All Activity
- Past hour
-
நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Published By: Vishnu 03 Mar, 2026 | 04:37 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அமுலிலிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பிப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அவசரகாலச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நீடிப்பு அவசியமானது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என ஜனாதிபதி முன்னதாகவே உறுதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதற்கு முன்னர் 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருந்த தனித்துவமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல், உணவு விநியோகம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு, தபால் மற்றும் ஊடக சேவைகள், நிலச்சரிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சேவைகள் ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளன. இந்த மீளறிவித்தல் மூலம், அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் குறித்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240001
-
-
புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு Published By: Vishnu 02 Mar, 2026 | 09:59 PM (க.சிவலிகமூர்த்தி) தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பொதுப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே திங்கட்கிழமை (02) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது. வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் மேலும் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கருத்தைப் பகிர்கையில் இது ஒரு வெற்றியென்பதை தாண்டி ஒரு தொடக்கம் மாத்திரமே. இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தமிழ் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அதன் நுணுக்கமான விபரங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இக்கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் சாசனம் ஊடாகத் தீர்வு காண்பதற்கான தொடர்ச்சியான நகர்வாக இது அமைவதோடு தமிழ் கட்சிகள் யாவும் ஒரே சட்டக் குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பது ஒரு பாரிய வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில் இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்டச் செயற்திட்டங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையே மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இனிவரும் காலங்களில் தமிழ் கட்சிகளை இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்பட்ட நிலையை மாற்றி மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் சொல்ல வேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் இக்கூட்டு முயற்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார். திங்கட்கிழமை (02) இச்சந்திப்பில் அரசியல் பிரமுகர்களாக சிவஞானம் சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர். தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா சட்டத்தரணி வ.ச.நிரைஞ்சன் சட்டத்தரணி ஞா.கா.ரனித்தா மற்றும் சட்டத்தரணி ம.யூட் தினேஷ் உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்தச் சந்திப்பானது நீண்டகாலமாகத் தனித்தனியாகப் பயணித்த தமிழ் அரசியல் சக்திகளை ஒரு பொதுவான இலக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படியாக அமைகின்றது. தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் நடுநிலையான வழிகாட்டலில் எட்டப்பட்டுள்ள இந்த ஆரம்பகட்ட இணக்கப்பாடானது வரும் காலங்களில் ஒரு பலமான அரசியல் அழுத்தக் குழுவாக உருவெடுக்க வழிவகுக்கும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விபரமான ஆவணங்களைத் தயாரித்து அடுத்தகட்டச் சந்திப்புகளில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
கொழும்பிலை இதை பேசுவதற்கு ...ஒரு தில்லு வேணும் ...உங்களுக்கு இருக்கா..
