All Activity
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதுதான் தெளிவாக சொன்னேனே… தனி மடலில் தாக்குதலை ஒருங்கிணைத்து… அவர்களை சீண்டி… நிர்வாக பார்வைக்குள் அல்லது நடவடிக்கைக்கு உள்ளாக்கி… வெறுப்பேத்தி கலைக்கும் கலை… அவர்கள் போன பின்…அவர்களை நாம் கலைக்கவில்லை, நிர்வாக கொடுமையில் போனார்கள் எனும் plausible deniability 😂. ஜஸ்டீன் அண்ணா எப்படி இந்த மாபியா, ஆட்களின் வாயை மூடும் என்பதை ஆறு படிகள் ஆக விபரித்து ஒரு பதிவு கூட போட்டார். ஆனால் காலம் வலியது… அது எப்போதும் ஒரே போல் இராது… அன்று இப்படி ஆடிய பலர் இன்று தம் தவறை உணர்ந்து திருந்தி அருமையான கருத்தாளராக மிளிர்கிறனர்.. இன்னும் சிலர்…மிக மோசமான ரோவின் புரட்டுகளை காவி வந்து அதனால் அவர்கள் மீதே சந்தேகம் வலுவாக படிந்து விட, அதில் இருந்து மீள வழியின்றி வருகையை குறைத்து விட்டனர்.. இன்னும் சிலர் - பெண்களை இரெண்டாம் தர, குறை-மனிதர்கள் போல் எழுதியவர்கள், அவர்களுக்கு மணமே விலங்காகி போனது. இன்னும் சிலர், தாம் விரித்த நிர்வாக நடவடிக்கை வலையில் தாமே வீழ்ந்து உளலுகிறனர்…. காலம் ஒரு விசித்திரமான ஆனால் நிச்சயமான நீதிபதி.
- Yesterday
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
ஏவுகணைகளை ஈரான் இப்போதும் ஏவுவதாகவே தகவல் வருகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை எப்போது அமுலுக்கு வருகின்றது என தெரியவில்லை.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மிகச் சிறந்த அரசியல் கருத்துக்களும் அரசியல் கண்ணோட்டமும்...... இன்னும் எழுதுங்கள். எழுத்துக்களின் வீரியம் தான் நாளைய சந்ததிகளுக்கு எடுத்து செல்லப்படும்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
ஒரு ஈரான் வெளிநாட்டு கொள்கை நிபுணரின் கருத்துப்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார், ஏனெனில் அவரிடம் “சிறந்த விருப்பங்கள் எதுவும் இல்லை”. அல்ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், க்வின்சி இன்ஸ்டிட்யூட்டின் ட்ரிட்டா பார்சி கூறியவை: - அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்த பெரிய அளவிலான போர் ஈரானுடன் தொடங்கினால், அது டிரம்பின் அதிபர்துவத்தையே சிதைக்கும் என்று அவர் கூறினார். - ஈரானின் எரிசக்தி வளங்கள் அல்லது மின்நிலையங்களை தாக்கினால், ஈரான் GCC நாடுகளை எதிர்த்து தாக்கும்; இதனால் தற்போதையதை விட மிகவும் மோசமான எரிசக்தி நெருக்கடி உருவாகும் என்று அவர் விளக்கினார். - அதனால், டிரம்ப் இந்த நிலைமையிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். - அவர் காலை வெளியிட்ட கடுமையான எச்சரிக்கைகள், மாலையில் எட்டப்படும் ஒப்பந்தம் “அவரது நிபந்தனைகளில்” நடந்தது போல காட்டுவதற்கான அரசியல் நாடகம் மட்டுமே என்று பார்சி கூறினார். - ஆனால் உண்மையில், பேச்சுவார்த்தைகள் ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அவரது சொந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது; அது மிகவும் நியாயமான திட்டம் என அவர் கூறினார். https://www.aljazeera.com/news/liveblog/2026/4/7/iran-war-live-trump-warns-of-devastating-attacks-as-deal-deadline-nears
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
யாழ்கள திடீர் முல்லாக்களை விட்டு விட்டீர்கள் 😂. இவர்களை எல்லாம் ஈரான் கணக்கில் எடுப்பது கூட இல்லை. அவர்கள் சன்னி முஸ்லீம்களை முஸ்லீமாகவே கருதுவது இல்லை.
