செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
650 கோடி செலவில் இந்திய தொழிலதிபர் மகளின் திருமணம்; திருமண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழிலதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் நேற்று பெங்களூரில் மிக பிரமாண்டமான முறையில், 650 கோடி இந்திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999ஆம் ஆண்டு தான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்களான கருணாகர ர…
-
- 2 replies
- 665 views
-
-
பிள்ளையாராக உருமாறிய கண்ணாடி போத்தல் ; மட்டக்களப்பில் அதிசயம் (சசி) மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் கிராமவாசியொருவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தலே பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது. இச் சம்பவம் பற்றி வீட்டின் உரிமையாளர் க.யோகராணிதெரிவிக்கையில், கடந்த 27 வருடங்களாக கேராத கௌரி விரதம் அனுஷ்டித்துவருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தி…
-
- 1 reply
- 429 views
-
-
'இப்போதைக்கு இதுதான் மொய்!' திருமண விழா சுவாரஸ்யங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண நிகழ்ச்சிகளில் 'ஸ்வைப் மிஷின்' மூலம் அன்பளிப்பு (மொய்) பெறும் நடைமுறை வந்துள்ளது. கரூரில் நடந்த திருமண விழாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த முறையை திருமண வீட்டினர் பின்பற்றி வருகின்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். பணத்தேவையை சந்திக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இந்த மாதத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழா ஆகியவ…
-
- 0 replies
- 435 views
-
-
நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி; அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் !! 2016-11-14 11:58:39 பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிக…
-
- 0 replies
- 214 views
-
-
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மீள பெறப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். வங்கிகளிலிருந்து பொதுமக்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் நிதியின் தொகையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோன்று நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவை கட்டணம், வரிகள், எரிப்பொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய நாணய தாளை பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென நாணயத்தாள்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதிலும்…
-
- 0 replies
- 262 views
-
-
68 வருடங்களின் பின்னர் சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார். இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது. இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும். இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த சந்…
-
- 0 replies
- 462 views
-
-
காலத்தால் அழியாத காதல் 65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. 65 ஆண்டுகளாக பிரிந்திருந்த பிறகு வெள்ளிக்கிழமை திருமணத்தில் இணைந்த ஜோடி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று. அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது. அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜ…
-
- 1 reply
- 464 views
-
-
"டிரம்ப் ஒரு முஸ்லீம்" (video) நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப…
-
- 2 replies
- 516 views
-
-
யாவுமே திட்டமிடலா? வெளியாகும் அமெரிக்க அதிபர்களின் ரகசியம் 2 days agoஅமெரிக்கா 6.4k SHARES விளம்பரம் Topics : #Donald Trump#Hillary Clinton உலகில் எதாவது ஒரு விடயம் பரபரப்பாக பேசப்படும் போது தான் அது பற்றிய பல சுவாரசிய தகவல்கள் வெளிப்படும். அந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான பழைய தகவல் ஒன்று மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இது வரையில் அதிபராக அங்கம் வகித்த 43 பேர்களில் ஒபாமாவை தவிர்த்த ம…
-
- 1 reply
- 435 views
-
-
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் ; ஆச்சிரியத்தில் விவசாயி மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார். ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது. காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை. திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது. குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பய…
-
- 1 reply
- 301 views
-
-
ஜனாதிபதியின் எளிமை மீண்டும் நிரூபணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றவர் அதனை உறுதிபடுத்தும் மற்றொரு நிகழ்வு இன்றும் இடம்பெற்றது. நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். நாடாளுமன்றத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டிச் சாலையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே மதிய நேர உணவாக நாடாளுமன்றத்தில் அருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக…
-
- 4 replies
- 330 views
-
-
சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…
-
- 0 replies
- 279 views
-
-
தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…
-
- 2 replies
- 681 views
-
-
ஆகாயத்தில் இருந்து, சத்தத்துடன் விழுந்த மர்ம பொருள்! இது. என்னவாக இருக்கும்?
