கிய கடனை இன்னும் கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார். படக்குறிப்பு,தற்போது குடியிருக்கும் வீட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிக் கட்டியதாகக் கூறும் ஜெகதீஸ்வரி, "கோவில் நிலம் எனத் தெரிந்திருந்தால் வீடு கட்டியிருக்க மாட்டோம். இன்னமும் கடனை கட்டி வருகிறோம்" எனக் கூறுகிறார். 'அரசே ரத்து செய்தது சரியல்ல' "இனாம் ஒழிப்புச் சட்டத்தின்படி அரசே முன்வந்து மக்களுக்கு பட்டா கொடுத்தது. அதை அரசே ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயம் அல்ல" என்கிறார், ஸ்ரீரங்கம் நகர குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலின் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவராம்குமாரிடம் நேரில் பேச பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அந்த முயற்சி பலன் தரவில்லை. இதையடுத்து, இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவிடம் பிபிசி தமிழ் பேசியது. "கோவிலுக்கு 329 ஏக்கர் நிலமும் சொந்தம் என்பதற்கான ஆவணங்கள் முழுமையாக உள்ளன. உண்மையில் 454 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சாலை உள்பட இதர பயன்பாடுகளைத் தவிர்த்து மற்றவை கோவிலுக்கு சொந்தமானவையாக உள்ளன" என்கிறார் அவர். "அனைவரிடமும் பணம் வாங்கி கோவிலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் கூடுதல் ஆணையர் கவிதா, "ஆனால் அந்த நிலம் கோவிலின் சொத்து என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்பது தான் இதில் முக்கியமானது" எனக் கூறுகிறார். கோவில் சொத்து என்பதை ஏற்றுக் கொண்டால் அதற்கேற்ப வரி வசூல் செய்ய வேண்டும் என 2003 ஆம் ஆண்டிலேயே அரசுக்குப் பரிந்துரை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் கோவில் நிலங்களில் மக்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என எந்த இடத்திலும் கூறவில்லை" எனக் கூறும் கவிதா, "கோவில் சொத்துகளை உரிய அனுமதியின்றி அனுபவிப்பதை ஏற்க முடியாது" என்றார். 'இருமுறை பேசினேன்' - எம்.எல்.ஏ பழனியாண்டி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டியிடம் பிபிசி தமிழ் பேசியது. "கோவில் அடிமனைப் பிரச்னை தொடர்பாக சட்டமன்றத்தில் இரண்டு முறை பேசியிருக்கிறேன். இதற்கென குழு அமைத்து பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார். 'காலம் காலமாக வசிக்கும் தங்களுக்கே நிலம் சொந்தம்' என ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் கூறினாலும், வரியை ஏற்றால் மட்டுமே சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'அடிமனை அரங்கநாதனுக்கே': ஸ்ரீரங்கம் கோவில் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு லட்சம் பேரை பாதிக்கும் என்ற அச்சம் ஏன்?
- Today
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்! Mar 7, 2026 - 09:59 AM ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு நேரப்படி இன்று (07) அதிகாலை பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஈரானின் மிக முக்கியமான உள்நாட்டு விமான நிலையமாகவும் கருதப்படும் இந்த மெஹ்ராபாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு பல விமானங்கள் நின்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் இருந்து பெரும் புகைமூட்டம் கிளம்பியுள்ளதுடன், அது தொடர்பான பல வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. விமான நிலையத்தின் பல இடங்கள் எதிரிகளின் இலக்காகியுள்ளதை ஈரானிய அரச ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கு முன்னர் கடந்த மார்ச் 4ஆம் திகதியும் இஸ்ரேல் இந்த விமான நிலையத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியிருந்தது. அதன்போது ஹெலிகொப்டர் உற்பத்திப் பிரிவு உட்பட இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருந்த பல கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், இன்றைய புதிய தாக்குதலில் விமான நிலையத்தின் எந்தப் பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்!
