அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
செவ்வாயில் வீசும் காற்றின் ஓசையை பதிவு செய்த பிரிட்டன் சாதனம் Getty Images செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கேட்டது நாசாவின் ஆய்வுக் கலத்தில் ஓர் அங்கமாக உள்ள பிரிட்டன் சாதனம். செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாசா அனுப்பிய 'இன்சைட் லேண்டர்' ஆய்வுக் கலத்தில் இணைத்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் பூகம்ப ஆய்வுக் கருவியான சீஸ்மோமீட்டர், ஆய்வு வாகனத்தின் சோலார் பேனல்களை கடந்து சென்ற செவ்வாய் கோளின் காற்றின் ஓசையைப் பதிவு செய்துள்ளது. ஆய்வுக் கலத்தின் பக்கவாட்டுகளில் அமைந்துள்ள சோலார் பேனல்கள் சிறப்பான ஒலி வாங்கிகள் என்கிறார் பேராசிரியர் டாம் பைக். இவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இருந்து இந்த பூகம்ப ஆய்வுக் கருவி சோதனையை வழிநடத்துகிறார். "இன்சைட் ஆய்வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
விண்வௌியின் எல்லையை தொட்டுத் திரும்பிய விமானம்! அமெரிக்காவின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துக்கு சொந்தமான விண்வெளிக்கு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு விமானம் விண்வெளிக்கு மிகவும் அருகில் சென்று திரும்பியுள்ளது. ஸ்பேஸ்-ஷிப்-டூ என்று அழைக்கப்படும் அந்த விமானம் பூமியிலிருந்து 82.7 கிலோமீட்டர் உயரத்துக்கு பறந்தது. இது அந்த விமானத்தின் நான்காவது பரிசோதனை பயணமாகும். மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஸோஸின் ப்ளூ ஓரிஜின் நிறுவனங்களுடன் சர் ரிச்சர்டு பிரான்சனின் வெர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் ஈடுபட்டுள்ளது. நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தனது சோதனை ஓட்டத்தை மேற்கொண்ட குறித்த விமானம…
-
- 0 replies
- 494 views
-
-
வெளியில் போங்க.. வானத்தைப் பாருங்க.. விண்கல் பொழிவை ரசிங்க! நல்ல பொறுமை, ஆர்வம், கொஞ்சம் லைட்டா விண்வெளி ஞானம்.. இவ்வளவு போதும்.. நீங்க இப்ப விண்கல் பொழிவை ரசிக்க ரெடி பாஸ். இன்று இரவு முதல் 14ம் தேதி அதிகாலை வரை விண்கல் பொழிவைப் பார்த்து ரசிக்கலாம். ஜெமினிட் விண்கல் பொழிவுதான் இன்று இரவு நமது தலைக்கு மேல் அரங்கேறுகிறது.வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கது சேதி தரும் என வைரமுத்து சும்மா பாடி வைக்கவில்லை. வானத்தில் அத்தனை அத்தனை மேட்டர் இருக்கு. இன்று நடக்கும் இந்த விண்கல் பொழிவும் கூட நாம் தவற விடக் கூடாத ஒரு கண்கவர் காட்சிதான். இந்த ஆண்டின் முதல் மற்றும் கடைசி விண்கல் பொழிவு இது. குளிராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இதைப் பார்த்து ரசிங்க. இதைப…
-
- 0 replies
- 951 views
-
-
அதிசயத்தை ஆராயும் அறிவியல்: காந்தமுள்ளால் வழிநடத்தப்படும் ஆமை த.வி.வெங்கடேஸ்வரன் Published : 11 Dec 2018 11:11 IST Updated : 11 Dec 2018 11:14 IST “நான் போகிறேன் தாய்மடியைத் தேடி” என்று ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சென்னைக் கடற்கரைக்கு ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முட்டையிடத் திரும்புகின்றன ஆலிவ் ரிட்லி எனப்படும் பங்குனி ஆமைகள். பொதுவாகவே, பங்குனி மாதத்தில் தமிழகக் கடற்கரையை இவை அடைந்து முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதால் இவற்றைப் பங்குனி ஆமைகள் என்கின்றனர். …
-
- 0 replies
- 696 views
-
-
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 547 views
-
-
விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்! சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள். நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள். சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெள…
-
- 0 replies
- 418 views
-
-
செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி ! செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்…
-
- 0 replies
- 342 views
-
-
செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும் மாத்யு டேவிஸ் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழ…
