Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய ஒலி எழுப்பிய வீரர்கள் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சோயுஸ் விண்கலனில் இருந்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சில மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.…

  2. நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன் by vithai Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. யார் இந்த ரெஸ்லா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாகத் தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக…

  3. 9 ஆயிரம் முறை... நிலவினை, சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம்! சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டி இஸ்ரோவின் பயிலரங்கம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இரு ஆண்டுகளில் சந்திரயான் விண்கலம் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றிவந்துள்ளது. இதில் எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி…

  4. தலைமைச் செயலகம் பானுமதி ந. ஆகஸ்ட் 8, 2021 பொதுவாக நாம் நினைவையும், மறதியையும் மனதுடன் இணைத்துப் பேசுவோம். ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ என்று பி. சுசீலா கேட்கும் போது அந்த மனதைக் கைகளில் எடுத்து சீர்படுத்த நினைக்காதவர்கள் உண்டா? கவிஞர், பின்னர் இரண்டு மனம் கேட்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன்- நினைத்து வாழ ஒன்று, மறந்து வாழ ஒன்று.’ மனம் என்பது வெகு இயல்பாக நம் மொழியில் வந்து விடுகிறது. ‘மனதார வாழ்த்துகிறேன்’, ‘மனதைத் தொட்டுச் சொல்கிறேன்’, ‘மனசாட்சி இருந்தா இப்படியெல்லாம் பேசுவார்களா?’, ‘நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்’, ‘நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே’, ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ இவைகள் குறிப்பது…

  5. ஆமைகள் ஏன் நீண்டகாலம் வாழ்கின்றன? அகத்தியன் ஆமைகளுக்கும் தமிழருக்கும் பல்லாயிரமாண்டுகள் தொடர்புண்டு. கடலோடும் தமிழர் உருவத்தில் பெரிய ஆமைகளையே வழிகாட்டிகளாகப் பாவித்தார்களென சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. ஆமைகளின் நீண்ட கால வாழும் தன்மை அவர்களுக்கு உதவியது. ஆமைகளால் எப்படி நீண்டகாலம் உயிர்வாழ முடிகிறது எனத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆமைகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று கடலாமை ( sea turtle) மற்றது நில ஆமை (box turtle). கடலாமைகள் 50-100 வருடங்கள் வாழ்கின்றன. நில ஆமைகள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்கின்றனவென ஆமைகளைப் பற்றி ஆராயும், ஃபுளோறிடா தென் மேற்கு ஸ்டேட் கல்லூரி பேராசிரியரான ஜோர்டன் டொனினி கூறுகிறார். தென் அ…

    • 0 replies
    • 510 views
  6. ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலத்திற்கான... "கவுண்டவுன்" ஆரம்பமாகியது! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ் -03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் -10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233608

  7. ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்: 70 மெகா நியூட்டன் உந்து விசையை உருவாக்கும் பிரம்மாண்ட ராக்கெட் தயாரானது ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு, ஸ்டார்ஷிப் என்கிற மேல்பாகத்தை, சூப்பர் ஹெவி என்கிற அடிபாகத்தோடு இணைத்துப் பார்க்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி வணிகர்களில் ஒருவரான ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்து இருக்கிறது. இந்த ராக்கெட்டில் மொத்தம் இரு பாகங்கள் இருக்கின்றன. ஒன்று ராக்கெட்டின் மேல் புறமான ஸ்டார்ஷிப். இரண்டாவது அடிப்பாகமான பூஸ்ட…

  8. செவ்வாயில் பாறை துகள்களை சேகரிக்கும் முதல் முயற்சி தோல்வி நாசா கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதை ஆராய்வதற்காக அங்கிருந்து பாறை மற்றும் மண் துகள்களை சேகரிக்கும் பணியில் பெர்சவரன்ஸ் ரோவர் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில் பாறை துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்ஸ் ரோவரின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள 7 அடி நீளமுள்ள ரோபோ கையில் தரையில் துளையிடுவதற்கான கருவி மற்றும் மாதிரிகளை எடுப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட ம…

