Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பாகம் - 25 08.12.1990 மாத்தயாவின் அருகில் யானையைக் கண்டதும் அவரது மெய்ப்பாதுகாவலர் சூட்டியின் எம்-16 முழங்கியது. அவ்வளவு தான் வெடியையும் வாங்கிக் கொண்டு பிளிறியபடியே யானைஒரே ஓட்டமாக ஓடியது. நிச்சயமாக அது உயிர் பிழைத்திருக்காது. வெடி வாங்காமலிருந்தால் மாத்தயாவோ அல்லது யாரோ உயிர்பிழைத்திருக்க மாட்டார்கள். யானைக்குரிய குணத்தை அது காட்டியிருக்கும். இரவு இரண்டு மணியளவில் ஒரு முகாமைச் சென்றடைந்தோம். அடுத்தநாள் காலை 14ஆம் திகதி வெருகல் வாகரை கதிரவெளிப் பகுதியை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றேன். சரிஎன்றார் மாத்தயா. மாலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகளிர் படைப்பிரிவின் பயிற்சி முகாமுக்கு தான் செல்வதாகவும் எம்மை நேரே அங்கே வருமாறும் கூறினார். நானும்மற்றும் சிலரும் வெருகல் பகுதிக்குச் சென்றோம். ஆலய மடத்திலும், ஆற்றங் கரைகளிலும் இருக்கும் அகதிகளைச் சந்தித்தோம். ஆற்றங்கரையோரமாக இருந்த குடிசை ஒன்றுக்குச் சென்றேன். அங்கே ஒரு முதியவரும் பாட்டியும் இரு குழந்தைகளும் இருந்தனர். குழந்தைகள் கஞ்சி குடித்துக் கொண்டிருந்தார்கள். நேரத்தைக் கவனித்தேன். பகல் 12.30 மணி. முதியவரை அணுகி “என்ன ஐயா இப்பதானா சாப்பாடு சாப்பிடுறீங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் 'நாங்கள் காலையில் சாப்பிடுவதில்லை. மத்தியானம் தான் கஞ்சிகுடிப்போம் மாலையில் தான் சோறுசமைப்பதுண்டு" என்றார். அவரது முகத்தில் இயலாமையுடன் கூடிய சிரிப்புத் தெரிந்தது ஏன் தான் கேட்டோம் என்று ஆகி விட்டது எனக்கு. சோறு சமைத்தால் கறிக்கு என்ன செய்வீர்கள்? என்றுகேட்டேன். ஆற்றங்கரைகளில் கிடைக்கும் கீரைகளைப் பிடிங்கிச் சமைப்போம் என் றார். "அரச உதவி..." என்றேன். "இதுவரை இல்லை” என்றார். 'அப்ப சாப்பாட் முக்கு என்னவருமானம்?" என்று கேட்டேன். "பாய் இழைத்து விற்போம்" என்றார். குடிசையினுள். பார்வையைச் செலுத்தினேன். பின்னிமுடிக்கப்படாத நிலையிலிருந்த ஒரு பாயும் பாய் இழைப்பதற்கு பயன்படும் காயவைத்த புற்களும் அங்கே காணப்படடன. சொந்த இடம் எது என்றேன் 'பூநகர்' என்றார். மேலும் பலரைக் கண்டு விசாரித்து விட்டு கதிரவெளிப்பக்கம் சென்றேன். கதிரவெளி கடைத்தெருவில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஒருவரைச் சந்தித்தேன். இந்தச் சாமான்களை எங்கே வாங்குகின்றீர்கள்? என்று கேட்டேன். நான்சாமான்வாங்கப் போவதில்லை வாழைச்சேனையில் இருந்து சாமான்' வாங்கி வருபவர்களிடம் தான் வாங்குவதுண்டு. என்றார். ஏன் நீங்கள் போவதில்லை என்று கேட்டேன். இது வரை தனக்குத் தெரிந்த ஆறு மூதூர் வாசிகள் இவ்வாறு சாமான் வாங்கப் போய்த் திரும்பி வரவில்லை எனக் கூறி அவர்களின் பெயரையும் தெரிவித்தார். அப்படியே அந்தப் பகுதி முழுவதையும் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்து புறப்பட்டோம். இடையில் ஒரு முகாமுக்குச் சென்றோம் அங்குள்ள முகாம் பொறுப்பாளர் சங்கர் என்பவரைச் சந்தித்தோம். பன்னிரண்டாம் திகதியன்று சேனைக்கு பொருள்கள் வாங்கப் போன மூன்று வியாபாரிகளில் இருவரை முஸ்லிம் ஊர்காவற்படையினர் பிடித்துச்கொன்றதாகவும் ஒருவர் ஆடைகளை இழந்த நிலையில் தப்பி வந்ததாகவும் தெரிவித்தார். அங்கிருந்து புறப்பட்டு மகளிர் படைப்பிரிவின் முகாமுக்குச் சென்றோம். விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் சிரேஷ்ட போராளிகளில் ஒருவரான ஜெயாவே இந்த முகாமுக்கும், மட்டக்களப்பில் உள்ள பெண் போராளிகளுக்குப் பொறுப்பாக விளங்குகிறார். இவரிடம் மட்டக்களப்பு நிலைமைகளைக் கேட்டோம். என்னென்ன மாதிரியான திட்டங்களை தாங்கள் நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதை விளக்கினார். அப்போது மாத்தயாவும் ககுணாவும் வந்தனர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர். இறுதியில் மாத்தயாவும், கருணாவும் உரையாற்றினர். இதுவரை நாளும் தங்களை களத்தில் இறங்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்த அந்த மகளிர் படைப்பிரிவினருக்கு விரைவில் அந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக்கூறி கருணா சமாளித்தார். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ரஞ்சன் விஜேரட்னா கூறும் மழலைப் பட்டாளமாக இருந்தாலும் சரி, மகளிர் பட்டாளமாக இருந்தாலும் சரி அனைவரும் தங்களைக் களத்தில் இறங்க அனுமதிக்க வேண்டும் என்றே முரண்டு பிடிப்பார்கள். மகளிர் படைப்பிரிவினர் இவ்வளவு நாளும் ஏன் தங்களை களத்தில் இறங்க அனுமதிக்கவில்லை என்று போர்க் கொடி உயர்த்தியபோது ஏனோ எனக்கு ஈ. பி. ஆர். எல் எவ். பற்றிய நினைவு வந்தது. 1983ஆம் ஆண்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தாக்க அப்போதைய ஈ.பி.ஆர். எல். எவ்வின் இராணுவப் பிரிவான பி. எல். ஏயின் கொமாண்டர் குன்சி தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் ஒவ்வொருவரும் நீர் முன்னுக்குப் போம் தோழர் இல்லை நீர் முன்னுக்குப் போம் தோழர் என்று பிரச்சினைப்பட்டார்கள். கடைசியில் ஒருவரும் போகத் துணியவில்லை. அவர்களின் அதிர்ஷ்டம் அந்த வேளை ஒரு நாய் குரைத்தது. எனவே குன்சி நாய் குரைத்துவிட்டது. ஆகவே அவர்கள் அலேட்' (உஷார் நிலை) ஆகிவிடுவார்கள் திரும்பிப் போவோம் என்று கூறி அனைவரையும் திருப்பிக் கொண்டு வந்துவிட்டார். அங்கே நீ முன்னுக்குப் போ என்கிறார்கள், இங்கே என்னை முன்னுக்கு விடு என்கிறார்கள். அதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். அன்று இரவே திருமலை மாவட்டத்தினுள் சென்றோம் எம்மை வரவேற்க பதுமனும் மற்றவர்களும் வந்திருந்தனர் எம்மை பதுமனிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பினார் கருணா. (தொடரும்)
  3. பாகம் - 24 07.12.1990 திரு. மாத்தயா, கருணா, விசு ஆகியோருடன் நாம் புறப்பட்டுச் செல்லும்போது காடுகள். பற்றைகள். வயல்வெளிகளில் என்னமாதிரி யான நிலையில் அகதிகள் வாழ்கிறார்கள் என்பதை திரு. மாத்தயா பார்வையிட்டார். கரிகாலனின் அலுவலகத்திலும் சில பொது மக்களைச் சந்தித்து நிலைமையை ஆராய்ந்தார். மாத்தயா போகும்போது வழியில் ஒரு வயோதிபர் தென்பட்டார். இவரைக் கவனிக்கும்படி விசு கூறினார். அவரைத் தாண்டிச் சென்றதும் கோட்டையை நாம் கைப்பற்றினோம் என்பதை அறிந்து பொதுமக்கள் வெடி கொளுத்திச் சந்தோஷப்பட் டுக்கொண்டிருந்தபோது இவர் ‘இதென்ன பெரிய சண்டை; கப்பலும் கப்பலும் மோதும். இருந்துபார். அதுதான் சண்டை என்று ஒரு பெரிய பிரசங்கமே செய்து கொண்டிருந்தவர் இவர் என்று குறிப்பிட்டுவிட்டுச் சிரித்தார். அதற்கு மாத்தயா 'போராட்டத்தின் வெற்றிமீது இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் இது காட்டுகின்றது. தான் பிறந்து வளர்ந்த கிராமத்தைவிட்டு, வீட்டை விட்டு, அகதியாக ஓடிவந்து அடுத்தநேரச் சாப்பாட்டுக்கு என்னவழி என்பது தெரியாத நிலையிலும் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கையை இவர்கள் இழக்கவில்லை. அதனால்தான் இவர்கள் இப்படிக் கதைக்கிறார்கள். போராட்டத்தின் வெற்றிமீது அசையாதநம்பிக்கை ஏற்பட்டு விட்டது என்ற வகையில் எமக்கு அது ஒரு பலம்தான் என்றார். பெரிய வட்டவான் என்னும் கிராமத்தை அடைத்த போது அங்கே மக்களின் நிலைபற்றி மாத்தயா விசாரித்தார். அதற்கு அங்குள்ள போராளிகள் மருந்து இல்லாத நிலைதான் மக்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது என்றார்கள். குழத்தைகளுக்கான மருந்துகள், தடுப் பூசிகள் என்பன பற்றி அவர் கேட்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. அக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி (நாம் அங்கு சென்ற தினம்) வரையிலான ஆறுநாட்களில் குழந்தைகள் வயிற்றோட்ட நோயினால் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தனர். செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை நகருக்குள் வந்தால்தான் வைத்தியவசதி செய்வோம் என்ற பாணியில் அடம்பிடிக்கின்றன. நகருக்குள் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினாலோ, ராணுவத்தாலோ உயிரிழக்க நேரிடும். அதற்கு அஞ்சி இப்படியான இடங்களில் இருப்பவர்கள் நோய்வந்து மடியவேண்டியது தான். எங்கு சேவை செய்ய வேண்டுமோ அங்கு சேவை செய்வதைவிடுத்து தங்களுக்கு எங்கு வசதியோ அங்கு அவர்களைத்தேடி நோயாளிகள் செல்லவேண்டும் என நினைக்கிறார்கள். செருப்புக்கு அளவாகக் காலை வெட்டும் நிலை. சிவத்தப்பாலம் என்னுமிடத்தில் நாம் நின்றபோது எமது எமது போராளியின் சகோதரி ஒருவரும், அவரது கணவரும், குழந்தையும் வந்தார்கள். நகரிலிருந்து படுவான்கரை வழியாக நீண்ட