அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவது என்பது கடலில் மட்டும் அல்ல. விண்வெளியிலும் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சைமன் டிரைவர் என்பவரின் தலைமையில் 90 விஞ்ஞானிகள் ஏழு ஆண்டுகள் ஓர் ஆய்வை நடத்தினர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் உதவியோடு நடந்த இந்த ஆய்வு 2012-ல் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா நடத்தும் வானியல் ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரோன் ரோபோதம் இதுபற்றி விளக்கும்போது, “ இந்த ஆய்வில் 22 ஆயிரம் கேலக்ஸிகள் வரை ஆய்வு செய்யப்பட்டன. வளர்ந்து ஒரு நிலையை அடைகிற கேலக்ஸிகள் தமக்கு அருகில் உள்ள பலம் குறைந்த சின்ன கேலக்ஸிகளை விழுங்கி விடுகின்றன. நமது சூரியக் குடும்பம் இயங்குகிற பால்வெளி மண்டலக் காலக்ஸி கூடத் தன் பக்கத்தில் இருந்த சின்னக் கேலக்ஸ…
-
- 0 replies
- 811 views
-
-
ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்பேட்டையில் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவு... | படம்: சி.வெங்கடாசலபதி. ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டி.சி.சி.எல். நிறுவனத்தின் டன் கணக்கிலான குரோமியம் கழிவுகள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் ஏற்கெனவே அப்பகுதிகளில் நச்சுமயமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 1976-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டி.சி.சி.எல். நிறுவனம் சோடியம் டை குரோமேட், குரோமி…
-
- 0 replies
- 508 views
-
-
அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம். பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்ல…
-
- 0 replies
- 670 views
-
-
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினான். அதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிப்பார்கள் என்றனர். அது குறித்து ஆன்லைனில் பார்த்த போது அந்த மிஷினின் விலை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் (2 ஆயிரம் டாலர்) என தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை தயாரித்தான். அதை அவன் பல நாள் இரவு கண் விழித்து உருவாக்கினான். அதை …
-
- 9 replies
- 1.4k views
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க பிரமிக்கத்தக்க லாபமீட்டியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக , ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்ப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது. இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது ஐ போன் -6 மற்றும் சிக்ஸ் ப்லஸ் மொபைல் தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும்…
-
- 1 reply
- 953 views
-
-
ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. “தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் சிற்றலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு முறையும் இவற்றின் பயன்பாடு…
-
- 0 replies
- 576 views
-
-
அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹொரிசோன் விண்கலம் பூமியில் இருந்து 500 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்து புளோட்டோவின் அண்டைப் பகுதியை சென்றடைய 9 ஆண்டுகள் பிடித்தன. அந்த குட்டிக் கிரகத்தின் படங்களை அது விரைவில் அனுப்பத் தொடங்கும். இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.co.uk/tamil/science/2015/01/150129_pluto
-
- 1 reply
- 636 views
-
-
