அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
பிஸ்கெட் விள்ளலை காப்பியில் ஊறவைத்து சுவைப்பது என் போன்ற ’நோ-பல்’ இளைஞர்களின் கொணஷ்டை (கரும்பை கூட ஜூஸ் செய்தே அருந்துவோம்). அனுபவித்து செய்பவர்களுக்கே இதிலுள்ள சகாயங்களும் சங்கடங்களும் தெரியும். சற்றே மொறுமொறுப்புடன், சூடாய், இதமாய், நாக்கில் பிஸ்கெட் கரைவது சகாயம். சௌக்கியம். குறிப்பிட்ட அவகாசத்திற்குமேல் முக்கியிருந்தால், சங்கடம். சொதசொதத்த பிஸ்கெட், வாயிலிட முனைகையில் ஸ்லோமோஷனில் மடிந்து ‘ஸ்பளச்’ என்று காப்பியினுள் விழுந்துத்தொலைக்கும். ‘முக்கிய’ஸ்தர்கள் கூடியிருக்கும் டிஸ்கஷனில், அல்லது ‘பெண் பார்க்கும்’ வைபவத்தில். பிஸ்கெட்டை ஊறவைத்து சுவைப்பது சிலருக்கேனும் ‘முக்கிய’மான மேட்டரே. காபியில் ஊறவைத்த பிஸ்கெட்டிற்கு சுவை அதிகம் என்கிறது இத்தரப்பு. ஆமோதிக்கிறேன். அமெர…
-
- 0 replies
- 1.2k views
-
-
காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …
-
- 4 replies
- 730 views
-
-
இமயமலை போன்ற பெரிய மலைகளின் உச்சியில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மலைச்சிகரம் ஏறுபவர்கள் பிராணவாயுப்பெட்டிகளை சுமந்து செல்லவேண்டியிருக்கிறது. ஆனால், இதே போல கடல் மட்டத்திலிருந்து வெகு அதிக உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில் , திபேத்தியர்கள் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தொடர்புடைய விடயங்கள் மானுடவியல் 'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில் வசிக்கும் திபெத்தியர்கள் வசிக்கும் இடங்கள் எல்லாமே பொதுவாக சுமார் 4 கிமீ உயரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த அளவு உயரத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழமுடியாது. அங்கு பிராணவாயு குறைவாக இருப்பது , மூச்சுத் திணறல்,உயர்ந்த இடங்களில்…
-
- 0 replies
- 680 views
-
-
வணக்கம். இன்றைய கட்டுரையில் நாம் சில பிரபலமான பழைய கருப்பு வெள்ளை நெகட்டிவ் பிலிம் ரோல்கள் உருவாக்கித்தரும் எபக்ட்டுகளை போட்டோஷாப்/கிம்பில் Channel Mixer கொண்டு உருவாக்குவதைகாணலாம். முன்பெல்லாம் பிற்சேர்க்கை என்பது கலர் படங்களாகட்டும், அல்லது கருப்பு வெள்ளைப் படங்களாகட்டும். அவர்களுக்குத் தேவையான எஃபக்டுகளை உருவாக்க அதற்குத் தகுந்தாரற்போலஇருக்கும் நெகட்டிவ் ஃபிலிம்ரோல்களை பயன்படுத்தி எடுப்பார்கள், உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை படங்களுக்கென நிறைய ஃபிலிம்ரோல் நெகட்டிவ்கள் பயன்படுத்தப்பட்டன ex : Agfa Pan,Ilford Delta,Kodak tri-x etc…ஒவ்வொரு ஃபிலிம் ரோலுக்கும் ஒவ்வொரு மாதிரியான வெளியீடு இருக்கும். நாம் இப்போது நெகட்டிவ் ரோல் காலங்களிலிருந்து டிஜிட்டல் உலகத்தில் இருக்கி…
-
- 2 replies
- 627 views
-
-
டார்வினின் பரிணாம வளர்ச்சித் தேற்றம் - அதுவே முதலும் முடிவும் அல்ல இந்தக் காணொளி ஒரு தேடலில் கிடைத்தது. மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியம் மிகுந்ததாகவும் இருந்தது. அடிப்படை உயிரினங்களின் கட்டமைப்பு (கலங்கள், பக்டீரியா போன்றவை) மிக எளிமையானதாக இருக்கும் என பல காலம் காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் அவற்றின் அமைப்புத்தான் மிகவும் சிக்கலானது என்று இப்போது கண்டறிந்துள்ளது விஞ்ஞானம். இதை டார்வினின் இயற்கைத் தெரிவு கோட்பாட்டினால் விளக்க முடியாமல் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
-
- 0 replies
- 696 views