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா, ஈரான் மீது ஒரு மரபுவழி சமர் ஒன்றினை நடாத்தும் பலம் கொண்ட நாடல்ல என்று கூறியிருந்தேன், தற்போது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதல் வெறுமனே மிக திட்டமிட்ட முக்கிய இலக்குகளை வான் தாக்குதல் மூலம் மேற்கொள்ளுகின்றது, இது ஒரு வகை அதிரடித்தாக்குதல் போல இருந்தாலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள். அமெரிக்க அதிபர் 4 வார தாக்குதல் என கூறியிருந்தாலும் 4 வாரங்கள் வரை அத்தாக்குதல் செல்லுமா எனத்தெரியவில்லை. இதற்கு பதிலழிக்கும் ஈரான் தாக்குதலும் அமெரிக்க படைகள் பொருளாதார இலக்குகள் என அதே வான் வழித்தாக்குதல்கள்தான். இத்தாக்குதல் மூலம் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு எதிர்பார்க்கும் இலக்கு என்ன? ஆட்சி மாற்றம்? கொஞ்சநாள் பொறுத்திருந்தாலே போதும் (கமேனியின் மூப்பு நிலை), எதற்காக இந்த முயற்சி? இப்போதும் அதே கட்சியே மீண்டும் புதிய ஒருவரை நியமிக்கும், அதன் போக்கு எப்படி என தெரியாது. அமெரிக்க அதிபரோ அல்லது இஸ்ரேலிய அதிபர் உள்நாட்டு அரசியல் நலனிற்காக இந்த தாக்குதலை செய்கிறார்களோ தெரியவில்லை. வெறும் ஆகாயத்தாக்குதல் செய்யும் இரு தரப்பில் மிக துல்லியமான நவீன உளவுத்தகவலோடிணைந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிரடித்தாக்குதலை நடத்துவதில் அமெரிக்கா தற்போதும் முன்னிலையில் நிற்கின்றது ஆனால் அதனை ஒரு முழு இராணுவ பலத்திற்கான அளவீடாக எடுக்கமுடியுமா என தெரியவில்லை.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் நிர்வாகம் பாகிஸ்தான் வீரர்களுக்கு தண்டப்பணம் விதித்திருக்கிறதாம். ஒவ்வொரு வீரருக்கும், ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (18000 அமெரிக்க டாலர்)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு எல்லாரையும் தெரியும் என்று பார்த்தேன். பார்ப்போம் பதில் சொல்கிறாரோ என்று.
-
''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது. இதை ஆசிய ஆபிரிக்க நாடுகளில் காணலாம். இலங்கையில் நேரடியாகவே காணலாம். மேம்பாலங்கள் உட்பட அதி வேக சாலைகள்,நவீன வீதிகள்.....வானுயர்ந்த கட்டடங்கள், சுற்றுலா தளம் உட்பட.... எல்லாம் சீனா தயாரிப்புகள். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள் விழித்துக்கொள்வார்களாக........ எழுத பென்சிலும் கொப்பியும் தரும் நாட்டை நம்பாதீர்கள்.
-
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
அந்த 50 கிராமத்து லெபனான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? துல்லிய தாக்குதல் செய்யும் தொழில் நுட்பம் இருந்தும் அப்பாவி மக்கள் அவலப்படுவதை இந்த உலகம் அனுமதிக்க கூடாது.
-
ரோஜா முள்.
அப்புறம் என்ன நடந்தது? மிச்சம் எப்ப வரும்? முள்ளு குத்தின இடம் இப்ப என்ன மாதிரி? பிலா மரத்திலை ஏறி சறுக்குப்பட்டு விழுந்த காரணத்த கண்டு பிடிச்சாச்சு...😎
-
ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு
காத்தான்குடியைலையும் பயங்கர எதிர்ப்பு எண்டு கேள்விப்பட்டன் 😂
-
ஈரானுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவிப்பு
மேற்கத்தைய நாடுகள் தங்கள் அரசியலுக்கு பாதமான செய்திகளையும், மக்களுக்கு உண்மை தரும் செய்திகளையும் தடை செய்பவர்கள் என்பதை தெரியாத பாலகனா நீங்கள்?🙂 இதே போல் மாற்றுக்கருத்து நாடுகளிலும் அதே நிலைதான்....எனவே..... எனவே இரண்டு பக்கமும் நாயடி....பேயடி....சணலடி.எல்லா இடமும் பிரேக்கிங் நியூஸ். உண்மை நிலவரம் யாருக்கும் தெரியாது.😎
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மேற்குலகின் ஈரான் மீதான 40 வருடங்களுக்கு மேலான அரசியல்,பொருளாதார தடைகளின் பின்னர் வந்த முறுகளும் தான் இன்றைய போர் நிலை.... அதே தடைகள் தான் ரஷ்யா மீதும் போட்டது இந்த மேற்குலகு. அது சரி அறப்படித்த மேற்குலகு சமாதானம்,அணுகி போதல் எனும் வரையறைக்குள் வர மாட்டார்களா? 😎 அவர்கள் கற்கால மனிதர்கள் என்றால் மற்றவர்களும் கற்கால நிலைக்கு வர வேண்டுமா?😄
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அது சரி ஆரப்பா இந்த நியு பலன்ஸ்? போட்டியில பெயர் குடுத்தது மட்டும்தான். சத்கம் இல்லை. 3ம் இடத்தில நிக்கிறார்.
