Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2100 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும் கணணி. 1901 ம் ஆண்டு, ரோமன் கப்பல் சிதைவுகளில் இருந்து சுழியோடிகளால் தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது மிகப் பழமையான பொறி ஒன்று. நீண்ட ஆய்வுகளின் பின்னர் குறிப்பாக X-கதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அதனோடிணைந்த கணணி மயப்படுத்தப்பட்ட நுட்பமான முப்பரிமான ஆய்வுகளின் பின் குறித்த பொறி ஆதியான ஒலிம்பிக் நகரில் வான் கோள்களின் சுழற்சிக் கால அளவைக் கணித்துச் செயற்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட் காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறி 2100 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்தப் பொறி வெண்கல கலப்புலோகத்தால் ஆன உதிரிப் பாகங்களை கொண்டிருக்கிறது. source: http:…

  2. டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி முழு சூரிய கிரகணம் வருகிறது. அன்று சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வருவதால் சூரியன் மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் எனப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதால் முழு கிரகணம் உண்டாகிறது. சூரிய கிரகணம் கனடாவில் ஆரம்பித்து வடக்கு கிரீன்லாந்து, ஆர்க்டிக்,, ரஷ்யா, மங்கோலியா, சீனா வழியாக நடைபெறும். இதன் காரணமாக ரஷ்யா, மங்கோலியா, ஆர்க்டிக் பிராந்தியங்களில் சூரிய கிரகணம் முழுமையாக இருக்கும். வட அமெரிக்காவில் வடக்கு, கிழக்கு பகுதிகள், கிரீன்லேண்ட், வடக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் தவிர ஆசியாவின் மற்ற நாடுகளில் முழு கிரகணம் தெரியும். அதேசமயம், இந்திய…

  3. மைக்ரோசாப்ட் ஓ-ஃபோன் : - இணையத்தில் புதியது ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.9k views
  4. மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெ…

  5. Started by ithayanila,

    ?????????????????????

    • 2 replies
    • 1.8k views
  6. உலகில் குறிப்பாக வெப்ப வலைய நாடுகளில் வருடத்துக்கு பல ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி எடுக்கும் மலேரியா நோய்க்கு புதிய வகையில் சிகிச்சை அளிக்கக் கூடிய முறை ஒன்றை அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மலேரியா நோயை உருவாக்கும் புரட்டோசோவா (protozoa) வகை ஒட்டுண்ணி நோயாக்கி குருதியில் உள்ள செங்குருதிக் கலங்களுள் புகுந்து கொண்டு குறிப்பிட்ட காலம் வாழ்வதால் அவ்வாறு ஒட்டுண்ணிகள் புகுந்து கொண்ட செங்குருதிக் கலங்களை உடலில் உள்ள நிர்ப்பீடணம் (immune system) இனங்கண்டு தாக்காதிருக்க உதவும் புரதப் பசைப் படையை உருவாக்கும் 8 புரத மூலக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் 8 புரத மூலக்கூறுகள் சேர்ந்து ஆக்கப்படும் அந்த பாதுகாப்புப் பசையில் ஒரு புர…

  7. தண்ணீரில் ஓடும் கார் யப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1 லீற்றர் தண்ணீரில் 80 கி.மீ வரை ஓடும் என கூறப்படுகிறது. பெற்றோலின் விலைக்கு பதிலான இக்கண்டு பிடிப்பு உலக மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியுள்ளது என்றால் அது மிகையாகாது. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ஆற்று நீர்,கடல் நீர் எதுவானாலும் பாவிக்கலாம் என யப்பானிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

  8. சுமார் 50 மில்லியன் ஆண்டுகளாக எமது பூமிப்பந்தில், பரந்த அளவில், ஆழம் குறைந்த கடற்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பவளப் பாறைகளை (coral reefs )உண்டாக்கும் எளிமையான உயிரினங்கள் தற்போது புவி வெப்பமடைத்தல், காலநிலை மாற்றங்கள், கடலோடு மாசுக்கள் கலத்தல், கடற்கரையில் உள்ள இயற்கையான வாழிடங்கள் அழிக்கப்படுதல் மற்றும் மீன்பிடி போன்ற முக்கிய காரணிகளால் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அருகி வரும் நிலை சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவொன்றில் இருந்து அறியப்பட்டுள்ளது. இந்தப் பவளப் பாறைகளே கடலரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தையும் இவை அளிக்கின்றன. உல்லாசப் பயணத்துறையில்…