தூரப் பிரயாணத்தின் பின் அவர்கள் வந்திருந்தார்கள். சத்துருக் கொண்டான் பகுதியில் இராணுவத்தினருக்கு கண்ணிவெடி வைத்ததிற்காக நகரில் இராணுவம் வெறியாட்டம் ஆடுகிறது என்றார்கள். பிள்ளையுடன் இவ்வளவு நாளும் நகரிலா இருந்தீர்கள் என்று விசாரித்ததற்கு, இல்லை இங்கே தான் இருக்கிறோம் நகருக்கு சாமான் வாங்கச் சென்றோம். குடும்பஸ்தர்கள் என்றால் கொஞ்சம் மனமிரங்கலாம் என எதிர்பார்த்தே குழந்தையுடன் சென்றோம் எனகுறிப்பிட்டனர். எனக்கு சத்துருக் கொண்டான் சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளையே கொன்றிருக்கிறார்கள். இவர்கள் என்னவென்றால் குழந்தையை நம்பி நகருக்குள் செல்கிறார்கள். முன்பென்றால் பாடசாலைக்கோ, தெருவுக்கோ பின்ளைகள் போவதென்றால் பிள்ளைக ளின் பாதுகாப்புக்காக பெற்றோர் செல்வார்கள். இப்போதோ பெற்றோரின் பாதுகாப்புக்காக பிள்ளைகள் செல்கிறார்கள். காலம் தலைகீழாக மாறிவிட்டது. போராளிகளின் முகாம்கள் பலவற்றிற்கும் சென்றோம். அப்பகுதி யில் கண்ணன் என்ற போராளியே அணைவருக்கும் பொறுப்பாக விளங்குகிறார். (அப்போராளி இப்போது வீரமரணமடைந்து விட்டார்) ஒவ்வொரு முகாமிலும் போராளிகளோடு மாத்தயா உரையாடினார். ஒரு பயிற்சி முகாமில் அனைவரையும் இருத்தி மாத்தயாவை உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தார் கண்ணன். அங்கு மாத்தயா நான் என்ன சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டார். ஒரு போராளி எழுந்து தற்போதைய போரைப்பற்றி விளக்கச் சொன்னார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போதைய நிலை பற்றி போராளிகளுக்கு விளக்கமாகக் கூறினார் மாத்தயா. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முகாமைச் சென்றடைந்தோம். அடுத்த நாள் (13 ஆம் திகதி) மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எமது பிரயாணம் ஆரம்பமானது. எனவே அந்த முகாமிலிருந்த அனைத் துப் போராளிகளிடமும் மாத்தயாவும் நாங்களும் விடை பெற்றுக் கொண் டோம். காட்டுப்பகுதியால் சென்று கொண்டிருந்தோம். முன்னால் செல்லும் ஜீப்பை கருணாவே ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகில் மாத்தயா. நீண்ட நேரப் பிரயாணத்தின் இடையில் காட்டில் மரங்கள் முறியும் ஓசை கேட்டது. அந்த ஓசை நெருங்கியது. உடனே பிரேக் போட்டு ஜீப்பை நிறுத்தினார் கருணா. எதிரே ஒரு தனியன் யானை மாத்தயா இருந்த பக்கமே யானை நிற்கிறது. யானைக்கும் மாத்தயாவுக்கும் இடையில் ஏழு அடி தூரமே இருக்கும். (தொடரும்)
  4. மேலே உள்ள கடற்கலம்: பத்தேமாரி கீழே உள்ள கடற்கலம்: மஞ்சி (கேரளா கோழிகோட்டில் பாவிக்கப்பட்டது) கேரளா
  5. பாகம் - 23 தம்பலவத்தையிலிருந்து திரும்பியதும் மேலும் இடங்களுக்குச் சென்றோம். அகதிகள் நிலை கண்ணீர்க் கதையாகவே தொடர்ந்தது. மண்டூர் போன்ற இடங்களிலும் ஏராளமான அகதிகள் இருந்தனர். அவர்களிடமிருந்து பல தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். கொக்கட்டிச் சோலைப்பகுதிக்கு திரும்பி வந்தோம். பலரோடு உரையாடியதில் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி இராணுவத்தினர் புல்லுமலையில் ஆறுபேரைக்கைது செய்து கொண்டு போகையில் அதில் மூவர் தப்பிச் சென்றதாகவும் அதனையடுத்து எஞ்சிய மூவரையும் சுட்டுவிட்டு, தப்பிய மூவரைத் தேடிச் சென்றனர் என்றும் அப்போது ஐந்து பெண்களைக் கற்பழித்துக் கொன்று கிணற்றில் போட்டனர் என்றும் கேள்விப்பட் டோம். இன்னொரு இடத்தில் விசாரித்தபோது சொறிக்கல்முனை வாசிகள் சவளக்கடை அகதிகள் முகாமில் இருந்தபோது செப்டெம்பர் மாதம் பதி னேழாம் திகதி முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவமும் இந்த முகாமினுள் புகுந்து முப்பத்தைந்து ஆண்களையும், முப்பத்தைந்து பெண்களையும் கைதுசெய்து கொண்டு போனதாகவும் ஆண்களை இராணுவமுகாமில் வைத்து வெட்டிக் கொன்றதாகவும், பெண்களை அகதிகள் முகாமுக்கும் இராணுவ முகாமுக்கும் இடையில் வைத்து கற்பழித்துக் கொன்றதாகவும் அறிந்தோம். அதேபோல செப்டெம்பர் இருபத்தோராம் திகதி புதுக் குடியிருப்புப்பகுதிக்கு சென்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர் அங்கு சுமார் 17 பேரை வெட்டிக் கொன்றதாகவும் 15 பேரை வெட்டிக் காயப்படுத்தியதாகவும் ஆறு பெண்களைக் கற்பழித்ததாகவும் அறிந்தோம். பாலமுனை என்ற சிறிய முஸ்லிம் கிரா மத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நடந்து கொண்டவர்களென அறிந்தோம். பால முனைக்கிராமம் ஒரு சிறிய கிராமமாக இருந்ததாலோ என்னவோ ஏற்கனவே நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கலவரங்களில் இவர்கள் சம்பந்தப்படுவதில்லை. இன ஐக்கியத்துக்காக முயற்சிப்பவர் கள். இவர்கள் கூட இப்படி செயல்களில் இறங்கியது வியப்பாக இருந்தது. நடந்த தமிழ் இனப்படுகொலைச் சம்பவங்களுக்குள் சத்துருக்கொண்டான் சம்பவமே மிகப் பெரியதாக இருந்தது. பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் போன்ற பகுகிகளை முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவலும் சுற்றிவளைத்து மொத்தம் 217பேரைக் கொன்றிருக்கிறார்கள். இதில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்கும். கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் 37 கிணறில் காணப்பட்டன. ஐந்துக்கும் குறைவானவர்களே இச்சம்பவத்தில் தப்பி வெளியே வந்தனர். அந்தப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்தான் பிடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அத்தனை பெண்களுமே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். என்ற தகவலைத் தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதியில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் இருந்தோர் மட்டுமே நாம் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லமுடியும். சம்பவம் நடந்தபோது ஊரில் இருந்த அனைவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். எனவே அரசாங்க அதிபரும் இராணுவத் தளபதியும் இங்கிருந்து வெளியேறியவர்களை திரும்பவும் இங்கே குடியமர்த்த முயற்சிகள் மேற்கொண்ட போது அவர்கள் நடந்த சம்பவத்தின் கோரம் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில் இருக்கும் போது தாம் மீளக்குடியமர்தல் சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டார்கள். கொக்கட்டிச்சோலையில் இருந்து புறப்பட்டு பன்குடா வெளிப் பகுதிக்கு வந்தோம். அங்கே ஒருவரைச் சந்தித்த போது தான் தளவாய்க் கிரா மத்தைச் சேர்ந்தவரெனவும் செப்டெம்பர் மாதம் இருபதாம்திகதிதமது கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள், குழந்தைகள் அடங்க 32பேரை முஸ்லிம் ஊர்காவல்படையினரும் இராணுவத்தினரும் சுட் டும் வெட்டியும் கொலை செய்ததாகவும் ஏழு வள்ளகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைத்ததாகவும் குறிப்பிட்டார். இன்னொருவர் தான் புன்னைச்சோலையிலிருந்து வந்திருப்பதாகவும் தமது ஊரில் ஜூலை மாதம் இருபதாம் திகதியன்று மட்டக்களப்பு வின் சன் உயர்தர மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மதி என்ற மாணவியை எட்டு இராணுவத்தினர் கற்பழித்ததாகவும் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் உள்ள 44 முகாம்களில் சிலவற்றையே எம்மால் பார்க்க முடிந்தது. அங்கி ருந்து புறப்பட்டு திரு. மாத்தயாவைச் சந்திக்கச் சென்றோம். நாங்கள் அகதிகளைப் பார்க்கப் போயிருந்த சமயம் திரு. மாத்தயா அவர்கள் வேறு பல இடங்களுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். பலரிடமும் அபிப்பிராயங்களைக் கேட்டார். பின்னர் போராளிகளு டன் ஆலோசித்தார். இந்த விடயங்களை உடனுக்குடன் தலைவருக்கும் தெரியப்படுத்தினார், தலைவர் திரு. மாத்தயா அவர்களை உடன் வருமாறு அழைத்தார், எனவே அக்டோபர் மாதம் 12ஆம் திகதி திரு. மாத்தயா அவர்கள் நாளை நாங்கள் திரும்பிப் புறப்படப் போகிறோம். அம்பாறை மாவட்டத்தை எல்லாம். சுற்றிப் பார்க்க வேண்டும் என்று தான் புறப்பட்டு வந்தேன். எனினும் தலைவர் அழைப்பதால் திரும்பிச் செல்வோம் என்றார். போராளிகள், பொதுமக்களுடன் கலந்தாலோசித்ததில் இருந்தும் நிலைமையை நேரில் கண்டதில் இருந்தும் அடுத்த நடவடிக்கைகள் பற்றிய சில முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்றே கூறலாம். கிழக்கு மாகாணம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு கிழக்கிலேயே முடிவெடுக்கப்பட்டது. அன்று இரவு சில இடங்களைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார் மாத்தயா. (தொடரும்)