இஸ்ரேலிய குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய மண்டையோட்டின் ஒரு பகுதி, தற்கால மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த விதம் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பிராந்தியம் வழியாக மனிதர்கள் இடம்பெயர்ந்து சென்று ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் வாழத்தொடங்கினார்கள் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த மண்டை ஓட்டின் பகுதியும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு ஆரம்பகால ஐரோப்பியர்களை ஒத்திருந்தாலும், ஆப்ரிக்கர்களின் சில குணாம்சங்களையும் அது கொண்டிருப்பதாக இந்த மண்டையோட்டை கண்டறிந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ச் தெரிவித்த…
-
- 0 replies
- 784 views
-
-
'மடி விதையை விடப் பிடி விதை முளைக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் இருக்கும் விதையை எடுத்து விதைப்பதைவிட, கைப்பிடியில் இருக்கும் விதை உடனடியாகப் பயன் தரும். அதாவது, உரிய நேரத்தில் எவ்விதத் தடையும் இல்லாமல் விதை கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால், நமது ஆட்சியாளர்கள் விதைக்கான இறையாண்மையை இழந்துவிடத் தயாராகிவருவது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு என்ற ஒரே கண்ணாடியைக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கின்றனர். அமைச்சரின் பார்வை அண்மையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். மரபீனி மாற்ற விதைகளை (Genetically modified seeds) எதிர்ப்பது முறையல்ல என்றும், அப்படிச் செய்வது அறிவியலுக்கு எதிரானது என்றும் அதில் க…
-
- 4 replies
- 3.4k views
-
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். அணுகுண்டு போட்டதினால் ஐன்ஸ்டீன் என்றாலே அந்த சமன்பாடு நியாபகம் வருகிறது..... இவர் தனது சார்பியல் கோட்பாடுகளை நிரூபிக்க முயன்ற போது, அவருக்கு சூரிய கிரகணங்கள் தேவைப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவரால் அதை சரிவர நிரூபிக்க முடியவில்லை. சூரியன் அவருக்கு அல்வா கொடுத்த வண்ணம் இருந்தது, ஆனால் தான் ஆராய்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து, அவருக்கு அனைத்தும் பிடிபட்டது. பல வருடங்கள் வேலை கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.காப்புரிமை அலுவலகத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட…
-
- 2 replies
- 3.7k views
-
-
http://www.nytimes.com/interactive/2014/12/09/science/space/curiosity-rover-28-months-on-mars.html?WT.mc_id=AD-D-E-KEYWEE-SOC-FP-JAN-AUD-DEV-INTL-0101-0131&WT.mc_ev=click&ad-keywords=IntlAudDev&kwp_0=8032&kwp_4=58644&kwp_1=120733&_r=0
-
- 2 replies
- 593 views
-
-
இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும். குவாண்டம் இயற்பியல் வரும்வரை, இந்த அறிவியல் தனது இலய்பான ஆதாரம் சார்ந்த முறையிலேயே சென்றுகொண்டிருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், குவாண்டம் இயற்பியலுக்கு முன்னுள்ள இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும், பாரம்பரிய இயற்பியல் (classical physics) எனப்படுகிறது. இதற்கு காரணமில்லாமல் இல்லை, இந்த குவாண…
-
- 1 reply
- 3.1k views
-
-
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Mercedes-Benz தானாக இயங்கும் காரின் முன் மாதிரியை லாஸ் வேகாஸில் நடைபெற்ற ECS காண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. மேலும், இதன் டெஸ்ட் டிரைவ் குறித்த வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். முழுக்க முழுக்க ஆட்டோமேடிகாக செயல்படும் இந்த மாடலுக்கு F 015 என்று பெயரிட்டுள்ளனர். இதனை, மனிதர்களும் டிரைவ் செய்யலாம். ஆட்டோ மற்றும் மேனுவல் என இரு டைப்பிலும் இது இயங்கும். இது குறித்து Mercedes-Benz சார்பில் கூறியதாவது, சுமார் 30 வருடங்களுக்கு முன்பாகவே செல்ஃப் டிரைவிங் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்போதுதான் இது நிறைவடைந்துள்ளதாம். மேலும் இது 2012-ல் கலிஃபோர்னியாவில் சுமார் 60 மைல் தூரத்திற்கு சோதனை ஓட்டம் செய்யப்பட்டதாகவும், அப்போது இது …
-
- 4 replies
- 816 views
-
-