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வித்தியாசமான கீரை தொக்கு . ........! 😂
-
நேபாளத்தில் இன்று பொதுத் தேர்தல்; மக்கள் வாக்களிப்பில் மும்முரம்
நேபாளத்தில் அரசியல் மாற்றம்: தேர்தலில் முன்னிலை பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி – பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு 07 Mar, 2026 | 03:41 PM நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதங்களில் நேபாளம் கடுமையான அரசியல் பதற்றத்தை எதிர்கொண்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் நிலைமை கட்டுக்குள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்த கே.பி. சர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் நிர்வாகத்தை தற்காலிகமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக இடைக்கால நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்றது. தேர்தலில் நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகராகவும் சமூக ஊடகங்களில் பிரபலமானவராகவும் அறியப்படும் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக நடைபெற்ற இளைஞர் போராட்டங்களில் இந்தக் கட்சி முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தலின் மூலம் தேர்வு செய்யப்படுவதுடன், 110 உறுப்பினர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், தேர்தலில் வெற்றி பெற்று பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமைந்த பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். நேபாளத்தில் அரசியல் மாற்றம்: தேர்தலில் முன்னிலை பெற்ற ராஷ்டிரிய சுதந்திர கட்சி – பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு
-
இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்
இரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட அன்று மற்றொரு போர் கப்பலுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்ததா? பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரானின் ஐஆர்ஐஎஸ் லாவன் (IRIS Lavan) கப்பல், கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. 2026 சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்கேற்க இந்த கப்பல் இந்தியா வந்திருந்தது. இலங்கையின் தெற்கில் இரானின் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாட்களுக்கு முன்பே, ஐஆர்ஐஎஸ் லாவன் கப்பலைப் பற்றி இரான் இந்தியாவிடம் உதவி கேட்டது என இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பிப்ரவரி 28 அன்று, அந்த கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கொச்சி துறைமுகத்தில் நிறுத்த இந்தியாவிடம் இரான் அனுமதி கேட்டது என்றும், மார்ச் 1 அன்று இந்தியா அந்த கோரிக்கையை அங்கீகரித்தது என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ''அதன்பின் அந்த கப்பல் மார்ச் 4 அன்று கொச்சி வந்தது. அந்த கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சியில் உள்ளனர்.'' இரான் கப்பலுக்கு அனுமதி கொடுத்தது மனிதாபிமான ரீதியிலாக எடுக்கப்பட்ட முடிவு என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் தெரிவித்தார். லாவன் கப்பல் குறித்து வலைதளத்தில் செய்தி வெளியிட்ட தி இந்து, 'பழுதுபார்க்கும் பணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் வரை, அந்தக் கப்பல் கொச்சியில் சில காலம் இருக்க வாய்ப்புள்ளதாக வட்டாரம் தெரிவித்தது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை (மார்ச் 7) காலை, மாட்டஞ்சேரி படகு துறைமுகம் அருகே உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர், இரான் கப்பலைப் பார்வையிடத் திரண்டிருந்தனர் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க கடற்படை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐஆர்ஐஎஸ் லாவனை, 2500 டன் எடைகொண்ட ஹெங்காம் ரக தரையிறக்கக் கப்பல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,ANI ஜெய்ஷங்கர் கூறியது என்ன? டெல்லியில் நடந்த 'ராய்சீனா டயலாக் 2026' (Raisina Dialogue) கருத்தரங்கில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், "இந்திய கடல் எல்லைக்கு அருகே இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு கப்பல் சில பிரச்னைகள் காரணமாக நம் துறைமுகத்துக்கு வரவேண்டும் என்று இரான் தரப்பில் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த செய்தி 28-ம் தேதி (பிப்ரவரி) வந்தது என்று நினைக்கிறேன். ''மார்ச் 1-ம் தேதி தாங்கள் அதற்கு அனுமதி கொடுத்தோம். ஒரு சில நாள் பயணத்துக்கு பின் அவர்கள் கொச்சி வந்தனர்'' மேலும் பேசிய அவர், "இந்த கப்பல்கள் இங்கு வந்த சூழ்நிலையே வேறானது. அவை, சர்வதேச கடற்படை அணிவகுப்புக்காக வந்தவை. பின்னர் நடந்த சூழ்நிலையில் அவை மாட்டிக்கொண்டன. ஒரு கடினமான சூழ்நிலையில் அவர்கள் இங்கே வரவேண்டும் என்று கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் அதுதான் சரியான முடிவு என்று நினைக்கிறேன். அந்த கொள்கையைத்தான் நாம் பின்பற்றியிருக்கிறோம். ஒரு கப்பல் இலங்கையில் அதே சூழ்நிலையில்தான் இருந்தது. இலங்கை அதற்கேற்ப ஒரு முடிவு எடுத்தது. இன்னொரு கப்பல்தான் துருதிருஷ்டவசமாக