-
- 0 replies
- 407 views
-
-
மைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் பாணியில், டுபாயில் வைத்து முன்னாள் காதலியின் காதை இலங்கையர் ஒருவர் கடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 34 வயதான இலங்கையர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி அல் சல்வா பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த குறித்த இலங்கையர் தம்மை பிடித்து கொண்டதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். நபரின் பிடியிலிருந்து தம்மை விடுவித்த…
-
- 0 replies
- 268 views
-
-
புதுவித திருமணத்தால் பிரபலமான கரடி (படங்கள் இணைப்பு) திருமண பந்தத்தில் இணைவதற்கு பலர் சாகசம் செய்வது வழக்கம். அதில் ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வரிசையில் ரஷியாவின் மாஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து இணைந்துள்ளனர். அதன்படி ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்திற்கு அழைத்து அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சுற்றிலும் மரங்கள், புல்வெளி, பழங்கள் என இயற்கையான சூழலுக்கு நடுவி…
-
- 2 replies
- 489 views
-
-
லண்டனில் உள்ள டைகர் என்னும் இரவு நேர கழியாட்ட விடுதிக்கு 19 வயதுப் பெண் ஒருவர் சென்றுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியேறும் போது மதுபோதையில் இருந்துள்ளதோடு, வாசல் எங்கே என்று தெரியாமல் வேறு ஒரு வாசல் வழியால் வெளியேற முற்பட்டுள்ளார். இன் நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த குறித்த தமிழர் அப்பெண்ணை நிலத்தில் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். இங்கே எல்லா இடங்களிலும் கமரா உள்ளது. உன்னை பொலிசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அப்பெண் கூச்சலிட்டும் இவர் கேட்ட பாடாக இல்லை. இன் நிலையில் குறித்த தமிழரின் ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்த அப் பெண், அதனை முறுக்கி வலியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்…
-
- 3 replies
- 632 views
-
-
அப்பல்லோவில் பரபரப்பு : பூலோகத்தை காக்க வந்த அவதாரமும் வைத்தியசாலையில் அனுமதி.! கடந்த ஒரு மாத காலமாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலை பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ் பாதுகாப்பும், தொண்டர்கள், கட்சியினர், தலைவர்கள் என ஒரே பரபரப்புடனேயே நகர்கிறது. இந்நிலையில் இன்னொரு பரபரப்பு மனிதரும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ களைகட்டுகிறது. கடவுள் விஷ்னுவின் பத்தாவது அவதாரம் நான் தான், பூலோகத்தை காக்க வந்த அவதாரம் நான் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய விஜயகுமாரும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார் கல்கி பகவான் ஆசிரமம் என்ற பெயரில் பல்…
-
- 3 replies
- 405 views
-
-
புகார் கொடுக்க வந்த பெண்ணின்... கணவரை, ஆட்டையைப் போட்ட ஏட்டம்மா சஸ்பெண்ட். அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவர் மீது மோகம் கொண்டு கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்போது சின்னாபின்னமாகி விட்டது. காரணம், ஒரு கள்ளக்காதல். இத்தனைக்கும் செல்வக்குமாரும், லதாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். உறவினர்களும் கூட. 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் என்றைக்கு சிங்கப்…
-
- 0 replies
- 421 views
-
-
ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பில் உண்மை வெளியானது : லண்டன் நாளிதல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு, யாரோ சிலர் பில்லி சூனியம் வைத்ததுதான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் திகதி முதல் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தற்போதும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு பில்லி சூனியம்தான் காரணம் என லண்டனை சேர்ந்த ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒரு பிர…
-
- 0 replies
- 265 views
-
-
வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …
-
- 2 replies
- 409 views
-
-
ஹூஸ்டன்: கர்ப்பப்பையில் இருந்த குழந்தையை வெளியில் எடுத்து, அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் கர்ப்பப்பையில் வைத்து, அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த, மார்கரெட் பீமர் என்ற பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வந்த, 23 வார பெண் சிசுவின் முதுகுத்தண்டின் கடைசியில் இருக்கும் எலும்பில், கட்டி உருவாகி, இதயம் வரை வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இதயத் துடிப்பு குறைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிசுவை, கர்ப்பப்பையில் இருந்து வெளியில் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஐந்து மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, சிசுவை வெளியில் எடுத்து, கட்டியை அகற்றி, மீண்டும்…
-
- 1 reply
- 285 views
-
-
பேஸ்புக்கில் வழங்கப்பட்ட போலியான நேரலை ; கோடிக்கணக்கான மக்கள் பார்த்த அவலம் பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் அமெரிக்காவிலிருந்து இயங்கும் வைரல் என்ற பேஸ்புக் பக்கம் ஒன்று கோடிக்கணக்கான மக்களை ஒரு போலி வீடியோவை நேரலை என்று கூறி மக்களை பார்க்க வைத்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்க வைரல் பேஸ்புக் பக்கமொன்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு விண்வெளி வீரர்கள் இருப்பது போன்ற ஒரு நேரலை வீடியோவை வெளியிட்டது. குறித்த வீடியோவை உலக முழுவதும் கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளதோடு, இலட்சக் கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். குறித்து வீடியோ சுமார் மூன்று மணிநேரம் வெளியிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 237 views
-
-
-
- 5 replies
- 380 views
-
-
எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும் தெரிந்துக்கொள்வோம்! on: ஒக்டோபர் 26, 2016 நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும் 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ…
-
- 0 replies
- 3.4k views
-