-
-
அறச்சலூர் செல்வம் கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்! இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோ…
-
- 3 replies
- 930 views
-
-
அந்த இன்னொரு பழம் எங்கேடா...? ...அதாண்ணே இது...! - தமிழ்த் திரையுலகம் மறந்துவிடமுடியாத நகைச்சுவைக் காட்சியொன்றில் வரும் வசனங்கள் இவை. இப்படி நகைச்சுவைக் காட்சியின் முக்கிய அம்சமாக இருந்த நம்முடைய வாழைப்பழம், பன்னாட்டு நிறுவனத்தின் கைக்குப் போகப் போகிறது. எளிமையின் அடையாளம் வாழைப்பழம். ஏழைகள் வாங்கி உண்ணக்கூடிய அளவில் குறைந்த விலைக்குக் கிடைக்கக்கூடிய பழம். நல்ல காரியம் எதுவானாலும் தட்டின் மேல் கம்பீரமாக அமர்ந்திருக்கும் மஞ்சள் கனி அது. உண்பதற்கு இனிப்பான பழங்களை மட்டுமல்லாமல் சமையலுக்குக் காயும் பூவும்; இட்டு உண்ண இலை; நல்ல செய்தி ஊருக்குத் தெரிய முழு மரம்; பித்தம் போக்கிட வேர் - என அடி முதல் நுனி வரை அனைத்துப் பாகங்களையும் நமது பயன்பாட்டுக்குத் தருவது வாழை. முக்கனிகள…
-
- 0 replies
- 651 views
-
-
கடந்த காலங்களில் பல விதமான கம்பனிகள் ஜிபிஎஸ் எனும் பாதை காட்டும் கருவி பயன்பாட்டில் இருக்கிறது. இப்போது WAZE எனும் புதிய APP பாவனையில் வந்திலிருந்து கூடுதலானவர்கள் பாவிக்கும் ஒரு ஜிபிஎஸ் ஆக முன்னணியில் நிற்கிறது.இதற்கென்று புதிதாக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை.உங்கள் கைத்தொலை பேசியிலேயே இலவசமாக தரவேற்றலாம். மற்றைய ஜிபிஎஸ் ஐ விட இதில் உள்ள விசேடம் என்னவென்றால் உங்கள் வாகன வேகத்தை பிடிப்பதற்காக ஒழிந்து நிற்கும் பொலிஸ் அதிகாரிகளை அரை மைல் தொலைவிலேயே எச்சரிக்கை செய்யும்(தானாக எதுவும் செய்வதில்லை முதல் காணும் ஒருவர் report பட்டனை அழுத்தி பொலிஸ் என்ற பட்டனை அழுத்தினால் சரி பின்னால் வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். மிக முக்கிமாக இப்போ சகல இடங்களிலும் சிகப்…
-
- 5 replies
- 886 views
-
-
கண்டடைந்த கடவுள் துகள் ப.ரகுமான் “மனித குலத்தின் கடந்த கால அனுபவத்தை அவசியம் நம்ப வேண்டும் என்பதல்லாமல், புதிய நேரடி அனுபவத்தின் மூலம் மீண்டும் சோதித்துப் பார்ப்பது பயனுள்ளது என்ற கண்டுபிடிப்பின் விளைவுதான் அறிவியல்.” ஃபெய்ன்மேன் (1966ம் ஆண்டில் நியூயார்க் நகரில் தேசிய அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...) அறிவியல் என்றால் என்ன? உண்மையில் இதற்கு விளக்கம் தேவையில்லை. அறிவியல் என்ற சொல் அதனளவிலேயே (அறிவு+இயல்) விளக்கத்தைக் கொண்டது. அறிவு என்பது வேறு; அறிவியல் என்பது வேறு. குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடைபோடுகிறது, ஓடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடக்கவும், ஓடவும் மு…
-
- 2 replies
- 2.4k views
-
-
நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதொன்றிலும் இருந்தும், சிறப்பானதைப் பெற முயற்சிக்கிறோம். நமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போதும், ஆண்டுகள் வளர்வதைப் போலவே நாமும் நேர்க்கோட்டில் அபிவிருத்தி அடைவோம் என்று கற்பனை செய்துவிடுகிறோம். ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவத்தை அடைவதற்குக் கடினமாக வேலை செய்தால், மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்புகிறோம். ஆனால், முன்னேற்றம் என்பது பல துறைகளில் நேர்க்கோட்டுத்தன்மையுடையது அல்ல என்று கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் எச்.யங் தனது சமீபத்திய வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஒரு மொழியைக் கற்கும்போதோ, ஓட்டப் பயிற்சி போன்ற முயற்சிகளிலோ வளர்ச்சி என்பது வேறு விதமானது. தொடங்கும்போது வேகமாக வளர்ச்சி இருக்கும். ஆனால், ஒரு கட்டத…