துபாய்: 360 டிகிரி கோண புகைப்பட கலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வரும் நிலையில், இந்த தொழில் நுட்பம் தற்பொழுது துபாய் நகரை காணும் வகையில் அறிமுகம் செய்யப்படுள்ளது. துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.comஎன்ற லிங்கில் சென்று காணலாம். உலகத்தில் எந்த மூலையில் இருந்தும் உங்களது கணினியின் முன் அமர்ந்து, அல்லது உங்கள் கைபேசியில் இணையதள வசதியுடன் துபாயில் உள்ள முக்கியமான இடங்களை 360 டிகிரி கோணத்தில் நம்மால் இனி பார்க்க முடியும். http://tamil.oneindia.com/news/international/dubai-360-degrees-219215.html துபாய் 360 டிகிரி ஏரியல் வியூவை http://dubai.globalvision360.com/#p=scene_dubai-world-trade-centre
-
- 0 replies
- 564 views
-
-
2015ம் ஆண்டின் சூரியனின் முதல் சூரிய கிளரொளி காணப்பட்டது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடித்து சிதறிய நிகழ்வினை நாசா படம்பிடித்துள்ளது-. இந்த சூரிய கிளரொளி வெடித்து சிதறுவதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் இந்த கதிர்வீச்சு இன்னும் பலமாய் வெடித்துச் சிதறுவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. இந்த படம், சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் எடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட நிகழ்வை M5.6 வகுப்பு கிளரொளி என்று வகைப்படுத்தியுள்ளதனர். X வகுப்பு சூரிய கிளரொளி போன்ற மிக தீவிரமான சூரிய கிளரொளியின் அளவை விட பத்து மடங்கு பெரியதாகும் இந்த M வகுப்பு கிளரொளி. அந்…
-
- 0 replies
- 412 views
-
-
வெந்நீரூற்று அல்லது வெந்நீர்ச்சுனை (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுகின்றன. புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீரானது நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீரானது நிலத் துளைகளூடாக சூடான ஆவியுடன் கூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் அறிக்கையை சமர்பித்தனர் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.இதில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. இதில் 1000 கிரகங்கள் சமீபத்தில் உறுதிபடுத்த்ப்பட்டு உள்ளது. அந்த அறிக்கியில் பூமியை போன்று பாறைகள், கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியுடையது என நம்பப்டும் 8 கிரகங்களை நாச விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்த கிரகங்கள் நாசாவின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கி கருவையை கொண்…
-
- 0 replies
- 735 views
-
-
2015ல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்: லாஸ்வேகாஸ் கண்காட்சி 45 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வாண்டில் சந்தைக்கு புதிதாக வரவுள்ள தொழில்நுட்பக் கருவிகளுக்கான கண்காட்சி ஒன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்துள்ளது. தானாக ஓடும் கார்கள், பறக்கும் டுரோன்கள், நாயின் உடல் இயக்கங்களை அளக்கும் மானிகள் - இப்படிப் பலவற்றை முன்னணி எலக்டிரானிக் நிறுவனங்கள் லாஸ்வேகாஸில் காட்சிப்படுத்தியிருந்தன. இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப் பார்வையிடுங்கள் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150106_technologies
-
- 0 replies
- 855 views
-
-
மீண்டும் பயன்படுத்தவல்ல ராக்கெட்டின் சோதனை தள்ளிவைக்கப்பட்டது திரும்பத்திரும்ப பயன்படுத்தவல்ல முதல் ராக்கெட் என்று பரவலாக வர்ணிக்கப்படும் ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி கடைசி நிமிடத்தில் தள்ளிப்போடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் அமெரிக்காவின் கேப் கனவரல்லில் உள்ள ஏவுதளத்தில் இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கடைசி கட்டம் வரை சென்ற நிலையில் திடீரென இந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்றழைக்கப்படும் உந்தகப்பகுதி ராக்கெட்டின் மற்ற பகுதிகளை விண்ணுக்கு அனுப்பியபிறகு மீண்டும் பூமியை நோக்கி வந்து அட்லாண்டிக் கடலில் மிதக்கும் மிதவையில் சரியாக விழச்செய்யும் முயற்சியில் ஈடுப்ப…