  6. பாகம் - 22 05.12.1990 தம்பலவத்தை பாடசாலையிலிருந்து வெளிவரும்போது சைக்கிளில் வந்த ஒருவர் எம்மை வழிமறித்தார். சேனைக்குடியிருப்பில்ஒரு மனுஷிக்கு சுட்டுப்போட்டானுகள்' என்றார். 'ஆர் சுட் டது?" என்றுகேட்டேன். முஸ்லிம் ஊர்காவல்படை' என்றார். தொடர்ந்து 'தம்பி நாங்கள் கும்புடுற பிள்ளையாரைக் கொண்டு போட்டானுகள்' என்றார். 'ஏன் பிள்ளையாரில் இவ்வளவு. அக்கறை எடுக்கிறீங்கள். சனமே சாகுது. அதைப்பற்றிக் கதைக்காமல் ஏன் இதைப் பற்றிக் கதைக்கிறீங்கள்?' என்றேன். அவ்வளவுதான் அவர் முகம் மாறியது 'தம்பி! உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமலிருக்கலாம்' என்று கதையைத் தொடங்கினார். அதற்கு நான் 'நான் அப்படிச் சொல்லயில்லை. சனம் சாவதை விட இதுக்கு முக்கியத்துவம் குடுக்கிறீங்களே' என்றேன் அவ்வளவுதான். ஒரு நீண்ட உரையே நிகழ்த்தினார் அவர். 'தம்பி! நாம் நம்மட மன அமைதிக்காகத்தான் கும்பிடுறம். தமிழருக்குரிய பண்பாடு, கலாச்சாரத்துக்குள்ள இந்தக் கடவுள் வழிபாடும் அடங்குது. நாங்கள் நம்மட முறைப்படி, சமயப்படி நடக்கச்சொல்லி எவரையும் வற்புறுத்தவில்ல. அதே போலநம்மட கலாச்சாரத்தை, பழக்கவழக்கங்களை கைவிடச் சொல்ல எவனுக்குமே உரிமையில்ல. இதையெல்லாம் விட்டிடோணும் எண்டு மற்றவை வைபோசா நிக்கிற போதுதான் இதைக் கடைப் பிடிச்சே தீரோணும் எண்டு நாம நினைக்கிறம், நம்மட தலைவிதியை சலாச்சாரத்தை மற்றவனும் விரும்பினமாதிரி மாத்துறதுக்கு நாம என்ன பட்டிமாடுகளே? மற்றபடி நாம அவனுகளைப்போல இல்ல. நம்மட சமயத்தை நாம பின்பற்றுறம் நாம அவன் கடை பள்ளிய இடிக்கிறமா? இல்லையே, அப்பிடிச் செய்தால் தான் பிழை. ஆனா அவனுகள் என்ன செய்யிறானுகள். எல்லா சைவக் கோயில இடிக்கிறதும் தமிழரைக் கொல்லுறதும்' என்று சொல்லி மூச்சை நிறுத்தினார். 'அப்பிடி எங்கை சைவக்கோயில் இடிச்சிருக்கிறாங்கள்? என்று கேட்டேன். 'அக்கரைப்பத்தையில இன்னும் கனஇடத்தில' என்று சொன்னார். அப்ப நீங்கள் என்ன உத்தியோகம்?' என்று கேட்டேன். மாஸ்டர் என்றார். சரி சொல்லுங்கோ' என்றேன். “தம்பி! தமிழருக்கு எண்டு ஒரு நாடுவேணும். நம்மட கலாச்சாரம், மொழி, பண்பாடு இதுகளைப் பாதுகாக்கவேணும். அதுக்காகத்தான் போராடுறீங்கள். பிள்ளையாரும் வேண்டாம். கலாச்சாரமும் வேண்டாம். மொழியும்வேண்டாமெண்டால் பேசாமல் சாறனைக் கட்டி சிங்களத்தைப் படிச்சு, சிங்களவராகவே இருக்கலாமே. அத்தத் தனித்துவமெல்லாம் வேணுமெண்டு தானே போராடுறம்” என்று கூறி விட்டு என்னைக் கூர்ந்து பார்த்தார். சிரித்தேன். "பயப்பிடாமல் சொல்லுங்கோ" என்றேன். "நான் சொல்லுறதில பிழை இருக்கோ” என்றார். மீண்டும் சிரித்தேன். 'நாங்கள் மற்றவனுகளின்ரை கலாச்சாரத்துக்கை குறுக்கிடுறதில்ல. அவனுகளின்ர பள்ளியும் இருக்கும். நம்பட கோயிலும் இருக்கும். ஆரும் எங்கேயும் போய் வரலாம். இயக்கத்துக்கை வந்த முஸ்லீம் பெடியனுகளையெல்லாம் தொழுகைக்காக பள்ளிக்குப் போக அனுமதிச்சனீங்கதானே. குடுக்கிற எல்லா மரியாதையும் குடுத்தம். இப்ப எல்லாமே தலை கீழாய்ப் போச்சு. நாங்கள் அம்பாறைய விட்டு வெளிக்கிறங்க வேண்டி வத்திட்டுது. அஷ்ரப்பும் ஏதேதோ எல்லாம் நினைச்சுது. ஆனா அது சரிவராது என்றார். ''ஏன்' சரிவராது எண்டு நினைக்கிறியள் என்று கேட்டேன். கொழும்பிலேயும் மற்ற இடங்களிலேயும் குழப்பம் நடந்த காலத்தில அங்கின இருந்த தமிழர்கள் யாழ்ப்பாணத்துக்கும், மட்டக்களப்புக்கும் ஓடி வந்திச்சினம், எங்கட தமிழர் இருக்கினம், நமக்கெண்டு ஒரு நிலம் இருக் கெண்டு தானே வந்திச்சினம். கோட்டையைச் சுற்றி பொம்பர் அடிக்கிறதெண்டு வெளிக்கிறங்கினமுஸ்லிம் ஆக்கள் ஆரும் கல் முனைக்கோ அட்டாளைச் சேனைக்கோ வருகினமா? ஒருத்தர் கூட வரயில்லயே? கொழும்பில இருக்கிற தமிழர் யாழ்ப்பாணத்தை தாயகப் பூமி எண்டு நினைக்கிறமாதிரி யாழ்ப்பாண முஸ்லிம்கள் கல்முனை யையோ அட்டாளச்சேனையையோ நினைக்கயில்லையே' என்றார்; எனக்கு அப்போது தான் இந்த விஷயம் புரிந்தது. ஆனாலும் நான் விடாமல் "இப்ப இங்க வரமுடியாமல் இருக்கலாம். ஆனா எதிர் காலத்தில் எல்லா முஸ்லிமும் அம்பாறை மரவட்டத்துக்கு வந்து தனிமாகாணம் கேக்க மாட்டினம் எண்டு என்னெண்டு சொல்லுறியள்' என்றேன். பெரும்பாலும் முஸ்லிம் ஆக்கள் வியாபாரம் தான் செய்யிறவ. ஆனபடியா எல்லோரும் அம்பாறைக்கு வர மாட்டினம் - வர விரும்பினாலும் சிங்களவன் விடமாட் டான்' என்றார். அரசாங்கம் தான் முஸ்லிமைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கினது அப்ப ஏன் இது சரிவராது?” என்று கேட்டேன். 'கலவரத்தைத் தூண்டினது தன்னுடைய தேவைக்காக. அம்பாறையை இழக்க சிங்களவன் ஒருக்காலும் சம்மதியான். இவனுகளை அவன் ஏமாத்துவானே ஒழிய எதிலயுமே விட் டுக்குடுக்கான்' என்றார். 'எதில ஏமாத்தியிருக்காங்கள்?' என்றேன். அதற்கு அவர் 1977 தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அஞ்சு தொகுதியில் மூண்டு முஸ்லிம் எம். பிக்கள் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் முதலாவது எம். பி. அம்பாறையில் சிங்களவர், பொத்துவிலில் ரெண்டாவது தமிழர். ஆனா இந்த முறை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எம். பிக்களின் தொகைய ஏழாக் கூட்டியும் ஒரு முஸ்லிம் எம். பி.தான் வந்தது என்றார்; 'அதெப்படி?" என்றேன். யூ. என். பி.யும், என். எல். பியும் இது முஸ்லிம்கள் பெரும்பான்மையா உள்ள இடம் ஆனபடியால் முஸ்லிம் வேட்பாளரைக் கூடப் போடுறம் எண்டு சொல்லி முஸ்லிமைக் கூடப்போட்டு விலை குறைவா (சிங்களவரில்) போட்டாங்கள். தேர்தலில் சிங்களவன் சிங்களவனுக்கு மட்டும் தான் போட்டான். முஸ்லிம் வோட்டுகள் சிதறிச்சுது. கடசியில யூ. என். பி. மூணு எஸ். எல். எவ். பி ரெண்டு எண்ட போது கட்சியில கூட வோட்டெடுத்த எண்ட அளவில அதெல்லாம் சிங்களவராலே போச்சு இந்த அஞ்சும் சிங்களவன். அஷ்ரப் ஒண்டு. ரெலோ ஒண்டு. எப்படியெல்லாம் சிங்களவன் இவய ஏமாத்தியிருக்கிறான் என்றார். அப்ப மன்சூர்'? என்றேன், அவர் தேசியப்பட்டியல் மூலம் போனவர். ஏதோ புண்ணியத்தில குடுத்தமாதிரிக் குடுத்திருக்கிறானுகள் என்றார். தொடர்ந்து “புதுத் தேர்தல் முறைப்படியும் எம். பி மார் வாறதெண்டதிலயும் முஸ்லீமுக்கு பாதிப்புத்தான். இத இவங்களால விளங்கிக் கொள்ள முடியேல்ல. மட்டுமில்லை. அம்பாறையில் எந்தக்காலத்திலயாவது ஒரு முஸ்லிம் ஜி.ஏ.யா வரமுடியுமே. முஸ்லிம் பெரும்பான்மையா உள்ள மாவட்டம் எண்டாலும் அது சர்வருமே? நாங்கள் அம்பாறையில இருந்து வத்திட்டம். இனி தனிச்சு நிண்டு பாக்கேக்கை தெரியும் சிங்களவன்ர குணம்' என்றார். சரி வாறம் மாஸ்டர் என்றவாறே அவரிடம் விடைபெற்றோம். அவருடன் உரையாடிய போதுதான் இந்தப்பிரசினையில் உள்ள தாக்கங்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களுடைய கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை தேசிக்கும் தன்மையையும் புரிய முடிந்தது. முஸ்லிம்களால் அகதியாகத் துரத்தப்பட்டும் முஸ்லிம்களை சிங்களவர் ஏமாற்றி விட்டார்களே, தொடர்ந்தும் ஏமாற்றப் போகிறார்களே என்ற அவருடைய சிந்தனையையும் விளங்கிக் காள்ள முடிந்தது. (தொடரும்)
  7. சந்தைகளும் பொருளாதார யதார்த்தங்களும் கொந்தளிப்பான 2025 ஐ உருவாக்கியதால் ஒரு குழப்பமான 'அதிக வீழ்ச்சி' வணிக நிருபர் டேனியல் ஜிஃபர் எழுதியது வணிகம் தலைப்பு:ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கி செவ்வாய் 23 டிசம்பர்டிசம்பர் 23 செவ்வாய் வட்டி விகிதங்கள் குறைந்தன, பணவீக்கம் ஆச்சரியப்படத்தக்க வகையில் தொடர்ந்தது, AI பில்லியன்கள் மற்றும் டிரில்லியன்கள் தொடர்ந்து பாய்ந்தன: உலக பங்குச் சந்தைகளில் ஒரு விருந்து இருந்தது. ( Unsplash : Krys Amon / உரிமம் ) இணைப்பு நகலெடுக்கப்பட்டது கட்டுரையைப் பகிரவும் AI. சந்தை பதிவுகள். கட்டணங்கள். பெங்குவின். TACO. உலகளாவிய வர்த்தகத்தின் சர்வதேச கட்டமைப்பு துண்டிக்கப்பட்டதால், இது பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் ஒரு பெரிய ஆண்டாகும். மற்ற முக்கிய செய்திகளில், கேமிங் பிசி சிப்களை தயாரிப்பதில் பிரபலமான ஒரு நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்கதாக மாறியது, மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய வட்டி விகிதம் கீழே தடுமாறி பின்னர் தட்டையானது. முதலீட்டு வங்கியான UBS-ல் ஆஸ்திரேலியாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஜார்ஜ் தரேனோ, ஏப்ரல் மாதத்தில் "விடுதலை நாள்" என்று அழைக்கப்பட்டபோது நியூயார்க்கில் இருந்தார், அப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலகளாவிய சந்தைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு கடுமையான வரிவிதிப்பு ஆட்சியை வெளிப்படுத்தினார். " நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சந்தைகள் சரிவை நோக்கி நகர்வதைப் பார்ப்பது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார். "இது ஒரு உண்மையான குமிழி போன்ற மனநிலை, இதைத் தூண்டுவதற்கு இப்போது ஆரம்பத்தில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை," என்று UBS இன் ஜார்ஜ் தரேனோ வாதிடுகிறார். ( ABC செய்திகள்: ஜான் கன் ) மேலும் பல அதிர்ச்சிகள் வரவிருந்தன. இந்த வருடத்தின் பொருளாதார வெற்றிகளும் தோல்விகளும் 2025 ஆம் ஆண்டின் வெற்றிகளையும் தோல்விகளையும் பகுப்பாய்வு செய்ய, ABC, ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர்கள் சிலரிடம், அந்த ஆண்டை வரையறுக்க உதவிய நான்கு பின்னிப்பிணைந்த கூறுகள் குறித்து வினா எழுப்பியது. அந்த முக்கிய நிகழ்வுகள் மற்றும் போக்குகள்: பல தசாப்தங்களாக உலக வர்த்தகத்தை நிர்வகித்து வந்த விதிப் புத்தகத்தை டிரம்பின் வரி விதி கிழித்தெறிகிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டின. செயற்கை நுண்ணறிவில் (AI) அபரிமிதமான வளர்ச்சி. 