  9. வீரகேசரி நாளேடு - பூமியின் உப கோளான சந்திரனின் மேற்பரப்பின் உள்ளடக்கத்தில் தற்போது நீரில்லை என்பதற்கான ஆதாரங்கள் அண்மைய ஆய்வொன்றின் மூலம் தமக்குக் கிடைத்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனில் ஆரம்ப காலத்தில் நீர் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் இவ்விஞ்ஞானிகள், வெப்ப விளைவுகள் காரணமாக அந்நீர் தற்போது ஆவியாகியிருக்கலாம் என தாம் நம்புவதாகக் கூறுகின்றனர். பிறவுண் பல்கலைக்கழகம், கர்னேஜி விஞ்ஞான நிறுவகம், கேஸ் வெஸ்ட்டர்ன் றிஸேர்வ் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாம் நிலை அயன் திணிவு அலை நீள அளவுத்திட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட இப்பரிசோதனையின் முடிவுகள் "நேச்சர்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. 3 பில்லி…

  10. பிப்ரவரி 14, காதலர் தினம் ‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம் மார்ச் 2, உலக புத்தக தினம் மார்ச் 8, உலக மகளிர் தினம் மார்ச் 22, உலக தண்ணீர் தினம் ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம் ஏப்ரல் 7, உலக சுகாதார தினம் ஏப்ரல் 22, உலக பூமி தினம் ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம் மே 1, உழைப்பாளர் தினம் மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம் மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம் மே 15, உலக குடும்பங்கள் தினம் மே 18, உலக அருங்காட்சியக தினம் மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜுலை 1, உலக நகைச்சுவை தினம் ஜுலை 11, உலக மக்கள் தொகை த…

  11. இந்தியாவின் வடக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் Omkari Panwar எனும் கிட்டத்தட்ட 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவருக்கு ஆணும் பெண்ணும் என்று இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. IVF முறையில் கருக்கட்ட வைத்து பாட்டியின் கருப்பையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் இரண்டும் சிசேரியன் மூலம் பிரசவிக்கச் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் தலா இரண்டு இறாத்தல் எடையுள்ளனவாக ஆரோக்கியமானவையாக இருக்கின்றன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 70 வயதுப் பாட்டிக்கு ஏற்கனவே இரண்டு மகள்களும் 5 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆண் வாரிசு வேண்டி இக்குழந்தைகளை இந்த வயதில் பெற்றெடுக்கத் தீர்மானித்ததாக பாட்டியின் கணவர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். இந்தப் பாட்டிக்கு அவரின் வயதை நிறுவத்த…

    • 18 replies
    • 2.5k views
  12. இனிய வணக்கங்கள், எல்லாருக்கும் பயன்படக்கூடிய ஒரு பிரயோசனமான பதிவு ஒண்டப்போடுவம் எண்டு நினைச்சுப்போட்டு சிலருக்கு தெரிஞ்சு இருக்கக்கூடிய பலருக்கு தெரிஞ்சு இருக்காத Chris Anderson என்பவர் சொன்ன நீளமான வால் - THE LONG TAIL பற்றிய ஒரு சின்னப் பதிவ இதில போடுறன். Chris Anderson சிலிக்கன் வலியில (Silicon Valley) பிரபலமான Wired magazine இல பிரதான ஆசிரியர். இவர் 2004 ம் ஆண்டில நீளமான வாலப் பத்தின ஒரு கட்டுரை எழுதினார். பிறகு THE LONG TAIL எண்டு ஒரு புத்தகமும் வெளியிட்டார். இவர் சொன்ன கருத்துக்களை ஏற்கனவே வேற ஆக்கள் சொல்லி இருந்தாலும், மேலும் புள்ளிவிபர ஆய்வாளர்களும் இதுபற்றி பல வருடங்களுக்கு முன்னமே கதைச்சு இருந்தாலும், இவர் சொன்னமாதிரி இந்த நீளமான வால் தத்துவத்தை வேற ஒ…

