All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணியில் பர்ரும் நிசங்கா மட்டும் தான் சிறப்பாக மட்டையால் அடிக்கிறார்.....................
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
2006–2009 காலகட்டத்தில், குறிப்பாக இறுதி கட்டத்தில் நடைபெற்ற Sri Lankan Civil War ன் போது, அமெரிக்காவைவிட ரஷ்யா இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவியை அதிகமாக வழங்கியது. ஆனால் முழுப் படம் சற்று விரிவானது. 🇷🇺 ரஷ்யா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது. United Nations இல் இலங்கைக்கு தூதரக ஆதரவு வழங்கியது, குறிப்பாக இலங்கை மீது மேற்கத்திய நாடுகள் முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டது. சீனாவுடன் சேர்ந்து, இந்தப் போர் ஒரு உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தது. 🇺🇸 அமெரிக்கா Liberation Tigers of Tamil Eelam (LTTE) அமைப்பை 1997 முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் சில பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் நுண்ணறிவு ஆதரவும் வழங்கியது. ஆனால் போரின் இறுதி கட்டத்தில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து பொதுவாக விமர்சித்தும், தற்காலிக சமாதானம் மற்றும் விசாரணைகளை வலியுறுத்தியும் இருந்தது. மொத்த மதிப்பீடு 2008–2009 இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது நேரடி இராணுவ உதவி என்ற கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவைவிட ரஷ்யா (மேலும் சீனாவும்) அதிக ஆதரவு வழங்கியது. மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மிகவும் தாக்கம் செலுத்தியவை. 2022 முதல் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் முதன்மையாக ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க எடுத்த முடிவின் விளைவாகும். 2022 பிப்ரவரியில் Russia, Ukraine மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாடே அதனால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகளுக்கும் கட்டமைப்பு சேதங்களுக்கும் நேரடி காரணங்களாக உள்ளன. அமெரிக்காவின் பங்கு என்ன? United States உக்ரைனை ஆக்கிரமிக்கவில்லை. இராணுவ உதவி (ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவு தகவல்) நிதி உதவி ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் (sanctions) தூதரக ஆதரவு ஆகியவற்றினை அது வழங்கியது இந்த உதவி உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மறுபுறம், நேட்டோ விரிவாக்கமும் அமெரிக்காவின் புவியியல்-அரசியல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது: புவியியல்-அரசியல் பதற்றங்கள் சூழலை உருவாக்கியிருக்கலாம். ஆனால் போர் தொடங்கும் இறுதி முடிவு ரஷ்யா தலைமையால் எடுக்கப்பட்டது. நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியதாக யாராவது நினைத்தாலும், அதனால் தாக்குதலைத் தொடங்கிய நாட்டின் பொறுப்பு வேறு நாட்டிற்கு மாற்றப்படாது. “அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக உக்ரைன் விலை செலுத்துகிறதா?” உக்ரைன் ஒரு மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறது, காரணங்கள்: அது ஒரு சுயாட்சியுடைய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கியிருப்பது ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கியமான நிலைப்பகுதியாக இருப்பது வரலாற்று தொடர்புகள் ரஷ்யாவுடன் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது ஆனால் உடனடி மற்றும் நேரடி அழிவுகளுக்கான காரணம் ரஷ்யா தொடங்கிய போரே — அமெரிக்காவின் “ஆதிக்கம்” அல்ல.
-
அன்பு ௐ
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துகள் !!! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி வீரர்கள் நல்ல தொடக்கம்...............175ரன்ஸ் அடிக்க கூடும்..................
-
அன்பு ௐ
வணக்கம் அன்பு உறுப்பினர். உருத்திரன் ஒரு தமிழ் நாமம் ஆகும். எல்லாரும் தான் அன்பு சிவபெருமான். அதேதான் நமசிவாயம். அப்பன் திரு தாள் வாழ்க. அம்மன் திரு தாள் வெல்க. திருச்சிற்றம்பலம்.
-
நமசிவாயம் ௐ முருகா started following அன்பு ௐ
- Today
-
இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்
அப்ப… இன்னும், 1000 புதிய விகாரைகள் கட்டப்பட உள்ளது.
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
கல்விசார் சமூக அளவில் அதிகளவில் சர்ச்சைக்குள்ளான கன்ஸின் மனித இயல்பு யதார்த்த கொள்கை இரஸ்சிய உக்கிரேன் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அது இலகுவாக பாமரர்களிடையே கருத்துருவாக்கம் ஏற்படுத்த உதவுவதாக இருப்பதே.