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரப் படத்தைச் சுருக்கமாகக் கேட்டபோது, AMP இன் முதலீட்டு உத்தித் தலைவரும் தலைமைப் பொருளாதார நிபுணருமான ஷேன் ஆலிவர் சுருக்கமாகச் சொன்னார்: "மீள்தன்மை. ஆனால் ஆஸ்திரேலியாவின் தென்மேற்கே தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத ஹியர்டு மற்றும் மெக்டொனால்டு தீவுகளின் பெங்குவின்களுக்கு அதைச் சொல்லுங்கள் - இந்த ஆண்டின் மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றான ஏப்ரல் மாத அமெரிக்க கட்டணங்களில் வினோதமாக தனிமைப்படுத்தப்பட்டது. வீடியோவை இயக்கு. வீடியோவின் கால அளவு : 5 நிமிடங்கள் 51 வினாடிகள் . பார்க்கவும்5 மீ பொருளாதார சவால்கள் நீடிக்கும்போது ஒரு புதிய உலகளாவிய ஒழுங்கு. ( டேனியல் ஜிஃபர் ) வரிக் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட வர்த்தக விதிகள் அமெரிக்காவுடன் மனிதக் குடியிருப்புகள் இல்லாத அல்லது வர்த்தகம் செய்யாத தீவுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பது, அமெரிக்க நிர்வாகம் நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களுக்கான விலையுயர்ந்த புதிய செலவுகளை வெளிப்படுத்தியபோது கட்டவிழ்த்துவிடப்பட்ட குழப்பத்தின் அடையாளமாகும். "கடந்த ஆண்டு சந்தைகளைப் பொறுத்தவரை பெரிய விஷயம் என்னவென்றால், அவை எவ்வளவு வலுவாக இருந்தன என்பதுதான்" என்று ஷேன் ஆலிவர் கூறுகிறார். ( ஏபிசி செய்திகள்: டேனியல் இர்வின் ) "விடுதலை நாளில்" நாம் கண்டது, டொனால்ட் டிரம்ப் [இரண்டாம் உலகப் போருக்குப்] பிந்தைய காலகட்டத்தில் பெரும்பகுதியில் நிலவிய உலகளாவிய கட்டிடக்கலையை கிழித்தெறிய விரும்பினார் என்பதற்கான அறிகுறியாகும்," என்று டாக்டர் ஆலிவர் கூறினார். இந்த வரிகள் நட்பு நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் எதிரிகளாகக் கருதப்படும் நாடுகள் என இரு நாடுகளிடமிருந்தும் வர்த்தகத்தில் ஒரு செலவை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவின் தீவிர நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து 10 சதவீத விகிதத்தால் பாதிக்கப்பட்டாலும், ஒரு கட்டத்தில், சீனாவுடனான வர்த்தகத்தில் 145 சதவீத வரி விதிக்கப்படவிருந்தது. வர்த்தகம் அல்லது மனிதர்கள் இல்லாத தீவுகள் மீது வரிகளை விதிப்பதை அமெரிக்கா ஆதரித்தது , இல்லையெனில் அவை அமெரிக்க வரிகளைத் தவிர்க்க முயற்சிக்கும் நாடுகளின் பென்குயின்-போர்ட்டலாக மாறும் என்று பரிந்துரைத்தது. "எந்த நாடுகளும் விடுபட்டிருக்கவில்லை என்பதே இதன் கருத்து" என்று அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் CBS தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். டாக்டர் ஆலிவரின் கூற்றுப்படி, பெங்குயின்களுக்கு வரி விதிப்பது என்பது வரிகளின் ஒரு பகுதியாகும், இது அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அதிகப்படுத்தும். நாடுகள் தங்கள் பொருட்களுக்கான ஒப்பந்தங்கள், விதிவிலக்குகள் மற்றும் புதிய சந்தைகளுக்காகப் போராடியதால் ஏற்பட்ட தாக்கம் பீதியாக இருந்தது. NAB இன் தலைமைப் பொருளாதார நிபுணர் சாலி ஆல்ட், 2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் கணிப்புகளை அடிப்படையில் திருத்தி, சிவப்பு பேனாவைப் பிடித்ததாகக் கூறினார். ஆனால் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, பல வரிகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டதால், அந்த உறைபனி பார்வை கரைந்து போனது. உலகளவில் பங்குச் சந்தைகள் ஒரே ஒரு காரணத்திற்காகவே உற்சாகமாக இருப்பதாக NAB தலைமைப் பொருளாதார நிபுணர் சாலி ஆல்ட் கூறுகிறார்: "முழு தொழில்நுட்ப வளாகமும் உண்மையில் சந்தையை உயர்த்தியுள்ளது." ( ABC செய்திகள்: ஜான் கன் ) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆஸ்திரேலியா 10 சதவீத "அடிப்படை" வரியை வைத்திருந்தது , அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒப்பந்தங்களைக் குறைத்தன. "பெரும்பாலான பிற நாடுகள் உண்மையில் போராட விரும்பவில்லை என்பது தெளிவாகியது," என்று திருமதி ஆல்ட் கூறினார். நிதிச் சந்தைகளில் ஆரம்பகால கட்டணத் தாக்கம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதை பீட்டாஷேர்ஸ் தலைமைப் பொருளாதார நிபுணர் டேவிட் பாசனீஸ் கவனித்தார். "சந்தைகள் எதிர்வினையாற்றின, இது அமெரிக்க பொருளாதாரத்தை மந்தநிலையில் தள்ளக்கூடும் என்று அஞ்சின," என்று அவர் நினைவு கூர்ந்தார். அடுத்து வந்தது " TACO வர்த்தகம்" என்று அழைக்கப்பட்டது - டிரம்ப் ஆல்வேஸ் சிக்கன்ஸ் அவுட்டைக் குறிக்கிறது - அப்போது ஒப்பந்தங்கள் அல்லது யோசனைகளின் எதிர்மறையான தாக்கம் அறியப்பட்டது. "வர்த்தகப் போர்களில் எங்களுக்குப் பதிலுக்குப் பதில் அதிகரிப்பு ஏற்படவில்லை. எனவே பெரும்பாலான நாடுகள் ... அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் மீது விதித்த வரிகளை ஏற்றுக்கொண்டன," என்று டேவிட் பஸ்சனீஸ் கூறுகிறார். ( ஏபிசி செய்திகள்: ஜான் கன் ) "நாங்கள் அதைக் கண்டோம். இந்த ஆண்டு முழுவதும் அவர் கட்டணங்களைக் குறைத்துள்ளார். அவர் நாடுகளுடன் சில ஒப்பந்தங்களை அறிவித்துள்ளார்," என்று திரு. பஸ்சனீஸ் கூறினார். நமது நாடு உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு - குறிப்பாக இரும்புத் தாது மற்றும் தங்கம் போன்ற ஏற்றுமதிகளுக்கான விலையை நிர்ணயிக்கும் பொருட்கள் சந்தைகளுக்கு - பெரிதும் ஆளாகிறது. ஆனால் ஆண்டின் தொடக்கத்தில், சிட்னியில் உள்ள ஒரு தற்காலிக அலுவலகத்தில் உள்ள ஒரு வாரிய அறையில் ஒரு பெரிய கவனம் செலுத்தப்பட்டது, அங்கு வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதற்காக ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) வாரியம் கூடியது. பல வருட அடமான பதட்டத்திற்குப் பிறகு விகிதக் குறைப்பு நிவாரணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகாரப்பூர்வ வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான எதிர்பார்ப்பு தீவிரமாக இருந்தது. RBA நவம்பர் 2023 இல் ரொக்க விகிதத்தை 4.35 சதவீதமாக உயர்த்தி 2024 வரை அங்கேயே வைத்திருந்தது. ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அடமான சேவையை வழங்குவதால் - மேலும் மூன்றில் ஒரு பங்கு வாடகைக்கு விடப்படுவதால், பலர் அடமானம் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து - பொதுமக்கள் அதிக திருப்பிச் செலுத்துதலின் வலியை உணர்ந்தனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி வீட்டு வரவு செலவுத் திட்டங்களை தொடர்ந்து குறைத்து வந்ததால், நுகர்வோர் தங்கள் செலவினங்களைக் குறைத்தனர். "சந்தேகத்திற்கு இடமின்றி நிறைய பதற்றம் இருந்தது," என்று சுயாதீன பொருளாதார நிபுணர் நிக்கி ஹட்லி கூறினார். "[குடும்பங்கள்] கடினமாக இருந்ததற்கு வட்டி விகிதங்கள் மட்டுமல்ல, வழக்கத்தை விட அதிகமான பணவீக்கமும் ஒரு காரணம்." "நாங்கள் மிகவும் இறுக்கமாக தயாராக இருக்கிறோம்" என்று சுயாதீன பொருளாதார நிபுணர் நிக்கி ஹட்லி கூறினார், வேலையின்மை விகிதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வுகளுக்கு ஆபத்து ஏற்படாமல் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும். ( ஏபிசி செய்திகள்: ஜான் கன் ) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நுகர்வோர் விலைகள் ஆண்டுக்கு 7.8 சதவீத விகிதத்தில் உயர்ந்து கொண்டிருந்தன . இந்த ஆண்டு அது தணிந்தது, ஒரு கட்டத்தில் விலை உயர்வு 1.9 சதவீதமாகக் குறைந்தது, இது மத்திய வங்கி இலக்காகக் கொண்ட 2-3 சதவீத இலக்கு வரம்பைக் காட்டிலும் குறைவாகும். பிப்ரவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் RBA