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
பூமிக்கு அச்சுச் சாய்வு (தற்போது ~23.5°) இல்லையென்றால், உயிரினங்களும் காலநிலையும் வியத்தகு முறையில் வித்தியாசமாக இருக்கும்: பருவங்கள் இருக்காது பூமியின் ஒவ்வொரு இடத்திலும் ஆண்டு முழுவதும் ஒரே பகல் நேரமும் சூரியக் கோணமும் இருக்கும். வசந்தம், கோடை, இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலம் ஆகியவை முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். நிரந்தர காலநிலை மண்டலங்கள் வெப்பமண்டலங்கள் நிரந்தரமாக வெப்பமாகவும், துருவங்கள் நிரந்தரமாக உறைந்தும், மத்திய அட்சரேகைகள் நிலையான, மிதமான வெப்பநிலையில் இருக்கும். வானிலை நாளுக்கு நாள் மாறுபடும், ஆனால் அதை இயக்கும் பருவகால சுழற்சி இருக்காது. பலவீனமான காற்று மற்றும் கடல் நீரோட்டங்கள் பருவங்கள் வளிமண்டல மற்றும் கடல் சுழற்சியின் ஒரு முக்கிய இயந்திரமாகும். கோடை மற்றும் குளிர்கால அரைக்கோளங்களுக்கு இடையிலான அந்த வெப்பநிலை வேறுபாடு இல்லாமல், உலகளாவிய காற்று முறைகளும் கடல் நீரோட்டங்களும் பலவீனமாகவும் மேலும் நிலையானதாகவும் இருக்கும் — இது கிரகத்தைச் சுற்றி வெப்பம் விநியோகிக்கப்படும் விதத்தை அடிப்படையாக மாற்றும். துருவப் பகுதிகள் இருட்டாகவும்/ஒளியாகவும் இருக்கும் தற்போது, இந்தச் சாய்வு துருவங்களுக்கு கோடையில் 24 மணி நேர தீவிர பகல் நேரத்தையும் குளிர்காலத்தில் 24 மணி நேர இரவு நேரத்தையும் அளிக்கிறது. சாய்வு இல்லாமல், துருவங்கள் நிரந்தரமான அந்திப்பொழுதில் இருக்கும் — சூரியன் ஆண்டு முழுவதும் அடிவானத்தைத் தொட்டுக்கொண்டே இருக்கும், ஒருபோதும் முழுமையாக உதிக்கவோ அல்லது மறையவோ செய்யாது. உயிரினங்கள் மீதான பெரும் தாக்கம் பெரும்பாலான தாவரங்கள் பூப்பதற்கும், காய்ப்பதற்கும், மற்றும் உறக்க நிலைக்குச் செல்வதற்கும் பருவகாலக் குறிப்புகளை (பகல் நீளம், வெப்பநிலை மாற்றம்) சார்ந்துள்ளன. பல விலங்குகள் இடம்பெயர்வு, குளிர்கால உறக்கம் மற்றும் இனப்பெருக்க சுழற்சிகளுக்குப் பருவங்களைச் சார்ந்துள்ளன. பூமியில் உள்ள உயிரினங்கள் இந்தச் சாய்வைச் சுற்றியே பரிணாம வளர்ச்சி அடைந்தன — அது இல்லாதிருந்தால் முற்றிலும் மாறுபட்ட பரிணாம உத்திகள் தேவைப்பட்டிருக்கும், மேலும் தற்போதுள்ள பல உயிரினங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. முரண்பாடாக, பருவங்கள் இல்லாதது பூமியை பெருமளவு வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாமல் ஆக்கக்கூடும். துருவங்கள் ஆண்டு முழுவதும் இன்னும் குளிராகவும், பனியில் உறைந்தும் இருக்கும் (பனியை உருக்க கோடைக்கால வெப்பம் இருக்காது), அதே நேரத்தில் வெப்பமண்டலங்கள் பருவகால நிவாரணம் இல்லாமல் தொடர்ந்து வெப்பமாக இருக்கும், இது கிரகத்தின் வாழக்கூடிய பகுதியைச் சுருக்கக்கூடும். சுருக்கமாக, பூமியை இன்றுள்ள ஆற்றல்மிக்க, உயிர்வளம் நிறைந்த கிரகமாக மாற்றும் முக்கியக் காரணிகளில் ஒன்று இந்தச் சாய்வு ஆகும். நன்றி கிளோட் ஏ ஐ
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
உங்கள மாதிரி யூத்களை(தெரிஞ்ச ஆக்களை) யாழ்களத்திலை இறக்கி வெற்றிவாகை சூடலாம் எல்லோ? 👈 புதிய சிந்தனைகள்,புதிய கருத்துக்கள்,புதிய திட்டங்கள் எங்கும் எதிலும் வரவேற்கப்படும்.❣ பூமர் அங்கிள்களுடன் மோதி கருத்தெழுதி பட்டங்கள் பச்சை புள்ளிகள் வாங்குவது...பின்னர் அவர்களை யாழ்களத்திலிருந்து தூக்கவேண்டும் போல் கருத்துக்களை வைப்பது.....😋 தூரம் அதிகமில்லை.😎
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இந்திய இலங்கையில் உள்ள முஸ்லிம்ஸ் மற்றும் ஆசியர்கள் உசுப்பேத்தல்களையும் மீறி ஈரான் போர் நிறுத்தத்திற்கு வந்தது ஆச்சரியம்