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு
பட்டம் பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் ......! 👍- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வியாழன், 19 பெப்ரவரி 2026 06:52 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகை தந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர். இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். https://jaffnazone.com/news/55070- விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு February 19, 2026 9:45 am ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எவ்வாறாயினும், இராணுவம் அவர்களை அழிக்க விரும்பியதாகவும், அவர்கள் சரணடைந்திருந்தால், பிரபாகரன் இப்போது வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய வாய்ப்பளிக்கும் வகையில், மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதியுடன் மே 17, 2009 அன்று காலை கலந்துரையாடியதாக பொன்சேகா கூறினார். விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய அனுமதிப்பது குறித்து, மே 17, 2009 அன்று மாலையில் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருக்கும் சவேந்திர சில்வாவிற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு தொலைபேசி உரையாடலின் காணொளியையும் அவர் இதன் போது வெளியிட்டிருந்தார். தொலைபேசி உரையாடலை விளக்கிய பொன்சேகா, ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதிக்க கலந்துரையாடினர். எனினும், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததாகவும், ஆனால் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைய விரும்பியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். எனினும், ராஜபக்சக்கள் விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் சரணடைவதை எதிர்த்ததாகவும், அவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும் என்றும் விரும்பியதாகவும் பொன்சேகா குறிப்பிட்டார். இருப்பினும், விடுதலைப் புலிகள் இராணுவத்திடம் சரணடைய மறுத்ததால் அந்த திட்டம் தோல்வியடைந்தன. விடுதலைப் புலிகள் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைய ஒப்புக்கொண்டிருந்தால், பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். பிரபாகரன் வடக்கின் முதலமைச்சராக இருந்திருப்பார். குறிப்பிட்ட நாளில் தான் சீனாவில் இருந்ததாகவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அசர்வதேச மன்னிப்புச் சபை உடனாக மேற்படி பேச்சுவார்த்தைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொக்சேகா குறிப்பிட்டார். மே 17, 2009 அன்று கலந்துரையாடல் நடந்தபோது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் 400 மீட்டர் பரப்பளவில் சுற்றிவளைக்கப்பட்டனர். அடுத்த சில மணி நேரங்களுக்குள் தாம் உயிரிழந்துவிடுவோம் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்ற விரும்பவில்லை, மாறாக அவர்களை அழிக்கத் திட்டமிட்டிருந்தது என்று பொன்சேகா கூறினார். ராஜபக்சவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், மே 19, 2009 அன்று இராணுவத்தால் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிக்க முடிந்தது என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rajapaksa-trying-to-force-ltte-leaders-to-surrender-fonseka-alleges/- நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி!
நைஜீரியாவில் சுரங்கத்தில் நச்சு வாயு கசிந்து 37 தொழிலாளர்கள் பலி! Published By: Digital Desk 1 19 Feb, 2026 | 12:26 PM நைஜீரியாவின் மத்திய பகுதியின், பிளாட்டோ மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாசித்த சுமார் 37 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு ஈய சுரங்கத்திற்குள் அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்கள்; கனிமங்களை எடுக்கச் சென்றபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. அங்கு தேங்கியிருந்த கனிமங்களிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த 37 பேர் தவிர, சுமார் 25ற்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, நைஜீரியாவின் சுரங்கத்துறை அமைச்சர் டெலே அலகே, இந்தச் சம்பவம் நடந்த சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தை அந்தநாட்டு பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில்கள் மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அரசின் கண்காணிப்பு இல்லாததால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த வருடம் நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 18 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239034- வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம்