அந்த முடிவை எட்டியது. சட்டரீதியாக இல்லாமல் நாங்கள் மனிதாபிமான ரீதியாக யோசித்தோம். சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்" என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,SL Navy படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் புஷெர் மூழ்கடிக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் தேனா மார்ச் 4, புதன்கிழமை அன்று அமெரிக்கா ஒரு வீடியோவை வெளியிட்டு, இந்தியப் பெருங்கடலில் இரான் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அதை மூழ்கடித்ததாகத் தெரிவித்தது. பிபிசி சிங்கள மொழிச் சேவைக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதல் புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் தெற்கு இலங்கை நகரமான காலி அருகே நடந்தது. மார்ச் 6 வரையிலான தகவலின்படி 32 மாலுமிகள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், 84 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் கூற்றுப்படி, இந்த கப்பலின் பெயர் 'தேனா'. இதில் சுமார் 130 மாலுமிகள் இருந்தனர். இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில் வந்திருந்தது என்றும், எந்த எச்சரிக்கையும் இன்றி இது மூழ்கடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,SL Navy படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் புஷெர் மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டிருந்தார். முன்னாள் ராஜீய அதிகாரி கே.சி.சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார். "நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், லாவன் கப்பல் இந்தியாவில் நங்கூரமிட அரசு அனுமதி கொடுத்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. பட மூலாதாரம்,Supplied படக்குறிப்பு,இரானியக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷெரில் இருந்த 204 பேர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது இன்னொரு கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை ஐஆர்ஐஎஸ் புஷெர் (IRIS Bushehr) என்ற இரானிய கப்பல், அதன் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்ததால் இலங்கையின் துறைமுகங்களில் ஒன்றில் நிறுத்த புதன்கிழமை (மார்ச் 4) அனுமதி கோரியிருந்தது. பல மணி நேர விவாதத்திற்குப் பிறகு வடகிழக்கு துறைமுகம் ஒன்றில் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்தது, "மனிதநேயத்தைப் பாதுகாக்க நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்" என்று இலங்கை அதிபர் அநுரகுமார தெரிவித்தார். அந்தக் கப்பலில் இருந்த சுமார் 204 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை, பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c99jl0z1z38o
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி! 07 Mar, 2026 | 02:50 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அந்த நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விசேட வீடியோ செய்தியிலேயே ஜனாதிபதி பெசெஷ்கியான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு கிடையாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், அண்டை நாடுகளிலிருந்து ஈரானுக்கு எதிராகத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில், ஈரான் ஒருபோதும் அந்த நாடுகள் மீது தாக்குதல்களைத் தொடுக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். "இனிவரும் காலங்களில், முதலில் எமது நாடு தாக்கப்படாத வரை, அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்" என்ற தீர்மானத்தை ஈரானின் இடைக்கால தலைமைத்துவம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி பெசெஷ்கியான் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். சமீபகாலமாக வளைகுடா பிராந்தியத்திலுள்ள விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
-
விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு Published By: Vishnu 07 Mar, 2026 | 05:27 AM இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார். இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது. இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், விமானப்படை விசேட பிரிவினால் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு காட்சிகள், பரிசூட் காட்சிகள் மற்றும் அங்கம்பொர சண்டை காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகளை இன்று (06) முதல் மார்ச் 08 வரை, தினமும் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
-
சாய்ந்தமருதில் மூழ்கிய கோடி ரூபாய் பெறுமதியான பாரிய மீன்பிடிப் படகு!
சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு! Mar 6, 2026 - 10:00 AM அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த படகு கடற்கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது. சாய்ந்தமருதைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான இந்தப் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. -அம்பாறை நிருபர் ஷிஹான்- சாய்ந்தமருதில் மூழ்கிய கோடி ரூபாய் பெறுமதியான பாரிய மீன்பிடிப் படகு!