-
- 0 replies
- 405 views
-
-
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஆரம்பித்து ஆரவாரத்துடன் நடந்துகொண்டிருக்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அவரவர் அணிகளின் சீருடைகளை அணிந்து உள்ளூர் பப்புகளுக்குச் சென்று தொலைக்காட்சியில் போட்டிகளை ரசிக்கின்றனர். போட்டிகள் பற்றிய தகவல்களையும் ஆர்வத்துடன் சேகரிக்கின்றனர். அந்தத் தகவல்களில் பொருளியல் கருத்துகளுடன் தொடர்புள்ள பல அம்சங்கள் உண்டு. இது ரசிகர்களுக்குப் பிடிக்குமோ என்னவோ எனக்குப் பிடிக்கும். உதாரணத்துக்கு, இந்த பெனால்டி வாய்ப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். இரு அணிகளும் சம வலுவுடன் மோதும்போது - அல்லது மோதாமல் இருக்கும்போது - ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிடும். அப்போது தற்செயலாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் மீண்டும் விறுவிறுப்படையும். ஆனால், இங்கும் எதிர்பா…
-
- 0 replies
- 441 views
-
-
நாம் எந்த தொழில் ஆரம்பித்தாலும் அந்த தொழிலுக்கு, மார்க்கெட்டிங் என்பது மிகவும் அவசியமாகிறது. மார்க்கெட்டிங் என்றவுடன் நீங்கள் தொலைக்காட்சி விளம்பரத்தையும் பத்திரிக்கை விளம்பரத்தையும் மட்டுமே நினைத்து விடாதீர்கள். அதை தவிர பல மார்க்கெட்டிங் வித்தைகள் இருக்கிறது. அதை உங்கள் தொழிலுக்கு ஏற்றாற்போல் அமைத்துக்கொள்ளுங்கள். தமிழர்களில் பெரும்பாலானோர்கள் மார்க்கெட்டிங் செய்வதை அல்லது விற்பனை செய்வதை விரும்புவதில்லை. இதற்கு காரணம் அவர்களிடமுள்ள கூச்ச சுபாவம் ஆகும். பள்ளி பருவங்களில் நமது குழந்தைகள், பொருளாதாரத்தில் வளர்ந்தநாட்டு குழந்தைகளைப் போல, வெளியில் சென்று பகுதி நேரம் வேலை பார்ப்பதில்லை; அல்லது விற்பனை செய்வதில்லை. இதுவே அவர்களுக்கு பிற்காலத்தில் கூச்ச சுபாவமாக மாறிவிடுகிறத…
-
- 0 replies
- 855 views
-
-
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வனப் பகுதி யில் சத்தம் இல்லாமல் வேட்டில், பைன் மற்றும் தைலமரம் உள்ளிட்ட பசுமை பாலைவனம் அதிகரித்து சோலைக்காடுகள் அழிவதால் யானை, காட்டு மாடுகள், புள்ளிமான் கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் கிடைக்காமல் இடம் பெயர்வதாகவும், அதிக அளவு இயற்கை மரணம் நிகழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த குழு அமைத்து தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, தேனி, ஆனைமலை, களக்காடு, முண்டந்துறை மற்றும் கிருஷ்ணகிரி காடுகளில், சுதந்திரத்துக்கு முன் ஆங்கிலேயர்கள், காகித ஆலைகளில் காகிதம் தயாரிக்கவும் வேட்டில், பைன் ம…
-
- 0 replies
- 539 views
-
-
பழைய மூளைக்குள் ஒளிந்திருக்கும் புதிய மூலைகள் – 1 சுந்தர் வேதாந்தம் கடந்த சில நூற்றாண்டுகளில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது இப்போதும் நமக்கு சரியாக புரியாத புதிர்தான்! நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் தலைக்குள் உட்கார்ந்திருக்கும் மூளை சுமாராக ஒன்றரை கிலோ எடையுள்ள ஒரு சாம்பல் நிற கொசகொசப்பு. மனித உடலுக்குள் இன்னும் முழுவதுமாக புரிந்து கொள்ளப்படாத வேறு பல விஷயங்கள் நிச்சயம் உண்டு எனினும், இதயம், சிறுநீரகம், கண் போன்ற முக்கியமான உறுப்புக்களை பற்றி நிறைய புரிந்து கொண்டு இருக்கிறோம், மாற்று அறுவை சிகிச்சைகள் செய்கிறோம், அதே பணிகளைப் பலவருடங்கள் சிறப்பாக செய்யக்கூடிய செயற்கை அவயங்களைக் கூடத் தயாரித்துச் சோர்ந்து போன இயற்க…