ரொக்க விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் குறைத்தது. "பணவீக்கம் குறைந்து வருவதைக் காண முடிந்ததால் அழுத்தம் இருந்தது, பொருளாதாரம் உண்மையில் மிகவும் மந்தமாக இருப்பதைக் காண முடிந்தது," என்று திருமதி ஹட்லி கூறினார். குறைந்த பணச் செலவின் தாக்கம் பொருளாதாரத்தில் பாய்கிறது என்றும், வலுவான நுகர்வோர் செலவு மற்றும் அதிக வீட்டு விலைகள் இருப்பதாகவும் NAB இன் திருமதி ஆல்ட் கூறினார். "சவால் என்னவென்றால், நமக்குக் கிடைத்துள்ள மீட்சி ஏற்கனவே பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்பைக் குறைக்கத் தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் RBA விகிதங்களை மேலும் குறைக்கும் என்ற தங்கள் ஆரம்பக் கருத்தை பெரும்பாலான சந்தை பார்வையாளர்கள் இப்போது மாற்றிக்கொண்டுள்ளனர், ஏனெனில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்து , மத்திய வங்கியின் 2-3 சதவீத இலக்கை விட உயர்ந்துள்ளது. பெரிய கடன் நிலுவையில் உள்ளவர்களுக்கு திரு. தரேனோவின் கருத்து விரும்பத்தகாததாக இருக்கும் - வட்டி விகிதங்கள் குறைவதை விட அதிகரிப்பதே அதிகம். இது வளர்ந்து வரும் பொருளாதார வல்லுநர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு பார்வையாகும், மேலும் RBA கவர்னர் மைக்கேல் புல்லக் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது . "அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் RBA ரொக்க விகிதத்தை உயர்த்துவதை நோக்கி மாறப் போகிறது என்பது எனக்கு தயக்கமாக இருக்கிறது," என்று திரு. தரேனோ கூறினார். 2026 ஆம் ஆண்டு வரை வட்டி விகிதங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும், ஆபத்து அதிகரிப்பை நோக்கிச் செல்லும் என்றும் AMP கணித்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு மீண்டும் மேசைக்கு வர வேண்டுமானால், வேலையின்மை அதிகரிக்க வேண்டும் என்று டாக்டர் ஆலிவர் கூறினார். சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பரில் பருவகால அடிப்படையில் சரிசெய்யப்பட்ட அடிப்படையில் 4.4 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் நவம்பரில் 4.3 சதவீதமாகவே இருந்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியில், போக்கு மற்றும் பருவகால அடிப்படையில் சரிசெய்யப்பட்ட நடவடிக்கைகள் இரண்டும் 4 சதவீதமாக இருந்தன. RBA இன் விகித நிர்ணய வாரியம் அடுத்ததாக பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கூடுகிறது. குமிழி அச்சங்கள் வெளிப்படுவதால் பங்குகள் சாதனை உச்சத்தில் உள்ளன "விடுதலை நாள்" என்பது சுதந்திரம் போல் ஒலித்திருக்கலாம், ஆனால் உலக பங்குச் சந்தைகளின் ஆரம்ப எதிர்வினை கட்டுப்பாடற்ற பீதியாக இருந்தது. அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களுக்குள் நியூயார்க்கில் S&P 500 குறியீடு $7.5 டிரில்லியன் மதிப்பை அழித்தது . தொழில்நுட்பம் மிகுந்த நாஸ்டாக் குறியீடு டிசம்பர் 2024 இல் அதன் சாதனை முடிவிலிருந்து 22 சதவீதம் சரிந்தது, மேலும் டவ் ஜோன்ஸ், ஐரோப்பிய குறியீடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சந்தைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. "இந்த ஆண்டு சந்தைகளில் புஷ்-புல் காரணிகள் அ) டொனால்ட் டிரம்ப் மற்றும் கட்டணங்கள், ஆனால் ஆ) AI ஏற்றத்தின் நேர்மறை," என்று பீட்டாஷேர்ஸின் திரு. பஸ்சனீஸ் கூறினார். செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் மற்றும் கணினி சில்லுகளில் ஏற்பட்ட பாரிய முதலீடுகள், "மாக்னிஃபிசென்ட் செவன்" தொழில்நுட்ப நிறுவனங்கள் என்று அழைக்கப்படுபவை - கூகிளின் தாய் நிறுவனங்களான ஆல்பாபெட், அமேசான், ஆப்பிள், டெஸ்லா, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், மைக்ரோசாப்ட் மற்றும் என்விடியா - ஏற்றத்திற்கு மிகவும் ஆளாகியுள்ளன. கேமிங் கணினிகளின் காட்சிகளை இயக்கும் அதன் கணினி சில்லுகள் - AI ஏற்றத்திற்கு அடித்தளமாக மாறிய பிறகு, பிந்தையவற்றின் பங்கு விலை 1,200 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகவும், 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகமாக மதிப்பிடப்பட்ட முதல் நிறுவனமாகவும் மைக்ரோசாப்டை என்விடியா பின்னுக்குத் தள்ளியது. இதைத்தான் UBS இன் ஜார்ஜ் தரேனோ "ஒரு திடீர் விபத்து" என்று விவரிக்கிறார். " இது கிட்டத்தட்ட அடிப்படைகளிலிருந்து ஒரு விலகல் போன்றது," என்று அவர் கூறினார். "உண்மையான பொருளாதாரத்தில் நமக்கு உண்மையில் ஏற்றம் இல்லை, ஆனால் சொத்து சந்தைகளில் நமக்கு ஏற்றம் ஏற்பட்டுள்ளது." "மக்கள் இதை FOMO [தவறிவிடுவோமோ என்ற பயம்] என்று அழைக்கிறார்கள். விலை அதிகமாக இருந்தால், தேவை அதிகமாகும். மக்கள் சொத்து சந்தைகளில் நுழைய விரும்புகிறார்கள், தவறவிடக்கூடாது." சமீபத்திய சரிவு இருந்தபோதிலும், நமது மிகப்பெரிய நிறுவனங்களின் ASX 200 குறியீடு ஆண்டு முதல் இன்று வரை 5 சதவீதத்திற்கு அருகில் உள்ளது. அது AMP இன் ஷேன் ஆலிவருக்குப் புரியும். " வட்டி விகிதக் குறைப்புகளை நாங்கள் கண்டிருக்கிறோம், குறிப்பாக அமெரிக்காவில், லாபம் தொடர்ந்து ஆச்சரியப்படும் விதமாக உயர்ந்து வருவதைக் கண்டிருக்கிறோம். [ஆஸ்திரேலியாவில்] நிலைமைகள் மென்மையான பக்கத்தில் இருந்தபோதிலும், நாங்கள் மந்தநிலையைத் தவிர்த்துவிட்டோம் ". மனிதர்கள் பெரிய லாபத்தை விரும்புகிறார்கள் என்பதை AI வேகமாகக் கற்றுக்கொள்கிறது. "மாக்னிஃபிசென்ட் செவன்" நிகழ்ச்சியின் தொடர்ச்சியான செயல்திறன், 1990களின் பிற்பகுதியிலும், 2000களின் முற்பகுதியிலும் ஏற்பட்ட டாட்-காம் சந்தை வீழ்ச்சி மீண்டும் நிகழும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது என்று NAB இன் சாலி ஆல்ட் கூறினார். "இன்னும் ஒரு டாலரை கூட சம்பாதிக்கவில்லை" என்றாலும், மிகவும் விலையுயர்ந்த மதிப்பீடுகளில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களைச் சுற்றியுள்ள வெறித்தனத்தால் டாட்-காம் குமிழியும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பும் உந்தப்பட்டாலும், திருமதி ஆல்ட், "இந்த முறை நிச்சயமாக அப்படி இல்லை" என்று கூறினார். AI புரட்சியை ஊக்குவிப்பதற்காக தரவு மையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்பத்திற்காக செலவிடப்படும் மனதை உருக்கும் அளவு பணம் அந்த வழக்கை வலுப்படுத்துகிறது. "அந்த எண்ணிக்கை இப்போது $500 பில்லியனை நெருங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன், இது ஒரு பெரிய எண், மேலும் இது ஒரு புதிய கண்டுபிடிப்பு சுழற்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது," என்று அவர் கூறினார். மூலதனச் செலவு மிகப் பெரியதாக இருந்ததால், அது அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. "இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அமெரிக்காவில் [மொத்த உள்நாட்டு உற்பத்தி] வளர்ச்சியில் 40 முதல் 50 சதவீதம் வரை அந்த மிகப்பெரிய AI மூலதனச் செலவினத்தால் ஏற்படக்கூடும் - இது பங்குச் சந்தைகளை ஆதரிக்க உதவுகிறது." சாத்தியமான தாக்கம் மிகப்பெரியதாகவே உள்ளது. ஆபத்தும் அப்படித்தான். "நாம் அனைவரும் குமிழ்கள் இருப்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறோம், அது ஒரு பொருட்டல்ல என்று கிட்டத்தட்ட நினைத்துக்கொண்டிருக்கிறோம், எப்படியோ, மாயமாக, இந்த நேரம் வித்தியாசமாக இருக்கும்," என்று பொருளாதார நிபுணர் நிக்கி ஹட்லி கூறினார். அடிப்படைக் காரணங்களால் இந்த ஆதாயங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன என்று நம்பாத மற்றொருவர் ஜார்ஜ் தரேனோ. "இது பொருளாதார விதிக்கு கிட்டத்தட்ட எதிரானது" என்று இந்த ஆண்டு சந்தை நடத்தையை விவரிக்கும் திரு. தரேனோ கூறுகிறார். https://www.abc.net.au/news/2025-12-23/trump-tariffs-interest-rates-and-ai-2025-was-a-chaotic-up-crash/106086538
  8. மேலே உள்ள கடற்கலம்: மஞ்சி (மலப்புறம் மாவட்டம் பொன்னானியில் பாவிக்கப்பட்டது) கீழே உள்ள கடற்கலம்: மஞ்சி (மலப்புறம் மாவட்டம் பொன்னானியில் பாவிக்கப்பட்டது) கேரளா