-
- 0 replies
- 737 views
-
-
உளுந்து வடையைப் போன்றதுதான் பூமியின் வடிவம் நம்புங்க மக்களே.! பூமியின் வடிவம் குறித்துப் பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் பூமி கோளம் அல்லது உருண்டை வடிவானது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். உலகம் உருண்டை வடிவமானது என்று கூறினாலும் அதனை ஒப்பிட்டு விளக்குவதற்குச் சரியான வடிவம் கிடைக்கவில்லை உளுந்து வடையா ? பூமி தட்டையானது அல்லது வட்டத் தட்டு போன்றது என்னும் கொள்கை கொண்டோர் உண்டு.தற்போது ஒருவர் உலகம் டோனட் (doughnut) வடிவமுடையதா? எனச் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். தட்டைவடிவ பூமிக் கோட்பாட்டுச் சங்கத்தைச் (Flat Earth Society) சேர்ந்த உறுப்பினரான வராக் (Varuag) என்பவர் பூமி டோனட் வடிவமுடையதாக இருக்கலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தட்டை…
-
- 0 replies
- 1.3k views
-
-
26 ஆண்டுகளுக்கு பின் 'விழித்துள்ள' பிளாக் ஹோல்..! மாபெரும் அண்டவெளி புதிர்களில் ஒன்று தான் பிளாக் ஹோல் எனப்படும் கருங்குழிகள். உள் சென்ற ஒளி கூட வெளியேற முடியாத ஒற்றை வழிப்பாதையான பிளாக் ஹோல்களின் வலுவான ஈர்ப்புச் சக்தியானது கற்பனைக்கு அடங்காததாகும். கண்களுக்கு புலப்படாத பிளாக் ஹோல்களின் இருப்பை தாக்கங்கள் மூலமாகவே உணர்ந்து கொள்ள முடியும் அதனால் தான் இவைகளை கருங்குகுழி என்று அழைகின்றனர். அந்த அளவு ஆபத்தான பிளாக் ஹோல்களில் ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் விழித்து கொண்டுள்ளதை விண்வெளி வீரர்கள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்மா வெடிப்பு : சுமார் 26 ஆண்டுகளுக்கு பின் இயங்க ஆரம்பித்துள்ள பிளாக் ஹோல் ஒன்று விண்வெளியில் மாபெரும் பிளாஸ்மா வெடிப்பு ஒன்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை NASA/UNIVERSITY OF ARIZONA Image caption பென்னு வின்கல். இங்கேதான் ஒசிரிஸ்-ரெக்ஸ் ஆய்வு வாகனம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆய்வு வாகனம் ஓசிரிஸ்-ரெக்ஸ் 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. பயணித்து பென்னு என்ற விண்கல்லை அடைந்தது. வெறும் 500 மீட்டர் அகலமே உள்ள உள்ள இந்த விண்கல்லை சூழ்ந்து இன்னும் இரண்டரை ஆண்டுகாலம் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆய்வுகள் நடத்தும். 2020-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்த வாகனத்தை விண்கல் பென்னுவில் விஞ்ஞானிகள் தரையிறக்குவார்கள். அப்போது இந்த ஆய்வு வாகனம் அந்த விண்கல்லில் இருந்து ம…
-
- 0 replies
- 402 views
-
-
நிலவில் மனிதன் கால் பதித்தது பொய் – காணொளி இணைப்பு! நிலவில் மனிதன் கால் பதித்தது மானித குலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில், நிலவில் மனிதன் கால் வைத்தது உண்மையில்லை என்ற காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் எடுக்கப்பட்டது என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர். 1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் காணொளி போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். அண்மையில் நிலவில் கால் வைத்த விண்வெளி வீரர்களின் ஹெல்மெட் கண்ணாடியில் பலரது உருவங்கள் தெரியும் கா…
-
- 1 reply
- 546 views
-
-
பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது? சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குநர் களில் ஒருவரான பெலா டார் எடுத்த அற்புதமான திரைப்படம் ‘வெர்க்மைஸ்டர் ஹார்மனீஸ்’. இதன் தொடக்கக் காட்சி ஒரு மது விடுதியில் தொடங்குகிறது. படத்தின் இளம் நாயகனான யானோஸ் வலுஸ்கா தனது மூன்று நண்பர்களை வைத்து சூரியன், பூமி, நிலவு நடனத்தை நிகழ்த்துவார். சூரியன் போன்று ஒருவர் நடுவில் நிற்க இன்னொருவர் பூமியின் வேடத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவார். பூமியை நிலவு பாத்திரத்தில் ஒருவர் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றுவார். ஆக, நிலவு மனிதர் ஒரே நேரத்தில் பூமியையும் சூரியனையும் சுற்றுவார். இந்த அறிவியல் விளக்கம் ஒரு அற்புதமான நடனம்போல் படத்தில் அம…