-
கருத்து படங்கள்
- சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
ஆம். இதை தெளிவாக விளக்கும் ஒரு வீடியோ உள்ளது. தேடி இணைக்கிறேன்.- சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
அந்த ஆசிரியர் என்னோடு மோதல் போக்கை தொடர்ச்சியாக கடைப்பிடித்தார், பூமி சூரியனை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றுகிறது, பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் உருவாகிறது, புமி தன்னை தானே சுற்றிய வண்ணம் சூரியனை சுற்றுகிறது, பூமி சூரியனை சுற்ற ஒரு வருடம் எடுக்கும், அவ்வாறாயின் பூமியின் வட்டப்பாதையில் முதல் அரைப்பகுதி பூமி இடது புறம் (இடது அல்லது வலது சரியாக தெரியவில்லை) 23.5 பாகை சரிந்திருக்கும் அப்போது சூரியனுக்கு வட அரைக்கோளம் (வட அரைக்கோளம் அல்லது தென்னரைக்கோளம் சரியாக தெரியவில்லை) சூரியனுக்கு அண்மையாக இருக்கும் (நேராக ஒளிக்கறைகள் விழும்) இங்குதான் அந்த 23.5 பாகை வருகிறது) அதே நேரம் தென்னரைக்கோளம் தொலைவாகவும் சூரிய ஒளி சரிந்து வரும், இதே போல அடுத்த அரை வட்டத்தில் இதற்கு எதிர்மறையாக நிகழும்.- அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
மேஹ்ர் நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட அறிக்கையின் படி, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாகிஸ்தான் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் உருவான இரண்டு வார தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்: • இந்த ceasefire ஒப்பந்தம், ஈரானின் புதிய உச்சத் தலைவர் ஆயத்துல்லா மொஜ்தபா காமெனெய் அவர்களின் அனுமதியுடன் எட்டப்பட்டது. • இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு ஒரு “வெற்றி” என அவர்கள் விவரித்துள்ளனர். • நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாதில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Al JazeeraIran accepts ceasefire after Trump says it will pause bom...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.- சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
ஓம் அது தான் இங்கிலாந்தில் இப்போது வசந்தம் தொடங்கிய போது அவுஸ்ரேலியாவில் இலையுதிர் காலம் தொடங்கியதற்கும் காரணம்- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அது என் கண்களில் படவில்லை. முடிந்தால் தயவு செய்து இணைத்து விடுங்கள். 🙏 ஜீவன் சிவா யாழை விட்டு வெளியேறுவதற்கு வேறு காரணங்கள் உண்டு. யாழ்களம் எழுத்துக்களால் ஆன கருத்துக்களம். இங்கே ஆயுதங்கள் அதாவது கொட்டன் பொல்லுகள் பாவித்து சக யாழ்கள உறவுகளை வெளியேற்ற முடியாது.கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல வேண்டும். முடியாது விட்டால் பழிகளை மற்றவர் மீது போடுவதும் ஒரு வித கருத்து பற்றாக்குறையே... யாழ்களம் புதிய சட்ட ரீதியாக கொண்டுவந்த விதிகளின் பின்னர் கற்பகதரு இங்கே கருத்து எழுதுவதை நிறுத்தி விட்டார்.மற்றும் படி விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை விமர்ச்சித்தவர்களில் இவரும் ஒருவர். கற்பகதரு முன்னர் வேறு பெயரில் எழுதியவர். ஏதோ காரணுங்களுக்காக தன் பெயரை மாற்றிய சீமான். கருத்துக்களை கருத்தால் வெல்ல முடியாமல் போனவர்களில் இவரும் ஒருவர். பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.