  9. பாகம் - 21 04.12.1990 சப்பித் தின்னுவன் என்று சொன்ன வார்த்தையிலேயே அந்த மூதாட்டியின் குமுறும் இதயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே தொடர்ந்தும் உரையாடினேன். அவற்ற பேர் என்ன ஆச்சி? வேலாயுதம் கனகரட்ணம். என்ன வேலை செய்யிறவர்? அவர் ஒரு ஏலாவாளிமோனை. கூலி வேலைதான் செய்யிறவர். அவருக்கு எத்தினை வயசு? அவ்வளவா இல்லை மோனை. ஒரு முப்பத்தைஞ்சு இருக்கும். மகளுக்கு எத்தினை பிள்ளையள்! நாலு. இதொண்டும்தான் பெட்டை. அந்தா ஒண்டு, மற்றது விளையாடப்போட்டுது. இங்க ரெண்டும் நிக்குது. இதுகளோட நான் என்ன செய்ய ஏலும். ஏன் தாய் எங்க போட்டா? அவள்.... வீட்ட தான். அங்கதான் பிரச்சினை யெண்டு வந்திட்டீங்களே, பிறகேன் அங்கை போறா?; அங் கன கிடக்கிற மாங்காய அத இத பொறுக்கிக் கொண்டு வந்து வித்தா ஏதாலும் வாங்கலாம்தானே மோன. இங்க ஏதாவது உதவி கிடைக்குதே? மண்டூரில் தந்ததுதான் பிறகு ஒண்டும் கிடைக்கேல்ல. அப்ப மருந்துகளுக்கு என்ன செய்யிறீங்கள்? மருந்து ஒண்டும் இல்ல. இதுகள் காட்டில் கிடக்கிற பூச்சிகள். (அகதிக ளைக் காட்டி) அப்ப வருத்தம் வந்தா? வருத்தம் வந்தா மண்டூர் ஆஸ்பத்திரிக்குப் போறதுதான்: மண்டூர் ஆஸ்பத்திரி எத்தினை மைல்? எனக்கு இந்த மைல் கணக்கெல்லாம் தெரியாது மோனை. நடக்கிறது தான் நடந்து மண்டூர் வந்தா நிக்கவேண்டியது தான். அங்க போனா அவன் டாக்குத்தனுக்கு காசு, ஏன் அது அரசாங்க ஆஸ்பத்திரி தானே? அவன் குடிகார டாக்குத்தனுக்கு காசு குடுத்தாத்தான் மருத்து, ஏ... எங்க... காசு இருக்கா பத்து ரூபா தா... இஞ்ச இந்தப் புள்ளக்கி காதுக் குத்து... காசு இல்ல கொண்டு போக வச்சிருக்கிறன். அப்ப நீங்கள் திரும்பி உங்கட இடத்த போக முடியாதே? எங்க மோனை போற உடுத்த பாவாடையோட ஓடிவந்தது மோனை. ஆக்கின சோறுசாப்பிட இல்ல. வீட்டில் உப்புரின்கூடபொறுக்கினவங்கள் ஆர் பொறுக்கினது? சிங்களவன்தான். இப்ப கெதியா எங்களுக்கு வீடு கட் டித்தர வேணும். நான் என்ர வீட்டயெண்டா மூலேக்கை கிடப்பன். காட்டுக்குப்போவன். (மல சல கூடத்திற்கு) இங்க பார் என்னெண்டு இருக்கிற. இப்படி நீங்கள் எத்தினை குடும்பம் இருக்கிறீங்கள் 24 குடும்பம். 'அப்ப ஆச்சி வாறம்' என்றவாறே விடைபெற்றோம். அங்கிருந்து தம்பலவத்தை என்னும் இடத்திற்குச் சென் றோம். இந்தப் பகுதி தற்போது அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்ப தாகத் தெரிவித்தனர். எமது பயணத்தில் ஆகக்கூடிய தூரம் சென்ற இடம் என்று குறிப்பிட முடியுமானால் இந்தக் கிராமத்தைத்தான் சொல்ல முடியும். எனவே அந்தப்பகுதிப் பிரதேசப் பொறுப்பாளரிடம் 'இந்தப் பகுதியில் முஸ்லிம் ஆக்களால் பிரச்சினை யில்லையே?' என்று கேட்டேன். ஏன் முந்தநாள் கூட ஒரு அறுபது பேரளவில் வந்தவங்கள் - ஆர்? முஸ்லிம்களும் சிங்களவனு களும் தான். நம்மட பையனுகள் போய்த் தான் அடிச்சுக் கலைச்சது? ‘அடிக்கடி வருவாங்கள்’ என்று சொன்னார் அவர். தம்பலவத்தை கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள அகதிகள் முகாமுக்குள் வாகனம் போய் நின்றது. நிர்வாணமான நிலையில் ஒரு பையன் நின்றான். அகதி முகாம்கள் எல்லாவற்றிலுமே நிர்வாணக்கோலம் சகஜம் தான். வீடுகளில் இருந்து ஓடி வந்தவர்கள் கையில் அகப்பட்டதை தூக்கிக் கொண்டு வந்தபோது உடுப்புகளைப் பற்றி அக்கறை எடுக்க முடியாது தான். முகாமைச் சுற் றிப் பார்த்தபடியே வந்தேன். வறுமை நிலையிலும் செந்தளிப்பான முகத்தைக் கொண்டிருந்த குடும்பப்பெண் ஒருவரைக் கண்டேன். அரிவாளில் மரக்கறி வெட்டிக் கொண்டிருந்தார். அவரோடு உரையாடத் தொடங்கினேன். அம்மா உங்கடபேர் என்ன? ராஜேஸ்வரி. உங்கட அவற்ற பேர்? தெய்வநாயகம். உங்கட ஊர் எது? சென்றல்காம்ப் இங்க வந்து எவ்வளவு காலம்? குழப்படி துடங்கினோண்ணை வெட்டக்கிறங்கினதுதான். உடனே இஞ்சை வந்திட்டீங்களோ? இல்ல முதல்ல 14 பள்ளியிலே இருந்து, மறுகா அன்னமலை பள்ளி, 46 பள்ளி துரந்தியன் மடுபள்ளியெண்டு போய் கடசியா இங்க வந்திருக்கிறம். இப்ப திரும்பி உங்கட வீட்டபோகேலாதோ? போகேலாது. எங்களுக்கு ரெண்டு வீடு, ஒருகடை இருந்தது. எல்லாத்தையும் பத்த வைச்சுப்போட்டாங்கள். ஆர் பத்தவைச்சது? முசிலிம் ஆக்களும், ஊர்காவல்படையும். இனி வீட்டை போகேலாது ஏதாவதொரு முடிவு வந்தால் தான் போகலாம். அதுவரைக்கும் இங்கின கிடந்து சாக வேண்டியதுதான். இங்க ஆரும் வந்து உங்களுக்கு உதவிசெய்தவையே? விதானைமார் ஒருக்கா தந்தவை. இந்தத் தம்பிமார்தான் (புலிகள்) ரெண்டுதரம் வந்து கொஞ்ச சாமான் தந்தவை. சோறாக்கக் கூட பானை இல்லாமத்தான் வந்தனாங்கள். கடைசியா இங்கின இருக்கிற தம்பி தான் பானை ஒண்டு தந்தவர். உங்கட ஊரில் எவ்வளவு குடும்பம் இப்பிடி அகதியாப் போனது? ஒரு... இருநூறு குடும்பம். எங்கட சென்றல்காம்ப், 3ம் வட்டாரம் எல்லாம் எழும் பீட்டுது. ஊர்காவல் படையால் ஆரும் செத்திருக்கினமே? ஓ கனபேர். பேர் தெரியுமே? குமார் எண்ட ஆள் மறுகா... சாமி... சுரேஷ்... சினப்பெடியன்... வட்ட விதானையற்ற மகள். அதுசரி எங்கை உங்கட அவர்? அவர் கல்முனைக்கு போட்டார். கல்முனைக்கு போறது பயமில்லையே அடிக்கடி முஸ்லிம் ஊர்காவல்படையின்ர குழப்படி எண்டு கேள்விப்படுறம் ஏன் அங்கை போனவர். அங்கை பிரச்சினைதானே? பிரச்சினைதான் பயந்து பயந்து தான் போறவர். எத்தினை மணிக்கு வருவார்? மாங்காய் கொண்டு போனவர் அதவித்துத்தான் ஏதாவது சாமான் வாங்கிவரவேணும். இப்ப வேணும். இப்ப வாறநேரம் தான். இன்னும் காணயில்ல எண்டுதான் யோசினையாய்க் கிடக்கு என்று சொன்னார். ஒருவிதபீதி முகத்தில் படர் வதை அவதானிக்க முடிந்தது. “சரிவாறம்” அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன் போகும் வழியில் பலர் எம்மைமறித்து. “எங்கட பிள் ளையாரைக் கொண்டு போயிட்டாங்கள் நீங்கள் தான் எப்படியாவது பிள்ளையாரை எடுத்துத் தரவேனும் நாங்கள் கும்புடுறதுக்கு சாமி இல்லாமல் இருக்கிறம் என்றனர். “ஆர்” என்றேன். “முசிலிம் ஆக்கள்” என்றனர் “அவங்களுக்கேன் பிள்ளையார்?” என்றேன். அவங்களுக்கு வேற சமயம் எதுவும் இருக்கக் கூடாதெண்டுநிலைப் பாடு. அதுதான் பிள்ளையாரைக் கொண்டு போனவங்கள் “அது வெண்கலத்தில செய்த பிள்ளையார்” என்றனர். நாளாந்தம் முஸ்லிம் ஊர்காவல்படையால் தமது உயிருக்கும் பாதுகாப்புக்கும் ஏற்படும் ஆபத்தைவிட பிள்ளையாருக்கு ஏற் பட்ட ஆபத்துத்தான் அவர்களுக்கு பெரிதாகத் தெரிகிறது மனித உயிர்களை விட மதத்தின் மீதுள்ள நம்பிக்கை பெரிதாகிவிட்டது. அந்தளவுக்கு மதம் மக்களிடையே ஊடுருவியுள்ளது. அதனால் தான் அஷ்ரப் போன்றவர்களாலும் இலகுவில் மதவெறிகளைத் தூண்டக் கூடியதாக உள்ளது. எனக்கு 1977 ஆம் ஆண்டுக் காலம் நினைவுக்கு வந்தது. அப்போது திருக்கோன மலைக் கோட்டைவாசலில் இருந்த பிள்ளையாரைத் தூக்கி கடலில் போட்ட சிங்களவர் கணப தெய்யோ நாண்ட கீயா! (பிள்ளையார் குளிக்கப் போய்விட்டார்) என்று சுவரில் எழுதினார்கள். அன்று சிங்களவர்கள். இன்று முஸ்லிம்கள். இந்துக்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் பிள்ளையாரை வேண்டித்தான் செய்வார்கள். இவர்களும் ஏதோ ஒரு வழியில் பிள்ளையாருடன் சம்பந்தப்படுகிறார்கள். பௌத்தத்தைத் தவிர வேறு மதம் இலங்கையில் இருக்கக் கூடாது என்ற கருத்தை புத்த பிக்குகளும் சிங்கள அரசியல்வாதிகளும் சாதாரண சிங்கள மக்களுக்கு ஊட்டினர். அதன் விளைவாக இன்னும் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதேபோல இன்று அஷ்ரப் குறுகிய அரசியல் லாபத்துக்காக இஸ்லாமிய வெறியை ஊட்டி மேலும், இரத்தம் சிந்தப்படும் நிலையை தொடரச் செய்கிறார் என்பதை உணரமுடிந்தது. அதனால்தான் காத்தான்குடியில் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரைப் பிடித்து அரிந்த சீமெந்து கல்லில் முகத்தைத் தேய்த்துத் துன்புறுத்தினார்கள். இதுவரை இரு கிறிஸ்தவ மதகுருமாரை முஸ்லிம்கள் கொன்றிருக்கிறார் கள். உலகில் மதத்திற்காக மதத்தின்பேரால் நடந்தயுத்தங்கள் தான்கூடு தல். மதச்சன்டையில் செத்தவர் தொகைதான் கூட என்பது திரும்பவும் நினைவுக்கு வந்தது. அத்துடன் காக்காச்சி வெட்டையிலும் தம்பலவத் தையிலும் நான் கேள்விப்பட்ட விடயங்கள் ஒரேமாதிரியாக இருந்தன. இரண்டு இடங்க ளிலும் தமக்கு மரணம் நேரும் என்று தெரிந்து கொண்டும் மரணப் பொறிக்குள் போகத் தயாராக இருக்கிறார்கள் அந்த மக்கள் இரண்டு இடங்களிலும் மாங்காயைப் பொறுக்கிவிற்று கிடைக்கும் பணத்தில் பிள்ளைகளுக்குசாப்பாடுகொடுக்க நினைக்கிறார்கள். அங்கே சிங்களவரால் தொல்லை இங்கே முஸ்லிம்களால் தொல்லை. எனினும் வறுமையின் கோரம் தான் அந்த மக்களை உயிரைச் சாதாரணமாக நினைக்கவைக்கிறது. (தொடரும்)
  10. ஆம், யாழில் இருந்து செல்லும் போது மாகோவில் இறங்கி மாறவேண்டும். கொழும்பில் இருந்து கிழக்கு செல்வதையே செய்தி சொல்கிறது. அதில் தான்குழப்பம் ஏற்பட்டது Intercity ஓடும் போது கூட (1 நாளில் 3 சேவைகள் என்றே நினைவு, காலை, மதியம், இரவு), யாழில் இருந்து கிழக்கு செலும் பொது, மகோவில் சாமத்ததுக்கு கிட்ட இரங்கி மாறுவதை தவிர்க்க, அநேகமானோர் காலையிலேயே புறப்படுவது ஆனால், இன்டெர்சிட்டி முக்கிய நகரங்களில் மட்டும் தரிப்பதால் மதிய சேவை மகோவை சென்றடைய நேரம் போதும், கொழும்பில் இருந்த்து வரும் கிழக்கு புகையிரஹா சேவையை 10.00 - 12.00 க்கு இடையில் பிடிக்க.
