All Activity
- Past hour
-
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை கட்டுரை தகவல் சுதாகர் பிபிசி தமிழுக்காக 7 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நடந்த சுமார் 125 நாட்களில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதி, 3 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர் இவ்வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கியது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பிப்ரவரி 23ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது. இந்நிலையில் மார்ச் 7 அன்று நீதிபதி சுந்தரராஜன், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். தண்டனை பெற்று தந்த ஆதாரங்கள் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்காக வாதாடிய அரசு வழக்கறிஞர் ஜிஷா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த வழக்கில் குற்றம் நடந்த நேரம் இரவாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த தகவல்கள் மட்டுமல்லாமல் குற்றத்தை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்பித்தோம்.'' என்றார். ''அறிவியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு ஆதாரங்கள் பெறப்பட்டது. டி.என்.ஏ ஆதாரங்கள் மூலம் குற்றவாளிகள் இவர்கள் தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது முதல் குற்றம் செய்து விட்டு தப்பி சென்றது வரையிலான 22 சிசிடிவி காட்சி ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு பழைய வழக்குகள் உள்ளன. அவர்கள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட முதல் வழக்கு இதுதான். பாதிக்கப்பட்ட பெண் குறித்து பரப்பபட்ட தவறான பிம்பங்களை சட்டரீதியாகவும் உடைத்துள்ளோம்" என்று கூறினார். "எதிர்தரப்பில் அந்த நேரத்தில் ஏன் பாதிக்கப்பட்ட பெண் அங்கு வந்தார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இரவு 10:45 மணிக்கு மட்டுமல்ல, நள்ளிரவு 2 மணிக்கு கூட பெண் அங்கு செல்லலாம். அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கு வரவில்லை என்ற வாதத்தையும் முன்வைத்தனர். அதற்கும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் பதில் அளிக்கப்பட்டது." என்றார். படக்குறிப்பு,ஜிஷா கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் மற்றும் டிஎன்ஏ மாதிரி முடிவுகள் துல்லியமாகத் திரட்டப்பட்டது. நீதித்துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார். சிறைக்கு அழைத்து சென்ற போது குற்றவாளிகளில் ஒருவர் மீசையை முறுக்கிக் கொண்டு சைகை காண்பித்து சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்ட பெண் பயப்பட தேவை இல்லை. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின்படி கோவை பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குற்றச் செயல்கள் என்பது ஓர் அசாதாரண மனநிலை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் வெளியே வர முடியாது. பாதிக்கப்பட்ட பெண் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை" என்றார். விசாரணை அதிகாரி கூறுவது என்ன? இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான காவல் ஆய்வாளர் அர்ஜுன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "மொத்தம் 60 காவல்துறையினர் இந்த வழக்கில் பணியாற்றினர். இந்த வழக்கில் பல்வேறு சவால்களை சந்தித்தோம். குற்றம் நிகழ்த்தப்பட்டு எங்களுக்கு தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பெண்ணை காலை வரை தேடும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அந்த பெண்ணின் உடையை முதலில் கைப்பற்றிய போது அவரை உயிருடன் மீட்டுவிடுவோமா என்ற கவலை இருந்தது. பின்னர் குற்றம் நடந்த இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில்அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்து அவர் உடல் அளவிலும் மனதளவிலும் மீண்டு வந்த பின்னர் அவரிடம் புகார் பெறப்பட்டது. அதேபோல் குற்றவாளிகளை உறுதி செய்து பிடிக்க செல்லும் போது பதுங்கியிருந்த அவர்கள் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை பிடித்தாலும், குற்றவாளிகள் தப்ப முடியாதவாறு வலுவான ஆதாரங்களை திரட்டி ஒரு மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ததும் கடும் சவாலாக இருந்தது. இதுபோன்ற குற்றங்கள் புகார்களாக அளிக்கப்படுவதில்லை. இதனால் குற்றவாளிகள் துணிச்சலாக இதை செய்கின்றனர். இந்த தீர்ப்பு அதுபோன்ற குற்றவாளிகளுக்கு பாடமாக இருக்கும். பொதுமக்களும் விழிப்புணர்வோடு இதை அணுக வேண்டும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு கோவை மாணவி பாலியல் வன்கொடுமை - 125 நாட்களில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
-
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