  9. கறுப்பு வயிறுகளும், வெள்ளை உணவுகளும் முனைவர். ப.ம. மயிலா, தமிழ்த்துறை, ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரி, சுங்கான்கடை. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய இடத்தில் உணவு நம்மிடையே வழங்கப்பெற்று வந்துள்ளது. கடந்த இருபது வருடங்களில் நம் நாட்டு மக்களிடையே தோன்றியிருக்கும் பல்வேறு வாழ்வியல்முறை நோய்களை (டுகைநளவலடந னுளைநயளநள) பட்டியலிட்டால் நம் உணவு மாற்றத்தில் உலகமயத்தின் பங்கு தெரியவரும். பின் காலனிய அடிப்படையில் உலகமயம் நஞ்சாக்கிய உணவுப்பழக்கங்களை பண்பாட்டு ரீதியில் அணுகினால் நாம் நம் மரபார்ந்த பழைய முறைக்கு திரும்ப வேண்;டியதன் அவசியத்தை உணரலாம். தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என நம் மரபார்ந்த உணவு வகைகள் பல…

    • 0 replies
    • 528 views
  10. விண்வெளி அறிவியல் அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கணிப்புக்கு இன்னொரு சான்று 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA GSFC/JEREMY SCHNITTMAN படக்குறிப்பு, நாசா வெளியிட்ட கருந்துளை சித்தரிப்பு படம் விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றைச் சுற்றி, அதீத ஒளியுடைய எக்ஸ்-ரே வெளிச்சம் வருவதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொலைநோக்கிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். கருந்துளை ஒன்றில் இருந்து ஒளி வருவது கண்டறியப்படுவது இதுவே முதல் முறை. ஐரோப்பிய விண்வெளி முகமையின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் ( XMM-Newton) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நுஸ்டார் (…

  11. சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: என்ன நடந்தது என அமெரிக்கா, ரஷ்யா தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர். இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இ…

  12. விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம் பால் ரின்கன் அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம் 20 ஜூலை 2021 பட மூலாதாரம்,BLUE ORIGIN படக்குறிப்பு, இடமிருந்து: மார்க் பெசோஸ், ஜெஃப் பெசோஸ், ஆலிவர் டேமென், வேலி ஃபங்க் உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்த…

  13. DARC Radar: 36,000 கிலோமீட்டர் விண்வெளியை கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ரேடார்? - அமெரிக்கா முயற்சி ஜோனதன் பியேல் பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தொலைதூர விண்வெளியில் இருக்கும் பொருட்களைக் கண்காணிக்க பிரிட்டனில் ஒரு பெரிய புதிய ரேடார் அமைப்பை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது. ஏராளமான ராணுவ செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தொலைதூர விண்வெளியில், 36,000 கி.மீ தூரம் வரையில் இருக்கும் சாத்தியமான "இலக்குகளை" அடையாளம் காண அமெரிக்க விண்வெளி படை, உலகளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. டெக்சாஸ் மற்றும் ஆஸ்திர…

  14. விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான... இறுதிக் கட்ட சோதனை வெற்றி! அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் யுனிட்டி-22 விண்கலம், வி.எம்.எஸ். ஈவ் என்ற இரட்டை விமானம் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்டது. இதில், விர்ஜின் நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 6 பேர் பயணம் மேற்கொண்டனர். யூனிட்டி விண்கலம் விமானத்தில் இருந்து பிரிந்து, விண்வெளியை நோக்கி தனியாக பறந்தது. விண்வெளியை நெருங்கியதும், அங்கு புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் குறைவாக உள்ள இடத்தில் விண்கலம் மிதந்தது. விண்கலத்தில் இருக்கும் வீரர்கள் விண்வெளி அனுபவத்தை உணர்ந்தன…

  15. வானியல் அற்புதம்: சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கும் காட்சியை பார்ப்பது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான நிகழ்வு இன்று நடக்கிறது. இன்றும் நாளையும் இந்தக் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும். உண்மையில் இந்த நிகழ்வின்போது கோள்கள் நெருங்கி வருவதில்லை. வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையேயான கோணம் வெறும் 0.5 டிகிரி மட்டுமே இருக்கும். அதனால் அவை ஒன்றிணைந்து இருப்பது போல காட்சியளிக்கும். அதே நேரத்தில் பிறைச் சந்திரனானது இவற்றுக்கு 4 டி…

  16. உலகில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பதிவு: ஜூலை 01, 2021 11:45 AM 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவையே இந்த பிளேக் தொற்று நோய் புரட்டிப் போட்டது. 1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் கூறி உள்ளது. ஐரோப்பாவின் கிட்டத்தட்ட பாதி மக்கள் இந்த நோயால் அழிந்து போனார்கள்.பின்னர் பல நூற்…