-
- 3 replies
- 6k views
-
-
பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு..! விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப்பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது..!அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமி கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர். 3 மடங்கு : அதாவது பூமிக்கு அடியில், பூமியின் மேற்ப்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக அளவிலான கடல் நீர் இருப்…
-
- 0 replies
- 812 views
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது சிரிச்சோம், இப்போது மிரண்டு போயுள்ளோம்.! பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வக (FAIR) ஆராய்ச்சியாளர்கள், ஸ்கிரிப்ட்டில் இருந்து வெளியேறிய சாட்பாக்ஸ்கள், எந்த விதமான மனித உள்ளீடும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழியில் தொடர்பு கொண்டதை கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் ஏஐ (AI) அதாவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆனது, மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத, அதன் சொந்த தனித்துவமான மொழியை உருவாக்கியுள்ளது என்பதை ஆய்வகத்தின் டெவலப்பர்கள் கண்டறிந்த உடனேயே பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூடப்பட்டுள்ளது. இது எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சரியமளிக்கும் ஒரு விடயமாக இருக்…
-
- 1 reply
- 528 views
-
-
2018-ம் ஆண்டுக்கான ஏபெல் பரிசு ஏபெல் பரிசு: அறிவியல் உலகினைப் பற்றி அறிந்த அனைவருக்கும் நோபல் பரிசு பற்றித் தெரிந்திருக்கும். ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியலாளரின் நினைவாக 1895 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது சொத்துக்களை இந்தப் பரிசுகளுக்காக உயில் எழுதி வைத்துவிட்டார். ஆனால் அந்த நோபல் பரிசு கணிதத்திற்குக் கிடையாது. ஏனென்றால் அவர் தனது உயிலில் கணிதத்திற்கு இப்பரிசினை வழங்கப் பரிந்துரைக்கவில்லை. ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்ற பரிசு கணித உலகின் உயரிய கண்டுபிடிப்பாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய விருது ஆகும். அதற்கடுத்த படியாக மிகப்பெரிய கணித விருதென்பது ஏபெல் பரிசு(Abel Prize) ஆகும். இப்பரிசு நார்வே அரசால் 2003 முதல் நீல…
-
- 0 replies
- 523 views
-
-
பறக்கும் மோட்டார் சைக்கிள்களில் பயிற்சிபெறும் டுபாய் பொலிசார் டுபாயில் உள்ள பொலிஸ்அதிகாரிகள் ஹவர்பைக் (Hoverbike) என அழைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இம்மோட்டார் சைக்கிள்களின் மூலம் அவசரசேவை பிரிவினர் விரைவாகவும் எளிதாகவும் பிரச்சினை நடைபெறும் இடங்களை சென்றடையமுடியுமென நம்பப்படுகிறது. ஹவர்சேர்ப் (Hoversurf) என்றழைக்கப்படும் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ரஷ்ய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்படும் இம்மோட்டார் சைக்கிள்கள் 2020 ஆம் ஆண்டு முதல் பாவனைக்கு கொண்டுவரப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஏற்கனவே பயிற்சி பெறத்தொடங்கியுள்ளதாகவும் எதிர்காலத்திற்கான அடுத்தபடியாக இவை அமையுமெனவும் டுபாய் பொலிஸ…
-
- 0 replies
- 838 views
-
-
பூமிக்கு மேலும் 2 நிலவுகள் – உறுதிப்படுத்திய ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் November 9, 2018 பூமிக்கு மேலும் 2 நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அண்ட வெளியில் பூமியை போன்று பல்வேறு கோள்கள் இருப்பதனை கண்டறியும் உச்சபட்ச இலக்குடன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூமிக்கு கூடுதல் நிலவுகள் இருப்பதாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த குழப்பம் நிலவி வருகிறது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள்இ பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுக்களால் ஆன மேகங்களை போல் காணப்படுவதாகவும் பூமியில் இருந்து நிலவு உள்ள …
-
- 0 replies
- 743 views
-
-