நிராயுதபாணிக் கப்பல் என்ற தகவலை மறுத்தது அமெரிக்கா Mar 8, 2026 - 07:52 AM இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. குறித்த கப்பலானது ஆயுத மோதல் சட்டத்தின் கீழ் ஒரு செல்லுபடியாகும் இராணுவ இலக்காகும். எனவே, அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுளளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmh4fgqo0006356pjsispg9y
-
இன்று சர்வதேச மகளிர் தினம்
இன்று சர்வதேச மகளிர் தினம் Mar 8, 2026 - 06:55 AM பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்குமான சர்வதேச மகளிர் தினம் இன்று (08) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு கொண்டாட்டமாக மட்டுமன்றி, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு உலகளாவிய இயக்கமாகவும் பார்க்கப்படுகிறது. முதலாவது மகளிர் தினம் 1909 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், 1910 ஆம் ஆண்டில் ஜேர்மனிய செயற்பாட்டாளரான கிளாரா ஜெட்கின் என்பவரால் இது சர்வதேச தினமாக முன்மொழியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. பின்னர் 1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகப் பெயரிடப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தில் பிரதானமாக மூன்று நிறங்கள் பயன்படுத்தப்படுவதுடன், அது ஊதா, பச்சை மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களால் பிரதிபலிக்கப்படுகிறது. ஊதா நிறம் நீதி மற்றும் கௌரவத்தையும், பச்சை நிறம் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது. அதேபோன்று வெள்ளை நிறம் தூய்மையை அடையாளப்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இன்று சர்வதேச மகளிர் தினம்
-
ஈரான் மீதான தாக்குதல் - பாரிய எதிர்ப்புப் பேரணி
இலண்டனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கிப் பாரிய எதிர்ப்புப் பேரணி Mar 7, 2026 - 11:33 PM ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் கலந்துகொண்டுள்ள பலர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்தப் போராட்டமானது ஈரானிய ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒன்றல்ல என இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலண்டனில் அமெரிக்கத் தூதரகம் நோக்கிப் பாரிய எதிர்ப்புப் பேரணி
-
டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி
டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி Published By: Digital Desk 1 08 Mar, 2026 | 08:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பயணத்தை அடுத்து, கட்சிக்குள் நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரில்வின் சில்வா, தனது பயணம் தொடர்பான விவரங்களைக் கட்சியினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் இறுதியில், மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உடனடியாகத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் முதற்படியாக, இன்று ஞாயிற்றுகிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பெண்கள் தினக் கொண்டாட்டப் பேரணி, மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பியின் களம் இறங்கும் ஆரம்பப் புள்ளியாக அமைய உள்ளது. கடந்த சில காலங்களாக மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி தலைமையகம் மட்டுமன்றி, இந்தியாவிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என இந்தியாவிற்கும் ஏனைய தரப்பினருக்கும் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய செல்வாக்கு 20 வீதம் - 30 வீதம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளியாகும் கருத்துக்களால் கட்சித் தலைமை கவலையடைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவுகளின் போது பெலவத்தைக்குத் தெரியாத இந்த அதிர்வு, இப்போது நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்களால் உணரத் தொடங்கியுள்ளது. இதனைச் சரிசெய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 6-7 மாத காலப்பகுதிக்குள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றவும், பின்னடைவைச் சந்தித்துள்ள துறைகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, 'திருடர்களைப் பிடிக்கும்' பணிகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த அனைத்து நகர்வுகளும் இறுதியாக மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியே அமையப்போகிறது. எவ்வாறாயினும் மார்ச் 8 கொழும்பு மகளிர் பேரணி, ஜே.வி.பியின் பலத்தைக் காட்டும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி
- Today
-
வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்
விகாரை கட்டுவதுதானே தேசிய பாதுகாப்பு? காணிகளை விடுவித்தால் எப்படி விகாரைகள் கட்டமுடியும்!