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும் பிரகாசிப்பு; யாழ். மத்திய கல்லூரி 30ஆவது வெற்றி 07 Mar, 2026 | 03:59 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் முரளி திசோன் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் மகத்தான வெற்றியை ஈட்டியது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த யாழ். மத்திய கல்லூரியை முரளி திசோன், ஐயாதுரை கபிஷேக், ஜேசுதாசன் நிதர்சன் ஆகியோர் பொறுப்புடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி மீட்டெடுத்து மகத்தான வெற்றியை ஈட்டச் செய்தனர். இப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த முரளி திசோன் 12 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைக் குவித்தார். இதன் காரணமாக சென். ஜோன்ஸ் சார்பாக உதயனன் அபிஜோய்ஷாந்த் குவித்த அபார சதம் பயனற்றுப் போனது. இந்த வெற்றியுடன் வடக்கின் சமரில் 30ஆவது வெற்றியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பதிவுசெய்தது. எனினும் தொடரில் சென். ஜோன்ஸ் கல்லூரி தொடர்ந்தும் 40 - 30 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்தன. ஆனால், போட்டியின் மூன்றாவதும் கடைசியுமான இன்றைய தினம் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த யாழ். மத்திய கல்லூரி அபார வெற்றியீட்டி பலத்த பாராட்டைப் பெற்றது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் கல்லூரி 119 ஓட்டங்களையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 95 ஓட்டங்களையும் பெற்றன. சென் ஜோன்ஸ் கல்லூரி இரண்டாவது இன்னிங்ஸில் 223 ஓட்டங்களைக் குவித்தது. இதனை அடுத்து 248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ஆரம்பதித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இருந்தது. இதன் காரணமாக இந்தப் போட்டியில் சென். ஜோன்ஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சகலதுறை வீரர் முரளி திசோன் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டம் இழக்காமல் அரைச் சதம் குவித்ததுடன் இரண்டு சிறப்பான இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி தனது அணியை மீட்டெடுத்து வெற்றி பெறச் செய்தார். இன்று காலை 6 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களிலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 விக்கெட்களை இழந்து 250 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது. முரளி திசோன் 7ஆவது விக்கெட்டில் ஐயாதுரை கபிஷேக்குடன் 37 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் ஜேசுதாசன் நிதர்சனுடன் பெறுமதிக்க 97 ஓட்டங்களையும் பகிர்ந்து நாயகனானார். முரளி திசோன் 126 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 81 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஐயாதுரை அபிஷேக் 21 ஓட்டங்களைப் பெற்றார். மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய ஜேசுதாசன் நிதர்சன் 33 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் முர்ஃபின் ரெண்டியோ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் சென். ஜோன்ஸ் கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சற்குணராஜா வினுக்ஷன் 22, முர்பின் ரெண்டியோ 19, முரளி திசோன் 39 - 5 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 37 - 3 விக்.) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 95 (அன்ரனிரேஷான் அபிஷேக் 23, நாகராசா சஜித் 16, கணேசமூர்த்தி கௌசிகன் 41 - 5 விக்., முர்பின் ரெண்டியோ 19 - 3 விக்.) சென். ஜோன்ஸ் கல்லூரி 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 223 (உதயனன் அபிஜோய்ஷாந்த் 121, முர்பின் ரெண்டியோ 34, சிவகுமார் ஜோன் நதேனியா 19, ஜீவா அபிசான் 18, முரளி திசோன் 78 - 7 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 62 - 3 விக்.), யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 248 ஓட்டங்கள்) - 250 - 7 விக். (முரளி திசோன் 81 ஆ.இ., ஜேசுதாசன் நிதர்சன் 44 ஆ.இ., கபிலன் அமலன் 44. ஐயாதுரை கபிஷேக் 21. ஜெயசீலன் ஜெனோஷன் 20, முர்ஃபின் ரெண்டியோ 65 - 2 விக்.) சிறந்த பந்துவீச்சாளர், சகலதுறை வீரர், ஆட்டநாயகன்: முரளி திசோன் (யாழ். மத்திய கல்லூரி) சிறந்த துடுப்பாட்ட வீரர்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென். ஜோன்ஸ்) சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த விக்கெட்களாப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென். ஜோன்ஸ்) 119ஆவது வடக்கின் சமர்: திசோன் சகலதுறைகளிலும் பிரகாசிப்பு; யாழ். மத்திய கல்லூரி 30ஆவது வெற்றி
-
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா! 07 Mar, 2026 | 01:07 PM அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட் , புரூக்ளின் மத்திய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட், அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐநாவிற்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொலை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்ததாகப் வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக வாடகைக்குக் கொலைகாரர்களை அமர்த்த அவர் முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. புதன்கிழமை (04) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த மெர்ச்சண்ட், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே தான் இந்தச் சதியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஈரானியப் புரட்சிகர இராணுவத்தின் அழுத்தமே இதற்குக் காரணம் எனவும், எவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே தான் பிடிபடுவேன் என்று தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரான் ஆட்சியாளர்களின் திட்டங்களை ஒத்ததாகவே இது அமைந்திருப்பதாக வொஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட மெர்ச்சண்ட் மீது, சர்வதேச பயங்கரவாதம் மற்றும் கொலைக்கான ஒப்பந்தம் ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
ஆதாரம் பிளீஸ்? ஏனைய நாட்டு கொடியோடு பயணித்த கப்பலகளில் வேலை செய்த இந்தியர் ஒருவர் இறந்தார் என நினைக்கிறேன். இந்திய கொடி பாவித்த கப்பல்கள் எதையும் ஈரான் தாக்கியதாக தகவல் இல்லை.