  13. fig: bbc.com இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் (Meghalaya) Garo hills பகுதியில் ஒதுக்குப்புறமாக உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் சில இடங்களில், காட்டு மனிதன் (அனுமான் உருவ மனிதன்) ஆங்கிலத்தில் ape-like creature அல்லது நேபாள வழக்கில் yeti அல்லது மேகாலய வழக்கில் mande barung என்று அழைக்கப்படும் உயிரி அவதானிக்கப்பட்டுள்ளதாக அதனை அவதானித்த பலரும் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். சுமார் 10 அடி (3 மீற்றர்கள்) உயரமுள்ள சுமார் 300 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கலாம் என்று கருதப்படும் இந்த காட்டு மனிதன் உடல் முழுதும் உரோமத்தால் மூடப்பட்டு கறுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருப்பதுடன் தாவரபோசணையை உணவுப் பழக்கமாகக் கொண்டிருப்பதாக அவனை அவதானித்த மக்கள் கரு…

    • 8 replies
    • 2.3k views
  14. fig: bbc.com கிட்டத்தட்ட சூரியனின் பருமனை ஒத்த நட்சத்திரமென்றை சுற்றி வரும் பூமியைப் போல முறையே 4.2, 6.7 மற்றும் 9.4 மடங்கு அதிக பருமனுடைய மூன்று "சுப்பர் - பூமிகள்" (புதிய கோள்கள்) விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்மில் இருந்து சுமார் 42 ஒளியாண்டுகளுக்கு அப்பால் எமது சூரியனை விட சற்றுச் சிறிய HD 40307 எனும் குறியீட்டு நாமம் இடப்பட்ட நட்சத்திரத்தைச் சுற்றி இக்கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை பூமியை விடப் பருமன் கூடியவையாக அமைந்திருப்பதால் இவற்றுக்கு "சுப்பர்" பூமிகள் (super-Earths) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை எமது சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்ரியூன், யுரேனஸ் கோள்களை விடச் சிறியனவையாகும். இத்தகவல்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த விண்ணியலாளர…

  15. ஆரியர்கள் தூய்மையானவர்கள் எனும் ஹிட்லரின் கொள்கை: தவறு என மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டது லண்டன்இ ஜூன் 16- வட அய்ரோப்பாவிற்குச் சென்று குடியேறிய ஆரியர்கள்இ அங்கு பிற இனத்தவர்களுடன் கலக் காமல் தூய்மையாக வாழ்ந் தார்கள் என்றும்இ அப்படிப் பட்ட நார்டிக் ஆரியர்கள் உலகத்தில் அனைத்து இனத் தாரைவிட உயர்ந்தவர்கள் என்றும்இ ஜெர்மனியை ஆண்ட (1933-45) ஹிட்லர் கூறினான். ஆரியர் அல்லாதஇ செமிட்டிக் இனத்தவர்களான யூதர்களை தாழ்ந்தவர்கள் என்றும் சொன் னான். அத்துடன் பல லட்சக் கணக் கில்இ யூதர்கள் நச்சு வாயுக் கூடங்களில் அடைத்துக் கொன்றான்; அதற்கு ஹஹொலா காஸ்ட் எனப் பெயர். இந்தக் கொடுமைகளுக்கும்இ இரண் டாம் உலகப் போருக்கும் (1939-45) காரணமானஇ தூய்மையான நார்டிக் ஆரியர் உயர்ந்தவர்கள் எனும் நாஜி…

    • 0 replies
    • 1.1k views
  16. பூமியதிர்ச்சியை முன்னறிவிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிவதில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விண்ணில் சஞ்சரிக்கும் செயற்கைக் கோள்களின் துணையுடன் பூமியின் வளிமண்லடத்தில் உள்ள அயன்படையில் (ionosphere) நிகழும் குழப்பங்களை அவதானிப்பதன் அடிப்படையில் பூமி அதிர்ச்சியை எதிர்வு கூற முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் வளிமண்டலத்தில் உள்ள அயன்படையில் பாரிய குழப்பங்கள் நிகழ்வது தொடர்சியாக நாசா விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த மே 12 இல் சீனாவில் நிகழ்ந்த பூமியதிர்ச்சிக்கு முன்னரும் கூட வளிமண்டல அயன்படையில் முன்னர் அவதானிக்கப்பட்டது போன்ற குழப்பங்…