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
பேசாமல் இலங்கையில் இவர்களுக்கு பீ ஆர் கொடுத்து ஈரான் மாலுமிகளை இலங்கை கடற்படையில் சேர்த்துவிடலாமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பேசாமல் நம்பிக்கை இல்லாத் தீரடானத்தை கொண்டு வர வேண்டியது தான்.காரனத்துக்கா பஞ்சம்.🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகமா வீட்ட வந்து சேர்ந்தாச்சு போல.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இப்போ கணிக்க கஸ்டம். சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன். மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன். வெறும் ஊகம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுதான் அவர்களுக்கு மிக அழுத்தத்தைக் குடுக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய போட்டி இந்தியாவிற்கு சார்பான ஒரு பக்க போட்டியாக இருக்கும் என அனைத்து இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் முன்னால் வீரர்களும் கூறுகிறார்கள். இப்பவே வெற்றியினை கொண்டாடுகிறார்கள், போட்டி உப்பு சப்பில்லாமல் போய்விடுமோ என கருதுகிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மிஞ்சி மிஞ்சி போனா 10% வாக்குகள் பெறுவார்களா? தற்போதய சூழ்நிலை எந்தளவு வாக்கு வீத சரிவினை ஏற்படுத்தும் 2% ? (10-2 = 8), கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதே அளவு வாக்குதான் விழுந்த்தது என நினைக்கிறேன்(8%).
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
நீங்கள் பிழைக்க தெரிந்த ஆள், பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொண்டு எங்களை இத்து போன கூட்டணியில் இணைத்துவிடப்பார்க்கிறீர்கள், தமிழ்நாட்டு வழக்கில் சொன்னால் உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா, அன்ட்ரேமார்க்கும் இல்லை உங்க காட்டிலை மழைதான்.🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்பாடா! இன்று இறுதிப் போட்டியை வீட்டில் இருந்தே live ஆகப் பார்க்கலாம் ✌️- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
அவரவர்க்கு சாதகமான செய்திகள் தமக்கு சார்பானவர்களை உயர்த்தியே கூறும். வளமான மத்திய கிழக்கில் வியாபார ரீதியில், நட்பாக புகுந்து, முழு வளத்தையும் அபகரிக்க நினைத்து, அந்த நாட்டை, வளத்தை, அழித்து, அரசியலை இரண்டுபடுத்தி அவர்களை எழுந்திருக்க விடாமல் அடித்து நொருக்கி ஏதிலிகளாக்கி விட்டு தாம் வந்த வழியே போய்விடுவார்கள். அவர்களுக்கு நன்றியில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பரிகாரமில்லை, தம்மை நிஞாயப்படுத்துவார்கள். அடுத்தவரின் வளங்களை அபகரிப்பது இல்லையேல் அழித்தொழிப்பது. அவர்களின் வளத்தால் பெற்ற ஆயுதங்களை அவர்களிலேயே பரீட்சிக்கிறார்கள். இது எந்த வகையில் நிஞாயம்? உலகம் முழுவதையுமே அழிவில் தள்ளியுள்ளார்கள். இவர்கள் அழிக்கப்படாதவரை ஏதோ ஒரு நாடு தொடர்ந்து இவர்களுக்கு இரையாகிக்கொண்டே இருக்கும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன். தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது…. இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன். வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது. பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.- உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