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
எவர் சொல்லையும் கேட்க தேவையில்லை. நடுநிலை நாடு ஒன்று சரணடைந்த போரிடும் தரப்பை மீள போர் முனைக்கு அனுப்ப கூடாது. அனுப்பினால் அந்த நாடும் போரிடும் தரப்பாக கருதப்படலாம். எப்படி அனுப்புவது? கப்பலை கிளப்பினால் மாலைதீவு தாண்ட முதல் அமெரிக்கா அதை துவம்சம் பண்ணி விடும். தெஹ்ரானுக்கு போக பொது விமான சேவை ஏதும் இல்லை. இலங்கை விமானபடை விமானம் அவ்வளவு தூரம் போகாது என நினைக்கிறேன். போனாலும் இஸ்ரேல் அதை பஸ்பமாக்கி விடுவான். மாலுமிகள் போக விரும்புவார்களா?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஆனால்… இந்தியா கப்பலை வெளியேறுமாறு பணித்தத்து…. அல்லது தக்க பாதுகாப்பு கொடுக்க தவறியது என நீங்கள் கூறியது தவறு என்பதை காட்ட பல தெளிவான உறுதியான காரணங்கள் உள்ளன. இந்தியா கப்பலை வெளி ஏற சொல்லி நிர்பந்தபடுத்தியது என ஈரானோ எந்த செய்தி அமைப்போ சொல்லவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமோம். அதுக்குள்ள தலை"விதி" யும் ஒன்று. அந்த விதியின்ர இலக்கம் தெரியவில்லை. 🤣
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 125 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" அவளுடைய கணவர் கோவலன், நம்பிக்கையற்ற நம்பிக்கையுடன் திரும்பி வந்தபோது, அவள் ஒரு புன்னகையுடன், 'என் காற்சிலம்பை எடுத்துக்கொள்' என்று அவனுக்கு ஆறுதல் வழங்கினாள். இந்தக் காவியத்தின் ஆசிரியர் கண்ணகியை, கணவனின் நன்மை தீமையிலும் அல்லது இன்பத்திலும் துன்பத்திலும் அல்லது எதுவாக இருந்தாலும், அவருடன் நிற்கத் தயாராக இருக்கும் ஒரு அழகான இளம் பெண்ணாக, சித்தரிக்க விரும்பியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் பாண்டிய இராச்சியத்தின் பண்டைய தலைநகரான மதுரைக்குச் சென்று, அங்கே, எதாவது ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, கொலுசை அல்லாது சலங்கையை விற்று பணம் பெறச் சென்றனர். கவுந்தி அடிகள் இருவரையும் அழைத்துச் சென்று, இடைக் குலமடந்தையாகிய மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில், 'ஈங்கு, என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்: கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி, தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,' "இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள்." என்று கூறி, அவளின் பராமரிப்பில் ஒப்படைத்தார். அதன் பின், கவுந்தி முனிவர், அங்கிருந்து தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். கோவலன் அதன் பின், கண்ணகியை மாதரியுடன் விட்டுவிட்டு, தனியாக மதுரை நகருக்குச் சென்றார். கோவலன், இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான். அங்கே, அரச பொற்கொல்லன் ஒருவனை கோவலன் சந்தித்தான். அரசியின் காலணியை ஏற்கனவே களவாடிய அந்த அரச பொற்கொல்லன், தான் தப்புவதற்காக, ராணியின் சிலம்பு திருடிய திருடன், இவனே என்று கோவலனை மன்னனுக்கு கூறினான். எந்த விசாரணையும் செய்யாமல், தனது பொற்கொல்லனை நம்பி, அவசர அவசரமாக மன்னன் கோவலனின் தலையை வெட்ட உத்தரவிட்டான். கோவலன் உடனடியாக கொல்லப்பட்டான். வெற்று நிலத்தில் அரிதாகவே நடமாடும் அளவுக்கு செல்வம் நிறைந்த, நல்லொழுக்கமுள்ள இளம் பெண் கண்ணகி, “யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது” என கோபமடைந்து, மன்னனை நேரில் சந்தித்தாள். மன்னன் “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள். “ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”. என்றாள். ஒருநாள் மாலைவேளை, இளவரசன் தற்செயலாக, ஒரு கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர, மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது. அதைக்கண்டு மன்னன் துக்கமடைந்தான். மன்னனின் அமைச்சர்கள், இளவரசன் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மன்னனின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்த தெருவில் தான் சவாரி செய்ததாகவும், அதிக எண்ணிக்கையிலான வீரர்களுடன் சென்றதாகவும் விளக்கினர். அது மட்டும் அல்ல, சக்கரத்தின் கீழ் கன்று இறக்க வாய்ப்பில்லாத வகையில், அதிக சத்தம் இருக்கும் வகையில், தேர் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் மன்னனுக்கு