-
- 0 replies
- 424 views
-
-
சிகை திருத்தம் செய்துகொள்வதுபோல மரபணுத் திருத்தம் செய்துகொள்ளலாமா? யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது. பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பி…
-
- 0 replies
- 400 views
-
-
வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் . இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை . /intl/en_ALL/images/logo.gif]
-
- 24 replies
- 2.6k views
-
-
வணக்கம் அனைவருக்கும் . நான் ஒரு அச்சு மற்றும் கிரபிச்ஸ் சம்பந்தமான தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன் .ஆனால் எனக்கு அச்சிடல் சம்பந்தமான அறிவு கொஞ்சம் குறைவு .ஆகவே உங்களில் யாருக்கும் அது பற்றி தெரிந்தது இருந்ததால் தயவு செய்து இங்கே எனக்கும் விளக்க முடியுமா ?அதாவது டிஜிடல் ,ஸ்கிரீன் அச்சிடல் சம்பந்த்தமாக ,அச்சு இயந்த்திரம்கள் பற்றி ,இன்னும் பல. நன்றி /சிம்ஸ்
-
- 16 replies
- 5.2k views
-
-
6-தியோ-2 டீஆக்ஸிகுனோசைன் என்ற புதிய மூலக்கூறு கேன்சர் செல்களின் வளர்ச்சியத் தடுப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. | படம்: ஏ.பி. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்று ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது செயல்படும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களின் ‘உயிரியல் கடிகாரத்தை’ மறு அமைப்பாக்கம் செய்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கும் புதிய மூலக்கூறு ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த மூலக்கூறு '6-தியோ-2’ (6-thio-2)- டீஆக்சிகுனோசைன் (6-thiodG) என்று அழைக்கப்படுகிறது. இது கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "டீஆக்சொகுனோசைன் குறைந்த அளவில் கொடுத்த போதும் பலதரபப்…
-
- 0 replies
- 445 views
-
-
ஆப்பிள் நிறுவனம் மீது நூதன வழக்கு ஆப்பிள் நிறுவன புதிய இயங்குதளம் ஒருவித ஆக்கிரமிப்பு என குற்றச்சாட்டுஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய இயங்குதளமான ஐஓஎஸ்-8, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களான ஐ பேட், ஐ பாட், ஐபோன் உள்ளிட்டவற்றில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதன் மூலம், ஐகிளவுட் எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தகவல் சேமிப்பு சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயன்பாட்டாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கலிஃபோர்ணியா நகரில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் நிறுவனக் கருவிகளை வாங்கும் பயன்பாட்டாளர்கள் தமது சொந்தத் தகவல்களை சேமிக்க முடியாத விதத்தில், விளம்பரப்படுத்தப்பட்ட அளக்கும் கூடுதலான தகவல் சேமிப்பதற்கான இடத்தை ஆப்பிளின் புதிய …
-
- 0 replies
- 712 views
-
-
உலகம் முழுக்க மக்களின் பொழுபோக்குக்காக பலவிதமான தோட்டங்களை அமைத்திருப்பார்கள். பொழுதினைப் போக்கவும், தகவல்களை அறிந்து கொள்ளவும் அங்கு வசதி செய்து இருப்பார்கள். அதில் ஒரு வித்தியாசமான தோட்டம்தான் இங்கிலாந்தில் இருக்கும் இந்த விஷத் தோட்டம். அதன் பெயர் மாராகா 'பாய்சன் கார்டன்' (Poison Garden).! இந்தத் விஷத் தோட்டத்தை ஆல்ன்விக் கார்டன் (Alnwick Garden) என்றும் அழைப்பார்கள். 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பாய்சன் கார்டனுக்குள் சென்றால் எமலோகத்துக்குப் போய்விட்டு வந்த மாதிரி இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு செடியும் ஒரு விஷ பாம்பு போன்றது. எல்லாமே விஷ செடிகள்தான். ஒரே மாதிரியான கார்டன்களைப் பார்த்து பார்த்து போர் அடித்த மக்கள், இந்த டிஃபரெண்ட் கார்டனைப் பார்ப்பதற்கு ஆர்…
-
- 0 replies
- 701 views
-