யாழ்களத்துக்கான ரஸ்ய தூதுவரும் @vasee …அவரது உதவியாளர் கூகிள் டிரான்சிலேட்டரும் ஒவர் டைம் செய்து உழைக்கிறார்கள் 😂. ஆனால் நம்ம கோமாளி செலன்ஸ்கி…புட்டின், டிரெம்பையே டீல் பண்ணியவர்… ஓபனுக்கு எல்லாம் பீச்சங்கையே காணும்😂… சதாம்…கடாபி…அசாத்…கமேனி வரிசையில் தானும் சேர ஆசைபடுகிறார் ஓபன் 😂. பிரச்சனை ஒண்டும் இல்லை செஞ்சிர்லாம்😂. பிகு ஈரானின் டிரோன்களை எதிர்க்க பல மில்லியன் பெறுமதியான பேறியட் ஏவுகணைகளை பாவித்து அவை கையிருப்பு தீரலாம் என்ற அச்சத்தில்… செலன்ஸ்கியிடம் டிரோன் எதிர்ப்பு டிரோன்களை கோரியது அமெரிக்கா, அரபு நாடுகள். #எரியுதடி மாலா #பேனை 80 ல வையி 😂😂😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இந்த விவகாரம் (விஜயின் குடும்ப விவகாரம்) த வெ க இனை தேர்தலில் பாதிக்கும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்து என்ன?- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
ஓம்…ஆனால் ஈராக், சிரியா, லிபியா போல ஆகக்கூடாது. அதுதான் எனது ஒரே யோசனை.- Yesterday
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய முன்னால் வீரர்கள் இந்தியா இப்போட்டியில் மிக இலகுவாக வென்றுவிடும் என கூறியுள்ளனர், இந்தியணியின் நம்பிக்கை உயர்வாகவுள்ளது. இவ்வாறான கருத்துக்களை பார்க்கும் போது இன்றைய இறுதி போட்டி ஒரு பக்க சார்பான (இந்திய) போட்டியாக மாறவாய்ப்புள்ளது போல காணப்படுகிறது. நியுசிலாந்து பார்வையாளர்களை ஏமாற்றி விடக்கூடாது, ஒரு தரமான கடும் போட்டியினை இந்தியாவிற்கு வழங்கவேண்டும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி நீங்கள் ஒன்றும் செய்ய தேவையில்லை. இதோ ஆதாரங்கள் இலங்கை vLexRATNAMMA v. RASIAH. இரெட்ணம்மா எதிர் இராசையா என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு - தாலி கட்டி இந்து முறை படி செய்த திருமணம், பதியப்படாவிடிலும், தம்பதிகள் கணவன்-மனைவியாக ஊரறிய வாழ்ந்திருப்பின் சட்ட வலுவுடையது என்கிறது. ஆனால் பொது விவாக சட்டதின் அடிப்படை கூறுகளான, தகாத உறவு, சிறார் மணம் போன்றவற்றை மீறும் எந்த கலாச்சார திருமணத்துக்கும் நீதி மன்றம் சட்ட வலு கொடுக்காது. மேலதிக தகவல்கள் கீழே. https://www.scribd.com/document/591706099/2-චාරිත-ර-නුකුල-විවාහය இந்தியா “சப்தபடி” எனும் 7 சம்பிரதாயங்களை பூர்த்தி செய்யும் இந்து திருமணம் சட்டபூர்வமானது எனவும், இதை நிரூபிக்க பதிவு தேவையில்லை ஆனால் விரும்பினால் அதையும் செய்யலாம் என இந்திய இந்து திருமண சட்டம் 1955 சொல்கிறது. Bhatt & Joshi AssociatesValidity of Hindu Marriage Customs and Rites Under Indian...Explore the legal validity of Hindu marriage customs under Indian law and the importance of ceremonial compliance.- ஈரானின் எதிர்காலத் தலைமை ஜனநாயக மற்றும் மதச்சார்பற்றதா என்பது குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை.
நெத்தன்யாகுவின் குடும்பம் புளோரிடாவில் உள்ளதாக கூறுகிறார்கள், உண்மை நிலவரம் தெரியாது. இந்த போரில் அமெரிக்க தரப்பு வெற்றி பற்றிய செய்திகள் பரவலாக ஊடக தரப்பில் வெளிச்சம் போட்டுக்காட்டும் விகிதத்துடன் ஒப்பிடும் போது போர் நீடிக்கும் கால அளவுகளை பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பாடாகவே உள்ளது, ஆனால் போர் வெற்றி ஈட்டப்படும் வரை தொடர நினைத்தால் அது அனுமனின் வால் போல நீண்டு போகும் அதனால் எந்த இலாபமு ஏற்படாது நட்டமே ஏற்படும். அதனால் ஈரான் அணுகுண்டு ஆற்றல் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது (முன்பும் இவ்வாறே கூறினார்கள்), கமேனி கொல்லப்பட்டுவிட்டார், ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகள் அழிக்கப்பட்டுவிட்டது (ஈரானிடம் தாக்குதலை நிறுத்த சொல்லி விட்டு) என கூறி போரினை முடித்து வைக்கலாம்.- அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
நல்லது ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் 😄 - உக்ரைனுக்கு €90 பில்லியன் ஐரோப்பிய ஒன்றிய கடனைத் தடுப்பதை உக்ரைனிய இராணுவம் "ஒரு குறிப்பிட்ட நபர்" என்று அழைக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.