கூறி, இந்தக் கொலை இளவரசன் வேண்டும் என்று செய்தது அல்ல என்று விளங்கப்படுத்தினர். இருப்பினும், மனுநீதி கண்ட சோழன், தனது அன்புக்குரிய ஒரே மகனை சக்கரத்தின் கீழ் படுக்க வைத்து நெரித்துக் கொன்றான். அதனால் தானும், அந்த தாய் பசுவின் வலியை அனுபவிக்க, உணர முடியும் என்று நம்பினான். என்றாலும் அங்கே கண்ணகி இந்த முழு விவரத்தையும் கொடுக்கவில்லை. அதற்கு அவளுக்கு நேரம் இல்லை. ஆனால் காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட , முற்காலச் சோழர்களின் தலைநகரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறாள். Part: 125 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" When her husband, Kovalan, came dejected with forlorn hope, she offered him with a smile: ‘take my anklet’ (Silambu in Tamil and Hallamba in Sinhala). The author of the epic must have intended to portray Kannaki as a charming young lady who is ready to stand with her husband in the woes and in the weal irrespective of his merit or demerit. Both of them went to Madurai, the ancient capital of the Pandiyan Kingdom, to sell the anklet to get some money, perhaps, to start a business. Kavunti, a sage, accompanied both, and placed them in the care of a shepherd woman, Matari, and the sage Kavunti continued on her way. Kovalan, leaving Kannaki with Matari, went alone to the town of Madurai. The Royal goldsmith happened to meet Kovalan, and framed Kovalan as the thief who stole the queen consort’s anklet which was earlier stolen by the Royal goldsmith. The king in hasty decision gave order to behead him, and Kovalan was killed. Kannaki, the virtuous young lady who rarely walked on bare earth got angry, and confronted the king in person. The king inquired who she was, and the reason for her to be there. She introduced her that she came from the city of Puhar where ruled kings before; a king relieved the distress of a bird and another king sacrificed his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl-like tears and who rang the bell for justice. The king’s ministers explained that the prince was riding the chariot adorned with bells along the street which was exclusively for the use of the king, and went with greater number of soldiers. The ministers were trying to convince the king that the chariot was adorned with bells so that there would have quite a lot of noise so that there was no possibility for calf to get killed under the wheel. The prince went with a large number of soldiers so that the killing wouldn’t have been deliberate act of the prince. They also indicated that the street was for the kingly use only. Still the king, Manu Neethi Kannda Cholan, killed his dear and only son under the wheel so that he could suffer the same pain as the mother cow. Kannaki didn’t give this full detail, but she makes terse references to these two incidents with two ancient kings of Puhar. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 126 தொடரும் / Will follow துளி/DROP: 2078 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 https://www.facebook.com/groups/978753388866632/posts/34172313542417189/?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
30 நாட்களில் விற்க வேண்டிய பெற்றோலை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்த்துள்ளனர். பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லை ஆனால் ஒவ்வொருவர் வீடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இதில் இன்னமும் தெளிவில்லை. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
யாழ் மத்திய கல்லூரி 3 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.👏🏆