  11. பாகம் - 20 03.12.1990 ஆற்றங்கரையிலிருந்து திரும்பி வந்தோம். மகிழடித் தீவுச் சந்தியில் லான்ட்குறோசரை நிறுத்தினார் கரிகாலன். அங்கு நின்றவர்களில் “மக்கள்” என்று அழைக்கப்படுபவரோடு உரையாடத் தொடங்கினேன். என்ன மக்கள் எல்லாரும் படுவானுக்க வந்திட்டீர்கள்? மறுகா என்ன செய் யிற. காம்பெல்லா போட்டுட்டானுகள். ஏன் படுவானுக்கை ஆமிவரானோ? இங்கெ வாறதெண்டா எப்பாலுமிருந்துதான். ஆரைப்பத்தேல நாளாந்தம் எல்லோ ஆமியைக் காணோணும். அதவிட ரெலோக்காறன் திரியிறான். ரெலோவால் பிரச்சினையா? மறுகா... பார்காற (Bar) கன்னன் தம்பிராசாற்ற மகன் பாங்கிலே வேலை செய்யிறவர் அவரையு மெல்லோ சுட்டுட்டானுகள். ஏன் சுட்டாங்கள்? லக்ஸ்மனும் நீலனும் வாறவங்களோண்டு கேட்டானுகள். ஏதோ மறு மொழி சொன்னான் இவன். கடைசியில் சுட்டுப் போட்டானுகள் ஆர் இப்ப ரெலோவுக்கு பொறுப்பு? வேட் டோவோ போட்டோவோ எண்டு தான் சொல்றானுகள். ஆரைப் பத்தையில ஆர் பொறுப்பு? அவன் கிழவிறவி சரி இங்கை வந்திருக்கிறீர் களே உங்கட குடும்பம் எல்லாம் என்ன மாதிரி? ஊரில தான். அப்ப தொழில்? தொழில் செய்யக் கூடிய நிலைமையே. ஆத்துக்கு போகலாம் தானை? ஆத்துக்க இறங்கினா ஆமி சுட்டு போடுவான். மண்முனை துறையையே பாவிக்க வேண்டாமெண்டு சொல்லியிருக்கிறான். அப்ப ஆத்தில தொழில் செய்யிறவை பாடு? ஒருத்தருக்கும் தொழில் இல்ல. முஸ் லிம் ஆக்கள் மீன் பிடிக்கிறாங்களோ? அவங்கள் காத்தான் குடிப்பக்கமாக புடிக்கிறானுகள். சரி பிள்ளைகள் பாடு எப்படி? பிள்ளையள்... பிள்ளையள்... என்னத்தைச் சொல்ல இப்பிடியே சீரழியீறம். கண்கள் கலங்கச் சொல்கி றார். தொண்டை அடைத்துக்கொள்கிறது. மக்களிடமும் மற்றவர்களிடமும் விடை பெறுகிறோம். அம்பிளாந்துறை, பழுகாமம் போன்ற இடங்களையும் பார்த்தோம். அம்பிளாந் துறையில் ஏராளமான வீடுகள் தீயிடப்பட்டிருந்தன. ‘பெரியபோரதீவு’ முனைத் தீவுப்பகுதிகளுக்குச் சென்றோம். அங்குதான் மின்சாரம் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றுமாத காலத்தின் பின் மின்சார விளக்கு எரியும் வீடுகளைக் கண்டோம். அங்கிருந்து புறப்பட்டு கோயிற் போரதீவு, வெல்லாவெளிப் பகுதிகளுக்குச் சென்றோம். எம்மால் தகர்க்கப்பட்ட. வெல்லாவெளிப் பொலிஸ் நிலையம் இருந்த பகுதியைப் பார்வையிட்டோம். இனி தமிழீழத்தில் சிறிலங்கா அரசின் சிவில் நிர்வாகம் என்பது பகல் கனவு தான் என்பதை தகர்ந்திருந்த அக்கட்டிடங்கள் உறுதிப் படுத்தின. அங்கிருந்து பாலையடிவெட்டைப் பக்கமாகப் போகும்போது எங்களுடன் வந்த மண்டலம் என்பவர் "இவடத்தைதான் றீகண்ணை செத்தவர்” என்று ஒரு இடத்தைக் காட்டினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அந்த மாவீரன் மறைந்த இடத்தில் சிறிது நேரம் தங்கியிருந்தோம். பாலையடி வெட்டையில் நிற்கும்போது வேட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணமிருந்தன பக்கியெல்ல கிராமத்தின் சிங்கள ஊர்காவல்படையினர் இவ்வாறு அடிக்கடி சுட்டுக் கொண்டிருப்பது வழக்கம் என்றார் கரிகாலன். அங்கிருந்து காக்காச்சி வெட்டை என்னும் இடத்தைச் சென்றடைந்தோம். அங்குள்ள அகதிகள் முகாமில் பெரும்பாலான குழந்தைகள் நிர்வாணமாகவே காணப்பட்னர். போஷாக்கின்மை அவர்களின் தோற்றத்தில் தெரிந்தது. இடுப்பில் ஒரு குழந்தையுடன் ஒருகிழவி காணப்பட்டார் அவரிடம் சென்றேன். ஆச்சி உங்கட பேர் என்ன? என்று கேட்டேன். "கந்தப்பர் தங்க முத்து" என்றார். இந்தப் பிள்ளை? என்று வினவினேன். “பேத்தி - என்ட மகளட புள்ள" என்றார். உங்கட சொந்த இடம் எது என்று கேட்டேன். ''37' என்றார். 37 என்றால் என்று கேட்டேன். "37ஆம் கொலனி. நாசிவன் வெளி'' என்றார். இந்தப் பிள்ளையின் தகப்பன் எங்கை? என்று கேட்டேன். "சுட்டுப் போட்டானுகள் சிங்களவனுகள், அவன்... சுட்ட வனை என்னட்டத்தந்தா சப்பித்தின்னுவன்'' என்றார். (தொடரும்)
  12. Today
  13. Reserve Bank of AustraliaDrivers of the Australian Dollar Exchange Rate | Explaine...This series provides short, concise explanations for various economics topics.மேலே குறிப்பிட்ட தரப்புக்கள் அனைத்தும் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன அவை எவ்வாறான கால அளவை கொண்டன என்பதற்கான அவுஸ்ரேலிய மத்திய வங்கி கட்டுரை.
  14. அரச பாதீட்டு பற்றாக்குறை ஏற்படும் போது அரசின் கடனை மத்திய வங்கி வாங்குகின்றன, அவை நேரடியாக மத்திய வங்கி அரசின் கடனை வாங்குவதில்லை, அரச பணமுறிகளை Secondary market மூலமாக வணிக வங்கிகளிடமிருந்து வாங்குகின்றன, அதற்கு தேவையான காசிற்கு பதிலாக வணிக வங்கிகளின் இருப்பில் (வங்கிக்கணக்கு என எடுத்துக்கொண்டால்) ஒரு பதிவினை இடுவார்கள் (Digital), நான் உனக்கு இவ்வளவு கடன் பட்டுள்ளேன் என்பது போல, பின்னர் அரசு கடனினை செலுத்திய பின்னர் அதனை நீக்கி விடுவார்கள், குறித்த காலகட்டத்திற்கான வட்டியினை (கற்பனை கடன்) மத்திய வங்கி வணிக வங்கிக்கு செலுத்தும். Quantitative Easing போது மத்திய வங்கி மேற்குறித்த செயற்பாட்டினை மேற்கொள்வதுடன் வட்டி விகிதத்தினை குறைப்பதன் மூலம் மக்களை செலவு செய்ய தூண்டுவது, வணிக வங்கிகளிடமுள்ள பணமுறிகளை வாங்குவதன் மூலம் வங்கிகளின் திரவ சொத்தினை அதிகரித்து மேலதிக கடனை ஊக்குவித்து பணவழங்கலை அதிகரிக்கும். இந்த செயற்பாடு உள்நாட்டு நாணயத்தின் பெறுமதியினை வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக இழக்க செய்கிறது. மத்திய வங்கி எவ்வாறு தனது அன்னிய செலாவணியில் தாக்கம் ஏற்படுத்துகிறதோ அதனை போல அரசுகளின் வரிக்கொள்கையும் அன்னிய செலாவணியின் பெறுமதியில் தாக்கம் செலுத்துகிறது. இறக்குமதி தீர்வை அதிகமாக இருந்தால் நாட்டிற்கு வர்த்தக நிரம்பலை உருவாக்கும்.
  15. மத்திய வங்கியின் செயற்பாட்டினை புரிந்து கொள்ள வணிக வங்கிகளின் செயற்பாடுகளின் தொழில்பாடு முக்கியமாகிறது. மத்திய வங்கியின் பணத்தினை MB என கூறுகிறார்கள், சில நாடுகளில் M0 கூறப்படுகிறது, இது அச்சிடப்பட்ட திடமான காகித மற்றும் உலோக நாணயங்களாகும். வணிக வங்கிகளின் நாணயமாக M0 - M3 இனை கூறுகிறார்கள். பொதுவாக M2 money supply (கருவூலத்தினால் அச்சிடப்பட்ட நாணயங்களும் வணிக வங்கிகள் உருவாக்கிய நாணயங்களு அடங்கலாக) பணவீக்க பண சுருக்க காரணியாகிறது. நாணயங்கள் அச்சிடப்படுவது ஏற்கனவே உள்ள நாணயத்தினை மாற்றீடு செய்வதற்கு பயன்படுத்தப்படுவது ஆனால் அரசுகள் கூறும் புதிய நாணயம் அச்சிடப்பட்டது எனும் போது அவை புதிதாக நாணயத்தினை அச்சிடுவதில்லை.
  16. வணிக நிறுவனங்களின் ஏற்றுஅம்தி இறக்குமதி (அணிக செயற்பாடு), பெரு முதலீட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு உள்நாட்டு முதலீட்டு நடவடிக்கைகள்(Risk on, Risk off), வணிக வங்கிகளின் செயற்பாடு (currency exchange - tourism), சிறிய அன்னிய செலாவணி தரகு மற்றும் வர்த்தகர்கள் (Retail brokerage and retail traders) இவை தவிர மத்திய வங்கி மற்றூம் அரசுகள் அன்னிய செலாவணியில் தாக்கம் செலுத்துகிறார்கள். மத்திய வங்கிகள் என்னதான் நாணயம் மிதக்கவிடப்பட்டதாக கூறினாலும் முழுமையாக மிதக்கவிடப்பட்ட நிலை எங்கும் காணப்படுவதில்லை. மத்திய வங்கியின் செயற்பாடுகள் எவ்வாறு அன்னிய செலாவணியினை பாதிக்கின்றது? நேரடியாக நாணய பெறுமதியின் தளம்பலை குறைக்க வெளிநாட்டு இருப்பினை கட்டுப்படுத்துவது (விற்றல் வாங்கல்). Monetary policy, உள்நாட்டு பொருளாதாரத்திற்கேற்ப எடுக்கும் முடிவுகள் மூலம்.
  17. நன்றி.அந்த பேருந்து நிச்சயம் இல்லாமல் அதை நம்பி புகையிரதம் பதிவு செய்வது கூடாது.7 மணி நேரம் காத்திருந்து யாழ்ப்பாண எ சி பஸ் எடுப்பம்.
  18. மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்; நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் Published By: Vishnu 25 Dec, 2025 | 07:48 PM மட்டக்களப்பில் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று வியாழக்கிழமை (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது. இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுடனர். https://www.virakesari.lk/article/234418
  19. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்! 25 Dec, 2025 | 04:43 PM இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை தேவராசாவின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் வள நிலையத்தில் இன்று (25) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணன் இல்லத்தின் செயலாளர் உ.உதயகாந்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மறைந்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் திருவுருவப் படத்துக்கு அன்னாரின் உறவினரான அக்கரைப் பாக்கியனால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் உறுப்பினர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் தலைவரும் அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான க.சரவணனால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது. பின்னர், அன்னாரது உறவினரான அக்கரைப் பாக்கியன் பேருரை ஆற்றினார். 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளராக கணபதிப்பிள்ளை தேவராசா கருதப்படுகிறார். https://www.virakesari.lk/article/234405
  20. மிக்க நன்றி பிரியன் அண்ணை. மிக்க நன்றி புங்கை அண்ணை. மிக்க நன்றி சிறி அண்ணை. மிக்க நன்றி கிருபன் அண்ணை. மிக்க நன்றி உடையார் அண்ணை. மிக்க நன்றி யாயினி அக்கா. மிக்க நன்றி நந்தன் அண்ணை. மிக்க நன்றி ரசோ அண்ணை. நேற்று 24/12 எனது பிறந்தநாள், எதிர்பாரத விதமாக உறவுகள் நண்பர்கள் சிலர் வீடு வந்து வாழ்த்தினார்கள்.