👈 அர்ஜுன் நல்ல எழுத்தாளர்தான் மாற்றுக்கருத்தில்லை. பல கருத்தாடல்களில் யாழ்கள சட்ட திட்டங்களை மதிக்காமல் கருத்தெழுதியதால் அவர் எழுதும் கருத்துக்கள் நிர்வாகத்தின் பரிசீலனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும் எனும் அறிவுறுத்தல் வந்த பின்னரே தனது எழுத்துக்களை யாழ்களத்தில் நிறுத்தினார். அதன் பின்னனும் அவரது முக்கியமான பேட்டி ஒன்று யாழ்களத்தில் இணக்கப்பட்டது.அதற்கும் பலர் கருத்து எழுதியிருந்தார்கள். அவர் யாழ்களத்தை விட்டு விலக்கக்கூடாது என்பதில் நான் தீவிரமாக இருந்தேன்.இங்கே தொடர்ந்திருங்கள் என வேண்டுதலும் வைத்திருந்தேன். இவர்கள் இருவரும் யாழ்கள சட்டங்களுக்குக்கு ஒருங்கிணைய முடியாமேலே விலகியவர்கள். அதிலும் நவீனன் செய்தி இணைப்பாளரே ஒழிய கருத்தாளர் அல்ல. அவர்கள் இழப்பாளர்கள் அல்ல. கருத்துக்களை கருத்துகளால் வெல்ல முடியாதவர்கள். அதற்கான ஆராதனைகள், ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்.- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
விசர் தம்பர் அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இஸ்ரேல் நோக்கி ஏவுகணை வீச்சு என்கிறது இஸ்ரேல். பிபிசி Sirens sound in Israel, military sayspublished at 00:05 00:05 Minutes after Trump's announcement, the Israel Defense Forces (IDF) said that they have identified missiles launched from Iran. The IDF says "defensive systems are operating to intercept the threat". The public have also been warned to "enter a protective space and remain there until further notice".- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
இஸ்லாமபாத் அக்கோர்ட்ஸ் என அழைக்கப்படும், இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் ஒருங்கிணைத்தாராம். தம்பரின் யுத்த தவிர்ப்பு டிரூத் சோசல் அறிவிப்பை எக்ஸ் இல் பகிர்ந்தார் ரூபியோ.- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
டொனால்ட் ஜே. டிரம்ப் @ realDonaldTrump பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்படும் அழிவுகரமான சக்தியை நிறுத்தி வைக்குமாறு அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஒப்புக்கொண்டால், ஈரான் மீதான குண்டுவீச்சையும் தாக்குதலையும் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது ஒரு இருதரப்பு போர்நிறுத்தமாக இருக்கும்! இவ்வாறு செய்வதற்கான காரணம், நாம் ஏற்கனவே அனைத்து இராணுவ இலக்குகளையும் அடைந்து, அவற்றையும் தாண்டிவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம், மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அது ஒரு நடைமுறைக்கு உகந்த அடிப்படை என்று நம்புகிறோம். கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் இந்த இரண்டு வார கால அவகாசம், உடன்படிக்கையை இறுதி செய்து முழுமையாக்க உதவும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சார்பாக, ஜனாதிபதியாகவும், மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும், இந்த நீண்டகாலப் பிரச்சினை ஒரு தீர்வின் விளிம்பை எட்டியிருப்பது எனக்குப் பெருமையளிக்கிறது. இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் https://truthsocial.com/@realDonaldTrump/posts/116365796713313030- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அமெரிக்கா ஈரான் நாடுகள் 2 வார போர் தவிர்ப்பை ஒத்து கொண்டுள்ளனவாம். https://x.com/southasiaindex/status/2041642366713655734?s=46- அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் தனது சமூக ஊடகப் பதிவில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள்: பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தலைவரான