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
ஹா ஹா..... நான் தான் அவர்களின் வழக்குகளை கையாள்கிறேன், எனக்கு பிரதம மந்திரியாக பதவியேற்பதற்கு அழைப்பு வருமென காத்திருப்பதாக அறிவித்திருந்தார், இப்போ இப்படி ஒரு கதை விடுகிறார். கொஞ்ச நாளாய் அமைதி நிலவுகிறதே என நினைத்தேன், அவர் கற்பனையில் இருந்திருக்கிறார் பாவம். ஜனாதிபதி தேர்தலில், தமிழ் வாக்காளருக்கு வாக்களியுங்கள் என்று சொன்னால், அது இனவாதமாம். ஆனால் மாகாணசபைத்தேர்தலில், பாராளுமன்றத்தேர்தலில் தமிழர் தமிழரசுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும், அதுதான் தமிழரின் ஏகோபித்த கட்சி என்று சொல்வது என்ன வாதம்? அது இருக்க, ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்க கேட்டு விட்டு, அனுராவிடம் பதவி எதிர்பார்க்கிறார். அமைதியாக இருந்த கட்சியில் பிரச்சனையை ஏற்படுத்தி, தெருவுக்கு கொண்டுவந்து, நீதிமன்றத்தில் நிற்கவைத்துவிட்டு நீதியமைச்சர் பதவியை எப்படி இவர் எதிர்பார்க்கிறார்? சிலர் இப்படித்தான் பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பது, கிடைக்காத போதுஎச்சரிப்பது, சவால் விடுவது, பயமுறுத்துவது. பின் சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்பார்கள். எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்பாடு இல்லாமல் பதவிக்காக சாயும் இவருக்கு அனுரா பதவி தருவேன் என்று சொன்னாராம். என்று இவர் சொல்வதிலிருந்து இவர் கடந்த காலங்களில் எதற்காக முண்டு கொடுத்தார் என்பது தெரிகிறது. எந்தக்காலத்திலும் இவர் தனக்கு வாக்கு போட்ட மக்களின் கவலைகளை தேவைகளை முன்னிறுத்தியதேயில்லை, இப்போ அவருக்கு பதவிக்காக மக்கள் நினைப்பு வருகிறது. தமிழ் மக்கள், தங்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் தாங்களாகவே அனுராவை தேர்ந்தெடுத்தனர், யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே தமிழரின் கவலைகளை, அபிலாசைகளை, உணர்வுகளை மதித்து அவற்றிற்கு தீர்வு வழங்குவது அனுராவின் கடமை. அதைவிட்டு சுமந்திரனுக்கு பதவி வழங்குவதால் தமிழரின் பிரச்சனை தீர்ந்துவிடாது என்பது அனுராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே புரியும். இப்போ தெரிகிறதா யார் பதவிக்காக நாக்கைத்தொங்க போட்டுகொண்டு அலைவது என்பது? இருங்கோ. யார் வேண்டாம் என்றது? அதற்காக என்ன செய்தீர்கள்? அனுரா நீதியமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்வதாலோ, அல்லது நிராகரிப்பதாலோ எதுவும் நிகழாது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கு எதிராக ஈரான் செயற்பட்டது, அதனால் அது அழிய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையிலும் பொருட்படுத்தக்க ஒரு நிலைப்பாடு அல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கும் எதிராக