-
- 2 replies
- 3.3k views
- 1 follower
-
-
ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…
-
- 1 reply
- 10.8k views
-
-
வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டு…
-
- 2 replies
- 744 views
-
-
வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் தினசரி சுமார் 10.5 பில்லியன் லீற்றர் சிறுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஒலிம்பிக் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் பயன்படுத்தப்படுவதையொத்த 4200 நீச்சல் தடாகங்களை நிரப்புவதற்கு போதுமானதாகும். இந்நிலையில் எரிபொருள் கலங்களிலுள்ள விலையுயர்ந்த பிளட்டினம் மாற்றிகளுக்கு பதிலாக சிறுநீரிலுள்ள காபனை பயன்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். எரிபொர…
-
- 4 replies
- 757 views
-
-
திரிஷாவும் திவ்யாவும் ராஜ்சிவா நான் சொல்லப் போகும் இந்தச் சம்பவம், பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நடந்திருக்கும். அதை அந்தக் கணத்தில் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனாலும் அப்போது அது உங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும், ஆற்றாமை யையும் தந்திருக்கும். ‘என்ன இது? நான் நினைப்பது தப்பா? அல்லது இவர்கள் நினைப்பது தப்பா?’ என்று அந்த ஒரு நொடியில், கேள்வியொன்று உங்களுக் குள் உருவாகி மறைந்திருக்கும். ஆனாலும் அந்தக் கணத்திலேயே அதைப் பெரிதுபடுத்தாமல் மறந்து போய்விடுவீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் மறந்து போவதற்கு அது ஒரு சின்ன விசயமே கிடையாது. நவீன அறிவியலில், அதாவது குவாண்டம் இயற்பியலில் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கும் நிகழ்வு அது. ‘நான் இப்போது எதைப் பற்றி…
-
- 3 replies
- 2k views
-
-
வேலூரில் நடைபெற்ற மாநில அளவிலான நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகளை ஆர்வமுடன் பார்வையிடும் விவசாயிகள். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், விவசாயிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. (கோப்புப்படம்) தமிழ்நாடு முழுவதிலும் வைகாசித் திருவிழாக்கள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில், பாரம்பரிய விதை ரகங்களை மீட்டெடுப்பதற்கான விதைத் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நெல் ரகங்களில் மட்டுமே தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய வகைகள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இன்று அந்த நெல் வகைகள் எல்லாம் மறைந்து, வீரிய ஒட்டு ரக விதைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் நமது பாரம்பரிய ந…
-
- 0 replies
- 590 views
-
-
சக்சஸ் தரும் சாக்லெட் மரம்! குளிர் நிறைந்த மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர கூடிய, 'கோகோ' என்ற சாக்லெட் மரத்தை, வெயில் அதிகம் இருக்கும் நாமக்கல் பகுதி யில் விளைவித்து, அதிக லாபம் ஈட்டி வரும், விவசாயி முத்துச்சாமி: நான், 5 ஏக்கர் நிலத்தில் தென்னையை பயிரிட்டு வருகிறேன். தென்னந் தோப்பிற்குள், ஊடுபயிராக கோகோ பயிரிட்டால், அதிக லாபம் கிடைக்கும் என, என் நண்பர் அடிக்கடி கூறி வந்தார். நான், ஒரு முறை பொள்ளாச்சி வழியாக சென்ற போது, அங்குள்ள தென்னந்தோப்பில் கோகோ பயிரிட்டிருப்பதை பார்த்தேன்.நான் அதை பார்த்ததும், என் தென்னந்தோப்பிலும், ஊடுபயிராக கோகோ பயிரிட முயற்சிக்கலாம் என, எண்ணினேன். ஆனால், கோகோ பயிரானது குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களில் தான் சிறப்பாக விளையும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