அசிம் முனீர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவர்கள் கேட்டுக்கொண்டதால், இன்று இரவு ஈரானுக்கு அனுப்பப்பட இருந்த “அழிவுத் தாக்குதலை” தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இதற்கான நிபந்தனையாக, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாக, பாதுகாப்பாக திறக்க ஈரான் சம்மதிக்க வேண்டும் என்று கூறினார். இந்த இடைநிறுத்தம் இரு தரப்பும் பின்பற்ற வேண்டிய ceasefire என அவர் குறிப்பிட்டார். அமெரிக்க இராணுவ இலக்குகள் ஏற்கனவே நிறைவேறிவிட்டன, மேலும் ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தம் உருவாகும் நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகின்றன என்று அவர் கூறினார். ஈரானிடமிருந்து 10 அம்சங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு கிடைத்துள்ளது; அது பேச்சுவார்த்தைக்கான ஒரு செயல்படுத்தக்கூடிய அடிப்படையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் இருந்த பெரும்பாலான பிரச்சினைகள் இரு நாடுகளுக்கும் இடையில் தீர்க்கப்பட்டுவிட்டன; மேலும் இரண்டு வார இடைவேளையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார். அமெரிக்காவையும், மத்திய கிழக்கு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இந்த நீண்டகால பிரச்சினை தீர்வுக்கு நெருக்கமாக இருப்பது ஒரு “மரியாதை” என அவர் குறிப்பிட்டார். Al JazeeraTrump says US to suspend ‘bombing, attack of Iran’ for tw...Pakistan's PM has asked Trump to extend the deadline for two weeks and for Iran to open the Strait of Hormuz.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
RIP US-Israeli strikes on Sharif University of Technology in Tehran கோழைகளின் தாக்குதல் பாடசாலை வாசலில் தொடங்குகிறது, அறிவின் ஒளியைப் பார்த்தாலே அவர்களின் நிழல் நடுங்குகிறது. புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அசைந்தால் கூட அதைப் பயமாக நினைக்கும் மனங்கள் எத்தனை இருளில் வாழ்கின்றன. பல்கலைக்கழகத்தின் மணி ஒலி சுதந்திரத்தின் சத்தம்; அதை மௌனப்படுத்த கோழைத்தனம் எத்தனை முகமூடிகள் அணிகிறது. அறிவை அழிக்க முடியாது, அது மண்ணில் விழுந்தாலும் முளைக்கும் விதை. ஒரு மாணவன் விழுந்தாலும் நூறு மாணவர்கள் எழுந்து நிற்பார்கள். கோழைகளின் தாக்குதல் சுவர்களை உடைக்கலாம், ஆனால் சிந்தனையை உடைக்க முடியாது. பாடசாலை ஒரு கட்டிடம் அல்ல, அது மனித குலத்தின் மூச்சு.- சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 8ம் பொருத்தம் போல் உள்ளது😂. பூமி சரிந்த வாக்கில் சூரியனை சுற்றுவதால் - சூரிய ஒளி வெவ்வேறு கோணங்களில் பூமியில் விழுகிறது என்பதே முழுமையான விடை என நினைக்கிறேன். சரியா? வட தென் அரைக்கோள நாடுகளில் (இங்கிலாந்து, அவுஸ்) ஒரு நாட்டில் பனிக்காலமாய் இருக்கும் போது மறு நாட்டில் வசந்த காலமாய் வரவும் இதுவே காரணம்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- யாழ். மண்ணில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்
அதீத மத நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் எமக்கான எதிரிகள் தம்மை விரிவுபடுத்த மதத்தை கையில் எடுக்கும் போது நாமும் மதத்தை காவலாக எடுப்பதில் தவறு என எனக்கு தோன்றவில்லை.- ஹோர்முஸ் தீர்மானம் தோல்வி: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய ரஷ்யா, சீனா
இன்றைய உலக அரசியலும் போர் நடவடிக்கைகளும் ஒரு ஆடு புலி ஆட்டம் போல் நகர்கின்றது. பாதிக்கப்படுவது பாமர மக்கள் மட்டுமே.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.