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி நியமனம் 19 Feb, 2026 | 11:20 AM வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/239032- கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா பெப். 27, 28இல்! - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல் 19 Feb, 2026 | 12:12 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் கலந்துகொள்வதற்காக தேவாலயத்துக்கு வருகைதரவிருக்கும் பொதுமக்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து வசதி, உணவு விநியோகம் முதலான ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவானது யாழ். மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணம், பிரதேச செயலகம் - நெடுந்தீவு, பிரதேச சபை - நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் ஊடாக பொதுமக்களுக்கு அறியத் தருவதாவது : 2026.02.27ஆம் திகதி காலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27.02.2026ஆம் திகதி காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 ஆகும். கச்சதீவுக்கு குழுவாக / தனியாக படகில் வருகை தரும் பக்தர்கள் அவர்களது முழுப் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் அவர்கள் பயணிக்கும் படகு இலக்கம், படகின் வகை, படகோட்டியின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை இரு பிரதிகளில் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2026.02.27ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கச்சதீவு உற்சவத்தில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு 28.02.2026ஆம் திகதி காலை உணவு மட்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் தங்களது தேவைக்கான உணவினை கொண்டுவரமுடியும் என்பதுடன் அப்பிரதேசத்தில் உணவினை சமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாக உள்ளதால் மதுபானம் கொண்டு செல்லுதல், பாவித்தல் மற்றும் புகைப்பிடித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239035- எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம்
எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை - யாழ். பல்கலைச் சமூகம் போராட்டம் 19 Feb, 2026 | 12:34 PM (எம்.நியூட்டன்) எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்ய வேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (19) ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் https://www.virakesari.lk/article/239038- லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள்
லண்டனில் சிறுமிகளைக் குறிவைக்கும் கொடூர கும்பல்கள் : அரங்கேறும் மனிதநேயமற்ற சம்பவங்கள் 19 February 2026 லண்டனில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளையும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இளம்பெண்களையும் குறிவைத்து, அவர்களைப் பாலியல் ரீதியாகவும் குற்றச் செயல்களுக்காகவும் ஒரு கும்பல் சுரண்டி வருவதை பிபிசி (BBC) புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. தனிமையில் இருக்கும் அல்லது வறுமையில் வாடும் சிறுமிகளை இனங்கண்டு, அவர்கள் மீது அன்பு காட்டுவது போலவும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக்கொடுத்தும் இந்தக் கும்பல்கள் வலைவிரிக்கும். பின்னர் அவர்களைத் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சித்திரவதை செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல், ஆயுத வியாபாரம் மற்றும் அலைபேசித் திருட்டு போன்றவற்றில் இச்சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கும்பல்களின் அதிகாரப் படி நிலையில் இவர்கள் மிகக் கீழ் மட்டத்தில் (Lowest Rung) வைக்கப்படுகின்றனர். கும்பல்கள் வாங்கிய போதைப்பொருள் கடனுக்காக அல்லது கும்பல் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக இச்சிறுமிகள் பல ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். லண்டனில் வெள்ளை இனத்தவர் உட்பட பல்வேறு இனப் பின்னணியைக் கொண்ட குழுக்கள் இத்தகைய கொடூரங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களைச் சுரண்டியமை வெள்ளை இன ஆண்கள் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்ற சில தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் தெற்காசிய ஆண்களால் பாலியல் தொழிலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். லண்டன் காவல்துறையின் (Met Police) தகவலின்படி, தற்போது குறைந்தது 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களால் சுரண்டப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2,000 சிறுவர் சுரண்டல் தொடர்பான வழக்குகள் பதிவாகின்றன. இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள லண்டன் நகர முதல்வர் சாதிக் கான், இத்தகைய அருவருக்கத்தக்க கும்பல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி பெற்றுத் தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். https://hirunews.lk/tm/447444/violent-gangs-targeting-girls-in-london-inhumane-incidents-unfolding- இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம்
இலங்கையில் அங்கீகரிக்கப்படாத 1,000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க விசேட திட்டம் 19 February 2026 இலங்கையில் இதுவரை அங்கீகரிக்கப்படாத தொல்பொருள் பெறுமதிமிக்க சுமார் 1,000 இடங்களைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க Xinhua ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக வரைபடமாக்குவதற்கான விரிவான ஆய்வுகள் முன்னெடுக்கப்படும். இந்தத் திட்டம் வெறும் அரசாங்கக் கண்காணிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அந்தந்தப் பகுதிகளில் வாழும் உள்ளூர் சமூகங்களின் நேரடிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். அடையாளம் காணப்படும் வரலாற்றுச் சின்னங்களைப் பராமரிக்கவும், அவற்றைச் சிதைவுகளிலிருந்து பாதுகாக்கவும் உள்ளூர் மட்டத்தில் 'சமூகப் பாதுகாப்புக் குழுக்கள்' அமைக்கப்படவுள்ளன. நாட்டின் கலாசார மரபுகளை, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கில், இனம் காணப்படாத இந்தத் தொல்பொருள் தளங்களுக்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். https://hirunews.lk/tm/447403/special-project-to-protect-1000-unrecognized-archaeological-sites-in-sri-lanka- பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்!