காலச் சக்கரம் எவ்வளவு விரைந்து சுழல்கிறது! மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய மாறுதல்கள்! எல்லா மாறுதல்களும் இயற்கை சூழல் அழிவை ஏற்படுத்துபவையாகவே இருப்பதுதான் வருத்தம் தருகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் புதுச்சேரி நகரமும் அதைச் சுற்றி முப்பது கல் சுற்றளவுக்கு உள்ளே இருக்கும் சிற்றூர்களும் எனக்கு நன்கு பழக்கம். மிதிவண்டியிலேயே எல்லா இடங்களையும் சுற்றியிருக்கிறேன். சாலையோரம் எத்தனை ஏரிகள்! எவ்வளவு செழுமையான நன்செய் நிலங்கள்! எவ்வளவு புன்செய் நிலங்கள்! அவற்றில் கால் பகுதிகூட இன்றில்லை. புதுவைப் பகுதியில் மட்டும் 86 ஏரிகள் இருந்ததாகக் கூறுவர். நானே இருபதுக்கு மேற்பட்ட ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சில பெரிய ஏரிகளைத் தவிர, மற்றவற்றில் பல தூர்க்கப்பட்டுவிட்டன…
-
- 0 replies
- 1.4k views
-
-
நம்மில் பலரும் ஐ.பி.எல். 20 - 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நமக்குப் பிடித்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்று கடந்த ஒன்றரை மாதமாகத் தினமும் ஆர்வத்துடன் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு நாளாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்திருப்போமா? அப்படிப் பார்த்திருந்தால் முறையான, சத்தான உணவைத்தான் சாப்பிடுகிறோமா என்ற கேள்வி நிச்சயம் தோன்றியிருக்கும். ‘தினமும் வீட்டுச் சாப்பாடுதானே சாப்பிடறேன்... எனக்கெல்லாம் என்ன பிரச்சினை வரப் போகுது?’ என்று சொல்லும் போக்கு பரவலாகி விட்டது. அதெல்லாம் சரி, நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் சேர்க்கப் படும் பொருட்களின் தரம் என்ன? அவை எப்படிப்பட்ட முறையில் உற்பத்தி யாகின்றன என்று நமக்குத் தெரி…
-
- 0 replies
- 608 views
-
-
இன்று எங்கு பார்த்தாலும் பசுமைக்குடில் மூலம் விவசாயம் நடக்கிறது. வருடம் முழுவதும் காய்கறிகள், காளான் வளர்ப்பு, நாற்று உற்பத்தி செய்து சம்பாதிக்கின்றனர். அது பற்றி அறிவோம். எதையும் உயர்த்திட, தரமான தொழில்நுட்பம் தேவை. கிணற்றில் நீர் இறைக்க மாட்டை பயன்படுத்தினர். மோட்டார் தொழில்நுட்பம் வந்து 300 அடிகளில் இருந்து கூட நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனர். அப்படிப்பட்ட தொழில்நுட்பம் தான் பசுமை கூடாச விவசாயம் ஆகும். 90 முதல் 95% பயிர்கள் வயல்வெளிகளில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வருடம் முழுவதும் வளர்க்க முடியாது. ஆனால் பசுமைக் கூடாரம் அமைத்தால் வருடம் முழுவதும் விவசாயம் செய்ய இயலும். குளிர்பிரதேசங்களில் அதிகப்படியான குளிரில் இருந்து பயிர் களை தொடர்ந்து காப்பாற்றி, உயர் மதிப்புள்ள ப…
-
- 0 replies
- 3.1k views
-
-
செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்குமா? மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தண…
-
- 1 reply
- 686 views
-
-
விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. முகமூடி ரகசியம் விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்கு…
-
- 1 reply
- 1k views
-