பிரபஞ்சத்தில் மிக கொடிய சுயநலம் உள்ள உயிரினம் உண்டு என்றால் அது மனிதன்தான். மனிதனின் நாகரிகமும் விஞ்ஞானமும் இயற்கை அழிவின் முதல் விதைகள். நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாக பார்த்தார்கள், நாம் இன்று அதை நாகரீக வளர்ச்சி என்று அழித்துக்கொண்டு இருக்கிறோம். உயிரினம் வாழ முக்கிய தேவை நீர், நிலம், காற்று. “நீரின்றி அமையாது உலகு” ஐயன் வள்ளுவன் சொன்ன இவ்வொற்றைக் குறளின் புரிதலை மறந்தால், உலக உயிரினங்களின் அழிவு நிச்சயமே! மருதமரம், நாவல் மரம், அத்தி, கடம்பம், பிலு, வில்வம் போன்ற மரங்களின் இருப்பிடங்களை வைத்தும், எறும்பு, தவளை மற்றும் மாடு போன்ற விலங்குகளின் நடமாட்டத்தைக் கொண்டும் நீர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொண்டனர் (blogspot.com) ந…
-
- 0 replies
- 658 views
-
-
தென்னங் கன்று ஒன்றை நடுவது தொடர்பான சில தகவல்கள்.நடுகை முறைநடும்போது அவதானிக்க வேண்டியவை
-
- 1 reply
- 502 views
-
-
செவ்வாய்க்கிரகத்தில் தோன்றுவது என்ன! எரிமலை புகையா? கண்கட்டி வித்தையா? – ஐரோப்பிய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே உயிரினங்கள் வாழ்கின்றனவாக அல்லது வாழ்ந்து இறந்துவிட்டனவா என்ற மர்மத்திற்கு பதில் காணும் முயற்சியில் பல ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு தீண் வழங்கும் வகையில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் விசித்திரமான உருவங்கள் தென்படுகின்றன. எகிப்தில் உள்ள பிரமிட்கள் போன்ற வடிவமைப்பிலான பாறைகள் ஔிப்படங்களில் சிக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறான காட்சிகள் செவ்வாயை ஒரு மர்ம பிரதேசமாக மாற்றி வைத்துள்ள நிலையில் புதிய குழப்பமான செவ்வாய் கிரக ஔிப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஔிப்படத்தில் புகை மூட்டம் போன்ற உருவமொன்று செவ்வாய் கிரகத்தை ச…
-
- 0 replies
- 248 views
-
-
பல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா! நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது. உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்…
-
- 0 replies
- 509 views
-
-
செய்மதி குடும்பமொன்றை சுமந்து கொண்டு ஜப்பானின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது! ஜப்பான் தயாரிப்பான எச்.2ஏ விண்கலம் சில செய்மதி கட்டமைப்புகளுடன் தானேகஸ்ஷிமா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்துள்ளது. ஜப்பானிய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை புறப்பட்ட ஜப்பானிய விண்கலத்தில் 3 வெவ்வேறு நாடுகளின் செய்மதிகள் விண்வௌி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஐக்கிய அரபு ராச்சியத்தின் முதல் தயாரிப்பான கலிபாசெட் மற்றும் ஜப்பானின் இபூக்கி – 2 என்பன பூமியின் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை பதிவு செய்வதற்கான பணியை மேற்கொள்ளவுள்ளன. ஜப்பானின் விண்வௌி ஆய்வுகள் முகவரகமான ஜக்ஸா இந்த தகவலை வௌியிட்டுள்ளது. கலிபாசெட் செய்மதி முற்று முழுதாக டுபாய் நாட்டின் தயாரிப்பாக விளங…
-
- 0 replies
- 380 views
-
-
நிலவிலிருந்து... பூமியில், விழுந்த விண் கல் ஏலத்தில்! நிலவிலிருந்து பூமியில் விழுந்த விண் கல் ஒன்று, 612,500 டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, வட ஆப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆறு துண்டுகளாக அந்த விண் கல் கண்டெடுக்கப்பட்டது. விண் கல்லின் மொத்த எடை சுமார் ஐந்து கிலோகிராம். பல்லாயிரம் ஆண்டுக்கு முன்னர், அவை பூமியில் விழுந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. http://athavannews.com/நிலவிலிருந்து-பூமியில்-வ/
-
- 0 replies
- 309 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை NASA அண்டார்டிகா பிரதேசத்தில் உள்ள வெட்டல் கடலில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விமானம் ஒன்றிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் பனிப்பாறையின் கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் அந்தப் பனிப்பாறை சமீபத்தில்தான் துண்டாகி வந்துள்ளதைக் குறிக்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்டி…
-
- 0 replies
- 628 views
-