பாராளுமன்றத்தில் அம்பலமான எம்.பி.க்களின் கொடுப்பனவுகள்! பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்று (19) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தத் தகவல்களை வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 54,285 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. மாதாந்த உபசரிப்புக் கொடுப்பனவாக 1,000 ரூபா செலுத்தப்படுகிறது. மாதாந்த சாரதிக் கொடுப்பனவாக 3,500 ரூபா வழங்கப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் ஊடாக சாரதி ஒருவரைப் பெற்றுக்கொண்டால், குறித்த உறுப்பினருக்கு சாரதிக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொலைபேசிக் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அலுவலகக் கொடுப்பனவு ஒரு இலட்சம் ரூபாவாகும், அத்துடன் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபா செலுத்தப்படுகின்றது. நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும், குழுக்கூட்டக் கொடுப்பனவாக நாளொன்றுக்கு 2,500 ரூபாவும் செலுத்தப்படுவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத நாட்களில் நடைபெறும் குழுக்கூட்டங்களுக்காக நாளொன்றுக்கு 2,500 ரூபா வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு உள்ள தூரத்தை அடிப்படையாகக் கொண்டும், தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கு 419.76 லீற்றர் டீசலை அடிப்படையாகக் கொண்டும், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று சந்தையில் உள்ள ஒரு லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட விலைக்கு அமைய எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlt1xr7z000r356n5kj7ulbh- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து இலங்கை அணியுடன் மோதிய இருதரப்பு ரி 20 மூன்று போட்டிகளிலும் வென்றிருந்தது, அந்த 3 போட்டிகளும் பல்லேகலவிலேயே நடந்திருந்தது, இலங்கை இங்கிலாந்து சுப்பர் 8 போட்டியும் அதே பல்லேகலவிலவிலேயே நடைபெறவுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் சமீரா, ரசீட், பத்திரன தலா 5 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர், மென்டிஸ், பான்டன், பட்லர் அதிக ஓட்டங்களை பெற்றுள்ளனர்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கும் எனது இந்திய நண்பர்கள் ஒவ்வொருவரும் பெரிய கிளப்புகளில் விளையாடுவதாக கூறுவார்கள், அவர்கள் கூறும் அணிகளின் பெயர் பிக்பாஸில் விளையாடும் அணியின் பெயரில்; இருக்கும் ஆச்சரியமாக இருக்கும் (அப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது). எமது வீட்டிற்கு ஒரு 500 மீட்டர் தொலைவில் ஒரு பயிற்சி மைதானம் உள்ளது, அந்த வழியாக செல்லும் போது பெரும்பாலும் இந்திய ஆண்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு பிரத்தியேக வகுப்புக்களையும் ஒழுங்கு செய்கின்றார்கள்.- யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
இந்தத் திட்டத்தை… வாய்ப் பேச்சுடன் காலம் கடத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். எதிர்காலத்தில் வேறு அரசாங்கங்கள் ஆட்சி அமைக்கும் பட்சத்தில்… தமிழர் பகுதியில் இதனை தொடர்ந்து கட்டி முடிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கையுடனான ரி 20 போட்டித்தொடரில் இங்கிலாந்து சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், உலக கிண்ண குழுநிலை போட்டியில் இங்கிலாந்து மிகவும் கஸ்ரப்பட்டார்கள் மறுவளமாக இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டது, சுப்பர் 8 இல் இலங்கை வெல்வதற்கு வாய்ப்புள்ளதா?- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
மக்களின் பணம் என்பதே பொருத்தமான தலைப்பாக இருக்கும் என கருதுகிறேன்.- புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்: 'போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி.' செனிகா பிப்ரவரி 17 எழுதியவர் புகழ்பெற்ற பிரஷ்ய ஜெனரலும் இராணுவக் கோட்பாட்டாளருமான கார்ல் வான் கிளாஸ்விட்ஸ், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி" என்று ஒருமுறை பிரபலமாகக் கூறினார். இந்த சக்திவாய்ந்த மேற்கோள், போர் என்பது அரசியலிலிருந்து ஒரு தனி நிறுவனம் அல்ல, மாறாக அதன் நீட்டிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியது, இது இராஜதந்திர மற்றும் அமைதியான நடவடிக்கைகள் விரும்பிய விளைவுகளை அடையத் தவறும் போது பயன்படுத்தப்படுகிறது. நேரடியான விளக்கத்தில், கிளாஸ்விட்ஸ் போர் மற்றும் அரசியலின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்துகிறார், இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவை எடுத்துக்காட்டுகிறார். போர், அதன் அழிவுகரமான தன்மை இருந்தபோதிலும், இறுதியில் நாடுகள் தங்கள் அரசியல் நோக்கங்களைத் தொடர பயன்படுத்தும் ஒரு கருவி என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதால் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், இந்த மேற்கோளை ஆழமாக ஆராய்வது, மோதலின் தன்மை குறித்து புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத தத்துவக் கருத்துகளின் ஒரு பகுதியைத் திறக்கிறது. வரலாறு முழுவதும் தத்துவஞானிகளால் ஆராயப்பட்ட மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய கருத்து அத்தகைய ஒரு கருத்தாகும். இந்த சூழலில், போரை அரசியலின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் உள்ள முரண்பட்ட தூண்டுதல்களின் வெளிப்பாடாகவும் காணலாம். அதிகாரம், ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, இரக்கம், பச்சாதாபம் மற்றும் ஒத்துழைப்புக்கான திறன் ஆகிய அனைத்தும் போருக்கு வழிவகுக்கும் முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்கின்றன. மனித இயல்பின் கண்ணாடி மூலம் போரை பார்ப்பதன் மூலம், நமது நடத்தையில் உள்ளார்ந்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை, தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய தத்துவக் கருத்துடன் கிளாஸ்விட்ஸின் மேற்கோளை ஒப்பிட்டு வேறுபடுத்துவது போரின் தன்மை பற்றிய ஒரு அடுக்கு புரிதலை வெளிப்படுத்துகிறது. கிளாஸ்விட்ச் மோதலின் மூலோபாய மற்றும் அரசியல் பரிமாணங்களில் கவனம் செலுத்துகையில், தத்துவக் கண்ணோட்டம் விவாதத்திற்கு மிகவும் நுணுக்கமான மற்றும் உள்நோக்கக் கூறுகளைச் சேர்க்கிறது. மோதல்களைத் தூண்டுவதில் மனித இயல்பின் பங்கை ஒப்புக்கொள்வதன் மூலம், போர் என்பது அரசியலின் ஒரு கருவி மட்டுமல்ல, தனிநபர்களாகவும் சமூகங்களாகவும் நமது ஆழ்ந்த ஆசைகள் மற்றும் அச்சங்களின் பிரதிபலிப்பாகும் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த சுருக்கமான பார்வை, போரின் தார்மீக, நெறிமுறை மற்றும் இருத்தலியல் தாக்கங்களைக் கருத்தில் கொள்ள நம்மை அழைக்கிறது, போர்க்களத்திலும் அரசியல் அரங்கிலும் நமது செயல்களுக்கு அடித்தளமாக இருக்கும் அடிப்படை நோக்கங்கள் மற்றும் மதிப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது. முடிவில், கார்ல் வான் கிளாஸ்விட்ஸின் மேற்கோள், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி", போருக்கும் அரசியலுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. இருப்பினும், மனித இயல்பின் இரட்டைத்தன்மையின் லென்ஸ் மூலம் பார்க்கும்போது, இந்த மேற்கோள் ஆழமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, மோதல் பற்றிய நமது புரிதலை வடிவமைக்கும் சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ள நம்மை சவால் செய்கிறது. போரின் தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் போரின் ஆழமான தாக்கத்தைப் பற்றி சிந்திக்க உதவும் ஒரு வளமான மற்றும் நுணுக்கமான முன்னோக்கைப் பெறுகிறோம். கிளாஸ்விட்ஸின் வார்த்தைகள் இன்றும் நம்முடன் எதிரொலிக்கின்றன,போர் மற்றும் மனித இயல்பின் நீடித்த உண்மைகளையும் நீடித்த மர்மங்களையும் இடைநிறுத்தி சிந்திக்கத் தூண்டுகிறது. The Socratic MethodKarl Von Clausewitz: 'War is the continuation of politics...War is the continuation of politics by other means. Karl Von Clausewitz, a renowned Prussian general and military theorist, once famously stated, "War is the continuation of politics by other means- டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
இந்தியனுக்கு சர்வதேச அளவில் நிகழ்வுகளை நடத்தக் கூடிய.. பொறுப்பான குணம் அறவே இல்லை. எல்லாவற்றிலும் ஊழல், களவு, ஏமாற்று வேலைகளை செய்வது… அவர்களின் இரத்தத்தில் ஊறிப் போனது. இந்தக் குணங்கள் நிச்சயமாக அரசியல்வாதிகளிடம் இருந்து தொற்றி இருக்க வேண்டும். அது மாறி நல்ல குணங்கள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் தற்போது அறவே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில்… வீரர்கள் தங்குவதற்கான வீடுகளில்… தண்ணீர் இணைப்புகள் சரியாக கொடுக்கப் படவில்லை, கட்டிலில் பழைய மெத்தைகளை போட்டு இருந்தார்கள் என்று பல முறைப்பாடுகள். போதாக் குறைக்கு அந்த வீடுகளில் பாம்புகளின் நடமாட்டமும் இருந்ததாம். இந்தியனுக்கு…. சினிமாவையும், கிரிக்கெட்டையும் தவிர உலகில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றது… அதற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லை. - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.