  21. பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ணிக்கை - வரை நட்சத்திரங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், புதிய நட்சத்திரங்களின் உற்பத்தி வேகம் குறைந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நட்சத்திரங்களின் பிறப்பும் இறப்பும் தற்போதைய ஒருமித்த அறிவியல் கருத்தியலின்படி, பிரபஞ்சம் சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்த சிறிது காலத்திலேயே முதல் நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கின. உண்மையில், கடந்த ஆண்டு ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி நமது பால்வெளி அண்டத்திலேயே 13 பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மூன்று நட்சத்திரங்களைக் கண்டறிந்தது. நட்சத்திரங்கள் அடிப்படையில் சூடான வாயுக்களால் ஆன ராட்சதப் பந்துகள். அவை அனைத்தும் ஒரே மாதிரியாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. விண்வெளித் தூசு மற்றும் வாயுக்கள் நிறைந்த நெபுலா எனப்படும் பிரமாண்ட மேகக்கூட்டங்களில் இவை உருவாகின்றன. ஈர்ப்பு விசை வாயுத் திரட்சிகளை ஒன்றாக இழுக்கிறது; இது இறுதியில் வெப்பமடைந்து ஒரு 'குழந்தை நட்சத்திரமாக' அல்லது புரோட்டோஸ்டாராக மாறுகிறது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI; Processing: J DePasquale/A Pagan/A Koekemoer (STScI) படக்குறிப்பு,குழந்தை நட்சத்திரங்கள் (புரோட்டோஸ்டார்கள்) அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களைத் தரும் மேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன நட்சத்திரத்தின் மையக்கரு கோடிக்கணக்கான டிகிரி அளவுக்கு வெப்பமடையும்போது, அதிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக அழுத்தப்பட்டு ஹீலியமாக மாறுகின்ற, 'அணுக்கரு இணைவு' என்ற செயல்முறை நடைபெறுகிறது. இது ஒளி மற்றும் வெப்பத்தை வெளியிடுகிறது. இப்போது நட்சத்திரம் ஒரு நிலையான 'முதன்மை வரிசை' கட்டத்தில் இருக்கும். நமது சூரியன் உள்பட முதன்மை வரிசை கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்களே பிரபஞ்சத்தின் மொத்த நட்சத்திரங்களில் 90% உள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இவை சூரியனின் நிறையைப் போல பத்தில் ஒரு பங்கு முதல் 200 மடங்கு வரை இருக்கின்றன. இறுதியில் இந்த நட்சத்திரங்கள் எரியூட்டும் எரிபொருளை இழக்கின்றன. பின்னர் அவை மரணத்தை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கக்கூடும். நமது சூரியனை போன்ற குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஆண்டுகளில் மெல்ல மங்கி மறையும் செயல்முறைக்கு உள்ளாகின்றன. சூரியனைவிட குறைந்தது எட்டு மடங்கு நிறை கொண்ட பிரமாண்ட நட்சத்திரங்களின் முடிவு மிகவும் வியத்தகு முறையில் இருக்கும்: அவை சூப்பர்நோவா எனப்படும் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறுகின்றன. பட மூலாதாரம்,Anadolu via Getty Images பழைய நட்சத்திரங்களின் ஆதிக்கம் கடந்த 2013ஆம் ஆண்டு, நட்சத்திர உருவாக்கப் போக்குகளை ஆய்வு செய்த சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் குழு ஒன்று, இனி உருவாகப் போகும் மொத்த நட்சத்திரங்களில் 95% ஏற்கெனவே பிறந்துவிட்டன என்று கூறியது. "தெளிவாகப் பழைய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தும் பிரபஞ்சத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் சோப்ரல் அந்தக் காலகட்டத்தில் சுபாரு தொலைநோக்கி இணையதளக் கட்டுரையில் கூறியிருந்தார். பிரபஞ்சத்தின் காலவரிசையில், 'காஸ்மிக் நூன்' என்று அழைக்கப்படும் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதியில்தான் நட்சத்திர உருவாக்கம் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. "அண்டங்கள் வாயுவை நட்சத்திரங்களாக மாற்றுகின்றன, ஆனால் இப்போது குறைவான விகிதத்திலேயே அதைச் செய்கின்றன," என்கிறார் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்டவியல் பேராசிரியரான டக்ளஸ் ஸ்காட். ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் யூக்ளிட் மற்றும் ஹெர்ஷல் தொலைநோக்கிகளின் தரவுகளை ஆய்வு செய்த ஒரு புதிய ஆய்வின் இணை ஆசிரியராக பேராசிரியர் ஸ்காட் உள்ளார். பிரபஞ்சத்தின் பிரமாண்டமான 3D வரைபடத்தை உருவாக்கும் யூக்ளிட் திட்டத்தின் மூலம், அவரும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவும் ஒரே நேரத்தில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான அண்டங்களை ஆய்வு செய்ய முடிந்தது. பட மூலாதாரம்,Esa/Euclid/Euclid Consortium/Nasa; Processing: JC Cuillandre (CEA Paris-Saclay)/G Anselmi படக்குறிப்பு,யூக்ளிட் விண்வெளித் திட்டம், விண்வெளியில் புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் பகுதியின் விவரங்களைப் படம் பிடித்துள்ளது குறிப்பாக விண்வெளித் தூசுகள் வெளியிடும் வெப்பத்தின் மீது ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். அதிக நட்சத்திர உருவாக்க விகிதத்தைக் கொண்ட அண்டங்கள், பெரிய மற்றும் வெப்பமான நட்சத்திரங்களைக் கொண்டிருப்பதால் அதிக வெப்பமான தூசுகளைக் கொண்டிருக்கும். பிரபஞ்சத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக அண்டங்களின் வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து வருவதை ஆய்வுக் குழு கண்டறிந்ததாக பேராசிரியர் ஸ்காட் கூறுகிறார். "நாம் ஏற்கெனவே நட்சத்திர உருவாக்கத்தின் உச்சகட்டத்தைத் தாண்டிவிட்டோம், ஒவ்வொரு தலைமுறை நட்சத்திர உருவாக்கத்திலும் புதிய நட்சத்திரங்கள் குறைவாகவே பிறக்கும்," என்று அவர் கூறுகிறார். பிரபஞ்சம் எப்போது முடிவுக்கு வரும்? பழைய நட்சத்திரங்களின் மரணம் அதே பொருட்களைப் பயன்படுத்திப் புதிய நட்சத்திரங்கள் உருவாக வழிவகுக்கும் என்பது உண்மைதான், ஆனால் இது அவ்வளவு எளிமையானதல்ல. நமக்கு ஒரு குவியல் கட்டுமானப் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி ஒரு வீட்டைக் கட்டுவதாகவும் வைத்துக் கொள்வோம். நாம் புதிய வீடு ஒன்றைக் கட்ட விரும்பினால், பழைய கட்டடத்தை மறுசுழற்சி செய்ய முயற்சி செய்யலாம், ஆனால் அதிலுள்ள அனைத்துமே பயனுள்ளதாக இருக்காது. "அதாவது நாம் ஒரு சிறிய வீட்டையே கட்ட முடியும். ஒவ்வொரு முறை அதை இடிக்கும்போதும் கிடைக்கும் பயனுள்ள பொருட்கள் என்னால் ஒரு வீட்டைக்கூட கட்ட முடியாத நிலை வரும் அளவுக்குக் குறைந்து கொண்டே இருக்கும்," என்று பேராசிரியர் ஸ்காட் விளக்குகிறார். நட்சத்திரங்களுக்கும் இதுதான் நடக்கிறது. "ஒவ்வொரு தலைமுறை நட்சத்திரங்களுக்கும் எரியூட்டக் குறைந்த எரிபொருளே இருக்கும். இறுதியில் ஒரு நட்சத்திரத்தை உருவாக்கக்கூடப் போதுமான எரிபொருள் இருக்காது" என்று அந்த அண்டவியலாளர் கூறுகிறார். பட மூலாதாரம்,Nasa/SDO படக்குறிப்பு,நமது சூரியன் இறுதியாக மங்கி மறைவதற்கு இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர் "பிரபஞ்சத்தில் பெரிய நிறை கொண்ட நட்சத்திரங்களைவிடக் குறைவான நிறை கொண்ட நட்சத்திரங்களே மிகவும் அதிகம் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும்." பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகத் தத்துவங்களை முன்வைத்து வருகின்றனர். அது எப்படி, எப்போது என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. தற்போது மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகளில் ஒன்று 'வெப்ப மரணம்' (heat death). 'பிக் ஃப்ரீஸ்' (Big Freeze - மகா உறைநிலை) என்றும் அழைக்கப்படும் இது, பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையும்போது, ஆற்றல் பரவி, இறுதியில் உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியடையும் என்று கணிக்கிறது. நட்சத்திரங்கள் ஒன்றையொன்று விட்டு விலகி தூரமாகச் செல்லும், அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடும் மற்றும் புதிய நட்சத்திரங்கள் உருவாகாது. பேராசிரியர் ஸ்காட் அளிக்கும் விளக்கத்தின்படி, "பிரபஞ்சத்தில் கிடைக்கும் ஆற்றலின் அளவு வரையறுக்கப்பட்டது." பட மூலாதாரம்,Esa/Webb/Nasa/CSA/J Lee/PHANGS-JWST Team படக்குறிப்பு,பல அண்டங்களில் நட்சத்திர உருவாக்கம் இன்னும் மிக நீண்ட காலத்திற்குத் தொடரும் நிறைய பூஜ்ஜியங்கள் ஆனால் நீங்கள் வானத்தை ஏக்கமாகப் பார்ப்பதற்கு முன்பாக, நட்சத்திரங்களின் அழிவு நிகழ மிக நீண்ட காலம் எடுக்கும் என்பதை அறிய வேண்டும். நமது சூரியன் மறைந்த பிறகும், அடுத்த 10 முதல் 100 டிரில்லியன் ஆண்டுகளுக்குப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும் என்று பேராசிரியர் ஸ்காட் மதிப்பிடுகிறார். 'பிக் ஃப்ரீஸ்' நிலையைப் பொறுத்தவரை, அது இன்னும் நீண்ட காலம் எடுக்கலாம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில், நெதர்லாந்தின் ராட்பவுட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபஞ்சத்தின் இறுதி முடிவு சுமார் ஒரு 'குவின்விஜிண்டில்லியன்' ஆண்டுகளில் வரும் என்று மதிப்பிட்டனர். அதாவது, ஒன்றுக்குப் பின்னால் 78 பூஜ்ஜியங்களை கொண்ட ஆண்டு எண்ணிக்கை அது. எனவே, நீங்கள் தெளிவான இரவு வானத்தைப் பார்த்து, நட்சத்திரங்களை ரசிக்க இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lvqjd9lxno
  22. சுனாமி, டித்வா புயலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் ; நாளை 2 நிமிட மௌன அஞ்சலி ; பொதுமக்களிடம் வேண்டுகோள்! Published By: Digital Desk 1 25 Dec, 2025 | 02:04 PM சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி பேரழிவிலும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற டித்வா புயல் தாக்கத்தின் பேரனர்த்தங்களிலும் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வானது காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக நாளை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலகத்தினை மையமாகக் கொண்டு சர்வமத பிரார்த்தனை நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இரு நிமிட நிசப்தத்தை கடைபிடித்து, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும் இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருமாறும் நாட்டு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/234391
  23. வாசித்தேன், ரசித்தேன். தவிர்த்தலும் நிம்மதிக்கு ஒரு வழி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.