  17. சர்வதேச விமான நிலையங்களுக்கிடையில் பறந்த பறக்கும் கார்! -வீடியோ பறக்கும் கார் ஒன்று முதல் தடவையாக இரு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பறந்துள்ளது. ஸ்லோவாக்கியாவின் நைத்ரா மற்றும் பிரஸ்திஸ்லாவா நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (28) 35 நிமிட நேரம் இந்தக் கார் பறந்துள்ளது. வீதிகளில் கார் போன்று இதை செலுத்திச் செல்லாம். அத்துடன் இதனால் வானில் பறக்கவும் முடியும். எயார்கார் (Aircar) என இது அழைக்கப்படுகிறது. இந்தக் கார் பறக்க ஆரம்பிக்கும்போது விமானத்தின் தோற்றத்துக்கு மாறும். பேராசிரியர் ஸ்டீபன் கிளெய்ன் (Stefan Klein) இந்தப் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார். பி.எம்.டபிள்யூ இயந்திரத்தைக் கொண்ட…

  18. 19 ஜூன் 2021 பட மூலாதாரம்,YU CHEN ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கரு…

  19. நட்சத்திரங்களை இழக்கும் கடல் June 11, 2021 நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள். பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செ…

  20. ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது! சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங் மார்ச் 2எப் ரொக்கெட் மூலம் ஷென்சூ-12 என்ற விண்கலத்தில் 3 விண்வெளி வீரர்களும் பயணித்தனர். கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து 09:22 பெய்ஜிங் நேரத்தில் விண்கலம் ஏவப்பட்டது. நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூன்று மனிதர்களும் பூமிக்கு மேலே 380 கி.மீ (236 மைல்) தொலைவில் உள்ள தியான்ஹே தொகுதியில் மூன்று மாதங்கள் செலவிட உள்ளனர். ரொக்கெட் புறப்பட்ட 10 நிமிட…

  21. முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis) பானுமதி.ந ஜூன் 12, 2021 கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், அந்த மரபணுக்களை கொரியர் செய்யாமல், அதன் இயல்பு அணுக்களின் மரபினை நேரடியாக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப முடிந்த அந்த ‘டெலிபோர்டிங்’ மற்றும் அதன் வரைபடம் தான். மருத்துவத் துறையிலும், பல்வேறு செயல்களிலும் இந்த முழு மரபணு அச்சு வரைபடம் என்பது துரித…

  22. மண்புழு விவசாய உரம் தயாரிக்கும் முறையும் அதன் பயனும் – மதுஜா வரன் 9 Views பண்டைய காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது. இதனால் நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றயை சூழலில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைப் புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக்கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக்கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன. இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு, மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது. எனவே இத்தகைய தரம் குறைந்த, வளமற்ற நிலங்களை வளமான நி…

  23. ஜேம்ஸ் கலேகர் பிபிசி சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர் பாக்டீரியா தொற்றிய கொசுக்களைப் பரப்பி டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் 77 சதவீதம் டெங்கு பரவல் கட்டுப்படுவது தெரியவந்துள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள். வோல்பாசியா என்ற இந்த 'அற்புத' பாக்டீரியா தொற்றிய கொசுக்களிடம் டெங்கு கிருமியை பரப்பும் தன்மை கணிசமாகக் குறைகிறது. இந்த பரிசோதனை இந்தோனீசியாவில் இருக்கும் யோக்யகர்தா நகரத்தில் மேற்கொள்ளப்பட்டது. டெங்கு வைரஸை இது முற்றாக ஒழிக்கும் என்ற நம்பிக்கையோடு இப்பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது. உலகம் முழுவதையும் பாடாய்ப் படுத்தும் டெங்கு வைரசுக்கு இது ஒரு தீர்வாக இருக்கலாம் என உலக கொசு த…

  24. அமிலத்தில் கரையும் கடல் பட்டாம்பூச்சிகள் நாராயணி சுப்ரமணியன் கடலின் சூழல் என்பது மிகவும் நுணுக்கமான வேதிவலைப் பின்னல்களால் எப்போதும் சமநிலையில் பாதுகாக்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள் பலவும் இந்த சமநிலையையே நம்பியிருக்கின்றன. வேதிக்கூறுகள் மாறும்போது உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. கடல்நீர் அமிலமாதல் (Ocean acidification) என்கிற சூழலியல் பாதிப்பு கடலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அறிவியல்/அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இது உறுதிப்படுத்தப்பட்டு, இப்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. அறிவியல் பின்னணி காலநிலை மாற்றத்தோடு கூடவே பிறந்த இரட்டைப் பிள்ளை இது. காலநிலை மாற்றத்துக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற கரிம உம…

  25. எம். மணிகண்டன் பிபிசி தமிழ் முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் என்பது என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது? இப்போது நடக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.