  17. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், உங்களுக்கு உங்களுக்கு கறுப்பு ஓட்டை (Black hole) எண்டு விஞ்ஞானத்தில சொல்லபடுறது என்ன எண்டு தெரியுமோ? எனக்கும் அது என்ன எண்டு விபரமா விளக்கமா தெரியாது. நான் அண்மையில தொலைக்காட்சியில இதுபற்றிய ஒரு விவரணச்சித்திரம் பார்த்து இருந்தன். நான் ஆங்கிலத்தில இதுபற்றி வாசிச்சும் அறிஞ்சன் அத இப்ப தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு தெரிய இல்ல. இதில முக்கியமான ஒரு விசயத்த மட்டும் பற்றி சொல்லலாம் எண்டு நினைக்கிறன். இப்ப விஞ்ஞான புனைகதைகள் இருக்கிதுதானே? அவற்றுக்கு கருவூலமால இருக்கிறதில மிகவும் முக்கியமானது இந்த கறுப்பு ஓட்டை. ஆக்கள், விஞ்ஞான கதாசிரியர்கள் என்ன சொல்லுறீனம் எண்டால் இந்த கறுப்பு ஓட்டையுக்க நாங்கள் விழுந்தால் உள்ளுக்க போனாப்பிறகு வேறு…

    • 19 replies
    • 3.7k views
  18. காஃபியின் கதை காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது. எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன. அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதி…

  19. 100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர். இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்ற…

  20. நகர் புறத்தில் சேவல் கூவுவது சில மனிதர்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்பதற்காக சத்தம் போட்டுக் கூவும் சேவல்களை பிடித்து வெட்டி விட உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த விநோத சட்டம் இந்த விநோத சட்டம் சுவாஸிலாந்தின் (ஆபிரிக்க கண்ட நாடு) தலைநகர் Mbabane இல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சத்த மாசு சம்பந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் நகரங்களில் சேவல்களை வளர்க்கத் தடையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நகரங்களில் 12 பேட்டுக் கோழிகளுக்கு மேல் வளர்க்கவும் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது..! சேவல் கூவது சூழலை சத்த மாசாக்கிறது எரிச்சலைத் தூண்டுகிற…

  21. இளவரசி டயானா (Diana) உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது. அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது! பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக…

  22. பிற விலங்கு முட்டையில் (மாடுகளின் முட்டை) இருந்து மனித முளையத்தை உருவாக்கும் உயிரியல் தொழில்நுட்ப முறை மாதிரி வரைபடம். hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் hybr…

  23. Rick Hansen (றிக் ஹான்சன்) யார் இவர்? ஒரு மனிதனின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது எவை என்பதை செயலிலும் சாதித்துக்காட்டிய ஒரு சாதனை வீரரின் சுய கதையை இன்று பலரின்; நன்மை கருதி யாழில் பதிவு செய்கின்றேன். மனிதனாகப் பிறந்து விட்டாலே சோதனை, வேதனை, தடங்கல்கள் இப்படி எத்தனையோ விடயங்களை நாம் தாண்ட வேண்டியிருக்கும். எது எப்படியிருப்பினும் மனதில் திடகாத்திரம் இருந்தால் எதையும் இலகுவில் அடைந்துவிடலாம் என்பது தான் இந்த ஆக்கத்தின் மையக்கருத்து. இந்த சாதனையாளரைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்பின் இந்த www.rickhansen.com இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.. அந்தச் சிறுவனுக்கு ஓர் இடத்தில் உட்காருவதென்றாலே வெறுப்பு. சாப்பிடுவதற்காவது ஓ…

    • 3 replies
    • 1.3k views
  24. கீழே X மற்றும் Y ற்கு ஒரே பெறுமதி (same values)கொடுக்கப்பட்டுள்ளன. யாரவது X ம் Y ம் சமனில்லை என நிறுவ முடியுமா? X = 34019 ------ (1a) X = abz ---------(1b) Y = 34019 -------(2a) Y=abz -----------(2b) Provide evidence, X is not equal to Y. You are allowed to apply any assumptions/therories or derive your own formula to turn up.

    • 1 reply
    • 1.7k views
  25. நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீறியாக்கள் பயன் படுத்தும் பொறிமுறைகள் Mechanisms of antibiotic resistance மிக நீண்டகாலமாக மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் அங்கிகளுக்கு/ காரணிக்களுக்கெதிராக மனிதன் போரடியே வந்துள்ளான். சின்னமுத்து, அம்மை, போலியோ போன்ற வைரஸ் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. பக்ரீரியாக்களுக்கெதிரான (Bacteria) நோய்களை கட்டுப்படுத்துவதில் 1940 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் (Penicillin)மற்றும் அதன் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய நுண்ணுயிர் கொல்லிகளும் (Antibiotics) பெரும் பங்காற்றின என்றால் மிகையில்லை. ஆனால் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே அதனை எதிர்த்து வளர/ பெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.