பலமான, பலமில்லாத நாடுகள் என்று ஏராளமானவை செயற்பட்டன, அத்துடன் இலங்கை அரசுக்கும் அந்த நாடுகள் உதவிகள் செய்தன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று எத்தனை, எத்தனை. இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காக ஒரு தொகுதி மக்கள் மேல் காட்டப்படும் வெறுப்பும் பூமராங் போன்றதே. எங்களை எங்கள் அடையாளத்துக்காக வெறுத்து ஒதுக்கும் நிலை இருந்தது. அது இன்றும் கூட இலைமறை காயாக அங்கங்கே இருக்கலாம். அதிபர் ட்ரம்ப் அவரசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும், சாதாரண தனிநபர் ஒருவர் காட்டும் இந்த வகையான வெறுப்புகளுக்கும் இடையே, அவருக்கு அதிகாரமும் பலமும் இருக்கின்றது, சாதாரண மனிதனுக்கு அவை இல்லை என்பதை விட வேறு ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா.......... ஈரான் ஆட்சியாளர்கள் போன்ற அடிப்படைவாதிகள், ரஷ்யாவின் அதிபர், வட கொரியாவின் அதிபர் போன்ற சார்வாதிகாரிகள், மாஃபியா அரசாங்கம் நடத்தும் தலைவர்கள் போன்றவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அடுத்த கட்டம் என்னவென்ற ஓரளவேனும் உறுதியான திட்டங்கள் இல்லாத நடவடிக்கைகளால் பயன்களை விட அதிக பாதிப்புகள் உண்டாகின்ற என்பதே வரலாறு. மிக முக்கியாக அடிப்படை உரிமைகள் இன்றி அடக்குமுறைக்குள் வாழும் அந்த மக்கள் மீண்டும் மீண்டும் அதை விட சிக்கலான நிலைக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். சமீப காலங்களில் ஈரான் எந்த விதத்திலும் ஒரு பலமான நாடு அல்ல என்றே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்றது. இயற்கை ஒரு பக்கம், அமெரிக்கா இன்னொரு பக்கம் ஈரானை வலுவிழக்கச் செய்துவிட்டன. எங்களின் யூ டியூப்பர்களும், கருத்தாளர்களும் அமெரிக்கா வலுவிழந்து விட்டது என்றும், ஈரான் ரஷ்யா போன்றன வலுவாக உள்ளன என்றும் மீண்டும் மீண்டும் சொல்வதன் அல்லது எழுதுவதன் பிரதான காரணம் அவர்களின் அமெரிக்க வெறுப்பே. நீண்ட ஒரு தொடராக எவரின் கருத்துகளையும் வாசித்து, கிரகித்து, நினைவில் வைத்திருந்தால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா நேரடியான இராணுவ தாக்குதல்கள் அன்றி, ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு இன்னும் பலமான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. ஈரானின் சுப்ரீம் லீடர் மற்றும் முக்கியஸ்தர்கள் இறந்து போனது பற்றி என் மனதில் எந்த உணர்வுமே இல்லை. ஆனால் கடந்த வருடம் மனநோயாளி என்று ஈரான் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண் உயிருடன் இருக்கின்றாரா, இப்போதாவது வெளியில் வருவாரா, அவருடைய மண்ணில் அவர் சுதந்திரமாக நடமாடுவாரா என்ற நினைப்பே ஈரான் என்னும் பெயரைக் கேட்டவுடன் மனதில் வருகின்றது.
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
இவர்கள் தான் தங்களை உலக நாடுகள் என முத்திரையிட்டால்.......🌟 இவர்களை விட பெரிய எதிர் அணி உருவாகி விட்டதாகவே தெரிகின்றது. அரவணைத்து செல்வதால் ஆதாயத்தை தவிர அழிவுகள் இல்லை.🙌
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எதுக்கும் நல்ல நியாபக சக்தி வைத்தியரை நாடவும்😂. ஆறுமாதமும் இராது. நானும் இன்னும் சில உறவுகளும், இதை வன்மையாக கண்டித்து எழுதினோம். உங்களுக்கு நல்ல நிர்வாக குட்டும் கிடைத்தது. ஒன்றில் திமுகவை, அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அல்லது சீமான், விஜை என புதிதாக வருபவர் நல்லது செய்வார்களா என பார்க்க வேண்டும். அவர்களும் வேலைக்கு ஆகாது என்றால் அடுத்து யார் வருகிறார்கள் என பார்க்க வேண்டும். போலிகளை தொடர்ந்தும் நம்பி, நமபவைத்து ஏமாற நான் என்ன தமிழ் சினிமாவில் காட்டும் பெண்டாட்டியா😂? அதெல்லாம் மிசின் வச்சுதான் புடுங்குவோம்😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....👍 எல்லாம் சினிமா அரசியலாக போகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்தது பிக்பாஸ் அரசியல்தான் தமிழ்நாட்டிற்கு வரும் போல் தெரிகின்றது. சினிமா அரசியலையும் பிக்பாஸ் அரசியலையும் உள் வாங்க பெரும் அரசியல் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்பது வேறு விடயம். பொழுது போக்குகள் மக்கள் வாழ்வாதாரத்தையும்,மக்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக வருவது தமிழ்நாட்டிற்கான அவலத்தில் ஒன்று. தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 😧
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது 10வது T20 உலகக் கிண்ணம். பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, இம்மூவரும்தான் ஆறு தடவைகள் அரை இறுதிக்குப் போயிருக்கினம்.
- Yesterday
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஆருக்கு எங்கை அடிச்சால் பெற்றோல் விலை குறையுமெண்டு எந்த சாத்திரியிட்ட சாத்திரம் கேக்கலாம்? 🤣 பிளீஸ் கெல்ப் மீ.......இனியும் பெற்றோல் விலை கூடுமெண்டால் மாட்டு வண்டில் தான் தஞ்சம் கண்டியளோ. 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவத் தெரிவு செய்து இருக்கமாட்டியல் என்று நினைக்கிறேன். உங்களின் கணிப்புப் படி, இந்தியா சூப்பர் 8க்கே வந்திருக்கப் படாது. 😁 வந்திட்டாங்கள். பாவம். விட்டுடுங்க. 😉
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
அவர் தன்ரை ஆதங்கத்தை மறைமுகமாக கிலோ கணக்கில கொட்டுறார்.நீங்கள் வேற வெந்த புண்ணிலை வேல் பாய்ச்சுற மாதிரி......😂
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இந்த உலகில் அடிமைப்பட்ட,சுதந்திரமில்லாத இனங்கள் எப்படி,யாருடன் சார்ந்து வாழ வேண்டும் என பரிந்துரைக்கின்றீர்கள்.?
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
கவலைப்படாதீர்கள் ஏராளன் தம்பி! வரும் அடுத்த 20 வருடங்களுக்குள் கச்சதீவு புனித தலத்துடன் கூடிய உல்லாச தீவாக மாறும். ஐரோப்பாவில் இருக்கும் ஹொட்டல்கள் போல் கச்சதீவை சுற்றி ஆடம்பர ஹொட்டல்கள் அமையும். அங்கே பல அமைப்புகள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்வார்கள். அப்போது மலசல கூடங்களும்,தண்ணீர் வசதியும் தங்கு தடையின்றி இருக்கும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எங்கும் எதிலும் களை புடுங்க நினைக்கின்றீர்கள். நாளை நிலைமைகள் மாறலாம். மாறும். அல்லது மாற்றப்படும். எனவே குனிந்து, தொடர்ந்து புடுங்க நினைக்காதீர்கள். முதுகெலும்பு தாக்கு பிடிக்காது.🤣 ஏனென்றால் இந்த உலகு நீதி நியாயமற்ற உலகு👈. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. பலம் எங்கிருக்கின்றதோ அங்கேதான் நீதியும் நியாயங்களும் இருக்கும்.😎